Saturday 3 April 2021

Kamaladevi Chattopadhyay, FREEDOM FIGHTER BORN 1903 APRIL 3 -1988 OCTOBER 29

 


Kamaladevi Chattopadhyay,

FREEDOM FIGHTER BORN 

1903 APRIL 3 -1988 OCTOBER 29



கமலா சட்டோபாத்தியாயா (Kamaladevi Chattopadhyay) 3 ஏப்ரல் 1903–29 அக்டோபர் 1988) என்பவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக நினைவு கூரப்படுகிறார். மேலும் இந்திய கைவினைப் பொருள்கள், கைத்தறி வளர்ச்சி, சுதந்திர இந்தியாவில் நாடக மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருந்தார். மேலும் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும், இந்திய பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்தவர்.


சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவர், பாரதீய நாட்டிய சங்கத்தின் தலைவர், அகில இந்திய கைவினைஞர்கள் வாரியத் தலைவர், யுனெஸ்கோவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர்.[1]

வாழ்க்கை

இவர் 3 ஏப்ரல் 1903 அன்று மங்களூரில் இவரது பெற்றோருக்கு நான்காவது மகளாகப் பிறந்தார். இவரின் தந்தை ஆனந்தையா தரேஸ்வர் மாவட்ட ஆட்சியராக மங்களூரில் இருந்தார், இவரின் தாயார் பெயர் கிரிஜாபாய் ஆகும்.


கமலாதேவி படிப்பில் கெட்டிக்காராக இருந்தார் இவரது பெற்றோர்களைப் பார்க்க வீட்டிற்கு வரும் மகாதேவ கோவிந்த ராணடே, கோபாலகிருஷ்ண கோகலே, ராமாபாய் ராணடே, அன்னிபெசண்ட் அம்மையார் போன்ற தலைவர்களின் உரையாடல்களைக் கேட்டு, இளம் வயதிலேயே சுதேச இயக்கத்தில் ஆர்வம் கொண்டார்.





இவர் சமசுகிருத பாரம்பரிய நாடக்கலையான கேரள- கூடியாட்டத்தை, அதில் சிறந்த ஆசிரியரும் அபிநயத்தில் சிறந்த நடன ஆசிரியரான பத்மசிறீ மணி மாதவ சாக்கியார் என்பவரின் ஊரான கிள்ளிக்குரிசிமங்களத்தில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்து கற்றார்.[2]


இவரது இளமைக் காலம் சோகம் நிறைந்ததாக இருந்தது. இவரது முன்மாதிரியாக இருந்த இவரது அக்காள், சகுணா, அவரது இளம் வயதில் திருமணம் முடிந்த உடனேயே, இறந்து போனார். கமலாவின் தந்தை அவருக்கு ஏழு வயதிருக்கும் போதே இறந்தார்.


முதல் திருமணம்

இவருக்கு 1917இல், 14 வயதானபோது திருமணம் நடந்தது ஆனால் இரண்டாண்டுகளில் கணவர் இறந்தார்.


1920களில்

அரிந்திரநாத்துடனான திருமணம்

இதற்கிடையில், சென்னை ராணி மேரி கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவரான சுஹாசினி சட்டோபாத்யாவின் இளைய சகோதரி சரோஜினி நாயுடு, அறிமுகமானார். பின்னர் தங்கள் திறமையான சகோதரனான அரியை கமலாதேவிக்கு அறிமுகப்படுத்தினர். அவர் நன்கு அறியப்பட்ட ஒரு கவிஞர்- எழுத்தாளர், நடிகர் போன்ற பன்முகத்தன்மை உடையவராக இருந்தார். கலைகளில் ஈடுபாடு உடைய இருவருக்கும் நல்ல புரிதல் உண்டாயிற்று.


