Monday 20 January 2020

MGR THE LEGEND





MGR THE LEGEND



உதவிக்கரம் நீட்டிய வள்ளல்!


பிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...

ஐம்­ப­து­க­ளின் முற்­ப­குதி.

ஒரிசா மாநி­லத்­தில் பெரும் வெள்­ளம் ஏற்­பட்டு, ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் வீடு வாசல்­க­ளை­யும் உடை­மை­க­ளை­யும் வாழ்க்­கை­யை­யும் இழந்து தவிக்­கும் அவ­ல­நிலை ஏற்­பட்­டது. நிவா­ரண நிதிக்கு உத­வும்­படி ஒரிசா அரசு அறிக்­கை­யும் தந்­தது.

ஒரி­சா­வைச் சேர்ந்த சில மாண­வர்­கள் அப்­போது சென்­னை­யில் தங்கி, மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் படித்து வந்­தார்­கள். நிவா­ரண நிதிக்கு பணம் திரட்­டித்­தர அவர்­கள் விரும்­பி­னார்­கள். என்னை வந்து சந்­தித்­தார்­கள். வைஜ­யந்­தி­மா­லா­வும் கிஷோர்­கு­மா­ரும் நடித்த ‘நியூ­டெல்லி’ என்ற இந்­திப்­ப­டம் வட இந்­திய நக­ரங்­க­ளில் திரை­யி­டப்­பட்டு பெரும் வெற்­றி­யு­டன் ஓடிக்­கொண்­டி­ருந்­தது.

‘ஒரிசா நிவா­ரண நிதிக்­காக, சென்னை ‘அசோக்’ திரை­ய­ரங்­கில் (தற்­போ­தைய ‘சிவ­சக்தி’) ‘நியூ டெல்லி’ படத்தை காலைக் காட்­சி­யா­கத் திரை­யி­டப் போகி­றோம். எம்.ஜி.ஆர். அவர்­களை நிகழ்ச்­சிக்­குத் தலைமை வகிக்க நீங்­கள் ஏற்­பாடு செய்து தர­வேண்­டும். அவர் வந்­தால் வசூல் அதி­க­மா­கக் கிடைக்­கும்” என்று அந்த மாண­வர்­கள் என்­னி­டம் கேட்­டுக் கொண்­டார்­கள். நான், எம்.ஜி.ஆர். அவர்­க­ளைச் சந்­தித்து இது­பற்­றிச் சொன்­னேன்.

“அவ­திப்­ப­டும் மக்­கள் எங்­கி­ருந்­தால் என்ன, யாரா­யி­ருந்­தால் என்ன? அவர்­க­ளது துய­ரத்­தைத் துடைக்க வேண்­டி­யது நமது கடமை. நல்ல நோக்­கத்­திற்­காக இவர்­கள் அழைக்­கி­றார்­கள். நிச்­ச­யம் கலந்து கொள்­கி­றேன்” என்று எம்.ஜி.ஆர். அவர்­கள் சொன்­னார்­கள். ஒரிசா மாண­வர்­க­ளுக்கு பெரும் மகிழ்ச்சி.

எம்.ஜி.ஆர். அவர்­கள் அப்­போது தி.மு.க.வில் ஒரு முக்­கிய புள்ளி. இந்தி எதிர்ப்­பில் அக்­கட்சி தீவி­ர­மாக இருந்­தது. “இந்தி படத்­திற்கு அழைக்­கி­றோமே, அவர் வரு­வாரா என்ற சந்­தே­கம் இருந்­தது. பயந்­த­ப­டி­தான் இருந்­தோம். எங்­க­ளுக்கு பெரும் மகிழ்ச்சி” என்று அந்த மாண­வர்­கள் தெரி­வித்­தார்­கள்.

“எம்.ஜி.ஆர். அவர்­கள் இந்­திக்கு எதி­ரா­ன­வர் அல்ல. அது மக்­கள் மீது திணிக்­கப்­ப­டும் முறை­யைக் கண்­டிக்­கி­றார். அவர் நடித்த மர்­ம­யோகி, சர்­வா­தி­காரி படங்­கள் இந்­தி­யில் மொழி மாற்­றம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. சொந்­தத்­தில் இந்­தி­யில் ஒரு படம் தயா­ரிக்­க­வும் அவர் திட்­ட­மிட்­டி­ருந்­தார். ஆனால் அது கைகூ­ட­வில்லை” என்று மாண­வர்­க­ளி­டம் எடுத்­துச் சொன்­னேன். அவர்­கள் நேரில் எம்.ஜி.ஆர். அவர்­க­ளைச் சந்­தித்து தங்­கள் மகிழ்ச்­சி­யை­யும் நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொண்­டார்­கள். விழா­வுக்­கான நாள் நெருங்­கிக் கொண்­டி­ருந்­தது.

இதற்­கி­டை­யில் ‘நியூ­டெல்லி’ படம் சென்­னை­யில் திரை­யி­டப்­பட்­டது. அதில் இடம் பெற்ற ஒரு காட்­சி­யைப் பற்றி சில பத்­தி­ரி­கை­கள் கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­தன. கண்­ட­னத்­துக்கு உள்­ளான காட்சி இது­தான்.

ஒரு பொது இடம். படத்­தின் நாய­கன் (கிஷோர் குமார்) ஒரு தமி­ழ­னின் தலை­யில் செருப்பை வைத்து ஆடிப் பாடி வரு­கி­றார் அங்கு கதா­நா­ய­கி­யும் (வைஜ­யந்தி மாலா) இருக்­கி­றார். “ஒரு தமிழ் நடிகை கதா­நா­ய­கி­யாக நடித்­துள்ள படத்­தில் எப்­படி இந்­தக் காட்சி இடம் பெற­லாம்? தணிக்­கை­யில் எப்­படி அனு­ம­தித்­தார்­கள்? தமிழ் நாட்­டில் இதை திரை­யிட அனு­ம­திக்­க­லாமா?” என்று விமர்­ச­னங்­கள் வர, ஒரே பர­ப­ரப்­பா­கி­விட்­டது. விழாவை ஏற்­பாடு செய்­தி­ருந்த மாண­வர்­க­ளுக்கு பெரும் பயம் வந்து விட்­டது. எம்.ஜி.ஆர் அவர்­கள் நிகழ்ச்­சிக்கு வரு­வாரா மாட்­டாரா என்ற கவ­லை­யு­டன் பதை­ப­தைப்­பு­டன் என்னை வந்து சந்­தித்­தார்­கள். இதற்­கி­டையே எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் பார்­வைக்­கும் இந்த விமர்­ச­னங்­கள் வந்­தன. அவர் என்னை அழைத்­தார். “தமி­ழர்­களை இழிவு செய்­யும் காட்­சி­யைக் கொண்ட இப்­ப­டத்­திற்கு நான் எப்­ப­டித் தலைமை வகித்து வசூ­லுக்கு உதவ முடி­யும்? இதை முன்­னமே நீங்­கள் ஏன் என்­னி­டம் சொல்­ல­வில்லை? என்னை தர்­ம­சங்­க­டத்­தில் வைத்து விட்­டீர்­களே!” என்று சற்று கடு­மை­யா­கவே என்­னி­டம் பேசி­னார்.

“அந்­தப் படத்தை நான் பார்க்­க­வில்லை. பார்த்­தி­ருந்­தால் உங்­களை அழைத்­தி­ருக்­கவே மாட்­டேன்!” என்­றேன். என்­னைப் புரிந்­து­கொண்ட நிலை­யில் “இப்­போது என்ன செய்­ய­லாம்?” என்­றார். ஒரிசா மாண­வர்­கள் என்­னைச் சந்­தித்­துப் பேசிய விவ­ரத்தை அவ­ரி­டம் சொன்­னேன்.

“அவர்­கள் நிர­ப­ரா­தி­கள். ஒரு நல்ல நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில்­தான் இதைத் திரை­யி­டு­கி­றார்­கள். பெரி­தாக விளம்­ப­ரம் செய்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு இந்த விஷ­யம் தெரிந்­தி­ருக்க நியா­ய­மில்லை. கடைசி நிமி­ஷத்­தில் நீங்­கள் மறுத்­து­விட்­டால் பெரி­தும் மனம் ஒடிந்து போய் ஏமாற்­ற­ம­டைந்து விடு­வார்­கள். தவிர, நீங்­கள் மறுத்­து­விட்­டால். வேறு எவ­ரும் முன்­வந்து தலைமை வகிக்­கத் துணி­ய­மாட்­டார்­கள் உங்­கள் விருப்­பப்­ப­டிச் செய்­ய­லாம்” என்­றேன். சில நிமி­ஷங்­கள் யோசித்த அவர், “விழா­வுக்கு வரு­கி­றேன். ஆனால் அதே சம­யம் என் எதிர்ப்­பை­யும் நான் காட்­டு­வேன்” என்­றார். “அது உங்­கள் தனிப்­பட்ட உரிமை. எவ­ரும் தலை­யிட முடி­யாது!” என்­றேன்.

விழா நாள் வந்­தது.







விரும்பத்தகாத கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி!

பிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...

‘கலை­ஞர்­க­ளுக்­குள் போட்டி இருக்­க­லாம். இத­னால் தொழி­லில் முன்­னேற்­ற­மும் வளர்ச்­சி­யும் காண முடி­யும். ஆனால் எந்த ஒரு கட்­டத்­தி­லும் பொறா­மை­யாக அது மாறி­வி­டக்­கூ­டாது. இது பெரும் பாதிப்பை வளர்ச்­சி­யில் ஏற்­ப­டுத்­தி­வி­டும்’ என்­பதை சந்­தர்ப்­பம் கிடைக்­கும் போதெல்­லாம் வலி­யு­றுத்தி வரு­வார் எம்.ஜி.ஆர். இதற்­கா­கவே நடி­கர்­கள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் அடிக்­க­டி சந்­தித்­திப் பேசிப் பழக வேண்­டும் என்ற கருத்­தி­னைக் கொண்­டி­ருந்த அவர் அதைச் செய­லி­லும் காட்டி வந்­தார்.

நடி­கர் சங்­கத்­தின் தலை­வ­ராக எம்.ஜி.ஆர். இருந்த சம­யம், ஒவ்­வொரு ஆண்­டும் பொங்­கல் விழாவை சங்­கத்­தின் சார்­பில் சிறப்­பா­கக் கொண்­டாட ஏற்­பாடு செய்­வார். நடி­கர் சங்­கத்­தில் (தற்­போ­தைய அ.தி.மு.க. தலை­மை­ய­கம்) கலை­ஞர்­க­ளுக்­கென பல கலை நிகழ்ச்­சி­கள், போட்­டி­கள், கருத்­த­ரங்­கு­கள் ஏற்­பாடு செய்­வார். கலை­ஞர்­க­ளைப் பங்­கேற்க வைப்­பார்.

விழா காலை­யி­லேயே ஆரம்­ப­மா­கி­வி­டும். மூத்த கலை­ஞர்­க­ளின் அறி­வு­ரை­க­ளு­டன் விழா ஆரம்­ப­மாகி, இரவு வரை தொட­ரும். காலை சிற்­றுண்டி, பக­லு­ண­வு­டன் இரவு விருந்­தும் இருக்­கும். அனை­வ­ரு­ட­னும் தரை­யில் அமர்ந்து வேடிக்­கை­யா­கப் பேசி­ய­படி உணவு அருந்­து­வார். பம்­ப­ரம் போலச் சுற்­றிச் சுழன்று எல்லா ஏற்­பா­டு­க­ளும் சரி­வர நடக்­கின்­ற­னவா என்­ப­தைக் கண்­கா­ணிப்­பார். எல்­லாக் கலை­ஞர்­க­ளை­யும் அவரே முன்­வந்து வர­வேற்று உப­ச­ரிப்­பார்; முகமலர்ச்­சி­யு­டன் விடை கொடுத்து அனுப்­பு­வார்.

பல வெற்­றிப் படங்­க­ளில் தொடர்ந்து நடித்து, ‘நடி­கர் தில­கம்’ எனப் போற்­றப்­பட்ட சிவாஜி கணே­சன், மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் மிக்க செல்­வாக்­கு­டன் திகழ்ந்து வந்­தார். அவ­ருக்கு ஒரு படி மேலாக எம்.ஜி.ஆரும் மிக்க செல்­வாக்­கு­டன் விளங்கி வந்­தார்.

இரண்டு கலை­ஞர்­க­ளுக்­கும் லட்­சக்­க­ணக்­கில் ரசி­கர்­கள் இருந்­தார்­கள். அவர்­க­ளி­டையே பலத்த போட்­டி­யும் இருந்­தது. தங்­க­ளது அபி­மான நடி­கர் மீது கொண்­டி­ருந்த அன்­பும் பாச­மும் சில சம­யம் இவர்­க­ளி­டையே வெறி­யா­கக்­கூட மாறி­யது. தங்­க­ளது அபி­மான நடி­க­ருக்­குப் போட்­டி­யாக இருந்த நடி­கர் நடித்த படங்­கள் திரை­யி­டப்­ப­டும் சம­யம் ஒட்­டப்­ப­டும் சுவ­ரொட்­டி­கள் மீது சாணம் அடிப்­ப­தும், சுவ­ரொட்­டி­க­ளைக் கிழிப்­பது போன்ற சம்­ப­வங்­க­ளூம் நடை­பெற்று வந்­தன.

திரைப்­ப­டத்­து­றை­யின் வளர்ச்­சி­யில் அக்­கறை கொண்ட பலர் இந்த இரண்டு கலை­ஞர்­க­ளை­யும் சந்­தித்து, விரும்­பத்­த­காத இந்­தக் கலா­சா­ரத்­திற்கு முற்­றுப் புள்ளி வைக்க முன்­வ­ரு­மாறு கேட்­டுக்­கொண்­டார்­கள்.

துர­தி­ர்ஷ்­ட­வ­ச­மாக அப்­போது ஒரு சம்­ப­வம் நடந்­தது. சீர்­கா­ழி­யில் நாட­கம் நடத்­த சென்­றி­ருந்த எம்.ஜி.ஆர்., நாடக மேடை­யில் எதிர்­பா­ராத வகை­யில் விபத்­துக்­குள்­ளாகி, அவ­ரது கால் எலும்பு முறிந்து போனது. நாட­கத்தை மேற்­கொண்டு நடத்த முடி­யாத நிலை­யில், எம்.ஜி.ஆர். சென்­னைக்கு உடனே திரும்பி, பூந்­த­மல்லி நெடுஞ்­சா­லை­யில் உள்ள ஒரு தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­கா­க சேர்க்­கப்­பட்­டார்.

திரைப்­ப­ட­வு­ல­கை­யும், லட்­சக்­க­ணக்­கான அவ­ரது ரசி­கர்­க­ளை­யும் இச்­சம்­ப­வம் மிக்க துய­ரத்­திற்­குள்­ளாக்­கி­யது. அவர் பூரண குணம் பெற்று விரை­வில் திரும்ப வேண்­டும் என அனை­வ­ரும் மன­தார விரும்­பி­னார்­கள்.

இந்த நிலை­யில் நானும், என்­னு­டன் அப்­போது ‘பேசும் படம்’ பத்­தி­ரி­கை­யில் பணி­யாற்றி வந்த எஸ்.வி. சம்­பத்­கு­மா­ரும் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று எம்.ஜி.ஆரை பார்த்­தோம். அவ­ரது உடல்­ந­லம் பற்றி விசா­ரித்து அவர் பூரண குணம் பெற்று விரை­வில் திரும்ப வேண்­டும் என வாழ்த்­தி­னோம்.

‘பயப்­பட எது­வு­மில்லை. விரை­வில் குண­ம­டைந்து, முன்பு இருந்­ததை விட முழு உற்­சா­கத்­து­டன் படப்­பி­டிப்­பில் கலந்து கொள்­வேன். இதை என் ரசி­கர் களுக்­குத் தெரி­வி­யுங்­கள்’ என்று எங்­க­ளுக்கு ஆறு­தல் சொல்லி, தன்­னம்­பிக்­கை­யு­டன் பதில் தந்­தார்.

பேச்­சுக்­கி­டை­யில் அவ­ரி­டம் நாங்­கள் விளம்­ப­ரச் சுவ­ரொட்­டி­க­ளில் சாணம் அடிப்­பது பற்­றி­யும், கிழித்து அலங்­கோ­லப்­ப­டுத்­து­வ­தைப் பற்­றி­யும் குறிப்­பிட்டு, ‘இதை நிறுத்த நீங்­கள் உட­ன­டி­யாக ஏதா­வது முயற்சி எடுக்க வேண்­டும்’ என்று கேட்­டுக்­கொண்­டோம்.

அப்­போ­தைய சூழ்­நி­லை­யை­யும், உடல் நிலை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், ‘உண­மை­தான். இதை உடனே செய்ய வேண்­டும். எனது ரசி­கர்­கள் இம்­மா­திரி நடந்து கொள்­ள­மாட்­டார்­கள். அப்­படி அவர்­கள் செய்­வார்­க­ளே­யா­னால் எனக்கு அதில் உடன்­பாடே கிடை­யாது!’ என உணர்ச்சிவசப்­பட்­டுச் சொன்­னார் அவர்.

'இதையே ஓர் அறிக்­கை­யாக நீங்­கள் தந்­தால் ‘பேசும் படம்’ இத­ழில் வெளி­யி­டு­வோம். உங்­களை உங்­கள் ரசி­கர்­கள் புரிந்து கொள்ள ஏது­வா­கும்' என்று நாங்­கள் சொன்­ன­தும், உடனே ஓர் அறிக்­கை­யை­யும் தயா­ரித்­துக் கொ­டுத்­தார். அறிக்­கை­யின் முடி­வில் புகைப்­ப­டத்­து­டன், தனது கையெ­ழுத்­தை­யும் வெளி­யி­டும்­ப­டிக் கேட்­டுக்­கொண்டு, தன் கையெ­ழுத்­தை­யும் போட்­டுத் தந்­தார்.

எம்.ஜி.ஆர். விருப்­பப்­ப­டியே ‘பேசும் படம்’ இத­ழில் அந்த அறிக்­கை பிர­சு­ரிக்­கப்­பட்டு அதற்­கான பல­னும் விரை­வில் கிடைத்­தது. சாணம் அடிப்­பது நீங்­கி­யது.




மக்கள் செல்வாக்கு மிக்கவர்!


பிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...

ஒரு சமயம் எங்கள் சந்திப்பின்போது ‘மக்களிடையே ஏற்கனவே செல்வாக்குடன் விளங்கும் நடிகர்களுக்கு விளம்பரம் தேவையா, அல்லது வளரத்துடிக்கும் திறமைசாலிகளுக்கு அதிக விளம்பரம் அவசியமா? என்ற கேள்வி எழுந்தது.

“செல்வாக்குடன் விளங்கும் களைஞர்களுக்குப் பதிலாக வளரும் நிலையிலுள்ளவர்களுக்கு போதிய விளம்பரம் தந்தால், அந்த விளம்பரம் அவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்து, அவர்கள் முன்னேற உதவுமல்லவா? என்றார் எம்.ஜி.ஆர். அவர்கள்.

“செல்வாக்குடன் விளங்கும் உங்களைப் போன்றவர்களைப்பற்றி செய்திகளும் படங்களும் வெளியிடும்போது மக்கள் ஆர்வமுடன் வாங்குகிறார்கள். அதே சமயம் புதுமுகங்களைப் பற்றியும், வளரும் கலைஞர்களைப் பற்றியும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை. ‘பேசும் படம்’ அதைத்தான் செய்கிறது என்று சொன்னோம்.

’அப்படியானால் புதுமுகங்கள் சார்பில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார் அவர்.

இந்தப் பதில் எங்களுக்கு மிக்க மன நிறைவு தந்ததுடன், அவர் மீதுள்ள மதிப்பையும் நல்லெண்ணத்தையும் மேலும் கூட்டியது. சக கலைஞர்களுக்காக - அவர்கள் அறியாமலேயே - அவர்களது நலனுக்காக முன்னின்று வாதிடும் தன்னலமற்ற செயல்வீரராக அவரைக் கண்டோம்.  தன் வாழ்நாளின் கடைசிவரை அப்படித்தான் அவர் விளங்கினார்.

அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அவர்கள் தூய வெண்ணிற கதராடை அல்லது கைத்தறி உடைகளையே அணிவார். தலைமுடியை பாகவதர் கிராப் பாணியில் பின்புறம் நோக்கி வாரி விட்டிருப்பார். கழுத்தில் தாமரை மணி மாலை ‘பளிச்’சென மின்னும்.

‘எம்.ஜி.ராம்சந்தர்’ என்றே தன் பெயரைச் சொல்வார். கையெழுத்தும் அப்படித்தான் போடுவார். ‘ஏன் இப்படி?’ என்று அவரிடம் நான் ஒரு சமயம் கேட்டபோது, ‘டி.ஆர்.ராமச்சந்திரன், டி.கே.ராமச்சந்திரன்(வில்லன்) இப்படி பலர் இருக்கிறார்கள். மேலும் ஒரு ராமச்சந்திரனா? அதனால் தான் ‘ராம்சந்தர்’ என்றார்.

‘’வட இந்திய நடிகரின் பெயர் போல் இல்லையா இது?’’ என அவரது வளர்ச்சியில் ஈடுபாடு கொண்ட, எங்களைப் போன்ற பலர் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். சிறிது காலத்தில் ’எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றே கையெழுத்துப் போட ஆரம்பித்து, பெயரையும் அப்படியே மாற்றிக் கொண்டார் அவர்.

மற்றொரு சமயம். நானும் எனது ‘பேசும் ப்டம்’ சகாக்களும் வழக்கம் போல எம்.ஜி.ஆர். அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். நடிப்பைப் பற்றி எங்கள் பேச்சுத் திரும்பியது.

ஒரு சில திரைப்பட விமர்சகர்கள், ‘எம்.ஜி.ஆர். அவர்களது நடிப்பில் போதுமான அழுத்தம் இல்லை. மேலோட்டமாக அவரது நடிப்பு இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் சோபிக்கும் அளவுக்கு, உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் சோபிப்பதில்லை’ என்ற வகையில் எழுதியும், பேசியும் வந்தார்கள். மற்றும் சிலர், ‘அவர் வயதுக்குப் பொருந்தாத கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், தன்னை இன்னும் இளம் வாலிபனாகக் கருதிக் கொண்டு காதல் காட்சிகளில் இளம் நடிகைகளுடன் நடிக்கிறார் என்றும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.

ஒரு பிரபலமான நாளேடு அவரது படத்தைப் பற்றி விமர்சிக்கும்போது – அவர் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதைப் பற்றி எழுதும்போது – அடைப்புக் குறிக்குள் அவரது வயதையும் குறிப்பிட்டு – வயதுக்குப் பொருந்தாத காட்சிகளில் அவர் நடிப்பதாக மறைமுகமாகச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து வந்தது.

அன்றைய எங்கள் சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். அவர்கள் இதைப் பற்றியெல்லாம் மனம் திறந்து பேசினார்.

‘நடிப்பு என்பது மிகையாகவும் இருக்கக்கூடாது. எமாற்றத்தைத் தருவதாகவும் அமையக்கூடாது. மனதைத் தொடும்படியாக – இயல்பானதாக நடிப்பு அமையவேண்டும். மக்களும் அது நடிப்பு என்பதை உணர்ந்து அதை ஏற்கும்படிச் செய்ய வேண்டும். அதுதான் உண்மையான நடிப்பு’ என்று எங்களிடம் விளக்கம் தந்த எம்.ஜி.ஆர். அவர்கள், எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

‘இருபத்தைந்து வயதுள்ள ஒரு நடிகர் – கல்லூரி மாணவனாகவோ, கிராமாத்து இளைஞனாகவோ நடிக்கும்போது, அது அவரது வயதுக்குப் பொருத்தமாக அமைந்து அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு பாதி வெற்றியை ஆரம்பத்திலேயே தந்து விடுகிறது.

தவிர, அதே இளவயதுடைய நடிகர் ஒரு முதியவராக, ஒப்பனையின் உதவியுடன் தன்னை வயோதிகராகக் காட்சியளிக்க வைத்து, அதில் வெற்றி பெறுவது என்பதும் சுலபமே.

