Sunday 25 August 2019

A.G .RATNAMALA , PLAYBACK SINGER




A.G .RATNAMALA , PLAYBACK SINGER



ஏ. ஜி. ரத்னமாலா ஒரு இந்திய நாடக நடிகையும், திரைப்படப் பின்னணிப் பாடகியுமாவார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500 க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.[1] 
நாடக நடிகையாக

எம். ஜி. ஆரின் இன்பக் கனவு நாடகத்தில் எம். ஜி. ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். என் தங்கை திரைப்படமாக வருமுன் நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. நாடகத்தில் சிவாஜி கணேசன் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்தார். அவரின் தங்கையாக ரத்னமாலா நடித்தார். எம். ஜி. ஆர். நாடகக் குழுவில் நடிகையாக இருந்து வந்தார். பின்னர் சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்து வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் கட்டபொம்மன் மனைவி ஜக்கம்மாவாக நடித்தார். டி.ஆர். மகாலிங்கத்தின் “ஓர் இரவு” நாடகத்தில் மட்டுமல்லாது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி போன்ற பழம்பெரும் நடிகர்களுடனும் ரத்னமாலா நாடகங்களில் நடித்திருக்கிறார்.[1]

பின்னணிப்பாடகியாக
இசையமைப்பாளர்கள்

கே. வி. மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்புராமன், சி. என். பாண்டுரங்கன், எஸ். வி. வெங்கட்ராமன், ஆர். சுதர்சனம், டி. ஆர். பாப்பா, ஜி. கோவிந்தராஜுலு நாயுடு, டி. ஜி. லிங்கப்பா, எம். எஸ். விஸ்வநாதன், எஸ். தட்சிணாமூர்த்தி, கே. என். தண்டாயுதபாணி பிள்ளை, எஸ். ராஜேஸ்வரராவ், எஸ். அனுமந்தராவ், டி. ஆர். ராமநாதன், ஆர். கோவர்த்தனம், வேதா, ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி, பெண்டியாலா நாகேஸ்வரராவ், கண்டசாலா, எம். எஸ். ஞானமணி போன்ற பல இசையமைப்பாளர்கள் அமைத்த பாடல்களை இவர் பாடியுள்ளார்.[3]

உடன் பாடிய பாடகர்கள்
இவர் தனியாகப் பல பாடல்கள் பாடியுள்ளார். அத்துடன் வேறு பாடகர்களுடன் இணையாகவும், குழுவாகவும் பல பாடல்கள் பாடியுள்ளார். முன்னணிப் பாடகர்களான டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சி. எஸ். ஜெயராமன் ஆகியோருடனும் இசையமைப்பாளர்களான சி. ஆர். சுப்புராமன், ஜி. கே. வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார். பல நகைச்சுவைப் பாடல்களை எஸ். சி. கிருஷ்ணன், ஜே. பி. சந்திரபாபு, ஏ. எல். ராகவன், ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார். மற்றும், திருச்சி லோகநாதன், கே. செல்லமுத்து, சி. எஸ். பாண்டியன், எஸ். வி. பொன்னுசாமி, வி. டி. ராஜகோபாலன், எம். சத்யம், பித்தாபுரம் நாகேஸ்வரராவ், கே. ஹெச். ரெட்டி போன்றோருடனும் பல பாடல்கள் பாடியுள்ளார். ஆண் பாடகர்கள் தவிர பெண் பாடகிகளோடும் சேர்ந்து பல பாடல்கள் பாடியுள்ளார். கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா, பி. லீலா, எம். எல். வசந்தகுமாரி, பி. பானுமதி, ஜிக்கி, எம். எஸ். ராஜேஸ்வரி, டி. வி. ரத்தினம், கே. ராணி, சூலமங்கலம் ராஜலட்சுமி, பி. ஏ. பெரியநாயகி, யு. ஆர். சந்திரா, உடுதா சரோஜினி, பத்மா போன்ற பாடகியருடன் இவர் சேர்ந்து பாடல்கள் பாடியுள்ளார்.[4]

இறப்பு
ஏ. ஜி. ரத்னமாலா 2007 ஆம் ஆண்டு ஜூன் 3-ந் திகதி இதய நோய் காரணமாக தனது 76 ஆவது வயதில் சென்னை தியாகராய நகரிலிருந்த தமது வீட்டில் காலமானார்.[1]






சிவாஜியின் மனைவி ரத்னமாலா நாடக நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகி

சிவாஜியின் மனைவி கமலாம்மா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா?
அந்தப் பெண்மணியின் பெயர் ரத்னமாலா சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி அவர் வீட்டு வாசலில் ‘ரத்னமாலா கணேசன்’ என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது. அந்த கணேசன் ஜெமினி கணேசனாக இருக்குமோ என்று பலர் குழம்பியிருக்கிறார்கள். இல்லை, அது சிவாஜி கணேசனைக் குறிப்பதுதான்.
ரத்னமாலா ஒரு நாடக நடிகை. ‘என் தங்கை’ படத்தில் எம். ஜி. ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ. வி. சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம். ஜி. ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான். ‘என் தங்கை’ நாடக ரிகர்சல் எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார் என்று எம். ஜி. ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம். விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப்படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.
‘இன்பக் கனவு’ நாடகத்தில் எம். ஜி. ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான்.

அதேபோல ‘வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ். வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா. சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம். ஜி. ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’ ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.
ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல, நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட அவரா என்பீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா...’ பாடலைப்பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே. பி. சந்திரபாபு பாடிய ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும். அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா.
‘அன்னை என்றொரு படம், பி. பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான். அதேபோல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, ‘வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான் அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா. 
சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள். சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள். சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.
கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76 அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதேபோல, எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா அநேகரின் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.



ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்உடன் பாடியவர்/கள்
1950திகம்பர சாமியார்காக்க வேண்டும் கடவுளே நீஜி. ராமநாதன் & எஸ். எம். சுப்பையா நாயுடுயு. ஆர். சந்திரா
1951ராஜாம்பாள்ஒரு தினுசாஎம். எஸ். ஞானமணி
1951தேவகிஹலோ மை டியர் ஹலோஜி. ராமநாதன்திருச்சி லோகநாதன்
டீ டீ சூடான டீஜிக்கி
1952அந்தமான் கைதிலவ் யூ…. ஆசையானேனே உன் மேலேஜி. கோவிந்தராஜுலு நாயுடுஜே. பி. சந்திரபாபு
என் தங்கைகுட் லக் குட்லக்சி. என். பாண்டுரங்கன்சி. எஸ். பாண்டியன்
தர்ம தேவதைஅன்பாய் ஓடி வாடா ஆனந்த கிருஷ்ணாசி. ஆர். சுப்புராமன்சி. ஆர். சுப்புராமன், ஜிக்கி
1953ஜாதகம்ஆண்டவன் நமக்குஆர். கோவர்த்தனம்ஜி. கே. வெங்கடேஷ்
ஜெனோவாசெய்யாமலே செய்வேன் என்றுடி. ஏ. கல்யாணம், எம். எஸ். ஞானமணி & எம். எஸ். விஸ்வநாதன்
ஆசை மகன்அக்கம் பக்கம்வி. தட்சணாமூர்த்திதிருச்சி லோகநாதன்
மருமகள்ஆணுக்கொரு பெண்பிள்ளைஜி. ராமநாதன், சி. ஆர். சுப்புராமன் &விஸ்வநாதன்-ராமமூர்த்திபி. ஏ. பெரியநாயகி, ஏ. பி. கோமளா
1954துளி விஷம்மணமில்லா மலருக்கோர் மகிமையில்லைகே. என். தண்டாயுதபாணி பிள்ளைபி. லீலா
போன மச்சான் திரும்பி வந்தான்பெண்ணை வீட்டில் பூட்டிசி. என். பாண்டுரங்கன் & எம். எஸ். விஸ்வநாதன்பி. லீலா
கொடுத்துடு நீயா கொடுத்துடுகே. செல்லமுத்து
1955நல்ல தங்கைமாப்பிள்ளை மக்கு மாப்பிள்ளைஜி. ராமநாதன்பி. லீலா
நல்ல தங்காள்கோமள செழுந்தாமரை எழில் மேவியஜி. ராமநாதன்பி. லீலா, ஏ. பி. கோமளா, டி. வி. ரத்தினம், உடுதா சரோஜினி
மங்கையர் திலகம்புரிந்து கொள்ளவில்லை இன்னும்எஸ். தட்சணாமூர்த்திஎஸ். சி. கிருஷ்ணன்
மகேஸ்வரிசொன்னா போதும் கண்ணாலேஜி. ராமநாதன்எஸ். சி. கிருஷ்ணன்