கமலாதேவிக்கு இருபது வயது இருக்கும்போது அரிந்திரநாத் சட்டோபாத்யாய உடன் திருமணம் நடந்த்து. இந்த விதவை திருமணத்திற்கு சமூகத்தில் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. இந்த தம்பதியினரின் ஒரே மகன் ராமா அடுத்த ஆண்டு பிறந்தார்.[3]


பிற்காலத்தில் இவர் சில திரைப்படங்களில் நடித்தார். அக்காலத்தில் நல்ல குடும்ப்ப் பெண்கள் திரைப்படங்களில் நடிப்பது ஆதரிக்கப்படாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் ஊமைப்படங்களில் நடித்தார். இதில் ஒன்று கன்னடத் திரையுலகின் முதல் படமான, மிரிச்சகட்டிகா (வசந்தசேனா) (1931). இரண்டாவது படமாக தான்சேன் என்ற இந்தி படத்தில் 1943இல் நடித்தார். உடன் நடித்தவர்கள் கே.எல் சய்கல் மற்றும் குர்ஷீத் ,[4] தொடர்ந்து ஷங்கர் பார்வதி (1943), மற்றும் தான்னா பஹத் (1945) ஆகிய படங்களில் நடித்தார்.[5]



திருமணமான பல ஆண்டுகளுக்கு பிறகு, கமலாதேவியும் அவர் கணவரும் பிரிந்தனர். கமலாதேவி விவாகரத்து பெற்றார். அந்நாளில் இது பெண்கள் பின்பற்ற அஞ்சும், தயங்கும் மிகப் புதிதான ஒரு நடைமுறை. எனவே இதைக் குறித்தும் கமலா தேவி மீது மிகுந்த விமர்சனங்கள் எழுந்தன.


இலண்டன் செல்லல்

அவர்களது திருமணத்திற்கு கொஞ்ச காலத்திற்கு பிறகு அரிந்திரநாத் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கோண்டு, லண்டன் சென்றார். ஒரு சில மாதங்கள் கழித்து கமலாதேவி, அங்கு சென்று அவருடன் சேர்ந்தார், அவருடன் சேர்ந்து இலண்டன் பல்கலைக்கழகத்தின் பெட்ஃபோர்ட் கல்லூரியில் சமூகவியல் பாடத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.


விடுதலை இயக்கத்திற்கான அழைப்பு

கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளத்தளம் என்னும் காந்திய அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி தளத்தின் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். சேவாதளத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் ஆளெடுப்பது பெண்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.



1926, இல் இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) அமைப்பின் நிறுவனரான மார்கரெட் கசின்சு என்பவரை சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர் இந்திய சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண் ஆவார்[6] இவர் தேர்தல் வேலைகளை சில நாட்கள்தான் பார்க்கதான் இயன்றது. ஆனாலும் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.


அனைத்திந்திய மகளிர் மாநாடு

அடுத்த ஆண்டில், அனைத்து-இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட அதன் முதல் அமைப்புச் செயலாளராக ஆனார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அ.இ.ம.மா. கிளைகள் நாடு முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வ திட்டங்கள் கொண்டு மதிப்புள்ள தேசிய அமைப்பானது. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி அய்ரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.


1930களில்

காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான ஏழு பேர்களில் இவரும் ஒருவராக இருந்து மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பையை பங்கு சந்தையில் விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதற்கு ஓராண்டு கழித்து 1936இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயபிரகாஷ் நாராயணன், ராம்மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து பாடுபட்டார்.


1940களில்

இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் நிலைமையை இந்தியாவின் பிரதிநிதியாக சென்று இந்தியாவின் விடுதலைக்கு ஆதரவைத் திரட்டினார்.


விடுதலைக்கு பிந்தைய பணிகள்

இந்தியா சுதந்திரமடையும்போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்த வேளையில் மக்களுக்கு பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும் செய்து கொடுத்தார்.


