Saturday 12 May 2018

BRITISH RASCALS AND SCOUNDRALS OF INDIA 1943







BRITISH RASCALS AND SCOUNDRALS OF INDIA 1943


வெள்ளைக்காரத் திருடர்கள் வழங்கிய பொற்கால ஆட்சி

சர்ச்சிலின் அறியாத இன்னொரு முகம்!
1943ன் வங்கப் பெரும் பஞ்சம்:

சர்ச்சில் செய்த 40 லட்சம் கொலைகள்:

இன்றும் கூட இந்தியாவில் சிலர், வெள்ளக்காரனே நம்மள ஆண்டிருக்கலாம்..அவன் ஆட்சியில சுபிட்சமா இருந்திச்சி என்றெல்லாம் கூறுவதைக் கேட்கலாம்.
அடிமைகளை, ஆண்டான்கள் எப்படி நடத்தினர் என்கிற வரலாறு புரியாமல் பேசுகின்ற மூடத்தனமான பேச்சு இது.
1942-43 ல் இரண்டாம் உலகப்போர் மும்ம்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்த வங்கப் பஞ்சம், இந்தியத்துணைக்கண்டத்தின் ஈடு இணையற்றப் பேரழிவாகும்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வஞ்சகத்தால் கிட்டத்தட்ட 40 லட்சம் பேரின் உயிரை வாங்கிய இந்தப் பெரும் பஞ்சம் பற்றி, நமது வரலாற்று நூல்களில் ஓரிரு வரிகளே இருக்கும். உலகப் போரின் உச்சத்திலே, ஹிட்லர் எனும் ஜெர்மானிய கொலை வெறியனால், யூதர்கள், ஸ்லோவேக்கியர் மற்றும் ரோமா இன மக்கள் 60 இலட்சம் பேர், 12 ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். ஆனால், நாகரீகக் காவலர்கள் என்று பீற்றிக் கொள்ளும் பிரிட்டிஷார் சர்ச்சில் எனும் மனிதாபிமானமற்ற கொலைகாரத் தலைவரின் ஆணைப்படி, ஒரே ஆண்டில் 40 இலட்சம் இந்தியரைக் குரூரமாகக் கொன்று குவித்தனர்.

இந்த வங்கப் பஞ்சத்தை ஆஸ்திரேலிய அறிவியலறிஞர் டாக்டர்.கிதியோன் போய்லா, மனிதன் உருவாக்கிய ஹோலோகாஸ்ட் என்கிறார்.

1942ல் வங்கத்தில் பசுமைப் புரட்சியே நிகழ்ந்தது. உணவு வகைகளும், தானியங்களும் அதிக அளவில் விளைந்தன. இருப்பினும், அவை எல்லாம்,
பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப் படவேண்டும் என்ரு சர்ச்சில் உத்தரவு போடவே, மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் மாபெரும் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்தப் பஞ்சம் பற்றி ஆய்ந்த மதுஸ்ரீ முகர்ஜி, உயிர் பிழைத்த சிலரைச் சந்தித்து அந்தக் கொடுமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். ” பெரும்பாலான பெற்றோர், பட்டினியால் வாடிய தம் குழந்தைகளை ஆற்றிலும் குளங்களிலும் வீசி எறிந்தனர். பலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை புரிந்து கொண்டனர். அரிசி வடித்த கஞ்சிக்காகப் பிச்சையெடுத்தவர் பலர். இலை தழைகளை உண்டு உயிர் பிழைத்தோரும் உண்டு. இறந்தவர்களை எரிக்கக் கூட எவருக்கும் தெம்பில்லை. 
நாய்களும் ஓநாய்களும் இறந்தவர் உடல்களைச் சாப்பிட்டன.

கொல்கத்தாவிற்குப் பிழைக்கப் போன ஆண்கள் தப்பித்துக் கொண்டனர். பெண்கள் எல்லோரும் குடும்பத்தை காக்க விபச்சாரிகளாய் மாறினர்.
அன்னையர் கொலை செய்தனர். பெண்கள் விபச்சாரிகளாயினர். தந்தைகள் பெண்களை விலை பேசி விற்றனர்.

லேசிக் சர்ஜரியைக் கண்டுபிடித்த மணி பவுமிக்கின் பாட்டி அவரது உணவைப் பேரனுக்குக் கொடுத்ததால், பட்டினியால் செத்ததை இன்றும் மறக்க முடியாது என்கிறார்.

சர்ச்சில் நினைத்திருந்தால் இரண்டே இரண்டு கப்பல்களில் உணவுப் பொருள் வழங்கி இத்தனை உயிர்களைக் காத்திருக்க முடியும். ஆனால், அவரது செக்ரடரி எவ்வளவோ சொல்லியும், அமெரிக்க அதிபரே அறிவுறுத்தியும் கூட ஆணவமாக மறுத்து விட்டார்.

ஹிட்லரின் ஆதரவாளராக விளங்கிய சுபாஷ் சந்திர போஸ், பர்மாவில் இருந்து உணவுப் பொருள் அனுப்ப விழைந்தார். ஆனால் பிரிட்டிஷ் ரகசிய
சென்சாரோ இந்தச் செய்தியை பிரிட்டனுக்கு அனுப்பவே இல்லை.

இந்திய பர்மிய செயலாளராக இருந்த லீபோல்ட் ஏமரி, சர்ச்சிலின் இந்த இட்லர் குணத்தை அறவே வெறுத்தார். 
இந்திய உணவுப் பொருள்களை பிரிட்டிஷ் மற்றும் கிரேக்க வீரர்களுக்கு அனுப்புவது பற்றி கொஞ்சமும் குற்ற உணர்வற்று இருந்த சர்ச்சில், வலிமையான போர் வீரர்களுக்குத்தான் உணவு தேவை. நோஞ்சான் பெங்காலிகளுக்கு அல்ல எனத்திமிராய்க் கூறினார்.
ஏமரியும், வைசிராய் ஆர்சிபால்ட் வேவலும் வங்காலத்துக்கு உணவு வேண்டும் எனக் கேட்ட போது, அந்த காந்தி இன்னும் சாகவில்லையா என்றாராம், சர்ச்சில்.

வேவல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இது போல் ஒரு பஞ்சம் ஏற்பட்டதே இலாஇ. ஹாலந்திற்கு உணவு வேண்டுமெனில் கப்பல்கள் உடனே புறப்படும். ஆனால் பெங்கால் விஷயத்தில் மட்டுமே இது போன்ற குரூரம் காட்டப் படுகின்றது என இலண்டனுக்குத் தெரிவித்தார்.
இத்தனைக்கும் போர் நேரத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து உணவுப் பொருள்களோடு சென்ற கப்பல்கள் வேண்டுமென்றே இந்தியாவைத்தவிர்த்துச் சென்றன என்கிற ஆதாரத்தை முகர்ஜி கண்டுபிடித்துள்ளார்.
இந்தியர்கள் முயல்களைப் போல குட்டி போடுகின்றனர் என போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்தில் சர்ச்சில் கூறியுள்ளார்.

ஏமரியிடம், இந்தியர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள்”என்று கூறியிருக்கிறார் சர்ச்சில். ஜெர்மானியர்களுக்கு அடுத்த காட்டுமிராண்டிகள் இந்தியர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
சர்ச்சில் ஒரு இனவெறியாளர் மட்டுமல்ல பொய்யரும் கூட.

மைக் டேவிஸ் எனும் ஆராய்ச்சியாளர், பிரிட்டிஷ் ஆண்ட 120 ஆண்டுகளில், இந்தியாவில் 31 கொடூரமான பஞ்சங்கள் ஏற்பட்டன. அதற்கு முற்பட்ட, 2000 ஆண்டுகளில் 17 பஞ்சங்களே ஏற்பட்டன என்கிறார். 
இரண்டு கோடியே முப்பது லட்சம் பேர் இந்தப் பஞ்சங்களில் இறந்துள்ளனர். இவையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த கொலைகளே என்கிறார் டேவிஸ்.

