Friday 11 May 2018

AN IDEAL WORKER BECOME AN IDEAL BUSINESSMAN






AN IDEAL WORKER BECOME 
AN IDEAL BUSINESSMAN



ஒரு நல்ல தொழிலாளி மட்டுமே நல்ல முதலாளி ஆக முடியும்

முதலாளி என்கிற சொல் தொழிலாளியிடம் பாதிப்பை எப்போதும் ஏற்படுத்த வேண்டும் -நிறையப்பேர் கூழைக்கும்பிடு ,போலி மரியாதை என்று பல வகைகளில் சொன்னாலும் பொருட்படுத்தாதீர்கள் 
ஒரு நல்ல தொழிலாளி மட்டுமே நல்ல முதலாளி ஆக முடியும்

இயக்குநர் பார்த்திபனின் 'புதிய பாதை' எனக்குப் பிடித்த தமிழ் திரைக்கதைகளுள் ஒன்று. வெகுசன வார்ப்பிற்குள் ஒரு நல்ல திரைக்கதைக்காக அதை மேற்கோள் காட்டுவேன்.

அதில் ஒரு காட்சி. அந்த தொகுதியின் அரசியல்வாதியான நாசர் முன்பு பாாத்திபன் கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டே அமர்ந்திருப்பார். அருகிலிருக்கும் விகே ராமசாமி, அவருக்கேயுரிய பிரத்யேகமான டபுள் மீனிங் மாடுலேஷனில் 'தொகுதி வயசுல சின்னவர்தான். அவரு முன்னாடி நானே ஆட்னதில்ல - காலை. நீ இப்படி ஆட்டறியே" என்பார்.

அதற்கு பார்த்திபன் தரும் பதிலை இன்னமும் மறக்காமல் இருக்கிறேன்.

"அவருக்கு நான் சம்பாரிச்சுக் கொடுக்கத்தான் வந்திருக்கேன். மரியாதை தர இல்லை"

()

தனியார் லிமிடெட் கம்பெனிகளில் கூட கார்ப்பரேட் கலாசாரத்தின் சாயல்கள் மெல்ல படிந்து கொண்டிருக்கும் சூழலில், இன்னமும் கூட சில நிறுவனங்கள் அந்தக் கால மளிகைக் கடை 'மொல்லாளி' பாணியிலேயே இயங்குகின்றன. எங்களுடைய வாடிக்கையாளர் நிறுவனம் ஒன்று, கோடிகளில் லாபம் காட்டுகிற சுக்கிர திசையில் இயங்குகிற பெரிய நிறுவனம் என்றாலும் அதன் அனைத்து முக்கியமான முடிவுகளையும் அந்த நிறுவனத் தலைவரே எடுப்பார். விசிட்டிங் கார்ட் பிரிண்ட் செய்வதாக இருந்தாலும் அவர்தான் முடிவு. அதிகாரப் பகிர்வு என்பதே கிடையாது. எதைக் கேட்டாலும் அங்குள்ள ஊழியர்கள் 'சாரைக் கேட்கணும்' என்பார்கள். சார் நிறுவனத்திற்கு வருகிறார் என்கிற செய்தி கிடைத்தவுடன் ஏறத்தாழ அப்போதே பரபரப்பாகி அட்டென்ஷனில் நின்று கொண்டிருப்பார்கள்.

இன்னும் சில முதலாளிகள். ஊழியர்கள் தங்களைக் கண்டவுடன் அந்தக் கால எஸ்.வி.சுப்பைய்யா.. போல இடுப்பில் துண்டை இறுக்க கட்டிக் கொண்டு 'மொதலாளி' என்று கண்கசிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது போன்ற நாடகங்களை கச்சிதமாக நிகழ்த்துபவர்களுக்குத்தான் ஊதிய உயர்வும் அங்கீகாரமும் தருகிறார்கள் இவை நாடகம் என்று 'மொல்லாளிகளுக்கு' தெரியும் .என்றாலும் அவர்களால் கிடைக்கும் போலிப் பெருமிதங்களுக்காகவே அவர்களை போற்றி வளர்க்கிறார்கள்.

ஓர் ஊழியரின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு அர்ப்பணிப்புடனும் சரியானதாகவும் இருக்கிறது? அவரால் நிறுவனத்திற்கு கிடைக்கும் ஆதாயத்தின் சதவீதம் என்ன? என்பதை வைத்து ஒருவரை மதிப்பிடுவது நல்ல முதலாளிக்கு அழகு. இன்றைய தேதியில் hard work என்பதை விட smart work-க்கிற்குதான் மரியாதை.

அவ்வாறானவர்களின் உழைப்பை கண்டும் காணாமலும் இருந்து விட்டு அவர்கள் தங்களுக்கு எப்போதும் மரியாதை தரவில்லை என்கிற அற்ப காரணத்திற்காகவே பல்வேறு வகையில் பழிவாங்கும் முதலாளிகள், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களே புதைகுழியில் தள்ளுகிறார்கள் என்பதை அறிவதில்லை. அறிந்தாலும் அவர்களின் ஈகோ அவற்றை ஏற்றுக் கொள்ள தடுக்கிறது.

இந்த விஷயத்தில், பணி தொடர்பான விஷயத்தை சிகரெட் புகைத்துக் கொண்டே தன் முதலாளியுடன் விவாதிக்க முடியும் என்கிற மேலை நாட்டுக் கலாச்சாரம் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது, அங்கும் அடிமைக் கலாசாரம் இன்ன பிற வழிகளில் கசிந்து கொண்டிருக்கும் என்றாலும்.

No comments:

Post a Comment