Tuesday 11 August 2020

JACQUELINE FERNANDES INDO-CEYLON ACTRESS BORN 1985 AUGUST 11



JACQUELINE FERNANDES INDO-CEYLON 
ACTRESS BORN 1985 AUGUST 11




ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez, சிங்களம்: ජැකලින් ෆර්නෑන්ඩස්) இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையும் முன்னாள் இலங்கை அழகுராணியுமாவார். 2006 ஆம் ஆண்டு இலங்கை அழகிப் போட்டியில் (மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்ஸ்) வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு அலாதீன் என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பன்னாட்டு இந்திய ஃபிலிம் அகாதமி விருதினை 2010ல் வென்றார். தற்போது பல இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவருக்கு படப்பிடிப்பின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ‘ரேஸ் 3’ படப்பிடிப்பு துபாயில் நடைபெற்றது.பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு, குணப்படுத்தமுடியாத அளவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது ரசிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை படமாக வரைந்து அதில் தனது கையெழுத்து இட்டு அவருக்கு வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.



29 வயதான இலங்கையை சேர்ந்த ஜாக்குலின், ராய் என்ற படத்தில் இரட்டை வேடத்தில் தோன்றுகிறார்.  இந்த படத்தில் இவருடன் ரன்பீர் கபூர் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஜாக்குலின் டுவிட்டரில், எனது அன்பான ரசிகர்களே!  உங்களில் ஒருவரை நான் படமாக வரைய உள்ளேன்.  நீங்கள் அந்த நபராக இருக்க விரும்பினால், உடனே எனது முகநூல் பக்கத்திற்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.  மாடலிங் துறையில் இருந்து பின் நடிகையாக மாறிய ஜாக்குலின் தனது முதல் படமான அலாடினில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின்னர், மர்டர் 2, ஹவுஸ்புல் 2, ரேஸ் 2 மற்றும் கடந்த ஆண்டு 2014ல் வெளியான கிக் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  ஜாக்குலின் நடிப்பில் வெளியாகவுள்ள ராய் திரைப்படம் பிப்ரவரி 13ல் திரையரங்குகளில் ரசிகர்களை கவர உள்ளது.ஜாக்குலின் பெர்னாண்டஸ்  பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் இலங்கை நாட்டை சேர்ந்தவர்.



2009ம் ஆண்டு வெளி வந்த ‘அலாதீன்’ என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில்  அறிமுகமானார்.
தற்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.
ஜாக்குலின் பெர்னாண்டஸ்  பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் இலங்கை நாட்டை சேர்ந்தவர்.

2006 ஆம் ஆண்டு இலங்கை அழகிப் போட்டியில் மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்ஸ் என்ற பட்டத்தை பெற்று  வெற்றி பெற்றார்.

2009ம் ஆண்டு வெளி வந்த ‘அலாதீன்’ என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில்  அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பன்னாட்டு இந்திய ஃபிலிம் அகாதமி விருதினை 2010ல் வென்றார். இந்நிலையில் இவர் தற்போது பல இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சென்ற கார் விபத்து
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சென்ற கார் நேற்று விபத்துக்குள்ளானது.

இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் தற்போது மும்பையில் தங்கி நடித்து வருகிறார்.அவர் தற்போது சல்மான் கானுடன் இணைந்து ரேஸ் 3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரேஸ் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதால் படக்குழுவினருக்கு சல்மான் கான் அவரது விட்டில் நேற்று பார்ட்டி கொடுத்தார்.இந்த பார்ட்டியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் படத்தில் நடித்த மொத்த நடிகர்களும் கலந்துக் கொண்டனர்.

அந்த பார்ட்டி-யை முடித்து விட்டு ஜாக்குலின் பெர்னாண்டஸ் இரவு 2:20 மணியளவில் சல்மான் கான் வீட்டிலிருந்து கிளம்பினார்.பின்னர் சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கார்டர் சாலையில் சென்றபோது ஜாக்குலினின் கார்,அந்த வழியாக வந்த ஆட்டோவில் மோதியிருக்கிறது.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜாக்குலின் பெர்ணான்டஸ்ற்கு எந்த காயமும் ஏற்படவில்லை.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை

No comments:

Post a Comment