Thursday 13 August 2020

PRATAP BOTHAN ,TAMIL ,MALAYALAM ACTOR / DIRECTOR BORN 1952 AUGUST 13






PRATAP BOTHAN ,TAMIL ,MALAYALAM 
ACTOR / DIRECTOR BORN 1952 AUGUST 13



பிரபல நடிகையான ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெறியும். நடிகர் எம் ஆர் ராதாவிற்கு சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் எம் கீதா என்று 4 மனைவிகள் இருந்தனர்.அதில் 4வது மனைவி திருமதி கீதாவிற்கு பிறந்த மகள் தான் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷா. நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப்பை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஒரே ஆண்டில் விவாகரத்து  செய்துகொண்டார்.

 .


கேரளாவை சேர்ந்த பிரதாப் போத்தன் சினிமாவில் நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் வெற்றி கண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்.மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார் பிரதாப் போத்தன். இவர் ராதிகாவுடன் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்தது, அவர்கள் இருவரும் நண்பர்கள் துணையோடு திருமணமும் செய்து கொண்டனர். சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.


நடிப்பை தாண்டி இயக்கத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று இவர் இயக்கிய படங்கள் நிறைய உள்ளன அதில் நிறைய தோல்வி படங்கள்தான். சத்யராஜ் நடித்த ஜீவா, மகுடம் இயக்கியது இவர்தான் ஆனால் தோல்வி. ஆத்மா என்ற பிரம்மாண்ட படம் எடுத்தார், கார்த்திக் நடித்த லக்கி மேன் இவர்தான் எடுத்தார் ஆனால் தோல்வி.இப்படி நிறைய தோல்வி படங்கள் கொடுத்தாலும் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அந்த படத்தை பற்றியும், முழு படத்தின் லிங்கயும் பார்க்கலாம்.பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பூ போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் வெற்றி விழா. ஆக்ஷன் த்ரில்லர் கலந்த இந்த படம் இன்றும் ரசிகர்களுக்கு பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்தது.  இந்தப் படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.சீவலப்பேரி பாண்டி:

நெப்போலியன், சரண்யா நடிப்பில் 1994-ல் வெளிவந்தது சீவலப்பேரி பாண்டி. இந்தப் படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. நெப்போலியனுக்கு சினிமாவில் திரும்பிப் பார்க்கக் கூடிய கதாபாத்திரமாகவே அமைந்தது. சீவலப்பேரி பாண்டியன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கதை நகரும், ஆதியன் இந்த படத்துக்கு இசையமைத்திருப்பார் இந்த படத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்.
.

பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்த இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.

80களில் பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகளின் சந்திப்பிற்கு தன்னை யாரும் அழைக்கவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார் பிரதாப் போத்தன்.
80களில் பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் ஆண்டுதோறும் ஒரு இடத்தில் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அனைவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வருவார்கள். இந்த சந்திப்பு இந்தியா அல்லாமல் வெளிநாடுகளிலும் நடப்பது உண்டு. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சந்திப்பு ஹைதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் புது வீட்டில் நடந்தது. இந்த ஆண்டு அனைவரும் கருப்பு மற்றும் தங்க நிற உடை அணிந்து வந்திருந்தனர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த சந்திப்பில் நடிகர்கள் மோகன்லால், ரகுமான், ஜாக்கி ஷ்ராஃப், ஜெயராம், சரத்குமார், சுரேஷ், பிரபு, ரமேஷ் அரவிந்த், பாக்யராஜ், வெங்கடேஷ், நாகர்ஜுனா, சுமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகைகள் ரேவதி, அம்பிகா, ஜெயசுதா, சுமலதா, லிசி, ஜெயபிரதா, பூர்ணிமா, அமலா, சரிதா, ராதா, நதியா, ஷோபனா, குஷ்பு, ராதிகா, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
80களில் பிரபலமாக இருந்த நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனை யாரும் அழைக்கவில்லையாம். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒரு வேளை நான் மோசமான நடிகர் மற்றும் இயக்குநரோ அதனால் தான் அவர்கள் கெட் டுகெதருக்கு என்னை அழைக்கவில்லை போன்று. எனக்கு கவலையாக உள்ளது. என் கெரியர் ஒன்னுமே இல்லை போன்று. சிலருக்கு உங்களை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது, ஆனால் வாழ்க்கை போய்க் கொண்டு தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதாப் போத்தனின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, நீங்கள் ஒரு நல்ல நடிகர் மற்றும் இயக்குநர். அது எங்களுக்கு தெரியும். இந்த கெட் டுகெதர் பெரிய விஷயம் இல்லை. அதற்கு அழைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். நீங்கள் வேற லெவல், சிறந்தவர். அதனால் தான் அந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. இந்த உலகில் உள்ள அனைவருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்று ஆறுதல் கூறியுள்ளனர்.









பிரபல நடிகையான ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெறியும். நடிகர் எம் ஆர் ராதாவிற்கு சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் எம் கீதா என்று 4 மனைவிகள் இருந்தனர்.அதில் 4வது மனைவி திருமதி கீதாவிற்கு பிறந்த மகள் தான் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷா. நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப்பை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஒரே ஆண்டில் விவாகரத்து  செய்துகொண்டார்.

.

No comments:

Post a Comment