Monday 28 May 2018

N.T.RAMA RAO ,GOD OF ANDHRA KRISHNA BORN 1923 ,MAY 28





N.T.RAMA RAO ,GOD OF ANDHRA KRISHNA 
BORN 1923 ,MAY 28



இந்தியாவில் மிகவும் பிரபலமாக 
‘என்.டி.ராமா ராவ்’ பிறப்பு: மே 28, 1923்,

தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான நேர்த்தியுடன் செம்மையாக சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் தெலுங்குத் திரைப்படத் துறையில், திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தினார். டோலிவுட்டில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடும், நடிப்புத் திறமையும், அவரை ஆந்திர பிரதேசத்தில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்தவராக மாற்றியது. என்.டி. ராமா ராவ் அவர்கள், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்று, ஒரு அரசியல்வாதியாக மாறிய பிறகும் கூட, அவர் தன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகவே திகழ்ந்தார். அவரது தனிச்சிறப்பு வாய்ந்த அரசியல் வாழ்க்கை வரலாற்று வரைபடத்தில், ஆந்திர மாநிலத்தின் வளர்சிக்காகவும், நலனுக்காகவும் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். ஆந்திர மக்களின் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கும், என்.டி.ராமா ராவ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: மே 28, 1923

பிறந்த இடம்: ஆந்திர பிரதேசம், இந்தியா

இறப்பு: ஜனவரி 18, 1996

தொழில்: திரைப்பட ஆளுநர் மற்றும் அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியா

ஆரம்ப கால வாழ்க்கை

என்.டி.ராமா ராவ் அவர்கள், ஆந்திர மாநிலத்திலுள்ள நிம்மகுரு என்ற கிராமத்தில், மே 28, 1923 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு விவசாயியாக இருந்தாலும், குடும்பத்தில் செல்வசெழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கை சூழலே நிலவியது. என்.டி.ராமாராவ் அவர்கள், தனது முதல்நிலைக் கல்வியை நிம்மகுருவிலுள்ள பள்ளியில் பயின்றார். பின்னர், அவரது மாமா அவரைத் தத்தெடுத்ததன் காரணமாக, அவர் விஜயவாடாவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் ஆறாவது வகுப்பிலிருந்து தனது கல்வியை, விஜயவாடாவிலுள்ள ஒரு பள்ளியில் பயின்றார். ஆனால், அதிர்ஷ்டத்தின் அட்டவணைகள் விரைவில் தலைகீழாகத் திரும்பியதால், என்.டி.ராமா ராவ் அவர்களின் குடும்பத்தின் செல்வசெழிப்புக் குறைந்து, ஏழ்மை நிலையை அடைந்தனர். இந்த நேரத்தில், விஜயவாடாவில் ஒரு பால் விநியோகம் செய்யும் சிறுவனாக தனது முதல் வேலையை எடுத்துக் கொண்டார், ராமா ராவ் அவர்கள். உள்ளூர் பலசரக்கு அங்காடியிலும் எழுத்தராகப் பணிபுரிந்தார். தனது பள்ளிப்படிப்பை இருபது வயது அடையும் வரைத் தொடர்ந்த, ராமா ராவ் அவர்கள், பின்னர் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக தனது படிப்பைத் தொடர்ந்தார். என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு அழகான குரல்வளம் இருந்ததால், அவரது இளம் வயதில், பெரும்பாலான நேரங்களில் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் விதி வேறு திட்டங்கள் தீட்டியதால், இந்திய சிவில் சேவைகளில் தனக்குக் கிடைத்த முதல் வேலையை விட்டுவிட்டு, தெலுங்குத் திரைப்படத் துறையில் ஒரு நடிகராக நுழைந்தார்.