இவ்வாறு மக்கள் மறுவாழ்வுக்கும் அதே சமயம் அவர்கள் இழந்த கைவினைத் தொழிலுக்கு உதவும் பணியினை இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறி ஆகியவற்றிற்கு சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் பெரும் புத்துயிர் அளிக்க வேண்டும் என பொறுப்பெடுத்து நவீன இந்தியாவில் அதன் மிகப்பெரிய மரபை காக்க பாடுபட்டார்.[7]


விருதுகள்

இவரது பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசு பத்ம பூசன் விருதை 1955இல் அளித்தது. பின்னர் இரண்டாவது மிக உயரிய விருதான, பத்ம விபூசன் விருதை 1987லிலும்,[8] ராமன் மகசேசே விருதை 1966இல் பெற்றார். மேலும் சங்கீத் நாடக அகாடமி விருது , இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக இந்தியாவின் தேசிய அகாடமி, 1974 இல் வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கியது.[9]


யுனெஸ்கோ அமைப்பு கைவினைப். ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக 1977 இல் விருது வழங்கியது. சாந்தி நிகேதனும், அதன் மிக உயர்ந்த விருதை அளித்து இவரைப் பாராட்டியது.


கமலாதேவி சட்டோபாத்யாய எழுதிய நூல்கள்

இந்திய பெண்களின் விழிப்பு, எவ்ரிமான்'ஸ் பிரஸ், 1939

ஜப்பான்-அதன் பலவீனமும், வலிமையும், பத்ம வெளியீடுகள் 1943.

அங்கிள் சாமின் பேரரசு, பத்ம வெளியீடுகள் லிமிடெட், 1944.

யுத்தத்தால் சீரழிந்த சீனா, பத்ம பப்ளிகேஷன்ஸ், 1944 ல்.

ஒரு தேசிய தியேட்டர், (அனைத்து இந்திய பெண்கள் மாநாடு, கலாச்சார பிரிவு. கலாச்சார புத்தகங்கள்), ஆந்த் பப் நோக்கி. அறக்கட்டளை, 1945

. அமெரிக்கா ,: superlatives நிலம், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ், 1946. குறுக்கு சாலைகள் தேசிய தகவல் மற்றும் பப்ளிகேஷன்ஸ், 1947.

சோசலிசமும் சமூகம், சித்தன்னா, 1950.

இந்தியாவில் பழங்குடியின வாதம், பிரில் அகாடமிக் , 1978 ஐஎஸ்பிஎன் 0706906527 .

இந்தியாவின் கைவினைப் பொருட்கள் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் மற்றும் புதிய வயது சர்வதேச பப். லிமிடெட், புது தில்லி, இந்தியா, 1995 ஆம் ஐஎஸ்பிஎன் 99936-12-78-2 .

இந்திய பெண்களின் விடுதலைப் போர்,. தென் ஆசியப் புத்தகங்கள், 1983 , ISBN 0-8364-0948-5 .

இந்திய தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள், அகில இந்திய கைவினைப் பொருட்கள் வாரியம், 1974.

இந்திய எம்பிராய்டரி, விலே ஈஸ்டன், 1977.

இந்தியாவின் கைவினை பாரம்பரியம், பதிப்பகப் பிரிவு, ஐ & பி, அமைச்சகம். இந்தியா, 2000-ம் ஆண்டு ஐஎஸ்பிஎன் 81-230-0774-4 .

இந்திய கைவினைப் பொருட்கள், நேச பப்ளிஷேர்ஸ் பி. லிமிடெட், மும்பை இந்தியா, 1963.

இந்திய நாட்டுப்புற நடன மரபுகள்.

இந்திய கைவினைப் பெருமிதங்கள், புது தில்லி, இந்தியா: கிளாரியன் புக்ஸ், 1985.

இன்னர் சரிவுகளில், அவுட்டர் இடைவெளி: வரலாறு, 1986 ஐஎஸ்பிஎன் 81-7013-038-7




கமலாதேவி சட்டோபாத்யாய்: தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்திய பெண்மணி

  • சுஷிலா சிங்
  • பிபிசி செய்தியாளர்
கமலாதேவி சட்டோபாத்யாய்

(இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் ஒன்பதாவது அத்தியாயம் இது.)

அது 1930 ஆம் ஆண்டு. கமலாதேவி சட்டோபாத்யாய்க்கு அப்போது வயது 27. மகாத்மா காந்தி தண்டிக்கு யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்குவார் என்றும் அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடற்கரைப் பகுதிகளில் உப்பு தயாரிக்கப்படும் என்றும் கமலாதேவிக்குச் செய்தி எட்டியது.

