Thursday 22 February 2018

VEDIKA ,SOUTH INDIAN ACTRESS BORN 1988 FEBRUARY 22





VEDIKA ,SOUTH INDIAN ACTRESS
BORN 1988 FEBRUARY 22





வேதிகா குமார்

வேதிகா தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகையாவார்.வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 
இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
சென்னை: தமிழில், ‘முனி‘, ‘காளை‘, ‘சக்கரக்கட்டி‘, ‘பரதேசி' படங்களில் நடித்தவர் வேதிகா. இப்போது மலையாளத்தில் ‘சிங்காரவேலன்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் கேரளாவில் நடந்து வந்தது. படத்துக்காக, தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதில் வேதிகாவை படத்தின் ஹீரோ திலீப் தூக்கி வீச வேண்டும் என்பது காட்சி. அதன்படி திலீப், வேதிகாவை தண்ணீர் தொட்டிக்குள் வீசினார். இதில் முங்கி எழுந்த வேதிகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செயற்கையாகக் கட்டப்பட்டிருந்த அந்த தொட்டி வேதிகா கை வைக்கவும் அப்படியே விழுந்து உடைந்தது. இதையடுத்து படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபற்றி வேதிகா கூறும்போது, ‘தண்ணீருக்குள் வீசப்பட்டதும் உடனடியாக எழுந்து நின்றுகொள்ளும்படி கேமராமேன் கூறினார். அதன்படி உடன் எழுந்து நின்றேன். ஆனால் தொட்டியின் சுவர் திடீரென்று உடைந்துவிட்டது. உடனடியாக யூனிட்டில் இருந்த உதவியாளர்கள் என்னை காப்பாற்றினார்கள். பிறகுதான் அந்த சுவர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கட்டப்பட்டது என்று தெரிந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து உயிர் தப்பினேன். இந்த தொட்டி ஒரு கட்டிடத்தின் விளிம்பில் கட்டப்பட்டிருந்தது. இப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் எனக்கு நடுக்கம் வந்துவிடுகிறது' என்றார்.

பரதேசி’, ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்த வேதிகா, தற்போது பிரபுதேவா தயாரிக்க இருக்கும் ‘வினோதன்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் வேதிகா, மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருணுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்கவுள்ளார்.

வருணுக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேடி வந்தனர். கடைசியாக வேதிகாவை தேர்வு செய்தனர்.

புது படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பிரபுதேவா தயாரிப்பில் நடிப்பதன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் வேதிகா, இப்படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறாராம். ஒன்று பள்ளி மாணவியாகவும் மற்றொன்று 60 வயது பெண்ணாகவும் நடிக்க இருக்கிறாராம்.


இதற்கு முன் ‘இந்தியன்’ படத்தில் நடிகை சுகன்யா இளம் வயது பெண்ணாகவும், 60 வயது பெண்ணாகவும் நடித்திருந்தார். இதில் சுகன்யாவின் நடிப்பு பேசப்பட்டது. இதுபோன்று வேதிகா நடிக்கவுள்ள கதாபாத்திரமும் பேசப்படுமாம்.

சைக்கலாஜிக்கல் ரொமான்டிக் திரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பமாக  இருக்கிறது.

இளம் புதுமுகமான நடிகை வேதிகாவுக்கு சென்னை புதிது. இது குறித்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டபோது, ”நான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். இங்கு எனக்கு பிடித்த இடம் மெரீனா கடற்கரை. நான் நடித்த முதல் பாடல்காட்சியும் மெரீனா கடற்கரையில் தான் எடுக்கப்பட்டது. தற்போது நான் நடித்து வரும் மதராசி படத்தின் மூலம் சென்னையின் சிறப்புகளை தெரிந்து கொண்டேன்.

மேலும் பொதுவாக எனக்கு கடற்கரை நகரங்கள் மிகவும் பிடிக்கும். நகரங்களில் மற்ற இடங்களை விட கடற்கரைகள் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாகவும், அழகாகவும் இருப்பதும் ஒரு காரணம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment