Monday 18 November 2019

NAYANTHARA , LADY SUPER STAR BORN 1984 ,NOVEMBER 18

NAYANTHARA , LADY SUPER STAR 
BORN 1984 ,NOVEMBER 18



நயன்தாரா (பிறப்பு - நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1][2][3] 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். ஏனென்றால் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக இவர் கவர்ச்சித் தோற்றத்தில் நடித்தாலும் தற்போதெல்லாம் கவர்ச்சியை தவிர்த்து கதைக்குத் தேவையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

 தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை நயன்தாரா, அழகான தோற்றம், அபரிமிதமான திறமை மற்றும் சரியான உடல்வாகு ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட  அரிய பிரபலங்களில் ஒருவர்.


இந்த எவர் கிரீன் நடிகை சமீபத்தில் ‘வோக்’ பத்திரிகைக்கு போட்டோஷூட்டுடன் இண்டர்வியூவும் கொடுத்தார். அந்த ஃபோட்டோ ஷூட்டின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை சமூக ஊடகங்களில் நயனின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்
இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நயன்தாரா நடித்திருக்கும் ‘பிகில்’ திரைப்படம் வெளியாகிறது. நடிகர் விஜய் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். வரும் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாவதாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு பொங்கலுக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’, மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கும் ‘நெற்றிகண்’ ஆகியப் படங்கள் நயன்தாராவின் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது!

நடிகை நயன்தாரா தனது தமிழ் திரை வாழ்க்கையை ‘ஐயா’ படம் மூலம் தொடங்கினார். உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம் நயன்தாராவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும், அதிக ஊதியம் பெறும் நடிகையாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார் நயன்.  அதோடு, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நடித்து விட்டார். அதே நேரத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், ரேடியோ ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் நயன்தாரா, முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்தது, தான் செய்த பெரும் தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். சித்ரா என்ற தனது பாத்திரம் அசின் நடித்த  கதாநாயகி கதாபாத்திரமான கல்பனாவுக்கு இணையாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக கூறிய நயன்தாரா, படத்தைப் பார்த்தபோது, தான் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தனது கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.


இருப்பினும் இத்தனை ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

”உன்னை சந்தித்த பின் எல்லாமே இனிமை தான்” - நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம்!
ரவுடி பிக்சர்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், இறுதியாக சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 17 படத்தின் வேலைகளிலும் பிஸியாக உள்ளார். அதோடு, இயக்குநர்கள் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா ஆகியோருடன் இணைந்து நெட்ஃப்ளிக்ஸிற்காக ஆந்தாலஜி வெப் சிரீஸ் ஒன்றையும் இயக்குகிறார்.
அதோடு தயாரிப்பாளராக மாறி, ரவுடி பிக்சர்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். மிலிந்த் ராவ் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் ‘சேக்ரட் கேம்ஸ்’ புகழ் நடிகர் லூக் கென்னி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் விக்னேஷுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த, ‘நானும் ரவுடி தான்’ படம் வெளியாகி 4 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதை தனது இன்ஸ்டாகிராமில், “நன்றி தங்கமே!  உங்களை சந்தித்தபின் வாழ்க்கை என்னை ஆசீர்வதித்து, இனிமையான தருணங்களை மட்டுமே கொடுத்திருக்கிறது! இந்த நாளுக்கு நன்றி! இந்த படத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.. இதனால் தான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க, வாய்ப்பு கிடைத்தது! கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக !” என நயனுடன் தான் இருக்கும் படத்தைப் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ்!

”நான் ரொம்ப பிரைவேட்டான ஆளு” - 10 வருடத்திற்குப் பிறகு மனம் திறந்த நயன்தாரா
நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகம் அறிய விரும்பவில்லை. பல முறை, நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன், தவறாக சித்தரிக்கப்பட்டேன்.

நடிகை நயன்தாரா மீடியாக்களுக்கு நேர்காணல்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்விப்பதில்லை என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் ’வோக் இதழ்’ இவரை தங்கள் பத்திரிகை அட்டையில் இடம் பெறச் செய்து, “10 ஆண்டுகளில் குறிப்பிடத் தகுந்த நேர்காணல்” என்ற தலைப்பில் நேர்க்காணலும் செய்துள்ளது. அதில் ‘ஆண்களுக்கு ஏன் எல்லா சக்தியும் எப்போதும் இருக்க வேண்டும்?’ போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார் நயன்.

தனது தனி படங்களில் எல்லாவற்றையும் தானே முடிவெடுப்பதாக குறிப்பிட்ட நயன்தாரா, “கணவன் அல்லது ஆண் நண்பர்களைச் சுற்றி வரும் கதைகளை இயக்குநர்கள் கொண்டு வரும்போது, அது கட்டாயமா என்று நான் எப்போதும் கேட்பேன்” என்று கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இது தான் தனது முதல் நேர்காணல் என்றும் அவர் குறிப்பிட்டார். “நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகம் அறிய விரும்பவில்லை. பல முறை, நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன், தவறாக சித்தரிக்கப்பட்டேன். இதை கையாள மிகவும் கடினமாக இருந்தது. நடிப்பதும் எனது எனது வேலை, என் படங்கள் பேசும்” என்றார்.



மேலும் தொடர்ந்த நயன், “நான் 2011-ல் படங்களிலிருந்து விலகி இருந்தபோது, எனது பாடல்களும் திரைப்படங்களும் ஒளிபரப்பட்ட சேனல்களைக் கூட நான் பார்க்கவில்லை” என்று கூறினார். அதே சமயம், சர்ச்சைகளுக்கு,  தேவைப்படும்போது மட்டுமே பதிலளிப்பதாக நயன்தாரா கூறினார். “நான் எப்போதும் பிஸியாக இருப்பேன், எல்லா நேரத்திலும் படப்பிடிப்பில் இருப்பேன். வெற்றியை என் தலைக்கு ஏற்றிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்கிறேன். நான் மிகவும் தனிப்பட்ட நபர்” என்றும் குறிப்பிட்டார்.


சமீபத்தில், “லவ் ஆக்சன் டிராமா” படத்தில், நிவின் பாலிக்கு ஜோடியாகவும், ”சை ரா நரசிம்ம ரெட்டி”யிலும் நடித்திருந்தார் நயன்தாரா. மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் ”தர்பார்” மற்றும் விஜய்யின் ”பிகில்” ஆகியப் படங்களின் ரிலீஸுக்காகவும் காத்திருக்கிறார்.

No comments:

Post a Comment