Monday 16 October 2017

Hongzhi Emperor 1487- 1505.........4





Hongzhi Emperor 1487- 1505 ..........4

காங் சி 1487–1505


மன்னர் காங் சி 1487–1505அப்போது ரஷ்ய மன்னராக இருந்த மகா பீட்டருடன் (பீட்டர் தி கிரேட்) நட்பாகப் பழகி வந்தார்.

ஒரு கட்டத்தில் ‘எங்கள் நாட்டு மாணவர்கள் பெய்ஜிங்கில் கல்வி கற்கலாமா?’’ என்று ரஷ்ய மன்னர் கேட்க, அதை ஒரு கவுரவமாக கருதிய சீன மன்னர் இதற்கு ஒப்புக் கொண்டார். மாணவர்களோடு கூடவே வந்து சேர்ந்தனர் ரஷ்ய பாதிரிமார்கள்.

ஐரோப்பியர்களின் வருகைக்கு சீனாவில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஐரோப்பியர்கள் தங்கள் வணிகத்தையும் சீனாவில் தொடங்கினர். இவர்களின் மரியாதையான பழக்க வழக்கங்கள் சீனர்களுக்குப் பிடித்திருந்தன. கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகள் வேறு விதத்திலும் சாமர்த்தியம் காட்டினார்கள். புத்த சன்யாசிகள் போல உடை உடுத்தி, சீன அதிகாரிகளின் நட்பைப் பெற்று பிறகு மெல்ல மெல்ல கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார்கள்.

1514-ல் இருந்து 1784 வரை 

அடுத்தடுத்து பல நாடுகள் சீனாவில் தங்கள் வணிகத்தைத் தொடங்கின. போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஹாலந்து, பிரிட்டன், பிரான்ஸ் என்று இவை வரிசைக்கிரமமாக சீனாவில் கால் பதித்தன.

சீனர்களுக்குக் குழப்பம் வந்தது. இவர்களின் ஒரே நோக்கம் வணிகம்தானா?

அதுவும் முதன்முதலில் வந்து சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் சீன மன்னரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தார் கள். கொதித்துப் போன சீனர்கள் போர்ச்சு கீசியர்களைக் கொன்று குவித்தார்கள். எந்த அந்நிய சக்தியின் வணிகமும் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். பரந்திருந்த சீனாவால் தனக்குத் தேவைப்படும் அனைத்தையும் தயாரித்துக் கொள்ள முடிந்தது.

ஆனால் ஐரோப்பியர்களுக்கு சீனா தேவைப்பட்டது. சீன பட்டு, சீனத் தேயிலை ஆகியவை காந்தம்போல் அவர்களைக் கவர்ந்தன. தவிர மக்கள் தொகை அதிகமான சீனாவில் தங்கள் இயந்திரங்களை மிக அதிக அளவில் விற்க முடியுமே. மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

சீனா ஒருவழியாக ஒப்புக் கொண்டது. ஆனால் வணிகத்துக்குப் பல நிபந்தனை களை விதித்தது. ‘கான்ட்டன் துறைமுகத்தில் மட்டும்தான் வெளிநாடுகள் வணிகம் செய்யலாம். சீனர்களை கூலியாட்களாக நியமிக்கக் கூடாது. வணிகக் கிடங்குகளுக்கு பெண்களை அழைத்துவரக் கூடாது. வியாபாரம் செய்யும் காலம் மட்டும்தான் கான்ட்டன் நகரில் அந்நியர்கள் வசிக்கலாம்’.

பிற நாடுகள் ஒப்புக் கொண்டன. பிரிட்டனுக்கு மட்டும் இது மிகவும் கவுரவக் குறைச்சலாக இருந்தது. சீனர்களுக்கு ஓபியம் எனும் போதை மருந்தை கொஞ்சம் கொஞ்சமாக இறக்குமதி செய்து லாபம் பார்க்கத் தொடங்கியது.

இதனால் நேர்ந்த உரசல்களை இதே பகுதியில் ஹாங்காங் குறித்து எழுதியபோது விளக்கமாகவே பார்த்திருக்கிறோம்.

