Showing posts with label UNCONVENTIONAL. Show all posts
Showing posts with label UNCONVENTIONAL. Show all posts

Sunday, 29 April 2018

RAJA RAVIVARMA, THE ARTIST UNCONVENTIONAL BORN 1848 APRIL 29-1906 OCTOBER 2







RAJA RAVIVARMA, THE ARTIST  UNCONVENTIONAL
BORN 1848 APRIL 29-1906 OCTOBER 2





ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்

வாழ்க்கைக் குறிப்பு
ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா - நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.

ஓவியக்கலையில் ஈடுபாடு

ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார்.அவரிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார் .தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்து கொண்டார்.[1] சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்.

எண்ணெய் வண்ண ஓவியக்கலை




இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 1870 - 1880 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்.[2]

மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894 இல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899 இல் அச்சகத்தை ஸ்லிஷர் (Slisher) நகரத்துக்கு மாற்றினார். 1906 இல் தமது 58ஆவது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

புகழ்பெற்ற ஓவியங்கள்

1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது"[3].

ரவிவர்மா குறித்த விமரிசனங்கள்

இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது ஓவியங்களில் வெறும் கதை சொல்லும் (illustrative) தன்மையும், உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான் காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல் செய்யும், இந்தியக் கலையியலைப் புறக்கணித்த ஓவியர் என்றும்
குறைகூறினார்கள். அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட பிரதி ஓவியங்கள் 'கேலண்டர் ஓவியர்' என்று அவரை கொச்சைப் படுத்தப் பயன்பட்டன. மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி இந்திய வண்ண உத்தியை அவர் அவமதித்ததாகக் கூடக் குறிப்பிட்டார்கள்.[4]









Saturday, 24 February 2018

SANJAY LEELA BANSALI , UNCONVENTIONAL DIRECTOR BORN 1963 FEBRUARY 24




SANJAY LEELA BANSALI ,
UNCONVENTIONAL DIRECTOR 
BORN  1963 FEBRUARY 24


Sanjay Leela Bhansali , BornFebruary 24, 1963 in Mumbai, Indiais among the most celebrated Film Makers of the Bollywood. Having worked with the biggest stars of Indian Film Industry, Bhansali is the most sought-for director of the Bollywood. He started his career as an assistant director to Vidhu Vinod Chopra. If one has to name his 'niche' genre, it would definitely be Mega-Musicals. From Devdas to Bajirao Mastani, Hum Dil De Chuke Sanam to Saawariya, love of cinema and music, proclaims through every movie he writes or direct.

His 1999 Romantic-Drama, Hum Dil De Chuke Sanam, starring heartthrob duo Salman-Aishwarya became one of the most critically cherished movies of the Genre. Amitabh Bachan, starrer Black was equally appreciated by the critics. But he made his presence felt with 2002 adaptation of the Hindi literary masterpiece, Devdas, for a silver-screen experience. He received a nomination for Best Foreign Film at BAFTA for the movie.

Devdas has become a name synonymous with a passionate, intense love that does not find consummation. This similar theme has been repeated numerous time in the literary work. And one of them is Romeo & Juliet. He translated this classic tale into Indian Folk Idiom.
- IMDb Mini Biography By: James(Mohit)

Trade Mark (3)
His work has passionate (and often damaged) individuals reaching out to each other over great distances to connect with each other.
His films often feature emotional pain and trauma being exprienced by his protagonists.
Dedicates all his films to his deceased father
Trivia (8)

Conceives his films in a unique fashion - he designs the film soundtrack first and then creates the film.
Frequently sneaks scenes from his life into his films.
He is the only director, besides the legendary Guru Dutt, who created his films in total isolation from the public. In fact, two of Dutt's films - Kaagaz Ke Phool (1959) and Sahib Bibi Aur Ghulam (1962) - are Bhansali's favourite movies. His wish is to remake either or both of these movies at some point in his career, as well as to make a biopic on Guru Dutt's life.
Sister Bela Segal is the daughter-in-law of director Mohan Segal.
Son of producer Navin Bhansali.
In 2015, he was awarded the fourth highest Indian civilian honor, the Padma Shri. Another addition to his honor tally along with his four National Awards and Six Filmfare Awards.
Sanjay Leela Bhansali always wanted to direct Fardeen Khan in a film. He had a written a small role for him in Black but later decided to scrap it. He always felt there was untapped talent and huge potential in Fardeen Khan.
After Khamoshi, Bhansali had plans to make the film "Train To Pakistan" with Bobby Deol. The film ended up being made by someone else for unknown reasons.
Personal Quotes (11)

