Showing posts with label SEPTEMBER 27. Show all posts
Showing posts with label SEPTEMBER 27. Show all posts

Sunday, 31 January 2021

NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN 1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31

 

NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN 

1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31




நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - சனவரி 31, 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். இவர் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.வாழ்க்கைச் சுருக்கம்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.[1]



தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் நாகேசுக்கு திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார். புது வசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த் பாபு இவரது மகனாவார்.


நடிப்புத் துறையில்

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.



1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.


கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.



திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.


கதாநாயகனாக

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.


கமல்ஹாசன் உடனான நட்பு

கமல்ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் இவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமல்ஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும்.


நாகேஷின் நினைவு தினம் இன்று. நாகேஷ் கன்னடத்தை பிறபிறப்பிடமாகக்கொண்டவர் அவருக்கு 1951 ம் ஆண்டு போட்ட அம்மையினால் முகம் முழுவதும் நிரந்தர வடுக்கள் இருக்க , அவரின் அம்மா கொடுத்த ஆறுதலினால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர்.


அவர் திருமணம் செய்து, அவருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வந்துள்ளது. அதுவும் ஆண் குழந்தை. ஷூட்டிங்கில் இருந்த நாகேஷுக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆனால், அவர் போய் பார்க்க விரும்பவில்லை. ஏன் என்று எல்லோரும் ஆச்சரியப்பட, பாலசந்தர் கேட்டே விட்டாராம்.


” அம்மைத் தழும்புகளால் விகாரமா ன என் முகத்தை பார்த்து குழந்தை . பயந்துவிடாதா?’ என்று அவ்வளவு வருத்தமும், சோகமும் பட்டு சொல்லி இருக்கிறார் நாகேஷ் . உடனே பாலசந்தர், ‘டேய்… உன் அழகு உன் முகத்தில் இல்லை. நடிப்பில் இருக்கிறது. முதலில் குழந்தையை போய் பார் ’ என்று சொல்லவும், மனம் தெளிந்து பிள்ளையை பார்க்க வந்தாராம் நாகேஷ்.


அதிர்ஷ்டம் கதவை தட்டும் என்பர். ஆனால், எனக்கு சினிமா வாய்ப்பு என்ற அதிர்ஷ்டம், ஜன்னலை தட்டியது. ஆம்... ஒருநாள் காலை, ரயில்வே ஆபீசில் எதேச்சையாக தலையை திருப்பி, ஜன்னல் பக்கம் பார்த்தபோது, எனக்கு பரிச்சயமான முகம் தென்பட்டது.

'இவர், எதற்கு இங்கே வந்திருக்கிறார்...' என்று, எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். அவர், 'நாகேஷ்... நீ இங்கே தான் இருக்கிறாயா... உன்னை பார்க்கணும்ன்னு தான் வந்தேன்...' என்றார்.

வந்தவர் பெயர், பஞ்சு. சினிமா கம்பெனிகளுடன் தொடர்புடைய மனிதர். அவரை, தி.நகரில், வெற்றிலை, பாக்கு வாங்கும், 'சுல்தான் சீவல்' கடையில், அடிக்கடி பார்ப்பேன். என் அருகே வந்த, பஞ்சு, 'நாடகங்களில் எல்லாம் அமர்க்களமா நடிக்கிற போல இருக்கு... சினிமாவுல நடிக்கறியா?' என்றார்.

'இன்று, ஏப்ரல் 1ம் தேதி கூட இல்லை. என்னை இப்படியெல்லாம் முட்டாளாக்க முடியாது!' என்றேன்.

'விளையாட்டு இல்லை; நான் சொல்றது நிஜம். எங்க முதலாளி, உன் நாடகத்தை பார்த்து, அசந்துட்டாரு! தான் எடுக்கும் படத்துல எப்படியும் உன்னை நடிக்க வைக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டார். உன்னை பார்த்து பேசிட்டு வரச்சொல்லி, என்னை அனுப்பியிருக்கார்...' என்றார், பஞ்சு.

'என்னை நடிக்க வைப்பதில் அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நடிப்பதற்கு எனக்கும் ஆட்சேபனை ஏதுமில்லை!'

'சரி... புறப்படு!'

'பஞ்சு சார்... இந்த படத்துல நடிக்க, எனக்கு எவ்வளவு ரூபாய் கொடுப்பாங்க?'

'எவ்வளவு எதிர்பார்க்கறே?'

'ரயில்வேயில வேலை பார்க்கிறேன். மாதம் பிறந்தா, சுளையா சம்பளம் வாங்கி பழகிப் போச்சு. இங்கே எனக்கு, மாசம், 150 ரூபாய் சம்பளம்...' என்றேன்.

'ஐந்நுாறு ரூபாய் போதுமா?'

'என்ன... 500 ரூபாயா... சினிமாவுல நடிச்சா, அவ்வளவு பணம் கொடுப்பாங்களா... சார், சீக்கிரமா போய், அவரை பார்த்து பேசி முடிச்சிடலாம்... வேற யாருக்காவது அந்த வாய்ப்பை குடுத்திட போறாரு!'

'உனக்கு ஏன் வீண் சந்தேகம்... குறைந்தது, 500 ரூபாய் வாங்கிக் கொடுக்க நானாச்சு...' என்றார்.

அவரது கைகளை பிடித்து, நன்றி சொன்னேன்.


சினிமா கம்பெனியின் ஆபீசுக்கு போனோம். இரண்டு பேர், ஓர் அறையில் உட்கார்ந்திருந்தனர். அவர்களை கம்பெனி முதலாளிகள் என்று கூறி, என்னை அறிமுகப்படுத்தினார், பஞ்சு.

'திறமையான நடிகர். எங்க படத்துல ஒரு கதாபாத்திரம் இருக்கு. நீங்க தான் நடிக்கணும்...' என்றனர், இருவரும்.

'கண்டிப்பா நடிக்கிறேன். எவ்வளவு பணம் தருவீங்க... இவரு சொன்னாரு, 500 ரூபாய் தருவீங்கன்னு... நிஜமா?' என்றேன்.

'ஐநுாறு ரூபாய் தானே! சரி, கொடுத்துடலாம்...' என்று அவர்கள் சொல்ல, நான், 500 ரூபாய் கற்பனையில் மூழ்கிப் போனேன்.

'படப்பிடிப்பு தேதி முடிவானவுடன், பஞ்சு வந்து சொல்வார்; வந்து விடுங்கள்!' என்றனர்.


'கோல்டன் ஸ்டுடியோ'வில், படப்பிடிப்பு. பஞ்சு மூலம் தகவல் வந்தது. இயக்குனர், முக்தா சீனிவாசன். படத்தின் பெயர், தாமரைக்குளம். எனக்கு காமெடியன் கதாபாத்திரம்; மீர்சாகிப்பேட்டை ராஜேஸ்வரி என்பவர், எனக்கு ஜோடி. அன்று எடுக்கப்பட இருந்த காட்சியை, விளக்கினார், உதவி இயக்குனர்.

கயிற்றுக் கட்டிலில், எம்.ஆர். ராதா உட்கார்ந்திருப்பார். கையை காலை ஆட்டியபடி, அவர் வசனம் பேசிக் கொண்டிருக்கிற சமயத்தில், கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டிருக்கிற நானும், ராஜேஸ்வரியும், காமெடி பண்ண வேண்டும்.

அப்போது, மிக பிரபலமானவர், எம்.ஆர். ராதா. அவரது நடிப்பை ரசிக்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்டவர் இடம்பெறும் காட்சியில், அவர் உட்கார்ந்திருக்கிற கட்டிலின் அடியில் ஒளிந்து, நாம் காமெடி பண்ணினா, அது எப்படி எடுபடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால், வெளிப்படையாக சொல்ல முடியாதே; பொறுமையாக இருந்தேன். ஒத்திகை பார்த்தோம்.

திடீரென்று ஒரே பரபரப்பு. உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்றனர். சலசலவென்ற பேச்சுகள் நின்று, நிசப்தம் நிலவியது. 'அண்ணன் வந்துட்டாரு...' என்று ஒருவர் சொல்ல, அடுத்த வினாடி, 'ம்... என்ன?' என்று, தனக்கே உரிய குரலில் கேட்டபடி, படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார், எம்.ஆர். ராதா.

என்னை பார்த்து, 'நீதான் புது ஆளா... பேரென்ன?' என்று கேட்டார்.

பெயரை சொன்னதும், 'ம்... ம்... நல்லா பண்ணு...' என்று சொல்லி, முதுகில் தட்டிக்கொடுத்து, வெளியில் போனார்.

உடனே, படத்தின் முதலாளிகள் இரண்டு பேரும் என்னிடம் வந்து, 'ஒத்திகையின் போது கவனிச்சோம், என்ன நடிக்கிறே நீ... ராதா அண்ணன் வர்ற, காட்சியில உன்னை நடிக்க வெச்சிருக்கோம்...

'நீ என்னடான்னா, கட்டிலுக்கு அடியில சும்மா உட்கார்ந்திருக்கியே... அதான்யா, புது ஆளுங்களை போட்டா இப்படித்தான்... இந்த இடத்துல சந்திரபாபு இருந்தா, பிச்சு உதறி இருப்பாரு...' என்று, படபடவென்று பேசிக் கொண்டிருந்தனர்.

எனக்கு சுருக்கென்றது. சட்டென்று தலையில் கை வைத்து இழுத்தேன். 'விக்' கையோடு வந்து விட்டது.

'சார்... நீங்க இப்படி பேசறது துளியும் சரியில்லை... உங்களுக்கு, சந்திரபாபு வேணும்னா, அவரை ஒப்பந்தம் பண்ணியிருக்கணும்... நாகேஷ் வேணும்ன்னு, என்னை ஒப்பந்தம் பண்ணிட்டு, சந்திரபாபு மாதிரி நடிக்கலைன்னு சொல்றது தப்பு...' என்று சொல்லி, கழற்றின, 'விக்'கை நீட்டினேன்.

அந்த சமயம் பார்த்து உள்ளே நுழைந்தார், எம்.ஆர். ராதா.

'என்ன... அங்க தகராறு...' என்று அவர் கேட்க, முதலாளிகள் தயங்கி, ஓரம் நகர்ந்தனர். நான் தான், 'ஒண்ணுமில்லை சார்... இது உங்க, காட்சி. ஜனங்களும், உங்கள் நடிப்பை தான் கவனிப்பாங்க...

'உங்களை பார்த்து கேமரா வெச்சிருக்கிறப்போ, கட்டிலுக்கு கீழே, உங்க காலுக்கு பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நான் நல்லா நடிக்கலைன்னு சொல்றாரு...' என்று கூறினேன்.

சந்திரபாபுவை பற்றி முதலாளி சொன்னது, அதற்கு என் பதிலடி எல்லாவற்றையும் கடகடவென்று, அவரிடம் சொல்லி விட்டேன்.

- தொடரும்

முதன் முதலாக, சினிமாவில், எம்.ஆர். ராதாவுடன் நடிக்க வேண்டிய காட்சியை படமாக்கும்போது, சின்ன பிரச்னை ஏற்பட, நாகேஷிடம், 'என்ன பிரச்னை...' என்று விசாரித்தார், எம்.ஆர். ராதா.

பொறுமையாக நான் சொன்னதை கேட்ட, ராதா, 'மத்தவன் எல்லாம் நடிகன்!

நீ கலைஞன்!' என்றவர், இயக்குனரை பார்த்து, 'இவனுக்கும் தனியா கேமரா வெச்சே, காட்சி எடுங்க...' என்றார்.

'சரிங்கண்ணே... சரிங்கண்ணே...' என்று எல்லாரும் தலையை ஆட்டியவுடன், எனக்குள், ஆச்சரியமாக இருந்தது.

ஒருநாள், படத்தின் தயாரிப்பாளரிடம், 'சார்... சம்பளம், 500 ரூபாய் பேசினீங்க... எனக்கு தர வேண்டியதை கொடுத்தீங்கன்னா...' என்று இழுத்தேன்.

காசாளரை கூப்பிட்டு, 'இவருக்கு, 50 ரூபாய் கொடுத்திடுங்க...' என்றார்.

'என்ன, 50 ரூபாயா... 500 ரூபாய் தருவதாக தானே பேச்சு?'

'ஆமாம்... மொத்த படத்துக்கும் சேர்த்து தானே, 500 ரூபாய். படம் முடிகிறபோது, எல்லாம் செட்டில் பண்ணிடுவோம்...'

அதிர்ந்து போனேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், படம் முடிந்த பின்னரும், படத்தின் தயாரிப்பாளர்கள் பேசியபடி, பணம் தரவில்லை, இனிமேல், பொறுமையாக இருந்து பயன் இல்லை என்று முடிவு செய்து, ஒருநாள், அந்த கம்பெனிக்கு போய் பணம் கேட்டேன்.

ஏதேதோ சமாதானம் கூறினரே தவிர, எனக்கு பணத்தை கொடுக்கவில்லை. வந்ததே கோபம், கன்னாபின்னாவென்று சத்தம் போட்டு, கண்ணில்பட்ட, 'விக்' மற்றும் அழைப்பு மணியை எடுத்து, நடையை கட்டினேன்.

அடுத்த நாள் முதல், நாடகத்தில் அந்த, 'விக்'கை அணிந்து, நடிக்க ஆரம்பித்தேன். அதேபோல், தொலைபேசி ஒலிக்க வேண்டிய காட்சிகளில், நான் எடுத்து வந்த அழைப்பு மணி, 'டிரிங்... டிரிங்...' என்று ஒலிக்க ஆரம்பித்தது.

தாமரைக்குளம் படத்தில், எனக்கும், கருணாநிதி எழுதிய, உதயசூரியன் நாடகத்தில் நடித்து வந்த, ராஜகோபால் என்ற நண்பருக்கும், 'சொக்கு - மக்கு' என்று, ஒரு காமெடி ஜோடி கதாபாத்திரம்; படம் வெளியானது.

படத்தின் போஸ்டர்களில், எங்கள் இருவரின் புகைப் படங்களையும் கலரில் போட்டிருந்தனர். சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை, அருகே போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில், தெருவில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர், சில விநாடிகள் நின்று, சுவரொட்டியை பார்த்தனர். சட்டென்று அவர்களில் ஒருவன் மட்டும், போஸ்டரை நோக்கி உதைப்பது போல, பாவனை செய்து, 'இவனுக்கெல்லாம் எதுக்குடா சினிமா?' என்று, சற்று உரக்கவே, 'கமென்ட்' அடித்தான்; எனக்கு அதிர்ச்சி.

படமும் தோல்வியடைந்தது. 'ஆனந்த விகடன்' இதழில், அந்த படத்தின் விமர்சனம் வெளியானது. 'என்னை பற்றி ஏதாவது பாராட்டியிருப்பரோ...' என்று, ஆர்வத்துடன் படித்தேன்.

அதில், 'சொக்கு - மக்கு என்று இரண்டு கேரக்டர்களாம். இவர்கள் இரண்டு பேரையும், யார் செட்டுக்குள் விட்டனர்...' என, எழுதியிருந்தனர்.

பிற்காலத்தில், என் நடிப்பை பாராட்டி, 'விகடன்' இதழில், பல சமயங்களில் எழுதப்பட்டது என்றாலும், முதல் விமர்சனத்தை, என்னால் மறக்க முடியாது.

சினிமா உலகில் பலருக்கு, எம்.ஆர். ராதா என்றாலே, சிம்ம சொப்பனம் தான். வெளியே முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவர் போல நடந்து கொண்டாலும், வெள்ளை மனசு; தைரியசாலி.

எம்.ஆர். ராதாவுடன் நடித்த போது ஏற்பட்ட இன்னொரு அனுபவமும் சுவாரசியமானது. சரசா பி.ஏ., படத்துக்கு, வேம்பு என்பவர் தான், இயக்குனர்.

ஒரு குறிப்பிட்ட காட்சியில், எம்.ஆர். ராதாவும், அவர் மகன், எம்.ஆர்.ஆர். வாசுவும், வீட்டுக்குள் நுழைய வேண்டும். அவர்களின் வருகையை எதிர்பார்க்காத நான், அவர்களை பார்த்து அதிர்ச்சியடைய வேண்டும். காட்சியை விளக்கி, என்னை பார்த்து, 'சும்மா, 'ஷாக்' அடிச்சா மாதிரி நடிக்கணும்...' என்று சொல்லி விட்டார், இயக்குனர்.

'என்னடா இது... 'ஷாக்' அடித்தாற் போல எப்படி நடிப்பது...' என்று, நானும் ஒரு நிமிடம் குழம்பினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். சட்டென்று ஒரு யோசனை. அந்த செட்டில், சற்று ஒதுக்குப்புறமான இடத்தில், மரப்பெட்டி மீது, ஒரு கூஜாவை பார்த்தேன்.

காட்சியை படம் பிடிக்க தயாரானவுடன், சட்டென்று சைடு வாங்கி, கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த கூஜாவை எடுத்து, கையில் வைத்துக் கொண்டேன். கேமரா சுழல துவங்கியது.

அதட்டலான குரலில் ராதா, 'யாரு வீட்ல?' என்று கேட்டபடி, வீட்டுக்குள் நுழைய, நான் தடாலென்று கையிலிருந்த கூஜாவை நழுவ விட்டு, என் அதிர்ச்சியை காட்டினேன்.

'கட்... கட்...' என்றார், இயக்குனர்.

என்னை பார்த்து, 'யாரை கேட்டு, கூஜாவை எடுத்து கீழே போட்ட...' என்றார்.

'இல்லை சார்... நீங்கதானே, 'ஷாக்' அடிச்சாப்போல நடிக்கணும்ன்னு சொன்னீங்க?'

'அதுக்கு என் கூஜா தான் கிடைச்சதா?' என்று கத்தினார், இயக்குனர்.

அதற்குள் ஒருவர், கூஜாவை எடுத்து வந்து, இயக்குனரிடம் நீட்டினார். அது, நசுங்கி போயிருந்தது. இயக்குனர், தினமும் குடிக்க தண்ணீர் எடுத்து வரும் கூஜா என்பது, அவர் சொன்ன பிறகு தான் தெரிந்தது.

'ரொம்ப, 'சென்டிமென்ட்'டா வெச்சிருக்கும் கூஜா. அது இல்லாமல் நான் வீட்டுக்கு போக முடியாது...' என்று இயக்குனர் கூறினார்.

உடனே ராதா, 'சென்டிமென்டா, எதை வெச்சுக்கிறதுன்னு ஒரு கணக்கு இல்லை. இன்னிக்கு கூஜா, நாளைக்கு, துடைப்பம், 'சென்டிமென்ட்டு'ன்னு சொல்வீங்களா?' என்று, ஒரு போடு போட்டதும், அமைதியானார், இயக்குனர்.

பழநி பட படப்பிடிப்பின் போது நடந்த, இன்னொரு சம்பவம்.


பழநி என்ற படத்தில், எம்.ஆர். ராதாவுடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கிராமத்து களத்து மேட்டில் வேலை நடந்து கொண்டிருக்கும். எம்.ஆர். ராதா அங்கே வந்து, எல்லாரையும் மிரட்டி, உருட்டி, குத்தகை பாக்கி வசூலிப்பதாக காட்சி. நான் அவருடைய கணக்கு பிள்ளை.

களத்து மேட்டில், ஒரே வெயில். அங்கு வந்த, ராதாவுக்கு, வெயில் தாங்கவில்லை. நடிக்க வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார். தன் முடிவை அவர் வெளிப்படுத்திய புத்திசாலித்தனம், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

'காட்சி நல்லா இல்லே... கல்யாண மாப்பிள்ளையே, அய்யர் மாதிரி மந்திரத்தையும் சொல்லி, தாலி கட்டலாமா... இப்படி படம் எடுத்தா எப்படி ஓடும்?

'குத்தகை பாக்கி வசூல் பண்ண வயல்காட்டுக்கு மிராசுதார் வருவாரா... இதையெல்லாம் பார்த்துக்கத்தானே கணக்கு பிள்ளைக்கு சம்பளம் குடுத்து, வேலைக்கு வெச்சிருக்கு. நாகேஷை வெச்சு காட்சி எடுங்க...' என்று, இயக்குனரிடம் படபடவென்று பேசிவிட்டு, புறப்பட்டு போய் விட்டார்.

