Saturday 9 November 2019

PRIYANKA TRIVEDI , INDIAN ACTRESS BORN 1977 NOVEMBER 9



PRIYANKA TRIVEDI , INDIAN ACTRESS 
BORN 1977 NOVEMBER 9



Priyanka Trivedi is an Indian actress born 1977 ,November 9 who has acted in many films in Hindi,Kannada,Tamil,Telugu and Bengali. She has won recognition for her role in the Bengali hit “saathi” which set new trends in the Bengali film industry.She is widely popular in Tamil and Kannada cinema..esp for her portrayal of a sweet Brahmin girl in “raja” with Ajith kumar.She won critical acclaim for her role in Malla and h20. She is married to Kannada superstar Upendra and is currently producing “Uppi2″


Priyanka Upendra , earlier known as Priyanka Trivedi won Miss Kolkata title in 1996. She has done various modelling assignments afterwards and was introduced in the Bengali film “Yoddha”. She then worked with the critically acclaimed film director Basu Chaterjee in ‘Hothat Brishti”

She is widely popular in Kollywood and is regarded as one of the top actors in the field.


She won Miss Kolkata title in 1996


Personal life


Priyanka Trivedi is married to the famous Kannada cinema director, actor and script writer Upendra. The couple have a son Ayush born in 2007 and a daughter Aishwarya born in November 2008.

சென்னை: ‘பிரபல நடிகரின் மனைவி என்பதில் பெருமை இல்லை’ என்றார் பிரியங்கா திரிவேதி. ‘ராஜ்ஜியம்’, ‘காதல் சடுகுடு’, ‘ராஜா’, ‘ஐஸ்’, ‘ஜனனம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரியங்கா திரிவேதி. இவர் பிரபல கன்னட நடிகர் உபேந்திராவை மணந்தார். அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது சூப்பர் ஸ்டார் மனைவியானது சந்தோஷம். அவருடன் வாழும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். அதேநேரம் அவருக்கு சமமாக என்னுடைய அடையாளத்தை வெளிக்காட்டுவது என்பது கடினம்.

உபேந்திராவை மணப்பதற்கு முன் என்னை நடிகையாக அடையாளம் கண்டுகொண்டிருந்தார்கள். இப்போது நடிகையாக என்னை அடையாளம் காட்டிக்கொள்வது சவாலாக உள்ளது. பிரபல நடிகரின் மனைவி என்று மட்டும் என்னை சொல்லாமல் நடிகை என்ற அடையாளத்தை மீண்டும் சம்பாதிக்க எண்ணுகிறேன். நாங்கள் இருவரும் ரொம்பவும் வித்தியாசமானவர்கள். அதுதான் எங்கள் வாழ்க்கையை இனிமையாக்கி இருக்கிறது. உபேந்திரா தொழில் பக்தி நிறைந்தவர். வேலையை தவிர வேறு எதிலும் அவர் அதிக கவனம் செலுத்த மாட்டார். நடிப்புதான் அவர் மனம் முழுவதும் நிரம்பி இருக்கும். அதன்பிறகு அவர் வாழ்வில் நான் முழுமையாக நிரம்பி இருக்கிறேன்.

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் அஜித் பட ஹீரோயின்!
அஜித் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா திரிவேதி, 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார்.


அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராஜா’. இந்தப் படத்தில் அஜித்தின் காதலியாக நடித்தவர் பிரியங்கா திரிவேதி. அதையடுத்து விக்ரம் ஜோடியாக ‘காதல் சடுகுடு’ மற்றும் அருண் விஜய்யுடன் ‘ஜனனம்’ ஆகிய படங்களில் நடித்த அவர், கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் ஐக்கியமானார்.

இந்நிலையில் தற்போது 15 வருடங்கள் கழித்து பிரியங்கா திரிவேதி மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைகிறார். பிக்பாஸ் மஹத் மற்றும் யாஷிகா ஜோடியாக நடிக்கும் படத்தில் பிரியங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி வருகிறது.

வெங்கடேஷ் இயக்கத்தின், தமன் இசையில் தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது


சென்னை::பிரியங்கா திரிவேதியை ஞாபகம் இருக்கிறதா? ‘ராஜ்ஜியம்’, ‘ராஜா’, ‘காதல் சடுகுடு’ படங்களில் நடித்தவர். இவர் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் நடிப்பை கைகழுவவில்லை. அடுத்து படம் இயக்க திட்டமிட்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியது:‘எனிமி’ இந்தி படத்தில் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கவுரவ வேடத்தில் நடித்தேன். ஓய்வு நேரங்களில் சில கதைகள் எழுதினேன். ஆக்ஷன் கலந்த காதல் கதை ஒன்று ரெடியாக இருக்கிறது. ஒரு படம் இயக்கவும் முடிவு செய்திருக்கிறேன்.


தற்போது எனது பிள்ளைகள் வளர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உலக விஷயங்கள் எவ்வளவு கற்க விரும்புகிறார்களோ அந்தளவுக்கு கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். புதிய இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்வேன். குறிப்பாக சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களுக்கு சென்றால் அவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய புதிய பரிமாணங்களை அறியும் வாய்ப்பு கிடைக்கும்.

No comments:

Post a Comment