கமலாதேவி சட்டோபாத்யாய்

மகளிர் ராட்டையில் நூல் நூற்பதிலும் கள்ளுக்கடை மறியல் செய்வதிலும் ஈடுபட வேண்டும் என்றும் உப்பு சத்தியாகிரகத்திலிருந்து மகளிர் விலகி இருக்கவேண்டும் என்றும் காந்தியடிகள் அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால் இந்த விஷயத்தில் கமலாதேவிக்கு உடன்பாடில்லை.

தனது சுயசரிதையான ’இன்னர் ரிஸஸ் ஔட்டர் ஸ்பேஸஸ்’ (Inner Recesses Outer Spaces) புத்தகத்தில் அவர் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று தாம் உணர்ந்ததாகவும் இது குறித்து நேரடியாக காந்தியடிகளிடமே பேசுவது என்றும் தாம் முடிவு செய்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.

கமலாதேவி சட்டோபாத்யாய்

அந்த சமயத்தில், மகாத்மா காந்தி ரயில் பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்து கமலாதேவி ரயில் நிலையம் சென்று ரயிலிலேயே காந்தியடிகளைச் சந்தித்தார். ரயிலில் மகாத்மா காந்தியுடன் அவர் நிகழ்த்திய சந்திப்பு சிறிது நேரமானாலும், அது வரலாற்றை மாற்றி எழுதவல்லதாக இருந்தது.

முதலில் மகாத்மா காந்தி அவரைத் தம் கருத்துக்குச் சம்மதிக்க வைக்க முயன்றார், ஆனால் கமலாதேவியின் வாதங்களைக் கேட்டபின், மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தில் பெண்கள் மற்றும் ஆண்களின் சம பங்களிப்பு தேவை என்று ஒப்புக் கொண்டார். இது மகாத்மா காந்தி எடுத்த ஒரு வரலாற்று முடிவு.

கமலாதேவி சட்டோபாத்யாய்

இந்த முடிவிற்குப் பிறகு, மகாத்மா காந்தி தண்டி சென்று உப்பு சத்தியாக்கிரகம் நடத்தியதுடன், பம்பாயில் இதனை வழிநடத்த ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த அணியில் கமலாதேவி மற்றும் அவந்திகாபாய் கோகலே ஆகியோர் இடம்பெற்றனர்.

கமலாதேவி சட்டோபாத்யாய்

பெண்கள்பங்களிப்பிற்கானமுக்கியமுயற்சி

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பெண்களுக்காக உழைக்கும் அரசு சாரா அமைப்பின் நிறுவனருமான ருச்சிரா குப்தா, "இந்த நடவடிக்கை சுதந்தர இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தது.

பெண்கள் தோளோடு தோள் நின்று உப்பு வரியை நீக்கப் போராடியதை உலகமே வியந்து பார்த்தது. இதனால், காங்கிரஸ் கட்சியிலும் அரசியலிலும் சுதந்தரத்திற்குப் பிறகும் பெண்களின் பங்களிப்பு பெருமளவில் அதிகரித்தது” என்று கூறுகிறார்.

கமலாதேவி சட்டோபாத்யாய்

வரலாற்றின் பக்கங்களில் உப்பு சத்தியாகிரகத்தில் கமலாதேவி தொடர்பான பல நிகழ்வுகள் கொட்டிக்கிடக்கின்றன.

காவல் துறையினருடன் போராடி, கமலாதேவியும் அவரது சகாக்களும் உப்பு தயாரித்து அதனைப் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கினர். ஒரு நாள் அவர் பம்பாய் பங்குச் சந்தைக்குள் நுழைந்து அங்கேயும் உப்பை ஏலம் விட்டார்.

