Monday 16 October 2017

BOXER`S REBELLION


BOXER`S REBELLION



சீனாவில் பாக்ஸர் கலகம் வெடித்தது. காரணம் இதுதான்.

பல வெளிநாட்டுப் பொருட்கள் சீனாவில் திணிக்கப்பட்டன. கிறிஸ்தவ மத மும்தான். இதனால் பெரும் கோபம் அடைந்தார்கள் கணிசமான சீனர்கள். ‘‘நாட்டின் பொருளாதாரமும், ஒழுக்க நெறிகளும் சீரழியும்போது பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா’’ என்று துடித்தார்கள். என்றாலும் மஞ்சூ ஆட்சிக்கு எதிராக வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை.

குத்துச் சண்டை, கத்தி விளையாட்டு போன்றவற்றில் பயிற்சி அளிப்பதுதான் தங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டுக் கொண்ட இந்தக் குழு தங்கள் அணியை ‘பாக்ஸர்கள்’ என்று அறிவித்துக் கொண்டார்கள். தாங்கள் வல்லவர்கள் என்றும் ஆதிக்க சக்திகள் தங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறிக் கொண்டார்கள். தங்களை சீனக் கலாச்சாரத்தின் காவலர்கள் என்றும் அறிவித்துக் கொண்டனர். அரசும் பாக்ஸர்களுக்கு ஆதரவு தரத் தொடங் கியது. இதனால் வெளிநாட்டினர் அதிருப்தி அடைந்தனர். ஆங்கில இதழ்கள் சீன அரசைத் தாக்கி கட்டுரைகள் எழுதின.

இதெல்லாம் அப்போது லண்டனில் இருந்த சன்யாட் சென்னுக்கு மேலும் கசப்பை அளித்தது. தனது புரட்சிகரமான அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றி னார். அதற்குப் பெயர் கோமின்டாங்.

பெய்ஜிங்கில் உள்ள மன்னர் ஆட்சிக்குப் போட்டியாக, (சீனாவின் மற்றொரு பகுதி யான) நான்கிங் என்ற பகுதியில் சீனக் குடியரசை நிறுவினார். 1912 ஜனவரி முதல் தேதியன்று அந்தக் குடியரசின் தலைவரானார். மன்னர் ஆட்சிக்கு எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது.

இந்த நிலையில் யுவான் ஷிகாய் என்ற உள்ளூர் தலைவர் ஒருவரிடமிருந்து சன்யாட் சென்னுக்கு தந்தி ஒன்று வந்தது. ‘’உங்கள் குடியரசை நான் விரும்பி ஏற்கி றேன்’’ என்றது தந்தி வாசகம்.

யுவானுக்கு பண பலம், படை பலம் இரண்டுமே அதிகம். எனவே அவரைக் கொண்டு மன்னர் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டார் சன்யாட் சென். ‘‘சீனா முழுவதுமே குடியரசானால் நீங்களே அதற்குத் தலைவராக இருக்கலாம்’’ என்றார் பெருந்தன்மையாக.

மஞ்சூ மன்னனுக்கு யுவான் எச்சரிக்கை விடுத்தார். ‘‘நீங்களே அமைதியாக பதவியை விட்டு இறங்கி விடுங்கள். உங்கள் வசதிகள் தொடரும். ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு நாற்பது லட்சம் டாலர் அளிக்கப்படும். இதற்கு ஓப்புக் கொள்ளாவிட்டால் நீங்கள் கட்டாயமாக பதவி இறக்கி, கொல்லப்படுவீர்கள்’’. ஏற்கெனவே மக்களின் கொந்தளிப்பில் பயந்திருந்த மன்னன் முடி துறக்க ஒப்புக் கொண்டார். 1912 பிப்ரவரி 12 அன்று சீனா ஒரு குடியரசு ஆனது.

சன்யாட் சென்னின் ஆதரவுடன் யுவான் சீனக் குடியரசின் முதல் அதிபர் ஆனார்.

ஆனால் நாளடைவில் யுவான் போக்கு மாறியது. சன்யாட் சென் கட்சிக்குப் போட்டி யாக யுவான் ‘முன்னேற்றக் கட்சியை’ தொடங்கினார். பின்னர் சட்டவிரோதமான கட்சி என்று கூறி தேசியக் கட்சியைக் கலைத்துவிட்டார். இதன் விளைவாக சன்யாட் சென்னும் யுவானும் ஒருவரை ஒருவர் நேரடியாகவே எதிர்க்கும் சூழல் உருவானது.

யுவானுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு வலுத்தது. ஆனால் அவரோ தன் ஆட்சிக்கு உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந் தார். இதற்காக மங்கோலியாவுக்கு சுயாட்சி அளித்தார்.

திபெத்தில் பிரிட்டனுக்கு அதிக உரிமைகள் அளித்தார். ஆனால் உள்நாட்டில் எதிர்ப்பு மேலும் பெருகியது. கொதித்துப் போன யுவான் புதிய அரசியல் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதன்படி யுவான்தான் சீனாவின் வாழ்நாள் அதிபர். தவிர தன்னை சக்கரவர்த்தி என்று அறிவித்துக் கொண்டார்.

சன்யாட் சென் அதிர்ச்சி அடைந்தார். அவரது புரட்சிகளை யுவான் தன் படை பலத் தால் அடக்கினார். ஜப்பானுக்குச் சென்ற சன்யாட் சென் அங்கு தனது தேசியக் கட்சியைப் புதுப்பித்தார்.

அதே சமயம் சீனாவில் மீண்டும் சர்வாதிகாரம். ஒருவிதத்தில் மன்னர் ஆட்சி. (யுவான்தான் சக்கரவர்த்தி ஆயிற்றே).

இந்த சிக்கலை இயற்கை தீர்த்து வைத்தது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு 1916-ம் ஆண்டு யுவான் உயிரிழந்தார்.

(உலகம் உருளும்)

No comments:

Post a Comment