Showing posts with label COMEDIAN. Show all posts
Showing posts with label COMEDIAN. Show all posts

Sunday, 31 January 2021

NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN 1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31

 

NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN 

1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31




நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - சனவரி 31, 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். இவர் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.வாழ்க்கைச் சுருக்கம்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.[1]



தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் நாகேசுக்கு திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார். புது வசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த் பாபு இவரது மகனாவார்.


நடிப்புத் துறையில்

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.



1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.


கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.



திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.


கதாநாயகனாக

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.


கமல்ஹாசன் உடனான நட்பு

கமல்ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் இவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமல்ஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும்.


நாகேஷின் நினைவு தினம் இன்று. நாகேஷ் கன்னடத்தை பிறபிறப்பிடமாகக்கொண்டவர் அவருக்கு 1951 ம் ஆண்டு போட்ட அம்மையினால் முகம் முழுவதும் நிரந்தர வடுக்கள் இருக்க , அவரின் அம்மா கொடுத்த ஆறுதலினால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர்.


அவர் திருமணம் செய்து, அவருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வந்துள்ளது. அதுவும் ஆண் குழந்தை. ஷூட்டிங்கில் இருந்த நாகேஷுக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆனால், அவர் போய் பார்க்க விரும்பவில்லை. ஏன் என்று எல்லோரும் ஆச்சரியப்பட, பாலசந்தர் கேட்டே விட்டாராம்.


” அம்மைத் தழும்புகளால் விகாரமா ன என் முகத்தை பார்த்து குழந்தை . பயந்துவிடாதா?’ என்று அவ்வளவு வருத்தமும், சோகமும் பட்டு சொல்லி இருக்கிறார் நாகேஷ் . உடனே பாலசந்தர், ‘டேய்… உன் அழகு உன் முகத்தில் இல்லை. நடிப்பில் இருக்கிறது. முதலில் குழந்தையை போய் பார் ’ என்று சொல்லவும், மனம் தெளிந்து பிள்ளையை பார்க்க வந்தாராம் நாகேஷ்.


அதிர்ஷ்டம் கதவை தட்டும் என்பர். ஆனால், எனக்கு சினிமா வாய்ப்பு என்ற அதிர்ஷ்டம், ஜன்னலை தட்டியது. ஆம்... ஒருநாள் காலை, ரயில்வே ஆபீசில் எதேச்சையாக தலையை திருப்பி, ஜன்னல் பக்கம் பார்த்தபோது, எனக்கு பரிச்சயமான முகம் தென்பட்டது.

'இவர், எதற்கு இங்கே வந்திருக்கிறார்...' என்று, எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். அவர், 'நாகேஷ்... நீ இங்கே தான் இருக்கிறாயா... உன்னை பார்க்கணும்ன்னு தான் வந்தேன்...' என்றார்.

வந்தவர் பெயர், பஞ்சு. சினிமா கம்பெனிகளுடன் தொடர்புடைய மனிதர். அவரை, தி.நகரில், வெற்றிலை, பாக்கு வாங்கும், 'சுல்தான் சீவல்' கடையில், அடிக்கடி பார்ப்பேன். என் அருகே வந்த, பஞ்சு, 'நாடகங்களில் எல்லாம் அமர்க்களமா நடிக்கிற போல இருக்கு... சினிமாவுல நடிக்கறியா?' என்றார்.

'இன்று, ஏப்ரல் 1ம் தேதி கூட இல்லை. என்னை இப்படியெல்லாம் முட்டாளாக்க முடியாது!' என்றேன்.

'விளையாட்டு இல்லை; நான் சொல்றது நிஜம். எங்க முதலாளி, உன் நாடகத்தை பார்த்து, அசந்துட்டாரு! தான் எடுக்கும் படத்துல எப்படியும் உன்னை நடிக்க வைக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டார். உன்னை பார்த்து பேசிட்டு வரச்சொல்லி, என்னை அனுப்பியிருக்கார்...' என்றார், பஞ்சு.

'என்னை நடிக்க வைப்பதில் அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நடிப்பதற்கு எனக்கும் ஆட்சேபனை ஏதுமில்லை!'

'சரி... புறப்படு!'

'பஞ்சு சார்... இந்த படத்துல நடிக்க, எனக்கு எவ்வளவு ரூபாய் கொடுப்பாங்க?'

'எவ்வளவு எதிர்பார்க்கறே?'

'ரயில்வேயில வேலை பார்க்கிறேன். மாதம் பிறந்தா, சுளையா சம்பளம் வாங்கி பழகிப் போச்சு. இங்கே எனக்கு, மாசம், 150 ரூபாய் சம்பளம்...' என்றேன்.

'ஐந்நுாறு ரூபாய் போதுமா?'

'என்ன... 500 ரூபாயா... சினிமாவுல நடிச்சா, அவ்வளவு பணம் கொடுப்பாங்களா... சார், சீக்கிரமா போய், அவரை பார்த்து பேசி முடிச்சிடலாம்... வேற யாருக்காவது அந்த வாய்ப்பை குடுத்திட போறாரு!'

'உனக்கு ஏன் வீண் சந்தேகம்... குறைந்தது, 500 ரூபாய் வாங்கிக் கொடுக்க நானாச்சு...' என்றார்.

அவரது கைகளை பிடித்து, நன்றி சொன்னேன்.


சினிமா கம்பெனியின் ஆபீசுக்கு போனோம். இரண்டு பேர், ஓர் அறையில் உட்கார்ந்திருந்தனர். அவர்களை கம்பெனி முதலாளிகள் என்று கூறி, என்னை அறிமுகப்படுத்தினார், பஞ்சு.

'திறமையான நடிகர். எங்க படத்துல ஒரு கதாபாத்திரம் இருக்கு. நீங்க தான் நடிக்கணும்...' என்றனர், இருவரும்.

'கண்டிப்பா நடிக்கிறேன். எவ்வளவு பணம் தருவீங்க... இவரு சொன்னாரு, 500 ரூபாய் தருவீங்கன்னு... நிஜமா?' என்றேன்.

'ஐநுாறு ரூபாய் தானே! சரி, கொடுத்துடலாம்...' என்று அவர்கள் சொல்ல, நான், 500 ரூபாய் கற்பனையில் மூழ்கிப் போனேன்.

'படப்பிடிப்பு தேதி முடிவானவுடன், பஞ்சு வந்து சொல்வார்; வந்து விடுங்கள்!' என்றனர்.


'கோல்டன் ஸ்டுடியோ'வில், படப்பிடிப்பு. பஞ்சு மூலம் தகவல் வந்தது. இயக்குனர், முக்தா சீனிவாசன். படத்தின் பெயர், தாமரைக்குளம். எனக்கு காமெடியன் கதாபாத்திரம்; மீர்சாகிப்பேட்டை ராஜேஸ்வரி என்பவர், எனக்கு ஜோடி. அன்று எடுக்கப்பட இருந்த காட்சியை, விளக்கினார், உதவி இயக்குனர்.

கயிற்றுக் கட்டிலில், எம்.ஆர். ராதா உட்கார்ந்திருப்பார். கையை காலை ஆட்டியபடி, அவர் வசனம் பேசிக் கொண்டிருக்கிற சமயத்தில், கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டிருக்கிற நானும், ராஜேஸ்வரியும், காமெடி பண்ண வேண்டும்.

அப்போது, மிக பிரபலமானவர், எம்.ஆர். ராதா. அவரது நடிப்பை ரசிக்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்டவர் இடம்பெறும் காட்சியில், அவர் உட்கார்ந்திருக்கிற கட்டிலின் அடியில் ஒளிந்து, நாம் காமெடி பண்ணினா, அது எப்படி எடுபடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால், வெளிப்படையாக சொல்ல முடியாதே; பொறுமையாக இருந்தேன். ஒத்திகை பார்த்தோம்.

திடீரென்று ஒரே பரபரப்பு. உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்றனர். சலசலவென்ற பேச்சுகள் நின்று, நிசப்தம் நிலவியது. 'அண்ணன் வந்துட்டாரு...' என்று ஒருவர் சொல்ல, அடுத்த வினாடி, 'ம்... என்ன?' என்று, தனக்கே உரிய குரலில் கேட்டபடி, படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார், எம்.ஆர். ராதா.

என்னை பார்த்து, 'நீதான் புது ஆளா... பேரென்ன?' என்று கேட்டார்.

பெயரை சொன்னதும், 'ம்... ம்... நல்லா பண்ணு...' என்று சொல்லி, முதுகில் தட்டிக்கொடுத்து, வெளியில் போனார்.

உடனே, படத்தின் முதலாளிகள் இரண்டு பேரும் என்னிடம் வந்து, 'ஒத்திகையின் போது கவனிச்சோம், என்ன நடிக்கிறே நீ... ராதா அண்ணன் வர்ற, காட்சியில உன்னை நடிக்க வெச்சிருக்கோம்...

'நீ என்னடான்னா, கட்டிலுக்கு அடியில சும்மா உட்கார்ந்திருக்கியே... அதான்யா, புது ஆளுங்களை போட்டா இப்படித்தான்... இந்த இடத்துல சந்திரபாபு இருந்தா, பிச்சு உதறி இருப்பாரு...' என்று, படபடவென்று பேசிக் கொண்டிருந்தனர்.

எனக்கு சுருக்கென்றது. சட்டென்று தலையில் கை வைத்து இழுத்தேன். 'விக்' கையோடு வந்து விட்டது.

'சார்... நீங்க இப்படி பேசறது துளியும் சரியில்லை... உங்களுக்கு, சந்திரபாபு வேணும்னா, அவரை ஒப்பந்தம் பண்ணியிருக்கணும்... நாகேஷ் வேணும்ன்னு, என்னை ஒப்பந்தம் பண்ணிட்டு, சந்திரபாபு மாதிரி நடிக்கலைன்னு சொல்றது தப்பு...' என்று சொல்லி, கழற்றின, 'விக்'கை நீட்டினேன்.

அந்த சமயம் பார்த்து உள்ளே நுழைந்தார், எம்.ஆர். ராதா.

'என்ன... அங்க தகராறு...' என்று அவர் கேட்க, முதலாளிகள் தயங்கி, ஓரம் நகர்ந்தனர். நான் தான், 'ஒண்ணுமில்லை சார்... இது உங்க, காட்சி. ஜனங்களும், உங்கள் நடிப்பை தான் கவனிப்பாங்க...

'உங்களை பார்த்து கேமரா வெச்சிருக்கிறப்போ, கட்டிலுக்கு கீழே, உங்க காலுக்கு பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நான் நல்லா நடிக்கலைன்னு சொல்றாரு...' என்று கூறினேன்.

சந்திரபாபுவை பற்றி முதலாளி சொன்னது, அதற்கு என் பதிலடி எல்லாவற்றையும் கடகடவென்று, அவரிடம் சொல்லி விட்டேன்.

- தொடரும்

முதன் முதலாக, சினிமாவில், எம்.ஆர். ராதாவுடன் நடிக்க வேண்டிய காட்சியை படமாக்கும்போது, சின்ன பிரச்னை ஏற்பட, நாகேஷிடம், 'என்ன பிரச்னை...' என்று விசாரித்தார், எம்.ஆர். ராதா.

பொறுமையாக நான் சொன்னதை கேட்ட, ராதா, 'மத்தவன் எல்லாம் நடிகன்!

நீ கலைஞன்!' என்றவர், இயக்குனரை பார்த்து, 'இவனுக்கும் தனியா கேமரா வெச்சே, காட்சி எடுங்க...' என்றார்.

'சரிங்கண்ணே... சரிங்கண்ணே...' என்று எல்லாரும் தலையை ஆட்டியவுடன், எனக்குள், ஆச்சரியமாக இருந்தது.

ஒருநாள், படத்தின் தயாரிப்பாளரிடம், 'சார்... சம்பளம், 500 ரூபாய் பேசினீங்க... எனக்கு தர வேண்டியதை கொடுத்தீங்கன்னா...' என்று இழுத்தேன்.

காசாளரை கூப்பிட்டு, 'இவருக்கு, 50 ரூபாய் கொடுத்திடுங்க...' என்றார்.

'என்ன, 50 ரூபாயா... 500 ரூபாய் தருவதாக தானே பேச்சு?'

'ஆமாம்... மொத்த படத்துக்கும் சேர்த்து தானே, 500 ரூபாய். படம் முடிகிறபோது, எல்லாம் செட்டில் பண்ணிடுவோம்...'

அதிர்ந்து போனேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், படம் முடிந்த பின்னரும், படத்தின் தயாரிப்பாளர்கள் பேசியபடி, பணம் தரவில்லை, இனிமேல், பொறுமையாக இருந்து பயன் இல்லை என்று முடிவு செய்து, ஒருநாள், அந்த கம்பெனிக்கு போய் பணம் கேட்டேன்.

ஏதேதோ சமாதானம் கூறினரே தவிர, எனக்கு பணத்தை கொடுக்கவில்லை. வந்ததே கோபம், கன்னாபின்னாவென்று சத்தம் போட்டு, கண்ணில்பட்ட, 'விக்' மற்றும் அழைப்பு மணியை எடுத்து, நடையை கட்டினேன்.

அடுத்த நாள் முதல், நாடகத்தில் அந்த, 'விக்'கை அணிந்து, நடிக்க ஆரம்பித்தேன். அதேபோல், தொலைபேசி ஒலிக்க வேண்டிய காட்சிகளில், நான் எடுத்து வந்த அழைப்பு மணி, 'டிரிங்... டிரிங்...' என்று ஒலிக்க ஆரம்பித்தது.

தாமரைக்குளம் படத்தில், எனக்கும், கருணாநிதி எழுதிய, உதயசூரியன் நாடகத்தில் நடித்து வந்த, ராஜகோபால் என்ற நண்பருக்கும், 'சொக்கு - மக்கு' என்று, ஒரு காமெடி ஜோடி கதாபாத்திரம்; படம் வெளியானது.