பங்குச் சந்தை அலுவலகத்தில் இருந்தவர்கள், 'மகாத்மா காந்தி கி ஜெய்' (மகாத்மா காந்தி வாழ்க) என்ற முழக்கங்களை உற்சாகத்துடன் எழுப்பினர். இந்த சம்பவத்தை சகுந்தலா நரசிம்மன் தனது 'கமலாதேவி சட்டோபாத்யாய் – ’தி ரொமாண்டிக் ரிபல்’ (Kamladevi Chattopadhyay – The Romantic Rebel) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர், “பங்குச் சந்தையில் உப்பு ஏலத்திற்குப் பிறகு கமலாதேவிக்கு மற்றொரு யோசனை வந்தது. அவர் உயர் நீதிமன்றத்தை நோக்கிச் சென்றார். உயர் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதியிடம், 'ஃப்ரீடம் சால்ட்' அதாவது சுதந்திர உப்பு வாங்க விரும்புகிறீர்களா என்று கமலாதேவி கேட்டார். இதற்கு அவர் என்ன பதிலுரைத்தார் என்பது தெரியவில்லை, ஆனால் கமலாதேவியின் துணிச்சல் பற்றிய புகழ் வெகுதூரம் பரவியது.” என்று எழுதுகிறார்.

கமலாதேவியின் இந்தத் துணிச்சலின் பின்னணியில் அவரது தாய்க்கும் பாட்டிக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு.

அவரது தந்தை அனந்ததையா தாரேஷ்வர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஒரு முற்போக்கான கருத்தியலாளரும் கூட. ஆனால், கமலாதேவி குழந்தையாக இருந்தபோதே அவர் காலமாகிவிட்டதால், குழந்தை வளர்ப்பின் பொறுப்பு தாயைச் சேர்ந்தது.

கமலாதேவி சட்டோபாத்யாய்

19 ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி முறை இல்லை என்றாலும், கமலாதேவியின் தாயார் கிர்ஜாபாய், வீட்டிலேயே பண்டிதர்கள் மூலம் தனது மகள் கல்வி கற்க வழி செய்தார்.

கணவரின் மரணம் மற்றும் சமூக அழுத்தம் காரணமாக, தாய் கிர்ஜாபாய் தனது மகள் கமலாதேவியை 11 வயதில் திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, கமலாதேவியின் கணவர் உயிர் இழந்தார். அந்த நேரத்தில் மகளின் குழந்தைத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட அவரது தாயார், பிராமண சமூகத்தில் ஒரு விதவைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தன் மகளுக்கு விதிக்க மறுத்துவிட்டார்.

கமலாதேவியின் கூந்தல் மழிக்கப்படுவதையோ வெண்ணிற ஆடை உடுத்தப்படுவதையோ ஒரு மூலையில் முடங்கிக் கிடந்து பூஜை செய்வதையோ அவர் கட்டாயப்படுத்தவில்லை. கிர்ஜா பாய், சமூக அழுத்தத்துக்கு ஆட்படாமல், கமலாதேவியைப் பள்ளிக்குச் செல்ல அனுமதித்தது மட்டுமல்லாமல், சுதந்தரமாக முன்னேற வழி காட்டினார்.

கிர்ஜாபாய் பெண்ணியவாதிகளான பண்டித ராமாபாய் மற்றும் ராமாபாய் ரானடே ஆகியோரின் ஆதரவாளராக இருந்தார், மேலும், கமலாதேவிக்கு அன்னி பெசன்ட் அம்மையாரை, ஒரு முன்மாதிரியாக அறிமுகப்படுத்தினார்.

கமலாதேவி சட்டோபாத்யாய்

கமலாதேவியும் இத்தகைய எழுச்சியூட்டும் பெண்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டார். சென்னை ராணி மேரி கல்லூரியில் பயின்று வந்த சமயத்தில், சரோஜினி நாயுடு அவர்களின் சகோதரர் ஹரிந்திரநாத் சட்டோபாத்யாயைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹரிந்திரநாத், அக்காலத்தின் புகழ் பெற்ற கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.

கமலாதேவி தனது 20 வயதில் ஹரிந்திரநாத்தை மணந்தார். பல பழமைவாதிகள் இந்த விதவை மறுமணம் குறித்தும் கண்டனம் கூறினர். பின்னர், கமலாதேவி ஹரிந்திரநாத்தை விவாகரத்து செய்ய முடிவு செய்த போதும் பலர் முகம் சுளித்தனர்.

