Wednesday 5 August 2020

GENELIA D` SOUZA ALIAS HARINI, ACTRESS BORN 1987 AUGUST 5



GENELIA  D` SOUZA ALIAS GENELIA ,
ACTRESS BORN 1987  AUGUST 5


.ஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1987, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.

தமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். நடிகர்களை இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா என்ற புதுமுகத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் ஷங்கர்.
நடிகை ஜெனிலியா, ‘பாய்ஸ் ‘ [படத்திற்கு பின்னர் தமிழில் நடித்த ‘சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம்’ போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் சுட்டி தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள். திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்த நடிகை ஜெனிலியா, அதன் பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்
மேலும் இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் அதன் பிறகு படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் இன்று அன்னையர் தினம் என்பதால் தனது அம்மாவின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியீடு நன்றி கூறியுள்ளார்.

ந்நிலையில் இந்த ஜோடிக்கு 2014ஆம் ஆண்டு ரியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. 2016ஆம் ஆண்டு ரேயல் என்ற இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனது  மூத்த மகனின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடிய ஜெனிலியா, உருக்கமாக ஒரு பதிவு ஒன்றை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.



அதில், “அன்பான ரியான், ஒவ்வொரு பெற்றோரும் அவன் வளர வேண்டாம். இப்படியே இருக்கட்டும் என்று கூறுவார்கள். நான் அப்படியல்ல, உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் ரசிக்க விரும்புகிறேன். நான் உனக்கு பறக்க இறக்கைகள் கொடுத்து, அந்த இறக்கைகளுக்கு அடியில் காற்றாக இருக்க விரும்புகிறேன்.

நீ நல்ல இளைஞனாக வளர்வதை பார்க்க விரும்புகிறேன். நீ கடுமையானவன். எப்போது என்ன நடந்தாலும் உன்னை நம்ப வேண்டும். நான் எப்போதும் உன்னை நம்புகிறேன். வாழ்க்கை கடினமானது என்று நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். அதோடு, நான் விரும்புவதை தவிர வேறு ஒன்றையும் உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அது என்ன என்றால் நான் உன்னை நேசிக்கிறேன். நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். என்னை அம்மாவாக்கிய சிறுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- 



என் முதல் பிறப்பு” என்று உருக்கமாக தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார் ஜெனிலியா. திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்டார் ஜெனிலியா. ஆனாலும் திரையுலகினரின் தொடர்பை விடாமல் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில்கூட மும்பையில் நடந்த ஹவுஸ்புல் 4 என்ற படத்தின் வெற்றி விழா பார்ட்டியில் தனது கணவருடன் பங்கேற்றார்.


கடந்த சில வாரங்களுக்கு முன் தனது பிள்ளையின் பிறந்த நாள் அன்று கடிதம் எழுதி தனது வாழ்த்தை தெரிவித்த ஜெனிலியா தற்போது தனது தாயின் பிறந்த நாளில் கடிதம் எழுதி வாழ்த்து கூறியிருக்கிறார். அதில்,’அன்புள்ள அம்மா, என் வாழ்வில் நான் சந்தோஷமான தருணத்தையும், கடினமான தருணங்களையும் கண்டிருக்கிறேன்.

எந்த தருணமாக இருந்தாலும் என்னுடன் இருந்த ஒரே ஒருவர் நீங்கள்தான். என்றென்றைக்கும் எனக்கு நிலையானவர் நீங்கள் மட்டும்தான். உங்கள் ஒருவரால்தான் என் வாழ்வில் எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் நான் அப்படி எதையும் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. உங்களை இதயம் நிறைய நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்த அவர் தன் கணவரின் படத்தயாரிப்பு பணிகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தின் மூலம் மறுபடியும் சினிமாவுக்கு வருகிறாராம்.


இப்படம் மலையாளத்தில் கடந்த வருடம் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான லூசிஃபர் படத்தை ரீமேக்காம். பிரபாஸ் நடித்த சாஹோ படத்தை இயக்கிய சுஜித் தான் இப்படத்தை இயக்குகிறாராம்.மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்,மேலும் இவர் தனது குறும்பு தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.இந்நிலையில் அவர் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு பேஷன் ஷோவில் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் லுக்கை  பார்த்த ரசிகர்கள் ஜெனிலியாவா இது இன்னும் அப்படியே இருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment