Sunday 19 January 2020

PLAYBACK SINGER T.M.SOUNDARAJAN




PLAYBACK SINGER T.M.SOUNDARAJAN



பின்னணிப் பாடல் ரேஸில் திரும்பி பார்த்த போது !

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணே­சன் ஆகி­யோர் நடித்த படங்­க­ளின் எண்­ணிக்கை, 1957ல் எப்­படி இருந்­தது? அந்த ஆண்டு வந்த முப்­பது படங்­க­ளில், ஏழு படங்­க­ளில் சிவா­ஜி­யும், எட்­டுப் படங்­க­ளில் ஜெமி­னி­யும், நான்கு படங்­க­ளில் எம்.ஜி.ஆரும் நடித்­தி­ருந்­தார்­கள். அறு­பது சத­வீ­தப் படங்­கள் இவர்­கள் வசம்! இவர்­கள் காட்­டில் மழை. இந்த கால­கட்­டத்­தில் இவர்­கள் தமிழ் சினி­மா­வின் ‘மூவேந்­தர்­கள்’ என்று அழைக்­கப்­பட்­டார்­கள்.

இவர்­கள் இந்த நிலையை அடைந்­தது எப்­படி? ‘மலைக்­கள்­ளன்’ (1954), ‘அலி­பா­பா­வும் 40 திரு­டர்­க­ளும்’ (1955), ‘குலே­ப­கா­வலி’ (1955), ‘தாய்க்­குப்­பின் தாரம்’ (1956), ‘மதுரை வீரன்’ (1956) முத­லிய திரைப்­ப­டங்­க­ளின் வெற்­றி­யால் ஒரு சாகச நாய­க­னாக எம்.ஜி.ஆர் பரி­ண­மித்­தி­ருந்­தார்.

‘பரா­சக்தி’ (1952), ‘மனோ­கரா’ (1954), ‘மங்­கை­யர் தில­கம்’ (1955) போன்ற படங்­க­ளின் வெற்­றி­யும், இடை­ய­றாத நடிப்­பால் வந்­து­கொண்­டி­ருந்த பற்­பல படங்­க­ளும் சிவாஜி கணே­சனை ஒரு நட்­சத்­திர நடி­க­னாக ஆக்­கி­யி­ருந்­தன.

‘மனம்­போல மாங்­கல்­யம்’ (1953), ‘பெண்’ (1954), ‘மாமன் மகள்’ (1955), ‘மிஸ்­ஸி­யம்மா’ (1955), ‘கண­வனே கண்­கண்ட தெய்­வம்’ (1955), ‘பெண்­ணின் பெருமை’ (1956) முத­லிய படங்­க­ளின் வெற்றி, ஜெமினி கணே­சனை மிரு­து­வான ஹீரோ­வாக நிலை­நி­றுத்­தி­யி­ருந்­தது.

இவர்­கள் மூவ­ருக்­கும் டி.எம். சவுந்­த­ர­ரா­ஜன் பாடிக் கொண்­டி­ருந்­தார். இன்­னா­ருக்கு இன்ன பின்­ன­ணிப் பாட­கர்­தான் பாட­வேண்­டும் என்ற வரை­ய­றை­கள் கடு­மை­யாக இல்­லாத காலம் அது. நடி­க­ருக்­குப் பொருத்­த­மான பின்­ன­ணிப் பாட­கர் என்­பதை விட, ஒரு குறிப்­பிட்ட பாடலை எந்­தப் பாட­க­ரால் நன்­றா­கப் பாட முடி­யும் என்ற எண்­ணத்­தில் இசை­ய­மைப்­பா­ளர்­கள் பாட­கர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­தார்­கள். ‘வணங்­கா­மு­டி’­­யில் சிவா­ஜிக்கு சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன், டி.எம். சவுந்­த­ர­ரா­ஜன் மற்­றும் ஏ.எம்.ராஜா என்று பாட­லுக்கு ஏற்ப, பாட வைத்­தி­ருந்­தார் இசை­ய­மைப்­பா­ளர் ஜி.ராம­நா­தன்!

