Showing posts with label JANUARY 9. Show all posts
Showing posts with label JANUARY 9. Show all posts

Sunday, 27 June 2021

R.SUNDARAJAN ,DIRECTOR BORN 1950 JANUARY 9

 



R.SUNDARAJAN ,DIRECTOR 

 BORN 1950 JANUARY 9

வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர்கள் ஒரு வகை, வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்கள் இன்னொரு வகை. இதில் 2வது வகையைச் சேர்ந்தவர்களை வரலாறு வெற்றியாளர்களாக அடையாளம் காட்டத் தவறுவதில்லை.
கோவையில் விவசாய குடும்பத்தில் பிறந்து பின்பு எம்ஜிஆர் ஆ(ட்)சியில் எம்எல்ஏ வாக உயர்ந்த ஒரு அரசியல்வாதியை சந்தித்து ‘என்னிடம் நல்ல கதை இருக்கிறது நீங்கள் தயாரிப்பாளராக முடியுமா?‘ என்று கேட்டிருக்கிறார் ஒரு இளைஞர். இத்தனைக்கும் அந்த இளைஞர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியதில்லை. 80களில் நேரடி சினிமா அனுபவம் இல்லாத யாரும் இயக்குநர் ஆவதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அதையெல்லாம் மீறி, அந்த எம்எல்ஏவுக்கு அவர் சொன்ன கதை பிடித்துப் போனது. திரைத் துறையில் அனுபவம் இல்லாத காரணத்தினால் மிகுந்த யோசனைக்குப் பின்பே அந்தப் படத்தை தயாரிக்க ஒத்துக் கொண்டார், அவர்.
அப்படி உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் 425 நாட்கள் ஓடி மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கிறது.
1980களில் ஆரம்பத்தில் வெளியான அந்தப் படத்துக்குப் பின், அப்போதைய காலகட்டத்தில் யார் புதிதாக டேப் ரெக்கார்டர் வாங்கினாலும் முதல் முதலில் வாங்கும் பாடல் கேசட் இந்தப் படத்தின் கேசட்தான். அது என்ன படம்? அந்த இளைஞர் யார்?
சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் வசதி வாய்ப்புகளோடு பிறந்து மும்பையில் எம்பிஏ முடித்து யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் இயக்குநர் ஆனவர் என்று ‘சிலருக்கு‘ கொடுக்கும் புகழாரம் ஏனோ இன்றுவரை இவருக்கு கிடைக்காமலேயே போய்விட்டது.
அந்த ஆதங்கத்தோடுதான் இதை எழுத வேண்டியிருக்கிறது.
காமெடி நடிகராக மட்டுமே 2k கிட்ஸ்களுக்கு தெரிந்த ஆர். சுந்தர்ராஜன் பல வெற்றிப் படங்களையும் ரஜினி, விஜய் நடித்த படங்களையும் இயக்கியவர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் படங்களையோ கதைகளையோ படமாக்கிவிடவில்லை என்றாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்றும் மறக்க முடியாத பாடல்களையும் காமெடிகளையும் தந்திருக்கிறார்.
சுந்தர்ராஜனும் இயக்குநர் பாக்கியராஜூம் ஒரே ஊர்க்காரர்கள். பால்ய நண்பர்கள். பாக்கியராஜ்க்கு பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சுந்தர்ராஜனுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. அதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை.
பாக்கியராஜூடன் இணைந்து சினிமா ஸ்கிரிப்ட்கள் எழுதிய (ஏட்டுக் கல்வி) அனுபவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு நேரடியாக இயக்குநர் ஆக கிளம்பியவர்தான் ஆர்.சுந்தர்ராஜன்.
‘பயணங்கள் முடிவதில்லை‘ படத்தின் கதையைத்தான் அப்போது எம்எல்ஏவாக இருந்த கோவை தம்பியிடம் சொல்லி அவரைத் தயாரிப்பாளராக்கி இருக்கிறார். படம் சூப்பர் ஹிட்.
பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் என்று அன்றைக்கு கொடிகட்டிப் பறந்த ‘பா‘ வரிசை இயக்குநர்களுக்கு சவால்விட்டு சாதித்துக் காட்டியவர்தான் ஆர்.சுந்தர்ராஜன்.
இளையராஜா இசையில் அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப்பாடல்களும் ‘இளைய நிலா‘வாக என்னென்றும் ரசிகர்களின் காதுகளில் ‘பொழிந்து‘ கொண்டே இருக்கும்.
தமிழில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே‘ படத்தின் மூலம் அறிமுகமான மோகனுக்கு ‘பயணங்கள் முடிவதில்லை‘ 2வது படம். பூர்ணிமாவுக்கு முதல் தமிழ்ப் படம். மோகன் பாடகராக நடித்திருப்பார். படத்தின் மிகப்பெரிய வெற்றியால் தொடர்ந்து சிங்கர் கேரக்டரில் சிக்கி சாதாரண மோகன் மைக் மோகனாகவே ஆகிவிட்டார்.
‘சென்னை மாநகரிலே‘ என்று கவுண்டமணி கத்திப் பேசியபடி இந்தப் படத்தில் தோன்றுவார். இந்தப் படத்துக்குப் பின்புதான் சவுண்ட் விட்டுப் பேசும் மானரிஸத்தை கவுண்டமணி பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். ஒரு முறை டான்ஸ் மாஸ்டர் சுந்தரமிடம் (பிரபுதேவாவின் தந்தை) பேசிக் கொண்டிருந்த ஆர்.சுந்தர்ராஜன், ‘உனக்கு என்னய்யா, 3 குரங்கு குட்டிகளை பெத்துப்போட்டிருக்கே. ஆடறா ராஜா ஆடறா ராஜானு ஊருக்குள்ள வித்தை காட்டியே பொழச்சுப்ப’ என்று சொல்ல, சுந்தரம் மாஸ்டரே விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.
ஒரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. சூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, நடிகர் நடிகைகள் நடிக்க தயாராகிக் கொண்டிருக்க, படத்தின் தயாரிப்பாளர், சுந்தர்ராஜனிடம் தயங்கித் தயங்கி ‘இன்னும் படத்தின் கதையை எங்களிடம் சொல்லவில்லை? இப்போதவாது சொல்றீங்களா?‘ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுந்தர்ராஜன், ‘கதை வச்சிருந்தா சொல்லியிருக்க மாட்டேனா? இனிமேதான்யோசிக்கணும்‘ என்று சொல்லி இருக்கிறார். இதுதான் சுந்தர்ராஜன். இந்த நக்கலையும் நையாண்டியையும் அவரது முதல் பாடத்தில் நடித்த கவுண்டமணி சுவீகரம் செய்து கொண்டார்.
சுந்தர்ராஜன் இயக்கிய ‘வைதேகி காத்திருந்தாள்‘ படத்திலிருந்து தான் அதுவரையில் தனித்தனியாக நடித்துக் கொண்டிருந்த செந்தில்- கவுண்டமணி என்ற சூப்பர் ஹிட் நகைச்சுவை ஜோடி உருவானது. இன்று வரை மீம் கிரியேட்டர்களால் பயன்படுத்தப்படும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா‘,‘பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’, ‘கூடை வச்சிருக்கறவங்களுக்கெல்லாம் பெட்ரமாக்ஸ் லைட் கிடையாது’ போன்ற கவுண்டமணியின் வரலாற்று சிரிப்பு மிக்க பஞ்ச் லைன்கள் இடம்பெற்றதும் இந்தப்படத்தில்தான்.
எப்போதுமே, சுந்தர்ராஜன் படங்களில் வரும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அதற்கு அவரது இசை ரசனையே காரணம். அவருக்கு முந்திய தலைமுறை இசையமைப்பாளரான கேவி மகாதேவனை இசையில் தன் 2வது படத்தையும் (அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), அதே போல் இளையராஜா வருகைக்குப்பின் அவ்வளவாக வாய்ப்பு இல்லாமல் இருந்த எம்எஸ் விஸ்வநாதன் இசையில் 3வது படத்தையும் (சரணாலயம்) இயக்கினார். கேவி மகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா, தேவா போன்ற இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய ஒரே இயக்குநர் இவராகத் தான் இருக்க முடியும்!
இளையராஜா மெட்டமைத்து வைத்திருந்த பாடல்களுக்காகவே இவர் எழுதி இயக்கிய படம் தான், ‘வைதேகி காத்திருந்தாள்‘. அந்தளவுக்கு அவர் திரை இசையை காதலித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தயாரிப்பதாக இருந்த ஏவிஎம் நிறுவனம் கூட விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சொல்லி இவருக்கு கொடுத்த அட்வான்ஸை திரும்ப கேட்டிருக்கிறார்கள். அதன் பின்பு பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘வைதேகி காத்திருந்தாள்‘ அடைந்த வெற்றியை உலகம் அறியும். அதுவரை வெறும் ஆக்சன் ஹீரோவாக அறியப்பட்ட விஜயகாந்தினால் நடிப்புக்குத் தீனி போடும் கேரக்டர்கள் பண்ண முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய படம், ‘வைதேகி காத்திருந்தாள்‘.
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘அம்மன் கோயில் கிழக்காலே‘ விஜயகாந்த் கேரியரில் மற்றொரு முக்கியமான படம்.
இவரது இசை ரசனைக்கு இன்னுமொரு சாட்சி. ‘மெல்ல திறந்தது கதவு‘ படத்தில் மிகப்பெரிய இசை சாம்ராஜ்ஜியங்களான எம்எஸ் விஸ்வநாதனும் இளையராஜாவும் இணைந்து இசையமைத்திருப்பார்கள். இன்றும் தமிழர்களை இரவின் மடியில் தாலாட்டி தூங்க வைப்பதில் இப் படத்தில் இடம்பெற்ற ‘ஊருசனம் தூங்கியிருச்சு‘க்கும், ‘குழலூதம் கண்ண‘னுக்கும் பெறும் பங்கு உண்டு.
ஆர். சுந்தர்ராஜனிடம் கொடுத்த அட்வான்ஸை திரும்பிக் கேட்ட அதே ஏவிஎம் நிறுவனம்தான் மெ.தி.கதவு படத்தைத் தயாரித்தது. அந்த காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்குநராக இவர் வலம் வந்ததுதான் அதற்க்குக் காரணம்.
இளையராஜா தயாரித்து இசையமைத்த ரஜினி நடித்த ‘ராஜாதி ராஜா ‘ படத்தை இவர்தான் இயக்கினார். எப்போதும் இளையராஜாவின் ‘குட்புக்‘கில் இவருக்கென்று தனியிடம் இடம் உண்டு. ‘ராஜாதி ராஜா ‘ படமும் சூப்பர் ஹிட்.
இவர் இயக்கிய ‘திருமதி பழனிச்சாமி‘ படத்துக்குப் பின்புதான், சத்யராஜ்-கவுண்டமணி காமினேஷன் பிரபலமானது.
கேவி மகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா என்று பயணித்த ஆர்.சுந்தர்ராஜன், தேனிசைத் தென்றல் தேவாவையும் விட்டு வைக்கவில்லை.
இவரது ‘என் ஆசை மச்சான்‘, ‘சீதனம்‘, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்‘ படங்களுக்கு தேவாதான் இசை. ‘காலமெல்லாம் காத்திருப்பேன்‘ படத்தின் ஹீரோ விஜய். படம் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை.
அதன்பின்பு, ஆர்.சுந்தர்ராஜன் முழு நேர நடிகர் ஆகிவிட்டார். இவர் படங்களில் நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயம். படத்தில் வரும் எல்லா frame மும் கண்ணாடியை துடைத்து வைத்தது போல பளிச்சென்று இருக்கும். ‘ராஜாதி ராஜா‘ படத்தில் இருக்கும் அழகான ரஜினியை வேறுபடங்களில் நாம் பாத்திருக்க மாட்டோம். ‘அம்மன் கோயில் கிழக்காலே‘ படத்தில் விஜயகாந்த் அப்படியொரு அழகுடன் இருப்பார். நாயகன், நாயகிகள் இவர் படங்களில் மட்டும் கூடுதல் அழகுடன் தெரிவதன் ரகசியம் புரியவில்லை. இல்லை எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறதா என்றும் தெரியவில்லை.
கவுண்டமணி-செந்தில், கவுண்டமணி-சத்யராஜ் காமெடியில் நம்மையெல்லாம் சிரிக்க வைத்த ஆர். சுந்தர்ராஜன் இப்பொழுது உயிருடன் இல்லைஎன்ற வதந்தியோடு இன்னும் உலவிக்கொண்டிருக்கிறார்
‘ராசாவே உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது…‘
Like
Comment
Share