நடிப்பின் மீது அவர் கொண்ட பற்றின் காரணமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரி நாடகங்களிலும், மற்ற மேடை நாடகங்களிலும் தீவிரிமான உறுப்பினராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கல்லூரி நாடகத்தில், என்.டி.ஆர் அவர்களுக்கு முதல்முதலில் அளிக்கப்பட்டது ஒரு பெண் கதாபாத்திரம். அவர் அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டாலும், அவரது மீசையின் காரணமாகத் தயக்கம் காட்டினார்! சமூகத்திலுள்ள ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கு சேவை செய்வதற்காக நிதித் திரட்ட அவர் பல மேடை நாடகங்களை ஏற்பாடு செய்து, தொகுத்தும் வழங்கினார். ஒரு இளைஞனாக, தனது இருபதுகளில், நட்சத்திர அந்தஸ்தை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதுவே ஆந்திர பிரதேச வரலாற்றின் பக்கங்களில் அவருக்கென்று ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்த இடத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள உதவியது. எதிர்காலத்தில் புகழ்பெற்ற டோலிவுட் நடிகர் திகழவிருக்கும் இவர், 1942 ஆம் ஆண்டில், அவரது தாய் மாமாவின் மகளான பசவ தராகம் என்பவருடனான காதலை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்தார். தனது பள்ளிக் காலத்தில் ஒரு நல்ல மாணவனாக இருந்தும், பால்ய விவாஹத்தால் அவரது கல்லூரியில் பல பாடங்களில் தோல்வி அடைந்தார். இருப்பினும், என்.டி. ராமராவ் தொடர்ச்சியாக கல்வியில் தோல்வியுற்ற போதிலும், ஒரு உறுதியான மாணவராக இருந்து, அதனைக் கைவிடவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கை

என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். 43 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 1985ல், அவரது முதல் மனைவி பசவ தராகம் புற்றுநோயால் இறந்தார். என்.டி.ராமா ராவ் அவர்களுக்கும், அவரது முதல் மனைவிக்கும், 7 மகன்கள் மற்றும் 4 மகள்கள் பிறந்தனர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், தனது 70வது வயதில், 1993 ஆம் ஆண்டில் மீண்டும் திருமணம் செய்தார். அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி, பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவரைத் தொடர்ந்து இவரது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் பலரும் ஆந்திர அரசியலிலும், தெலுங்கு திரைப்பட துறையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

திரையுலக வாழ்க்கை

1947 ஆம் ஆண்டு, தெலுங்கு திரையுலகில், என்.டி.ராமா ராவ் அவர்கள் பிரவேசித்தார். தென்னிந்தியாவில் மிகவும் நன்கு அறியப்பட்ட தயாரிப்பாளரான பி.ஏ.சுப்பா ராவ் அவர்கள், முதன்முதலில் என்.டி.ராமாராவிற்குள் ஒளிந்திருக்கும் தலைச்சிறந்த நடிப்புத் திறமையை கவனித்தார். பி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் எதிர்வரும் படமான ‘பல்லேடுரி பில்ல’ என்ற திரைப்படத்திற்கான ஹீரோவை தேர்ந்தெடுக்கும் விதமாக என்.டி.ராமா ராவ் அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்படத்திற்காக கையெழுத்திடும் முன், ஒருமுறைக்கு இருமுறை அவர் யோசிக்கவே இல்லை. நடிகர்கள் பெரிய திரையில் தனது முதல் செயல்திறனை வெளிபடுத்தும் முன், வழக்கமாக நடத்தப்படும் திரை சோதனை மற்றும் மேக்-அப் சோதனையெல்லாம் என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு நடத்தப்படவில்லை. பி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் படத்தில் முதலில் ஒப்பந்தமானாலும், என்.டி.ராமாராவ் அவர்கள் முதலில் திரையில் தோன்றிய படம், 1949ல் வெளியான எல்.வி.பிரசாத் அவர்களின் படமான ‘மன தேசம்’. அதில் அவர் ஒரு துணிகரமான போலீஸ்காரர் என்ற சிறிய வேடத்தில் நடித்தார். ‘பிசாரோ’ என்ற ஆங்கிலம் நாடகத்திலிருந்து உணர்ச்சியூட்டும் வகையில் உருவான ‘பல்லேடுரி பில்ல’, என்ற திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடி, ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்று, திறமையான நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. அந்நாட்களில், சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு நடிகருக்குக் கடினமாக இருந்தது. ஆகவே, தனது பணியிடத்திற்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சென்னையில் குடியேறினார். படங்களில் நடித்ததிலிருந்து கிடைத்த ஊதியம், குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாததன் காரணமாக, வறுமையில் வாடினார். பணம் சேகரிப்பதன் நோக்கமாக, அவர் பல நாட்கள் உண்ணாமல் கூட இருந்திருக்கிறார்.

