Thursday 11 June 2020

ANOUSHKA SANKAR SIDAR MUSICIAN BORN 1981 JUNE 9




ANOUSHKA SANKAR  SIDAR MUSICIAN
 BORN 1981 JUNE 9


அனுஷ்கா சங்கர் (Anoushka Shankar, வங்காள: অনুষ্কা শংকর; பிறப்பு: சூன் 9, 1981) இந்திய சித்தார் இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ரவிசங்கரின் மகளும், நோரா ஜோன்சின் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.[1]

சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி
இலண்டனில் பிறந்த அனுஷ்கா தமது குழந்தைப் பருவத்தை லண்டன் மற்றும் தில்லி ஆகிய இரு இடங்களிலும் கழித்தார். பதின்ம வயதில் அவர், கலிபோர்னியா என்சினிடாஸில் வசித்து, சான் டைகுட்டியோ அகாடமியில் பயின்றார். 1999 ஆம் ஆண்டில் சிறப்புப் பட்டப்படிப்பு பயின்ற அவர், கல்லூரியில் சேருவதை விடவும், இசைத் துறையில் சாதனை புரிவதையே விரும்பினார்.[1]

தொழில் வாழ்க்கை

2005ஆம் ஆண்டு இ
சை நிகழ்ச்சியின்போது அனுஷ்காவும் ரவிசங்கரும்.
ஒரு சிறு குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையுடன் சித்தார் பயிற்சியைத் துவங்கிய அனுஷ்கா, தமது 13ஆம் வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அளித்து, 16 ஆவது வயதில் இசைக்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1]

1998ஆம் ஆண்டில் அனுஷ்கா என்ற தமது முதல் இசைத் தொகுப்பினை அவர் வெளியிட்டார். பின்னர், 2000ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில், கொல்கத்தாவின் ராமகிருஷ்ணா மையத்தில் நிகழ்ச்சி அளித்த முதல் பெண்மணியாக இவர் விளங்கினார். அனுஷ்காவும் அவருடைய ஒன்று விட்ட சகோதரியான நோரா ஜோன்ஸ் இருவருமே 2003ஆம் ஆண்டு கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.[1]



சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி
இலண்டனில் பிறந்த அனுஷ்கா தமது குழந்தைப் பருவத்தை லண்டன் மற்றும் தில்லி ஆகிய இரு இடங்களிலும் கழித்தார். பதின்ம வயதில் அவர், கலிபோர்னியா என்சினிடாஸில் வசித்து, சான் டைகுட்டியோ அகாடமியில் பயின்றார். 1999 ஆம் ஆண்டில் சிறப்புப் பட்டப்படிப்பு பயின்ற அவர், கல்லூரியில் சேருவதை விடவும், இசைத் துறையில் சாதனை புரிவதையே விரும்பினார்.[1]

தொழில் வாழ்க்கை


2005ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சியின்போது அனுஷ்காவும் ரவிசங்கரும்.
ஒரு சிறு குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையுடன் சித்தார் பயிற்சியைத் துவங்கிய அனுஷ்கா, தமது 13ஆம் வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அளித்து, 16 ஆவது வயதில் இசைக்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1]

1998ஆம் ஆண்டில் அனுஷ்கா என்ற தமது முதல் இசைத் தொகுப்பினை அவர் வெளியிட்டார். பின்னர், 2000ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில், கொல்கத்தாவின் ராமகிருஷ்ணா மையத்தில் நிகழ்ச்சி அளித்த முதல் பெண்மணியாக இவர் விளங்கினார். அனுஷ்காவும் அவருடைய ஒன்று விட்ட சகோதரியான நோரா ஜோன்ஸ் இருவருமே 2003ஆம் ஆண்டு கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.[1]

கார்ஷ் காலே என்பவருடன் இணைந்து, 2007 ஆகஸ்ட் 28 அன்று, ப்ரீத்திங் அண்டர் வாட்டர் என்னும் இசைத்தொகுப்பினை வெளியிட்டார். இது பாராம்பரிய சித்தார் மற்றும் மின்னணுத் தாளம் மற்றும் இன்னிசை ஆகியவற்றின் கலவையாகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில், நோரா ஜோன்ஸ், ஸ்டிங் மற்றும் தனது மகளுடன் சித்தாரில் ஒரு இருவர் இசையை அளித்த ரவிசங்கர் ஆகியோரின் குரல் பங்களிப்புகள் இருந்தன.