Saturday, 30 November 2019

T.R.RAMACHANDRAN ,TAMIL LEGEND ACTOR BORN 1917 JANUARY 9-1990 NOVEMBER 30



T.R.RAMACHANDRAN ,TAMIL LEGEND ACTOR 
BORN 1917 JANUARY 9-1990 NOVEMBER 30



டி. ஆர். இராமச்சந்திரன் (சனவரி 9, 1917[1] - நவம்பர் 30, 1990) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[2][3] கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது.
வாழ்க்கைச் சுருக்கம்
இராமச்சந்திரனின் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9 இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். இராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.[4]

நாடகங்களில் நடிப்பு
இராமச்சந்திரனுக்குப் படிப்பில் ஈடுபாடு இருக்கவில்லை. குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது. தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பனி கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். இக்கம்பனி சில காலத்திலேயே மூடப்பட்டதை அடுத்து உள்ளூரைச் சேர்ந்த மணி ஐயர் என்பவர் இக்கம்பனியை நடத்தி வந்தார். இவருடன் நாடகக் கம்பனியில்
பணியாற்றிய எஸ். வி. வெங்கட்ராமன் (பின்னாளில் பிரபலமான இசை அமைப்பாளர்) புதிதாகத் தொடங்கிய நாடகக் கம்பெனி ஒன்றில் ராமச்சந்திரனும் அவரது குழுவினரும் சேர்ந்தனர். கருநாடகத்தில் கோலார் நகரில் தங்கியிருந்து நாடகங்களை நடத்தினர். அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.[4]

திரைப்படங்களில் நடிப்பு
வெங்கட்ராமன் பெங்களூரில் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். டி. ஆர். ராமச்சந்திரன் டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார்.[4] 1938 இல் வெளிவந்த இப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு, வாயாடி திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.[4] பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை, ஆகிய படங்களில் நடித்தார்.[4] 1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் பெரு வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு சோடியாக நடித்தார்.[5] பி. ஆர். பந்துலு தயாரித்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தார். சிவாஜி கணேசன் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார்.[6]

படங்கள் தயாரிப்பு

ராமச்சந்திரன் 1954 ஆம் ஆண்டில் சொந்தத்தில் படக்கம்பெனி தொடங்கி ‘பொன் வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதில், ராமச்சந்திரனின் ஜோடியாக அஞ்சலிதேவி நடித்தார். இத்திரைப்படத்திலேயே சீர்காழி கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். எழுத்தாளர் தேவன் எழுதிய கோமதியின் காதலன் என்ற கதையை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரித்து, சாவித்திரியுடன் சோடியாக நடித்தார்.[5]

சொந்த வாழ்க்கை
டி. ஆர். இராமச்சந்திரனின் திருமணம் 1948-ல் நடந்தது. ஜெயந்தி, வசந்தி என்று 2 மகள்கள். திரைப்படத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அமெரிக்காவில் மகளுடன் வசித்து வந்தார். அங்கு அவர் 1990 ஆம் ஆண்டில் காலமானார்.[6]

டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ, சிவாஜி செகண்ட் ஹீரோ - டி.ஆர்.ஆர் நினைவு தினக் கட்டுரை

'கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே...காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...'என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர். செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒருவிதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது.
காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கிவைத்தவர் டி.ஆர். இவர் ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜியே செக்கண்ட் ஹீரோதான். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு ஜோடி ராகினி. வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி எனப் பல முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை. 

கரூர், திருக்காம்புலியூர் கிராமத்தில் 1917ம் ஆண்டு பிறந்தார் டி.ஆர். ராமச்சந்திரன். அப்பா ரங்காராவ் விவசாயி. சிறுவயதிலேயே அம்மாவை இழந்த டி.ஆர்.க்கு பள்ளிப் படிப்பு சுத்தமாகவே பிடிக்கவில்லை. திண்ணைப் பள்ளியில் படிக்கப் பிடிக்காமல் காணாமல் போய்விடுவார். பிறகு தேடிப் பிடித்துக் கூட்டி வருவார்கள். பிறகு குளித்தலையில் உள்ள குருகுலப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ' எனக்கு படிப்பு வேண்டாம். நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்தார். காரணம். குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது.

பரீட்சை முடிந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம், மகனை வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா அனுமதியுடன் ராகவேந்திரராவுடன் ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக் கம்பெனியில் சேர அனுமதி கேட்டு அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.

தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பெனி கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது, அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான எஸ்.வி. வெங்கடராமன் (மீரா படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய் சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வந்தார். அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.

வெங்கட்ராமன், பெங்களூரில் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். காரைக்குடியில் வெங்கட்ராமன் குழு திறமையைக் கண்டார் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். அதிலும், தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை செட்டியாருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. டி.ஆர். ராமச்சந்திரன், டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார். 1938 இல் வெளிவந்த இப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு, வாயாடி திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை ஆகிய படங்களில் நடித்தார். 

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.

1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக நடித்தார். 

படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர். சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப் படமாகி பெரும் புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். சபாபதி படத்திற்கான மொத்த பட்ஜெட் 32,000 ரூபாய்.

டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் "யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி).

திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின், அமெரிக்காவில் தன் மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
நன்றி : சினிமா விகடன் Last updated : 17:46 (30/11/2015)


கோலிவுட்டின் முதல் காமெடி ஹீரோ டி.ஆர்.ராமச்சந்திரன்!
January 9, 2019 by admin
டி. ஆர். ராமச்சந்திரன் இன்னிய யூத்-களுக்கு தெரியாத பெயர்

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகரான இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனா கவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது.

1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர்.

அதிலும் செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒரு விதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது.



இன்னும் சொல்லப் போனால் காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கி வைத்தவர் இந்த ரியல் டி.ஆர்-தான். இவர் ஹீரோவாக நடித்த, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் சிவாஜியே செகண்ட் ஹீரோதான். அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு ஜோடி ராகினி.  மேலும் வைஜெயந்திமாலா, அஞ்சலி தேவி, சாவித்ரி எனப் பல முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை.

அப்போது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். மேலும் ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.

1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். ராமச் சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த ராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக நடித்தார்.

ஒருப் படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர். (தகவல் திரட்டு : கட்டிங் கண்ணையா)

சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப் படம் வெற்றிப் படமாகி பெரும் புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். சபாபதி படத்திற்கான மொத்த பட்ஜெட் 32,000 ரூபாய்.

டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் “யாரடி வந்தார் என்னடி சொன்னார்’ என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி).

திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின், அமெரிக்காவில் தன் மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

ஹேப்பி பர்த் டே டிஆர்

நவம்பர் 30. டி.ஆர்.ராமச்சந்திரனின் நினைவு தினம்.
===
நகைச்சுவை நடிகர்களின் பெரும் புகழைப் பார்த்து அவர்களுக்கு ஏற்ற கதையை எழுதி, நாயகனாக்குவது இன்றைய கண்டுபிடிப்பு அல்ல. அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்படித் தொடங்கி வைத்தவர்களில் ஒருவர்தான் டி.ஆர். ராமச்சந்திரன். இவர் ஹீரோவாக நடித்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில், அன்று முன்னணி நாயகனாக வளர்ந்துவிட்ட சிவாஜி கணேசன் இரண்டாவது ஹீரோவாக நடித்தார் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். இதில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால் ராமச்சந்திரனுக்கு ஜோடி ராகினி. நகைச்சுவை நாயகனாக அடைந்த வெற்றியால், ராகினி மட்டுமல்ல, வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி, ஸ்ரீரஞ்சனி எனப் பல முன்னணிக் கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை. டி.ஆர். ராமச்சந்திரன் நாடகம் வழியாக சினிமாவுக்கு வந்தவர். 25 படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், அதன் பிறகு நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் சுமார் 30 ஆண்டு காலம் நிலையான செல்வாக்குடன் சாதனை படைத்தவர்.

காவிரி மைந்தர்

கரூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்காம்புலியூர் என்ற கிராமத்தில் 1917-ல் பிறந்தவர். அப்பா ரங்காராவ் எளிய விவசாயி. ராமச்சந்திரன் நான்கு வயது சிறுவனாக இருக்கும்போதே அம்மாவை இழந்தார். தாயை இழந்த ஏக்கம் தெரியக் கூடாது என்பதற்காக மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தார் அப்பா. ஆறு வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்த்தார். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து திடீர் திடீரென்று ராமச்சந்திரன் காணாமல் போய்விடுவார். தேடிப்போனால், ஆடுகள், கோழிகளோடு அன்புடன் பேசிக்கொண்டிருப்பார்.

உள்ளூர் பள்ளிக்கூடம் சரிவராது என முடிவு செய்து குளித்தலையில் ஒரு குருகுலப்பள்ளியில் சேர்த்துவிட்டு வந்துவிட்டார் அப்பா. வீட்டு ஞாபகமாகவே இருந்த ராமச்சந்திரனுக்கு படிப்பு பாகற்காய் ஆனது. பள்ளிக் கல்வியைக் கஷ்டப்பட்டு முடித்தவரைத் திருச்சி நேஷனல் கல்லூரியில் சேர்க்க நினைத்திருக்கிறார் அப்பா. ஆனால் படிப்பு வேண்டாம் எனக்கு நடிப்பு போதும் என்று கிளம்பிவிட்டார் ராமச்சந்திரன்.

பாட்டு போட்டுக் கொடுத்த ரூட்

பரீட்சை முடிந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம், மகனை வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா அனுமதியுடன் ராகவேந்திரராவுடன் ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக் கம்பெனியில் சேர அனுமதி கேட்டு அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.

3 ரூபாயிலிருந்து 25 ரூபாய்
மதுரையின் புகழ்பெற்ற நாடக கம்பெனிகளில் ஒன்றான ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா’வில் நடிகராகச் சேர்ந்தார் ராமச்சந்திரன். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான எஸ்.வி. வெங்கடராமன் (மீரா படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய் சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வந்தார்.

நண்பரின் கம்பெனியில் சேர்ந்த அதிர்ஷ்டம் உடனடியாக அவருக்குப் படவாய்ப்பைக் கொண்டுவந்தது. காரைக்குடியில் வெங்கட்ராமன் குழு திறமையைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், பிரகதி பிக்சர்ஸ் கம்பெனியுடன் இணைந்து தயாரித்த ‘நந்தகுமார்’படத்தில் நடிக்க வெங்கட்ராமன் நாடகக் குழுவில் இருந்த அத்தனை பேரையும் ஒப்பந்தம் செய்தார். இதுதான் ராமச்சந்திரன் நடித்த முதல்படம். இதில் சின்னக் கதாபாத்திரம் என்றாலும் தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை மெய்யப்பச் செட்டியாருக்குப் பிடித்துப் போய்விட்டது.

திருப்புமுனை

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். நாடக வடிவில் இருந்ததைத் திரைக்கு மாற்றி எழுதும்படி ஏ.டி. கிருஷ்ணசாமியைக் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.

மிகப் பெரும் வெற்றியை பெற்ற இந்தப் படம், ராமச்சந்திரனுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் செல்லப் பிள்ளையானார் ராமச்சந்திரன். உலக போர் முடிந்த பிறகு சென்னைக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோ இடமாற்றம் செய்யப்பட்டது. இதன்பிறகு ஏ.வி.எம் தயாரித்த பெரும்பாலான வெற்றிப் படங்களில் ராமச்சந்திரனுக்காவே ரகளையான காமெடி கதாபாத்திரங்கள் முக்கியவத்துடன் உருவாக்கப்பட்டன.

உயர்தட்டு நகைச்சுவைக்கு உதாரணம்

40களில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த மேட்டுக்குடி இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவையுடன் குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கமும் கொஞ்சம் அம்மாஞ்சித்தனமும் கலந்த காதல் உணர்ச்சி, இவற்றுடன் தனது அபாரமான உடல்மொழியால் ரசிகர்களை வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்த நகைச்சுவைக்கு டி. ஆர். ராமச்சந்திரன் சிறந்த உதாரணம். கதாநாயகிகள் தங்களது கண்களை நடிக்கப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, இவர் தனது உருண்டையான கண்களைப் பயன்படுத்தினார். இவர் உருட்டி விழிப்பதைப் பார்த்ததுமே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர் ஏற்றுக்கொண்ட பெரும்பாலான பாத்திரங்கள் மேட்டுக்குடி வாழ்வை நகைச்சுவையாக்கின.

50க்கும் அதிகமான படங்களில் தனக்கான பாடல்களைப் பாடி நடித்த இவர், ரசனையுடன் பல படங்களைத் தயாரித்தும் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின் அமெரிக்காவில் தன் மகள்களுடன் வசித்துவந்தார். கடந்த 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானர். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது

Friday, 30 March 2018

MAHENDRA, KAPOOR ,HINDI ,PLAYBACK ,SINGER, BORN 1934 JANUARY 9- 2008, SEPTEMBER 27






MAHENDRA KAPOOR ,HINDI PLAYBACK SINGER
BORN 1934 JANUARY 9- 2008, SEPTEMBER 27


Mahendra Kapoor (9 January 1934 – 27 September 2008) was an Indian playback singer.

In a career spanning five decades, his repertoire extended to 2500 songs in various regional languages,[1] including popular songs such as 'Chalo ek baar phir se Ajnabi ban jayen hum dono' (Gumrah), and 'Neele gagan ke tale' (Hamraaz). His name however became most closely associated with patriotic songs including 'Mere Desh Ki Dharti' in Manoj Kumar's film Upkaar.[2] In 1972, he was awarded the Padma Shri by the Government of India. He lent his voice to actor Manoj Kumar in most of his films
Biography
Mahendra Kapoor was born in Amritsar, but soon moved to Mumbai. At an early age he was inspired by singer Mohammed Rafi but he started learning classical music under classical singers like Pt. Hussanlal, Pt. Jagannath Bua, Ustad Niaz Ahmed Khan, Ustad Abdul Rehman Khan and Pt.Tulsidaas Sharma. Kapoor created a style of his own and won the Metro Murphy All-India singing competition, which led to his debut as a playback singer in V. Shantaram's Navrang in 1958, singing Aadha Hai Chandrama Raat Aadhi, under the musical direction of C. Ramchandra.[1]

Some of Kapoor's most notable songs were the ones he performed in B.R. Chopra's films (Dhool Ka Phool, Gumrah, Waqt, Hamraaz, Dhund and Nikaah) and for Manoj Kumar (Upkaar, Purab Aur Paschim).

Kapoor had a very large vocal range, and he is sometimes known as The Vibrant Voice of India.[citation needed] He was the first Indian playback singer to record music in English[citation needed]. He was asked by the group Boney M to sing their songs in Hindi with Musarat from Pakistan, which resulted in the Pop Album M-3. Some of the songs on the album are "Chori Chori Chalo!!"(Original, Hoorray! Hoorray! by Boney M), "O Meri Champe Ki Daali". Most of the songs sung by Mahendra Kapoor are famous, whether they are from B R Chopra movies or Manoj Kumar's movies. His song from 'Bandhan', 'Shakti'. 'Doli', 'Ek Nazar', 'Admi Aur Insaan', 'Sangam', 'Tawaif' are also quite popular.

Mahendra Kapoor also sang a duet with Mohammed Rafi. The song was "Kaisi Haseen Aaj Baharon Ki Raat" from the 1967 film "Aadmi", which was originally recorded as a duet with Rafi and Talat Mehmood. Manoj Kumar, one of the lead stars refused to use Talat's voice for him and the song was re-recorded with Kapoor replacing Talat.[citation needed] Mahendra Kapoor also sang the dohas, mantras, chopaiyan and also Title track of Mahabharat 1988 TV series.

Kapoor sung in a large number of Indian languages, and is the playback singer who has performed in the largest number of in Gujarati, Punjabi, Bhojpuri and Marathi movies.[3] He also performed the title song for the TV series Mahabharat. In Marathi he was very popular for being the voice of Dada Kondke in all his movies. In spite of being associated with Dada Kondke's colloquial style his singing for Marathi movies was not limited to Dada Kondke's movies only.


Kapoor was married and had three daughters and also one son. His son Rohan Kapoor is an actor and singer, who acted in a few films in the 1980s such as Yash Chopra's Faasle (1985) and Love 86 (1986), and Prakash Mehra's Imandaar, and later did stage shows together with his father.

On 27 September 2008, Kapoor died following a cardiac failure at his home in Mumbai, aged 74. He was survived by his wife, children, children-in-law and grandchildren.[4]

Mahendra Kapoor is one of the golden era singers when Mohd Rafi, Kishore Kumar, Mukesh and Manney Dey was ruling the main platform of playback singers of the bollywood. He remained as one of the most popular singer in the Bollywood who has given his voice to almost all of the popular heroes like Dilip Kumar, Shammi Kapoor, Raj Kapoor, Dev Anand, Shashi Kapoor, Biswajeet, Raj Kumar, Dharmendra, Amitabh Bahchcan, Manoj Kumar, Jeetendra, Vinod Khanna, Shatrughina Sinha and many more. For Punjabi movies he has given his voice to Varendra, Mehar Mittal, Prem Nath and many more.
Hindi

"Aap Aaye Tho Khayal" - Gumrah (1963)
"Chalo Ek Baar" – Gumrah (1963)
"Chhod Kar Tere Pyar" - Woh Kaun Thi (1964)
"Mera Pyar Woh Hai" – Yeh Raat Phir Na Aayegi (1965)
"Kisi Pathar Ki Moorat Se" – Hamraaz (1967)
"Na Muh Chupa Ke Jiyo" – Hamraaz (1967)
"Neele Gagan Ke Tale" – Hamraaz (1967)
"Tum Agar Saath Dene Ka Wada Karo" – Hamraaz (1967)
"Tu Husn Hai Main Tujmein" – Hamraaz (1967)
"Mere Desh Ki Dharti" – Upkar (1967)
"Ab Ke Baras" – Kranti (1981)
"Andhere Mein Jo Baite" - Sambandh (1982)
"Beete Hue Lamhon Ki Kasak Saath" – Nikaah (1982)
"Chehra Chupaliya Hai Kisi - Nikaah (1982)
"Dil Ki Yeh Arzoo Te Koi - Nikaah (1982)
"Mangi Thi Ek Duajo - Shakti (1982)
"Dil Hi Dil Mein Le Liya" - Aaj Ki Awaaz (1984)
"Tere Pyar Ki Tamanna" - Tawaif (1984)


"Tere Pyaar Ka Aasra" – Dhool Ka Phool (1959)
"Lakhon Hain Yahan Dilwale" – Kismat (1968)
"Iktara Bole" – Yaadgar (1970)
"Bharat Ka Rahnewala Hoon" – Purab Aur Paschim (1970)
"Hey Ramchander keh gaye Siya se"- Gopi (1970 film) (1970)
"Aur Nahin Bas Aur Nahin" – Roti Kapada Aur Makaan (1974)
"Fakira Chal Chala Chal" – Fakira (1975)
"KAB TALAK SHAMA JALI" – [PAINTER BABU](1983)
"JAB YAAD KI BADLI CHAHTI HAI" – [PAINTER BABU](1983)
"JISKE SAPNE HAME ROJ AATE RAHE" – [GEET](1970)
"YE KALI JAB TALAK PHOOL BANKE KHILE" – [AAYE DIN BAHAAR KE](1966)
Title Song of Mahabharat (1988)
Title Song of Vishnupuran (2002)
Marathi

Ti Yete Aneeka Jate..Yetana kadhi kalya aneete
He Chincheche zad dise maj chinar vrukshapari
Ratris khel chale ya gudh chandanyacha, sampel na kadhihi ha khel savalyancha
Abol Zalis ka saajani..
Saang kadhi kalanar tula..
Sur tech chhedita..
Madhu ithe ana chandra tithe..
Swapnaat pahile je te roop hech hote..
Nako menaka nako urvashi..
Awards
1972 – Padma Shri
National Film Award for Best Male Playback Singer
1968 Won – "Mere Desh Ki Dharti" – Upkar
Filmfare Award for Best Male Playback Singer
1964 Won – "Chalo Ek Bar" – Gumrah
1968 Won – "Neele Gagan Ke Tale" – Hamraaz
1968 Nominated – "Mere Desh Ki Dharti" – Upkar
1975 Won – "Aur Nahi Bus Aur Nahi" – Roti Kapda Aur Makaan
1977 Nominated – "Sunke Teri Pukar" – Fakira
Others
1967 Won – "Mian Tansen Award" – Sati Nari – Tum Nacho Ras Barse
2000 Won – "Bollywood Music Awards- New York" – Life Time Achievement Award
2002 Won – "Lata Mangeshkar Puruskar" – Madhya Pradesh State Award
2008 Won – "Dada Saheb Phalke Academy Award" – Phalke Golden Voice Singer
2008 Won – "Maharashtra State Award" – Life Time Achievement