ஆனால் வாலிபப் பருவத்தை கடந்த ஒரு நடிகர் – மக்களால் அவர் இளமைப் பருவத்தை கடந்தவர் என உணரப்பட்ட ஒருவர் – படங்களில் நடிக்கும்போது தன்னை ஓர் இளைஞனாகக் காட்டிக் கொண்டு, அத்தகைய கதாபாத்திரங்களையே தொடர்ந்து ஏற்று, அவர் இளைஞரே என்று மக்களால் நினைத்து ஏற்கப்பட்டு, அது பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்படுவது என்பது சுலபமானதல்ல; மிக மிகக் கடினமானது. நான் அந்தக் கடினமான காரியத்தைச் செய்து மக்களால் முழுதுமாக அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வெற்றி பெற்றுள்ளேன் என்றால், எது சிறப்பானது?

நீங்களே பதில் சொல்லுங்கள்!” என்று முடித்தார். அவரது வாதத்தில் உண்மை இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியுமா?

இன்னொரு சமயம் ‘சண்டைக் காட்சிகளே இல்லாமல் உங்கள் படம் வெளிவராதா?’ என்று கேட்டபோது, ‘மக்கள் அதை விரும்புவார்களா? வரவேற்பார்களா? இதை முதலில் தெரிந்து கொண்டு வாருங்கள்’ என்றார்.

இப்படி தன் தரப்பு வாதங்களை நியாயப்படுத்தி ஆணித்தரமாக கருத்துக்களை வெளியிடுவதில் எம்.ஜி.ஆர். அவர்கள் என்றுமே வல்லவராகத் திகழ்ந்தார்.





எதிர்பார்த்ததற்கும் மேலான வசூல்!

பிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...

எம்.ஜி.ஆர். அவர்­க­ளு­டன் அவ­ரது ‘பிளை­ம­வுத்’ காரில் நானும் சென்­றேன். வழக்­க­மாக கல­க­லப்­பா­கப் பேசி­ய­படி வரும் அவர், அன்று எதையோ தீவி­ர­மாக யோசித்­த­படி மௌன­மா­கவே இருந்­தார். திரைப்­பட அரங்­கின் வாச­லி­லேயே மாண­வர்­கள் ஒன்று திரண்டு, கோலா­க­ல­மாக அவரை வர­வேற்­றார்­கள். ரசி­கர்­க­ளின் கூட்­டம் அலை மோதி­யது.

படம் திரை­யி­டப்­பட்டு, இடை­வே­ளை­யின் போது எம்.ஜி.ஆர். அவர்­கள் பேச மேடைக்கு அழைக்­கப் பட்­டார். ரசி­கர்­க­ளின் அன்­பான ஆர­வா­ரம் அடங்­கவே பல நிமி­டங்­கள் பிடித்­தன. எம்.ஜி.ஆர். அவர்­கள் பேச ஆரம்­பித்­தார்­கள்.

“திரைப்­ப­டம் மிக சக்தி வாய்ந்­தது. பார்ப்­ப­வர் மன­தில் உடனே ஆழ­மா­கப் பதி­யக்­கூ­டி­யது. நல்ல கருத்­துக்­களை மக்­க­ளுக்கு படங்­க­ளின் மூலம் எடுத்­துச் சொல்ல வேண்­டும்.

மக்­க­ளி­டையே ஒற்­று­மையை வளர்க்க வேண்­டும். வெறுப்­பை­யும் வேற்­று­மை­யை­யும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது. இந்­தப் படத்­தில் செருப்பு வைக்­கும் காட்சி இடம் பெற்­றுள்­ளது. இந்­தக் காட்­சி­யைப் பார்க்­கும் போது நான் மிக­வும் வேத­னைப்­பட்­டேன். என்­னைப் போலவே படம் பார்த்த ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­க­ளும் வருத்­தப்­பட்­டி­ருப்­பார்­கள்.

