Wednesday 12 August 2020

SAYEESHA SAIGAL ,HINDI ACTRESS BORN 1997 AUGUST 12



SAYEESHA SAIGAL ,HINDI ACTRESS
 BORN 1997 AUGUST 12



.சாயிஷா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றி, இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.[1][2] தெலுங்கு படமான அகில் (2015) படத்தில் நடித்த பிறகு, அஜய் தேவ்கானின் சிவாய் (2016) படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.[3][4] பிறகு வனமகன் (2017) படத்தில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
சொந்த வாழ்க்கை
நடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் இவர். இவர் நடிகர்களான சைரா பானு [5] மற்றும் திலிப் குமார் ஆகியோரின் பேத்தி முறை அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர் .[6] 13 பிப்ரவரி 2019 அன்று சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார்.[7] இவர்களது திருமண விழா ஐதராபாத்தில் 8 மார்ச்சு 2019 இல் தொடங்கியது. இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்தை சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.[8][9]

தொழில்



தெலுங்கு திரைப்படமான அகில் (2015) திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா. இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.[10] அவரது திரைப்படமான வனமகன் ஜூன் மாதம் 2017 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்இவர் அறிமுகமானார்.[11][12][13] 2018 இல், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம், விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் ஆகிய படங்களில்சொந்த வாழ்க்கை
நடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் இவர். இவர் நடிகர்களான சைரா பானு [5] மற்றும் திலிப் குமார் ஆகியோரின் பேத்தி முறை அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர் .[6] 13 பிப்ரவரி 2019 அன்று சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார்.[7] இவர்களது திருமண விழா ஐதராபாத்தில் 8 மார்ச்சு 2019 இல் தொடங்கியது. இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்தை சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.[8][9]



தொழில்
தெலுங்கு திரைப்படமான அகில் (2015) திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா. இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.[10] அவரது திரைப்படமான வனமகன் ஜூன் மாதம் 2017 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்இவர் அறிமுகமானார்.[11][12][13] 2018 இல், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம், விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் , காப்பான் என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்தார்
.தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் சாயிஷா ஆடிய நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. 



அதனை தொடர்ந்து நடிகை சாயிஷா ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தார். அந்த சமயம் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்த படியே டிக்டாக், நடனம் மற்றும் சமையல் போன்ற செயல்களை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இவர்களது திருமணம் காதல் திருமணம் அல்ல என்றும் இருவீட்டாரும் சேர்ந்து பேசி முடிவு செய்தது என்றும் சாயிஷாவின் அம்மா கூறினார். #Arya #Sayyeshaa



தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஆர்யாவும் ஒருவர். பூஜா, நயன்தாரா, அனுஷ்கா என பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் நீண்ட காலமாக பெண் பார்த்து வந்தனர்.ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த சாயிஷாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த செய்தியை காதலர் தினமான நேற்று ஆர்யா உறுதி செய்தார். அவரது டுவிட்டர் பக்கத்தில் வரும் மார்ச் மாதம் ‘நானும் சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்‘ என்று குறிப்பிட்டு இருக்கிறார். சாயிஷாவுடன் சேர்ந்து எடுத்த படம் ஒன்றையும் பதிவிட்டார். இதே பதிவை சாயிஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து சாயிஷாவின் அம்மா ஷாஹீனியிடம் கேட்டபோது, “எங்களுக்கு இந்த திருமணத்தில் முழு ஈடுபாடு இருக்கிறது. இந்த இனிய நாளில் எங்கள் குடும்பத்தினருக்கும், ஆர்யா குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அவரது டுவீட் இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். உண்மையில் இது இரு குடும்பத்தார்களும் சேர்ந்து எடுத்த முடிவு.

ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போக அவர்கள் திருமணத்திற்கு அணுகினார்கள். எங்களுக்கும் ஆர்யா போல் ஒருவர் என் மகளை திருமணம் செய்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது நாங்கள் அனைவரும் அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்“ என்று கூறினார். சாயிஷா பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி ஆவார். #Arya #Sayyeshaa #AryaSayyeshaa


வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா சைகல். அதனைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் இந்தப் படம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில் சாயிஷா விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ஜங்கா படத்தில் நடிக்கவுள்ளார். இதன் 60 சதவீத படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற இருப்பதால் பாரீஸ் செல்கிறார்.

இதுகுறித்து டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்துள்ள பேட்டியில் சாயிஷா, "பாரீஸில் பிறந்து வளர்ந்த செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இந்தப் படத்தில் நடிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். பாரீஸ் பயணத்தில் இன்னும் எத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றபோது," நான் தற்போது விடுமுறையை கழிக்க பல்கேரியா, அம்ஸ்டேர்டாம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்கச் செல்கிறேன். அதன் பின்னர் ஜங்காவில் எனக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன்" என்று கூறினார்.
வனமகன் படத்தில் உங்களது கேரக்டர் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்தப் படத்தின் கேரக்டரும் பெரிய அளவில் பேசப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சாய்ஷா, " ஒவ்வொரு ஸ்கிரிப்ட்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டே இருக்கும். இந்த படத்தில் எனக்கு ஈஸியான கேரக்டர்தான் என்றாலும் என் கேரக்டர் வலுவானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியோடு மீண்டும் காமெடி தாதா சப்ஜெக்டில் களமிறங்கியுள்ளார் கோகுல். இதன் படப்பிடிப்பு பாரீஸில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.











.

No comments:

Post a Comment