Tuesday 12 November 2019

TIPPU SUTAN, DICTATOR AND VIOLENT RULER OF MYSORE





TIPPU SUTAN, DICTATOR AND 
VIOLENT RULER OF MYSORE






வரலாறு என்ன சொல்கிறது? முதலில் கிறிஸ்தவப் பாதிரியாரின் குறிப்பிலிருந்து தொடங்குவோம். கிறிஸ்தவ, முஸ்லீம்கள் சொன்னால் நமக்கு அது வேத வாக்கு ஆயிற்றே! அதுவும் வெள்ளைக்கார பாதிரியென்றால் கேட்கவே வேண்டம்! சூரியன் மேற்கே உதிக்கிறது என்றாலும் அது சரியே!. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற அக்மார்க் வெள்ளைக்கார ஐரோப்பிய பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco) தனது கிழக்கிந்தியப் பயணம் ( Voyage to East India) என்ற புத்தகத்தில் திப்புவின் கொடுமைகளை எப்படி விவரிக்கிறார்?

Tipu_Sultan_BL”முதலில் 30000 காட்டுமிராண்டிகள் கொண்ட ஒரு படை கண்ணில் கண்ட அனைவரையும் கொன்று குவித்தது. அதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்சு கமாண்டர் M. Lally தலைமையின் கீழ் ஒரு field gun unit வந்தது. திப்பு சுல்தான் ஒரு யானை மீது அமர்ந்து வந்தான், அவனைத் தொடர்ந்து மேலும் 30000 பேர்கள் கொண்ட ஒரு படை தொடர்ந்தது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் கோழிக்கோட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டனர். முதலில் தாய்மார்கள் தூக்கிலிடப்பட்டார்கள், அவர்கள் கழுத்துகளில் குழந்தைகள் தொங்க விடப்பட்டனர். காட்டுமிராண்டியான திப்பு சுல்தான் நிர்வாணமான கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களையும் யானையின் கால்களில் கட்டி, அந்த யானைகளை நகரச் செய்யும் போது, ஆதரவற்ற அந்த அபலைகள், கடைசியில் சின்னாபின்னமானார்கள். கோயில்களும் சர்ச்சுகளும் எரிக்கப்பட்டன, அசுத்தப்படுத்தப் பட்டு, அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ மற்றும் ஹிந்துப் பெண்கள் முகம்மதியர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர், அதே போல அவர்களும் முகம்மதியப் பெண்டிரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டனர். எந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்தார்களோ, அவர்கள் அந்த இடத்தி லேயே தூக்கிலாடினார்கள். மேற்கூறிய சோக நிகழ்வுகள் பற்றிய சேதிகள் எல்லாம், திப்புவின் படையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், ஆலுவாவுக்கு(Aluva) அருகே இருக்கும் வரப்புழாவுக்கு வந்த போது, தெரிவித்தவை; இது தான் Carmichael Christian Missionனின் தலைமையிடம். நானே கூட படகுகள் மூலம் பல அபலைகள் தப்ப உதவினேன்.

(K.P. Padmanabha menonனின் cochin history பக்கம் 573)



பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco)  பயணக் குறிப்பு எழுதுபவர். அவர் அங்கி மாட்டினாரா?, பாவ மன்னிப்பு கொடுத்தாரா என்றெல்லாம் நம் பாவிகள் கேட்கக் கூடும். அதனால் மேலும் இரண்டு பாதிரிகளின் குறிப்பை பார்ப்போம். அப்படியாவது இந்தப் பாவிகள் நம்புவார்களா? அல்லது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகம் என்பதால் பாதிரிகளை திட்டுவார்களா? பாதிரிகளை திட்டினால் ரோமானிய கடாட்சம் கிடைக்காது என்று அஞ்சுவார்களா? அங்கியுடன் மதமாற்றம் செய்ய வந்த ஜெர்மென் மிஷனரி கண்டெஸ்ட் (Guntest) என்ன சொல்கிறார்:

“60000 பேர்கள் கொண்ட படையோடு திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து  அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது”

இதையே மற்றொரு கிறிஸ்தவரான பார்க்ஹர்ஸ்ட் (CA Parkhurst ) உறுதி செய்கிறார்.

“கிட்டத்தட்ட மொத்த கோழிக்கோடும் தரை மட்டமாக்கப்பட்டது”

ஆமேன் சொன்ன பின் அப்பீல் உண்டா? கிறிஸ்தவர்களே சொல்லிவிட்டார்கள்! இன்னுமா சந்தேகம்? இருப்பினும் மதச்சார்பற்ற வரலாற்றாளர்களின் கருத்தையும் கொஞ்சம் படித்துப் பார்ப்போமே!



Gazetteer of Keralaவின் முன்னாள் ஆசிரியரும், பிரபலமான வரலாற்று ஆசிரியருமான திரு.ஸ்ரீதர மேனோன் (A. Sreedhara Menon) , திப்புவின் கேரளப் படையெடுப்பின் பெரு நாசம் பற்றி துல்லியமாக வர்ணித்திருக்கிறார். அவை என்ன ? படித்த பின் அவரையும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆக்கி விடாதீர்கள் தோழர்களே! பாவம் பொழச்சுப் போட்டும்!

”ஹிந்துக்கள், குறிப்பாக இஸ்லாமிய கொடுமைகளை எதிர்த்த நாயர்களும், தளபதிகளும், திப்புவின் கோபத்திற்கு பிரதான இலக்கானார்கள். நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள், அவர்களின் பாரம்பரியமான சமுதாய சலுகைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், நாயர்களும், ஹிந்துக்களின் மேல்தட்டு மக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, அவர்களின் முன்னோர் இல்லங்களிலிருந்து விரட்டப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுந்தார்கள், நூற்றுக்கணக்கானோர் திப்புவின் கொடுமைகளிலிருந்து தப்ப காடுகளிலும் மலைகளிலும் தஞ்சம் புகுந்தார்கள், இது அவர்களின் பாதுகாப்பு உணர்வை முழுவதுமாக உலுக்கி விட்டது”.



இங்கிலீஷ்காரன் வரலாறும், கால்டுவெல்லும், மெக்காலேயையும் குரு முதல்வராகக் கொண்டு, இந்திய சிந்தனைகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் புறம் தள்ளும் சிந்தனைச் சிற்பிகளுக்கு,  மங்களூரில் நிறுத்தப்பட்டிருந்த ப்ரிட்டிஷ் ராணுவத்தின் கர்னல் புல்லர்டன் (fullarton) என்ற ஆங்கிலேயரின் அதிகாரபூர்வமான அறிக்கை:

”ஜாமோரின் அரசனாலும், அவரது ஹிந்து படை வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்த பாலக்காடு கோட்டை முற்றுகையின் போது, 1783ம் ஆண்டு மிக கொடூரமான செயல்களை பிராமணர்கள் மீது கட்டவிழ்த்து விட்டான் திப்பு சுல்தான். திப்புவின் படை வீரர்கள் தினமும், அப்பாவி பிராமணர்களின் தலைகளை, ஜாமோரின் கோட்டையில் உள்ளவர்கள் பார்வையில் படுமாறு பிளந்தார்கள். அந்த கோரங்களை காணச் சகியாமலும், அப்பாவி பிராமணர்களின் படுகொலையை தடுக்கும் வண்ணமும் ஜாமோரின் பாலக்கோடு கோட்டையை கைவிட நேர்ந்தது”.



சொன்னால் நம்பமாட்டோம். ஆவணம் இருக்கிறதா என்று ஆணவமாகக் கேட்பார்கள் நம் உண்மை விரும்பி தோழர்களும், பகுத்தறிவுப் பெட்டகங்களும். பல்வேறு ராணுவ பிரிவுகளுக்கு திப்பு அனுப்பிய முதன்மை ஆணை, பாலக்கோடு கோட்டையை ஆங்கிலேயக் கம்பெனி 1790ல் கைப்பற்றிய போது ஆவணங்களில் கண்டெடுக்கப்பட்டது. இது malabar manualன் பக்கம் 510ல் அடிக்குறிப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

“இது அனைத்து ராணுவப் பிரிவுகளுக்கும் என்ன அறிவுறுத்தியது என்றால், மாவட்டத்தில் உள்ள அனைவரும் இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும், அவர்கள் மறைவிடங்களிலிருந்து அவர்களை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் அனைவரையும் இஸ்லாத்துக்கு மாற்ற, உண்மையோ, பொய்யோ, ஏய்ப்போ, பலப் பிரயோகமோ, எதை வேண்டுமானாலும் கையாள வேண்டும்”.



திப்புவுக்கு மணிமண்டபம் வைக்க ஒரு தகுதி உள்ளது என்று நம் திப்புவின் பிரஜைகள் வாதிட ஒரு காரணம் இருக்கிறது.  பார்ப்பானை கொன்றான் ! தீபாவளியை ஒழித்தான்! சமஸ்கிருத கல்விச் சாலையை அழித்தான்! இதைவிட வேறு என்ன வேண்டும் ? இத்தகவலை எனது நண்பரும், மூத்த ஆராய்ச்சியாளருமான திருமதி.ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் எனக்கு அனுப்பினார். அதை  இந்த இணைப்பில் காணலாம் (http://groups.yahoo.com/group/ramanuja/message/4857).

tipu_villain_or_hero“அண்மைக்கால வரலாற்றில், யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை  ஆளப்பட்டு வந்தது. அவரது வம்ஸத்தவர் பல நீர் நிலைகளை ஏற்படுத்தினார்கள் – கல்யாணிகள் – அவைமிக திறன் மிக்கவையாகவும் அழகாகவும் இருந்தன. அங்கே ஒரு சிறிய அளவிலான பண்டித குழுவினர் தழைத்தார்கள். 19ம் நூற்றாண்டின் முற்பகுதில், திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது, அவர்களில் பெரும்பாலானோர், மாண்டயம் ஐயங்கார்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். சம்ஸ்க்ருத பாண்டித்யம்தான் அவர்களின் பலமாக இருந்தது. (இன்று வரை மேல்கோட்டையில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.) அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது, கல்யாணிகள் நாசமாகின, நீர் பற்றாக்குறை பீடித்தது, குன்றுகள் வறண்டன, சம்ஸ்க்ருதம் தனது இல்லங்களில் ஒன்றை இழந்தது.”


அப்பாடா! இதற்காகவாவது மணிமண்டபம் கட்ட வேண்டாமா? வீரமணி மண்டபத்தில் விருந்து வைப்பார்! கவலை வேண்டாம்!



மயக்கமற்ற நிலையில் ஒரு மனிதனாகப் பார்த்தால், இப்படி, ஆண், பெண், பச்சிளங்குழந்தைகள் என்று பாகுபாடில்லாமல் மக்களை சித்திரவதை செய்து கொன்று குவித்து, சொத்துக்களை சூறையாடி, வாள் முனையில் லட்சக்கணக்கானோரை மதமாற்றிய  திப்பு மற்றும் ஹைதர் அலியின் கொடுமைகளை ஏகாதிபத்திய அடிமைத்தள எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்ல முடியுமா?



வரலாறு என்பது, ஆதிக்க வர்க்கம் அவர்களுக்கு சாதகமாக எழுதுவது என்று பாடம் சொல்லும் கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையில் உதித்த மணிமண்டபமாயிற்றே? அதனால் இதை பூஷ்வாக்களின் ஒப்பாரி என்று கூடச்சொல்வார்கள். அப்படியென்றால் முஸ்லீம்களின் வரலாற்றுக் குறிப்பு ஏதேனும் உள்ளதா? முஸ்லீம்கள் சொன்னால் இந்த நாட்டில் எதை வேண்டுமென்றாலும் நம்பலாமே! அவுரங்கசீபின் கொடுமைகளை சித்தரிக்கும் கண்காட்சி, முஸ்லீம்கள் அவுரங்கசீப் ’நல்லவன்’ – னு சொன்னதால் தானே மார்ச்சு 6, 2008 அன்று சென்னையில் நிறுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் முஸ்லீம்களின் குறிப்பை இந்த அறிவை தின்று உயிர் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?



மைசூர் ராணுவத்தின் ஒரு இஸ்லாமிய அதிகாரி  இஸ்லாமிய கொடுமைகளை தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார், அதனை திப்புவின் 11வது மகனும் உயிர் தப்பிய ஒரே வாரிசுமான குலாம் முகம்மது சுருக்கமாக எழுதியுள்ளார். (இந்த இளவரசர் குலாம் முகம்மது, திப்பு சுல்தான் 1799ல் இறந்த  பின்னர் ப்ரிட்டிஷாரால் கொல்கொத்தாவுக்கு நாடுகடத்தப்பட்டார்) இதோ அந்தப் பொன் எழுத்துக்கள் உங்கள் பார்வைக்கு…

“4 காத தொலைவு வரை தெருக்களில் எதையும் காணவில்லை, ஹிந்துக்களின் சிதறிய உறுப்புகளையும், சிதைவடைந்த உடல்களையும் தவிர எதையும் பார்க்க முடியவில்லை. நாயர்களின் (ஹிந்துக்கள்) நாடு, பொதுவான கிலியால் பீடிக்கப்பட்டிருந்தது, அதனை ஹைதர் அலிகானின் படையெடுக்கும் குதிரைப்படையின் பின்னே வந்த மாப்பிள்ளைகளின் கொடூரம் மிகவும் அதிகப்படுத்தியது; அவர்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லோரையும் படுகொலை செய்தனர்; கொந்தளித்து வரும் இந்த மாப்பிள்ளைகளின் பெரும்படையின் நடத்தை காரணமாக எந்த எதிர்ப்பும் இல்லாதது மட்டுமல்லாமல், கிராமங்கள், கோட்டைகள், கோவில்கள், மக்களின் அனைத்து வசிப்பிடங்கள் என எல்லாமே ஆளரவமற்று இருந்தன. (பக்கம் 461)

திரும்பிய பக்கமெல்லாம் ஹைதர் அலி கானுக்கு எதிர்ப்பே காணப்படவில்லை; ஒவ்வொரு வசிப்பிடமும் கைவிடப்பட்டு, அதில் வசித்து வந்த பொது மக்கள் பாவம், காடுகளுக்கும், மலைகளுக்கும் தப்பிச் சென்றனர்; அங்கும் அவர்களின் துரதிர்ஷ்டம் துரத்தி வந்தது. பிராமண தூதுவர்களை ஹைதர் அலி கான் காடுகளுக்கு அனுப்பி வைத்து, தான் ஓடிப் போன ஹிந்துக்களை மன்னிப்பதாக வாக்களித்தான். ஆனால் கருணை, மன்னிப்பு என்ற வாக்குக்கு செவி சாய்த்து திரும்பி வந்த அந்த அபலைகளை, வட இந்தியாவின் இஸ்லாமிய கொடுங்கோலனைப் போலவே தூக்கிலிட்டான், அவர்களின் பெண்டிரும், குழந்தைகளும் அடிமைகளாக்கப்பட்டனர் (ப.468)

கேரளத்தை விட்டு அகலும் முன்பாக ஹைதர் அலி கான், நாயர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சமுதாய, அரசியல் உரிமைகளைப் பறிப்பதாக பிரகடனப்படுத்தினான், அவர்கள் ஆயுதங்களை தாங்க முடியாது. இந்த பிரகடனத்தினால், தன்மானம் உள்ள நாயர்களை தலை வணங்கச் செய்ய முடியவில்லை, ஏனென்றால், இத்தகைய அவமானங்களையும், சீர்கேட்டையும் விட மரணமே மேல் என்று நினைத்திருக்கலாம். அதனால் ஹைதர் அலி கான் வேறு ஒரு பிரகடனத்தை பிறப்பித்தான், அதன்படி, எந்த நாயர்கள் இஸ்லாத்தை தழுவ முன் வருகிறார்களோ, அவர்களுக்கு சமுதாய, அரசியல் உரிமைகள் மீட்கப்படுவதோடு, அவர்கள் ஆயுதங்களும் தாங்கலாம் என்று அறிவித்தான். பல பிரபுக்கள் இஸ்லாத்தை தழுவ வேண்டி இருந்தது; ஆனால் கணிசமான பெரும்பகுதியினர் (நாயர்கள், பிரபுக்கள், பிராம்மணர்கள்) இந்த கடைசி பிரகடனத்திற்கு தலைவணங்குவதைக் காட்டிலும், தெற்குப் பகுதியில் இருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுவதையே மேல் என்று கருதினார்கள்”. (பக்கம் 469)



1782 முடிவு வாக்கில் திப்பு மைசூரின் சுல்தானான போது, வடக்கு மலபாரின் அனைத்து ராஜாக்களும், தளபதிகளும் புரட்சி செய்து, சுதந்திரப் பிரகடனம் செய்தார்கள். பிரிட்டிஷாரும் வல்லமை அதிகம் பெற்றவர்களாக இருந்தார்கள். மலபாரை விட்டு ஹைதர் அலி கான் சென்ற பிறகு, மைசூரின் ஆளுமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய சமஸ்தானங்களை மீண்டும் அடக்கி, மீட்டெடுப்பதே திப்புவின் முற்கால ராணுவ செயல்பாடாக இருந்தது. இதுவரை மிகவும் அமைதியான, நேர்மையான பிராமணர்களே, உயர் இடங்களுக்கு தூதுவர்களாக அனுப்பப்பட்டு வந்தார்கள். ஆனால் திப்புவின் ஆணைக்குட்பட்டு, “அவர்கள் பிடிக்கப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டு, இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்கள்” அதனால் அவர்கள் திப்புவுக்கு தூதுவர்களாக செயல்படுவதை ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வாக்களித்த பிரிட்டிஷாருடைய தூதுகளையும் ஏற்று மலபாருக்கு செல்ல மறுத்தார்கள். கோழிக்கோட்டிலிருந்து உறுதியாக தெரிய வந்த தகவல் என்னவென்றால், அங்கே 200 பிராமணர்கள் பிடிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு, இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, மாட்டிறைச்சி புகட்டப்பட்டார்கள், அவர்கள் பாரம்பரியத்துக்கு எதிரான விஷயங்களை செய்ய வைக்கப்பட்டார்கள்” (பக்கம் 507).



இப்படி எழுதிய திப்புவின் மகன், ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டவன். ஆங்கிலேயர்கள் அவனை இப்படி எழுதச் சொல்லியிருப்பார்கள். எழுதிய பேனாவின் மை தொழிலாளர்களின் இரத்தத்தால் உருவானது அதை மார்க்ஸ்தான் முதலில் கண்டுபிடித்தார் என்று கூட ஒரு வாதத்தை இந்த சுல்தான்களின் அடிவருடிகள் முன்வைக்கலாம். அதிர்ஷ்டவசமாக திப்புவின் திருக்கரங்களால் எழுதப்பட்ட சில கடிதங்கள் கிடைத்துள்ளன. மலையாள பஞ்சாங்கப்படி சிங்கம் 1099ம் ஆண்டு, அதாவது ஆகஸ்ட் மாதம் 1923ம் ஆண்டு பாஷா போஷினி பத்திரிக்கையில் சர்தார் கே.எம்.பணிக்கர் (Sardar K.M Panicker) வெளியிட்ட சில ஆய்வுக் கட்டுரைகள் திப்புவை தோலுரித்துக் காட்டுகிறது. கேரள வரலாறு பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்வுக்காக அவர் அவற்றை லண்டனில் இருக்கும் The India Office Libraryயிலிருந்து கொணர்ந்தார் என்பதும் மேற்கோளில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகளை சுல்தான் – உத் – தவரிக் (Sultan-ut Tawarikh) மற்றும் தரிக் – இ – குடடாடி ( Tarikh-i-Khudadadi) என்ற இந்த காட்டுமிராண்டிகளின் சுய சரிதத்திலிருந்து பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைசூர் இறுதிப் போர் - திப்புவின் மரணம்
மைசூர் இறுதிப் போர் – திப்புவின் மரணம்

ஜனவரி மாதம் 19ம் தேதி 1790ம் ஆண்டு, திப்பு, பேக்கலின் (Beakel) ஆளுநர் புட்ருஸ் சுமான் கான் க்கு ( Badroos Saman Khan ) எழுதியது.

“நான் மலபாரில் பெரிய ஒரு வெற்றியை அடைந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியாதா, அதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டார்கள். நான் திருவாங்கூர் மன்னனான நாசமாய் போன இராமன் நாயருக்கு எதிராக போர் தொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். (அவன் இங்கே குறிப்பது திருவாங்கூர் சமஸ்தான ராஜா ராம வர்மா, அவர் மலபாரிலிருந்து தப்பி ஓடி வந்த அனைவருக்கும் கருணையோடு தஞ்சம் அளித்ததால், அவர் தர்ம ராஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்).அவரையும் அவர் குடிமக்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்ற துடியாய் துடிக்கிறேன், நான் தற்போதைக்கு ஸ்ரீ ரங்க பட்டினத்துக்கு திரும்பும் என்ணத்தை கை விட்டிருக்கிறேன்.”



1788ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அப்துல் காதிருக்கு ( Abdul Kadir) எழுதிய கடிதம்:

“12,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களில் பல நம்பூதிரி பிராம்மணர்களும் அடக்கம். இந்த சாதனை ஹிந்துக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். அங்கே இருக்கும் உள்ளூர் ஹிந்துக்கள் உங்கள் முன்னே கொண்டு வரப்பட்டு, இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும். எந்த ஒரு நம்பூதிரியையும் விட்டு வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் உங்களை வந்து அடையும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.”



1788ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதியிட்ட, கோழிக்கோட்டில் இருந்த அவனது ராணுவத் தளபதிக்கு வரையப்பட்ட கடிதம்:

“நான் மீர் ஹுஸேன் அலியுடன் ( Mir Hussain Ali ) எனது 2 தொண்டர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உதவியோடு, நீங்கள் அனைத்து ஹிந்துக்களையும் கைப்பற்றி கொல்ல வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டோர் சிறையில் வைக்கப்படலாம், மற்றவர்கள் எல்லாம் மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும், இவை என் ஆணைகள்”.


ஷேக் குதுப்புக்கு (Sheik Kutub ) டிசம்பர் 21ம் தேதி 1788ம் ஆண்டு வரைந்த கடிதம்:

“242 நாயர்கள் கைதிகளாக அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப அந்தஸ்துப்படி வகைப்படுத்துங்கள். அவர்களை இஸ்லாத்தால் கௌரவித்த பின்னர், ஆண்களுக்கும் அவர்களின் பெண்டிருக்கும் போதுமான துணி வகைகளை அளிக்கவும்”.




1790ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி சயீத் அப்துல் துலாயிக்கு ( Syed Abdul Dulai)  எழுதிய கடிதம்:

”நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் அருளினால் கிட்டத்தட்ட கோழிக்கோட்டில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். கொச்சி மாநிலத்தின் எல்லைப் புறங்களில் தான் மதம் மாற்றப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் விரைவில் மதம் மாற்றி விடுவேன். நான் இதை ஜிஹாத்தாக கருதுகிறேன், அந்த இலக்கை விரைவில் அடைவேன்”.




இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தப் புத்தகங்கள் கூட ஏகாதிபத்திய, அடக்குமுறையாளர்களின் நூலகத்திலிருந்தது எடுக்கப்பட்டது தானே! என்று நம் புரட்சியாளர்கள் வாதிடலாம்.இதை அன்றே திப்பு அறிந்திருந்தான். இந்த பிரச்சினை நாளை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் வாளிலேயே தன் எண்ணத்தை வடித்து வைத்திருந்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்தவும். பிற சமயங்களை அழிக்கவும் தன் வாளுக்குள் புகுந்து துணை புரிய அல்லாவை கூவி கூப்பிட்டது, திப்பு மார்கஸ் வெல்லஸ்லிக்கு ( Marquess Wellesley) பரிசளித்த வாளின் கைப்பிடியில்  பொறிக்கப்பட்டுள்ளது.

“நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் வெற்றிவாள் மின்னல் போன்றது. விசுவாசிகளின் தலைவனான அலி, எனக்கு சாதகமாக வெற்றிகளை வழங்குகிறார், மேலும் அவர் விசுவாசம் இல்லாத தீய இனத்தை அழித்தார். இறைவா போற்றி, நீயே உலகங்களுக்கெல்லாம் தலைவன். நீயே எங்கள் அனைவருக்கும் தலைவன், நீ தான் விசுவாசிகள் அல்லாத நபர்களிடம் இருந்து எங்களை ஆதரிக்கிறீர். யாருக்கு இறைவன் வெற்றியை அளிக்கிறாரோ, அவரே மனித குலத்தின் தலைவன் ஆகிறான். இறைவா, முகம்மதுவின் சமயத்தை யார் ஒருவர் பரப்புகிறாரோ அவருக்கே வெற்றியை அளியும். முகம்மதின் சமயத்தை யார் ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை நாசம் செய்யுங்கள்; அத்தகைய நபர்களிடமிருந்து எங்களை விலக்கியே வையுங்கள். தனது செயல்களில் இறைவனே மேலோங்கி நிற்கிறான். வெற்றியும், படையெடுப்பும் இறைவனிடமிருந்தே. ஓ முகம்மதுவே!, விசுவாசிகளுக்கு மங்கலங்களை அளியுங்கள், கடவுள் அன்பே உருவான ரட்சகன், அளப்பரிய கருணை கொண்டவர். கடவுள் உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் வளம் பெறுவீர்கள். கடவுள் மகத்தான வெற்றியை அளித்து, உங்களுக்கு உதவி செய்யட்டும், ஓ முகம்மதுவே.!”

tipu-no-heroஒரு இனம் எப்படி அழியவேண்டும் என்பதை ஈவு இரக்கமில்லாத கொடுமைக்காரன் எப்படி அனுபவித்து வருணிப்பான்! கொஞ்சம் கற்பனை செய்து பார்த்து விட்டு இதை படியுங்கள். இந்த வாசகம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில், கோட்டையின் மிக முக்கியமான இடத்தில் 1780ல் நடைபெற்ற போரின் நினைவாக பொறிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 1795 ல் கண்டெடுக்கப்பட்டது.

”ஓ சர்வவல்லமை பொருந்திய இறைவா! விசுவாசிகள் அல்லாதவர்களின் உடலை ஒழித்து விடு! அவர்கள் இனத்தை சின்னாபின்னமாக்கு! அவர்கள் கால்களை தடுமாறச் செய்! அவர்கள் சபைகளை தூக்கியெறி! அவர்கள் நாட்டை மாற்று, அவர்களை வேரடி மண்ணோடு நிர்மூலமாக்கு! அவர்களுக்கு பிரியமானவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்து! உயிர் வாழும் வழிகளை அழித்து விடு! அவர்கள் வாழ்நாளை குறைத்து விடு! மரணம் அவர்களை நிழலைப் போலத் தொடரட்டும்! அவர்கள் உடலை நோய் பீடிக்குமாறு செய்! அவர்கள் கண்பார்வையை மங்கச் செய்!, அவர்கள் முகத்தில் கரியை பூசு (அவமானத்தை உரித்தாக்கு)”

இந்த ஸ்ரீரங்கபட்டினக் கோட்டையில் சில  தங்கப் பதக்கங்கள் கண்டெடுக்கப்பட்டன; அதில் ஒரு பக்கத்தில் பாரசீக மொழியில், :”ஆசிகளை நல்குவது கடவுள் ”, என்றும், மறு பக்கத்தில் “வெற்றியும் படையெடுப்பும் இறைவனிடமிருந்தே வருகின்றன”. என்றும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதமாற்றம் இதெல்லாம் அல்லாவின் ஆணைப்படி செய்தேன்! இஸ்லாத்தின் அடிப்படையே இந்த ஜிஹாத் என்ற கொலை வெறி என்பதை அரங்கேற்றிய திப்பு சுல்தானே ஒப்புக் கொண்டுவிட்டான் ஆனால் மைனாரிட்டிகளுக்கு ஷாம்பூ போடும் இடதுசாரிகள், இத்தாலி சாரிகள், கழகக் கண்மணிகள், மற்றும் அறிவைமட்டுமே தின்று உயிர் வாழும் அறிவுஜீவிகள் ஒத்துக்கொள்வார்களா?

இப்படி வெறியாட்டம் ஆடிய ரத்தக்காட்டேரிகள் ஆலயங்களை விட்டு வைத்திருப்பார்களா என்ன? ஆவணங்கள் என்ன சொல்கின்றன?



Mysore Gazetteer, சூறையாடும் திப்பு சுல்தானின் படை, தென்னிந்தியாவின் 8000த்திற்கும் மேற்பட்ட கோயில்களை அழித்ததாக கூறுகிறது. மலபார், கொச்சின் சமஸ்தானங்கள் தான் இந்த கொள்ளை மற்றும் நாச வேலையின் பெரும் பகுதியை ஏற்க வேண்டியிருந்தது என்று பதிவு செய்துள்ளது.



திரு கே.பி.பத்மநாப மேனோன் (K.P. Padmanabha memon) அவர்கள் எழுதிய History of Cochin, திரு ஏ.ஸ்ரீதர மேனோன் (A Sreedhara Menon) எழுதிய History of Keralaஆகிய நூல்கள், திப்புவால் தரைமட்டமாக்கப்பட்ட கோயில்களை பட்டியலிடுகின்றன.



மலையாள ஆண்டு, சிங்கம் 952, அதாவது ஆகஸ்ட் 1786ல், திப்புவின் படை பிரபலமான பெருமனம் கோயிலின் விக்ரகங்களை அழித்து, திரிசூர் மற்றும் கருவனூர் ஆறுகளுக்கு இடையே இருந்த அனைத்து கோயில்களையும் நாசம் செய்தது. ”இரிஞ்சாலக்குடா, திருவஞ்சிக்குளம் கோயில்களும் திப்புவின் படையினரால், அசுத்தம் செய்யப்பட்டு நாசம் செய்யப்பட்டன.”

அவர்கள் சூறையாடி நாசம் செய்த பிரபலமான கோயில்களில் சில: த்ரிப்ராங்கோட், த்ரிச்செம்பரம், திருநாவாய், திருவன்னூர், கோழிக்கோடு தளி ஹேமாம்பிகா கோயில், பாலக்கோட்டில் உள்ள சமண கோயில், மம்மியூர், பரம்படலி, வெங்கிதாங்கு, பெம்மாயநாடு, திருவஞ்சிக்குளம், தெருமனம், திருசூரின் வடக்கநாதன் கோயில், பேலூர் சிவன் கோயில், ஸ்ரீ வெலியானட்டுக்கவா, வரக்கல், புது, கோவிந்தபுரம், கேரளாதீச்வரா, த்ரிகண்டியூர், சுகபுரம், ஆல்வன்சேரி தம்ரக்கால், ஆரநாடின் வெங்கார கோவில்,  ராமநாதக்கரா, அழிஞ்சாலம் இந்தியன்னூர், மன்னூர் நாராயண கன்னியார், மாடை வடுகுந்த சிவன் கோயில்.




கோயில்களை இடிப்பதை ஒரு இறை பணியாகக் கொண்டிருந்தான் திப்பு என்பதை சர்தார் பணிக்கைகர் தனது புத்தகமான  Freedom Struggle ல் குறிப்பிடுகிறார்.


திப்பு சுல்தானின் சில தனிப்பட்ட நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்.



இப்படிப்பட்ட வன்கொடுமையாளனை மத நல்லிணக்கவாதியாக சித்தரித்து திப்புவின் வாள் (sword of Tippu Sulthan)  என்ற தொலைக்காட்சித் தொடர் நம் நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனால் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, திப்பு எப்படி அனைத்து மதத்தவரையும் அரவணைத்து ஆட்சி நடத்தினான் என்று சில அறிவு ஜீவிகள் கட்டுரைகளும், தொலைக்காட்சிப் பெட்டியில் பேட்டிகளும் கொடுத்து முஸ்லீம்கள் அருள் வேண்டி மண்டியிட்டனர். உண்மையிலேயே இந்துக்கள் மீது திப்பு மதிப்பு வைத்திருந்தானா? இதோ முனைவர். எம். கங்காதரன் மாத்ருபூமி வார இதழில் ஜனவரி 14-20, 1990ல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி

“திப்புவின் காலத்தில் மைசூரில் நிலவிய சமுதாய, சமய, அரசியல் நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, இது போன்றவற்றை தவிர்க்க முடியாது. ச்ருங்கேரி மடத்துக்கு கெட்ட ஆவிகளை விரட்ட நிதி உதவி கொடுக்கப்படுவது பற்றிய தகவலும், திப்பு சுல்தான் எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவே ஹிந்து சமயத்தை திப்பு மதித்தான் என்பதற்கு சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது.”

tipu sultan_elephant

மேலும் திப்புவின் போலி மத சகிப்புத்தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் லூயிஸ் ரைஸ் (Lewis Rice)

ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டைக்குள்ளே 2 ஹிந்துக் கோயில்களின் பூஜைகள் நடைபெற்று வந்தன, மற்ற கோயில்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிர்வாக விஷயங்களிலும் கூட இஸ்லாமியர்களுக்கு வெளிப்படையாக பாரபட்சம் காட்டப்பட்டது, குறிப்பாக வரிவிதிப்பு கொள்கையில். இஸ்லாமியர்கள் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு பெற்றிருந்தார்கள். இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது என்கிறார் கோபால் ராவ். வேலை வாய்ப்பு விஷயத்தில், ஹிந்துக்கள் முடிந்த வரை விலக்கி வைக்கப்பட்டார்கள். திப்பு சுல்தானின் மொத்த 16 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், முக்கியமான பதவி வகித்த ஒரே ஹிந்து அதிகாரி பூர்ணைய்யா தான்.



இந்த திப்பு மற்றும் ஹைதர் அலியின் கொடுமைகளும், கோர தாண்டவங்களும் இன்றளவும் கூட கேரள மக்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுல்தான்களின் காலத்திலும் சரி, சுதந்திரப் போராட்ட காலத்திலும் சரி, மதமாறிய முஸ்லீம்கள், எல்லைதாண்டிய இஸ்லாமிய விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர் என்ற செய்தியை நாடறிந்த சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. கே.மாதவன் நாயர் எப்படி பதிவு செய்கிறார்? இதோ அந்தப் பதிவு…

“கொடூரமான மாப்பிள்ளை லஹலா (1921ல் மலபாரில் நடந்த கிலாஃபத் கலவரத்தின்) தோற்றுவாயை, திப்பு சுல்தான் நிகழ்த்திய படயோட்டக்கலத்தின் பரவலான, கட்டாயமான மதமாற்றம் மற்றும் கொடுமைகளின் பின் விளைவுகளில் காண முடியும்.”



இந்திய வரலாறு! ஏன், உலக வரலாற்றிலேயே நாகரீகமான எந்த சமுதாயமும் வெட்கித் தலை குனியும் அளவுக்கு அரங்கேறிய மாப்பிளா கலகத்தின் தோற்றுவாய் என்று சுமார் 150 ஆண்டுகளுக்குப் பின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அளவுக்கு மேற்கோள் காட்டப்பட்ட கொடுமை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த கொலைகார, கொள்ளைக்கார, காட்டுமிராண்டிகளுக்கு முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் மண்ணிலும், மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் மண்ணிலும்.அறம் வளர்த்த ஒளவையும் வள்ளுவனும் வாழ்ந்த மண்ணில் மணிமண்டபமா?

சங்க இலக்கியமான புறநானூறு பெருங்குற்றங்களாக எவைகளை சுட்டிக் காட்டுகிறது?

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

பார்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வடுவாய் முழுங்கிற் கழுவாயு முளவென

நிலம்புடை பெயர்வ கொடுமை யோர்க்கும்

செய்தி கொன்றோர்க்குய்தி யில்லென

புறநானூறு (34 : 1-6)

நன்றி மறப்பது தான் பெரிய குற்றம் என்பதை சொல்ல, மகா பாதகங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.  காறாம் பசுவின் மடுவை அறுத்தல், வேத அந்தணரை கொலை செய்தல் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் கருவைச் சிதைத்தல் சங்கத் தமிழர்களால் மகா பாதகங்களாக கருதப்பட்டுள்ளது. இந்தப் பெரும் குற்றங்கள் அனைத்தையும் செய்த ஈனப் பிறவிகளுக்கு, தமிழ்தாய் சிலையும், வள்ளுவர் சிலையும் வைத்து, நான் தான் ‘ஒரிஜினல்’ தமிழன் என்று மார்தட்டும் தமிழர்கள் மணிமண்டபம் எழுப்பப் போகிறார்களாம்! முஸ்லீம் ஓட்டுக்காக இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவைதானா? தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா?






தமிழ்ஹிந்து தளத்தில் முன்பு வந்திருந்த திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் கட்டுரையைப் பார்த்தேன். அதன் தொடர்ச்சியாக திப்புசுல்தானின் மதவெறிச் செயல்கள் குறித்து பி.சி.என்.ராஜா என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையில் இருக்கும் செய்திகளையும் இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

“திப்பு சுல்தான் அவரது ராஜ்யத்தை 1782 டிசம்பர் 7 முதல் 1799 மே 4 வரை பதினாறரை ஆண்டுகள் ஆண்டார். அவரது ராஜ்யத்துக்குட்பட்டிருந்த மலபார் பகுதிகள் எட்டு ஆண்டுகள் மட்டுமே அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்போதைய சாமர்த்தியமுள்ள அமைச்சராக இருந்த பூர்ணையா என்பவரின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்திருந்தால் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இப்போது இருப்பது போல முகமதியர்கள் இந்த அளவுக்கு இருந்திருக்க மாட்டார்கள். இந்துக்களும் தொகையில் குறைந்தும் வறுமையில் உழன்றும் இருந்திருக்க மாட்டார்கள்.

பூர்ணையா எனும் பிரதம அமைச்சரது மதியூகத்தால் 90,000 சிப்பாய்களையும், மூன்று கோடி ரூபாய் பணமும், விலை மதிப்பு சொல்லமுடியாத அளவு நகைகள், தங்கம், நவரத்தினங்கள் இவைகளைப் பெற்றுக் கொண்ட திப்புவுக்கு தான் தென்னிந்தியாவின் ஏகசக்ராதிபதியாக ஆகிவிடவேண்டுமென்கிற சபலம் உண்டாகியது. தன்னுடைய இந்த குறிக்கோளை அடைவதில் அப்போது தென்னிந்தியாவில் இருந்த ராஜாக்கள் குறிப்பாக மராத்தி, கூர்க், திருவாங்கூர் ஆகியவர்களோ அல்லது முஸ்லிம் மன்னரான நிஜாமோ தடையாக இருக்க மாட்டார்கள் என்பதை திப்பு உணர்ந்திருந்தார். தனக்கு இடையூறாக இருக்கக் கூடியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே என்ற பயம் அவருக்கு இருந்தது. அவர்களை மட்டும் இந்த மண்ணிலிருந்து விரட்டிவிட்டால் தான் தென்னிந்தியாவின் ஏகசக்ராதிபதியாகிவிட முடியும் என்று கணக்கு போட்டார். தன்னுடைய சுயநலம் காரணமாக பிரிட்டிஷ்காரர்களை திப்பு எதிர்த்த நிகழ்ச்சியை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வரலாற்று ஆசிரியர்களும், முற்போக்கு எழுத்தாளர்களும் திப்புவை ஒரு சுதேச தேசபக்த வீரனாகப் படம் வரையத் தலைப்பட்டனர்.

tipu-no-heroஅன்னிய நாட்டினரை எதிர்ப்பது என்பது தேசபக்தியினால் மட்டும் ஏற்படுவதல்ல. தன்னுடைய சுயநல நோக்கங்களுக்காக தன்னை அசைக்கமுடியாத அரச பதவியில் அமர்த்திக் கொள்வதற்காக, தனக்கு இடையூறாக இருந்த பிரிட்டிஷாரைத் துரத்திவிட இந்த புண்ணிய பூமியை ஆக்கிரமித்திருந்த மற்றொரு வெளிநாட்டாரான பிரெஞ்சுக்காரர்களைத் தன்னக்கட்டிக் கொள்ள நேர்ந்தது திப்புவுக்கு. பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷாரை எதிர்த்துத் தங்கள் ஆதிக்கத்தை இங்கே பெருக்கிக் கொள்ள போராடிக் கொண்டிருந்த நேரம் அது. நிலைமை இப்படியிருக்கும்போது திப்புவை வெளிநாட்டாரை எதிர்த்துப் போராடிய தேசபக்தன் என்று எப்படி கூறமுடியும்? நெப்போலியனிடமிருந்தும், பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயியிடமும் ஆதரவு கேட்டு கையேந்தியவன் எப்படி அந்நியனை எதிர்த்த தேசபக்தனாகக் கொள்ள முடியும்?

அதுமட்டுமல்ல, இந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவன் திப்பு. அப்படி அவன் விரும்பிய இஸ்லாமிய ஆட்சியை இங்கு நிறுவ வேண்டுமானால் முதலில் பிரிட்டிஷாரைத் தோற்கடிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே திப்பு சுல்தான் பெர்ஷியா, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளின் துணையை நாடினான். திப்புவிடம் சரணடைந்து அவனுக்கு நன்றி விஸ்வாசமுடையவராக இருப்பதென்று உறுதி கூறிய கொச்சி ராஜ்யத்தின் இந்து மன்னனையோ அல்லது வேறு எந்த இந்திய மன்னனுக்கோ திப்பு தொந்தரவு கொடுக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். இந்தவொரு காரணத்தினால் மட்டும் திப்பு இந்துக்களின் நண்பன் என்று கூறிவிட முடியுமா?

தென்னிந்தியாவில் நிஜாமும் திப்புவும் மட்டும்தான் முஸ்லிம் ராஜாக்கள் என்பதால் தக்ஷிணப் பிரதேசத்தில் இருந்த மற்றொரு முஸ்லிம் ராஜாவான நிஜாமிடம் திப்பு விரோதம் பாராட்டவில்லை. மேலும் தங்களிருவரின் உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக திப்பு நிஜாமிடம் அவருடைய மகளைத் தன் மகனுக்கு நிக்காஹ் செய்து வைக்கவேண்டுமென்று வற்புறுத்தினான். ஆனால் நிஜாமோ இந்த திப்பு பரம்பரை மன்னனுமல்ல, அரச பாரம்பரியமுமல்ல என்பதால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். நிஜாம் பெண் தராவிட்டால் என்ன, நமக்கு வேறு ஆளா இல்லை என்று திப்பு கண்ணனூர் அரக்கல் பீவியின் மகளைத் தன் மகனுக்கு நிக்காஹ் செய்து மலபார் முஸ்லீம்களின் ஆதரவைப் பெற்றார். இந்த முடிவினால் மலபார் முஸ்லிம்கள் திப்புவின் ஆதரவாளர்களாக எப்படி மாறினார்கள் என்பதை வரலாறு சொல்லும். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கண்ணனூர் அரக்கல் பீபி மதம்மாறியவர் என்றாலும் அன்றைய வழக்கப்படி தாய்வழி உரிமை வழக்கத்தைக் கடைபிடிப்பவர், ஆனால் திப்புவோ இந்த முறையை மாற்ற நினைப்பவர்.

திப்புவின் குறிக்கோள் எல்லாம் பிரிட்டிஷாரை விரட்டிவிட்டுத் தான் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்பது தான். இதற்காக திப்பு பல ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்தான். அவன் ஆட்சிபுரிந்த ஸ்ரீரங்கப் பட்டினத்தில் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோயிலில் பல ஜோதிடர்கள் இருந்தனர். அந்த ஜோதிடர்கள் திப்புவுக்கு சில ஆலோசனைகளைச் சொன்னார்கள். அவன் சில பரிகார சடங்குகளைச் செய்தால் அவன் மனோரதம் நிறைவேறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜோதிடக்காரர்கள் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பிய திப்பு பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்றிவிட்டு தான் ஏகபோக மன்னனாக ஆகிவிடவேண்டுமெனும் ஆவலில் ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்களையெல்லாம் ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதசுவாமி ஆலயத்தில் செய்தான். ஜோதிடர்களுக்கும் விலை உயர்ந்த பரிசுகளை அள்ளி அள்ளி வழங்கினான். இப்படி இவன் ஸ்ரீரங்கநாதருக்குச் செய்த உபயங்கள் எல்லாம் இந்து மதத்தின் மீதான மரியாதை காரணமாகச் செய்ததாக மதச்சார்பின்மையாளர்கள் எழுதுகிறார்கள். இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை உள்ள நம் வரலாற்று ஆசிரியர்கள் கேட்கிறார்கள் அவன் மலபார் பகுதியில் எங்காவது ஏதேனுமொரு இந்து கோயிலையாவது இடித்தோ அல்லது சேதப்படுத்தியோ இருக்கிறானா என்று.

tipu sultan_elephantமைசூர் வரலாற்றை எழுதிய ஆங்கிலேய வரலாற்றாசிரியர் லூயிஸ் ரைஸ் என்பவர் மைசூர் சமஸ்தான ஆவணங்களையெல்லாம் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டுச் சொல்கிறார், “பரந்து விரிந்து கிடந்த திப்புவின் ராஜ்யத்தில், அவனுடைய சாவுக்கு முன்னால் ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டைக்குள் இருந்த இரண்டே இரண்டு இந்து கோயில்களில்தான் தினசரி பூஜா கிரமங்கள் நடைபெற்று வந்தன” என்கிறார். அதுவும் இந்தக் கோயில்களில் பூஜைகள் நடைபெற திப்பு அனுமதித்தது ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்கள் காரணமாகத்தான் என்பதையும் அவர் விளக்குகிறார். திப்புவின் ராஜ்யத்தில் இருந்த அத்தனை இந்து கோயில்களின் செல்வங்களெல்லாம் 1790ஆம் ஆண்டுக்கு முன்பே திப்புவால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. ராஜ்யம் முழுவதும் போதை பானங்கள் (கள் முதலானவை) அருந்துவதைத் தடுத்துவிட்டதால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுசெய்யவே இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டனவாம்.

திப்பு சுல்தானின் ஆட்சி நியாயமாகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். இந்தக் கூற்றை மறுக்கும்படியான ஒரு அறிவிப்பினை மைசூர் ராஜ்யத்துக்காரரான எம்.ஏ.கோபால் ராவ் என்பவர் வெளியிடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கட்டுரையொன்றில் அவர் கூறுவதாவது:

“திப்பு சுல்தானின் பிறமத வெறுப்பு என்பது அவனது வரி விதிப்புக் கொள்கைகளிலேயே மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவன் சார்ந்த முஸ்லிம்களுக்கு வீட்டு வரியோ, வாங்கும் பொருள்கள் மீதான வரியோ, வீட்டு உபயோகத்துக்கான பொருட்கள் மீதான வரியோ அறவே கிடையாது. அதுமட்டுமல்ல மற்ற மதங்களிலிருந்து இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்து கொண்டவர்களுக்கும் இந்தச் சலுகை கொடுக்கப்பட்டது. முஸ்லீம் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அரசே ஏற்றுக் கொண்டது. அவனது தந்தை ஹைதர் அலி இந்துக்களைத் தனது பட்டாளத்தில் பல பதவிகளில் அமர்த்தியதை திப்பு நிறுத்திவிட்டார். முஸ்லிம் அல்லாதவர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்தார் திப்பு. அவர் ஆண்ட பதினாறு ஆண்டுகளில் திவான் பூர்ணையா மட்டும்தான் உயர்ந்த பதவி வகித்த ஒரே இந்து. திப்பு இறப்பதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அதாவது 1797 வரை அரசாங்கத்தின் 65 மிக உயர் பதவிகளில் மருந்துக்குக்கூட ஒரு இந்துவுக்குப் பதவி கிடையாது. 1792இல் யுத்தத்தின் போது பிரிட்டிஷார் சிறைபிடித்த ராணுவ, சிவில் அதிகாரிகள் 26 பேரில் வெறும் 6 பேர் மட்டுமே முஸ்லீம் அல்லாதவர்கள். 1789இல் ஐதராபாத் நிஜாமும் மற்ற இஸ்லாமிய அரசர்களும் அரசாங்கப் பதவிகளில் முஸ்லீம்களை மட்டுமே நியமிக்க வேண்டுமென்று முடிவு செய்ததன் அடிப்படையில் திப்பு சுல்தானும் தான் ஆண்ட மைசூர் சமஸ்தானத்தில் அதே நடைமுறையைக் கையாண்டார். ஒரு பதவிக்கு ஆட்களை நியமிக்கும்போது அவர் படிப்பறிவு இல்லாமல் இருந்தாலும், திறமை இல்லாமல் போனாலும் அவர் முஸ்லிமாக இருந்தால் போதும், அவர் முக்கியமான அரசாங்கப் பதவியில் நியமிக்கப்பட்டார். பணியில் இருக்கும்போது கிடைக்கக்கூடிய பதவி உயர்வில்கூட முஸ்லீம்களுக்கு மட்டும்தான் அது கொடுக்கப்பட்டது. முன்பு கன்னட மொழியிலும் மராத்தி மொழியிலும் கூட அரசாங்க கணக்கு வழக்குகள் எழுதப்பட்டு வந்த நிலையில், முஸ்லீம்களின் வசதிக்காக இவைகள் எல்லாம் பாரசீக மொழியில் மட்டுமே எழுதப்பட்டன. திப்புவின் ராஜ்யத்தில் அரசாங்க மொழியாக கன்னடத்துக்குப் பதிலாக பாரசீக மொழியை ஆட்சி மொழியாக ஆக்க முயற்சிகள் நடந்தன.

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக சோம்பேறித் தனமும் பொறுப்பற்ற தனமும் உடைய பல முஸ்லீம்கள் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்படிப்பட்ட அதிகாரிகளும் பணியாளர்களும் பொழுது போக்காக பதவிகளை அலங்கரித்தார்களே தவிர மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவேயில்லை. அவர்கள் அனைவருமே பொறுப்பற்றவர்களாகவும், திறமையற்றவர்களாகவுமே எல்லா முக்கிய பதவிகளிலும் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்கள் தகுந்த ஆதாரத்துடன் அதிகாரிகளின் அலட்சியத்தையும், பொறுப்பற்ற தன்மைகளையும் எடுத்துச் சொன்னபோதும் திப்பு அவற்றை எதையும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.”

இந்தக் கருத்துக்களையெல்லாம் சொன்ன கோபால் ராவ் என்பவர் இவற்றைத் தன் கருத்தாக மட்டும் சொல்லவில்லை, இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக திப்புவினுடைய சொந்த மகனான குலாம் முகம்மது, இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர் கிர்மானி ஆகியோரை மேற்கோள்காட்டி எழுதுகிறார். பல இடங்களுக்கு இடப்பட்டிருந்த இந்துப் பெயர்கள்கூட திப்புவுக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக மங்களபுரி எனும் மங்களூரின் பெயர் ஜலாலாபாத் என்றும், கண்வாபுரம் எனும் கண்ணனூரின் பெயர் குஸானாபாத் என்றும், வைபுரா எனும் பேபூர் சுல்தான்பட்டினம் அல்லது ஃபரூக்கி என்றும், மைசூரை நஸராபாத் என்றும், தார்வார் குர்ஷீத் ஸாவத் என்றும், கூட்டி ஃபைஸ் ஹிசார் என்றும் ரத்தினகிரி முஸ்தஃபாபாத் என்றும், திண்டுக்கல் காலிக்காபாத் என்றும், கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) இஸ்லாமாபாத் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கூர்க் பிரதேசத்தில் திப்பு செய்த அராஜகம் போல வரலாற்றில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. ஒரு சமயம் கட்டாயப்படுத்தி பத்தாயிரம் இந்துக்களை முசல்மான்களாக மதமாற்றம் செய்தார். மற்றொரு முறை ஆயிரம் கூர்க் மக்களைப் பிடித்து மதமாற்றம் செய்து ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையில் சிறைவைத்தார். இப்படி கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட கூர்க் மக்கள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சிறையிலிருந்து தப்பித்து மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு மாறி அவரவர் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். கூர்க் மன்னருக்குச் செய்து கொடுத்திருந்த சத்தியப் பிரமாணத்தை மீறி திப்பு சுல்தான் கூர்க் ராஜவம்சத்து இளவரசியொருத்தியைக் கட்டாயமாகக் கடத்திக் கொண்டு போய் அவள் விருப்பத்துக்கு மாறாகத் தன் மனைவியாக ஆக்கிக் கொண்டார்.

Tipu_Sultan_BLவட கர்நாடகத்தில் பிட்னூர் எனும் பிரதேசத்தைப் பிடிக்கும் முன்பும், பிடித்த பிறகும் அங்கு அவர் செய்த அட்டூழியங்கள் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டித் தனமானவை. பிட்னூரின் கவர்னராக அயாஸ்கான் நியமிக்கப்பட்டார். கம்மரான் நம்பியார் எனும் பெயரில் சிரக்கல் ராஜ்யத்துக்காரரான இவரை ஹைதர் அலி கட்டாய மதமாற்றம் செய்திருந்தார். தந்தை ஹைதர் அலி மதமாற்றம் செய்து தன் நம்பிக்கைக்கு உரியவராக நடத்திய இந்த அயாஸ்கான் மீது திப்புவுக்கு பொறாமை ஆரம்பம் முதலே இருந்து வந்தது. காரணம் தந்தை ஹைதர் அலிக்கு இந்த அயாஸ்கானின் திறமை, புத்திசாலித்தனம் இவற்றின் மீதிருந்த நம்பிக்கைதான் திப்பு பொறாமைப்பட காரணம். திப்பு தன்னைக் கொல்ல சதி செய்கிறார் என்கிற செய்தியை அறிந்த அயாஸ்கான் ரகசியமாக பம்பாய்க்குத் தப்பிவிட்டார். அவருடன் ஏராளமான தங்கத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். பெட்னூரைப் பிடித்த திப்பு அங்கிருந்த மொத்த ஜனங்களையும் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்தார்.

மங்களூரைப் பிடித்த பின்னர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான கிருஸ்துவர்களை கட்டாயமாக ஸ்ரீரங்கப் பட்டினத்துக்கு அனுப்பி அங்கு அவர்களுக்குச் சுன்னத் செய்து மதமாற்றமும் செய்வித்து விட்டார். இவர் இப்படி செய்ததற்கு ஒரு சமாதானமும் சொன்னார். அது என்னவென்றால் பிரிட்டிஷார் இந்தப் பகுதியைப் பிடிப்பதற்கு முன்பு இங்கிருந்த போர்த்துகீசிய மிஷினரிகள் அங்கிருந்த முஸ்லீம்களை கிருஸ்தவர்களாக மாற்றிவிட்டார்களாம். தான் செய்த இந்தக் காரியத்தை மிகப் பெருமையுடன் பிரகடனம் செய்தார் திப்பு. போர்த்துகீசிய மிஷ்னரிகள் செய்த தவற்றுக்குத் தான் தண்டனை கொடுத்து விட்டதாக.

பின்னர் கேரளத்தின் வடபகுதியிலிருந்த கும்பளா எனுமிடத்துக்குப் படையெடுத்துச் சென்றார். போகும் வழியெல்லாம் கிடைத்த மக்களை மதமாற்றம் செய்துகொண்டே போனார். இவர் இப்படி செய்ததற்கான காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தும் இஸ்லாமிய, மதச்சார்பின்மை பேசும் வரலாற்றாசிரியர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? நாட்டில் இருக்கும் மக்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக (இஸ்லாமியர்களாக) இருந்தால்தான் ஒற்றுமையோடு பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராட முடியுமாம்!

மலபார் பகுதிகளில் திப்பு தன்னுடைய கவனத்தை இந்துக்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் செலுத்தி அராஜகம் செய்தார். லூயிஸ் பி.பெளரி என்பவர் எழுதுகிறார்: “இந்துக்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் திப்பு தொடுத்த அழிவு வேலை அராஜகம் வடக்கே முகமது கோரி, அலாவுதீன் கில்ஜி, நாதிர்ஷா ஆகியோர் இழைத்த கொடுமைகளைக் காட்டிலும் கொடுமையானவை.” முகர்ஜி என்பவர் தன் நூலில் திப்பு தன்னை எதிர்த்தவர்களை மட்டும்தான் மதமாற்றம் செய்தான் என்று எழுதியிருப்பதை இவர் மறுக்கிறார். பொதுவாக எந்த கொடியவனும் தன் எதிரிகளைத்தான் கொடுமைகளுக்கு ஆளாக்குவான், ஆனால் திப்பு செய்த கொடுமை, அதிலும் பெண்கள் குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான அராஜகம் எந்தவிதத்தில் நியாயப்படுத்த முடியாதவை.

மலபாரில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த வில்லியம் லோகன் என்பவர் ‘மலபார் மானுவல்’ குறிப்பில் சொல்லும் செய்தி இது. சிரக்கல் தாலுகாவிலுள்ள திரிச்சம்பரம், தளிப்பரம்பு ஆகிய இடங்களிலுள்ள கோயில்களும், தலைச்சேரியிலுள்ள திருவங்காட்டு கோயில் (Brass Pagoda) படகாராவுக்கு அருகிலுள்ள பொன்மேரி கோயில் ஆகியவற்றை திப்பு இடித்துத் தள்ளினார். அதே மலபார் மானுவல் தரும் மற்றொரு செய்தி மணியூர் எனுமிடத்திலுள்ள மசூதி முன்பு இந்து கோயிலாக இருந்தது. அங்கிருந்த இந்துக் கோயில் திப்பு சுல்தான் காலத்தில் மசூதியாக மாற்றப்பட்டது என்பது உள்ளூர் மக்கள் கூறும் செய்தி.

வடக்கங்கூர் ராஜ ராஜ வர்ம தன்னுடைய “கேரளத்தில் சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு” எனும் நூலில் கேரளத்தில் திப்பு சுல்தான் படையெடுப்பின் போது (படையோட்டம்) நடந்த அழிவு வேலைகள், ஆலயங்கள் இடித்தது போன்ற செய்திகளைப் பற்றி சொல்வதாவது: “திப்பு சுல்தான் படையெடுப்பினால் உண்டான இந்து ஆலயங்களின் அழிவு சொல்லும் தரமன்று. ஆலயங்களைத் தீயிட்டு கொளுத்துவது, விக்கிரகங்களை உடைப்பது, கோயிலுக்கென்று நேர்ந்து விடப்பட்ட ஆடு மாடுகளின் தலைகளை வெட்டுவது போன்ற செயல்கள் திப்புவுக்கும் அவரது படை வீரர்களுக்கும் ஒரு பொழுது போக்கு விளையாட்டு போல அமைந்திருந்தது. பிரபலமான ஆலயங்களான தலைப்பரம்பு திருச்சம்பரம் ஆகிய கோயில்கள் இடிக்கப்பட்டது மக்கள் மனமுடைந்து போகச் செய்து விட்டது. அப்போது அவர்கள் செய்த அழிவை இன்றுவரை சரிசெய்ய முடியவில்லை.”

1784இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி திப்பு சுல்தான் மலபார் பிரதேசத்தில் சுய உரிமையோடு ஆண்டு கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் மலபார் பகுதி இந்துக்கள் வரலாறு காணாத துன்பங்களையும் அழிவுகளையும் சந்திக்க நேர்ந்ததாக திரு கே.வி.கிருஷ்ண ஐயர் என்பார் தனது கள்ளிக்கோட்டை பற்றிய புத்தகத்தில் எழுதுகிறார்.

எல்.பி.பெளரி என்பவர் எழுதுவதாவது:- இஸ்லாம் மீது தனக்குள்ள பற்றை நிரூபிக்கும் விதத்தில் கோழிக்கோடு பகுதியில் தன் கவனத்தைத் திருப்பினான் திப்பு. மலபாரில் வசித்த இந்துக்கள் தாய்வழி சொத்துரிமை பழக்கத்தைக் கைவிட மறுத்ததாலும், பெண்கள் உடை அணிவதில் மாற்றங்கள் செய்து கொள்ள விரும்பாததாலும், திப்பு அவர்களைக் கட்டாயமாக மாற்றமடையச் செய்வதற்காக அவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றினான். மலபார் மக்கள் பெண்கள் வீட்டினுள் அடைபட்டிருப்பதற்கும், பல தாரங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும், சுன்னத் செய்து கொள்வதற்கும் மறுப்பு காட்டினர். கண்ணனூர் அரக்கல் பிபி குடும்பத்தில் திருமணத்துக்கும் திப்பு ஏற்பாடு செய்தார்.

அந்த காலத்தில் கோழிக்கோடு நிரம்ப பிராமண குடும்பங்களைக் கொண்டிருந்தது. 7000 பிராமண குடும்பங்கள் அங்கு வசித்து வந்தன. அப்படிப்பட்ட இடத்தில் திப்புவின் அடாவடி காரணமாக 2000க்கும் அதிகமான பிராமண குடும்பங்கள் அழிந்து போயின. தன்னுடைய கொடுமைக்கு பெண்களையும் குழந்தைகளையும் கூட அவன் விட்டுவைக்கவில்லை. பெரும்பாலான ஆண்கள் காட்டுக்குள்ளேயும், வேறு நாடுகளுக்கும் ஓடிவிட்டனர்.

1955 டிசம்பர் 25 “மாத்ருபூமி” இதழில் எலங்குளம் குஞ்சன் பிள்ளை என்பார் எழுதுகிறார்:- “முகமதியர்கள் எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் சுன்னத் செய்விக்கப்பட்டு விட்டனர். திப்பு செய்த கொடுமைகளினால் ஏராளமான நாயர்களும், சாமர்களும் (இவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்) எண்ணிக்கையில் குறைந்து விட்டனர்.”

திப்பு சுல்தான் படையெடுப்பின் காரணமாக தளி, திருவண்ணூர், வரக்கல், புத்தூர், கோவிந்தபுரம், தளிக்குன்னு முதலான கோழிக்கோட்டிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன. பின்னர் திப்புவின் தோல்வியை அடுத்து 1792 உடன்படிக்கையின்படி பல ஆலயங்கள் மீண்டும் எழுப்பப்பட்டன.
கேரளதீஸ்வரம், திரிக்கண்டியூர், வேட்டூர் ஆகிய இடங்களில் புராதன கோயில்களுக்கு உண்டான சேதங்கள் கணக்கிலடமுடியாதவை. வேதங்களைக் கற்பித்து வர பயன்பட்ட திருநவயா கோயில் அழிக்கப்பட்டது. பொன்னானியில் திருக்காவு கோயிலில் விக்கிரங்களை என்லாம் தூக்கி எறிந்து உடைத்துவிட்டு அந்த இடத்தை தன்னுடைய ராணுவத்தினரின் ஆயுதங்களை வைக்கும் கிடங்காகப் பயன்படுத்தினான்.

எண்ணற்ற கோயில்களை உடைத்தபின் திப்பு குருவாயூர் கோயிலுக்கு வந்தான். அப்படி குருவாயூருக்கு வருமுன் மம்மியூர் கோயிலையும், பாலயூர் கிருஸ்துவ தேவாலயத்தையும் உடைத்தான். குருவாயூர் கோயிலில் திப்புவின் அழிவுச் சின்னங்கள் இன்று பார்க்கமுடியாததற்குக் காரணம் ஹைடுரோஸ் குட்டி என்பவர்தான் காரணம். இவர் ஹைதர் அலியினால் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டவர். குருவாயூர் கோயிலுக்கு நிலவரியை ரத்து செய்யவும், கோயிலுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பாதுகாக்கவும் இவர் ஹைதர் அலியிடம் அனுமதி வாங்கி வைத்திருந்தார். திப்புவினால் ஏற்பட்ட அழிவுகளையும் பின்னர் இவர் சரிசெய்து விட்டதால் அந்த அழிவுகள் இப்போது காணக் கிடைக்கவில்லை.

குருவாயூர் கோயிலை நோக்கி திப்பு வருவதறிந்து அங்கிருந்த புனிதமான ஸ்ரீகிருஷ்ண விக்ரகம் அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் அங்கிருந்து மீண்டும் குருவாயூருக்குக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணன் ஆலயத்தில் இன்றும்கூட அன்று குருவாயூரப்பனை வைத்து வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.






I don't believe in any political ideology. I believe in real secularism, not in the pseudo version of it. I have always been criticising the right wing politics being practised by the "Sangh" and their opponents on the other side. Therefore I call myself just "straight". I am neither right, nor left. I am sure both sides attack me if my views are opposed to their views. I am also a student of history, again not a left wing or right wing student. It is my firm belief that Tipu Sultan does not deserve the title "Tiger" of Mysore. Tipu was a religious fanatic. He was a tyrant. During his reign of terror, people of present day South Karnataka, parts of Tamil Nadu, parts of Kerala had to suffer unspeakable misery. The historical documents of those years prove that he was anything but a freedom fighter.

It is true that he fought the British for over 20 years and was finally killed by them in the fourth Anglo-Mysore war of 1799 at his capital Srirangapatna near Mysore. But, he fought the British to save his kingdom like all other big and small kings across the World. It was the norm during those medieval days. The so-called "patriot" Tipu took the help of another foreign coloniser, the French, to oust the British! He had even invited Napoleon to invade India. If the British were foreign invaders, the French were also foreign invaders. Both the British and French wanted to colonise India and rule the natives. Tipu did everything to please the French and was even ready to accept their rule. Just because the French were opposed to the British, he took their help. He was okay with French ruling India. If the French had attacked his kingdom, I am sure, he would have taken the help of the British to save himself.

Even the French who initially helped him to fight the British were horrified by his crimes, mass murders, forced conversion and the methods he adopted to torture the people. Many French Army officers sent to help Tipu refused to fight for him and returned home in disgust.

The Congress government in Karnataka led by Chief Minister Siddaramaiah is doing exactly the same the right wing "Sangh" elements are accused of doing – Polarising the people on religious lines. Tipu was killed 216 years ago. After 216 years, Karnataka government has suddenly woken up and decided to spend government money to celebrate Tipu's Jayanthi. It does mean that Siddaramaiah knows nothing about Tipu. Being a Mysorean himself, the Chief Minister is aware of Tipu's tyranny. But, he wants to make some political gains by dividing the state on communal lines. In a way both Congress and "Sangh" are feeding each other by flaring up the communal tension in the name of Tipu. By organising a state sponsored Tipu Jayanthi, Congress government in the state has insulted the warrior Kodava or Coorg community. Tipu had plundered the small kingdom Kodagu, killed thousands in the most brutal manner and converted several thousand Kodavas to Islam. Even the Christians don't find Tipu a patriot or a good ruler. He had killed tens of thousands of local and foreign Christians destroyed their Churches etc. He did not spare even Christian nuns and priests.

As a senior journalist and himself a Kodava, Gautham Machaiah says Kodavas are not opposing Tipu Jayanthi, because he is a Muslim ruler. They are opposing it because he was a tyrant. The Kodavas would have done the same thing, even if Tipu was a Hindu ruler. Writers like Girish Karnad, who have assumed the role of courtiers of Siddaramaiah are deliberately defending Tipu. After all it suits their brand of secularism. He has also written a play on Tipu and hopes that he can sell a few hundred copies more. Karnad should know that he is not a historian and he should not distort historical facts. The stories of Tipu giving shelter to Shankaracharya of Sringeri, retaining a Hindu Poornaiah as his Diwan etc have been highly exaggerated to make Tipu a 'secular' ruler. People like Karnad are repeating it hundred times.

According to an article appeared in "Outlook" in 2013 titled "The Tyrant Diaries" Tipu was a butcher of the people of Mysore. According to its author Francos Gauitier in December 8, 1988, an old trunk was discovered in the attic of the house of Elaine de la Taille Tretinville, who died at 91 in her 14th arrondissement flat in Paris. She was a descendant of the family of Les Ripaud Montaudeverts. Among the contents was a manuscript in the hand of the most famous of the Montaudeverts—Francois Fidele Ripaud de Montaudevert. It starts with these words (in old French): "I, Francois Ripaud, am old today, but I want to tell you the true story of Tipu Sultan."

Born in Saffre, northwestern France, in a middle-class family, Ripaud enrolled as a sailor, aged 11, on the Le Palmier. After many adventures, he settled in Mauritius, where he married and had two children. In 1797, hearing of Le Grand Tipu Sultan, he sailed from Mauritius (then called Ile de France) to Mangalore and sought a meeting with the sultan, promising "to raise a large force in Mau­ritius and put it at Tipu's disposal". Tipu, who had an early connection with the French, having been instructed in warfare by French officers in the employ of his father, jumped at the idea and gave Ripaud letters of credential. On August 19, 1798, Ripaud came back to Mauritius and made a proclamation seeking volunteers for an "expedition to travel to Mysore to assist Tipu in his resistance to British encroachment in south India". It must be noted that, two months earlier, Napoleon had invaded Egypt and dreamt of establishing a junction with India against the British, so the governor of Mauritius received instructions to collaborate and Ripaud was able to sail to Mangalore with a shipload of French soldiers who were welcomed there like heroes.

Life at Tipu's court was a dream for our hardy adventurer, but he began to have some misgivings. In his diary entry of January 14, 1799, he writes: "I'm disturbed by Tipu Sultan's treatment of these most gentle souls, the Hindus. During the siege of Mangalore, Tipu's soldiers daily exposed the heads of many innocent Brahmins within sight from the fort for the Zamorin and his Hindu followers to see." Even so, he cast his doubts aside and put up for Tipu's benefit a dem­onstration of the egalitarian political ideas of France: in 1799, a French paper entitled 'Proceedings of a Jacobin Club formed at Seringapatnam by the French Soldiers in the Corps Commanded by Francois Ripaud' was found in Tipu's palace. It listed 59 Frenchmen in the pay of "citizen Tipu" and described a "primary assembly" of May 5, 1797, to elect a president (Ripaud) and other office-bearers. The 'Rights of Man' were proclaimed and the sultan formally received a small delegation from the club.

After this interval, we find another diary entry in which Ripaud is appalled at what he witnessed in Calicut (Kozhikode): "Most of the Hindu men and women were hanged...first mothers were hanged with their children tied to their necks. That barbarian Tipu Sultan tied the naked Christians and Hindus to the legs of elephants and made the elephants move around till the bodies of the helpless victims were torn to pieces. Temples and churches were ordered to be burned down, desecrated and des­troyed. Christian and Hindu women were forced to marry Mohammedans, and similarly, their men (after conversion to Islam) were forced to marry Moha­mm­edan women. Christians who refused to be honoured with Islam were ordered to be killed by hanging immediately." These events were corroborated by Father Bartholomew, a famous Portu­guese traveller, in his memoir, Voyage to East Indies.

Another diary entry of Ripaud says: "To show his ardent devotion and steadfast faith in the Mohammedan religion, Tipu Sultan found Kozhikode to be the most suitable place. Kozhikode was then a centre of Brahmins and had over 7,000 Brahmin families living there. Over 2,000 Brahmin families perished as a result of Tipu Sultan's Islamic cruelties. He did not spare even women and children."

A disgusted Ripaud left Seringapatnam and went back to France, where he obtained captainship of a fine fighting ship, the Shapho. On February 23, 1814, fighting an English frigate, Ripaud had his arm ripped off by a cannon ball, claims "Outlook" article.

According to Sandeep Balakrishna, who has written a book "The Tyrant of Mysore" the Siddaramaiah-led Congress government in Karnataka appears to think that the solution to what is being remarked as the party's "existential crisis", is a sharper version of the same, six-plus decades of secularism. He writes that one of the latest manifestations of this sharper secularism is chief minister Siddaramaiah announcing the launch of the Tipu Jayanti celebrations from this year, funded by the taxpayer. Indeed, the chief minister was open about why he was doing this:

"There has been a lot of pressure from various quarters to celebrate Tipu Jayanti. We have decided to take this into consideration and will announce the date shortly," Siddaramaiah had said at the release of a book Tipu Sultan: A Crusader for Change, authored by historian professor B Sheik Ali.

Siddaramaiah had earlier claimed that "Tipu Sultan was a secular ruler. He was a model king in the entire country. A section of people criticise him out of prejudice."

That history writing in India has been the subject of fierce controversy is now an article of faith, especially following Arun Shourie's seminal expose of the Indian history establishment in his Eminent Historians, a classic in its own right. Shourie, among other things, exposed in detail how in both official and dominant history textbooks and narratives at all levels — from school to university to general/popular history — do several things simultaneously as we shall see argues Sandeep Balakrishna.

He says that Tipu Sultan is in many ways the "Aurangzeb of the South". As the author of a book on Tipu Sultan (Tipu Sultan: The Tyrant of Mysore, Rare Publications, Chennai), I am both amused and amazed at the continuing efforts to paint him as a hero, patriot, and freedom fighter.

To be sure, the Tipu myth gained currency after Bhagvan S Gidwani's distorted novel named The Sword of Tipu Sultan, where Tipu is hailed as the "tiger of Mysore" among other things.

It is instructive to examine the assessment of Gidwani's novel by the historian and scholar IM Muthanna in his comprehensive Tipu Sultan X-Rayed published in 1980:

Gidwani's Tipu has a political value today, especially after the Congress government in 1974, perhaps to oblige the Muslim voters, released a commemoration stamp on Tipu, and described him as a "freedom fighter". Releasing a 50-paisa postage stamp commemorating Tipu in July 1974, a minister of Karnataka said that Tipu was "a hero" of Karnataka, "the defender of freedom," and so on. The chariman of the stamp releasing committee wanted the writers to present a true and faithful account of Tipu. Well… Gidwani has obliged him, rather sneakily, and in the form of a novel.

Muthanna was both perceptive and prophetic given how the Tipu myth was since used in the service of vote bank politics. But there was another review of Gidwani's novel predating Muthanna's book by four years. The December 19, 1976 edition of Hindustan Times carried a scathing review of the Sword of Tipu Sultan by MC Gabriel:

The author's effort throughout is to rebuild the past closer to his heart's desire. But anyone will grant that such consideration is extra-historical… it is a pity that… he could not put his material to better purpose than giving us just his private views… To say that Tipu was "the first nationalist", "a believer in communal harmony" and an "apostle of non-violence"… is quite uncalled for.

This detailed look at the Sword of Tipu Sultan was essential because much of the material for Tipu myth-making is derived from this book. In our own times, Girish Karnad's Kannada play, Tipuvina Kanasugalu (The Dreams of Tipu Sultan) borrows approvingly from Gidwani's book.

But what is astonishing is the manner in which this myth has persisted despite the availability of copious amounts of primary sources regarding Tipu Sultan which prove the exact opposite of what Tipu myth-makers claim. These include and are not limited to letters he wrote to various officials in his administration and military, letters he wrote to himself (in the form of a journal/diary) [iii][iii], eyewitness accounts by his contemporaries (Indian, French and British), land and other records. Indeed, we can construct an accurate picture of the life, times, character and legacy of Tipu Sultan using these primary sources even if we don't want to rely on any history textbook about him — both that glorify him or otherwise. And that accurate picture is not pretty laments Sandeep Balakrishna in one of his articles.

According to his book the most charitable description of Tipu Sultan after a survey of these sources is to call him the tyrant of Mysore. His 17-year-long regime was primarily a tenure of military and economic terror as far as Hindus were concerned. He razed entire cities literally to the ground and depopulated them. As representative samples, we can examine his raids in Coorg and the Malabar for the extent and scale of sheer barbarism and large scale destruction.

In 1788, Tipu marched into Coorg and burnt down entire towns and villages. Mir Hussein Kirmani, Tipu's courtier-cum-biographer describes how the raid resulted in the burning down of villages in Kushalapura (today's Kushalnagar), Talakaveri, Madikeri, and other places. Additionally, Tipu in a letter to the Nawab of Kurnool, Runmust Khan describes how he took 40,000 Coorgis as prisoners and forcibly converted them to Islam and "incorporated them with our Ahmadi corps." Already a thinly-populated country, Tipu's brutal raid followed by large-scale prisoner-taking depopulated Coorg of its original inhabitants to a severe extent. To Islamise Coorg, he transported about 7,000 Muslim families belonging to the Shaikh and Sayyid sects to Coorg from elsewhere.

The intensity of Tipu's raid was so terrifying that hundreds of temple priests fled to Mangalore along with their families. Worship came to a permanent halt in several temples. Some temples were covered with leaves in order to conceal their presence. The Maletirike Bhagavati temple at Virajpet is a good example of this. Equally, the renowned Omkareshwara temple in Madikeri was about to meet the same fate — the then ruler at Madikeri panicked at the approach of Tipu, removed its tower and replaced it with a dome so that it looked like a mosque from afar. The temple continues to retain this appearance till date. In his raid of Napoklu near Madikeri, Tipu destroyed the temples in the surrounding villages of Betu and Kolakeri.

Remnants of Tipu Sultan's savage raid of Coorg survive even today — the forcibly converted Coorgis are today known as Kodava Mapilas (Coorg Muslims) whose last/family names are still Hindu — representative examples are surnames like Kuvalera, Italtanda, Mitaltanda, Kuppodanda, Kappanjeera, Kalera, Chekkera, Charmakaranda, Maniyanda, Balasojikaranda, and Mandeyanda.

To the Kodavas, Tipu's fanatical dance of death in their homeland remains a wound that will never heal.

When we turn to the Malabar, the record is equally, if not gorier. Indeed, Tipu's incursions into the Malabar can form the subject of an independent book. Like in Coorg, remnants of Tipu's disastrous campaigns in the Malabar can be seen even today in the region. The city that bore the brunt of his excesses in the Malabar is Kozhikode (Calicut). William Logan's Malabar Manual, the Malabar Gazetter, the Portuguese missionary Fr Bartholomew's Voyage to East Indies, the German missionary Guntest and accounts by various contemporary British military officers contain first-hand accounts of how Tipu razed the city to the ground. An excerpt from Bartholomew provides us a representative glimpse:

First a corps of 30,000 barbarians who butchered everybody on the way… followed by the field-gun unit… Tipu was riding on an elephant behind which another army of 30,000 soldiers followed. Most of the men and women were hanged in Calicut, first mothers were hanged with their children tied to their necks. That barbarian Tipu Sultan tied the naked Christians and Hindus to the legs of elephants and made the elephants move around till the bodies of the helpless victims were torn to pieces. Temples and churches were ordered to be burned down, desecrated and destroyed. Christian and Hindu women were forced to marry Mohammadans and similarly their men were forced to marry Mohammadan women. Those Christians who refused to be honoured with Islam, were ordered to be killed by hanging immediately. These atrocities were told to me by the victims of Tipu Sultan who escaped from the clutches of his army and reached Varappuzha, which is the centre of Carmichael Christian Mission. I myself helped many victims to cross the Varappuzha River by boats.

The devastation in Calicut was so comprehensive that it changed the character of the place forever. Calicut was home to more than 7,000 Brahmin families. Thanks to Tipu, more than 2,000 of these were wiped out, and the remaining fled to the forests. In the words of the German missionary Guntest, "Accompanied by an army of 60,000, Tipu Sultan came to Kozhikode [Calicut] in 1788 and razed it to the ground. It is not possible even to describe the brutalities committed by that Islamic barbarian from Mysore."

He claims that indeed, Tipu made no secret of his hatred for infidels — both Hindu and Christian. After his death in 1799 in the Fourth Anglo-Mysore War and the fall of his capital Srirangapattana to the British, Colonel William Kirkpatrick discovered more than 2000 letters in his palace written in Farsi in Tipu's own handwriting. In these letters, Tipu refers to Hindus as "kaffirs and infidels" and to the British as "Christians" who needed to be "cleansed (or converted) if the rule of Islam is to be firmly established in India."


Just concluded Bihar election has proved that communal politics won't work much. But, I doubt Siddaramaiah type realise that. As I have earlier said Siddaramaiah type and the "Sangh" type feed other. If you have nothing constructive to offer, then be a destructive element. Sadly, the hard realities of our times.





The genocide of Mandyam Iyengars by the tyrant Tipu Sultan

Tipu Sultan, glorified as the Tiger Of Mysore by many Indian historians was responsible for the destruction of cultural heritage in south India during his rule. He was involved in many inhuman killings among which most commonly known are the killings of unarmed kodavas at Devatiparambu and nairs at Malabar. But many people ignore the uprisings which constantly took place at Mysore during his tenure and how Tipu crushed it by killing hundreds of unarmed civilians including women and children.

Tipu ruled his kingdom only for about sixteen years, from December 29, 1782 to May 4, 1799. The territory of Malabar was under his effective control only for a short period of eight years. He had a treacherous Divan by the name Purnaiyya. Purnaiyya had managed to gather some 90,000 soldiers, 3 crore rupees, and huge quantities of gold ornaments and precious stones from the Hindu population for Tipu. Seeing this wealth Tipu wanted to rule South India and wanted to become an Emperor of India. Tipu had to defeat first the British to become an emperor. For this purpose, Tipu consulted many Hindu astrologers in Sri Ranganatha Swami temple at Srirangapatnam. These astrologers did not see Tipu becoming an emperor, but suggested that if some of the suggested remedial Hindu rituals were performed; he could achieve his cherished ambition. Believing these sayings of the astrologers, Tipu performed all Hindu pujas in the Sri Ranaganatha Swami temple as suggested by the astrologers. This act is being widely interpreted by leftist and minority historians as the love and respect for Hindu religion and traditions by Tipu. But there is a long list of Hindu temples that were desecrated and razed down by Tipu and his moslem army in South India mainly in Kodagu and Malabar. On the eve of his death there were only two Hindu temples left standing with in the Srirangapatanam fortress.


Narayanaperumal Kshetram, Talakolatur, Calicut, 1900 (Destroyed by mysore sultan invasions)

When Hyder Ali captured the throne of Mysore in a treacherous way from Immadi Krishnaraja Wodeyar II, the royal family of Mysore was kept under house arrest. But the queen of Wodeyar, Lakshmi Ammani Devi constantly made efforts for restoration of the rule of Mysore royal family after looking at various atrocities committed on the hindu population by the government. She started negotiating with the british in 1760s with the help of her Pradhan, Tirumala Iyengar which resulted in the imprisonment of relatives of Tirumala Iyengar by Hyder Ali. These people were called as Mandyam Iyengars and they lived between Mandya and Srirangapatnam area, mainly in Melkote.

Some years later during his rule, Tipu came to know of an agreement between General Harris, the then Governor of Madras, and Tirumala iyengar. As he already was trying to destroy the allies of british by repeatedly waging wars on the kingdom of Travancore, Tipu decided to end the other uprisings happening against his atrocities in his kingdom. Hence Tipu thought of massacring the Iyengars who were living in Melkote. The day he selected for this was Naraka Chaturdashi. When all Mandyam Iyengars were immersed in Deepavali celebrations, Tipu’s men entered Melkote and massacred at least 800 people including women and children. The survivors abandoned Melkote and ran away and the town became a ghost town. Friends and relatives of Tirumala Iyengar were killed in cold blood. Thus Naraka Chaturdashi became a black day in the history of Mandyam Iyengars belonging to Bharadwaja gothra who were the people massacred on this fateful day.

After the genocide of these Brahmins of Karnataka, their descendents till date have not celebrated a single Deepavali festival. The cruelty inflicted on the innocents has parallel only to the christian Nazi concentration camps of the second world war. The Karnataka Brahmins belonging to community of the Mandyam Iyengars of Bharadwaja gothra observe Deepavali as a Dark Day.

As per the reputed historian, Benjamin Lewis Rice, who wrote the History of Mysore, he states Tipu as a muslim fanatic. As per B. L. Rice, on the eve of Tipus death there were only two Hindu temples left standing within the Srirangapatanam fortress. It was only for the satisfaction of his Hindu astrologers who bluffed Tipu that he will one day be an emperor of entire India that Tipu had spared those two temples. The entire wealth of every Hindu temple was looted before 1790 itself by Tipu.


The result of Tipus brutal conversion of Hindus in the south India is there for everybody to see today. Hindu population and prosperity were reduced in the areas where Tipu ruled. In these mini Pakistans, muslims run a mini Islamic state with many youths abducting hindu women from the regions of malabar and south karnataka and joining terrorist organizations like ISIS, Taliban etc., Thus it is left or us to decide whether to not repeat the mistakes which were earlier made to avoid such genocides or let them just unfold by singing the praise of such tyrants.








On his gifting Shiv Linga to Sringeri Mutt.Please refer my post on this.

He plundered Hindu temples and destroyed them.

I have provided a list of temples destroyed by him.

Not only this.

He forcibly circumcised  Hindus and made Brahmins eat Beef!

‘In the aftermath of the 1780 Battle of Pollilur, 7,000 British soldiers were held imprisoned by Haidar Ali and Tipu Sultan in the fortress of Seringapatnam. Of these, more than 300 were forcibly circumcised. Cromwell Massey, who kept a secret diary during his captivity, wrote: “I lost with the foreskin of my yard all those benefits of a Christian and Englishman which were and ever shall be my greatest glory.” Adolescent captives were, in addition to being circumcised, made to wear female clothes. James Bristow, a teenage artilleryman, revenged himself by circumcising dogs, believing that this would harm the religious feelings of the Muslim warders. The prospect of punishment did not deter him, because “compelling us to undergo an abhorred operation [was] so base and barbarous an act of aggression, that it was impossible to reflect on it with temper.”James Scurry, also a prisoner of war, confirms in his book, The Captivity, Sufferings, and Escape of James Scurry (1824), that English soldiers, Mangalorean Catholics, and other prisoners were forcibly circumcised.[31] In 1784, when Tipu returned fromMangalore, he brought back tens of thousands of Mangalorean Catholics from Kanara and subjected them to forced circumcision. A Hindi idiom ‘Mar-mar ke Musalman bana’ (meaning ‘make Muslim by repeated beating’) can be traced to originate from forcible conversion of Hindus.”





According to the official report of Col. Fullarton of the British forces stationed in Mangalore, “(During the siege 1783) Tipu’s soldiers daily exposed the heads of many innocent Brahmins within sight from the fort for Zamorin and his Hindu followers to see. It is asserted that the Zamorin rather than witness such enormities and to avoid further killing of innocent Brahmins, chose to abandon the Palghat Fort” Further he states- “It was not only against the Brahmins who were thus put in a state of terror of forcible circumcision and conversion; but against all sections of Hindus. In August, 1788, a Raja of the Kshatriya family of Parappanad and also Trichera Thiruppad, a chieftain of Nilamboor, and many other Hindu nobles who had been carried away earlier to Coimbatore by Tipu Sultan, were forcibly circumcised and forced to eat beef.” an anti-Vedic practice as Hindus consider Cow as Holy Mother for her selfless contribution to the world and humans.

Genocide of Hindus by Brutal Tipu Sultan

The world-famous Protuguese traveller, Fr. Barthoelomeo, writes in his book Voyage to East Indies : “Tipu was riding on an elephant behind which another army of 30,000 soldiers followed. Most of the men and women were hanged in Calicut, first mothers were hanged with their children tied to necks of mothers. That barbarian Tipu Sultan tied the naked Christians and Hindus to the legs of elephants and made the elephants to move around till the bodies of the helpless victims were torn to pieces. Temples and churches were ordered to be burned down, desecrated and destroyed. Christian and Hindu women were forced to marry (mlecchas) mohammadans and similarly their men (after converting Hindu men into Islam) were forced to marry mohammadan women. Those Hindus, Christians who refused to be honoured with Islam, were ordered to be killed by hanging immediately.”





மறக்கடிக்கப்பட்ட மாவீரன் திப்புசுல்தான்
ஆங்கிலேயர்கள்  திப்பு சுல்தான்
1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.

tippu sultan‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் “ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ - The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பல யுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர் போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரியத் தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர். சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்து கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’ என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து கொண்டதால் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்தும்வரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடி கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம், கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர். குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம் “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர்த் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி

ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை

திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.

இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விழைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்

அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரைக் கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடை செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு

‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக நாயர் சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திரப் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணைக் கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகைய கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாக திப்பு கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்

திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டு தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வு கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலைச் செய்து் கொண்டனர்’ என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி., ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்குக் காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார்.

திப்புவின் விவசாயக்கொள்கை

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்கு குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும் பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதிம் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக் கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போர்களத்தில் நேர்மை

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்துப் பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”

மக்கள் சக்தியை திரட்டியவர்

ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி ்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்” என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ‘கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனைக் கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.

அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.


- முத்துப்பேட்டை



















No comments:

Post a Comment