ஜனக்கு ஜனக்கு ஜிஞ்ஜனக்கு
முந்தி முந்தி விநாயகனே
ஆகாய வீதியிலே அண்ணாந்து பாத்தபடி
உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா
குலேபகாவலிபாராண்ட மன்னரெல்லாம்.... அச்சு நிமிர்ந்த வண்டிவிஸ்வநாதன்-ராமமூர்த்திஜே. பி. சந்திரபாபு
காவேரிகாவேரித் தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம்ஜி. ராமநாதன் & விஸ்வநாதன்-ராமமூர்த்திபி. லீலா
டாக்டர் சாவித்திரிமாயி மகமாயி…. ஆதி பரமேஸ்வரியேஜி. ராமநாதன்டி. எம். சௌந்தரராஜன்
1956தாய்க்குப்பின் தாரம்விட்டதடி ஆசைகே. வி. மகாதேவன்எஸ். சி. கிருஷ்ணன்
கந்தா வரம் தந்தருள்வான் திருச்செந்தூரில்
ரம்பையின் காதல்காட்டுவெள்ளம் நீயேடி. ஆர். பாப்பாகே. ஹெச். ரெட்டி
போடு டக்கு முக்கு டக்கு தாளம்எஸ். சி. கிருஷ்ணன்
சதாரம்எங்கும் ஒளி வீசுதே எனைத் தேடிஜி. ராமநாதன்பி. பானுமதி, ஏ. பி. கோமளா
அன்னையே காளியம்மா ஈஸ்வரிடி. எம். சௌந்தரராஜன், வி. டி. ராஜகோபாலன், ஏ. பி. கோமளா
கண்ணின் மணிகள்எதுக்கும் ரெண்டு தேவைஎஸ். வி. வெங்கட்ராமன்உடுதா சரோஜினி
நானே ராஜாஏலேலங்கடிடி. ஆர். ராமநாதன்
எல்லாம் இன்பமயம்வண்டே நீ வா வாகண்டசாலா
1957மக்களைப்பெற்ற மகராசிஅடி தாராபுரம் தாம்புரம்கே. வி. மகாதேவன்எஸ். சி. கிருஷ்ணன்
ஓ மல்லியக்கா ஓ ரோஜாக்காஜிக்கி, ஜமுனாராணி
மணமகன் தேவைபோட்டானே ஒரு போடுதான்ஜி. ராமநாதன்கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா
புதுமைப் பித்தன்ஐயா யாருக்கு வேணும் இந்தஜி. ராமநாதன்
மாமன்னர் அந்த
கடன் வாங்கி கல்யாணம்காசிக்குப் போனே ராமாஹரேஎஸ். ராஜேஸ்வரராவ்எஸ். சி. கிருஷ்ணன்
அக்கா மகளே….தூத்துக்குடி சாத்துக்குடி
ஆரவல்லிஇது செங்கம்மா அது அங்கம்மாஜி. ராமநாதன்சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன்
கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதாடி. வி. ரத்தினம்
கற்புக்கரசிநல்வாக்கு நீ கொடடிஜி. ராமநாதன்எஸ். சி. கிருஷ்ணன்
எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதேஏ. பி. கோமளா, கே. ஜமுனாராணி
மகாதேவிஉன் திருமுகத்தெ ஒருமுகமா திருப்புவிஸ்வநாதன்-ராமமூர்த்திஜே. பி. சந்திரபாபு
தந்தான தாளம் போடுவோம்
ராணி லலிதாங்கிஆடுங்க பாடுங்க ஓடுறீங்கஜி. ராமநாதன்பி. லீலா
பஜனைக்கு நாழிகைவி. டி. ராஜகோபாலன்
1958நீலமலைத் திருடன்வெத்தல பாக்கு சுண்ணாம்புகே. வி. மகாதேவன்எஸ். சி. கிருஷ்ணன்
ஒண்ணுக்கு ரெண்டாச்சு உபத்திரவத்துக்கு
நீலாவுக்கு நெறஞ்ச மனசுசைக்கிள் வருது சைக்கிள் வருதுகே. வி. மகாதேவன்திருச்சி லோகநாதன்
சிங்கார சங்கீதமேசூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி
காத்தவராயன்கும்கார குப்பண்ணாஜி. ராமநாதன்எஸ். சி. கிருஷ்ணன்
சங்கிலி ஜிங்கிலி.... வாராண்டி வாராண்டி குட்டிச்சாத்தான்ஜே. பி. சந்திரபாபு, எஸ். சி. கிருஷ்ணன், டி. எம். சௌந்தரராஜன்
வெற்றியே அருள் அம்மாகே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா
அன்னையின் ஆணைஎன்ன சாமி எதுக்கு சும்மா பாக்கிறேஎஸ். எம். சுப்பையா நாயுடு
பெற்ற மகனை விற்ற அன்னைதில் ரப்சா பண்றாங்கோவிஸ்வநாதன்-ராமமூர்த்திஎஸ். சி. கிருஷ்ணன்
சாரங்கதாராஎட்டி எட்டி பாக்குதடி தோப்பிலேஜி. ராமநாதன்
குடும்ப கௌரவம்வெறும் வேஷம்விஸ்வநாதன்-ராமமூர்த்திஏ. பி. கோமளா
காத்திருக்கோம்ஏ. பி. கோமளா
சைனா யப்பான் ரங்கோன்ஏ. பி. கோமளா
மாங்கல்ய பாக்கியம்அனுசூயா கதா காலட்சேபம்ஜி. ராமநாதன்சீர்காழி கோவிந்தராஜன், எம். எல். வசந்தகுமாரி, ஏ. பி. கோமளா, கே. ஜமுனாராணி
பாடுபட்டாலே மச்சான்எம். எல். வசந்தகுமாரி, கே. ஜமுனாராணி
ஒன்றே மாந்தர் குலம்சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி
இமய மலையை இடது கையால்கே. ஜமுனாராணி
தங்கமலை ரகசியம்காட்டு ராஜா ஐயா காட்டு ராஜாடி. ஜி. லிங்கப்பாகே. ராணி
வரவேணும் வரவேணும்ஏ. பி. கோமளா, கே. ராணி
பூலோக ரம்பைவண்ண மயில் வேல் முருகன்சி. என். பாண்டுரங்கன்கே. ராணி
ஓம் என்ற பிரணவத்தின்…. கள்ளி மலை குறிஞ்சிநிலம்திருச்சி லோகநாதன், ஜிக்கி, எஸ். சி. கிருஷ்ணன்
சம்பூர்ண ராமாயணம்ஸ்ரீ ராமச்சந்திரன் மகுடாபிசேக திருக்கோலம்கே. வி. மகாதேவன்ஏ. பி. கோமளா, கே. ராணி, உடுதா சரோஜினி
மண்ணெல்லாம் பொன்னாகும் ராமன் வரவாலேஏ. பி. கோமளா, எஸ். சி. கிருஷ்ணன், கே. ராணி, உடுதா சரோஜினி, பத்மா
திருமணம்வை ராஜா வைஎஸ். எம். சுப்பையா நாயுடு & டி. ஜி. லிங்கப்பாசீர்காழி கோவிந்தராஜன்
மாய மனிதன்போக்குக் காட்டி போறவளே பொன்னம்மாஜி. கோவிந்தராஜுலு நாயுடுஏ. எல். ராகவன்
1959வண்ணக்கிளிசாத்துகுடி சாறு தானா பாத்துக்குடிகே. வி. மகாதேவன்எஸ். சி. கிருஷ்ணன்
தங்கப்பதுமைபூமாலை போட்டுப் போன மாமாவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
மனைவியே மனிதனின் மாணிக்கம்காத்திருப்போம் கை பிடிப்போம் கண்ணேஎஸ். அனுமந்தராவ்திருச்சி லோகநாதன்
வீரபாண்டிய கட்டபொம்மன்ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டிஜி. ராமநாதன்கே. ஜமுனாராணி, வி. டி. ராஜகோபாலன், திருச்சி லோகநாதன்
போகாதே போகாதே என் கணவா
எங்கள் குலதேவிபாலும் பழமிருக்க பக்கத்தில நானிருக்ககே. வி. மகாதேவன்
மின்னல் வீரன்வலையை வீசும்சி. தங்கப்பன்
சுமங்கலிஅக்கா மகளே சுட்டி பொண்ணேஎம். ரங்காராவ்எஸ். சி. கிருஷ்ணன்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்கோபிக்கிறாப்புல கோபிச்சுக்காதே கண்ணுகே. வி. மகாதேவன்
1960குறவஞ்சிசெங்கயல் வண்டு கலிங் கலிங் என்றுடி. ஆர். பாப்பாசி. எஸ். ஜெயராமன், பி. லீலா, ஏ. பி. கோமளா
1961திருடாதேஅச்சா பகுத் அச்சாஎஸ். எம். சுப்பையா நாயுடுஎஸ். சி. கிருஷ்ணன்
அந்தி சாயும் நேரத்திலேஏ. எல். ராகவன்
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளேகோட்டும் சூட்டும்பெண்டியாலா நாகேஸ்வரராவ்எஸ். சி. கிருஷ்ணன்
மருத நாட்டு வீரன்செய்ததொரு சந்தேகம் கேளு கண்மணிஎஸ். வி. வெங்கட்ராமன்ஏ. எல். ராகவன்
குமார ராஜாஅங்காடிக்கடை வீதியிலேடி. ஆர். பாப்பாசூலமங்கலம் ராஜலட்சுமி
1962இந்திரா என் செல்வம்காதலுக்கு காலேஜு எங்கே இருக்குசி. என். பாண்டுரங்கன் & ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரிஎஸ். சி. கிருஷ்ணன்
1963கொஞ்சும் குமரிதோப்புல ஒரு நாள் சிரித்தாயடிவேதாதிருச்சி லோகநாதன்
1963கலை அரசிகெட்டாலும் கெட்டது இப்படிக் கெட்டிடக் கூடாதுகே. வி. மகாதேவன்
1963குபேரத் தீவுகண்கண்ட செல்வம் இங்கே பாருசி. என். பாண்டுரங்கன்
1964சித்ராங்கிஒய்யாரி பாமா உனக்காக வாம்மாவேதாஎஸ். வி. பொன்னுசாமி
உனக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணு இருக்குது மனசுதிருச்சி லோகநாதன்












No comments:

Post a Comment