At the premiere of Black (2005): Until recently I didn't even have a proper office. I've just a couple of staffers, hence my agitation and anxiety at the premiere. I single-handedly sent out all the invitations, called up every person individually and made sure they were all there at the premiere. I agree this isn't the way for me to function. But I'm basically a middle class boy from the chawls. I can't bring myself to trust others to do my work.
Black for you may be darkness; for me it is a universal truth. Our best ideas come from the darkness of the mind; every new life is created in the darkness of the womb...
On disabled children: The physically challenged are not children of a lesser god. They're far more beautiful than the so-called normal people. They appreciate every shade of life, like my protagonist in Black (2005). She's a true-blue hero.
Deep down, the disadvantaged are angry with life. They want to see/hear/talk, but are constantly groping in the dark. They are so insecure about communication that there is a whole surrender in it. They get angry over the smallest of things! Imagine the frustrations of not being fully understood...anger is an important part of their expression.
About Alzheimer's disease: The idea of forgetting...things, names, persons...terrifies me. When I forget a little thing, it is an absolute trauma until it comes back to me again. All of us have these lapses of memory - what if memory doesn't return?
About the hearing-impaired: I was fascinated by the way in which teachers and parents struggled to reach out to hearing-impaired children. How do you start the communication, how do you keep it going? What takes other children a year to learn takes them ten years for them to absorb. I watched a mother trying so hard, and with such patience, to convey the simplest things - I wanted to make a film about it right away. I find their zest for life and unquenchable fighting spirit a thing to be admired. What a long tough struggle, yet they choose to live with energy and vitality! They don't want our pity, nor have I treated them as people who need our sympathy. You know, as they talk, they hold your hand - they're reaching out desperately, almost entirely through the touch; that is their most basic, urgent mode of communication, more than textbook grammar, than even the language of gesture. There is so much honesty in that touch. We don't touch each other anymore and I think we hear less because of that. I've never felt more reassured than when I held a deaf person's hand.
About his "lack of restraint": Listen, I was born and brought up in Bombay, where people shout at each other from the windows of flats on opposite sides of the streets. I belong to a community with a loud lifestyle. You can't expect dignity, propriety, control and detachment from ME! My talk is full-throated, my expressions full-blooded. I cannot make a film without melodrama.
About Devdas (2002): It's got a garish, nautanki format to it. I've paid tributes to all films like it, from Full Moon (1961) to Prem Rog (1982). I've made the film as Raj Kapoor would have made it - over the top. I can't get Bimal Roy's subtle format and delineation anyway...
About teachers: I have learned Odissi; I know what the teacher can do, why we touch his feet. We don't respect our teachers anymore, but to me God is the teacher. He comes into your life once - he can be neurotic, erratic, complex, but he transforms your life and perspective. You must not submit meekly, but question what you're taught. Then the teacher removes your fears about life, the world - and yourself...
What fun to explore a road not taken, to explore blacks, blues and grays instead of riotous colors! You know, those who do only the expected things evaporate form the minds of audiences. Audiences too want a change from the same boring formulas and anyway formulas are failing all the time. I believe that audiences make no special demands. Good fiction, made with honesty, conviction and entertainment, and they'll accept it...
About Saawariya (2007): Saawariya is a simple but exotic love story. True love is divine. It has to have yearning, disappointment and agony.

இசை இல்லையென்றால் இறந்துவிடுவேன்! - சஞ்சய் லீலா பன்சாலி நேர்காணல்


சர்வதேச சினிமா பார்வையாளர்கள் இந்தியாவில் அதிகரித்துவருகிறார்கள். இந்நிலையில் இந்தியத் திரையிசை அருகிவரும் ஒன்றாக இருக்கிறது. சம்பிரதாயமான பாடல்களை நமது திரை இயக்குநர்கள் நீக்கத்தொடங்கியுள்ள நிலையில், புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியோ, பாடல்களை ஆசையுடன் எடுப்பவர். இந்திய சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த அடையாளம் பாட்டும் நடனமும் என்று நம்பும் திரை இயக்குநர்களில் ஒருவர். அவரது சமீபத்திய திரைப்படமான ‘பாஜிராவ் மஸ்தானி’, இந்திய அளவில் பெரிய வெற்றியை அடைந்ததோடு, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய திரை விருதுப் போட்டியில் ஐந்து விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படமாகவும் விளங்குகிறது. சிறந்த அசலான இசை பிரிவிலும் (ஒரிஜினல் மியூசிக்) பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேறு யாருமல்ல சஞ்சய் லீலா பன்சாலிதான்.

இசைக்கும் இந்திய சினிமாவுக்கும் உள்ள ஆழமான தொடர்பு குறித்து பன்சாலி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது…

உங்களைப் பொறுத்தவரை திரையிசையின் முக்கியத்துவம் என்ன?

இசைதான் எல்லாம். ஒரு திரைக்கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கும்போதே, ஒரு குறிப்பிட்ட பாடலிலிருந்துதான் அது உருவெடுக்கிறது. எனது பால்ய காலத்தில் விவித் பாரதி வானொலி சேவை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். காலையில் எழுந்து நான் முதலில் செய்யும் காரியம் எனது மியூசிக் ப்ளேயரை சுவிட்ச் ஆன் செய்வது. ஒரு நாளின் கடைசியில் செய்யும் காரியம், உறங்கும்போது மியூசிக் பிளையரை நிறுத்துவது. குளிக்கும்போது எனக்கு இசை தேவை.

காரில் தேவை. படப்பிடிப்பு அரங்கிலும் ஒரு ஷாட்டை எடுத்து முடித்த பின்னர், எனது ஐ பாட் உடனடியாக ஆன் செய்யப்படும். சுருதியும் லயமும் என்னை கவனம் சிதற விடாமல் வைத்திருக்கின்றன. எனக்குப் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் இசையுடன் சேர்ந்துதான் என் ஞாபகத்தில் இருக்கின்றனர். எந்நாளும் என்னைக் கவர்ந்த நடிகை ஹெலன்தான். ஒரு குழந்தையாக அவர் படங்களைப் பார்த்தபோது, அவரது நடனத்தைப் பார்க்கும் அனுபவத்துக்கு ஈடான சந்தோஷத்தை நான் அனுபவித்ததேயில்லை.

அவர் வினோதமான உடைகளுடன் காபரே ஆடும்போது கூட, அவரை நான் கடவுளுடன் சேர்த்துத்தான் பார்த்தேன். ஹெலன், சந்தியா, ஹேமாஜி (ஹேமமாலினி) எல்லாருமே எனது வாழ்க்கையில் நான் பார்த்த கடவுளர்கள்.

ஒரு படத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கும்போதே பாடல்தான் முதலில் வரும் என்று சொன்னீர்கள்… அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

பாஜிராவ் மஸ்தானியைப் பொருத்தவரை, கே. ஆசிப் அவர்களின் சினிமாக்களில் வந்த பாடல்கள் தான் உந்துதல். பூபாலி ராகத்தில் கிஷோரி அமோங்கர் பாடிய எத்தனையோ பாடல்களின் தூண்டுதலில்தான் அல்பெலா சாஜனின்-ன் புதிய பதிப்பை உருவாக்கினேன். லதா மங்கேஷ்கரின் பாடல்களும் என்னிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மராத்திய நாட்டுப்புறப் பாடல்களும் செவ்வியல் இசையும் பாஜிராவ் மஸ்தானிக்குத் தூண்டுதலாக அமைந்தன.

சாவரியா படத்தின் திரைக்கதைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உந்துதலாக இருந்தார். லகான் படத்தின் இசை தேவ்தாஸ் திரைக்கதைக்கு உத்வேகமாக அமைந்தது. தேவ்தாஸ் படத்தின் கிளைமாக்சை எடுக்கும்போது லகான் இசை எனது தலையில் ஓடிக்கொண்டிருந்தது.

உங்கள் ‘ப்ளாக்’ படத்தில் பாடல்களே கிடையாது… பாடலே இல்லாத இன்னொரு படத்தை உங்களால் எடுக்கமுடியுமா?

நான் ஒரு திரில்லர் படம் எடுத்தால் பாடல்களே தேவைப்படாது. ஆனால் ‘ப்ளாக்’ படம் எடுக்கும்போது அந்த விஷயம் என்னைப் பாதித்தது. ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் அனைவரின் மூடையும் செயல்திறனையும் சரியான நிலையில் வைத்திருக்க செட்டில் இசையை ஓடவிட்டே படமெடுத்தேன். இசையில்லாமல் எனது வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே இயலாது என்பதே உண்மை.

என்னிடமிருந்து இசையை எடுத்துவிட்டால், நான் இறந்துவிடுவேன். நான் அடிப்படையில் ஒரு அரசவைக் கூத்தாடி. என்னைச் சுற்றி ஆர்மோனியங்களும் டோலக்குகளும் வேண்டும். எந்த நல்ல படமும் ஒரு பாடலைப் போலத்தான் இருக்கிறது. ஒரு லயத்தோடு இருந்தால்தான் அது சினிமா. அப்படியில்லாவிடில் எங்கோ தவறு இருக்கிறது.

இஸ்மாயில் தர்பார், மோன்டி சர்மா போன்ற மகத்தான இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருக்கிறீர்கள். நீங்களே இசையமைக்க வேண்டும் என்று எப்போது உணர்ந்தீர்கள்?

இரண்டு பேருமே பிரமாதமான இசையை எனக்குத் தந்துள்ளனர். ஆனால் இஸ்மாயில் தர்பார், தன்னை வேறு படங்களில் பணியாற்ற நான் தடைவிதிப்பதாக வெளிப்படையாகச் சொன்னார். தேவ்தாஸில் பணியாற்றும்போது எனக்கு அவருடன் பிரச்சினை ஏற்பட்டது. மோன்டியிடமும் அது ஏற்பட்டது. நான் அவரை ஆதிக்கம் செலுத்துவதாக எண்ணினார். எனது இசை சார்ந்த யோசனைகளை விளக்குவது சிரமமாக இருந்தது. அத்துடன் பாடல் சார்ந்த என்னுடைய தயாரிப்பு மிகவும் நீண்டது.

அதனால் நான் யோசித்தேன். என்னைவிட மேம்பட்ட இசையமைப்பாளர்கள் இருந்தாலும், அவர்களுடன் கடினமான வேலையை நான் செய்வதால் அதை நானே செய்துவிடலாம் என்று தோன்றியது. குஷாரிஷ்க்கு இப்படித்தான் இசையமைக்கத் தொடங்கினேன். ராம்லீலா எடுக்கும் கூடுதல் நம்பிக்கை வந்தது. பாஜிராவில் இசையமைப்பதை அனுபவித்துச் செய்யத் தொடங்கினேன். இனிமேல் இசையமைப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. அதில் களைப்பாகிவிட்டேன்.

விது வினோத் சோப்ராவுக்கு நடன இயக்குநராகத்தான் உங்கள் பணியைத் தொடங்கினீர்கள். பாடல்களை உருவாக்குவதில் உங்களுக்கென்று ஒரு பாணி இருக்கிறதே?

எனது தந்தை சினிமா தயாரிப்பாளராக இருந்தவர். ஒரு படத்தை மூன்று நான்கு முறை பார்ப்பதற்கு அழைத்துப் போவார். முகல் ஏ அஸம் படத்தைக் காண்பித்துவிட்டு, படே குலாம் அலிகான் பாடல் இதுவென்று சொல்லி கே. அசீப் எப்படி காமிராவை நகர்த்துகிறார் என்பதைக் கவனிக்கச் சொல்வார். அப்போது அவர் அப்படிச் சொன்னதை நான் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் சினிமா பார்க்கும் கலாசாரத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இசையைக் கேட்கும்போது, நான் அதை எப்படிப் படமெடுப்பேன் என்றுதான் யோசிப்பேன். கே. அசீப், மெஹ்பூப் கான், வி.சாந்தாராம், ராஜ்கபூர், பிமல் ராய் மற்றும் குரு தத் எப்படித் தங்கள் பாடல்களை எடுத்தார்கள் என்ற வியப்போடுதான் நான் வளரவே செய்தேன்.


தற்போதைய பெரும்பாலான படங்களில் நாயகனும் நாயகியும் பாடுவதற்கான சூழ்நிலைகளே உருவாக்கப்படுவதில்லை. அந்த மரபு காப்பாற்றப்பட வேண்டும். இந்தியாவில் எடுக்கப்படும் மாற்று சினிமாக்களைத் தவிர மேற்கு நாடுகளில் நமது பாடல்களே நமது அடையாளமாக உள்ளd. சத்யஜித் ராய் மற்றும் ரித்விக் கதக் போன்றவர்களின் படங்கள்கூட இசையோடு ஆழமான இணைப்பைக் கொண்டவையாகவே உள்ளன.

Monday, 6 November 2017

KAMALHASAN, UNCONVENTIONAL ACTOR OF TAMIL CINEMA BORN 1954 NOVEMBER 7



KAMALHASAN, UNCONVENTIONAL 
ACTOR OF TAMIL CINEMA 
BORN 1954 NOVEMBER 7



இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: நவம்பர் 7, 1954
பிறந்த இடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
தொழில்: நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர், தயாரிப்பாளர்
நாட்டுரிமை: இந்தியா

ஆரம்ப கால வாழ்க்கை
கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள்.
கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.
இல்லற வாழ்க்கை
1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர். பின்னர், சிம்ரனுடனான தொடர்பின் காரணமாக, சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002ல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
திரையுலக வாழ்க்கை

தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.

1974ல் வெளியான ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு அம்மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வருமையின் நிறம் சிகப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜப்பார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.

அதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. 1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. அன்று முதல், இவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹே ராம்’. இது அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல் பட நிறுவனத்தின்’ படைப்பாகும். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தாலும், இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. பின்னர், ‘தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அண்மையில் அவர் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். திறமைசாளியான கமல்ஹாசன் அவர்கள், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.
இலக்கிய படைப்புகள்
தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது.
தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.
பொதுநலப் பணிகள்
‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல சமுதாயப் பொது நல அமைப்புகள் அமைத்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வழங்கினார்.
விருதுகள்

சிறந்த நடிப்பிற்காக மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றார்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக ‘இந்திய தேசிய விருது’ அவரது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மாவிற்காக’ வழங்கப்பட்டது.
18 முறை ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமை, கமல்ஹாசன் அவர்களையே சேரும்.
1990ல், ‘பத்மசிறீ விருது’ பெற்றார்.
2005ல், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
முக்கியமான திரைப்படங்கள்
கமல்ஹாசன் அவர்களின், திரையுலக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டத் திரைப்படங்களுள் சில…
களத்தூர் கண்ணம்மா

16 வயதினிலே
மூன்றாம் பிறை
நாயகன்
அபூர்வ சகோதரர்கள்
மைக்கேல் மதன காமராஜன்
குணா
மகாநதி
தேவர் மகன்
இந்தியன்
அவ்வை சண்முகி
ஆளவந்தான்
தெனாலி
தசாவதாரம்






கமல்ஹாசன் சாதனை குறிப்புகள்
1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா
2 முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960
3 சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்
4 எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி
5 ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம்
6 முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும்
7 முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே
8 முதல் வங்க மொழிப் படம் கபிதா
9 முதல் கன்னடப் படம் கோகிலா

10 முதல் தெலுங்குப் படம் பொன்னி
11 கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி
12 முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும்
13 முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்
14 மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்
15 நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்
16 பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்
17 பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே
18 வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்
19 மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.
20 மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.

21 இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.
22 ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி.
23 சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால்.
24 கமலின் 100வது படம் ராஜ பார்வை
25 கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை
26 ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.
27 ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்
28 அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.
29 பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.
30 சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.

31 இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது.
32 முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.
33 முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்
34 ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.
35 மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.
36 கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.
37 பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.
38 இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.

39 கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.
40 இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி
41 ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.
42 ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.

43 ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.
44 பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.
45 கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
46 கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.
47 ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
48 நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126
49 ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)
50 ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.
51 ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்
52 இயக்கியப் படங்கள் இரண்டு

53 ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.
54 சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன்,
55 தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.
56 தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
57 சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.
58 ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.
59 நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.
60 தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம்.

61 தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம்.
62 ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
63 ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
64 ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன் ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர்.
65 அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள்.
66 அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.
67 சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம்.
68 அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
69 பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம்.

70 முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம்.
71 ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி.
72 ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
73 ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா.
74 ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த முதல் தமிழ் படம் இதுதான்.
75 டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.
76 அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம்.
77 விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம்.
78 ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர்.
79 ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.
80 முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை.
81 திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.
82 கமல் பின்னணி பாடியப் படங்கள் 33.
83 இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர்.
84 பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்)

85 மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர்.
86 ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு.
87 சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.
88 பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.
89 பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.
90 ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.
91 ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும்.
92 தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர்.
93 படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர்.
94 கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி.
95 கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
96 கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.
97 கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.
98 ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் ஒரே நடிகர் கமல்.

99 இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர்.
100 கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்.
101 பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்
102 கமல்ஹாசன் நடித்து இதுவரை எந்த படமும் விலைபோகாத அளவிற்கு பஞ்ச தந்திரம் விலையாகி உள்ளது.
103 சிங்கப்பூர், மலேசியா,கனடா போன்ற வெளிநாட்டு உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் பஞ்ச தந்திரம்.
104 62 நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம் பஞ்ச தந்திரம்.