படத்தின் போஸ்டர்களில், எங்கள் இருவரின் புகைப் படங்களையும் கலரில் போட்டிருந்தனர். சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை, அருகே போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில், தெருவில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர், சில விநாடிகள் நின்று, சுவரொட்டியை பார்த்தனர். சட்டென்று அவர்களில் ஒருவன் மட்டும், போஸ்டரை நோக்கி உதைப்பது போல, பாவனை செய்து, 'இவனுக்கெல்லாம் எதுக்குடா சினிமா?' என்று, சற்று உரக்கவே, 'கமென்ட்' அடித்தான்; எனக்கு அதிர்ச்சி.

படமும் தோல்வியடைந்தது. 'ஆனந்த விகடன்' இதழில், அந்த படத்தின் விமர்சனம் வெளியானது. 'என்னை பற்றி ஏதாவது பாராட்டியிருப்பரோ...' என்று, ஆர்வத்துடன் படித்தேன்.

அதில், 'சொக்கு - மக்கு என்று இரண்டு கேரக்டர்களாம். இவர்கள் இரண்டு பேரையும், யார் செட்டுக்குள் விட்டனர்...' என, எழுதியிருந்தனர்.

பிற்காலத்தில், என் நடிப்பை பாராட்டி, 'விகடன்' இதழில், பல சமயங்களில் எழுதப்பட்டது என்றாலும், முதல் விமர்சனத்தை, என்னால் மறக்க முடியாது.

சினிமா உலகில் பலருக்கு, எம்.ஆர். ராதா என்றாலே, சிம்ம சொப்பனம் தான். வெளியே முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவர் போல நடந்து கொண்டாலும், வெள்ளை மனசு; தைரியசாலி.

எம்.ஆர். ராதாவுடன் நடித்த போது ஏற்பட்ட இன்னொரு அனுபவமும் சுவாரசியமானது. சரசா பி.ஏ., படத்துக்கு, வேம்பு என்பவர் தான், இயக்குனர்.

ஒரு குறிப்பிட்ட காட்சியில், எம்.ஆர். ராதாவும், அவர் மகன், எம்.ஆர்.ஆர். வாசுவும், வீட்டுக்குள் நுழைய வேண்டும். அவர்களின் வருகையை எதிர்பார்க்காத நான், அவர்களை பார்த்து அதிர்ச்சியடைய வேண்டும். காட்சியை விளக்கி, என்னை பார்த்து, 'சும்மா, 'ஷாக்' அடிச்சா மாதிரி நடிக்கணும்...' என்று சொல்லி விட்டார், இயக்குனர்.

'என்னடா இது... 'ஷாக்' அடித்தாற் போல எப்படி நடிப்பது...' என்று, நானும் ஒரு நிமிடம் குழம்பினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். சட்டென்று ஒரு யோசனை. அந்த செட்டில், சற்று ஒதுக்குப்புறமான இடத்தில், மரப்பெட்டி மீது, ஒரு கூஜாவை பார்த்தேன்.

காட்சியை படம் பிடிக்க தயாரானவுடன், சட்டென்று சைடு வாங்கி, கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த கூஜாவை எடுத்து, கையில் வைத்துக் கொண்டேன். கேமரா சுழல துவங்கியது.

அதட்டலான குரலில் ராதா, 'யாரு வீட்ல?' என்று கேட்டபடி, வீட்டுக்குள் நுழைய, நான் தடாலென்று கையிலிருந்த கூஜாவை நழுவ விட்டு, என் அதிர்ச்சியை காட்டினேன்.

'கட்... கட்...' என்றார், இயக்குனர்.

என்னை பார்த்து, 'யாரை கேட்டு, கூஜாவை எடுத்து கீழே போட்ட...' என்றார்.

'இல்லை சார்... நீங்கதானே, 'ஷாக்' அடிச்சாப்போல நடிக்கணும்ன்னு சொன்னீங்க?'

'அதுக்கு என் கூஜா தான் கிடைச்சதா?' என்று கத்தினார், இயக்குனர்.

அதற்குள் ஒருவர், கூஜாவை எடுத்து வந்து, இயக்குனரிடம் நீட்டினார். அது, நசுங்கி போயிருந்தது. இயக்குனர், தினமும் குடிக்க தண்ணீர் எடுத்து வரும் கூஜா என்பது, அவர் சொன்ன பிறகு தான் தெரிந்தது.

'ரொம்ப, 'சென்டிமென்ட்'டா வெச்சிருக்கும் கூஜா. அது இல்லாமல் நான் வீட்டுக்கு போக முடியாது...' என்று இயக்குனர் கூறினார்.

உடனே ராதா, 'சென்டிமென்டா, எதை வெச்சுக்கிறதுன்னு ஒரு கணக்கு இல்லை. இன்னிக்கு கூஜா, நாளைக்கு, துடைப்பம், 'சென்டிமென்ட்டு'ன்னு சொல்வீங்களா?' என்று, ஒரு போடு போட்டதும், அமைதியானார், இயக்குனர்.

பழநி பட படப்பிடிப்பின் போது நடந்த, இன்னொரு சம்பவம்.


பழநி என்ற படத்தில், எம்.ஆர். ராதாவுடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கிராமத்து களத்து மேட்டில் வேலை நடந்து கொண்டிருக்கும். எம்.ஆர். ராதா அங்கே வந்து, எல்லாரையும் மிரட்டி, உருட்டி, குத்தகை பாக்கி வசூலிப்பதாக காட்சி. நான் அவருடைய கணக்கு பிள்ளை.

களத்து மேட்டில், ஒரே வெயில். அங்கு வந்த, ராதாவுக்கு, வெயில் தாங்கவில்லை. நடிக்க வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார். தன் முடிவை அவர் வெளிப்படுத்திய புத்திசாலித்தனம், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

'காட்சி நல்லா இல்லே... கல்யாண மாப்பிள்ளையே, அய்யர் மாதிரி மந்திரத்தையும் சொல்லி, தாலி கட்டலாமா... இப்படி படம் எடுத்தா எப்படி ஓடும்?

'குத்தகை பாக்கி வசூல் பண்ண வயல்காட்டுக்கு மிராசுதார் வருவாரா... இதையெல்லாம் பார்த்துக்கத்தானே கணக்கு பிள்ளைக்கு சம்பளம் குடுத்து, வேலைக்கு வெச்சிருக்கு. நாகேஷை வெச்சு காட்சி எடுங்க...' என்று, இயக்குனரிடம் படபடவென்று பேசிவிட்டு, புறப்பட்டு போய் விட்டார்.

எம்.ஆர். ராதாவை வைத்து எடுப்பதற்காக எழுதி வைத்திருந்த காட்சிகளை, கணக்கு பிள்ளைக்கு மாற்றினார், இயக்குனர்.

எதிர்பாராமல் நடிப்பதற்கு, கூடுதலாக காட்சி கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

ஆனந்த் என்று ஒரு நண்பர், எனக்கு அறிமுகம் ஆனார். அவரது பின்னணி பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் இரண்டு பேரும், ஸ்கூட்டரில் எங்காவது போவதுண்டு. ஒருநாள் என்னை தேடி வந்த அவர், 'எங்க அப்பா, உன்னை பார்க்கணும்ன்னு சொன்னார். வா...' என்றார்.

'உங்க அப்பாவா... எதற்காக, என்னை பார்க்கணும்ன்னு சொல்றாரு?'

'எங்க அப்பா தான், பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், எல்.வி. பிரசாத். அவருக்கு, உன்னை பற்றி தெரியும். நீ, என் நண்பர் என்பதும், அவருக்கு தெரியும் என்பதால், அழைத்து வரும்படி சொன்னார்...' என்றார்.

இதை கேட்டதும், எனக்கு இரட்டை வியப்பு. முதலாவது, இத்தனை நாள், பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், எல்.வி. பிரசாத்தின் மகனுடன், நான் பழகி இருக்கிறேன். இரண்டாவது, அவர், தன் படத்தில், வாய்ப்பு கொடுப்பதற்காக, என்னை கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார் என்பது.

உற்சாகத்துடன், எல்.வி. பிரசாத்தை போய் பார்த்தேன். என்னை ஆழமாக பார்த்தவர், 'கன்னங்கள் இரண்டும் ரொம்ப குழி விழுந்துருக்கே... பற்கள் கூட நன்றாக இருக்கலாமே...' என்றார்.

நான், பொறுமையாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர், அமைதியாய் உட்கார்ந்திருக்கவே, 'சார்... நீங்க வந்து இறங்கிய குதிரை எங்கே?' என்றேன்.

'குதிரையா... நான் குதிரையில் வரவில்லை; காரில் தான் வந்தேன்...' என்றார்.

'உங்கள் டிரஸ்சை பார்த்தால், குதிரை ஓட்டி வந்தவர் போல இருக்கிறது...' என்றேன்.

'நோ... நீங்கள் நினைப்பது தவறு...' என்றார்.

'அதே மாதிரி தான், என் முகத்தை பார்த்து, எனக்கு நடிக்க தெரியாது என்று நீங்களாக முடிவு கட்டுவதும்...' என்றேன்.

இது மாதிரி ஒரு பதிலை, என்னிடமிருந்து, அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது.

லேசாக அதிர்ந்து போனாலும், உடனே, சகஜ நிலைக்கு திரும்பி விட்டார்.

'நல்லா பேசறியேப்பா நீ... உனக்கு, கண்டிப்பா, என் படத்துல வேஷம் உண்டு...' என்றார்.

அப்போது, இன்ப அதிர்ச்சி எனக்கு.

அந்த படத்தின் பெயர், தாயில்லா பிள்ளை. படம் வெளியாகி, மிக நன்றாக ஓடியது. ஆனாலும், எனக்கு அந்த படத்தில் தரப்பட்ட வேஷம், மிகவும் சிறியது என்பதால், பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை.

எல்.வி. பிரசாத் பற்றி, இன்னொரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்...

எல்.வி. பிரசாத் இயக்கத்தில், ஒரு படத்தில், வீட்டு எஜமானியம்மாளின் மரணத்தையடுத்து, வீட்டில் இருக்கிறவர்களின் துக்கமான வெளிப்பாடுகளை, படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

வேலைக்காரன் அழுவதை படம் பிடித்த போது, இயக்குனர், எல்.வி. பிரசாத், 'இன்னும் அழு... கேவிக் கேவி அழு...' என்று சைகை செய்ய, வேலைக்காரராக நடித்தவர், ரொம்ப அழுது கொண்டிருந்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த நான், 'சார்... 'கட்' சொல்லுங்க...' என்றேன். அவரும், இவன் எதற்காக இடையில் மூக்கை நுழைக்கிறான் என்று யோசிக்காமல், சட்டென்று, 'கட்' சொல்லி விட்டார்; கேமரா நின்றது. உணர்ச்சிகரமான காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் சமயம், திடீரென்று என்ன ஆனது என்று அனைவருக்கும் குழப்பம்.

'எதற்காக, 'கட்' செய்ய சொன்னாய்?' என்று, எல்.வி. பிரசாத், என்னை பார்க்க...

'சார்... நீங்க, பெரிய இயக்குனர். ஆனால், இந்த காட்சியில், வேலைக்காரரின் நடிப்பு, இத்தனை உணர்ச்சிகரமாக இருக்கக் கூடாது என்பது, என் கருத்து. ஒரு எஜமானி செத்ததற்கு, கணவரை விட, வேலைக்காரர் அதிகமாக அழுதால், அந்த அம்மாவின் நடத்தை மீது, பார்க்கிறவர்களுக்கு சந்தேகம் வந்து விடாதா?' என்றேன்.

'நீ சொல்வது, சரி தான்...' என்றார், அவர்.

'இந்த காட்சியை இப்படி எடுத்தால் என்ன... எஜமானி அம்மாளின் சடலத்தை பார்த்ததும், துக்கம் தாளாமல் வேலைக்காரன், தன் துண்டின் நுனியால் வாயை பொத்தி, தலை குனிந்தபடியே, அந்த இடத்தை விட்டு போய் விடுகிறான்...' என்றேன்.

'வெரி குட்... ரொம்ப சரி... அப்படியே எடுத்திடலாம்...' என்றவர், அடுத்து சொன்ன வார்த்தைகள், எனக்கு என்றைக்கும் மறக்காது...

'இயக்குனராகும் தகுதி உனக்கு இருக்கு...' எவ்வளவு பெரிய மனிதரிடமிருந்து, எவ்வளவு பெரிய பாராட்டு!

தாயில்லா பிள்ளை படத்தில், நடித்துக் கொண்டிருந்த சமயம், திடீரென்று ஒருநாள், பாலாஜியின் அலுவலகத்திலிருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது. 'உடனடியாக, சித்ராலயா அலுவலகத்தில், இயக்குனர், ஸ்ரீதரை பார்க்க வேண்டும்...' என்று தகவல்.

அந்த காலத்தில், இயக்குனர், ஸ்ரீதர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைத்திருந்தார். அவரது இயக்கத்தில் நடிப்பது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. அப்படிப்பட்ட இயக்குனரின் கம்பெனியான சித்ராலயாவிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது என்றால் சும்மாவா?

அந்த சந்தோஷமான தருணத்தில், உடனடியாக, நான் நன்றியுடன் நினைத்துக் கொண்டது, பாலாஜியை தான். ஆம்... எனக்கு, சித்ராலயாவிலிருந்து வாய்ப்பு கிடைப்பதற்கு காரணமாக இருந்தது, அவர் தான்.




Friday, 7 August 2020

CHANDRA BABU ,COMEDIAN HISTORY


CHANDRA BABU ,COMEDIAN HISTORY



#சந்திரபாபு....

#மரணத்தை_மரணிக்க_செய்த_மகா_கலைஞன்.

சபாஷ் மீனாவில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் தான் பின்னாளில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கௌண்டமணி ஏற்று நடித்து மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றது.

அடிமைப்பெண் படத்தில் அபாரமான நகைச்சுவையை சோவுடன் சேர்ந்து பண்ணியிருப்பார்.

அன்னையில் எலியோடான அவரின் ஸ்லாப்ஸ்டிக் காமெடி மறக்கவே முடியாது.

கவலை இல்லாத மனிதன் படத்தில் எம்.ஆர். ராதாவின் தம்பியாக நாயகனாக நடித்திருப்பார். நாகேஷோடு சேர்ந்து ஒரு படத்தில் அவர் மஜ்னுவாக, நாகேஷ் லைலாவாக பெண் வேடமேற்று ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார்கள்.
#அபாரமான_அனுபவம்_அது.