எம்.ஆர். ராதாவை வைத்து எடுப்பதற்காக எழுதி வைத்திருந்த காட்சிகளை, கணக்கு பிள்ளைக்கு மாற்றினார், இயக்குனர்.

எதிர்பாராமல் நடிப்பதற்கு, கூடுதலாக காட்சி கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

ஆனந்த் என்று ஒரு நண்பர், எனக்கு அறிமுகம் ஆனார். அவரது பின்னணி பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் இரண்டு பேரும், ஸ்கூட்டரில் எங்காவது போவதுண்டு. ஒருநாள் என்னை தேடி வந்த அவர், 'எங்க அப்பா, உன்னை பார்க்கணும்ன்னு சொன்னார். வா...' என்றார்.

'உங்க அப்பாவா... எதற்காக, என்னை பார்க்கணும்ன்னு சொல்றாரு?'

'எங்க அப்பா தான், பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், எல்.வி. பிரசாத். அவருக்கு, உன்னை பற்றி தெரியும். நீ, என் நண்பர் என்பதும், அவருக்கு தெரியும் என்பதால், அழைத்து வரும்படி சொன்னார்...' என்றார்.

இதை கேட்டதும், எனக்கு இரட்டை வியப்பு. முதலாவது, இத்தனை நாள், பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், எல்.வி. பிரசாத்தின் மகனுடன், நான் பழகி இருக்கிறேன். இரண்டாவது, அவர், தன் படத்தில், வாய்ப்பு கொடுப்பதற்காக, என்னை கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார் என்பது.

உற்சாகத்துடன், எல்.வி. பிரசாத்தை போய் பார்த்தேன். என்னை ஆழமாக பார்த்தவர், 'கன்னங்கள் இரண்டும் ரொம்ப குழி விழுந்துருக்கே... பற்கள் கூட நன்றாக இருக்கலாமே...' என்றார்.

நான், பொறுமையாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர், அமைதியாய் உட்கார்ந்திருக்கவே, 'சார்... நீங்க வந்து இறங்கிய குதிரை எங்கே?' என்றேன்.

'குதிரையா... நான் குதிரையில் வரவில்லை; காரில் தான் வந்தேன்...' என்றார்.

'உங்கள் டிரஸ்சை பார்த்தால், குதிரை ஓட்டி வந்தவர் போல இருக்கிறது...' என்றேன்.

'நோ... நீங்கள் நினைப்பது தவறு...' என்றார்.

'அதே மாதிரி தான், என் முகத்தை பார்த்து, எனக்கு நடிக்க தெரியாது என்று நீங்களாக முடிவு கட்டுவதும்...' என்றேன்.

இது மாதிரி ஒரு பதிலை, என்னிடமிருந்து, அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது.

லேசாக அதிர்ந்து போனாலும், உடனே, சகஜ நிலைக்கு திரும்பி விட்டார்.

'நல்லா பேசறியேப்பா நீ... உனக்கு, கண்டிப்பா, என் படத்துல வேஷம் உண்டு...' என்றார்.

அப்போது, இன்ப அதிர்ச்சி எனக்கு.

அந்த படத்தின் பெயர், தாயில்லா பிள்ளை. படம் வெளியாகி, மிக நன்றாக ஓடியது. ஆனாலும், எனக்கு அந்த படத்தில் தரப்பட்ட வேஷம், மிகவும் சிறியது என்பதால், பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை.

எல்.வி. பிரசாத் பற்றி, இன்னொரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்...

எல்.வி. பிரசாத் இயக்கத்தில், ஒரு படத்தில், வீட்டு எஜமானியம்மாளின் மரணத்தையடுத்து, வீட்டில் இருக்கிறவர்களின் துக்கமான வெளிப்பாடுகளை, படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

வேலைக்காரன் அழுவதை படம் பிடித்த போது, இயக்குனர், எல்.வி. பிரசாத், 'இன்னும் அழு... கேவிக் கேவி அழு...' என்று சைகை செய்ய, வேலைக்காரராக நடித்தவர், ரொம்ப அழுது கொண்டிருந்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த நான், 'சார்... 'கட்' சொல்லுங்க...' என்றேன். அவரும், இவன் எதற்காக இடையில் மூக்கை நுழைக்கிறான் என்று யோசிக்காமல், சட்டென்று, 'கட்' சொல்லி விட்டார்; கேமரா நின்றது. உணர்ச்சிகரமான காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் சமயம், திடீரென்று என்ன ஆனது என்று அனைவருக்கும் குழப்பம்.

'எதற்காக, 'கட்' செய்ய சொன்னாய்?' என்று, எல்.வி. பிரசாத், என்னை பார்க்க...

'சார்... நீங்க, பெரிய இயக்குனர். ஆனால், இந்த காட்சியில், வேலைக்காரரின் நடிப்பு, இத்தனை உணர்ச்சிகரமாக இருக்கக் கூடாது என்பது, என் கருத்து. ஒரு எஜமானி செத்ததற்கு, கணவரை விட, வேலைக்காரர் அதிகமாக அழுதால், அந்த அம்மாவின் நடத்தை மீது, பார்க்கிறவர்களுக்கு சந்தேகம் வந்து விடாதா?' என்றேன்.

'நீ சொல்வது, சரி தான்...' என்றார், அவர்.

'இந்த காட்சியை இப்படி எடுத்தால் என்ன... எஜமானி அம்மாளின் சடலத்தை பார்த்ததும், துக்கம் தாளாமல் வேலைக்காரன், தன் துண்டின் நுனியால் வாயை பொத்தி, தலை குனிந்தபடியே, அந்த இடத்தை விட்டு போய் விடுகிறான்...' என்றேன்.

'வெரி குட்... ரொம்ப சரி... அப்படியே எடுத்திடலாம்...' என்றவர், அடுத்து சொன்ன வார்த்தைகள், எனக்கு என்றைக்கும் மறக்காது...

'இயக்குனராகும் தகுதி உனக்கு இருக்கு...' எவ்வளவு பெரிய மனிதரிடமிருந்து, எவ்வளவு பெரிய பாராட்டு!

தாயில்லா பிள்ளை படத்தில், நடித்துக் கொண்டிருந்த சமயம், திடீரென்று ஒருநாள், பாலாஜியின் அலுவலகத்திலிருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது. 'உடனடியாக, சித்ராலயா அலுவலகத்தில், இயக்குனர், ஸ்ரீதரை பார்க்க வேண்டும்...' என்று தகவல்.

அந்த காலத்தில், இயக்குனர், ஸ்ரீதர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைத்திருந்தார். அவரது இயக்கத்தில் நடிப்பது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. அப்படிப்பட்ட இயக்குனரின் கம்பெனியான சித்ராலயாவிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது என்றால் சும்மாவா?

அந்த சந்தோஷமான தருணத்தில், உடனடியாக, நான் நன்றியுடன் நினைத்துக் கொண்டது, பாலாஜியை தான். ஆம்... எனக்கு, சித்ராலயாவிலிருந்து வாய்ப்பு கிடைப்பதற்கு காரணமாக இருந்தது, அவர் தான்.




Sunday, 27 September 2020

PUGALENTHI ,MUSIC DIRECTOR BORN 1929 SEPTEMBER 27 - FEBRUARY 27,2005

 


PUGALENTHI ,MUSIC DIRECTOR BORN 

1929 SEPTEMBER 27 - FEBRUARY 27,2005



.புகழேந்தி (செப்டம்பர் 27, 1929 – பிப்பிரவரி 27, 2005) என்பவர் திரைப்பட இசை அமைப்பாளர். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 600 படங்களுக்கு இசை அமைத்தார்.[1]

திருவனந்தபுரத்தில் பிறந்த புகழேந்தியின் இயற்பெயர் வேலப்பன் நாயர். தந்தை கேசப்பிள்ளை, தாய் சானகி அம்மாள். புகழேந்தியின் இசை ஆசிரியர் எம்.பி.சிவம் ஆவார். புகழ் பெற்ற திரைப்பட இசை அமைப்பாளர் கே. வி. மகாதேவனிடம் சென்று எம்.பி.சிவம் தம் சீடர் புகழேந்தியை அறிமுகம் செய்து வைத்தார். கே. வி. மகாதேவன் அவர்களிடம் புகழேந்தி உதவி இசை அமைப்பாளராக 250 படங்களில் பணியாற்றினார். முதன் முதலாக முதலாளி என்ற மலையாளப் படத்துக்கு இவர் இசை அமைத்தார்

G.VARALAKSHMI, ACTRESS, BORN, SEPTEMBER 13, OR SEPTEMBER 27 -2006 NOVEMBER 26

 

G.VARALAKSHMI BORN SEPTEMBER 13 OR

 SEPTEMBER 27 -2006 NOVEMBER 26



ஜி. வரலட்சுமி (G. Varalakshmi, தெலுங்கு: జి.వరలక్ష్మి) என அழைக்கப்படும் கரிக்கப்பட்டி வரலட்சுமி (Garikapati Varalakshmi, செப்டம்பர் 27, 1926[1] - நவம்பர் 26, 2006)[2][3] தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின், மேடை நடிகையாகவும், திரைப்பட கதாநாயகி மற்றும் இயக்குனராகவும் அறியப்படுகிறார். குணச்சித்திர பாத்திரங்களும் நடித்த ஜி.வரலட்சுமி, பின்னணியும் பாடியுள்ளார்.வாழ்க்கைக் குறிப்பு

ஜி. வரலட்சுமி, ஆந்திர பிரதேசம் ஓங்கோல் எனும் பகுதியில் நாயுடு குடும்பத்தில் 1926 செப்டம்பர் 27[4] ஆம் திகதி சுப்பராமய்ய நாயுடுவின் இரண்டாவது புதல்வியாகப் பிறந்தார் வரலட்சுமி.[1] இவருக்கு முன்னும் பின்னும் இரு சகோதரிகள். இவரது இளமைப் பருவம் குண்டூரில் கழிந்தது. உள்ளூர் கான்வெண்டில் படித்தார், ஆனாலும் படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளியில் படிக்கும் போதே தந்தை இறந்து விட்டார்.[1]


நாடகங்களில் நடிப்பு

சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார். தூரத்து உறவினர் துங்கல சலபதி ராவ் என்பவர் விஜயவாடாவில் நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். நாடகங்களில் ஆர்வம் கொண்ட தனது ஒன்றுவிட்ட சகோதரருடன் சேர்ந்து விஜயவாடா வந்தார்.[1] தனது பதினோராவது அகவையில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பாதுகா, சக்குபாய், பிரகலாதா, கிருஷ்ணலீலா போன்ற நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். நாடகக் கம்பனியுடன் ஆந்திரா முழுவது பயணம் செய்து பெரும் புகழ் பெற்றார்.[1] 1938ல் ஆந்திராவின் ராசமுந்திரி எனும் ஊரில், தனது 12வது வயதில் சக்குபாய் நாடகத்தில் ராதா பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான கே. எஸ். பிரகாஷ்ராவ் அப்போது ராஜமுந்திரிக்கு வந்திருந்தார். வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்துப் பாராட்டியதோடு திரையுலகிற்கு வர அழைப்பும் விடுத்தார்.





திரைப்படங்களில்


பாசவலை (1956) திரைப்படத்தில் ஜி. வரலட்சுமி

கே. எஸ். பிரகாஷ்ராவ் பாரிஸ்டர் பார்வதீசம் என்ற தனது தெலுங்கு நகைச்சுவைத் திரைப்படத்தில் வரலட்சுமியை நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். இப்படத்தில் நடிக்க சென்னை வந்தார். அதன் பின்னர் எம். கே. ரெட்டி தனது படங்களில் நடிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். 1939களில் தட்சயக்ஞம், நியூ தியேட்டர் நிறுவனம் தயாரித்த பிரகலாத ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.[1] மிகவும் மெலிந்து காணப்பட்ட ஜி.வரலட்சுமி, பி. பானுமதி, காஞ்சனமாலா, புஷ்பவல்லி போன்ற கதாநாயகிகள் புகழின் உச்சியிலிருந்த அந்த காலகட்டத்தில், தனது தனித்துவத்தை நிருபிக்க கடுமையாக போராடவேண்டயிருந்தது. தென்னிந்தியாவில் அவருக்குப் போதிய சந்தர்ப்பங்கள் கிடைக்காததால், பம்பாய் சென்றார். வனராணி, ஜிந்தகி, யாம்வுத் ஆகிய படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தார். ஒரு சில படங்களில் சிறு பாத்திரங்களில் தோன்றினார்.[1]



1942 ஆம் ஆண்டில் கே. எஸ். பிரகாஷ்ராவைத் திருமணம் புரிந்து கொண்டார். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இரண்டு ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.[1]


இந்நிலையில், சி. புல்லையா தயாரித்த வையஜந்தி பிலிம்சாரின் விந்தியாராணி என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்து 1946 இல் மீண்டும் சென்னை வந்தார். சுவதந்திரா பிலிம்சாரின் துரோகி, மற்றும் வாலி சுக்கிரீவன், மண்டோதரி, ஜி. பலராமய்யாவின் லட்சமம்மா, முதலிரவு, சுவப்னசுந்தரி போன்ற படங்களிலும் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.[1]


தமிழ்த் திரைப்பட வரிசை

[5]


அண்ணி (1951)

பரோபகாரம் (1953)

பெற்ற தாய் (1953)

நல்லதங்காள் (1955)

போர்ட்டர் கந்தன் (1955)

பாசவலை (1956)

வாழ்விலே ஒரு நாள் (1956)

மறுமலர்ச்சி (1956)

பத்தினி தெய்வம் (1957)

அமுதவல்லி (1959)

அழகர்மலை கள்வன் (1959)

மாமியார் மெச்சின மருமகள் (1959)

பெற்ற மனம் (1960)

பொன்னான வாழ்வு (1967)

ஹரிச்சந்திரா (1968)

YASH CHOPRA ,DIRECTOR BORN 1932 SEPTEMBER 27- 2012 OCTOBER 21

 

YASH CHOPRA ,DIRECTOR BORN 

1932 SEPTEMBER 27- 2012 OCTOBER 21



யஷ்ராஜ் சோப்ரா (Yash Raj Chopra, இந்தி: यश चोपड़ा, செப்டம்பர் 27,1932 - அக்டோபர் 21, 2012[1]) ஓர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்கியவர். பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்த யஷ் சோப்ரா தனது திரை வாழ்க்கையை துணை இயக்குநராக ஐ. எசு. ஜோகரிடமும் தனது அண்ணன் பி.ஆர் சோப்ராவிடமும் துவங்கினார். பெரும்பாலும் இந்தித் திரைப்படத்துறையில் பணியாற்றி உள்ளார். 1959ஆம் ஆண்டில் இயக்குநராக அவரது முதல் திரைப்படம் தூல் கா பூல் வெளியானது. தொடர்ந்து 1961இல் சமூக நாடகமாக தர்ம்புத்திரா என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் சோப்ரா சகோதரர்கள் பல திரைப்படங்களை உருவாக்கினர். பாலிவுட்டில் ஒரே படத்தில் பல முன்னணித் திரைப்பட நடிகர்களை வைத்து படமெடுக்கும் பாணியை துவக்கி வணிக ரீதியாக வெற்றிபெற்ற வக்த் (1965) இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.


1973ஆம் ஆண்டில் தமது சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தாக் (1973), தீவார் (1975), கபி கபி (1976), திரிசூல் (1978), சில்சிலா (1981) போன்ற வெற்றித் திரைப்படங்களை வெளியிட்டார். இவற்றில் காதல் உணர்வை நுட்பமாக வெளிப்படுத்தியதால் இவருக்கு காதல் சோப்ரா என்ற பெயரொட்டு ஏற்பட்டது.

சோப்ராவின் திரைப்பணி ஐம்பதாண்டுகளாக ஐம்பது திரைப்படங்களுக்கும் மேலாக தொடர்ந்துள்ளது. இந்தித் திரைப்படத்துறையில் பெரும் சாதனையாளர்களில் ஒருவராக சோப்ரா கருதப்படுகிறார். ஆறு தேசிய திரைப்பட விருதுகளும் பதினோரு பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார். சிறந்த திரைப்பட இயக்குநராக நான்கு முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். 2001ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 2005ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கி இந்திய அரசு பெருமைபடுத்தி உள்ளது. சோப்ராவின் திரைப்பணிக்காக பிரித்தானிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாதமி (BAFTA) இவருக்கு வாழ்நாள் உறுப்புரிமையை வழங்கியுள்ளது.




யஷ் சோப்ரா அக்டோபர் 13, 2012 அன்று டெங்கு காய்ச்சலுக்காக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிட்சை பயனளிக்காது அக்டோபர் 21, 2012 அன்று உயிரிழந்தார்.[1]


No photo description available.


SUDHA CHANDRAN ,ACTRESS BORN 1965 SEPTEMBER 27

 SUDHA CHANDRAN ,ACTRESS 

BORN 1965 SEPTEMBER 27



சுதா சந்திரன் (பிறப்பு: செப்டம்பர் 27, 1965) ஒரு இந்திய பரதநாட்டியக் கலைஞர்.மேலும் இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார் இவர். 1981-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அருகே காயமடைந்த சுதா சந்திரனின் வலது காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் நடனக் கலையை கைவிடவில்லை.

மும்பையில் உள்ள மித்பாய் கல்லூரியில் இருந்து பி.ஏ. பட்டப்படிப்பு மற்றும் அதன் பிறகு எம்.ஏ. பொருளாதாரவியல் என பள்ளி கல்லூரி படிப்பு மும்பையிலேயே முடித்துக் கொண்டார். 1981-ம் ஆண்டு புணித யாத்திரை மேற்கொண்டபோது இவர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானது.


விபத்தைத் தொடர்ந்து கால் இழந்த நிலையில் ஜெய்பூர் செயற்கைக் காலை பொருத்திய பிறகு இவர் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பா, கனடா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். உலகின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்திருந்தாலும் தன்னை கவர்ந்த அமைதியான நகரம் சென்னை என்றார் சுதா சந்திரன். ([1]).


திரைப்படத் துறையில் சுதா சந்திரன்[மூலத்தைத் தொகு]

1984-ம் ஆண்டு வெளி வந்த மயூரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 1986-ம் ஆண்டு இந்த திரைப்படம் நாச்செ மயூரி என்ற பெயரில் இந்தி மொழியில் ரீ மேக் செய்யப்பட்டது. மயூரி திரைப்படத்திற்காக 1986-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளார்.



தமிழில் விஷால் நடித்த சத்தியம் மற்றும் ஆதிபகவன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இது தவிர பல்வேறு சின்னத் திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

NAGESH BORN 1933 SEPTEMBER 27

 



NAGESH BORN 1933 SEPTEMBER 27



நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - ஜனவரி 31, 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு]

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்[1].

தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார். புதுவசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த்பாபு இவர்தம் மகனாவர்.

நடிப்புத் துறையில்[மூலத்தைத் தொகு]

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்

திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

கதாநாயகனாக[மூலத்தைத் தொகு]

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் உடனான நட்பு[மூலத்தைத் தொகு]

கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும்.

புதுவசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த்பாபு இவர்தம் மகனாவர்.


பிரபல சிரிப்பு நடிகர் நாகேஷ் 1933 செப்டம்பர் 27 இல் பிறந்தார்

சிரித்தால் மட்டும் போதுமா ?



நாகேஷை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். ஆறு வருசங்களுக்கு முன்பு ஒரு முறை இயக்குனரான எனது நண்பர் தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக நாகேஷை பார்க்க அழைத்து சென்றார். அந்த நேரத்தில் அவர் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். நட்பிற்காக சில படங்கள் ஒத்துக் கொண்டதோடு சரி. வீட்டில் எளிமையான நாலு முழ வேஷ்டி, பனியன் அணிந்தபடியே அவர் அமர்ந்திருந்த விதம் வெகு இயல்பாக இருந்தது. படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டார்.


விடைபெறும் போது இயக்குனரிடம் என்னை எதுக்குப்பா கூப்பிடுறே.சம்பளம் குறைச்சலா தந்தா போதும்னு தானே. என்று கேலியாக கேட்டார். அதெல்லாம் இல்லை சார் நீங்க எவ்வளவு பெரிய நடிகர் என்று இயக்குனர் வியந்த போது நீ என்ன பாக்க வெறுங்கையை வீசிகிட்டு வந்ததில் இருந்தே நான் எவ்வளவு பெரிய ஆளுனு தெரியுதே. ஏம்பா ஒரு எலுமிச்சம்பழம் கூடவா வாங்கிட்டு வந்திருக்க கூடாது என்று சொல்லி சிரித்தார்.


நண்பர் சங்கடத்துடன் அப்படியில்லை என்றதும் சும்மா கேலிக்கு சொன்னேன் என்றபடியே விடை தந்தார். காரில் வரும்போதெல்லாம் நாகேஷை பற்றியே பேசிக் கொண்டு வந்தார் இயக்குனர். ஆனால் எனக்கு நாகேஷ் மனதில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருப்பதை உணர்ந்தேன்.



அதன் சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில் பின்மதியத்தின் போது நாகேஷை தற்செயலாக பார்த்தேன். தனியே அமர்ந்திருந்தார். கறுப்பு நிற பேண்ட், கோடு போட்ட சட்டை, வயோதிக தோற்றம். அருகில் யாருமேயில்லை. வெயில் அவர் காலில் பட்டுக் கொண்டிருந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.


கடந்து போன ஒரு வயதான லைட்மேனை அவர் பெயர் சொல்லி கூப்பிட்டவுடனே அவர் அண்ணே என்று அருகில் வந்து பவ்வியமாக குனிந்து நின்றார். உட்காருடா என்று அருகில் இருந்த நாற்காலியை காட்டினார். அந்த ஆள் நின்று கொண்டேயிருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.



படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நாலைந்து இளம்பெண்களும் பையன்களும் வந்திருந்தார்கள். அவர்கள் நாகேஷை கடந்து சென்றார்கள். ஒருவர் கூட அவரிடம் நின்று பேசவோ, அவரை பார்த்து வியப்பு அடையவோ இல்லை.

உள்ளே இருந்த கதாநாயகனை நோக்கி உற்சாகமாக போய்க் கொண்டிருந்தார்கள். அதை நாகேஷ் கவனித்திருக்க வேண்டும் தன்னோடு பேசிக் கொண்டிருந்தவரிடம் சொன்னார்


பாத்தியாடா.. நம்மளை ஒரு ஆளா கூட இந்த பொண்ணுக கவனிக்கலை. நான் பாக்காத ஹீரோவா? நானே எத்தனை படத்தில் ஹீரோவா நடிச்சிருக்கேன். இவங்களுக்கு எல்லாம் ஹீரோன்னா அருவாளை தூக்கிட்டு வெட்டணும். வானத்தில பறந்து பறந்து சண்டை போடணும். ஜிகினா டிரஸ் போட்டுகிட்டு கட்டிபுடிச்சி ஆடிணும். நான் அப்படி எதுவும் பண்ணலை. காமெடியன் தானே. அதான் கடந்து போய்கிட்டே இருக்காங்க என்றார்.



எனக்கு சார்லி சாப்ளின் நினைவு வந்தது. அவர் லைம் லைட்ஸ் என்றொரு படம் இயக்கியிருந்தார். அது வயதான காலத்தில் ஒரு கோமாளி கொள்ளும் மனவேதனைகளை பற்றியது. கோமாளிக்கு கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்கும் போது கடந்தகால கைதட்டல்கள் காதில் விழும்.


லைம் லைட்ஸ் படத்தில் ஹாலிவுட்டின் இன்னொரு பிரபலமான நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டன் நடித்திருப்பார். கீட்டனும் இப்படம் நடித்த காலத்தில் புறக்கணிப்பிலும் தனிமையிலும் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த படம் கோமாளியின் அந்தரங்கவலிகளை சிறப்பாக வெளிப்படுத்தியது. சிரிப்பின் பின்னே ஒளிந்திருக்கும் அழுகையை அடையாளம் காட்டியது.


ஒருவகையில் அன்று நான் பார்த்த நாகேஷ் சிரிப்பின் பின்னே ஒளிந்திருக்கும் வேதனை கொண்ட நடிகரே. உலகெங்கும் நகைச்சுவை நடிகர்கள் மக்களை சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் அவர்களது சொந்த வாழ்க்கை சிக்கலும் பிரச்சனைகளும் வலியும் தனிமையும் நிரம்பியதாகவே இருந்திருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.


குழந்தைகளின் கனவு நட்சத்திரமான சாப்ளினுக்கு சிறுவர்களையே பிடிக்காது. சொந்த பிள்ளைகளை கூட வெறுத்தார், மனைவியை விவகாரத்து செய்தார். உடன் வேலை செய்பவர்களை மோசமாக நடித்தினார் என்று எண்ணிக்கையற்ற புகார்கள். தமிழில் என்எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் துயர் நிரம்பியதே.


உலகையே சிரிக்க வைப்பவன் மனம் நிரம்பிய வேதனையில் இருப்பது ஒருவகையில் சாபம் போலும். நாகேஷ் வாழ்க்கையும் அப்படிதானிருந்தது.


அந்த படப்பிடிப்பு தளத்தில் நாகேஷ் உடன் பேசிக் கொண்டிருந்த லைட்மேனை பின்னொருநாள் சந்தித்த போது இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி கேட்டேன். அவர் ஆதங்கத்துடன் நாகேஷ் ஷ÷ட்டிங்கிற்கு வருவதற்காக எம்.ஜி.ஆர். சிவாஜி எல்லாம் காத்துகிட்டு இருந்ததை பாத்திருக்கேன் சார் என்றபடியே


திருவிளையாடல் பட ஷ÷ட்டிங், சிவாஜி சார் மேக்கப் போட்டு சிவனாக ரெடியாகி காத்துகிட்டு இருக்காரு .நாகேஷ் வரலை. லேட்டா வந்தாரு. சிவாஜிக்கு கோபம் அதை காட்டி காட்டிகிடாம ஷாட் ரெடியானு கேட்டாரு. தருமியாக நாகேஷ் சிவன் பின்னாடி நடந்து போற மாதிரி சீன். சிவாஜி கம்பீரமா நடக்கிறாரு. பின்னாடி நாகேஷ் உடம்பை வளைச்சி தரையில விழந்துட போறவரு மாதிரி நடக்க தன் பின்னாடி நாகேஷ் ஏதோ காமெடி பண்றாருனு சிவாஜிக்கு புரியுது. ஆனா திரும்பி பார்க்க முடியலை, மேல இருந்த லைட்மேன்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.ஷாட் முடிஞ்சதும் நினைச்சி நினைச்சி சிரிச்சோம். எப்பேர்பட்ட நடிகர் நாகேஷ் என உணர்ச்சிவசப்பட்டு சொன்னார்.


அப்படித்தானிருந்தது நாகேஷின் காலம். அவர் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த நாட்களில் ஒய்வின்றி நடித்திருக்கிறார். மக்கள் திரையில் நாகேஷை பார்த்த நிமிசம் சிரித்திருக்கிறார்கள்.


இன்று பல நகைச்சுவை நடிகர்களை குரலால் பாவனை செய்துவிட முடியும். மிமிக்ரி செய்பவர்கள் அதை சாதித்து காட்டுகிறார்கள். நாகேஷை அப்படி மிமிக்ரி செய்பவர்களை நான் கண்டதேயில்லை. காரணம் நாகேஷை குரலால் மட்டும் பாவனை செய்துவிட முடியாது. நாகேஷாக பாவனை செய்ய நாகேஷாகவே மாறவேண்டும், உடல்மொழி வேண்டும்,வேறு வழியேயில்லை.


எல்லா அரிய விஷயங்களையும் காலம் ஒரு நாள் கண்டுகொள்ளாமல் விட்டு போய்விடுகிறது. அது பெரும்பான்மை திரை நட்சத்திரங்களுக்கு அவர்கள் கண்முன்னே நடந்துவிடுகிறது. புறக்கணிப்பு தான் அவர்களின் மிகப்பெரிய வலி. அன்று படப்பிடிப்பு தளத்தில் நான் கண்டதும் அத்தகைய ஒன்று தான்.

தமிழ் சினிமாவில் தனித்த ஆளுமையாக இருந்த போதும் நாகேஷ் தேசிய அளவிலான எந்த அரசு அங்கீகாரமும் கிடைக்காமல் போன கலைஞனே.


அவரது நகைச்சுவை இயல்பானது. அது நினைத்து நினைத்து சிரிக்க கூடியது. அடுத்தவரை புண்படுத்தாதது. துளியும் ஆபாசமற்றது. அவரது நகைச்சுவைக்கு நம் மரபில் நீண்ட தொடர்ச்சியிருக்கிறது. தெருக்கூத்தில் வரும் கட்டியக்காரன். நாடகமேடையில் வரும் பபூன் என்று நமக்கான மரபிலிருந்த உடல்மொழியும் பகடியும் அவர் சரியாக உள்வாங்கியிருந்தார். அதே நேரம் அவர் சாப்ளினை, ஜெரி லூயிசை போல தன் உடலை நகைச்சுவையின் வெளியீட்டு வடிவமாக்கி கொண்டிருந்தார்


வேகம் தான் அவரது நகைச்சுவையின் பிரதான அம்சம். நடந்து செல்வதாகட்டும். துள்ளி விழுவது ஆகட்டும் எதிலும் மிகுவேகம் கொண்டிருந்தார். அதே நேரம் குணசித்திர வேஷங்களில் நடிக்கும் போது தனது வழக்கமான நடிப்பு வந்துவிடாமல் கவனமாக விலகி, ஆழமாகவும் மிகையின்றியும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சிறந்த நடிகர்.


நாகேஷின் மெலிந்த உடல் தான் அவரது பலம். ஒரு படத்தில் வில்லன் அவரை பார்த்து கொத்தவரங்காய் மாதிரி உடம்பை வச்சிகிட்டு எவ்வளவு வேலை காட்டுறே என்று கேட்பார். அது தான் நிஜம். தன்னியல்பாக அவருக்குள் நகைச்சுவை உணர்வு இருந்தது. அதை அவர் வெளிப்படுத்தும் பாங்கு அற்புதமானது. திருவிளையாடல் தருமியும், தில்லானா மோகனாம்பாள் வைத்தியும், சர்வர் சுந்தரமும், என எத்தனையோ மறக்கமுடியாத நகைச்சுவை பாத்திரங்கள்.

எனக்கு வேட்டைகாரன் என்ற படத்தில் வரும் நாகேஷின் நகைச்சுவை ரொம்பவும் பிடிக்கும். படம் முழுவதும் சீட்டுவிளையாடுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பார். பாதி தூக்கத்தில் சீட்டை அவர் விரித்து காட்டும் அழகும், அதை வைத்து அவர் செய்யும் வேடிக்கைகளும் வாய்விட்டு சிரிக்க வைப்பவை.


நாகேஷின் நகைச்சுவை உணர்வை மட்டுமின்றி அவருக்குள் இருந்த அற்புதமான நடிப்பு திறனை முழுமையாக வெளிப்படுத்தியவர் கே. பாலசந்தர். இந்த இருவரின் கூட்டணி தமிழ் சினிமாவில் உருவாக்கிய புத்துணர்ச்சி இன்றும் வியப்பளிக்க வைக்கிறது. குறிப்பாக மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், பாமா விஜயம் அனுபவி ராஜா அனுபவி, நீர்குமிழி, என்று எத்தனை வெற்றிபடங்கள்.


வெற்றி சினிமாவில் பலருக்கும் தன்னை பற்றிய மிகையான பிம்பத்தை உருவாக்கிவிடுகிறது. நாகேஷ் விஷயத்திலும் அது நடந்திருக்கிறது. நண்பர்களை விட்டு விலகியிருக்கிறார் சினிமா தானே என்று நினைத்து நாகேஷ் செய்த படங்கள் பல அவரது இயல்பான நகைச்சுவையை கூட நிறைவேற்ற முடியாமல் தோற்றுபோனது. தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மறு எத்தனிப்பில் அவர் ஒத்துக் கொண்ட படங்களும் அவரது புறக்கணிப்பிற்கு கூடுதல் காரணங்களாகின.


பாலசந்தருக்கு அடுத்தபடியாக நாகேஷை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் கமலஹாசன். கமலோடு நாகேஷ் நடித்த படங்களில் நாகேஷின் நகைச்சுவை அற்புமாக அமைந்திருந்தது. நாகேஷை வில்லனாக மாற்றிய அபூர்வ சகோதரர்கள், பிணமாக நடித்த மகளிர் மட்டும் , அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட எத்தனையோ படங்கள் நாகேஷிற்கு நடிப்பின் புதிய பரிமாணங்களை உருவாக்கியது.

நாகேஷின் பாணி தான் இன்றும் தமிழ் நகைச்சுவைக்கு அடிப்படையாக இருக்கிறது. அவரை போல வசனங்களை வெளிப்படுத்துவதில் உள்ள தனித்துவமும் உடலை தன் கட்டிற்குள் வைத்திருந்த நடிப்பும், துள்ளல் நடனமும், சட்டென மாறும் முகபாவங்களும் இன்று வரை வேறு நகைச்சுவை நடிகருக்கு முழுமையாக கூடி வரவில்லை.


சிரிப்பின் உச்சம் அழுகையில் முடியும் என்பார்கள். தனது துயரங்களுக்கான அழுகையை சிரிப்பாக மாற்ற தெரிந்தவனே உயர் கலைஞன். நாகேஷ் அதற்கொரு தனி அடையாளம்.


அவரது மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் பிறரால் நிரப்பபட முடியாதது.


இன்றைக்கும் தொலைக்காட்சியில் நாகேஷின் நகைச்சுவை காட்சி துணுக்கு ஏதாவது வந்தால் கடந்து சென்றுவிடமுடியாமல் முழுமையாக பார்க்க தூண்டுகிறது. அது தான் அவரது மிகப்பெரிய அங்கீகாரம்.


*

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் உதயம் இதழில் வெளியான கட்டுரை

Image may contain: 1 person

Monday, 1 June 2020

MARLYN MONROE GRAVE /PLAY BOY HUGH HEFNER GRAVE LAST SILENT LOVE 2017 SEPTEMBER 27



MARLYN MONROE GRAVE /PLAY BOY  HUGH HEFNER GRAVE LAST SILENT LOVE 
2017 SEPTEMBER 27




மர்லின் மன்றோ ஹாலிவுட் நடிகை. 1945 முதல் 1962 வரை திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். சிறந்த கவர்ச்சி மங்கையாக பல பத்திரிகைகள் தேர்வு செய்த இவரது அழகில் பல இளைஞர்கள் கிறங்கியிருந்தார்கள். 1953-ல் தொடங்கப்பட்ட ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
தந்தை இல்லை. தாய்க்கோ மன நலப் பிரச்சினைகள். ஆகையால், அநாதை இல்லங்களில் வளர்ந்தார். 16 வயதி லேயே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்தார். நடிகையான பிறகு இரண்டு திருமணங்கள். இரண்டும் தோல்வி. மீண்டும் மீண்டும் விவாக ரத்துகள். குழந்தை இல்லை. தனிமை யான வாழ்க்கை.

மர்லின் மன்றோ கல்லூரியில் படிக்காதவர். ஆனால், புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவர். வீட்டில் தனி லைப்ரரியே வைத்திருந்தவர். கவிதைகள் எழுதுவார். இசை பிடிக்கும். லிப்ஸ்டிக், மஸ்காரா மிகமிகப் பிடிக்கும். நகைகளில் ஆர்வமே இல்லை. நாய்கள் பிடிக்கும். சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர்.
அவருடைய கருத்துகள் எல்லாமே பலரை புருவம் உயர்த்த வைத்தன.
‘‘ஒரு பெண்ணின் அழகான உடல் மூடி மறைப்பதற்கல்ல; மற்றவர்கள் பார்த்து ரசிக்கவே; ஹாலிவுட் என்பது ஒரு பெண்ணின் முத்தத்துக்கு 50 ஆயிரம் டாலர்களும், அவள் மனசுக்கு வெறும் 50 செண்ட்டும் தரக் கூடியது’’ இவையெல்லாம் அவர் சொன்னவை.
அமெரிக்காவின் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் 45-வது பிறந்த நாள் விழாவில் கவர்ச்சியான உடையில், வந்து ‘‘ஹேப்பி பர்த் டே டு பிரெசிடெண்ட்…’’ என்று மேடையில் மன்றோ பாடினார். கென்னடி பேசும்போது, ‘‘மன்றோவின் குரலால் வாழ்த்து பெற்ற பிறகு இன்றுடன் நான் பதவியில் இருந்தே ஓய்வு பெற்றுவிடலாம் போலிருக்கிறது’’ என்றார். அன்று இரவு நடந்த விருந் திலும் மர்லின் மன்றோ
கலந்துகொண் டார். அன்றைக்கு மர்லின் மன்றோ அணிந்திருந்த உடை அவரது மரணத் துக்குப் பிறகு 12 லட்சம் டாலர்களுக்கு ஏலத்தில் விலைபோனது.
தொடர் தோல்விகள் மன்றோவை மதுப் பழக்கத்துக்கும், போதை மாத்திரை பழக்கத்துக்கும் தள்ளியது. அதனால் அவருக்குத் தொழிலில் கவனம் சிதறி யது. சில படங்களில் இருந்து நீக்கப்பட் டார். மன அழுத்தத்துக்கு வைத்தியம் செய்து கொண்டார். சில முறை தற் கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

1962, ஆகஸ்ட் 5-ம் தேதி அதி காலை 3 மணிக்கு மர்லின் மன்றோ தன் படுக்கையறையில் கட்டிலில் நிர் வாணமாக, கையில் தொலைபேசியின் ரிசீவரைப் பிடித்தபடி மூச்சில்லாமல் கிடந்தார். டாக்டர் அழைக்கப்பட்டார். கண்ணாடி ஜன்னல் உடைக் கப்பட்டு உள்ளே சென்று முதலுதவி செய்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவப் பரிசோதனையில் அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கள் சாப்பிட்டிருப்பதைக் கண்டுபிடித்தார் கள். தற்கொலை என்று வழக்கு மூடப்பட்டது.

ஆனால், இந்த மரணம் குறித்து சர்ச்சைகளும், பதில் இல்லாத பல கேள்விகளும் தொடர்கின்றன. அது ஒரு திட்டமிட்ட கொலை என்கிற கோணத்தில் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல தொலைக்காட்சிகள் தங்கள் டீமை வைத்து துப்பறிந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.
இவர்களின் ஊகம் இதுதான்:
அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கும் மன்றோவுக்கும் காதல் ஏற்பட்டது. நடி கரும்,கென்னடியின் மைத்துனருமான பீட்டர் லாஃபோர்டின் வீட்டில் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். அதிபர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை மணந்துகொள்வார் என்று மன்றோ நம்பினார்.

அதிபர் தன் சகோதரர் ராபர்ட் கென் னடியை அழைத்து மன்றோவைச் சந் தித்து, ‘இனிமேல் வெள்ளை மாளி கைக்கு போன் செய்து தன்னை அழைக் கக் கூடாது’ என்று எச்சரித்து விட்டு வரச் சொன்னார். எச்சரிக்கை செய்வதற்காக சென்ற ராபர்ட்டுக்கு மன்றோவைப் பிடித்துவிட்டது.
ராபர்ட்டுடன் மன்றோவுக்கு புதிய காதல் ஆரம்பித்தது. ராபர்ட்டுக் கும் அவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் இல்லை. மன்றோ, ‘‘உங்கள் இருவரைப் பற்றிய ரகசியங்களை பத்தி ரிகை யாளர்கள் சந்திப்பு நடத்தி பகிரங்கப்படுத்துவேன்’’ என்று ராபர்ட்டை மிரட்டினார்.
மன்றோ இறந்த தினத் துக்கு முதல் நாள் மன்றோ வுக்கும் ராபர்ட் கென்னடிக்கும் வாக்குவாதம் உச்சத்துக்குச் சென்றது. அருகில் பீட்டர் லாஃபோர்டும் இருந்தார். கோபத்தின் உச்சத்தில் மன்றோ கத்தி எடுத்து ராபர்ட் கென்னடியைக் குத்த முற்பட்டார். கத்தி வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டது.

இந்த ஊகங்களுக்கு ஆதாரமாக பலர் குறிப்பிடும் அம்சங்கள்:
அந்தப் படுக்கையின் விரிப்பு கசங்காமல் இருந்தது. மேஜையில் காலியாக இருந்த மாத்திரை பாட்டி லின் மூடி சரியாக மூடப்பட்டிருந்தது. மாத்திரைகளை விழுங்க ஒரு கண்ணாடி டம்ளரோ, தண்ணீரோ, மது வகைகளோ எதுவும் இல்லை.
போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்ட ரின் அறிக்கையின்படி மன்றோ வயிற்றில் கிட்டத்தட்ட 60 மாத்திரை கள் அளவுக்கு மருந்து இருந்தது. அது வாய்வழியாக உட்கொள்ளப் படவில்லை.
மன்றோவின் வழக்கு விசாரணைத் தொடர்பான பல மருத்துவ அறிக்கை களும், விசாரணை அறிக்கைகளும் பிறகு காணாமல் போயின.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட போது மருத்துவர் க்ரீன்சன் மன்றோ வுக்கு முறையான முதலுதவிகள் செய்யவில்லை.
1985-ல் பி.பி.சி தொலைக்காட்சி நடத் திய ஒரு பேட்டியில் மன்றோவின் உதவியாளர் முர்ரே போலீஸிடம் தெரி வித்ததையே சொல்லிவிட்டு, விளக்கு கள் அணைக்கப்பட்டதும் (ஆனால் மைக் அணைக்கப்படாததைக் கவனிக் காமல்) சலிப்புடன், ‘‘இந்த வயதி லும் நான் பொய் சொல்ல வேண் டுமா? மன்றோவுக்கு இரண்டு கென்னடி களோடும் தொடர்பு இருந்தது’’ என்று உளறிவிட்டார்.
சமீபத்தில் 2014-ம் வருடம் ‘தி மர்டர் ஆஃப் மர்லின் மன்றோ கேஸ் க்ளோஸ்ட்’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டு, விற்பனையில் சாதனை படைத்தது. அதை எழுதியவர்கள் ஜாய் மார்க்லோஸ் மற்றும் ரிச்சர்ட் பஸ் கின். இதில், பீட்டர் லாஃபோர்ட் மனம் விட்டு சொன்ன பல ரகசிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மன்றோவை மனசுக்குள் காதலித் தவர்கள் பலர். அதில் ‘பிளேபாய்’ பத்திரிகையின் ஆசிரியரான ஹக் யஹஃப்னர் முக்கியமானவர். அவர் மன்றோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் மன்றோவின் கல்லறைக்கு அருகில் தனக்காக இடம் வாங்கினார்.
‘முதுமையை நினைத்தால் பயம்’ என்று அடிக்கடி சொன்ன மன்றோ, தன் 36-வது வயதில் முதுமையைக் காணாமலேயே மறைந்தார். ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்த அவரின் மரணத்தின் பக்கங்கள் மட்டும் மூடப்பட்ட பக்கங்களாகவே இருக்கின்றன.
- வழக்குகள் தொடரும்


.மர்லின் மன்றோ Marilyn Monroe, ஜூன் 1, 1926 – ஆகஸ்ட் 5, 1962), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.

1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கிச் சிறப்பித்தது.

1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

நோர்மா டொகேர்ட்டி, யாங்க் இதழ், 1945

மன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் அல்லல் உற்றார். இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் மறுக்கப்படவில்லை[1]. கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது பெயர் ஜோன் எஃப். கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டது[2].

சற்று மேலே பறக்கும் மேலாடையுடன் The Seven Year Itch திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட மன்றோவின் புகைப்படம் சிறப்பாக அமைய 14 முறை ரீடேக் எடுக்கப்பட்டதாகவும், இரவு 1.00 மணிக்கு எடுக்கப்பட்ட அக்காட்சி நிறைவுற மூன்று மணி நேரம் ஆனதாகவும் புகைப்படக்கலைஞர் ஜார்ஜ் எஸ்.ஸிம்பல் தெரிவித்துள்ளார்.[3]


.

Saturday, 12 October 2019

KAMINI ROY ,BENGAL ACTIVIST BORN 1864 OCTOBER 12-1933 SEPTEMBER 27



KAMINI ROY ,BENGAL ACTIVIST 
BORN 1864 OCTOBER 12-1933 SEPTEMBER 27




காமினி ராய் (அக்டோபர் 12, 1864 – செப்டம்பர் 27, 1933) ஒரு முன்னணி வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி. இவர் இந்தியாவின் முதல் பெண் முதுகலைச் சிறப்புப் பட்டதாரி ஆவார்.

[வாழ்க்கைக் குறிப்பு
காமினி ராய் கிழக்கு வங்காளத்தில் பேக்கர்குஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா கிராமத்தில் அக்டோபர் 12, 1864ல் பிறந்தார். இப்பொழுது அந்த ஊர் வங்காளதேசத்தில் பாரிசால் மாவட்டத்திலுள்ளது. காமினி கொல்கத்தாவிலுள்ள பெத்தூன் பள்ளியில் படித்தார். 1880ல் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று பெத்தூன் கல்லூரியில் 1883ல் எஃப். ஏ (ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ்) பட்டம் பெற்றார். 1886ல் அதே கல்லூரியில் சமசுகிருதத்தில் சிறப்புப் பட்டம் படித்து முடித்தார். இந்தியாவிலேயே சிறப்புப் பட்டம் பெற்ற முதல் பெண் இவர் தான். பெத்தூன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.[1] கடம்பினி கங்கூலி அக்கல்லூரியில் இவருக்கு மூன்றாண்டுகளுக்கு முன் படித்தவர். அபலா போஸ் பெத்தூன் பள்ளியில் இவருடன் படித்தவர்.


காமினி ராய் வங்காளத்தைச் சேர்ந்த மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாந்தி சரண் சென் ஒரு நீதிபதி, பிரம்ம சமாசத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர் மற்றும் எழுத்தாளர். இவரது சகோதரர் நிசித் சந்திரா சென் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் பின்னர் கொல்கத்தாவின் மேயராகவும் இருந்தவர். இவரது சகோதரி ஜாமினி நேபாள அரச குடும்பத்தின் குடும்ப மருத்துவர். 1894ல் காமினி, கேதார்நாத் ராயை மணந்தார்.[1]

இவருக்கு சிறு வயதிலேயே இலக்கியத்தில் அதிக ஈடுபாடிருந்தது. தனது எட்டு வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைப் புத்தகம் அலோ ஓ சாயா 1889ல் வெளியானது.[1] செப்டம்பர் 27, 1933ல் இவர் காலமானார்.

பெத்தூன் பள்ளியும் கல்லூரியும் காமினி ராயால் பெருமை அடைந்தன. காமினி ராய் (1864 -1933) முதல் பெண் பாடலாசிரியர். 1880லிருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1889ல் பிரசுரமான இவரது அலோ சாயா, பெண்களின் ஆழமான சுயவெளிப்பாட்டினைக் காட்டும் அரிய உணர்வுகளால் இலக்கிய உலகத்தில் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது... கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் எழுத்துலகில் இருந்த காமினி ராய்க்குத் தங்களது சொந்த படைப்புகளால் வங்காளத்தின் சமூக, கலை, இலக்கிய வாழ்வை வளப்படுத்திய புதிய பெண்கள் தலைமுறையைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது[2]
—காளிதாஸ் நாக்
சமுதாயப் பணிகள்
பெண்ணியவாதியாக

பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். இவருடன் பெத்தூன் பள்ளியில் படித்த அபலா போஸ் காமினி ஒரு பெண்ணியவாதியாவதற்குத் தூண்டுதலாய் இருந்தவர். காமினி ராய், பன்முக முன்னேற்றமும் திறமைகளை வளர்ப்பதும்தான் பெண் கல்வியின் நோக்கமாக அமைய வேண்டுமென கல்கத்தாவிலுள்ள ஒரு பள்ளியில் பேசும்போது கூறினார்.[3]

தி ஃப்ரூட் ஆஃப் தி ட்ரீ ஆஃப் நாலெட்ஜ் என்ற வங்காளக் கட்டுரையில் அவர் கூறியது,

பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்று ஆண்களின் அதிகார ஆசைதான்... பெண் விடுதலையை அவர்கள் மிகுந்த சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஏன்? அதே பழைய பயம். எங்கே பெண்களும் தங்களைப் போல் உயர்ந்துவிடுவார்களோ என்ற பயம் தான்.[4]
காமினி ராய், 1921ல் பாங்கிய நாரி சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார். 1925ல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 1926ல் முதல் முறையாக வங்காளப் பெண்கள் வாக்களித்தனர்.[3] 1922-23 இல் பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.[1]

இலக்கியவாதியாக
பிற எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் ஊக்குவிப்பதில் காமினி ஆர்வம் கொண்டிருந்தார். பாரிசாலில் வாழ்ந்த சுஃபியா கமல் என்ற இளம் பெண் தனது எழுத்துப் பணியைத் தொடர ஊக்கப்படுத்தினார். 1930ல் வங்காள இலக்கிய மாநாட்டிற்கு தலைவராக இருந்தார். 1932-33ல் பாங்கிய சாகித்திய பரிட்சத்தின் துணைத் தலைவராக இருந்தார்.[1]

இவர் 1909ல் தனது கணவரை இழந்தார். கணவரது மரணம் இவரை மிகவும் பாதித்தது. அத்துயரம் இவரது கவிதைகளிலும் பிரதிபலித்தது. ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளிலும் சமசுகிருத இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கொல்கத்தாப் பல்கலைக்கழகம் ஜகத்தாரிணி தங்கப்பதக்கம் வழங்கி இவரைக் கெளரவித்தது.

