Wednesday 16 May 2018

RAJINIKANTH IN POLITICS








RAJINIKANTH,IN POLITICS



மனிதர்களில் பலவகை , 
ஆனால் ரஜினிகாந்த் தனி வகை

மனிதர்களில் பலவகை பார்த்திருப்போம், ஆனால் ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்கமாடோம்
அவர் இப்பொழுதெல்லாம் ரசிகர்களை அதிகம் சந்திக்கின்றாராம், இவ்வளவு நாள் எங்கிருந்தார் என கேட்க கூடாது, இங்குதான் இருந்தார்.

சந்தித்து பல முத்தான கருத்துக்களை தெரிவிக்கின்றார் எது தெரியுமா? 21 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அரசியல் கூட்டணியினை நான் ஆதரித்தது ஒரு விபத்து, என்னை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொண்டார்கள் என்றெல்லாம் அன்னார் பொன்மொழியினை அள்ளி தெளித்திருக்கின்றார்

எது விபத்து மிஸ்டர் ரஜினிகாந்த்?

திரையுலகில் நீங்கள் வளர்ந்துவிட கூடாது, என குறிவைத்து விரட்டிய எம்ஜிஆர் காலமா?

அக்காலத்தில் கலைஞர் கைகொடுத்து சூப்பர்ஸ்டார் என பட்டம் கொடுத்த காலமா?

எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 100 படத்தின் பிற்பகுதியினை உங்களை வைத்து தயாரிக்க வந்த தயாரிப்பாளரை எம்ஜிஆர் ஓட விரட்டினாரே அது விபத்தா?

கத்திப்பாரா ஓட்டபந்தயம் விபத்தா? அல்லது அடுத்த எம்ஜிஆர் எனும் அடைமொழி வராமல் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காவல் காத்தார்களே அது விபத்தா?

மணிரத்னம் வீட்டு குண்டுவெடிப்பும், அதனை தொடர்ந்த உங்கள் சீற்றமும் எல்லாம் விபத்தா?

ஜெயா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என சொன்னது விபத்தா?

மூப்ப்பனரும், சோவும் உங்களை சந்தித்து ஆதரவு கேட்டபொழுது தமிழமெங்கும் சைக்கிள் சின்னத்துடன் போஸ் கொடுத்தது விபத்தா?

அதன் பின்னும் ஆட்சி மாறியபின் அதிமுக கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்ததும், என் வோட்டு அதிமுகவிற்கு என சொன்னதும் விபத்தா?

இவ்வளவு நடந்தும் கலைஞர் உங்களை சரிக்கு சமமாக தன் அருகே அமர வைத்ததும், ஜெயா ஒரு கூட்டத்தின் பின் வரிசையில் உங்களை நிற்க வைத்ததும் விபத்து என்றா நினைக்கின்றீர்கள்???

மனிதர் எவ்வளவு வன்மமாக பேச தொடங்கிவிட்டார், அரசியல்வாதிகள் பொய் சொல்வார்கள், அரசியல்வாதிகள் சந்திக்கும் நபர்களுமா பொய் சொல்வார்கள்? நல்ல வேளையாக இம்மனிதர் கட்சி தொடங்கவில்லை

நான் அரசியலுக்கு வந்தால்... என மறுபடியும் இழுத்திருக்கின்ரார். நான் அரசியலை விட்டு சென்றுவிடுவேன் என சிலநேரங்களில் கட்சிக்குள் அஸ்திரம் வீசும் தலைவர்கள் உண்டு, அரசியலுக்கு வந்துவிடுவேன் என சொல்லியே இத்தனை காலம் கடத்தும் ஒரு விசித்திர மனிதனை இப்பொழுதுதான் பார்க்கின்றோம்

பசுமாட்டின் முன் கன்றினை கட்டி பால்கறக்கும் வித்தை இது, ரசிகர்கள் முன் இப்படி சொல்லி சொல்லியே பாக்கெட்டில் இருப்பதை கறந்து கொண்டிருக ்கின்றார் இவர்

ஆனால் இம்முறை ரஜினியின் வார்த்தைகள் வழக்கமான அவரின் காமெடி அல்ல, இதன் பின் பெரும் தந்திர திட்டங்கள் இருக்கலாம், ரஜினி சும்மாவே கருப்பு பிராமணர் என்பதில் சந்தேகமில்லை
பிராமண சூதுக்கள் பொல்லாதது, ராஜாஜிக்கு பின் தமிழகத்தில் தங்கள் ஆட்சி இல்லை என்ற வன்மம் அவர்களுக்கு இருந்தது, ஆனால் எம்ஜிஆர் கிடைத்தார் ஓரளவு பயன்படுத்தினார்கள், பின் ஜெயாவின் மூலம் முயற்சித்தார்கள், ஜெயா நிச்சயம் இன்னொரு ராஜாஜியாக வந்திருக்கவேண்ட ியவர்

ஆனால் நடராஜன் ஜெயாவினை ஒரு வளையத்தில் கொண்டுவந்தார், அது தேவர் சாதி பிடியாயிற்று, இப்படித்தான் பிராமணர்கள் ஆட்சியாக வந்திருக்க வேண்டியது இன்னொரு தமிழ்சாதி ஆட்சியாக போயிற்று

இப்பொழுது பிராமண நோக்கம் இந்த கருப்பு பார்பணன் மூலம் வெளிவருகின்றது, ரஜினி இப்படி எல்லாம் பேச அதுதான் காரணம் இல்லாவிட்டால் அவருக்கு அல்மைசர் ஏற்பட்டிருக்க வேண்டும், அப்படியெல்லாம் ஏதும் மருத்துவ தகவல் இல்லை, டயலாக் நன்றாக பேசுவதாக ரஞ்சித் கூட சொல்லியிருந்தார்
இவரை, இவருக்கு சோதனையான 1980 முதல் பல இடங்களில் காத்தவர் கலைஞர், எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ ரஜினியிடம் முகம் கொடுத்து பேசியது கூட கிடையாது

அந்த கலைஞருக்கு 1996ல் அதுவும் தமிழகமே பொங்கிய காலங்களில் ஆதரவு தெரிவித்துவிட்டு இப்பொழுது விபத்து என்றால்...
தமிழச்சி மனோரமா முன்பு இவரை பற்றி சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது, இவர் அப்படித்தான் போல..

இவர் ரசிகர்களுக்கு மானம் இருக்கின்றதோ வெட்கம் இருக்கின்றதோ தெரியாது, ஆனால் இவருடனெல்லாம் இணைந்து குஷ்பூ நடித்தார் என்பதனை நினைத்து அவரின் ரசிகர்களான நாங்கள் பெரும் வருத்தம் கொள்கின்றோம்..

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடபடுபவர், தமிழகத்தின் நச்சுவிதை என்ற பட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்...

கொஞ்சநாளைக்கு முன்புதான் இலங்கைக்கு செல்லும் வழி அந்த லைக்கா சுபாஷ்கரன் மூலம்தான் தெரிந்தது என சொன்னவர்தான் இவர், அந்த அறிக்கையின் வியப்பே இன்னும் தீரவில்லை

அதற்குள் இப்படி விபத்து அறிக்கை...
இப்படி பகிரங்க பொய்களை சொல்லும் மனிதர் இன்னும் கட்சி தொடங்காதது நல்லது, தொடங்கவும் வேண்டாம் .

No comments:

Post a Comment