2009ஆம் ஆண்டு அனுஷ்கா இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஹெச்டி சிட்டி என்னும் வாழ்வு முறை துணையிதழில் பத்திகள் எழுதத் துவங்கினார். இந்தப் பத்திகள் தேசிமார்ட்டினி என்னும் சமூக வலையமைப்பினில் நேரடிக்-கணினி முறைமையில் காணக் கிடைக்கின்றன.[2]

ஆதரவு நிகழ்ச்சிகள்
2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 அன்று, அவர் லண்டன் நகரில் ராயல் ஆல்பர்ட் ஹால் என்னுமிடத்தில் ஜார்ஜிற்கான இசை நிகழ்ச்சி என்பதனை நிகழ்த்தி அதில் தாமும் பங்கேற்றார். அது ஜார்ஜ் ஹாரிசன் என்பவரின் நினைவாக, 1971ஆம் ஆண்டு ஹாரிசானுடன், ரவிசங்கர் அளித்த பங்களாதேஷிற்கான இசை நிகழ்ச்சி என்னும் ஆதரவு நிகழ்ச்சியின் வடிவில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது.

2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அனுஷ்காவும் ஜெத்ரோ டுல் ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி மும்பை நகரில் நிகழவிருந்த ஒரு நிகழ்ச்சியினை ஒத்தி வைத்தனர்.[3] அந்த நிகழ்ச்சியை அவர்கள் எ பில்லியன் ஹேண்ட்ஸ் கான்சர்ட் என்னும் பெயரில் தாக்குதல்களுக்குப் பலியானவர்களுக்கான ஒரு ஆதரவு நிகழ்ச்சியாக மாற்றியமைத்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் நிகழ்த்தினர்.[4] இந்த முடிவைக் குறித்துப் பேசுகையில் அனுஷ்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்: "ஒரு இசைக் கலைஞராக, நான் இவ்வாறுதான் பேசுகிறேன்; என்னுள் இருக்கும் கோபத்தை நான் இவ்வாறுதான் வெளிப்படுத்துகிறேன் [...] இந்தச் சம்பவங்களால் எங்களது சுற்றுலா முழுவதுமே மாறுதலுக்கு உள்ளாகி விட்டது; நிகழ்ச்சியின் கட்டமைப்பு அதே போலவே இருப்பினும், உணர்வு பூர்வமாக நாங்கள் இன்னும் அதிகமாகவே கூற முயற்சிக்கிறோம்."[5]

விருதுகள்
பிரித்தானிய மக்களவைக் கேடயம் 1998[1]
ஆண்டின் பெண்மணி (2003வது ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்பட்ட இந்த விருதினை கரீனா கபூர், ரித்து பெரி, மற்றும் ரியா பிள்ளை ஆகியோருடன் இணைந்து பெற்றார்).[1]
செயற்பாடுகள்
அனுஷ்கா விலங்கினத்தின் உரிமைகள் மற்றும் விலங்குகளை நன்முறையில் நடத்தும் மக்கள் (பிஈடிஏ) என்னும் குழு ஆகியவற்றிற்கான ஆதரவாளர். அவரும் மற்றும் அவரது தந்தையாரும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தயாரிக்கப்பட்ட 30 விநாடிகளுக்கான பொதுச் சேவை அறிவிப்பு ஒன்றில் தோன்றியுள்ளனர்.[6] அனுஷ்கா முற்றிலுமாக சைவ உணவுப் பழக்கம்[7] கொண்டவர். டிரிப்பிள் ஜே உடனான ஒரு வானொலிப் பேட்டியில் (ஞாயிறு இரவு சஃப்ரான்), தாம் ஒரு சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அனுஷ்கா, ஐக்கிய நாடுகள் உலக உணவு நிரலின் அதிகாரபூர்வமான இந்தியத் தகவலாளர் ஆவார்.

