Saturday 28 April 2018

M.S.RAJESWARI, CHILD VOICE SINGER EXPIRED 2018,APRIL 25




M.S.RAJESWARI, CHILD VOICE SINGER
EXPIRED 2018,APRIL 25




எம். எஸ். இராஜேஸ்வரி (பெப்ரவரி 24, 1932 - ஏப்ரல் 25, 2018) தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். சுண்டலிக்கும் சுண்டலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்) போன்ற குழந்தைத்தனமான பாடல்களால் பரவலாக அறியப்படுகிறார். நடிகர் கமலஹாசன் தமது திரைப்பட வாழ்வைத் தொடங்கிய களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற குழந்தைப்பாடல் இன்றும் நினைவு கூரப்படுகிறது. 500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ள இராசேச்வரி 1947இல் தமது திரையுலக வாழ்வை ஏவிஎம் நிறுவனத்தின் நாம் இருவர் திரைப்படத்தில் துவங்கினார். முதன்மை திரை பின்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏஎம் இராஜா, கே.ஜே.யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

 
ராஜேஸ்வரி 1932 பெப்ரவரி 24 ஆம் நாள் மதுரை சடகோபன், டி. வி. ராஜசுந்தரி ஆகியோருக்கு மயிலாப்பூரில் பிறந்தார். தாயார் ராஜசுந்தரி பாடகியும், நாடக நடிகையும் ஆவார். சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த ராஜேசுவரியை இவர்களது குடும்ப நண்பர் பி. ஆர். பந்துலு திரைப்படங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இவரது முதல் பாடல் மையல் மிகவும் மீறுதே.. 1946 இல் வெளிவந்த விஜயலட்சுமி திரைப்படத்தில் இடம்பெற்றது.[1]

காரைக்குடியில் அப்போது இருந்த ஏவிஎம் கலையகத்தில் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரியை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டியார் அவரை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ராமராஜ்யா திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.[2]



ஏவிஎம் கலையகம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறிய போது ராஜேசுவரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா, மகான் காந்தி மகான் ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து வேதாள உலகம் திரைப்படத்தில் எஸ். வி. வெங்கட்ராமன் இசையில் ஆகா ஆனந்தமானேன் என்ற பாடலைப் பாடினார். வாழ்க்கை படத்தில் உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ற பாடலை டி. ஆர். ராமச்சந்திரனுடன் இணைந்து பாடினார்.[2]

இவர் பாடிய சில திரைப்படப் பாடல்கள்

 
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா... – டவுன் பஸ் (1955)
காக்கா, காக்கா மை கொண்டா... – மகாதேவி (1957)
சேவை செய்வதே... - மகாதேவி (1957)
சிங்காரப் புன்னகை... - மகாதேவி (1957)
ஆசைக் கல்யாணம், நல்ல அன்புக் கல்யாணம்... – முதலாளி (1957)
எங்கிருந்தோ வந்தார் இதயம் கவர்ந்தார்... – முதலாளி (1957)
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா... - தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு... - படிக்காத மேதை (1960)
அம்மாவும் நீயே... – களத்தூர் கண்ணம்மா (1960)
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்... – கைதி கண்ணாயிரம் (1960)
மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி... - குமுதம் (1961)
பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே... - செங்கமலத் தீவு (1962)
பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா... - திக்குத் தெரியாத காட்டில் (1972)
சின்னஞ்சிறு கண்ணன்... – மகாலட்சுமி (1979)
பெற்ற சிறப்புகள்
2013 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்த் திரைப்படத் துறை நூற்றாண்டு விழாவில் இவர் பெருமைப்படுத்தப்பட்டார்.[3]

மறைவு

 
எம். எஸ். ராஜேஸ்வரி 2018 ஏப்ரல் 25 புதன்கிழமை சென்னையில் கல்லீரல் தொடர்பான உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.[1][3]





'திரையுலகிலிருந்து யாருமே வரலியே!’ -

 கலங்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரி மகன்
 எம்.குணா


பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் உடலுக்குத் திரைத்துறையிலிருந்து அஞ்சலி செலுத்த யாருமே வரவில்லை என அவரின் மகன் கலங்கினார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரி

 
'பொன்னான வாழ்வே' 'கோழி ஒரு கூட்டிலே' 'சின்ன பாப்பா' 'பூப்பூவா பறந்து போவும்' என்று மழலைக் குரலால் மனதை மயக்கிய பழம்பெரும்  பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருடைய மறைவு குறித்து மகன் ராஜ் வெங்கடேஷிடம் பேசினோம். ''கடந்த ஆறுமாத காலமாக வயிற்றில் குடல் மற்றும் லிவர் பிரச்னையால் அம்மா அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் 1.30 மணிக்கு அம்மாவின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. எங்க குடும்பம், உறவினர்களைவிட தமிழ் சினிமா உலகின் மேல் அதீதமான அன்புகொண்டு நேசித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர், டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருக்கிறார். இன்று மாலை அடக்கம் செய்யும் இடம் குரோம்பேட்டை என்று அறிவித்திருந்த நிலையிலும், இதுவரை சினிமா உலகிலிருந்து யாருமே என்னைத் தொடர்பு கொண்டு விசாரிக்காதது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. என் அம்மா மிகவும் நேசித்த சினிமாவிலிருந்து யாராவது அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் என் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் என்பதை மறந்து விடாதீர்கள்'' என்று கலங்கினார்







குழந்தைகளின் குரலில் பாடுவதற்கு பேர்போன பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி இன்று புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 85. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடலைகளை இவர் பாடியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை காலை முதுமை காரணமாக இவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஏ.வி.எம் நிறுவனத்தின் ஸ்டூடியோ பாடகியாக வெகுகாலம் இருந்துள்ள இவர், நடிகர் கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே..' பாடலுக்கு பின்னணி குரல் கொடுத்ததும் இவரே.

1950-களில் வெளியான திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடி பிரபலமாக தொடங்கிய எம்.எஸ் ராஜேஸ்வரி, 90-களில் வெளியான படங்கள் வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அதிக அளவிலான பாடல்களை பாடினார்.
துவக்கத்தில் இசையமைப்பாளர் ஆர்.சுதர்ஷனம் இசையமைப்பில் அதிகமாக பாடிய இவர், பின்னாளில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அதிக அளவிலான பாடல்களை பாடியுள்ளார். தவிர ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா உள்ளிட்டவர்களது இசையமைப்பிலும் குறிப்பிடத்தக்க பாடல்களை பாடியுள்ளார்.



1960-கள் தொடங்கி 1990-கல் வரை வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் இடம்பெற்ற மழலைக்குரல் கொண்ட பாடல்களை இவர் பாடியதால், குழந்தைகளின் குரலில் பாடுவதற்கு பேர்போன பாடகியாக இவர் அறியப்பட்டார்.

நடிகை பேபி ஷாமிலி நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களில் இடம்பெற்ற குழந்தை பாடல்கள் அனைத்தையும் இவரே பாடியிருந்தார்.

No comments:

Post a Comment