Saturday 5 May 2018

RAI LAKSHMI ,SOUTH INDIAN ACTRESS BORN 1959 MAY 5



RAI LAKSHMI ,SOUTH INDIAN ACTRESS
BORN 1959 MAY 5




ராய் லட்சுமி (கன்னடம்: ಲಕ್ಷ್ಮಿ ರೈ, குஜராத்தி: લક્ષ્મી રાય; பிறப்பு மே 5, 1989) கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகையாவார்.[3]
திரைப்படத்துறை வாழ்க்கை
லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது


படுகவர்ச்சியாகக் களமிறங்கும் ராய் லட்சுமி - 'ஜூலி -2' 

மும்பை : பாலிவுட் படமான ஜூலி -2வில் நடிகை ராய் லட்சுமி இதுவரை ரசிகர்கள் காணாத அளவிற்குக் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இதுவரை ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், நல்ல படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் அலைகிறார் ராய் லட்சுமி. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் கவர்ச்சி வேடத்தில் நடிக்கத் தொடங்கியவருக்கு ரசிகர்கள் குவிந்த அளவுக்கு மார்க்கெட்டும் எகிறியது.

பிறகு, தமிழ், மலையாளத்தில் வாய்ப்புக் குறையவே, பாலிவுட் பக்கம் கால்வைத்துப் பார்த்தார். அதற்கு வசதியாக மும்பையில் குடியேறினார். இதனிடையே அவருக்கு பாலிவுட் ஹிட்டான 'ஜூலி' படத்தின் 2-வது பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

முதல் படத்திலேயே பாலிவுட் மார்க்கெட்டை தன் பக்கம் வளைத்துப் போட நினைத்த ராய் அதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார் என்று கூறப்பட்டது. 'ஜூலி -2' படத்தை தீபக் ஷிவதாசன் இயக்குகிறார்.



இந்நிலையில், 'ஜூலி -2' படத்தின் டீசர் இன்று வெளியானது. அதில் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. இதுவரை எந்தப் படத்திலும் ரசிகர்கள் பார்த்திராத கவர்ச்சியில் தோன்றிய ராய் லட்சுமி இப்போது ரசிகர்களின் கவர்ச்சிக் கன்னியாகியிருக்கிறார்.
இதுவரை ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், நல்ல படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் அலைகிறார் ராய் லட்சுமி. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் கவர்ச்சி வேடத்தில் நடிக்கத் தொடங்கியவருக்கு ரசிகர்கள் குவிந்த அளவுக்கு மார்க்கெட்டும் எகிறியது. பிறகு, தமிழ், மலையாளத்தில் வாய்ப்புக் குறையவே, பாலிவுட் பக்கம் கால்வைத்துப் பார்த்தார். அதற்கு வசதியாக மும்பையில் குடியேறினார். இதனிடையே அவருக்கு பாலிவுட் ஹிட்டான 'ஜூலி' படத்தின் 2-வது பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதல் படத்திலேயே பாலிவுட் மார்க்கெட்டை தன் பக்கம் வளைத்துப் போட நினைத்த ராய் அதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார் என்று கூறப்பட்டது. 'ஜூலி -2' படத்தை தீபக் ஷிவதாசன் இயக்குகிறார்.
இந்நிலையில், 'ஜூலி -2' படத்தின் டீசர் இன்று வெளியானது. அதில் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. இதுவரை எந்தப் படத்திலும் ரசிகர்கள் பார்த்திராத கவர்ச்சியில் தோன்றிய ராய் லட்சுமி இப்போது ரசிகர்களின் கவர்ச்சிக் கன்னியாகியிருக்கிறார்.


ஐந்து முறை காதலில் தோல்வி

நடிகை ராய் லெட்சுமி, தான் ஐந்து முறை காதலில் தோல்வி அடைந்துள்ளதாக கூறியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராய் லட்சுமி, முதன்முதலாக, ‘ஜூலி-2’ என்ற இந்தி படத்தில், கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
என் வாழ்க்கையில், நான் 5 முறை காதல்வசப்பட்டு இருக்கிறேன். என் காதலர்களின் பெயர்களை சொல்ல முடியாது. அந்த 5 காதல்களும் தோல்வியில் முடிந்து விட்டன. ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போது, என் அறை கதவை பூட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து அழுது இருக்கிறேன்.

ஆண்களில், நிறைய நல்லவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆர்யா என் நெருங்கிய நண்பர். எங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்து வருகிறது. வெறும் நட்பு மட்டும்தான். அந்த நட்பை பயன்படுத்தி நான் அவரிடம் பட வாய்ப்பு கேட்பதில்லை.
இவ்வாறு நடிகை ராய் லெட்சுமி கூறினார். நடிகை ராய் லெட்சுமி, தான் ஐந்து முறை காதலில் தோல்வி அடைந்துள்ளதாக கூறியுள்ளது தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


படுக்கைக்கு வந்தால்தான் வாய்ப்பு தருவேன்: ராய் லட்சுமி பேட்டி!


படுக்கைக்கு வந்தால்தான் வாய்ப்பு தருவேன் என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூறுகின்றனர் என்று நடிகை ராய்லட்சுமி கூறியுள்ளார்.
நடிகை ராய் லட்சுமிக்கு கோலிவுட்டில் அவ்வளவாக மார்க்கெட் இல்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘ஜூலி 2’ பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தார். திரையுலகம் பற்றியும், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றியும் அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஆண்கள் உள்ளனர். எனக்கு இப்படியொரு பிரச்சனை வரவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள், முன்னேறத் துடிக்கும் நடிகைகளை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். சிலர் சினிமாவுக்கு வருவதே குடித்து, சூதாட, நடிகைகளுடன் படுத்து ஜாலியாக இருக்கத்தான். அவர்களால் தான் சினிமா அழிந்து வருகிறது..
இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் முன்னணி நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவர்கள் தைரியமாக அதை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகின்றனர். படுக்கைக்கு வர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கவும் செய்கிறார்கள் என்கிறார் ராய் லட்சுமி.




சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி தன்னை அடுத்து பல பெண்களை காதலித்ததாக நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை பற்றிய படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் டோணியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நடிகை ராய் லட்சுமி கூறியிருப்பதாவது,
டோணி படம் டோணி படத்தில் என் கதாபாத்திரம் உள்ளதா என்று மக்கள் என்னிடம் ஏன் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. எனக்கும், டோணிக்கும் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை.
ஜிவா டோணிக்கு திருமணமாகி குழந்தையுடன் மகிழ்ச்சியாக உள்ளார். அவரை பற்றிய படம் ரிலீஸாக உள்ள நிலையில் என்னை பற்றி ஏன் பேசுகிறார்கள் என தெரியவில்லை.
ஐபிஎல் 2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லின் போது நான் சென்னை அணியின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தேன். நானும் டோணியும் ஓராண்டுக்கும் குறைவாகவே டேட் செய்தோம். எங்களுக்குள் ஒர்க்அவுட் ஆகாமல் பிரிந்துவிட்டோம்.

பல பெண்கள் டோணி ஒன்றும் அவர் வாழ்வில் என்னை மட்டும் காதலிக்கவில்லை. எனக்கு பிறகு பிற பெண்களை காதலித்துள்ளார். பெண்கள், உறவுகளை தாண்டியது தான் வரலாற்று படம் என்கிறார் ராய் லட்சுமி.

காதல் டோணியை காதலித்ததாக ராய் லட்சுமி அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால் அப்படி ஒன்று நடந்ததாக இதுவரை டோணி ஒரு முறை கூட தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழில் 'சவுகார்பேட்டை', தெலுங்கில் 'கபார் சிங்' இரண்டாம் பாகம், இந்தியில் இரண்டு படங்கள் என மிகவும் மும்முரமாகப் பணியாற்றிவருகிறார் ராய் லட்சுமி. சென்னை, ஹைதராபாத், மும்பை என மாறி மாறிப் பறந்துகொண்டிருந்தவரைச் சந்தித்ததிலிருந்து...

‘சவுகார்பேட்டை' படத்தில் பேயாக நடிக்கிறீர்கள் போல?

என்னுடைய தமிழ் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக 'சவுகார்பேட்டை' படத்தைப் பார்க்கிறேன். வீட்டில் ரொம்ப அடக்கமான, கல்யாணம் ஆகப்போகிற பெண் எப்படிப் பேயாக மாறுகிறாள் என்பதுதான் கதை. முழுக்க பயம் கலந்த காமெடிதான். நான் இதுவரை பண்ணிய படங்களின் வேடங்களைவிட இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் வேடம் மிகவும் கடினமானது. நடனம், சண்டை, பேயாகக் கத்துவது இப்படி என்னுடைய நடிப்புக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது இந்தப் படம்.

முதன்முறையாக தெலுங்கில் பவன் கல்யாணோடு நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறீர்களே?


பவன் கல்யாணுடன் நடிக்கும் படத்தில் நான், பவன் கல்யாண் மற்றும் காமெடியன்கள் வருவது போல் தனியாக ஒரு ட்ராக் இருக்கிறது. அதில் ஒரு பாடலும் இருக்கிறது. வித்தியாசமான வேறு ஒரு கலரில் எனக்கு அந்தப் படம் அமையும்.

நீங்கள் நடிக்கவிருக்கும் ‘ஜூலி-2' உங்களது 50-வது படமா?

இந்தியில் ‘ஜூலி-2' என்பது ஒரு பெரிய பிராண்ட். அதில் நான் ஒப்பந்தமாகியிருக்கிறேன். எனது 50-வது படம் நல்ல கதையாக அமைந்துவிட வேண்டும் என்று தமிழிலும் தெலுங்கிலும் கதைகள் கேட்டுவந்தேன். ஆனால், எனக்கு இந்தியில் அந்த மாதிரி ஒரு நல்ல கதை அமைந்தது சந்தோஷம்.

‘ஜூலி-2'க்கு முன்பாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுடனும் அனுராக் காஷ்யப்புட னும் ‘அகிரா'வில் நடித்துவருகிறேன். அந்தப் படத்திலும் எனது பாத்திரம் கண்டிப்பாகப் பேசப்படும்.

தொடர்ச்சியாக கிளாமர் வேடங்களில் நடித்துவருகிறீர்களே?

இப்போது மக்கள் எந்த மாதிரியான படங்களைப் பார்ப்பார்கள் என்பதை உறுதியாகக் கணிக்க முடியவில்லை. வெற்றி கொடுத்தே ஆக வேண்டிய சூழல். கிளாமர் என்பது படத்துக்குத் தேவைப்பட்டால் பண்ணுகிறேன், அதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பாவாடை கட்டிக்கொண்டு ஒரு படத்தில் நடித்தாலும், அது கிளாமராகத்தான் இருக்கும். ஏனென்றால், எனது உடல்வாகு அப்படி அமைந்துவிட்டது. பிகினி உடை அணிந்துகொண்டெல்லாம் நான் அதிகம் நடிக்கவில்லையே. இப்போது ‘ஜூலி-2' கதைக்காக ஒரே ஒரு காட்சியில் பிகினி உடையில் தோன்றப்போகிறேன்.

ட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மிகவும் தீவிரமாக இயங்குவது நீங்கள்தான். காரணம் என்ன?

என்னுடைய புகழ்ச்சிக்காக நான் ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்துவது கிடையாது. நான் பண்ணும் படங்களை ட்விட்டர் தளத்தில் விளம்பரப் படுத்துவது கிடையாது. ட்விட்டர் தளத்தை நான் ரசிகர்களிடம் கலந்துரையாடும் ஒரு தளமாக உபயோகப்படுத்திவருகிறேன். அவ்வளவுதான். பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், ரசிகர்கள் “ஹாய்” என்பார்கள். அவர்கள் என்ன கேள்வி கேட்டாலும், நேரடியாக பதில் சொல்லிவிடுகிறேன். என்னைப் பற்றி வரும் வதந்திகள் அனைத்துமே உண்மையா என்று கேட்கிறார்கள், அதற்கு பதிலளி க்கிறேன். முன்பு ஒரு வதந்தி வந்தால், போன் பண்ணி இது தவறு என்று அனைவரிடமும் சொல்ல வேண்டும். இப்போது அந்த சூழ்நிலை இல்லை. ட்விட்டர் தளத்தில் வதந்திக்கு விளக்கம் அளித்தால் சரியாகிவிடுகிறது.

இப்போதும் அஜித் ரசிகர்கள் ‘மங்காத்தா- 2' படத்தை வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். அதில் நடிக்க வாய்ப்பு வந்தால்?

கண்டிப்பாகப் பண்ணுவேன். அந்தப் படத்தில் எனக்கு நல்ல வேடம் கொடுத்தார் வெங்கட் பிரபு. ஆனால், படத்தின் இறுதியில் என்னைக் கொன்றுவிட்டார். ‘மங்காத்தா-2'வில் நல்ல பாத்திரம் அமைந்தால் உறுதியாகப் பண்ணுவேன்.

திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிடுவது அதிகரித்துவரும் சூழலில், அதிலிருந்து உங்களை எப்படித் தற்காத்துக்கொள்கிறீர்கள்?

பெண்களுக்குத் தனியுரிமை என்பது இல்லாமல் போய்விட்டது. மக்களுக்குத் தெரிந்த முகமாக இருந்தால் சிலர் அதைத் தவறாக உபயோகிக்கிறார்கள். இன்றைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைந்துவருகிறது. சின்னச் சின்ன கிராமங்களிலெல்லாம் உதவி செய்யக்கூட ஆள் இல்லாமல் பெண்கள் தவிக்கிறார்கள். ஆனால், நகரங்கள் கொஞ்சம் மாறியிருக்கின்றன. பெண்களுக்குத் துணிச்சல், கல்வி உள்ளிட்ட விஷயங்கள் அவசியம் என்று உணர்ந்திருக்கிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது ஒருத்தருடைய கையில் கிடையாது. ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை என்றால் அனைவரும் ஒன்றுகூட வேண்டும்.

எப்போது திருமணம் செய்துகொள்ளத் திட்டம்?

எனது திரையுலக வாழ்க்கை இப்போதுதான் நல்ல வழியில் போய்க்கொண்டிருக்கிறது. அது உங்களுக்குப் பிடிக்கவில்லையா! திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை; செய்துகொள்வேன். ஆனால், இப்போது அதற்கான சூழ்நிலையோ எண்ணமோ இல்லை. இப்போது நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன், யாரையும் காதலிக்கவில்லை. அதற்கான நேரமும் இல்லை. படப்பிடிப்பு, உடல் குறைப்பு என ஒரு நாள் முழுக்க மும்முரமாகப் பணியாற்றும் போது காதலுக்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. காதலுக்கு நேரம் ஒதுக்கினால் மட்டுமே, அதற்கு நம்பிக்கையோடு இருக்க முடியும். மும்முரமாகப் பணிகளில் இருக்கும்போது காதலித்தால், அந்தக் காதல் தோல்வியில்தான் முடியும் என்பது என் கருத்து.

உங்களின் கனவுப் பாத்திரம் எது?

என்னுடைய கனவுப் பாத்திரம் எனக்குக் கிடைத்துவிட்டது. ‘ஜூலி-2'-ல் நான் பண்ணவிருக்கும் பாத்திரமே என் கனவுப் பாத்திரம்.







.ராய் லட்சுமி (கன்னடம்: ಲಕ್ಷ್ಮಿ ರೈ, குஜராத்தி: લક્ષ્મી રાય; பிறப்பு மே 5, 1989) கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகையாவார்.[3]

திரைப்படத்துறை வாழ்க்கை
லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது

மேலும் படங்கள் புதுவை: புதுச்சேரியில் ஒன்பதுல குரு படப்பிடிப்பில் இருந்த நடிகை லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்ததில் அவரது மேலாடை கிழிந்தது. பி.டி. செல்வகுமார் இயக்கத்தில் வினய், லஷ்மி ராய் நடித்து வரும் படம் ஒன்பதுல குரு. இந்த படத்தில் ஒரு டூயட் பாடலை புதுச்சேரியில் படமாக்கினர். ஷூடிட்ங் இடைவேளையில் லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது கூட்டம் கூடியதுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் லக்ஷமி ராயிடம் சில்மிஷம் செய்தனர். இதில் அவரது மேலாடை கிழிந்தது.
நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த படக்குழுவினர் ஓடிவந்து லக்ஷ்மி ராயை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு லக்ஷ்மி ராய் அவரது ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படப்பிடிப்பில் நடிகைகளிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்வது இது முதல் முறையன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதுல குரு படத்தில் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஞ்சலி, ச்தயன், மந்த்ரா மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரபல நடிகை லக்ஷ்மி ராய் கைவசம் ‘சின்ட்ரெல்லா, நீயா 2, Where is The Venkatalakshmi’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘Where is The Venkatalakshmi’ என்ற தெலுங்கு படத்தை கிஷோர் குமார் இயக்கியுள்ளார்

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பூஜிதா, கார்த்திக், பிரவீன், மது நந்தன், பிரம்மாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ‘ABT கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஹரி கௌரா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தில் இடம்பெறும் ‘அத்திலி பாப்பா’ என்ற பாடலின் வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. உச்சக்கட்ட கவர்ச்சியில் லக்ஷ்மி ராய் இடம்பெறும் இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

விக்ராந்த் நடித்த கற்க கசடற படம் மூலம் நடிகை ஆனவர் ராய் லட்சுமி. தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ராய் லட்சுமி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.ராய் லட்சுமி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவ். அவர் தன் புகைப்படங்களை அடிக்கடி ட்விட்டரில் வெளியிடுவார். பிகினி புகைப்படத்தை வெளியிட்டாலும் யாரும் திட்டாத நடிகை ராய் லட்சுமி தான். அவர் எப்பொழுது பிகினி புகைப்படங்களை வெளியிட்டாலும் ரசிகர்களும், நெட்டிசன்களும் ஆஹா, ஓஹோ என்று தான் பாராட்டுவார்கள்.
ராய் லட்சுமியின் ட்விட்டர் பக்கம் சென்றால் அவரை திட்டுபவர்களை பார்ப்பது அரிது. அவரை புகழ்ந்து தள்ளவே ஒரு பெரிய படை உள்ளது. இது தான் ராய் லட்சுமியின் பலம் ஆகும்.






ராய் லட்சுமியின் பிறந்தநாள் மே 5ம் தேதி என்று தெரிந்தும் ரசிகர்கள் பலர் முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கத் துவங்கிவிட்டார். இதை பார்த்த ராய் லட்சுமி நெகிழ்ந்து போய் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.ராய் லட்சுமியின் கையில் ஒரு தெலுங்கு படம், 2 தமிழ் படங்கள் உள்ளது. மேலும் ஜான்சி என்கிற கன்னட படத்தில் நடித்து முடித்துள்ளார்.





No comments:

Post a Comment