கார்ஷ் காலே என்பவருடன் இணைந்து, 2007 ஆகஸ்ட் 28 அன்று, ப்ரீத்திங் அண்டர் வாட்டர் என்னும் இசைத்தொகுப்பினை வெளியிட்டார். இது பாராம்பரிய சித்தார் மற்றும் மின்னணுத் தாளம் மற்றும் இன்னிசை ஆகியவற்றின் கலவையாகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில், நோரா ஜோன்ஸ், ஸ்டிங் மற்றும் தனது மகளுடன் சித்தாரில் ஒரு இருவர் இசையை அளித்த ரவிசங்கர் ஆகியோரின் குரல் பங்களிப்புகள் இருந்தன.

2009ஆம் ஆண்டு அனுஷ்கா இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஹெச்டி சிட்டி என்னும் வாழ்வு முறை துணையிதழில் பத்திகள் எழுதத் துவங்கினார். இந்தப் பத்திகள் தேசிமார்ட்டினி என்னும் சமூக வலையமைப்பினில் நேரடிக்-கணினி முறைமையில் காணக் கிடைக்கின்றன.[2]

ஆதரவு நிகழ்ச்சிகள்
2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 அன்று, அவர் லண்டன் நகரில் ராயல் ஆல்பர்ட் ஹால் என்னுமிடத்தில் ஜார்ஜிற்கான இசை நிகழ்ச்சி என்பதனை நிகழ்த்தி அதில் தாமும் பங்கேற்றார். அது ஜார்ஜ் ஹாரிசன் என்பவரின் நினைவாக, 1971ஆம் ஆண்டு ஹாரிசானுடன், ரவிசங்கர் அளித்த பங்களாதேஷிற்கான இசை நிகழ்ச்சி என்னும் ஆதரவு நிகழ்ச்சியின் வடிவில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது.

2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அனுஷ்காவும் ஜெத்ரோ டுல் ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி மும்பை நகரில் நிகழவிருந்த ஒரு நிகழ்ச்சியினை ஒத்தி வைத்தனர்.[3] அந்த நிகழ்ச்சியை அவர்கள் எ பில்லியன் ஹேண்ட்ஸ் கான்சர்ட் என்னும் பெயரில் தாக்குதல்களுக்குப் பலியானவர்களுக்கான ஒரு ஆதரவு நிகழ்ச்சியாக மாற்றியமைத்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் நிகழ்த்தினர்.[4] இந்த முடிவைக் குறித்துப் பேசுகையில் அனுஷ்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்: "ஒரு இசைக் கலைஞராக, நான் இவ்வாறுதான் பேசுகிறேன்; என்னுள் இருக்கும் கோபத்தை நான் இவ்வாறுதான் வெளிப்படுத்துகிறேன் [...] இந்தச் சம்பவங்களால் எங்களது சுற்றுலா முழுவதுமே மாறுதலுக்கு உள்ளாகி விட்டது; நிகழ்ச்சியின் கட்டமைப்பு அதே போலவே இருப்பினும், உணர்வு பூர்வமாக நாங்கள் இன்னும் அதிகமாகவே கூற முயற்சிக்கிறோம்."[5]

விருதுகள்
பிரித்தானிய மக்களவைக் கேடயம் 1998[1] ஆண்டின் பெண்மணி (2003வது ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்பட்ட இந்த விருதினை கரீனா கபூர், ரித்து பெரி, மற்றும் ரியா பிள்ளை ஆகியோருடன் இணைந்து பெற்றார்).[1]
செயற்பாடுகள்
அனுஷ்கா விலங்கினத்தின் உரிமைகள் மற்றும் விலங்குகளை நன்முறையில் நடத்தும் மக்கள் (பிஈடிஏ) என்னும் குழு ஆகியவற்றிற்கான ஆதரவாளர். அவரும் மற்றும் அவரது தந்தையாரும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தயாரிக்கப்பட்ட 30 விநாடிகளுக்கான பொதுச் சேவை அறிவிப்பு ஒன்றில் தோன்றியுள்ளனர்.[6] அனுஷ்கா முற்றிலுமாக சைவ உணவுப் பழக்கம்[7] கொண்டவர். டிரிப்பிள் ஜே உடனான ஒரு வானொலிப் பேட்டியில் (ஞாயிறு இரவு சஃப்ரான்), தாம் ஒரு சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அனுஷ்கா, ஐக்கிய நாடுகள் உலக உணவு நிரலின் அதிகாரபூர்வமான இந்தியத் தகவலாளர் ஆவார்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் தன்னுடைய தந்தை பண்டிட் ரவி சங்கருடன் இணைந்து சிதார் இசை நிகழ்ச்சியை அனுஷ்கா சங்கர் நடத்தியபோது, ரவிசங்கர் இயற்றிய "ராகா ஜோகீஸ்வரி' அறிமுகப்படுத்தப்பட்டது. தந்தையும் மகளுமாக இணைந்து நடத்திய அந்த நிகழ்ச்சிதான் ரவிசங்கரின் கடைசி நிகழ்ச்சியாகும்.

 அவரது மரணத்திற்கு பின்னர் தன்னுடைய கணவரும், இயக்குநருமான ஜோரைட் மற்றும் இருமகன்களுடன் லண்டனில்  வசித்து வரும் அனுஷ்கா,  மீண்டும் இந்தியாவில் மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் தன்னுடைய தந்தை ரவிசங்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசை நிகழ்ச்சிகள்  நடத்த வந்துள்ளார்.

தன்னுடைய கணவர் ஜோரைட், மகன்கள்

ஜுபின் மற்றும் மோகனுடன் வந்து இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய அனுஷ்கா, தன்னுடைய கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:

""என்னுடைய தந்தை பெங்களூருவில் நடத்திய கடைசி இசை நிகழ்ச்சியின் போது ராகா ஜோகீஸ்வரியை அறிமுகப்படுத்தினார். இந்திய இசைக் கருவிகளில் முதன் முதலாக சிதாரை மேல் நாட்டினருக்கு அறிமுகப்படுத்திய முதல் இசைக் கலைஞர் என்னுடைய தந்தைதான். இப்போது இந்திய இசை என்றாலே அவர்களுக்கு முதலில் நினைவுக்குவருவது சிதாரும், எனது தந்தையும்தான். இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் இணைத்து பீட்டில்ஸ் குழுவினருடன் என்னுடைய தந்தை நடத்திய இசை நிகழ்ச்சிகள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.

நானும் எனது தந்தையைப் போலவே பிரபல இசை மேதைகளான யஹுதி மெனுஹின், ஜுபின் மேத்தா, ஜார்ஜ் ஹாரிசன் போன்றவர்களைச் சந்தித்து நம்முடைய இந்திய இசையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. இசை ஒன்றுதான் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் பொது மேடையாகும்.



 இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதாகவே கருதுகிறேன். "ஹோம்' என்ற இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுவதற்காக சொந்த பணத்தை நான் செலவழிக்க வேண்டியதாயிற்று. இரண்டு தலைமுறையினரை இந்த மீடியாக்கள் எவ்வளவு வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. என்னுடைய தந்தையைப் போலவே என்னாலும் கிளாசிக்கல் ஆல்பத்தை வெளியிட முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய ரசிகர் வட்டம் சிறியதுதான். என் தந்தையைப் போலவே எனக்கும் புகழ் கிடைப்பதற்குச் சிறிது காலம் ஆகலாம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நானும்  "மஞ்ச்காமஜ்' என்ற புதிய ராகத்தை உருவாக்கியுள்ளேன். விரைவில் வெளியிட உள்ள   "லேண்ட் ஆஃப் கோல்டு' என்ற ஆல்பத்தில் அந்த ராகம் இடம்பெறும்.

 என்னுடைய இரண்டாவது மகனுக்கு இதுதான் முதல் இந்தியப் பயணம். என்னுடைய மகன்களும் இசை பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்று  நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கே இதில் ஆர்வம் ஏற்பட்டால் நிச்சயம் உதவி செய்வேன்.

 இந்தியச் சங்கீதத்தை நான் தனிப்பட்ட முறையிலோ தொழில் ரீதியாகவோ விட்டுவிலக மாட்டேன். இந்தியச் சங்கீதத்துடன் உள்ள தொடர்புவிடுபடக் கூடாதென்பதற்காகவே   அடிக்கடி இந்தியா வருகிறேன். அண்மையில் இங்கு நடத்திய நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது என்னுடைய தந்தைக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment