Monday 26 April 2021

M.S.VISWANATHAN VS KANNADASAN

 

M.S.VISWANATHAN VS KANNADASAN



கண்ணதாசனைக் கொஞ்சுவார் எம்.எஸ்.விஸ்வநாதன் 

கண்ணதாசனோ, எம்.எஸ்.வி.யைக் கெஞ்சி மிஞ்சுவார்.

இருவருக்கும் அப்படியொரு பந்தம்.

கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால், அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்களின் பட்டியல் நீண்டுவிடும் என்பார்கள்.

🌹அன்று ஊமைப் பெண்ணல்லோ’ பாட்டில், ‘அ ஆ இ ஈ’ சொல்லித்தருவது போல் பாடல் அமைந்திருக்கும். அதில் ஒரு வயலினை இழையவிட்டிருப்பார்.

நம்மையும் பாடம் படிக்க வைத்துவிடுவார்.

🌹மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாட்டில், ‘மா...லைப் பொழுதின்’ என்று சொல்லும்போதே அந்தப் பாடலுக்குள் இருக்கிற சோகம் நமக்குள்ளேயும் வந்துவிடும்.

🌹ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ பாட்டிலும் மங்கலகரமான இசையைத் தவழவிட்டிருப்பார்.

விஜயகுமாரியின் எதிர்காலம் நன்றாக வேண்டும், சிவாஜி நினைத்தது நடக்கவேண்டும் எனும் பிரார்த்தனை நமக்குள்ளே ஓடும்.

டி.எம்.எஸ்.சையும் பிபிஸ்ரீநிவாஸையும் சேர்ந்து பாட வைக்கும் போது, ரொம்பவே குஷியாகிவிடுவார் எம்.எஸ்.வி.

🌹பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ ஆகச்சிறந்த பாடல் 

🌹பாடினாள் ஒரு பாட்டு பால்நிலாவினில் நேற்று...’ என்ற பாடல் துள்ளவைத்துவிடும்.

பி.பி.எஸ். தனியே பாடுகிறார் என்றால் ஒரு விசில் சத்தத்தை துணைக்கு அனுப்பிவிடுவார்.

🌹’நான் பேச நினைப்பதெல்லாம்’ பாட்டுக்கு ‘ம்...ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்ம்’ என்று ஹம் செய்யவைத்திருப்பார்.

அந்த ‘ஹம்’தான் பாடலுக்கு இன்னும் ஜீவனைக் கொடுத்து, நம் தூக்கத்தையெல்லாம் விரட்டிவிடும். துக்கத்தையும்தான்!

🌹தாழையாம்பூமுடிச்சு’ பாட்டுக்கு முன்னே ஒரு ஹம்மிங்.

🌹பூமாலையில் ஓர் மல்லிகை’ பாட்டுக்கு முன்னதாக, ஒரு ஹம்மிங்.

🌹நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ பாடலின் இடையே ஓர் ஹம்மிங்.

🌹‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?’

பாடலை டி.எம்.எஸ். பாட,

நடுநடுவே எல்.ஆர்.ஈஸ்வரியை விட்டு, ஓர் ஹம்மிங் இசைத்திருப்பார்.

அது நம்மை கட்டிப்போட்டுவிடும்.

🌹நெஞ்சம் மறப்பதில்லை’ என்றொரு பாடல். அந்த ஹம்மிங், உயிரைக் கரைத்துவிடும்.

🌹வாராதிருப்பானோ

வண்ண மலர்க் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ

சித்திரப் பூம் பாவை தன்னை

🌹உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா?’, ‘

🌹கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா’,

🌹துள்ளுவதோ இளமை’

🌹என்ன பார்வை உந்தன் பார்வை’,

🌹ரோஜாமலரே ராஜகுமாரி...’,

🌹சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘

🌹கேள்வியின் நாயகனே’, ‘

🌹வான் நிலா நிலா அல்ல...’, ‘

🌹மலர்ந்தும் மலராத பாதிமலர் போல...’,

🌹’அவளுக்கென்ன அழகிய முகம்...’ என்று எத்தனை பாடல்கள்; எவ்வளவு வெரைட்டிகள்!

🌹அவளுக்கென்ன’ பாடலுக்கு டிரிபிள் பேங்கோஸில் அதகளம் பண்ணியிருப்பார்.

🌹 ‘என்னடி ராக்கம்மா’வுக்கு சோழவந்தான் அலப்பறையை இசையால் தந்து அசத்தியிருப்பார்.

🌹சிப்பி இருக்குது முத்து இருக்குது’ பாடலெல்லாம் எம்.எஸ்.விக்காகவும் கண்ணதாசனுக்காகவும் கே.பாலசந்தர் வைத்த ஆடுகளம் மாதிரி இருக்கும்.

🌹‘முத்துக்களோ கண்கள்’ என்பார். ஏகப்பட்ட கருவிகளையும் மெட்டுகளையும் இணைத்து, ‘

🌹ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசைகொண்டான்’ என்று மிரட்டுவார்.

அதுதான் மெல்லிசை மன்னர்; அதனால்தான் மெல்லிசை மன்னர்

இந்தக் கால பாஷையில்... கெமிஸ்ட்ரி! ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ எத்தனையோ பாடல்களைத் தந்தார். ஸ்வரம் பிரித்துப் பரிமாறினார்.

எம்.எஸ்.வி.யின் பாடல்கள் தனித்துவமும் மகத்துவமும் வாய்ந்தவை. அதுவும் வாத்தியக் கருவிகள் குறைவாக வைத்துக்கொண்டுதான்சாதனை

செய்தவர் 

No comments:

Post a Comment