Monday 12 April 2021

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) APRIL 12

 


International Day of Human Space Flight APRIL 12



மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது[1].





உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961 இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.


சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் (International Day of Human Space Flight)  இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.


மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 12 தேதியை கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது.


ஏப்ரல் 12 ஆம் தேதியை மனித விண்வெளி பயணத்துக்கான சர்வதேச நாளாகப் பிரகடனம் செய்யப்படுவதற்கு மூலமாக அமைந்த காரணம், விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளிப் பயணம் நிகழ்ந்து 50வது ஆண்டுகள் பூர்த்தியடைந்ததுதான்.


ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961 ஏப்ரல் 12  வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஏப்ரல் 12 தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுக்க பரவியிருக்கிறது.


யூரி அலெக்சியேவிச் ககாரின் ரஷ்யாவில் மாஸ்கோ நகருக்கு மேற்கே அமைந்துள்ள க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் 1934, மார்ச் 9 இல் பிறந்தார்.  இவர் பிறந்த இப்பிரதேசம் பிற்காலத்தில் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. (இவர் 1968ம் ஆண்டு காலமானார்).


இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணையில் வேலை பார்த்தார்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதி நேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பள்ளிக் கூடத்தில் (Orenburg Pilot's School) இணைந்து மிக்- 15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். 1957 ம் ஆண்டில் வலென்டினா கொரசோவா என்பவரை திருமணம் செய்தார். நார்வே எல்லையில் மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் பணியை ஆரம்பித்தார்.


1960 இல் சோவியத் யூனியன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும்  திட்டத்தை தொடங்கியது. இதில், 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார். இந்தத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு உடல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்கு தேர்வானார்கள். ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்ப தேர்வு செய்யப்பட்டார்.


யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961-ல் வஸ்டோக் விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1.48 மணி நேரம் (108 நிமிடங்கள்) விண்வெளியில் பறந்தது.


விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்சி செய்வதாகும்.


1968 மாதம் 27 தேதிககாரின் ஓட்டி சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. சாதனை படைத்த ககாரின் தனது 34 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.


யூரி ககாரின் மிகக் குறுகிய காலம் இவ்வுலகில் வாழ்ந்த போதிலும் அவர் பெயர் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது.


விண்வெளி 'முதல்'கள்..!


* விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எண்ணம் 19ம் நூற்றாண்டின் பின் பாதியிலிருந்து விஞ்ஞான புனைக் கதைகளிலில் இடம் பெற்று வந்துள்ளன. எட்வர்ட் எவரெட் ஹேல் என்ற எழுத்தாளர் 1869 ஆம் ஆண்டில்  எழுதிய 'தி பிரிக் மூன்' என்னும் கற்பனை  கதையில் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது பற்றி எழுதியிருந்தார்.


* விண்வெளி ஆய்வுப் பயணத்தில் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ம் தேதி, சோவியத் ஒன்றியத்தினால் ஆளில்லாத விண்கலமான ஸ்புட்னிக் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 


* 1957, நவம்பர் 3 அன்று லைக்கா என்ற நாய் முதல் முறையாக புவி சுற்றுப் பாதையை சுற்றி வர அனுப்பப்பட்டது. புவி சுற்றுப்பாதையை சுற்றி வந்த முதல் ஜீவராசி இது.


*  1961, ஏப்ரல் 12  இல் யூரிககாரின், வஸ்டோக்-1 விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.


* 1969, ஜூலை 20 இல் அமெரிக்க அப்பலோ 11 விண்கலம் சந்திரனில் முதன் முதலாக தரையிறங்கியது. சந்திரனில் பாதம் பதித்தவர் என்ற பெருமையினை நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார்.


* ஏராளமான நாடுகள் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ளன. அதே நேரத்தில் செயற்கைக் கோள்களை வானில் செலுத்தும் ஆற்றல் மிகு நாடுகளாக ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, உக்ரேன், இந்தியா, இஸ்ரேல், உக்ரேன், ஈரான் ஆகியன காணப்படுகின்றன.

No comments:

Post a Comment