Friday 2 October 2020

MAHATMA GANDHI , THE MAN OF 20 TH CENTURY BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30

.


MAHATMA GANDHI , 

THE MAN OF 20 TH CENTURY  

BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30




20 ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மனிதர் மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 இல்பிறந்தார்


தென் ஆப்பிரிவிக்காவில் அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார்? சத்குருவின் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அந்த அற்புத உண்மை… படித்து மகிழுங்கள்…

சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்… மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையான வழக்கறிஞரும் அல்ல. நீதிமன்றத்தில் தைரியமாக எழுந்து சரளமாக பேசக்கூடியவரும் அல்ல. ஆனால் ஒரே ஒரு சம்பவம், திடீரென அவருடைய அடையாளங்கள் கழன்றுவிட்டன. தென் ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்தபோது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், காந்தியிடம் ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் அவர் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார். காந்தி மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து காந்தியை அவருடைய உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார்.




அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த காந்தி பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. “எனக்கு இது ஏன் நடந்தது? நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்? இதற்கு வழி காண வேண்டும்” என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள, காந்தி மகாத்மாவாய் மலர்ந்தார். சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் மகாத்மாவானார். மகாத்மா காந்தியைப் போல் வேறு யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு மனிதர்களை வழிநடத்தியதில்லை. அதுவும் மிக எளிய வழிகளில். இந்த நாட்டில் நன்றாக வேர் ஊன்றியிருந்த அன்னியரை போர், வன்முறை போன்ற எந்த வழிகளுமின்றித் துரத்தினார். இந்தப் பிரபஞ்சத்தில் இதற்கு முன் நடந்திராத அதிசயம் இது. இந்த நாட்டை வென்றவர்கள் அதற்கென்று சில விலை கொடுத்துதான் இந்த நாட்டைக் கைப்பற்றினர். அவர்களும் எளிதாகப் போய்விடவில்லை. ஆனாலும், சண்டையில்லாமல், துப்பாக்கி ஏந்தாமல், வன்முறையைக் கடைப்பிடிக்காமல் அவர்களைத் துரத்தியடித்தார் மகாத்மா. இந்த நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது. காவலர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஒரு விஷயம். அவர்கள் மீது குண்டு எறிவது மற்றொரு விஷயம், ஆனால் நிராயுதபாணிகளாகத் தெருவில் சென்று தலையில் அடிவாங்கி மண்ணில் வீழ்வது முற்றிலும் வேறு விஷயம். முதல் பகுதி மக்கள் அடிபட்டு வீழ்ந்தவுடன் அடுத்த குழுவைச் சார்ந்த மக்கள் அடிவாங்கப் போய் நிற்பது என்பது மிகவும் வேறுவிதமான வலிமையான விஷயம். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் அப்படிச் செய்வதற்கு மிகவும் ஆழமான மன வலிமை வேண்டும். லட்சக்கணக்கான மக்களை அவரால் அப்படி ஈடுபடுத்த முடிந்தது.







தான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையை விட்டுவிட்டு அப்போது சமூகத்தில் நிலவிவந்த மக்களின் முக்கியப் பிரச்சனைகளோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சிறிய அடையாளம் சிதறியது. எனவே நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று நிர்ணயித்து ஓர் எல்லைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களால் செய்ய முடிந்த எதையும் செய்யுங்கள். செய்ய முடியும் என்று நினைக்கும் எதையும் செய்யுங்கள்!

.


மகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்


ஆன்மிகத்தின் அடிப்படை

* உண்மையை மறைக்காமல் சொல்லும் மன வலிமை வேண்டும்.

* நமது ஒவ்வொரு எண்ணத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.

* நல்ல நட்பைப் பெற வேண்டுமானால், நீயும் நல்ல நண்பனாக இரு.

* உடல்சோர்வு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் பலவீனம்.

* தொண்டு தான் உண்மையான அன்பை வெளிப்படுத்துமே தவிர, வெறும் வாய்ச்சொல்லால் பயனில்லை.

* பொய்மை ஒருநாள் மறைந்து போகும். உண்மையே மேலே உயர்ந்து நிற்கும்.




* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை.

* மனப்பூர்வமாக உள்ளம் கனிந்து செய்யும் பிரார்த்தனையை இறைவன் ஏற்க மறுப்பதில்லை.

* உலகிலுள்ள எல்லா சக்திகளையும் விட, ஆன்மிக சக்தியே அதிக பலம் வாய்ந்தது.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

"அவன்' பார்த்துக் கொள்வான்

* உண்மை இருக்கும் இடத்தில் தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவனின் உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது.

* பிரார்த்தனை என்பது தன்னடக்கம் நிரம்பியதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.

* உங்களுடன் பேசாதவர்களிடமும், முகம் கொடுத்துப் பேச முற்படுங்கள்.

* நல்ல நண்பனைப் பெற விரும்பினால், நீங்களும் நல்ல நண்பனாக இருக்கப் பழகுங்கள்.




* நம் எண்ணம் முழுவதையும் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், அந்த வினாடியே நமக்கு விடுதலை கிடைத்து விடும்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால், நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.

* இதயத்தில் தூய்மையுடன் செய்யும் வழிபாடு, தியானத்தை கடவுள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.

* எவ்வளவு குழப்பம் நேர்ந்தாலும், பொய் ஒருநாள் காணாமல் போகும். உண்மையோ என்றென்றும் நிலைத்து நிற்கும்.

விவேகத்தால் சாதிக்கலாம்

* கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லி முறையிடுவது வெறும் மூடநம்பிக்கை அல்ல.

* பலம் என்பது உடல்வலிமை மட்டுமல்ல. மனவுறுதியே உண்மையான பலம்.

* நேர்மையாக வியாபாரம் செய்வது கடினம். ஆனால் அது முடியாத செயல் அல்ல.

* தேவைகளைப் பெருக்கிக் கொள்வது அநாகரிகம். குறைத்துக் கொள்வதே நாகரிகம்.

* நற்செயல்கள் அனைத்தும் இறுதியில் ஒருநாள் பலன் அளித்தே தீரும் என உறுதியாக நம்புங்கள்.

* வேகத்தால் எதையும் சாதிக்க முடியாது. விவேகமானவனோ வாழ்வில் நிறைய சாதிப்பான்.




* தெய்வத்தின் கணக்குப் புத்தகத்தில் நம் செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. நாம் பேசியவையும், படித்தவையும் அல்ல.

* பாவத்தை மனதில் மறைத்து வைக்காதீர்கள். அது உடலில் மறைந்து கொல்லும் நஞ்சு போன்றது.

* பாவத்தை வெறுக்கலாம். பாவியை வெறுக்காதீர்.

* வாழ்நாள் முழுவதும் பழகி வந்த பழக்கத்தை நொடியில் விட்டு விட முடியாது.

தியாக மனம் வேண்டும்

* கடமையைச் சரியாக நிறைவேற்றினால் உரிமை தானாகவே வந்து சேரும்.

* கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பது சிறந்தது.

* தேவைக்கு அதிகமாக செல்வம் சேர்த்து வைப்பது, ஒருவகையில் திருட்டு தான்.

* கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்ளும் சக்தியை தகுந்த பயிற்சியின் மூலம் பெற முடியும்.

* பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்வது கடவுளுக்கு எதிரானது.

* பிறருக்காக தியாகம் செய்யும் மனநிலை கொண்டவனால், தனக்காக எதையும் தேட நேரம் இருக்காது.

* மனிதனின் இதயத்தில் மறைந்து கிடக்கும் நல்ல சக்திகளை மலரச் செய்வதே கலை.




* கலைஞர்கள் அவரவர்க்குரிய கலைகளால் மனிதர்களை நல்வழிப்படுத்த முயலவேண்டும்.

* மனிதர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதே உண்மையான கல்வியின் பயன்.

* ஏளனம் என்பது பேசும் நாவை இழிவுபடுத்துமே அன்றி, ஏசப்பட்டவனை இழிவுபடுத்துவதில்லை.