கமலாதேவி சட்டோபாத்யாய்

ஆனால் இதையெல்லாம் புறக்கணித்து கமலாதேவி எப்போதும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவே திகழ்ந்தார்.

பெண்கள் திரைப்படங்களில் நடிப்பது என்பது மிகவும் கீழ்த்தரமானதாகக் கருதப்பட்ட காலத்தில், கன்னட மொழியின் முதல் வசனமில்லா படமான ‘ம்ருச்சாகடிகா’-வில் நாயகியாகத் தோன்றினார் கமலாதேவி.

காணொளிக் குறிப்பு,

இந்தியாவின் மாகாண முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர் கமலாதேவி சட்டோபாத்யாய்

1943 ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படங்களான ‘தான்சேன்’, 'ஷங்கர் பார்வதி' ஆகிய படங்களிலும் 1945-ல் 'தன்னா பகத்’ என்ற படத்திலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.

ஆனால் இதற்கெல்லாம் முன்பு, அவர் மகாத்மா காந்தியால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1920களின் முற்பகுதியில் இருந்தே, அரசியலில் அவரது ஈடுபாடு தெளிவாக இருந்தது.

மகாத்மா காந்தி 1923 இல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, ​​கமலா தேவி தனது கணவருடன் லண்டனில் இருந்தார். அவர் நாடு திரும்பி வர முடிவு செய்து காங்கிரஸ் சேவா தளத்தின் உறுப்பினரானார்.

கமலாதேவி சட்டோபாத்யாய்

1926 இல் ஒரு முக்கியமான நபரைச் சந்தித்தார். அயர்லாந்தில் பெண்ணியவாத தலைவியாக இருந்த மார்கரெட் கசன்ஸுடனான சந்திப்பு தான் அது. மார்கரெட் அகில இந்திய மகளிர் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, கமலாதேவியை முதலாவது பொதுச் செயலாளராக நியமித்தார்.

மார்கரெட் கசன்ஸின் ஊக்கத்துடன், கமலாதேவி விரைவில் மற்றொரு பெரிய அடியை எடுத்து வைத்தார். அது அவருக்கு இந்திய அரசியலில் ஒரு தனித்துவமான இடத்தை அளிக்கிறது.

மெட்ராஸ் மற்றும் பம்பாய் பிரசிடென்சிஸியில் முதன்முறையாகப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. பெண்களின் இந்த உரிமையைப் பெறுவதில் மார்கரெட் கசன்ஸ்-ன் முன்முயற்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது, ஆனால் மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்கு உரிமை இல்லை.

1926 ஆம் ஆண்டில் அப்போதைய மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்குச் சற்று முன்னர் பெண்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். மார்கரெட் கஸன்ஸின் ஊக்கத்தின் பேரில் கமலாதேவி போட்டியிட்டார்.

எழுத்தாளர் ரீனா நந்தா தனது புத்தகமான 'கமலாதேவி சட்டோபாத்யாய் – பயோகிராஃபி" என்ற சுயசரிதையில், “இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்ய மிகக் குறைவான நேரம் மட்டுமே இருந்தது. அப்போது, கமலாதேவியின் பெயர் வாக்காளராகக் கூடப் பதிவு செய்யப்படவில்லை. அவசரமாக தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கஸன்ஸ், பெண் ஆர்வலர்கள் குழுவை உருவாக்கி அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார். இதில், கமலாதேவியின் கணவர் ஹரிந்திரநாத்தின் நாடகங்கள் மற்றும் தேசபக்தி பாடல்களைப் பாடி பிரசாரம் செய்தார்” என்று பதிவு செய்துள்ளார்.

கடைசி சந்தர்ப்பத்தில், தேர்தல் களத்தில் நுழைந்த கமலாதேவி, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார், ஆனால் "தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி" என்ற பெருமையைப் பெற்றார். கமலாதேவியின் இந்தத் திடீர் முன்னெடுப்பால், அரசியல் பதவிகளின் கதவு பெண்களுக்குத் திறக்கப்பட்டது.

இந்தத் தேர்தலுடன், கமலாதேவியின் அரசியல் பயணம் தொடங்கியது, அவரது குறிக்கோள், பதவிக்கானதாக ஒருபோதும் இருக்கவில்லை. மாறாக, மாற்றம் வேண்டியே அவரின் ஒவ்வொரு நகர்வும் இருந்தது.

அவர் 1927-28ல் அகில இந்திய காங்கிரஸ் குழுவில் உறுப்பினரானார். குழந்தை திருமணத் தடைச் சட்டம், திருமண தகுதிக்கான வயது சட்டம் மற்றும் சுதேச மாகாணங்களுக்கு இடையேயான மோதல் குறித்த காங்கிரஸ் கொள்கை ஆகியவற்றை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

சுதந்தரத்திற்குப் பிறகு, கமலாதேவி சட்டோபாத்யாய் எந்த அரசியல் பதவியையும் ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் கே.காமராஜ் அவரை ஆளுநராக்க விரும்பினார்.

கமலாதேவி சட்டோபாத்யாய்

இந்த திட்டத்தை அவர் ஜவாஹர்லால் நேருவின் முன்வைத்தபோது, ​​நீங்கள் கமலா தேவியிடம் கேளுங்கள், அவர் ஒப்புக்கொண்டால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நேரு கூறினார். கமலாதேவி எந்த அரசாங்க பதவியிலும் அமர ஒருபோதும் தயாராக இருக்க மாட்டார் என்று காமராஜ் புரிந்து கொண்டார்.

இருப்பினும், சுதந்தரம் பெற்ற உடனேயே, அகதிகளின் மறுவாழ்வு மீது கமலாதேவி தனது கவனத்தைச் செலுத்தினார்.

அவர் கூட்டுறவு இயக்கம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இந்தியக் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கினார்.

கமலாதேவி, மக்களின் பங்களிப்புடன், அகதிகளுக்காக ஒரு நகரத்தை உருவாக்கும் திட்டத்தைப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவிடம் முன்வைத்தார். அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு நிதி உதவியையும் எதிர்பார்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் இதற்கு ஜவஹர்லால் ஒப்புக்கொண்டார்.

கமலாதேவி சட்டோபாத்யாய்

கமலாதேவி சட்டோபாத்யாய், இந்திய கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் வடகிழக்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து வந்த அகதிகளை டெல்லிக்கு அருகில் குடியேற்றினார். அந்த இடம் தான் இன்று ஃபரிதாபாத் என்று அழைக்கப்படுகிறது.

1950 முதல், கமலாதேவி இந்திய நாட்டுப்புற மரபுகள் மற்றும் சாஸ்திரியக் கலைகளை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் நேரத்தை அர்ப்பணித்தார். சுதந்தரத்திற்குப் பிறகு இந்திய கைவினைப்பொருள் அமைப்புகளை நிறுவுவதில் பெரிய பங்கு வகித்தார். இதற்காக, மத்திய குடிசை தொழில்கள் எம்போரியம் மற்றும் இந்திய கைவினைக் கவுன்சில் ஒன்றை உருவாக்கினார்.

கமலாதேவி இந்திய நாடக பாரம்பரியத்தையும் பிற கலை வடிவங்களையும் மேம்படுத்த இந்திய தேசிய அரங்கை நிறுவினார். பின்னர் இது இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய நாடக பள்ளியாக மாறியது.

கமலாதேவி சட்டோபாத்யாய்

கமலாதேவியின் முயற்சிகள் இந்திய இசை மற்றும் நடன மரபுகளை முன்னெடுக்கும் முன்னணி நிறுவனமான சங்கீத நாடக அகாடமியை நிறுவ வழிவகுத்தது.

கமலாதேவி சட்டோபாத்யாய்

கமலா தேவிக்கு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. அவருக்கு ரமோன் மகசேசே விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அவர் அக்டோபர் 29, 1988 அன்று தனது 85ஆவது வயதில் உயிரிழந்தார். ஆனால் கமலாதேவி சட்டோபாத்யாய் செய்து காட்டிய சாதனைகளைப் புறக்கணிக்க முடியாது.

No comments:

Post a Comment