ஜெயகாந்தனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தவர். ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் குறுநாவலை தான் நாயகனாக நடித்து இயக்க விரும்பினார். அது மட்டும் நடந்திருந்தால், உலக தரத்திலான ஒரு படத்தை நிச்சயம் சந்திரபாபு அன்றே கொடுத்திருப்பார். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீதுள்ள அதீக உரிமையில் அவரிடம் கேட்காமலேயே அந்த கதையில் தான் நடித்து இயக்க போவதாய் அறிவிப்பு தந்துவிட்டு, விசயத்தை ஜெயகாந்தனிடம் வந்து சொல்ல, அவர் எதனாலோ அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் போக, அந்த அற்புதமான படைப்புருவாக்கம் அப்படியே நின்று போனது.

ஒரு படத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பார். வாயில் எடுக்க வருவதுபோல நடித்து நடித்தே அந்த அன்ரிசர்வ்ட் இருக்கையில் அமர்ந்திருந்த அனைவரையும் எழுப்பி விட்டு விடுவார். பிறகு அவர் நிம்மதியாக கால்நீட்டி படுத்து உறங்க ஆரம்பித்துவிடுவார்.
#தமிழின்_ஸ்லாப்ஸ்டிக்_காமெடிக்கு_பிதாமகர்.

எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

ஏழு நாள் கால்ஷீட்டுக்கு......
#ஒரு_லட்சம்_ரூபாய்_பணம்_வாங்கிய_முதல்_காமெடி_நடிகர்!

'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும்போதும் அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்துல', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா' போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளாக இன்னமும்......
#தமிழகத்தின்_இரவு_நேரச்_சங்கீதம்!

சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப் படுத்தியவர். 'சகோதரி' படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். 'சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது முதல் பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல; அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதவைத் தாழிட்டுக்கொள்பவனும் அல்ல' என்று சொன்னார்!

மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். 'மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்'' என்றவர்!

இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின்போது அங்கே போய் நடிகர்கள் கலைநிகழ்ச்சி நிகழ்த்தி வீரர்களை உற்சாகப் படுத்தினார்கள். அதன் நீட்சியாக அவர்கள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சந்திக்க அழைக்கப்பட்டார்கள்.

ஜனாதிபதி மாளிகையில் ராதாகிருஷ்ணன் முன்னால் 'பிறக்கும் போதும் அழுகின்றான்' பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட... உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு. 'கண்ணா நீ ரசிகன்டா' என்று அவரது தாடையைத் தடவ... ஜனாதிபதியும் மகிழ... உற்சாகமானபொழுது அது!

நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஓவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும்கூட. 'ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்' என்று சிரிப்பார்!

'நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்' என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவரோடு திருமணம் நடந்தும் மனைவியாக வாழாமல் சில நாட்கள் மட்டும் தோழியாக இருந்து பின் தன் காதலனைஐ தேடி லண்டன் சென்றுவிட்ட ஷீலா!

இந்த சம்பவமே பாக்யராஜ் சாரின் அந்த ஏழு நாட்கள் படத்திற்கான ஒரு தூண்டுதல் என்றும் அந்நாட்களில் சொல்லப்பட்டது.

நடிகர் ரகுவரனுக்கு மிகவும் பிடித்த நடிகர் சந்திரபாபு. கிட்டத்தட்ட சந்திரபாவுவின் குணாதிசயம் கொண்டவர் அவர். மனது சரியில்லாத போது, என் ஆசான் சந்திரபாபு சமாதியில் போய் படுத்துக்கொள்வேன் என்று அவரது பேட்டியில் உருக்கமாக சொல்லியிருக்கிறார்.

சென்னையில் முதன்முதலில் காரிலேயே தன்னுடைய பங்களாவில் முதல் மாடிக்கு பயணிக்கிறாற்போல் டிசைன் செய்து கட்டிய பெருமை இவருக்கு உண்டு. கட்டிய வீட்டில் ஒரு நாள் கூட குடியேற முடியாமல் போன துரதிஷ்டததை என்னவென்று சொல்வது.

எம்.ஜி.ஆரை நாயகனாகவும், சாவித்திரியை நாயகியாகவும் வைத்து அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் மாடி வீட்டு ஏழை. படம் துவங்கிய பிறகு என்ன காரணத்தினாலோ அதிலுள்ள தயாரிப்பாளர்கள் விலகிக்கொள்ள, சந்திரபாபுவே தயாரிப்பாளராக ஆக்கப்பட்டார். எம்ஜிஆரும் ஒரு கட்டத்திற்கு பிறகு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

காரணம் அவரின் சகோதரர் சக்கரபாணி, சந்திரபாபு யதார்த்தமாய் ஒரு பேட்டியில் எம்ஜிஆரின் நடிப்பை பற்றி கேட்டதற்கு, அவருக்கு நடிக்கவே தெரியாதே.. அவர் ஒரு கரிஸ்மேட்டிக் பெர்ஷன்.. அவரின் சாகசங்களை மக்கள் ரசிக்கிறார்கள் என்றிருக்கிறார். அவரின் நடிப்பை அல்ல என்று சொன்னதை ஒரு குறையாக எம்ஜிஆரிடம் சொல்லிவிட, அங்கே ஆரம்பித்தது சந்திரபாபு எனும் மாபெரும் கலைஞனின் துன்பயியல் அத்தியாயம்.

சந்திரபாபு ஏசுவை நம்பியவர். பொய் எந்த சந்தர்ப்பத்திலும் பேசி அறியாதவர். குழந்தைமை மாறாதவர். மனதில் தோன்றியதை அப்படியே பட்..பட் டென பேசிவிடக்கூடியவர். அப்படிப்பட்ட வெளிப்படையானவரை இந்த சமுதாயம் வாழ விட்டுவிடுமா..

வாழ்க்கை அப்படித்தான்.. எத்தனையோ ஜாம்பவான்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டு, எதுவுமே நடக்காதது போல் மௌனித்தபடி பயணித்துக் கொண்டிருக்கிறது.










நடிகர் சந்திரபாபுவின் பிறந்தநாள்

சபாஷ் மீனா, நாடோடி மன்னன், அடிமைப்பெண், அன்னை அவரது மறக்க முடியாத படங்கள்..
.
இந்த சந்திரபாபு பிறந்தநாள். இயக்குநர் மிஷ்கின் சந்திரபாபு மீது கொண்ட பேரன்பால், அவரது கல்லறையில் இன்று செடிகள் நட்டு மரியாதை செலுத்தினார். செடிகளை பராமரிக்க இரண்டு நபர்களிடம் சொல்லிவிட்டு, அதற்கு போதுமான உதவிகளையும் செய்துக் கொடுத்திருக்கிறார்.

சென்னையில் பல வருடங்கள் வாழ்ந்தாலும், இதுவரை சந்திரபாபுவின் கல்லறை இருக்கும் இடம் தெரியாமல்தான் இருந்தேன். இன்று அவரது கல்லறையை முதன்முறையாக பார்த்தேன்.

துயரங்கள் நிறைந்த தமிழ் சமூகத்தின் புன்னகை விரும்பியாக இருந்து தன்னுடைய வாழ்வின் அத்தனை பக்கங்களையும் இருன்மையால் நிரப்பிக் கொண்ட ஒரு கலைஞனின் கல்லறை அத்தனை அமைதியாய் இருக்கிறது.

அவரது கல்லறை இருக்கிற இடம்.
Quibble island cemetery, greenways road, Chennai.

Kulashekar T
.

Thursday, 31 October 2019

MANOBALA,THE COMEDIAN OF TAMIL/TELUGU CINEMA




MANOBALA,THE COMEDIAN OF 
TAMIL/TELUGU CINEMA

“சாந்தி தியேட்டரும் சத்தியமூர்த்தி பவனும்!”

சினிமா

``என் உண்மையான பெயர் பாலசந்தர். இயக்குநர் கே.பாலசந்தரின் ஊரான நன்னிலம் அருகில் இருக்கும் மருங்கூர்தான் என்னுடைய சொந்த ஊர். ஃப்ரீலான்ஸர் பத்திரிகையாளராக ‘ஃபிலிமாலயா’ பத்திரிகையில் எழுதும்போதுதான் பாலசந்தர் என்ற பெயரை ‘மனோபாலா’ என மாற்றிக்கொண்டேன்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக விகடன் தீபாவளி மலரைத் தவறாமல் வாசித்து வருபவன், இன்று அதே தீபாவளி மலருக்குப் பேட்டி அளிப்பதை, எனக்குக் கிடைத்த கெளரவமாக நினைக்கிறேன்!''-மனோபாலாவின் வார்த்தைகளில் அவ்வளவு சந்தோஷம். `ஆகாய கங்கை' முதல் `நைனா' வரை நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 900-க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர். பத்திரிகையாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மனோபாலாவிடம் பேசியதிலிருந்து...


“என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சினிமாவில் இல்லை. ஆனால், எனக்குச் சின்ன வயதில் இருந்தே சினிமாமீது காதல். ‘சினிமாவில் சேரப்போகிறேன்’ என்றதும், வீட்டில் கடுமையான எதிர்ப்பு. அப்போது நான் பெங்களூரில் இருந்த அக்கா வீட்டில் தங்கியிருந்தேன். அங்கே குடும்பத்தினர் சேர்த்துவைத்த உண்டியல் காசுதான் அப்போது என் கண்களுக்குத் தெரிந்தது. உண்டியலை உடைத்ததில் 300 ரூபாய் தேறியது. எடுத்துக்கொண்டு ரயில் ஏறிவிட்டேன். சென்னை எனக்குப் புதுசு. சாந்தி தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தேன். அப்போது சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் ராஜசேகர்தான் என்னைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார். `என்கூட வா. நான் ஓர் இடத்துல உன்னைத் தங்கவைக்கிறேன்' என்று சொல்லி சத்யமூர்த்தி பவனுக்குக் கூட்டிச் சென்று படுக்கவைத்தார். அருகில் இருந்த மிட்லேண்ட் தியேட்டரில் `அடிமைப்பெண்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதை நைட் ஷோ பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, கையில் காசு குறைவாக இருந்தது.

அடுத்தநாள் காலையில் சென்னையில் இருந்த அக்கா வீடு நினைவுக்கு வர... எப்படியோ அடித்துப் பிடித்து அட்ரஸ் கண்டுபிடித்தேன். அங்கே போனதும், `எப்படிடா தம்பி தனியா இங்க வந்த... வீட்டுக்குச் சொல்லலையா’ என்று அக்கா கேட்டது. `பசிக்குதுக்கா, முதல்ல சோத்தப் போடு' என்று சொல்லிச் சாப்பிட்டு முடித்த பிறகு எல்லாக் கதையையும் சொன்னேன். அதேநேரம், பெங்களூரில் என்னைத் தேட ஆரம்பித்திருந்தார்கள். நான் சென்னைக்கு வந்திருந்தது தெரிந்ததும், இங்கே வந்து தேடத் தொடங்கியிருந்தனர்.

அந்தச் சமயத்தில் என்னைப் போன்ற உருவ அமைப்புகொண்ட ஒருவர் விபத்தில் இறந்திருந்தார். அவர்தான் நான் என நினைத்துக்கொண்டு என் குடும்பத்தார் கத்திக் கதறியிருக்கின்றனர். பிறகு, அக்கா வீட்டில்தான் நான் இருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு அங்கே
கிளம்பிவந்தார்கள். என் சென்னைப் பயணமும் சினிமாப் பயணமும் இப்படித்தான் தொடங்கியது. பிறகு, சினிமா சார்ந்த நபர்கள் ஒவ்வொருவராகத் தேடிச் சென்றேன். அப்படித்தான் பலரின் அறிமுகம் கிடைத்தது. அப்படி நான் முதலில் சந்தித்த நபர், சிவகுமார் அண்ணன். அவரைப் பார்த்து ஆலோசனை கேட்டுத்தான் ஓவியம் படிக்க `காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ்'ல் இன்டர்வியூவில் கலந்துகொண்டேன். அடிப்படையில் இருவருமே ஓவியர்கள் என்பதால் என்னை அறியாமல் அவருடன் நெருங்கிவிட்டேன். பிறகு, எப்படியோ நடிகனாகிவிட்டேன். ஆனால், டைரக்‌ஷன் செய்வதற்குள்தான் போதும் போதும் என்றாகிவிட்டது...” என்று சிரிக்கும் மனோபாலா ‘நடிகன்’ அனுபவத்தைச் சொல்கிறார்.

``நடிகனாக `புதிய வார்ப்புகள்’ என் முதல் படம். ஆனால், என்னை முழுநேர நடிகனாக்கிய பெருமை கே.எஸ்.ரவிக்குமாரைத்தான் சேரும். அவர்தான் `நட்புக்காக' படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். ‘இவர் வந்தால், நடந்தால், பேசினால்... என அனைத்தும் நகைச்சுவையாக இருக்கிறது’ என்று கண்டறிந்து நடிகன் வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். அப்படி ஆரம்பித்து இதுவரை 900 படங்களில் நடித்து முடித்துள்ளேன். இப்போது நேரடி தெலுங்குப் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். தெலுங்கில் ‘ரமணா ரெட்டி’ என்ற ஒருவர் இருந்தார். கிட்டத்தட்ட அவரைப் போன்றே நான் இருப்பதால், அங்கேயும் என்னை எளிதாக ஏற்றுக்கொண்டார்கள் என நினைக்கிறேன். அப்பப்பா... ஒவ்வொரு படத்திலும் எத்தனை அனுபவங்கள்!” என்று பழைய விஷயங்களை நினைவுகூர்ந்தவர், தொடர்ந்து நகைச்சுவை நடிகர்களைப் பற்றிப் பேசினார்.


``கவுண்டமணி, செந்தில், வடிவேலு... இன்று இவர்களைத் தாண்டி சந்தானம், சூரி, ரோபோ ஷங்கர், யோகி பாபு... என நகைச்சுவை நடிகர்களின் கொடி உயரப் பறக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சி. அதேசமயம், வடிவேலு தொடர்ந்து நடிப்பதில்லை என்பதில் எனக்கு மிகப் பெரிய வருத்தம் உண்டு. வடிவேலு என்பவர் மிகப் பெரிய கலைஞன். அது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கலைஞன். வடிவேலு என்கிற கலைஞன் உருவாகாமல் போயிருந்தால், நம் கவலைகளுக்கெல்லாம் மருந்திட யார் இருந்திருப்பார்கள்? அப்படிப்பட்ட கலைஞன் இன்று தொடர்ந்து படம் செய்யாமல் இருப்பது என்னைப் போன்று உடன் நடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் வேதனையாக இருக்கிறது. வடிவேலு தன் மனத்தடைகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டுத் திரையில் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்பதே என் ஆசை.

அதேபோல்தான் சந்தானம். `ஹீரோ மட்டும்தான் என்று ஒதுங்காமல் காமெடியில் மட்டுமே அவர் கவனம் செலுத்தியிருந்தால், இன்று அவர் எங்கோ போயிருப்பார். இன்றைய சூழலில் மோஸ்ட் வான்டட் நடிகர் என்றால், அது நம் யோகி பாபுதான். ஆனால், யார் வந்தாலும் போனாலும் எனக்கான இடம் எப்போதும் இருக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம். என் ஒல்லி உருவம், ஸில்க்கி ஹேர்... எல்லா நகைச்சுவைக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்திப்போகிறது என நினைக்கிறேன். அது ஒரு வரம். இந்த ஹேர் ஸ்டைலுக்கெல்லாம் தனி ஷாட் வைக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்” என்றவரிடம், டைரக்‌ஷன் அனுபவம் பற்றிக் கேட்டோம்.

``நான் டைரக்‌ஷனுக்கு வருவதற்கு முன்னால் கமல்ஹாசன்தான் என்னை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகக் கொண்டுபோய்ச் சேர்த்தார். அப்படித்தான் அவரிடம் உதவி இயக்குநராக 16 படங்களில் வேலை பார்த்தேன். அங்கே வேலை பார்த்த பிறகுதான் இயக்குநர் ஆனேன். நான் இயக்கிய `ஊர்க்காவலன்' படம் என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம். ரஜினி, ராதிகா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். அந்தப் படப் பாடல்களுக்கும் மிகப் பெரிய வரவேற்பு. இப்படி ஒவ்வொரு பட ஷூட்டிங்கின்போதும் ஒவ்வோர் அனுபவம். இதோ இப்போது தயாரிப்பாளராக `சதுரங்கவேட்டை-2' படத்தின் ரிலீஸுக்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறேன்.

சினிமாவை இன்டோரில் இருந்து வெளியே கொண்டுவந்த பாரதிராஜா படங்களைப் பார்த்து வியந்தோம். பாலசந்தரின் வித்தியாசமான படங்களைக் கொண்டாடினோம், தொழில்நுட்பத்தைத் தன் கதைக்குள் கூட்டிவந்த மணிரத்னத்தைப் பாராட்டுகிறோம். இந்திப் படப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்த தியேட்டர்களில் கிராமிய இசையை ஒலிக்கவிட்ட நம் இளையராஜாவை வாழ்நாளெல்லாம் வாழ்த்துகிறோம். அதேசமயம், ரஹ்மான் என்ற புதுப்புயலைக் கண்டறிந்தோம். இந்தப் பரபர உலகில் இவர்களைப்போல் அரிதான கலைஞர்களே காலத்தைக் கடந்தும் இங்கு தங்குகிறார்கள். அப்படி ஓர் இயக்குநர் தனக்கான தடத்தைப் பதிக்க வேண்டியது மிகமிக முக்கியம். மலரும் நினைவுகளுக்காக எதையாவது செய்துவைத்துவிட்டுப் போகவேண்டும். இவர்களுடன் ஒப்பிடுகையில், நான் குறைவாகப் பங்களித்திருந்தாலும், பங்களித்திருக்கிறேன் என்ற வகையில் சந்தோஷம்” என்றார்.

``பேய்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?'' என்று கேட்டோம். ``தமிழ்நாட்டுக்குப் பேயைத் திறந்துவிட்டதே நான்தான் என்பேன். 1985-ம் ஆண்டு `பிள்ளை நிலா' படம்தான் பக்கா பேய்ப் படம். ஒரே இரவில் அந்தக் கதையை எழுதினேன். இதுவரை 70-க்கும் மேற்பட்ட பேய்ப் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது தமிழ், தெலுங்கில் தலா ஒரு பேய் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘சீரியலில் நடித்தால் சினிமா வாய்ப்பு கிடைக்குமா?’ என்று சிலர் கேட்கிறார்கள். நாசர் இந்தியில வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். மனீஷா கொய்ராலா, பிரகாஷ்ராஜ், ராதிகா ஆப்தே எனப் பலரும் வெப் சீரிஸ் செய்கிறார்கள். மீடியம் எதுவாகவும் இருக்கலாம். நடிப்பு நடிப்புதானே?! ‘மகா நடிகன்' படத்தில் சத்யராஜ் சாரைப் பார்த்துச் சொன்னதுதான், `என்னைக்கிருந்தாலும் டி.வி சீரியலுக்கு நீங்க வந்தாகணும். பஸ் நிற்குதானு பாருங்க. நின்னா உடனே ஏறிடுங்க. விட்டுட்டீங்கனா, வெறுமனே பஸ் ஸ்டாண்டுல உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அடுத்த பஸ் வரவே வராது!" என்று சொல்லிச் சிரித்தபடி நமக்கு விடை கொடுத்தார்.

- வே.கிருஷ்ணவேணி,

Sunday, 20 October 2019

MADAN BOB ACTOR,COMEDIAN OCTOBER 19,1953


MADAN BOB ACTOR,COMEDIAN 
OCTOBER 19,1953





எஸ். கிருஷ்ணமூர்த்தி (ஆங்கிலம்:Madhan Bob) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.[1]

இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.[2]

சிரிப்புக்கென்றே முத்திரை பதித்துள்ள நடிகர் மதன் பாப். நகைச்சுவைக் கலைஞர், இசையமைப்பாளர், தொலைக்காட்சியில் ‘பாட்டு தர்பார்’, ‘அசத்துப்போவது யாரு’, ‘மதன்பாபுடன் சிரியுங்கள்’ எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தியவர் எனப் பன்முகப் பெருமை கொண்டவர். இவரது சிரிப்பை கே.பாலசந்தர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில பார்த்துவிட்டு அதை வைத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இவரை “வானமே எல்லை” படத்தில் நடிக்க வைத்தார். அதுதான் ரசிகர்கள் மனதில் இன்றும் பதிந்து போயிருக்கிறது.

இவருக்கு நல்ல இசைஞானம் உண்டு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் என்று பல இசையமைப்பாளர்களின் குழுவில் பங்கு பெற்றிருக்கிறார். சோ, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரா, வி.எஸ்.ராகவன், பிரியதர்ஷன் என்று பலருடைய நாடகங்களுக்கு இவர் இசை அமைத்திருக்கிறார். இவரே ‘மதன் பாப் மெல்லிசைக் குழு’ என்று ஒன்றை ஆரம்பித்து, தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினார். திரைப்படங்களில் வாய்ப்பு வர ஆரம்பித்த பிறகு மெல்லிசைக் குழுவைத் தொடரவில்லை. சமீபத்தில்தான் ஐந்தாறு வருடங்களாக ‘மதன் உத்சவ்’ என்ற பெயரில் மறுபடியும் மெல்லிசைக் குழுவை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

இவரது மகன் அர்ச்சித் எம்.சி.ஏ, எம்.பி.ஏ படித்திருக்கிறான். திரைப்படங்களில் பின்னணியும் பாடுகிறான். அவர்தான் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலைப் பாடியது. இவரது பெண் ஜனனியும் எம்.பி.ஏ முடித்திருக்கிறாள். அவரும் நன்றாகப் பாடுவாள்.  இவரது மனைவி சுசீலாவும் நன்றாகப் பாடுவார். இவர்கள் இணைந்து இந்தக் குழுவைக் குடும்பமாக நடத்துகிறார்கள்.


இவரது வீட்டில் எட்டாவது மகன் – அதனால் எனக்குக் ‘கிருஷ்ணமூர்த்தி’ என்று பெயர் வைத்தார்கள். ஆனால், இவரது சித்தப்பா பெயரும் கிருஷ்ணமூர்த்தி. அவர் பெரியவர், அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட முடியாது – இவரைக் கிருஷ்ணமூர்த்தி என்று கூப்பிடுவது சங்கடமாக இருந்தது. அப்போது இவரை ‘மதன்’ என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். பின்னர், அது ‘மதன் பாபு’ ஆகி, கடைசியில் ‘மதன் பாப்’ ஆகிவிட்டது.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் தேவர் மகன், ஜாதி மல்லி, உழைப்பாளி, உடன் பிறப்பு, திருடா திருடா, ஆனஸ்ட் ராஜ், நம்மவர், சதி லீலாவதி, மகளிர் மட்டும், பூவே உனக்காக, சுந்தரப்புருஷன் பிரியம், கோபுர தீபம் உள்ளிட்ட படங்கள் இவர் நடித்து வெளிவந்தவை. இவ்வாண்டில்கூட இவர் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் நடித்திருக்கிறார்.




Filmography[edit]

  1. Neengal Kettavai (1984)
  2. Vaaname Ellai (1992)
  3. Thevar Magan
  4. Jathi Malli (1993)
  5. Uzhaippali
  6. Udan Pirappu
  7. Thiruda Thiruda
  8. Honest Raj (1994)
  9. Pattukottai Periyappa
  10. Nammavar
  11. May Madham
  12. Sathi Leelavathi (1995)
  13. Magalir Mattum
  14. Pullakuttikaran
  15. Aasai
  16. Poove Unakkaga (1996)
  17. Sundara Purushan
  18. Tamizh Selvan
  19. Vetri Mugam
  20. Priyam
  21. Gopura Deepam (1997)
  22. Mannava
  23. Vivasaayi Magan
  24. Nandhini
  25. Pagaivan
  26. Nerrukku Ner
  27. Ratchagan
  28. Roja Malare
  29. Arasiyal
  30. Chachi 420 (Hindi)
  31. Thulli Thirintha Kaalam (1998)
  32. Rathna
  33. Kaadhala Kaadhala
  34. Jolly
  35. Priyamudan
  36. Unnidathil Ennai Koduthen
  37. Aasai Thambi
  38. Unnudan
  39. Thulladha Manamum Thullum (1999)
  40. Unnai Thedi
  41. Ethirum Pudhirum
  42. Anandha Poongatre
  43. Suyamvaram
  44. Nee Varuvai Ena
  45. Poovellam Kettuppar
  46. Minsara Kanna
  47. Jodi
  48. Unakkaga Ellam Unakkaga
  49. Kannukkul Nilavu (2000)
  50. Thai Poranthachu
  51. Sandhitha Velai
  52. Unnai Kann Theduthey
  53. Ilaiyavan
  54. Kuberan
  55. Thenali
  56. Anbudan
  57. Friends (2001)
  58. Looty
  59. Rishi
  60. Sonnal Thaan Kaadhala
  61. Pennin Manathai Thottu
  62. Star
  63. Azhagana Naatkal
  64. Parthale Paravasam
  65. Alli Thandha Vaanam
  66. Red (2002)
  67. Punnagai Desam
  68. Pammal K. Sambandam
  69. Kamarasu
  70. Krishna Krishna
  71. Gemini
  72. Yai! Nee Romba Azhaga Irukke!
  73. Anbe Un Vasam
  74. Youth
  75. Sundhara Travels
  76. Villain
  77. Kadhaludan (2003)
  78. Pallavan
  79. Nala Damayanthi
  80. Priyamana Thozhi
  81. Thithikudhe
  82. Three Roses
  83. Anbe Un Vaasam
  84. Indru
  85. Thendral (2004)
  86. Jairam
  87. Aethirree
  88. Campus
  89. Ennavo Pudichirukku
  90. Vasool Raja MBBS
  91. Karka Kasadara
  92. Vishwa Thulasi
  93. Chatrapathy
  94. Giri
  95. Ayyaa (2005)
  96. Chandramukhi
  97. 6'2
  98. Jithan
  99. ABCD
  100. Mazhai
  101. Bambara Kannaley
  102. Aathi (2006)
  103. Sudesi
  104. Jerry
  105. Kusthi
  106. Jambhavan
  107. Varalaaru
  108. Mudhan Mudhalai
  109. Manikanda (2007)
  110. Periyar
  111. Thottal Poo Malarum
  112. Marudhamalai
  113. Thavam
  114. Vel
  115. Vedha (2008)
  116. Arai En 305-il Kadavul
  117. Seval
  118. Ananda Thandavam (2009)
  119. Thee
  120. Bhramaram (Malayalam)
  121. Engal Aasan
  122. Ainthaam Padai
  123. Sura (2010)
  124. Pen Singam
  125. Kaavalan (2011)
  126. Maapillai
  127. Eththan
  128. Singam II
  129. Yuvan Yuvathi
  130. Pathayeram Kodi (2013)
  131. Chandhamama
  132. Ethir Neechal
  133. Saravanan Engira Surya
  134. Thulli Vilayadu
  135. Ramanujan (2014)
  136. Aindhaam Thalaimurai Sidha Vaidhiya Sigamani
  137. Jamai
  138. Poriyaalan
  139. Lingaa
  140. Vellaikaara Durai
  141. En Vazhi Thani Vazhi (2015)
  142. Adhibar
  143. Saagasam (2016)
  144. Tea Kadai Raja
  145. Ka Ka Ka Po
  146. Ennama Katha Vudranunga
  147. Tamilselvanum Thaniyar Anjalum
  148. Uchathula Shiva
  149. Kaththi Sandai
  150. Ner Mugam
  151. Motta Shiva Ketta Shiva (2017)
  152. Vaigai Express
  153. Saravanan Irukka Bayamaen
  154. Ivan Thanthiran
  155. Ullam Ullavarai
  156. Nagesh Thiraiyarangam (2018)
  157. Aalukku Paathi 50/50
  158. Pattinapakkam

References