1949 ஆம் ஆண்டு, என்.டி.ராமராவ் அவர்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக இருந்தாலும், 1951ஆம் ஆண்டு அதைவிட மிக சிறப்பாகவே அமைந்தது. ஏனென்றால், கே.வி.ரெட்டியின் படமான ‘பாதாள பைரவியும்’, பி.என்.ரெட்டியின் தயாரிப்பில் உருவான ‘மல்லீஸ்வரியும்’ அந்த ஆண்டில் தான் வெளியானது. ‘பாதாள பைரவி’ திரைப்படம் இந்தியா முழுவதும் அமோகமாக ஓடி, அபார வெற்றிப் பெற்றதால், சாதாரண மனிதனாக இருந்த என்.டி.ராமா ராவ் அவர்கள், படிப்படியாக வளர்ந்து தனக்கென டோலிவுட்டிலும், தன் ரசிகர்கள் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தார். பாதாள பைரவியிலும், அடுத்தடுத்த வந்த பல படங்களிலும், பெரும்பாலும் புகழ்பெற்ற வரலாற்று கதாப்பாத்திரங்களிலோ, அல்லது சாதாரண மனிதனாக கதாநாயகன் கதாபாத்திரங்களிலோ காணப்பட்டார். எதிர்மறைக் கதாபாத்திரங்களில், அவர் ஒரு சில படங்களிலே நடித்துள்ளார். என்.டி.ராமாராவின் புகழ் படிப்படியாக அதிகரித்ததன் காரணமாக, பல தயாரிப்பாளர்களும், அவருடன் படம் பண்ண ஆவலாக இருந்தனர். 1958ல், ‘பூ கைலாஸ்’ என்ற படத்தில் ‘ராவண பிரம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை, என்.டி.ராமா ராவ் அவர்கள், கைப்பற்றினார். அவருடைய வாழ்நாளில், ‘ராவணன்’ என்ற புராண கதாபாத்திரமே, வரலாற்றில் சிறப்புமிக்க மற்றும் மிகச் சிறந்த பாத்திரம் என அவர் கேள்விப்பட்டும், படித்தும் இருந்ததால், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருந்தது, என்.டி.ராமா ராவ் அவர்கள், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த முதல் புராண படம், 1960ல் வெளியானது. தென்னிந்தியாவில், எல்லோராலும் மிகவும் நேசிக்கப்படும் கடவுளாகத் திகழும் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரரை’ அடிப்படையாகக் கொண்டு உருவான படமே ‘ஸ்ரீ மத்விரதா பர்வம்’. தங்களது அபிமான நடிகரான ‘என்.டி.ராமா ராவ் அவர்களைப் பார்க்க, அவரது ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் முன்னால் பல மணி நேரங்கள் காத்திருப்பதிலிருந்து ஒருபோதும் பின் வாங்கியதில்லை.

திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதி

ஒரு நடிகராக என்.டி.ராமா ராவின் புகழ் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அதேபோல் அவரது ஊதியமும் உயர்ந்தது. அவரது படங்களான ‘லவகுசா’ மற்றும் ‘மாயா பஜார்’ அவரின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றிக் கண்டது. தனது வாழ்க்கை வரலாற்றில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தனது ரசிகர்களுக்குக் கொடுத்த என்.டி.ராமா ராவ் அவர்கள், தனது வாழ்வின் 40 வருடங்களுக்கும் மேலாக ஒரு நடிகராகவே இருந்தார். 200க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், 15 தமிழ் படங்களிலும், ஒரு சில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார். என்.டி.ராமா ராவ் அவர்கள், ஒரு நடிகராக பல விருதகளை அள்ளிச் சென்றுள்ளார். தெலுங்கில், சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருதை’ பத்து முறையும், அவரது படமான ‘வரகட்னத்திற்காக’ ‘தேசிய விருதை’ 1968லும் பெற்றுள்ளார். இதைத் தவிர, இந்திய அரசிடமிருந்து மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதும்’, ஆந்திர பல்கலைக்கழகத்திலிருந்து ‘கௌரவ டாக்டர் பட்டமும்’ பெற்றார். தென்னிந்திய திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் கதைவசனம் எழுதுவதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். திரை வசனம் எழுத, முறையான பயிற்சிப் பெறாத போதிலும், என்.டி.ராமா ராவ் அவர்கள் எழுதிய பல உரைகள் மிகவும் பிரபலமானது. அவரது சொந்த படங்களான ‘சீதாராம கல்யாணம்’ மற்றும் ‘தான வீர சூர்ண கர்ணன்’ போன்ற திரைப்படங்களை அவரே இயக்கினார்.

அரசியல் வாழ்க்கை

1980களில், என்.டி.ராமா ராவ் அவர்கள் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்தபோதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க கடும்முயற்சி எடுத்தார். திரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே, அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என்.டி.ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 1982ல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாகிய என்.டி.ராமா ராவ் அவர்கள், தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983 – 1994ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், 1983ல் தெலுங்கு தேச சட்டமன்ற கட்சித் தலைவரானார். சாதாரண மக்களிடையே, அரசியல்வாதிகள் நேரடி தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நம்பிய என்.டி.ராமா ராவ் அவர்கள், அவரது கட்சியான ‘தெலுங்கு தேச கட்சியை’ ஊக்குவிக்கும் விதமாக ஆந்திர மாநிலம் முழுவதும் விரிவான பயணங்கள் மேற்கொண்டார். ‘சைதன்யா ரதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு தனிப்பட்ட வேனில் அவர் பயணம் மேற்கொண்டார்.

சமூகத்தில் ஏழ்மைநிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், என்.டி.ராமா ராவ் அவர்கள் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வெற்றி வீரர் ஆவார். 1986ல் இயற்றப்பட்ட, ‘பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப் படவேண்டும்’ என்ற மசோதாவை முன்மொழிந்தார். என்.டி.ராமா ராவ் அவர்கள், பிரபலமான அரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது. தேர்தலில் என்.டி.ராமாராவ் அவர்கள், வெற்றிப் பெற்றாலும், இந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984ல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என்.டி.ராமா ராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது. தெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணினி மயமாக்கப்பட்டதன் காரணமே, அதன் நிறுவனரான என்.டி.ராமா ராவ் அவர்கள் இறந்த பின்பும் கூட, கட்சி இன்றைக்கும் நிலைக்க பொறுப்பு காரணிகள். 1994ல், என்.டி.ராமா ராவ் அவர்கள், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. என்.டி.ராமா ராவ் அவர்கள், 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்


என்.டி.ராமா ராவ் அவர்கள், தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகருக்கான பத்து ஃபிலிம்பேர் விருதுகளை 1954 முதல் 1958 வரையும், பின்னர் 1961, 1962, 1966, 1968 மற்றும் 1972 ஆண்டுகளுக்கும் பெற்றார். 1968ல், வெளியான அவரது படமான, ‘வரகட்னம்’ சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான ‘தேசிய திரைப்பட விருதினை’ பெற்றது. மேலும், தெலுங்கு சினிமா உலகில் என்.டி.ராமாராவ் அவர்களது பங்களிப்பைப் போற்றும் விதமாக, 1968 ஆம் ஆண்டு, இந்திய அரசு அவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருதை’ வழங்கி கௌரவப்படுத்தியது. 1978ல், ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கிப் பாராட்டியது.

