Sunday 14 June 2020

ACTRESS GAUSALYA SENTHAMARAI BORN 1946 JANUARY 18



     ACTRESS GAUSALYA SENTHAMARAI BORN 1946 JANUARY 18



கௌசல்யா செந்தாமரை
இவர் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் காலஞ்சென்ற செந்தாமரையின் மனைவியாவார். 18.01.1946 இல் பிறந்த இவருக்குத் தற்போது 72 வயதாகும் இவர் இப்போதும் திரைப்படங்களிலும், சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்.
இவர் செந்தாமரையின் சொந்த அத்தை மகளாவார். காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தான் இவர்களின் திருமணம் உறவினர்களில் சீர்திருத்த முறையில் இனிதே நடந்தேறியது. ’சுமைதாங்கி’ என்ற ஒரு நாடகத்தில் இரண்டு பேரும் அண்ணன் தங்கையாக இருவரும்  நடித்தார்கள். அப்போது இவர்களுக்குக் காதலென பெரியோர்கள் எண்ணி திருமணம் செய்துவித்தனர். 29 வருடங்கள் இணை பிரியாத தம்பதியாக திகழ்ந்தனர். இத்தம்பதிக்கு ராஜலட்சுமி என்ற ஒரே மகள். இவரது கணவர் செந்தாமரை 1992-ஆம் ஆண்டில் அவரது 57-ஆவது வயதில் காலமாகிவிட்டார்.


1961-இல் வெளிவந்த “திருடாதே” என்ற படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
”ஜீ” தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `பூவே பூச்சூடவா‘ தொடரில் யுவராணியின் தாயாக வில்லித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நந்தினி”, “அழகு” மற்றும் கனா காணும் காலங்கள் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

 ”வயசுப் பசங்க நாங்க”, ”உன்னைத்தேடி”, “சில்லுன்னு ஒரு சந்திப்பு”, “சமஸ்தானம்” உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். சென்னை ஆழ்வார் திருநகரில் தனி ஆளாக வசித்து வருகிறார்.


No comments:

Post a Comment