காமினி ராய் தனது கடைசிகாலத்தில் சில ஆண்டுகள் ஹசாரிபாக் என்ற சிறிய நகரத்தில் வாழ்ந்தார். அங்கு மகேஷ் சந்திர கோஷ், திரேந்திரநாத் செளத்ரி போன்ற அறிஞர்களுடன் இலக்கியம் மற்றும் பிற தலைப்புகளில் கலந்துரையாடுவதில் தனது நேரத்தைக் கழித்தார்.

படைப்புகள்
இவரது இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை:

மகா ஸ்வேதா
புண்டோரிக்
பெளராணிகி
தீப் ஓ தூப்
ஜீவன் பதே
நிர்மால்யா
மால்யா ஓ நிர்மால்யா
அசோக் சங்கீத்
குஞ்சன் (குழந்தைகளுக்கானது)
பாலிக சிக்கார் ஆதர்ஷா ( கட்டுரைப் புத்தகம்)[1]


இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த மகளிர் பலர் உள்ளனர்.  அவர்களை அறிமுகம் செய்யும் தொடர் இது:
இந்தியாவின் முதல் முதுகலை சிறப்புப் பட்டதாரி, வங்காளத்தின் முதல் பெண் கவிஞர், வங்காள இலக்கிய வரலாற்றில் புதிய தடம் பதித்த எழுத்தாளர், 1925-இல் பெண்களின் வாக்குரிமைக்காக போராடி வாக்குரிமை பெற்றவர், பெண் தொழிலாளர் நலனுக்காக பாடுபட்டவர் எனப் பன்முகத் திறம் படைத்த சாதனையாளர் காமினி ராய் (1864-1933). 69 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அவரின் வாழ்க்கையில் சில பக்கங்கள்:

பழைய கிழக்கு வங்காளத்தில் பேக்கர்கோஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா என்ற கிராமத்தில் அக்டோபர் 12, 1864-இல் பிறந்தவர் காமினி ராய். இந்த ஊர் தற்போது வங்காளதேசத்தில் பாரிசால் மாவட்டத்தில் உள்ளது. 

வங்காளத்தைச் சேர்ந்த வசதியான குடும்பத்தில் பிறந்த காமினி ராயின் தந்தை சாந்தி சரண்சென் ஒரு நீதிபதியாக இருந்தார். மேலும் இவர் பிரம்ம சமாஜத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். இவரின் சகோதரர் நிசித் சந்திராசென் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் பின்னர் கொல்கத்தா நகர மேயராகவும் இருந்தவர். இவரது சகோதரி ஜாமினி நேபாள அரச வம்சத்தின் குடும்ப மருத்துவராக விளங்கியவர்.

சிறுவயதில் காமினி கொல்கத்தாவிலுள்ள பெத்தூன் பள்ளியில் படித்தார். 1880-இல் பெத்தூன் கல்லூரியில் சேர்ந்து 1883-இல் எஃப்.ஏ (ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ்) பட்டம் பெற்றார். பின்னர் 1886-இல் அதே கல்லூரியில் சமஸ்கிருதத்தில் சிறப்புப் பட்டம் படித்து முடித்தார். இந்தியாவிலேயே முதுகலை சிறப்புப் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். தான் படித்த பெத்தூன் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான கடம்பினி கங்கூலி, காமினிக்கு மூன்றாண்டுகள் சீனியர். பிரபல சமூக சேவகர் அபலா போஸ் பெத்தூன் பள்ளியில் காமினியுடன் படித்தவர்.
காமினி சிறு வயது முதலே இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைப் புத்தகம் "அலோ ஓ சாயா' 1889-இல் வெளியானது.

காமினியின் இலக்கியத் தாக்கம் குறித்து பிரபல வரலாற்று ஆராய்ச்சியாளர் காளிதாஸ் நாக் கூறுகையில் "பெத்தூன் பள்ளியும் கல்லூரியும் காமினியால் பெருமை பெற்றன. காமினி ராய் (1864 -1933) முதல் பெண் பாடலாசிரியராக விளங்கினார். பெண்களின் ஆழமான சுயவெளிப்பாட்டினைக் காட்டும் அரிய உணர்வுகளால் இவரின் எழுத்து இலக்கிய உலகத்தில் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் எழுத்துலகில் இருந்த காமினி ராய் ஏராளமான நூல்களை எழுதினார். இவரின் படைப்புகளால் வங்காளத்தின் சமூக, கலை, இலக்கிய வரலாற்றில் பெண்களுக்கான புதிய தடம் உருவானது.

பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். பன்முக முன்னேற்றமும் திறமைகளை வளர்ப்பதும்தான் பெண் கல்வியின் நோக்கமாக அமைய வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

காமினி எழுதிய "தி ஃப்ரூட் ஆஃப் தி ட்ரீ ஆஃப் நாலெட்ஜ்' என்ற கட்டுரையில், "பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்று ஆண்களின் அதிகார ஆசைதான்... பெண் விடுதலையை அவர்கள் மிகுந்த சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஏன் அதே பழைய பயம்...' என கேள்வி எழுப்பியிருக்கிறார். 

1921-இல் காமினி, வங்காள மகளிர் சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார். 1925-இல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 1926-இல் முதல் முறையாக வங்காளப் பெண்கள் வாக்களித்தனர். காமினி 1922-23 -இல் பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

1930-இல் வங்காள இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். 1932-33-இல் வங்காள சாகித்ய பரீட்சத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். கொல்கத்தாப் பல்கலைக்கழகம் ஜகத்தாரிணி தங்கப்பதக்கம் வழங்கி இவரைக் கௌரவித்தது.  

1894-இல் காமினி, கேதார்நாத் ராயை மணந்தார். 1909-இல் தனது கணவரை இழந்தார் காமினி. அவரது மரணம் இவரை மிகவும் பாதித்தது. அத்துயரம் இவரது கவிதைகளிலும் பிரதிபலித்தது.  

காமினி ராய் தனது கடைசிகாலத்தில் சில ஆண்டுகள் ஹசாரிபாக் என்ற சிறிய நகரத்தில் வாழ்ந்தார். 

Kamini Roy (12 October 1864 – 27 September 1933)[1] was a leading Bengali poet, social worker and feminist in British India. She was the first woman honours graduate in British India.[2]

Early life

Born on 12 October 1864 in the village of Basanda, then in Bakergunj district of Bengal Presidency and now in Barisal District of Bangladesh, Roy joined Bethune School in 1883. One of the first girls to attend school in British India, she earned a bachelor of arts degree with Sanskrit honours from Bethune College of the University of Calcutta in 1886 and started teaching there in the same year. Kadambini Ganguly, one of the first two women honors graduates ever in the country, was three years senior to her in the same institution.[3]

Kamini hailed from an elite Bengali Baidya family. Her father, Chandi Charan Sen, a judge and a writer, was a leading member of the Brahmo Samaj. She learnt from his collection of books and used his library extensively. She was a mathematical prodigy but later her interest switched to Sanskrit.[4] Nisith Chandra Sen, her brother, was a renowned barrister in the Calcutta High Court, and later the Mayor of Calcutta while sister Jamini was the house physician of the then Nepal Royal family. In 1894 she married Kedarnath Roy.[3]

Writing and feminism
Bethune School and College will take just pride in Kamini Roy (1864–1933), the first woman lyricist who began composing from 1880 and published her Alo Chhaya in 1889 which created a stir in the literary world as much by its rare sensibilities as by the profundity of woman’s self-realisation. Kamini Roy worked with her pen for nearly fifty years and witnessed the emergence of a new generation of womanhood enriching the social, artistic and literary life of Bengal through their original creations.
— Kalidas Nag in Introduction to the Bethune School and College Centenary Volume, 1949
Her writing is simple and elegant. She published her first collection of verses Alo Chhaya in 1889, and two more books after that but then took a break from writing for several years following her marriage and motherhood. She was a feminist at an age when merely getting educated was a taboo for a woman.[citation needed] She picked up the cue for feminism from a fellow student of Bethune School, Abala Bose. Speaking to a girls' school in Calcutta, Roy said that, as Bharati Ray later paraphrased it, "the aim of women's education was to contribute to their all-round development and fulfillment of their potential".[5]

In a Bengali essay titled The Fruit of the Tree of Knowledge she wrote,

The male desire to rule is the primary, if not the only, stumbling block to women's enlightenment ... They are extremely suspicious of women’s emancipation. Why? The same old fear – 'Lest they become like us'.[6]

In 1921, she was one of the leaders, along with Kumudini Mitra (Basu) and Mrinalini Sen, of the Bangiya Nari Samaj, an organization formed to fight for woman's suffrage. The Bengal Legislative Council granted limited suffrage to women in 1925, allowing Bengali women to exercise their right for the first time in the 1926 Indian general election.[5] She was a member of the Female Labour Investigation Commission (1922–23).[3]

Personal life
After graduating with honours distinction from Bethune college in 1886, she received a teaching position from the same college. She took part in the Ilbert Bill agitation. It was during this period which would be productive for her, as she wrote during this time. She quit teaching after 1894. Herein she published for five years. Shortly, she would marry Kedarnath Roy at the age of 30, which was against the norm during that time. It was highly unusual for women to get married in their thirties in colonial Bengal. [7]

She had two children with Kedarnath, after which she retired from her writing profession. When asked why she had stopped writing she reportedly said, “My children are my living poems. [8] Kamini returned to writing poetry after the death of her husband in 1909 and her oldest son.

Honors and laurels
Roy went out of her way to encourage other writers and poets. In 1923, she visited Barisal and encouraged Sufia Kamal, then a young girl, to continue writing. She was president of the Bengali Literary Conference in 1930 and vice-president of the Bangiya Sahitya Parishad in 1932-33.[3]

She was influenced by the poet Rabindranath Tagore and Sanskrit literature. Calcutta University honoured her with the Jagattarini Gold Medal.[3]

In her later life, she lived at Hazaribagh for some years. In that small town, she often had discussions on literary and other topics with such scholars as Mahesh Chandra Ghosh and Dhirendranath Choudhury. She died on 27 September 1933 while staying in Hazaribag