‘வணங்­கா­மு­டி’­­யில், ஒரு சிற்பி, மலை­யிலே பல அழ­கான சிற்­பங்­களை வடித்த பின், மலை­யையே அழ­கு­ப­டுத்­தி­விட்­டோம் என்ற உற்­சா­கத்­தில், ‘மலையே உன் நிலை­தன்னை பாராய்’ என்று அற்­பு­த­மா­கப் பாடும் பாடல், சிவா­ஜிக்­காக சீர்­கா­ழி­யின் குர­லில் வெளிப்­பட்­டது.

‘ஓம்­கா­ர­மாய் விளங்­கும் நாதம்’ என்று மணி­யோசை போல­வும், ‘மோகன புன்­னகை வீசி­டும் நிலவே’ என்று (பி.சுசீ­லா­வு­டன்) குழை­வா­க­வும் சவுந்­த­ர­ரா­ஜ­னின் குர­லும் சிவா­ஜிக்கு ஒலித்­தது.

ஒரு கன­வுக் காதல் காட்­சி­யில், ‘வாழ்­வி­னிலே, வாழ்­வி­னிலே, இந்­நாள் இனி வருமா’ என்று, அலுங்­கா­மல் குலுங்­கா­மல் வந்த ஏ.எம்.ராஜா­வின் குர­லுக்கு சிவாஜி வாய­சைத்­தார்!

‘சக்­க­ர­வர்த்­தித் திரு­ம­கள்’ படத்­தில் எம்.ஜி.ஆருக்­கான அனைத்­துப் பாடல்­க­ளை­யும் சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன் பாடி­னார். ‘எல்லை இல்­லாத இன்­பத்­திலே இணைந்­தோம் இந்த நாளே’ என்று எம்.ஜி.ஆரும் அஞ்­ச­லி­தே­வி­யும் குதூ­க­லிக்­கும் காட்­சி­யில், எம்.ஜி.ஆரின் காதலை வெளிப்­ப­டுத்­தும் சங்­கீத குர­லாக சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன் செயல்­பட்­டார். பட­மும் வெற்றி அடைந்­தது. எம்.ஜி.ஆருக்கு சீர்­காழி பாடும் ஒரு வழக்­கம் வலுப்­பெற்­றது. ‘ராஜ­ரா­ஜன்’, ‘நாடோடி மன்­னன்’, ‘நல்­ல­வன் வாழ்­வான்’ உட்­பட பல படங்­க­ளில் இது தொடர்ந்­தது.

‘நல்­ல­வன் வாழ்­வா’­­னில் இடம்­பெற்ற ‘ஆண்­ட­வன் ஒரு­வன் இருக்­கின்­றான்’ பாட­லில் எம்.ஜி.ஆரின் சாமி­யார் மேக்–­­அப்­பைப் போலவே, சீர்­கா­ழி­யின் குர­லும் அமர்க்­க­ள­மாக அமைந்­தது.

‘‘சத்­தி­யத்­தின் எல்­லை­யிலே, உயர்

சம­ரச நெறி­க­ளிலே, அன்­பின்

சக்­தி­யிலே, தேச பக்­தி­யிலே, நல்ல

சமத்­து­வம் காட்­டும் சன்­மார்க்­கத்­திலே, ஆண்­ட­வன் இருக்­கின்­றான்’’ என்று சீர்­கா­ழி­யின் வெண்­கல நாதம் எம்.ஜி.ஆர். வாயி­லாக வெளிப்­பட்­டது.


சி.எஸ்.ஜெய­ரா­ம­னும் எம்.ஜி.ஆருக்கு சில படங்­க­ளில் பாடிக் கொண்­டி­ருந்­தார் (‘புது­மைப்­பித்­தன்’, ‘ராஜா­தே­சிங்கு’). ‘பக­லிலே பித்­தன், இர­விலே முக­மூடி அணிந்த புது­மைப்­பித்­தன்’ என்று தன்­னு­டைய பாத்­தி­ரத்தை எம்.ஜி.ஆர். வர்­ணிக்­கும் இந்த படத்­தில், ‘மேளம் கட்டி தாலி கட்டி’ என்று சி.எஸ்.ஜெய­ரா­மன் குர­லிலே எம்.ஜி.ஆர். ஒரு அட்­ட­கா­சப் பாட­லுக்கு வாய­சைத்­தார்.

தி.மு.கழ­கத்­தில் இணை­யும் முன், நண்­பர்­களை ‘ஆண்­ட­வனே’ என்று விளித்­துக்­கொண்­டி­ருந்த எம்.ஜி.ஆருக்கு இந்­தப் பாட­லின் வாயி­லாக பழைய நினை­வு­கள் புதுப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கும்! ‘உள்­ளம் ரெண்­டும் ஒன்று’ என்று ‘புது­மைப்­பித்­த’­­னில் இடம்­பெற்ற இரு­கு­ர­லி­சை­யில், எம்.ஜி.ஆருக்கு சி.எஸ்.ஜெய­ரா­மன் பாடி­யது ஒரு வெற்­றிப் பாட­லாக அமைந்­தது.

சிவா­ஜி­யின் முதல் பட­மான ‘பரா­சக்­தி’­­யில் அவ­ருக்­குப் பாடிய சி.எஸ். ஜெய­ரா­மன், ஒரு சில

படங்­க­ளில் சிவா­ஜிக்­குத் தொடர்ந்து பாடிக்­கொண்­டி­ருந்­தார். ‘புதை­ய’­­லில் ‘விண்­ணோ­டும் முகி­லோ­டும்’, ‘தங்­கப்­ப­து­மை’­­யில் ‘ஆரம்­பம் ஆவது பெண்­ணுக்­குள்ளே’, ‘தெய்­வப்­பி­ற­வி’­­யில் ‘அன்­பாலே தேடிய அறி­வுச் செல்­வம் தங்­கம்’, ‘பாவை விளக்’­­கில் ‘ஆயி­ரம் கண் போதாது வண்­ணக்­கி­ளியே’, ‘குற­வஞ்­சி’­­யில் ‘நீ சொல்­லா­வி­டில் யார் சொல்­லு­வார் நிலவே’ என்று ஒரு தனி முத்­தி­ரை­யு­டன் இந்த பாடல்­கள் அமைந்­தன.

தனக்கு ஜெய­ரா­மப் பிள்­ளை­தான் பாட­வேண்­டும் என்று ‘பரா­சக்­தி’­­யைத் தொடர்ந்து சிவாஜி கணே­சனே கூறிக்­கொண்­டி ­ருந்­த­தற்கு ஏற்ப, சிவா­ஜி-–சி.எஸ்.ஜெய­ரா­மன் என்ற இணைவு, அறு­ப­து­க­ளின் தொடக்­கம் வரை சுமார் பத்­தாண்­டு­கள் தொடர்ந்­தன!

இதற்­கெல்­லாம் இடை­யில், மூவேந்­தர்­க­ளில் முதல் இரண்டு ஸ்தானங்­களை வகித்த எம்.ஜி.ஆருக்­கும் சிவா­ஜிக்­கும் கச்­சி­த­மா­கப் பொருந்­திய குர­லாக சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு ஒரு தனி­யி­டம் உரு­வா­கிக் கொண்­டி­ருந்­தது.

எடுத்த எடுப்­பில் பளிச்­சென்று ஒலித்து, இனி­மை­யு­டன் ரசி­கர்­க­ளைச் சென்­ற­டை­யும் சவுந்­த­ர­ரா­ஜ­னின் குரல்­வாகு அவ­ருக்கு அதிக வர­வேற்பை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது.

சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு ‘கிருஷ்ண விஜ­யம்’ படத்­தில் முதல் பாட­லைக் கொடுத்த சுந்­த­ர­ராவ் நட்­கர்னி, ‘மகா­தேவி’ என்ற படத்­தைப் பாகஸ்­தர்­க­ளு­டன் தயா­ரித்து, இயக்­கி­னார். திரைக்­கதை – வச­னம் எழு­தி­னார் கண்­ண­தா­சன். ‘மணந்­தால் மகா­தேவி, இல்­லை­யேல் மர­ண­தேவி’ என்று இந்த படத்­தில் பி.எஸ்.வீரப்பா பேசிய வச­னம் பல வரு­டங்­கள் ஒலித்­துக் கொண்­டி­ருந்­தது.

‘மகா­தே­வி’­­யில் தலைமை வேடத்­தில் நடித்த சாவித்­தி­ரிக்கு எம்.எஸ்.ராஜேஸ்­வரி, ஜமு­னா­ராணி, பி.சுசீலா, டி.எஸ்.பக­வதி என்று மாறு­பட்ட குரல்­கள் ஒலித்­தன. சவுந்­த­ர­ரா­ஜன் விஷ­யத்­தில் இவ்­வ­ளவு மாறு­பா­டு­கள் இல்லை என்­றா­லும், ‘மகா­தே­வி’­­யின் அனைத்­துப் பாடல்­க­ளும் அவ­ருக்­குக் கொடுக்­கப்­ப­ட­வில்லை.

‘கண்­மூ­டும் வேளை­யி­லும் கலை என்ன கலையே’ என்று ஏ.எம்.ராஜா­வின் குர­லி­லும் எம்.ஜி.ஆர். பாடி­னார்! ராஜா­வும், சுசீ­லா­வும் மிரு­து­வான மெட்­டில் இணைந்த போது பாடல் இனிக்­கத்­தான் செய்­தது. மற்­ற­படி, பாடல்­க­ளில் கருத்து வலி­மை­யாக வெளிப்­ப­ட­வேண்­டும் என்­றால், ‘சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­குப் பாட­லைக் கொடு’ என்ற எண்­ண­வோட்­டம் இருந்­தது.

‘மகா­தே­வி’­­யில் பொல்­லா­த­வர்­க­ளின் சூழ்ச்­சிக்கு ஆளாகி, வேஷத்­திற்­குள் எம்.ஜி.ஆர். பதுங்­க­வேண்­டிய நிலை வரு­கி­றது. கண் தெரி­யா­த­வ­ராக, தெரு­வில் தாயத்து விற்­றுக் கொண்டு வரு­கி­றார்.

‘இதிலே வசி­யம் பண்ற வேலை­யி­ருக்கா?’

‘வரு­மா­னத்­திற்கு இதிலே ஏதா­வது இருக்கா?’

‘பொம்­ப­ளைங்­கள மயக்க முடி­யுமா?’.....

....முத­லிய கேள்­வி­க­ளுக்கு, ‘தம்பி.. அதெல்­லாம் செய்­யாது... இது வேற’ என்று தாயத்­துப் பாட­லில் பதில் கூறி, பகுத்­த­றிவு (!) பாதை­யைக் காட்­டு­கி­றார் எம்.ஜி.ஆர்!

‘மந்­தி­ரம் வசி­ய­மில்லை, மாயா­ஜால வேலை­யில்லை, வாழ்க்­கைக்கு ரொம்ப ரொம்ப அவ­சி­யம், இதில் மறைஞ்­சி­ருக்கு அரிய பெரிய ரக­சி­யம்’ என்று திரை­யில் எம்.ஜி.ஆர். பாடு­கி­றார். ‘இள­வ­ர­சர் உயி­ரு­டன் இருக்­கி­றார்’ என்­ப­து­தான் தாயத்­திற்­குள் இருக்­கும் செப்­புத்­த­கட்­டில் உள்ள சேதி. இள­வ­ர­சர் இறந்­து­விட்­டார் என்று எண்­ணும் மக்­க­ளுக்கு ரக­சி­ய­மாக இதைச் சொல்­லத்­தான் இந்த தாயத்து விற்­கும் வேலை!

சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு ஒரு பிறவி குணம். உணர்ச்­சி­கள் அவர் மன­தில் கரை­பு­ர­ளும். எந்த உணர்ச்­சி­யா­னா­லும் அதில் தன்னை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக்­கொண்டு அதன் எல்­லை­யைக் காண்­பார். இயக்­கு­நரோ, உதவி இயக்­கு­நரோ பாட­லுக்­கான சூழலை அவ­ரி­டம் விவ­ரித்­து­விட்­டால், ஒரு கற்­பனை உல­கில் சஞ்­ச­ரிக்­கத் தொடங்­கி­வி­டு­வார்.

