Tuesday 4 June 2019




டெல்லி அதிரும் போது
டெல்லி அப்பளம் கேட்கும் ஸ்டாலின்  

38 திமுக+ எம்.பி ஜெயிச்சது வெஸ்டனு சில விஷமிங்க சொல்லிட்டு இருக்குங்க.

கனிமொழி ,திருச்சி சிவா, இந்த ரெண்டு திமுக எம்.பி கொண்டு வந்த தனிநபர் தீர்மானம் மட்டும் 7. 

இந்த, 7 தீர்மானத்துல, பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழி அங்கீகாரம், திருங்கையர் மசோதானு கொண்டு வந்திருக்கு. 

இப்போ கையில 38 எம்.பி, பார்லிமென்ட ஸ்தம்பிக்க வைக்கலாம். தமிழ்நாட்டு வாழ்வாதார பிரச்சனைக்கு குரல் எழுப்பலாம் ; தனிநபர் சட்டம் கொண்டு வரலாம். 

இன்னும் சொல்லனும்னா, இந்தியா முழுவதும் இருக்கும், தலித், முஸ்லீம், கிறித்தவ மற்றும் அடித்தட்டு மக்களுக்கு குரல் எழுப்பப்போறது, இந்த 38 பேர் தான். 

ஒரு அறிஞர் அண்ணா தான், 1962களில் டெல்லியை அதிர வைத்தார் ; இன்று, அண்ணாவின் தம்பிகள் 39 பேர் (வைகோ உட்பட)  டெல்லிக்கு செல்கிறார்கள் , டெல்லி மீண்டும் அதிரும்

No comments:

Post a Comment