நாளை அவன் கையில்!

* அவசியமில்லாத பொருளை நமக்குத் தேவை என்று வைத்துக் கொண்டிருப்பது கூடாது. சொல்லப்போனால் அதுவும் ஒரு திருட்டு தான்.

* உலகத்திலுள்ள எல்லா சக்திகளையும்விட ஆன்மிக சக்தியே மிக பலம் கொண்டது.

* உங்களிடம் பேசாதவர்களிடம் பேசுங்கள். வராதவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். கோபித்தவர்களைச் சமாதானப்படுத்துங்கள். விட்டுக்கொடுத்து வாழப் பழகுங்கள்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார். நிம்மதியாக வாழ்வதற்கு இதுவே நல்வழியாகும்.

* என்ன தான் குழப்பம் நேர்ந்தாலும் பொய்மை ஒருநாள் மறைந்துபோகும். ஒருநாள் மெய்மை மேலே உயர்ந்து நின்று தர்மத்தை நிலைநாட்டும்.

* நம்முடைய ஒவ்வொரு அந்தரங்கத்தையும் கடவுள் அறிவார் என்பதை உணர்ந்தால் போதும். அந்த விநாடியே நமக்கு விடுதலை கிடைத்துவிடும்.

அச்சத்தை அறவே தவிர்!

* அன்புணர்வு வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் போதாது. சுயநலமற்ற சேவையால் அதை வெளிப்படுத்த வேண்டும்.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும்.

* உடலுக்கு உணவு, உயிருக்கு பிரார்த்தனை.

* உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள் பார்த்துக் கொள்வார்.

* நல்ல நண்பனைப் பெற விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள்.

* நம் மனதில் எழும் எண்ணம் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நாம் உணர வேண்டும்.

* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்குமரம் ஏற வேண்டியிருந்தாலும் அஞ்சாமல் சொல்லுங்கள்.

* அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.

சிறந்த வழிபாடு எது?

* ஒரு செயல் நீதிக்கும், தர்மத்திற்கும் உடன்பட்டதா என்பதை செயலாற்று பவனின் நோக்கத்தைக் கொண்டே அறிய முடியும்.

* வீடுகளில் கூட்டுப்பிரார்த்தனை மிக அவசியமானது.

* மிதமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின்னும் கொஞ்சம் பசி உணர்ச்சி இருப்பது உடல்நலனுக்கு தேவையானது.

* இறைவனோடு இரண்டறக் கலக்கும் நோக்கத்தோடு செயலாற்றுவதே வைராக்கிய வாழ்வாகும். இந்நிலை பெற மனமும் உடலும் நல்லவிஷயங்களில் மட்டுமே ஈடுபடுதல் வேண்டும்.

* பெண்ணைப் பலமற்றவள் என்று கூறுவது அவளை நிந்திப்பதாகும். பெண்ணுக்கு உடல்பலம் குறைவு என்றாலும் ஆன்மபலம் மிக அதிகம்.

* ஏழைகளுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு உலகில் வேறு கிடையாது.

* ஆழ்ந்த நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. வழிபாட்டின் திறவுகோலாக பிரார்த்தனை அமைந்துள்ளது.

அன்பு தோற்பதில்லை

* முன் நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது வைராக்கிய வாழ்வுக்கு அவசியமான பழக்கம்.

* அறிவால் கடவுளை அறிய முடியாது. ஆழ்ந்த நம்பிக்கை, அனுபவம் இரண்டும் நம்மைக் கடவுளிடம் அழைத்துச் சென்று விடும்.

* சத்தியக் கோயிலை அடைய விரும்புபவர்கள் அகிம்சை என்னும் பாதையில் நடை பயில வேண்டும்.

* நமக்கு கடவுளே மூலமாக இருக்கிறார். அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்.

* அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. பகையுணர்வோ, மனிதனை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

* கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திப்பதால், மனதை லட்சியத்தை நோக்கி குவிக்கச் செய்ய முடியும்.

* கடவுள் என்ன நோக்கத்துடன் உயிர்களைப் படைத்தார் என்பதை நம்மால் அறிய முடியாது. படைப்பின் ரகசியத்தைக் கடவுள் மட்டுமே அறிவார்.

* அகிம்சையால் வெல்ல முடியாமல் போனால், அதற்குக் காரணம் நம் மனபலவீனமே ஆகும்.

சவால்களை சந்தியுங்கள்

* கருத்து ஒற்றுமை கொண்டவர்களிடம் விட்டுக்கொடுப்பது பெரிதல்ல. முரண்பட்ட கருத்து உடையவர் என்றாலும் விட்டுக் கொடுப்பதே சகிப்புத்தன்மை.

* கோழைத்தனம் நீங்குவதற்காக சிலர் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சவால்களை எதிர்கொண்டு வாழக் கற்றுக் கொள்வதே சரியான மருந்து.

* கடவுள் பொறுமையோடு அனைத்தையும் சகித்துக் கொள்கிறார். ஆனால், அவருடைய பொறுமைக்கும் எல்லையுண்டு.

* கோயில்கள் வெறும் கண்காட்சிக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. தெய்வீக உணர்வை மக்களிடம் பரப்பும் பணியை மேற்கொண்டிருக்கின்றன.

* தீய செயல்களைச் செய்பவரை விட, தீய எண்ணங்களுக்கு இடம் தருபவன் அதிக தீமையைச் செய்து கொண்டிருக்கிறான்.

* குறை இல்லாத மனிதன் இல்லை. ஆனால், எதிராளியின் குறைகளை மட்டுமே மிகைப் படுத்துகிறோம். இதனால் வெறுப்புணர்வு அதிகமாகிறது.

மனம் சுத்தமாக இருக்கட்டும்!

* உண்ணாவிரதம் இருக்காமல் பிரார்த்தனை செய்ய முடியாது, பிரார்த்தனை செய்யாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது.

* கடவுளிடம் காணும் பரிபூரணத்துவத்தை வணங்குவதே தூய வழிபாட்டு நெறிமுறை. அவர் மட்டுமே சத்தியமானவர்.

* வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் நாம் சிறு துளியே. எனவே, அனைத்து உயிர்களுடனும் ஒன்றுபட்டு ஒரே அம்சமாகத் திகழ வேண்டும்.

* பகவத்கீதையை கிளிப்பிள்ளையைப் போல பாராயணம் செய்வதால் பலனேதும் இல்லை. அதுகாட்டும் உபதேசப்படி நடந்து காட்ட வேண்டும்.

* யாரை வழிபடுகிறோமோ, அந்த தெய்வம் காட்டியே வழியில் நடப்பதே உண்மையான வழிபாடு. மற்ற பிரார்த்தனைகள் எல்லாம் , நம்முடைய நேரத்தை வீணடிப்பதாகும்.

* மனதைச் சுத்தமாக வைத்துக் கொண்டால், இறைவன் நம் பிரார்த்தனையை அவசியம் கேட்பான்.

* மனதை அலைய விடாமல் கட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான வழிபாடாகும்.

- காந்திஜி

.கொள்கை இல்லாத அரசியலும்

இரக்கமற்ற மதமும் ஒழிக்கப்பட வேண்டியவை

காந்தி

குறிக்கோள் இல்லாத வணிகமும்

மனிதத்தன்மை இல்லாத

விஞ்ஞானமும் பயனற்றது

காந்தி

அறிவு இருந்தும் நல்ல குணம் இல்லாமை

கண்மூடித்தனமான இன்பங்கள் வருந்த தக்கது

-காந்தி


வேலை செய்யாமல் குறுக்கு வழி சம்பாத்தியம்

இந்தியாவை தள்ளாட வைக்கும்

-காந்தி

மகாத்மாவை ஏளனமாக பார்க்கும்

நீங்கள் எந்த அளவுக்கு முட்டாள்கள்

என்பது உங்கள் சிரிப்பின் நீளத்தை

பொறுத்தது

No comments:

Post a Comment