ஜாத­கப்­ப­டிப் பார்த்­தால் கற்­பனை வளத்­தைக் குறிக்­கும் சந்­திர கிர­கம் அவ­ரு­டைய ஜாத­கத்­தில் உச்­சம்! ஒரு கற்­ப­னை­யோட்­டம் அவ­ருக்­குள் இருந்­து­கொண்டே இருக்­கும். இசை­ய­மைப்­பா­ ளர்­கள் மெட்­டுக்­க­ளைத்­தான் சொல்­லிக் கொடுக்க முடி­யும். உணர்ச்­சியை எப்­ப­டிச் சொல்­லிக்­கொ­டுப்­பது? அது அவ­ர­வர்­க­ளுக்கு வர­வேண்­டிய ஒன்று.

‘குறுக்கு வழி­யில் வாழ்வு தேடி­டும் குருட்டு உல­க­மடா, தம்பி தெரிந்து நடந்­து­கொள்­ளடா, இத­யம் திறந்து மருந்து சொல்­லடா’ ...என்று ‘மகா­தே­வி’­­யில் தம்­பி­க­ளுக்கு எம்.ஜி.ஆர்.அறி­வுரை சொல்­லும் போது, சவுந்­த­ர­ரா­ஜன் அதை ஒரு பெரு­மித உணர்­வு­டன் வெளி­யிட்­டது தான் அதற்­குக் கூடு­தல் ஈர்ப்­பைக் கொடுத்­தது. இதைக் கண்­டு­கொண்ட எம்.ஜி.ஆர், பின்­னா­ளில் ‘பாட­லைப் பாடும்­போது புன்­னகை செய்து கொண்டே பாடுங்­கள். அந்த மகிழ்ச்சி பாட்­டில் வெளிப்­பட்டு, கேட்­ப­வர்­கள் மன­தி­லும் பதி­யும்’ என்று கூறு­வார்.

சிவா­ஜி­யின் நட்பு வட்­டத்­தில் இருந்த

வி.கே.ராம­சா­மி­யும், ‘நான் பெற்ற செல்­வம்’

படத்­தில் சிவா­ஜிக்கு வெற்­றி­க­ர­மா­கக் கதை,

வச­னம் எழு­திய ஏ.பி.நாக­ரா­ஜ­னும், இணைந்து ‘ஸ்ரீலட்­சுமி பிக்­சர்ஸ்’ என்ற படத்­த­யா­ரிப்பு

நிறு­வ­னம் தொடங்­கி­னார்­கள். அவர்­கள் எடுத்த படம், ‘மக்­க­ளைப் பெற்ற மக­ராசி’ (1957). உணர்ச்­சி­வ­சப்­ப­டும் எழுத்­த­றி­வில்­லாத விவ­சாயி செங்­கோ­ட­னாக தகுந்த மேக்­கப்­பு­டன் தோன்றி, கொங்கு நாட்­டுத் தமி­ழில் பொரிந்து தள்­ளி­னார் சிவாஜி.

விவ­சாயி பணி­யாற்­றும் சூழலை நிறுவ, ‘மணப்­பாறை மாடு­கட்டி’ பாடல் பயன்­பட்­டது. மரு­த­காசி எழு­திய பாட­லின் பிர­தியை கண்­ணில் ஒத்­திக்­கொண்டு கையில் வாங்­கு­கி­றார் சவுந்­த­ர­ரா­ஜன்.

‘பொன்னு விளை­யிற பூமி­யடா -- வெவ­சா­யத்தை

பொறுப்பா கவ­னிச்சு செய்­வோ­மடா

உண்­மையா உழைக்­கிற நமக்கு - எல்லா

நன்­மை­க­ளும் நாடி வந்து கூடு­தடா’ ....என்ற வரி­கள் தொகை­யறா என்று குறிக்­கப்­பட்­டி­ருந்­தது.

‘மணப்­பாறை மாடு கட்டி, மாய­வ­ரம் ஏரு பூட்டி

வயக்­காட்டை உழுது போடு சின்­னக் கண்ணு - பசுந் தழை­யைப் போட்­டுப் பாடு­படு செல்­லக்­கண்ணு’ என்ற பல்­ல­வி­யு­டன் பாடல்

தொடங்­கி­யது.

கிரா­மத்­துப் பாட­லுக்கு ஒரு துள்­ள­லும் விறு­வி­றுப்­பும் கொடுக்­கும் வகை­யில் திஸ்ர கதி­யில் மெட்­ட­மைக்­கப்­பட்­டி­ருந்­தது. சிந்து பைரவி ராகத்­தில் அமைந்த நாட்­டுப்­புற மெட்­டி­னு­டைய ஒத்­தி­கை­யின் இடை­யில் வந்­தார், கர்­நா­டக இசைப் பாட­கர் மதுரை சோமு. ‘உங்க ஊர்க்­கா­ரர் பாட­றார்’ என்று சோமு­வி­டம் சவுந்­த­ர­ரா­ஜ­னைக் காட்­டி­னார் கே.வி.மகா­தே­வன்.

‘ஒரு கட்டை ஸ்ருதி வையப்பா’ என்று வாத்­தி­யக்­கா­ரர்­க­ளி­டம் கூறி­னார் மகா­தே­வன். தபே­லாக்­கா­ர­ரும் ஆர்­மோ­னி­யம் வாசிப்­ப­வர்­க­ளும் தயா­ரா­னார்­கள். அப்­போது மதுரை சோமு சவுந்­த­ர­ரா­ஜ­னின் தொடை­யில் தட்­டி­னார். ‘ஏம்பா சவுந்­த­ர­ரா­ஜன்.. நீ பாக­வ­தர் பாட்­டெல்­லாம் பாடு­வியே.. ஒரு கட்டை ஸ்ருதி­யிலா பாடற’ என்­றார் சோமு!

கீழ் ஷட்­ஜ­மத்­தி­லி­ருந்து அல்ல, எடுப்பு மேல் ஷட்­ஜ­மத்­தி­லி­ருந்து கம்­பீ­ர­மா­கப் புறப்­ப­டு­வ­தைக் கேட்­ட­வு­டன் சோமு மகிழ்ந்­தார்.

‘பொன்னு வெளை­யிற பூமி­யடா’ என்று குரல் நாளங்­களை அடக்கி, நாதத்தை உணர்ச்­சி­யின் அழுத்­தத்­து­டன் சவுந்­த­ர­ரா­ஜன் தெளி­வாக வெளி­யிட்­ட ­­போது மதுரை சோமு­வு­டன் படத்­தின் இயக்­கு­ந­ரான கே.சோமு­வும் மகிழ்ந்­தார்!

பாடல்­க­ளுக்கு வீரி­யத்­தைக் கொடுக்­கும் நல்ல ‘பிச்’­­சில் பாடி, பாடல் எவ்­வ­ள­வு­தான் மேலே சென்­றா­லும் குரல் இனி­மை­யும் காத்­தி­ர­மும் குறை­யா­மல் இசைத்து, தனித்­தன்மை காட்­டி­னார் சவுந்­த­ர­ரா­ஜன். அவ­ரு­டைய குரல் அதற்கு இடம் கொடுத்­தது.

இத­னால், அறு­ப­து­க­ளில் சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய இரு பெரும் நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு அவர்­களே பாடு­கி­றார்­களோ என்று பார்ப்­ப­வர்­கள் எண்­ணும்­ப­டிப் பாடக்­கூ­டி­ய­வர் என்ற பெரு­மை­யைப் பெற்­றார். பின்­ன­ணிப் பாடல் ரேஸில் சவுந்­த­ர­ரா­ஜன் முதன்­மை­யாக வந்த போது, திரும்பி பார்த்­தால் மற்­ற­வர்­கள் காணா­மல் போயி­ருந்­தார்­கள்.

No comments:

Post a Comment