Tuesday 4 June 2019





யாரும் வாய் திறக்க வில்லை.

இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் 
நாடாளு மன்றத்தில் கேட்ட கேள்வி !
இந்தியாவின் தேசிய மொழி எது ?
கேள்விக்கு பதில் இந்தி என்று வந்தது

அறிஞர் அண்ணா : ஏன் ? இந்தியை வைத்தார்கள் ?
இந்திதான் இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்றார்கள்.

அறிஞர் அண்ணா ;இந்தியாவின் தேசிய பறவை எது ?
மயில் என்று பதில் வந்தது.

அறிஞர் அண்ணா : மயில் இனம் இந்தியாவில் குறைவு , இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காகம்
அந்த காகத்தை தேசிய பறவையாக வைக்க வேண்டியது தானே?


யாரும் வாய் திறக்க வில்லை.

எது வேண்டும் வேண்டாம் என்பது எங்களுக்கு தெரியும். இந்தி தெரிந்தால் நாடு முன்னேறும் என்றால், 
ஏன் பிகார், ஒரிசா ,,இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .
இந்தி பேச தெரிந்த இவர்கள் வாழ்க்கை தரம் 
ஏன் முன்னேற்றம் காணவில்லை ? 
யாரும் வாய் திறக்க வில்லை.

No comments:

Post a Comment