இறப்பு

என்.டி.ராமா ராவ் அவர்கள், தனது 72 வயதில், ஜனவரி 18, 1996 அன்று இறந்தார். அவர் இறந்த நேரத்தில், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஹைதெராபாத்தில் ஒரு குடியிருப்பாளராக அவர் இருந்தார். டோலிவுட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேச அரசியலிலும் இன்றும் கூட அவர் இல்லாக்குறை உணர்வு இருந்து வருகிறது.

காலவரிசை

1923: என்.டி.ராமா ராவ் அவர்கள், மே 28, 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.

1942: பசவ தராகம் என்பவரைத் திருமணம் செய்தார்.

1947: என்.டி.ராமா ராவ் அவர்கள், டோலிவுட்டில் நுழைந்தார்.

1949: அவரது முதல் படமான ‘மன தேசம்’ வெளியானது.

1951: சாதனை முறியடிக்கும் வெற்றிப் படங்களில் நடித்தார்.

1958: தனது முதல் புராணக் கதாபாத்திரமான ‘இராவணன்’ வேடத்தில் நடித்தார்.

1960: புராண பாத்திரங்களின் ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநாட்டினார்.

1968: ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.

1982: தெலுங்கு தேச கட்சியை உருவாக்கினார்.

1983: தெலுங்கு தேச சட்டமன்றக் கட்சித் தலைவரானார்.

1984: காங்கிரசை அச்சுறுத்தியதன் காரணமாக, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

1985: அவரது முதல் மனைவி இறந்தார்.

1989: லேசான மாரடைப்பு.

1993: தனது 70வது வயதில், இரண்டாவது முறையாக மணமுடித்தார்.

1994: பிரச்சார தேர்தல் இல்லாமல், ஆந்திர பிரதேச முதல்வரானார்.

1996: ஜனவரி 18 ம் தேதி இறந்தார்.





என். டி. ராமராவ் அல்ல‌து என். டி. ஆர் (தெலுங்கு மொழி: నందమూరి తారక రామా రావు; மே 28, 1923 — ஜனவரி 18,1996) ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவ‌ர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார்.[1] தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இவரது இயற் பெயர் நன்டமுரி தாரக ராமா ராவ்.

திரை வாழ்வு
என்.டி.ஆர் 1947ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்.

'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார்.[2]

அரசியல் வாழ்வு
1993-ல் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரிப் பேராசிரியையை மறுமணம் செய்து கொண்டார். அப்போது என்.டி.ஆருக்கு 70 வயது. அதன் பின் 1994ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார். சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனான நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிர்அணியாக மாற, தெலுங்குதேசம் கட்சி உடைந்தது. 1995-ல் ராமராவ் ராஜினாமா செய்தார். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் மந்திரியானார்.[3]

தமிழ்
மாயா பஜார் (1957)
லவகுசா (1963)
கர்ணன் - கண்ணன் வேடம்
கண்ணன் கருணை
சண்டிராணி
திருடாத திருடன்
பணம் படுத்தும் பாடு
பாதாளபைரவி







என்டி.ராமா ராவ் ஒரு மகத்தான மனிதர்

என்டி.ராமா ராவ் தனக்கென வித்தியாசமான கொள்கையை கொண்டவர் . ஒளிவு ,மறைவு ,சூது எதுவும் அறியாத மாபெரும் கலைஞர் . அவருடைய ரசிகர்கள் எம்ஜியார் ரசிகரைப்போல் திமிர் பிடித்தவர்கள் அல்ல .ராமராவ் சொன்னால் அப்படியே அசையாமல் தரையில் படுத்து கொள்ளும் அளவு பக்தி மிக்கவர்கள் .அப்போது திருலோக சந்தர் கூறினார்

.நீங்கல்லாம் அரசியலுக்கு வந்தா நிச்சயமா முதல்வர் ஆயிடுவீங்க !(1968 ) என் டி ஆர் செட்டில் இருந்தா அந்த இடம் பயம் கலந்த மரியாதையுடன் இருக்கும் 
இடி போல பேசுவார் .அவர் நடிக்கும் போது யாரிடமும் அரட்டை அடிக்க மாட்டார் செல்வி ஜெயலலிதாவும் அப்படியே .இருவரும் எவர் மீதும் குறை ,புரளி ,புகார் கூறாதவர் என்று ஏவிஎம் சரவணன் கூறுகிறார் .

ஒரு கால்சீட் என்பது காலை 9 டு இரவு9 .இரவு கால்சீட் 
இரவு 9 டு 12 மணிதான் .சரியாக உதவியாளர் 11.45 க்கு கொண்டுவந்த நாற்காலியை மடக்குவார் - இதான் சிக்னல்- சரியாக 40 கால்சீட் தான் குடுப்பேன் என்று கறாரான கூறி விடுவார்

.ஏவிஎம் கேன்டீனில் அவல் கேசரியும் ,மிளகாய் பஜ்ஜியும் மெனு என்றால் எண்டியார் சூட்டிங் என்று பொருள் . எப்போதும் ஒரு பெரிய கூஜாவில் தண்ணீர் கொண்டு வருவார் .அதில் திராட்சை உளர் பழங்கள் 
இட்டு காய்ச்சிய நீர் .எவருக்கும் தர மாட்டார் திருலோகசந்தர் மட்டும் இதில் விதி விலக்கு.

அதே போல் கோபத்திலும் பொரிந்து தள்ளி விடுவார் .எம்ஜியாரை வைத்து படம் எடுத்த மணியன் ஒரு முறை எங்க படத்துல நடிக்கணும்னு சொல்லியிருக்கார் . அந்த மணியன் நீங்கல்லாம் எங்க படத்துல நடிப்பீர்களா ?என்று சொன்னவுடன் நீங்க எப்ப கேட்டீங்க ,எப்ப மறுத்தேன் .தயாரிப்பாளர்கள் வந்து கேக்குறதுதானா வழக்கம் .சும்மா ஒரு நிகழ்ச்சில கேக்குறது முறையான அழைப்பா ?என்று பொரிந்து தள்ளிட்டார்

ஏவிஎம் சரவணன் ராமு -தெலுங்கில் எடுக்க சந்திக்க நேரம் கேட்ட போது காலை 4.30 க்கு வாங்கன்னு சொன்னவுடன் தூக்கி வாரி போட்ருக்கு. போய் பார்த்தால் மேக்கப்போடு இருந்திருக்கார் .வளவள பேச்செல்லாம் கிடையாது

எடுத்த எடுப்பிலே நான் எவ்வளவு சம்பளம் வாங்குறேன்னு தெரியுமா ? ஒரு லட்சம் .ஆனா என்னுடைய கடைசி ரெண்டு படம் சரியா போகல அதனால 90 ,000 கொடுங்க !

கமலஹாசன் நடித்த 100 வது படம் ராஜபார்வை .இதற்கு விழா எடுக்க ஏவிஎம் முற்பட்ட போது 
எம்ஜியார் வருகிறேன் என்றார் .ஆனால் ராமராவ் மறுத்து விட்டார் .காரணம் சொன்னார் .

எம்ஜியார் படங்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் .நான் இன்னும் ஸ்ரீதேவி கூட அவரைப்போலவே 
நடித்து கொண்டிருக்கிறேன் .நான் வாழ்த்தி பேசினால் அது சும்மா பொய்யான வார்த்தையா இருக்குமே 
தவிர என் மனசாட்சியுடன் பேசியதா அர்த்தம் ஆகாது என்று சிதறு காயை உடைப்பது போல் உடைத்து விடுவார்

தேர்தல்ல ஜெயித்து முதலமைச்சர் ஆகி சென்னை வந்த போது அவரைக்காண சரவணன் 
கொஞ்சம் பயத்துடன் பார்க்க சென்றிருக்கிறார் .அவரை பார்த்த வுடன் எழுந்து வந்து வரவேற்றார் .
என்ன சார் இது ? நீங்களே வந்து ...

I AM NOT RAMAARAO I AM THE CHIEF MINISTER OF ANTHRA PRADESH. YOU ARE NOT SARAVANAN .YOU ARE THE SHERIFF OF MADRAS.I MUST RECEIVE YOU PROPERLY

No comments:

Post a Comment