பிரிட்டனுக்கும் சீனாவுக்குமிடையே நடைபெற்றது ‘முதல் அபினி யுத்தம்’. பிரிட்டிஷ் படை சீனாவில் சில சிறிய தீவுகளை தன் வசம் ஆக்கிக் கொண்டது. மஞ்சூ சக்ரவர்த்தி நடுங்கினார். சமாதானம் பேசினார். இதைத் தொடர்ந்து ஹாங்காங் ‘நூறு வருட குத்தகைக்கு’ பிரிட்டனுக்குத் தாரை வார்க்கப்பட்டது. தவிர போதை மருந்து வியாபாரம் ஒப்பந்தத்தின் மூலம் சட்டப்பூர்வமாகவே ஆக்கப்பட்டது.

இந்த நிலையில் சீன அரசுக்கும் எதிர்ப்பு நாடுகளுக்கும் சமாதானம் செய்து வைக்க முன்வந்தது ரஷ்யா. இந்த ‘சமாதானப் பேச்சினால்’ சீனாவுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. தனது 11 துறைமுகங்களை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டு வணிகத் துக்குச் சீனா திறந்துவிட்டது.

கிறிஸ்துவ பாதிரிமார்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. (இதன் காரணமாக மத மாற்றங்கள் பகிரங்கமாகவே நடைபெறத் தொடங்கின). நாட்டாமை செய்த ரஷ்யா ஆமோர் என்ற சீன மாகாணத்தை ‘அன்புடன் பெற்றுக் கொண்டது’. ஆக வடக்கிலிருந்து ரஷ்யா நெருக்க, சீனாவின் அன்னாம் பகுதியை பிரான்ஸ் ஆக்கிரமித்துக் கொள்ள, ஹாங்காங் பிரிட்டனுக்குச் செல்ல சீனா கதறத் தொடங்கியது. அதற்கென்று அந்த காலகட்டத்தில் எந்த நட்பு நாடும் இல்லாமல் போனது.

அடுத்து சீனாவை கபளீகரம் செய்ய முயற்சித்தது ஜப்பான். ஒரு யானையை ஓர் எறும்பால் தின்ன முடியுமா என்பதுபோல் வியப்படைய வேண்டாம். அப்போது ஜப்பான் பெரும் பேராசை பிடித்த நாடாக இருந்தது.

1536 முதல் 1598 வரை ஹிதயோஸி என்பவர் ஜப்பானின் பிரதமராக விளங்கினார். அவர் சீனாவை தன்வசம் ஆக்கிக் கொள்ள நினைத்தார். அதற்கு முதல் கட்டமாக கொரியாவை வசப்படுத்திக் கொள்ள தீர்மானித்தார். (அப்போது கொரியப் பகுதி சீனாவின் ஆதிக்கத்தில் இருந்தது).

கொரியாவை நோக்கி ஜப்பான் ராணுவம் செல்ல, பதறிப் போன சீனா தனது ராணுவ வீரர்களை கொரியாவுக்கு அனுப்பியது. இருதரப்பினரும் மோதிக் கொள்ள, கொரியாவில் ரத்த ஆறு ஓடியது.

இடையே ஜப்பானியப் பிரதமர் இறந்துவிட போர் நின்றது. ஆனால் அதே சமயம் ஜப்பானிலும் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் நுழைந்தார்கள். பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஹாலந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக ஜப்பானில் நுழைந்தன, மிரட்டின. சீனாவில் நடந்த அதே நாடகக் காட்சிகள்.

ஆனால் ஜப்பான் கொஞ்சம் வக்கிரமாக யோசித்தது. ‘அமெரிக்கா - ஐரோப்பிய சக்திகளிடம் நாம் அடிபணிந்துவிட்டோம். நாமும் யாரையாவது ஆட்டிப் படைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இந்த யோசனையைச் செயலாற்ற ஜப்பான் தேர்ந்தெடுத்த நாடு சீனா.


No comments:

Post a Comment