”இந்தியர்களை பிரிட்டிஷார் நடத்திய விதம் சரியானது..உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தினை இப்படித்தான் நடத்த வேண்டும்” என இட்லர் பாராட்டியிருக்கிறார்.

இந்தியப் போர்வீரர்களின் வீரத்தால் தன் 1945 போரை பிரிட்டன் வென்றது. இருந்தும் பொதுமக்களின் உயிரை மிகவும் துச்சமாக நினைத்தது.

இத்தனை கோடி மக்களின் மரணத்திற்கு இன்று வரை பிரிட்டன் மன்னிப்புக் கேட்கவில்லை.

இதுதான் உயர்ந்த இனத்தின் அடையாளமா? 
இதுதான் அந்த வெள்ளைக்காரத் திருடர்கள் வழங்கிய பொற்கால ஆட்சியா?#ரெபெல்ரவி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுச்சி நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில்

போர்வீரன், இராணுவ முகாம்களில் பத்திரிக்கைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவன், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்.

இவரது இயற்பெயர் ‘சர் வின்ஸ்டன் லியோனர்டு ஸ்பென்ஸர் சர்ச்சில்’ என்பதாகும்.

இங்கிலாந்தில் உள்ள பிரௌன் ஹீம் அரண்மனையில் 1874-ஆம் ஆண்டு நவம்பர் 30 – ம் நாள் சர்ச்சில் பிறந்தார்.

சர்ச்சிலின் தந்தை இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பனராக இருந்தார். இந்த இருந்த அதே பாராளுமன்றத்தில் அவருக்குப் பின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

அதன் பின் இங்கிலாந்து தேசத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமராகவும் சர்ச்சில் பொறுப்பேற்று, உலகத் தலைவர்களில் ஒருவராகவும், உலக மேதைகளில் ஒருவராகவும் புகழ் பெற்றார்.

சர்ச்சிலின் தாய் அமெரிக்காவில் பிறந்தவர்.

சிறுவயதில் சர்ச்சிலுக்கு விளையாட்டிலும், குறும்புத்தனங்களிலும் இருந்த ஈடுபாடு, படிப்பில் செல்லவில்லை. அதனால் சர்ச்சில் ஒரு விடுதியில் சேர்க்கப்பட்டார். அங்கும் சர்ச்சிலின் கவனம் படிப்பின் பக்கம் திரும்பவில்லை.

எட்டாம் வகுப்பில் சர்ச்சில் மூன்று முறை தோற்றார். ‘விடா முயற்சி வெற்றிக்கு வழி’ என்பதற்கு ஏற்ப மூன்றாவது முறை நுழைவுத் தேர்வை எழுதி சர்ச்சில் வெற்றி பெற்றார்.

காலம் செல்லச் செல்ல கல்வியின் மீது சர்ச்சிலின் கவனம் சென்றது. நுழைவுத் தேர்வில் சராசரி மாணவனுக்கும் கீழே இருந்த சர்ச்சில், முயன்று முயன்று முன்னேறினார். 150 மாணவர்கள் படித்த வகுப்பில், சர்ச்சில் எட்டவாது இடத்தைப் பிடித்தார்.

இராணுவப் பயிற்சி முடிந்ததும் சர்ச்சில் காலாட் படையில் சேர்ந்தார். பணியின் காரணமாக அவர் இந்தியாவிற்கும் வந்தார். சிறிது காலத்தில் இந்தப் பணியில் சர்ச்சிலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் தாய் நாடு திரும்பினார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளிவந்த ‘மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிக்கையில் பணியாற்ற சர்ச்சில் சென்றார். அப்போது தென்னாப்பிரிக்காவில் போர் தொடங்கியது.போர் முனைச் செய்திகளைச் சேகரிக்கும் பணியில் சர்ச்சில் ஈடுபட்டார். அதைக் கண்ட அந்த நாட்டு அரசு சர்ச்சிலை சிறையில் அடைத்தது. ஒரு நாள் அந்தச் சிறையிலிருந்து சர்ச்சில் தப்பினார்.

இனி தமது தாயகத்திற்குச் செல்வதென்றும், அரசியலில் ஈடுபடுவதென்றும் முடிவு செய்த ச்சசில் இங்கிலாந்து திரும்பினார்.

1900 – ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சர்ச்சில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவே சர்ச்சிலின் முதல் அரசியல நுழைவு. அப்போது அவருக்கு வயது 26. இதிலிருந்து தான் சர்ச்சலின் பொது வாழ்க்கை தொடங்கியது.

சர்ச்சில் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். கேட்போர் வியக்கும் அளவுக்கு ஆங்கிலத்தில் உரையாற்றும் ஆற்றல் வாயந்தவர். அதனால், தமது மேடைப் பேச்சைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்க சர்ச்சில் திட்டமிட்டார்.

ஏனெனில், அப்போது இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது. அந்த ஊதியத்தை கொண்டு பொது வாழ்க்கையில் உழைக்க முடியாது. அதனால் மேடைப் பேச்சின் வழியாக வருமானம் திரட்ட வேண்டிய அவசியம் சர்ச்சிலுக்கு ஏற்பட்டது.

அமெரிக்கா சென்று சர்ச்சில் ஐந்து மாதங்கள் தங்கினார். ஞாயிறு தவிர மற்ற நாட்களி எல்லாம் மேடையில்முழங்கினார். அவர் எதிர்பார்த்த வருமானத்தைவிட அதிகத்தொகை கிடைத்து.

தாயகம் திரும்பினார். தாம் கொண்டு வந்த பணத்தையெல்லாம் அரசியல் பணிகளுக்கு சர்ச்சில் செலவிட்டார்.. எழுத்தாளர்கள் எல்லாம் மக்களைக் கவரும் வகையில் பேசிவிட முடியாது. மேடையில் சிறப்பாகப் பேசுபவர்கள் எல்லாம் சிறந்த எழுத்தாளர்களாக உருவாகிவிட இயலாது. ஒரு சிலருக்குத்தான் எழுத்தும் பேச்சும் இணைந்து மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றுத் தரும் அத்தகைய சிறப்பு வின்ஸ்டன் சர்ச்சிலிடம் இருந்தது.

மேடைப் பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையைக் கடைப்பிடிப்பர். ஒருவர் எழுச்சியோடு பேசி மக்களிடம் வரவேற்பைப் பெறுவர்; மற்றொருவர் இலக்கியத்தை இணைத்துப் பேசி மக்களைக் கவர்வர்.

வின்ஸ்டன் சர்ச்சில் தம் மேடைச்சொற்பொழிவைக் கொண்ட விதம் புதுமையானதாகும்… இன்றைய சொற்பொழிவாளர்களும் கடைபிடிக்க வேண்டியவையாகும்.

சர்ச்சில் மேடையில் சிறப்பாகப் பேசியதற்கு, “நான் மேடையில் ஏறியதும் முன்வரிசையில் இருப்பவர்களை எல்லாம் மூடர்கள் என்று எண்ணிக் கொள்வேன்! நான் அப்படி எண்ணிக் கொள்வதால் என் உள்ளத்திலிருந்து தங்கு தடையின்றி வார்த்தைகள் வெளிப்படும்.

அதே நேரத்தில் ஆங்காங்கே நின்று கொண்டு எனது சொற்பொழிவுகளைக் கேட்போரை நான் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டேன்… நான் அப்படி எண்ணிக் கொள்வதால், வரலாற்றுப் பிழையின்றி என்னால் பேச முடிகிறது… மொத்தத்தில் மூடர்களும் அறிவாளிகளும் நிறைந்த அவையில் பேசுகிறோம் என்று நான் எண்ணிக் கொள்வதால் இரண்டு தரப்பாரையும் திருப்திப்படுத்தும் வகையில் எனது சொற்பொழிவை அமைத்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த அணுகுமுறைகள் வின்ஸ்டன் சர்ச்சில் மேடை முழக்கத்திற்குத் தனித்துவத்தைத் தேடித் தந்தது.!

முதல் உலக மகாயுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் இங்கிலாந்து வெற்றி காண, சர்ச்சிலின் அறிவும், ஆற்றலும் அவசியம் என இங்கிலாந்து பாராளுமன்றம் முடிவு செய்த்து.

அதனால் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு சர்ச்சிலிடம் ஒப்படைகப்பட்டது. இங்கிலாந்தின் வெற்றிக்காக சர்ச்சில் இரவு பகலாக உழைத்தார். இருப்பினும் சக அரசியல்வாதிகளின் பொறாமைத் தீக்கு சர்ச்சில் பலியானார்.

அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்ட சர்ச்சில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வி சர்ச்சிலைச சோர்வடையச் செய்தது. அதனால் அரசியல் பணிகளிலிருந்து சர்ச்சில் மெல்ல மெல்ல ஒதுங்கினார்.
‘சும்மா இருப்பது என்பது முடிவுக்கு வந்த சர்ச்சில், எழுத்துப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

‘உலக நெருக்கடி’ என்ற தலைப்பில் சர்ச்சில் ஒரு நூலை எழுதினார். இந்த நூல் இங்கிலாந்து மக்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அதனால் அதே தலைப்பில் நான்கு பாகங்களை சர்ச்சில் எழுதினார். அந்த நூல்களும் அவருக்குப் பெருமை தேடித் தந்தன.

அடுத்து, ‘மார்லபோவின் வாழ்வும் காலமும்’ என்ற தலைப்பில் சர்ச்சில ஒரு நூலை எழுதினார். எழுத்தாற்றலுக்கு இன்றும் சான்றாகத் திகழ்வது இந்த நூலே.

சர்ச்சிலின் நூல்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைக் கண்ட பத்திரிக்கையாளர்கள், சர்ச்சிலின் கட்டுரைகளுக்கு அவர் வீட்டின் முன் காத்துக் கிடக்கின்ற நிலை வந்தது.

இங்கிலாந்திலிருந்து வெளிவந்த மிகப்பெரிய பத்திரிக்கைகள் எல்லாம் சர்ச்சிலின் கட்டுரைகளை வெளியிட்டு பெருமையடைந்தன. இந்த வழியாகவும் சர்ச்சிலுக்கு வருமானம் வந்தது.

மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர் ஆகிவற்றிலிருந்து ஒதுங்கி இருந்த சர்ச்சில் எழுத்துத் தொழிலில் ஈடுபட்டு சாதனை படைத்தார். இந்த நேரத்தில் ஓவியம் வரைவதிலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.

‘முயன்றால் முடியாதது எது?’ – இது சர்ச்சிலின் தாரக மந்திரமாயிற்று. ஓவியமும் சர்ச்சிலுக்கு மிகச்சிறப்பாக வந்தது இங்கிலாந்து மக்கள் சர்ச்சிலின் ஓவியத்திலுள்ள தனித் தன்மைகளைக் கண்டு வியந்தனர்.

ஓயாத உழைப்பும், விடா முயற்சியும், எடுத்த காரியத்தில் வெற்றி காண வேண்டும் என்ற ஆவலும் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவன் புகழ் உச்சிக்குப் போவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்பதற்கு சர்ச்சில் மிகச் சிறந்த சான்றாகும்.

அடுத்து வந்த தேர்தலில் சர்ச்சில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.

ஜெர்மன் சர்வாதிகாரி முஸோலினி படையும் ஒன்று சேர்ந்து உலகத்தையே கைப்பற்ற முயன்றன. அதன் முதல் கட்டமாக 1939-ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப்படைகள் போலந்தின் மீது போர் தொடுத்தன.

போலந்தைக் கைப்பற்றிய ஹிட்லர் இங்கிலாந்தையும் கைப்பற்ற முயன்றான். அதை அறிந்த இங்கிலாந்தும், பிரானசும் ஜெர்மனிக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தன.

இங்கிலாந்து அரசு ஹிட்லரையும் முஸோலினியையும் எதிர்ப்பதற்கு வேண்டிய வழிமுறைகளை யோசித்தது. இது உலகத்தை இரண்டாவது மகாயுத்தத்திற்கு கொண்டு செல்லும் என்று எண்ணின.

இந்தச் சோதனையான கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு சர்ச்சில் ஏற்பதே சரியானதாகும் என்ற முடிவுக்கு வந்தனர். அதன்படி சர்ச்சில் மீண்டும் பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனை சோதனைகள்? எத்தனை மேடு பள்ளங்கள்? அதை எல்லாம் கடந்து வந்த மனிதனே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறான். அந்த வகையில் சர்ச்சில் தமது வாழ்க்கையில் எத்தனை சிக்கல்களை எதிர்நோக்கினார் என்பதை அவரது வாழ்க்கை முழுவதும் காணலாம்.

அரசியலில் நுழைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர்; அதற்குப் பின் வந்த உலக மகாயுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சர்; அதன்பின் வந்த தேர்தலில் தோல்வி; மீண்டும் பாதுகாப்பு அமைச்சர் பதவி என்று வண்டிச்சக்கரம் போன்று சர்ச்சிலின் வாழ்க்கை அமைந்தது.

கிடைத்த பொறுப்புகளில் தனக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு சர்ச்சில் செயல்பட்டார். எதிரிகளின் பலம், பலவீனம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக எடை போட்டு அதற்குத் தக்கபடி சர்ச்சில் செயல்படுவதில் கைதேர்ந்தவர், அதனால் தான் மீண்டும் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பதவி சர்ச்சிலைத் தேடி வந்தது.

உலகம் எதிர்பார்த்தது போன்று இரண்டாம் உலகப் போர் வந்து சேர்ந்தது. உலகை தமது காலடியில் கொண்டு வர வேண்டும் என்ற பேராசையால் ஹிட்லரும், முஸோலினியும் உலகப் போருக்கு காரணமாயினர். எதிரிப் படைகளை தடுப்பதிலும், எதிரி நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பதிலும் சர்ச்சில் தனிக் கவனம் செலுத்தினார். அதற்காக அவர் இரவு பகலாக உழைத்தார். ‘உழைப்பு என்றாவதொரு நாள் ஜெயித்தே தீரும்’ என்பதற்கு ஏற்ப இங்கிலாந்தின் பிரதமர் பதவியும் சர்ச்சிலைத் தேடி வந்தது.

பிரதமர் பதவியை ஏற்றதும் ஹிட்லர் – முஸோலினிக்கு எதிராக உலக நாடுகளைத் திரட்டும் பணியில் சர்ச்சில் ஈடுபட்டார். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளையும் இணைத்துக் கொண்டு, ஒரு புதிய வலுவோடு ஹிட்லர் படையை சர்ச்சில் எதிர்த்து நின்றார்.

ஹிட்லரின் விமானப்படை இங்கிலாந்துக்குள் புகுந்து குண்டுமழை பொழிந்தன.. சர்ச்சிலின் வீட்டுக்கு அருகிலும் குண்டு விழுந்தது. அப்போதும் ஒரு இராணுவ வீரனுக்குரிய கம்பீரத்தோடு, படை வீரர்களுக்கு வழிகாட்டுவதிலும், பொது மக்களுக்குத் தைரியம் கொடுப்பதிலும் சர்ச்சில் ஈடுபட்டார். அவரின் இந்தக் குணங்கள் அனைவராலும் வியந்து பேசப்பட்டது.

சர்ச்சிலின் தலைமையும், இங்கிலாந்து மக்களின் எழுச்சியும், தேச நாடுகளின் ஒத்துழைப்பும் ஜெர்மன் படையை தோல்வியடையச் செய்தன. உலக நாடுகள் எல்லாம் சர்ச்சிலின் தீரத்தையும் வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தன.

இங்கிலாந்தின் எழுச்சி நாயகனாகத் திகழ்ந்த சர்ச்சில் 1965-ல் மறைந்தார்.

அவருடைய உண்மையான தகப்பனார் அரச வம்சத்தில் ஒருவர் அவரிடம் சர்ச்சிலின் தாயார் துணைவியராய் இருந்தார் .கர்ப்பம் உற்றதும் ஸ்பென்சர் குடும்பத்தில் வேறொருவருக்கு மணம் முடிக்கப்பட்டார்

No comments:

Post a Comment