குறிப்­பிட ஓர் இனத்­த­வ­ரின் கலாச்­சா­ரத்­திற்கு இது ஏற்­பு­டை­ய­தாக இருந்­தா­லும், வேறு ஒரு பகு­தி­யைச் சேர்ந்த மக்­க­ளின் உணர்வை அது பாதிக்­கு­மா­னால், அம்­மா­தி­ரி­யான காட்­சி­களை படத்­தில் இடம் பெறச் செய்­யா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டும். இதை கலை­ஞர்­கள் எங்­கி­ருந்­தா­லும் கவ­னிக்க வேண்­டும்: கடைப்­பி­டிக்க வேண்­டும்” என்று தனது எதிர்ப்­பைத் தெரி­வித்த அவர், அதே சம­யம் மாண­வர்­க­ளின் நாட்­டுப் பற்­றை­யும் அவர்­க­ளது நல்ல நோக்­கத்­தை­யும் மிக­வும் புகழ்ந்­தார். அந்த ஒரு கார­ணத்­திற்­கா­கவே தான் வரச் சம்­ம­தித்­த­தை­யும் எடுத்­துச் சொன்­னார்.

விழா முடி­வ­டைந்து திரும்­பும் சம­யம் வந்­தது.

காரில் ஏறப்­போ­கும் முன் விழா நிர்­வா­கியை அழைத்து விழா­வைச் சிறப்­பாக நடத்­தி­ய­தற்­கா­கப் பாராட்டி நன்றி தெரி­வித்து, “நாளை என்னை வந்து பாருங்­கள்” என்று அவ­ரி­டம் கூறி, பின்­னர் என் பக்­கம் திரும்பி, “அவரை அழைத்து வரும் பொறுப்பு உங்­க­ளு­டை­யது!” என்­றார்.

திரும்­பும் சம­யம் வழி நெடுக பேசி­ய­படி வந்­தார். அவ­ரது மன இறுக்­கம் தணிந்­து­விட்­டது என்­ப­தைப் புரிந்து கொண்­டேன்.

மறு­நாள் விழா அமைப்­பா­ள­ரு­டன் (அவ­ரது பெயர் திரு.ராஜ்­கி­ஷோர் என்று நினைவு) எம்.ஜி.ஆர். அவர்­களை அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்­தேன்.

முகம் மலர வர­வேற்­றார். விழா அமைப்­பா­ள­ரி­டம் “உங்­க­ளது நோக்­கம் உயர்­வா­னது. ஆனால் நீங்­கள் தேர்ந்­தெ­டுத்த படம் பற்றி அப்­படி என்­னால் சொல்ல முடி­யாது. உங்­க­ளது நற்­ப­ணிக்கு என் சிறிய காணிக்கை!” என்று, ஒரு பெரிய தொகைக்­கான காசோ­லை­யும் அவ­ரி­டம் தந்­தார். எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் உயர்ந்த பண்­பை­யும் அன்­பை­யும் கண்டு, வந்­த­வர் திக்­கு­முக்­கா­டிப் போய்­விட்­டார்.

அவர் புறப்­பட்­டுச் சென்­ற­தும் எம்.ஜி.ஆர். அவர்­க­ளி­டம் நான், ‘’நேற்று விழா மேடை­யி­லேயே இதைத் தந்­தி­ருக்­க­லாமே. இன்­னும் சிறப்­பாக இருந்­தி­ருக்­குமே!” என்­றேன்.

எம்.ஜி.ஆர். அவர்­கள் கல­க­ல­வெ­னச் சிரித்­தார்.

“நேற்­றைய விழா­வில் படத்­தைப் பற்றி என் எதிர்ப்பை வெளி­யிட்­ட­போது இதைச் செய்­தி­ருந்­தால் இதற்­குத்­தான் முக்­கி­யத்­து­வம் கிடைத்­தி­ருக்­கும். என் எதிர்ப்­புக்கு வலிமை குறைந்து போயி­ருக்­கும்” என்­றார்.

எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் சமா­தா­னம் எனக்­குத் திருப்­தி­யைத் தந்­தது. அதே சம­யம் பிறர் மனம் புண்­ப­டாத நிலை­யில் தன் எதிர்ப்­பைத் தெரி­விக்­கும் நய­மும் என்னை வியக்க வைத்­தது






.

No comments:

Post a Comment