Saturday 8 August 2020

KARUNANIDHI`S BULLET DIALOGUES






KARUNANIDHI`S BULLET DIALOGUES


டாக்டர் கலைஞரின் கனல் தெறிக்கும்வசனங்கள்.

"கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது": அனல் பறந்த கலைஞரின்  வசனங்கள்!

கலைஞர் முதன் முதலில் மாணவர் நேசன்,முரசொலி,
துண்டுப் பத்திரிக்கைகளை ஆரம்பித்து தனது எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டார்.இவர் முதலில் வசனம் எழுதிய படம் அபிமன்யு.

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்  அனல் பறக்கவிட்ட சில வசனங்களைப் பார்க்கலாம்.

மந்திரிகுமாரி படத்தில் குண்டலகேசியின் ஒரு பகுதியை படமாக மாற்றினார் கலைஞர்.

அப்படத்தில் ‘போன்னா போறே வான்னா வாறே நீ போக்குவரத்து மந்திரி,

மந்திரி பதவி வந்ததும் தெரியலை போனதும் தெரியலை.’ உள்ளிட்ட வசனங்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது.

பராசக்தி:
பின் பராசக்தி படத்தில்,கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் "ஓடினாள், ஓடினாள்..வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்". "என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம் தான்.ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது'‘

பகுத்தறிவு:

"கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகி விடக்கூடாது"...... உள்ளிட்ட வசனங்கள் கருணாநிதிக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்தது

மனோகரா:
பொறுத்தது போதும்.. பொங்கியெழு' என்கிற தாய் கண்ணாம்பாவும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"சிவாஜியும் கலைஞரின் வசனத்தில் போட்டி போட்டு நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள்.

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்.

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!

மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்?

என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல,

பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா?

கொள்ளையடித்தேனா?

நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா?

குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்?கூறமாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம்.

இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்!

மக்களின் பிரதிநிதிகள் இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?

சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத் தான் வேண்டும்.*

அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.

மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்?

குடும்பத் தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்று தான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!

அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மனோகரன்: அதற்குத் தான் காரணம் கேட்கிறேன்!

அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?

மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்து விட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானது தான்.

அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.

மனோகரன்: அரசன் உத்திரவென்ன?

ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!

அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?

மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"



பூம்புகார்:

யார் கள்வன் ?

என் கணவன் கள்வனா?

அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர் நல்லான் வகுத்ததா நீதி

இந்த வல்லான் வகுத்ததே நீதி

இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை

இது கோவலன்தேவியின் சிலம்பு நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு மணிமுடி எதற்கு

வெண்கொற்றக் குடை எதற்கு? என்ற பூம்புகார் வசனம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.


பகிர்வு

No comments:

Post a Comment