Monday 16 October 2017

SEN- YAT-SEN..............5


SEN- YAT-SEN...........5



சன்யாட் சென்
சன்யாட் சென்
சீனாவின் கிழக்கே உள்ள தீவுத் தொகுதி ஒன்றின் பெயர் லூ சூ. இதில் சுமார் ஐம்பது சின்னச் சின்ன தீவுகள் இருந்தன. சீனா, ஜப்பான் ஆகிய இரண்டுமே மாறி மாறி இந்தத் தீவுகளை ஆட்சி செய்து கொண்டிருந்தன. இந்த இரண்டு நாடுகளுக்குமே கப்பம் செலுத்தி வந்தார்கள் அந்தத் தீவுக் கூட்டத்தின் அதிகாரிகள்.

ஒருமுறை இந்தத் தீவுகளிலிருந்து சுமார் 60 பேர் ஒரு கப்பலில் கிளம்பினார்கள். வழியில் ஃபார்மோசா தீவு அருகே அந்தக் கப்பல் தரை தட்டியது. ஃபார்மோசா தீவுவாசிகள் கப்பலில் சென்றவர்களைக் கொன்று விட்டார்கள்.

இதையே சாக்காக வைத்துக் கொண்டு ஜப்பான் தன் ஆதிக்க சதுரங்கத்தைத் தொடங்கியது. சீனாவுக்கு செய்தி அனுப்பியது. “லூ சூ தீவுகள் இப்போது எங்கள் அதிகாரத்தில் உள்ளன. ஃபார்மோசா தீவு உங்கள் அதிகாரத்தில் உள்ளது. எங்கள் மக்களை உங்கள் மக்கள் கொன்று விட்டார்கள். இதற்கு நஷ்ட ஈடாக ஒரு பெரும் தொகையைத் தரவேண்டும். தவிர ஃபார்மோசா தீவின் மேற்குப் பகுதியையும் எங்களுக்கே தர வேண்டும்’’.

பல நாடுகளைப் பார்த்து பயப்பட்டுக் கொண்டிருந்த சீனா, ஜப்பானைப் பார்த்தும் நடுங்கியது. ஜப்பானின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டது.

அடுத்ததாக (சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த) கொரியாவைக் கடுமையாக எச்சரித்தது ஜப்பான். கொரியா சீனாவின் ஆலோசனையைக் கேட்க `ஜப்பானை அனுசரித்துச் செல்லுங்கள்’ என்று கூறியது முதுகெலும்பை முழுவதுமாகத் தொலைத்திருந்த சீனா.

எனவே ஜப்பானுக்கு சிறப்பு வணிக அந்தஸ்து அளித்தது கொரியா. பதிலுக்கு “இனி கொரியா சுதந்திர நாடு’’ என்று தடாலடியாக அறிவித்தது ஜப்பான். சீனா தவித்தது. ஜப்பானைப் பகைத்துக் கொண்டால் அதோடு எல்லா எதிரி நாடுகளும் சேர்ந்து விட்டால்? கையாலாகத்தனத்துடன் மெளனம் சாதித்தது சீனா.

அமெரிக்காவுக்குப் பொறுக்கவில்லை. தாங்களும் கொரியாவுடன் நட்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். தொடங்கியது வியாபாரச் சுரண்டல்.

அப்போதும்கூட “கொரியாவை சுதந்திர நாடு என்று ஜப்பான் அறிவித்தால் என்ன? கொரியா பிற நாடுகளுடன் வணிக ஒப்பந்தங்களில் ஈடுபட்டால்தான் என்ன? கொரியா சுயாட்சி பெற்ற பகுதி. ஆனாலும் நம் ஆளுகைக்கு உட்பட்டதுதான்’’ என்று நினைத்தது சீனா. இதைத் தொடர்ந்து கொரியாவில் பல வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது சீனா.

ஜப்பானுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. தொடங்கியது சீன - ஜப்பானிய யுத்தம். இது சீனா எதிர்பார்த்திராத யுத்தம். கொரியாவில் இருந்த சீனப்படைகளை விரட்டியடித்தது ஜப்பான். அங்கிருந்த சீனாவின் போர்க் கப்பல்களையும் மூழ்கடித்தது.

பெரிய நாடான சீனா எதனால் ஜப்பானிடம் தோற்க வேண்டும்? நியாயமான கேள்விதான். ஆனால் சீனா தோற்கப் பல காரணங்கள் இருந்தன. ஏற்கெனவே அதனிடம் கொட்டிக் கிடந்த தாழ்வு (தோல்வி) மனப்பான்மை ஒரு முக்கிய காரணம். தவிர சீனாவை ஆண்ட மஞ்சூ பரம்பரையில் ஊழல் வேரோடிப் போய் இருந்தது. ஜப்பானை எதிர்கொள்ள மிகமிக மெதுவாக ஐரோப்பியர்களின் உதவியை நாடியது சீனா. அதற்குள் நிலைமை கைமீறி விட்டது.

வேறு வழியின்றி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது சீனா. இதன்படி கொரியாவை சீனா தனி நாடாக அங்கீகரிக்கும். சில தீவுகளை ஜப்பானுக்கு அளிக்கும். தவிர போரினால் உண்டான பாதிப்புகளுக்கு நஷ்டஈடாக 20 கோடி ரூபாயை ஜப்பானுக்கு சீனா அளிக்கும்.

அடுத்து தொடங்கியது மேலும் வீழ்ச்சிகள். “உனக்கு ஆதரவாக ஜப்பானை நாங்கள் எதிர்க்காவிட்டால் விளைவுகள் மிக பயங்கரமாக இருந்திருக்குமே. எனவே எங்களுக்கான பரிசுகள் என்ன?’’ என்று கேட்டன ஐரோப்பிய சக்திகள். உரிமையுடன் வெகுமதிகளைப் பெற்றன.

வட மஞ்சூரியா வழியாக விளாடிவாஸ்டாக் நகருக்கு ரயில் பாதை போட்டுக் கொள்ள அனுமதி பெற்றது ரஷ்யா. தவிர லியோடுங் தீபகற்பத்தை 25 வருடங்களுக்கு குத்தகை எடுத்துக் கொண்டது.

மூன்று சீன மாகாணங்களில் சுரங்கங்கள் தோண்டி பலன் பெறுவதற்கு பிரெஞ்சு முதலாளிகள் அனுமதி பெற்றனர். தன் பங்குக்கு கியாசெள என்ற பகுதியை 99 வருடக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது ஜெர்மனி.

சீன மக்கள் மனதில் பெரும் கசப்பு. ஐரோப்பிய சக்திகளைப் பற்றி அவர்களுக்கு ஒரு திகில் இருந்தது. எனவே அவர்களுக்கு அடிபணிந்ததைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பக்கத்தில் இருந்த துண்டு நாடு ஜப்பான் தங்களை ஆட்டுவிப்பதா?

மஞ்சூ ஆட்சியாளர்கள்மீது அவர்களுக்கு வெறுப்பு பரவியது. இந்தச் சமயத்தில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் பரபரப்பாகச் செயல்பட்டனர். மதமாற்றத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் மேல்நாட்டுத் தத்துவங்களை சீனர்களிடம் புகுத்தினர். இதனால் பல சீனர்கள் மனம் மாறினர். அவர்களில் முக்கியமானவர் சன்யாட் சென். இவர் பின்னாளில் `சீனக் குடியரசின் தந்தை’ என்றே அழைக்கப்பட்டவர்.

சீன முறைப்படி கல்வி கற்றவர் அவர். ஆனால் ஏனோ அந்தக் கல்வி முறை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த நேரத்தில் வடஅமெரிக்காவில் வாழ்ந்த அவர் அண்ணன் அழைக்க, அங்கு சென்றார். அங்கு ஆங்கிலக் கல்வி படித்தார். ஒரு கட்டத்தில் கிறிஸ்தவ மதம் அவரை ஈர்த்தது. இதைக் கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு அவரை தங்கள் ஊருக்கே வரவழைத்தனர்.

சன்யாட் சென்னுக்கு மஞ்சூ ஆட்சியின்மீது அதிருப்தியும், கிறிஸ்தவத்தின்மீது பற்றும் அதிகமாகிக் கொண்டே வந்தன. ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக புரட்சி செய்யத் தீர்மானித்தார். ஹாங்காங் சென்றார். அங்கு அவர் தங்கி இருந்தபோது அமெரிக்கப் பாதிரியார் ஒருவரோடு நட்பு ஏற்பட்டது. ஸன்யாட் சென் மதம் மாறினார். ஞான ஸ்நானம் செய்து வைக்கப்பட்டார்.

கிறிஸ்தவர்கள் உதவியுடன் மருத்துவம் படித்தார். ஹாங்காங் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தது. எனவே அங்கிருந்தே சீன அரசுக்கு எதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார். “பல இடங்களிலிருந்து பெய்ஜிங் மீது படையெடுத்தால் மஞ்சூ அரசு கவிழும்’’ என்று முடிவு செய்தார்.

அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு `முற்போக்கு சீனர்கள் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினா

No comments:

Post a Comment