Sunday 29 April 2018

DEVIKA , THE LEGEND OF TAMIL CINEMA



DEVIKA , THE LEGEND OF TAMIL CINEMA

அன்று வந்ததும் அதே நிலா: 
தேவிகா - நடிப்புச் சுமைதாங்கி

தமிழ் சினிமாவின் கதைப்போக்கைத் தடம் மாற்றியவர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். உணர்ச்சிபூர்வமான கதைகளைப் படமாக்கியது மட்டுமல்ல, நேர்த்தியான திரைக்கதைகளில் தமது கதாபாத்திரங்களைப் பொருத்தியவர் அவர். கதாபாத்திரங்களின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க மிகப் பொருத்தமான நட்சத்திரங்களை அவற்றுக்குத் தேர்வு செய்தார்.

ஸ்ரீதரின் நம்பிக்கையைப் பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் தேவிகா. ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் சோகச் சுமையை ஏற்றி வைத்தது கல்யாண்குமார் – தேவிகா ஜோடி. அந்த இணைக்கு ரசிகர்கள் கொடுத்த இடத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், அவர்களை அடுத்த ஆண்டே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் மீண்டும் இணைத்தார். அந்தப் படமும் மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்ரீதர் இயக்கத்தில் அடுத்து தேவிகா நடித்த ‘சுமைதாங்கி’ படமும் மறக்க முடியாத படமானது.

பாடியது சுசீலாவா? தேவிகாவா?

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் உருவான பல பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்றவை. தேவிகா நடித்த பெரும்பான்மையான படங்களில் இந்த மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அமைந்துபோயின. “ நான் பாட வைத்தது சுசீலாவையா இல்லை தேவிகாவையா?” என்று எம்.எஸ்.வி.யே வியந்து கேட்கும் அளவுக்குப் பாடல்களுக்குத் தேவிகா வாயசைக்கிறாரா அல்லது நேரடியாகப் பாடுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்தது. அந்த அளவுக்குச் சிறப்பானதொரு நடிப்பைப் படத்திற்குப் படம் வெளிப்படுத்தினார் தேவிகா.



நாட்டியப் பேரொளி பத்மினியும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நீயா, நானாப் போட்டியிட்டு வந்த 60களில் தனக்கு யாரும் போட்டியில்லை என்று தனித்து வெற்றிக்கொடி நாட்டியவர் தேவிகா. தெலுங்கு தேசத்திலிருந்து தமிழுக்கு வந்த அவர், இரு மொழிகளிலும் சுமார் 150 படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தேவிகா என்ற நட்சத்திரத்தின் ஒளிவட்டம் இல்லாமல் கதாபாத்திரமாகக் கூடு பாய்ந்துவிடும் மாயத்தைச் செய்து காட்டினார்.

பானுமதியின் தேர்வு



முதலாளி படத்தில் எளிய குடும்பத்தின் வள்ளி என்ற பெண்ணாகத் தோன்றிய தேவிகாவின் அழகில் சொக்கிப்போனார்கள் அன்றைய ரசிகர்கள். ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ என்று டி.எம்.எஸ் கம்பீரமாகப் பாடிய பாடலுக்கு எஸ்.எஸ். ராஜேந்திரன் ரொமாண்டிக் நடிப்பில் பின்ன, அந்தப் பாடலில் தேவிகா காட்டும் வெட்க அழகுக்குக் கொட்டிக் கொடுக்கலாம். அதே படத்தில் வரும் ‘குங்குமப் போட்டுக்காரா..’ பாடலில் காதலனைப் பகடிசெய்யும் சுட்டித்தனம் எந்தப் பெண் நட்சத்திரத்தையும் நினைவூட்டாத தனி வண்ணம் கொண்டது.

“சொன்னது நீதானா” “கங்கை கரைத் தோட்டம்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “அமைதியான நதியினிலே”, “அலையே வா... அருகே வா”, “பாலிருக்கும் பழமிருக்கும்”, “கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே”, “இரவும் நிலவும் வளரட்டுமே”, “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு”, “ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” போன்ற பாடல்களுக்கு அவர் காட்டும் முக நடிப்பில் சொக்கிப்போகாத ரசிகர்களே இருக்க முடியாது.

15 வயதில் அறிமுகம்

பிரமீளா தேவி என்ற இயற்பெயருடன் ‘நாட்டிய தாரா’ என்ற தெலுங்குப் படத்தில் 1956-ல் 15 வயதில் அறிமுகமாகியிருந்தார் தேவிகா. அதே ஆண்டு பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கிய ‘மணமகன் தேவை’ படத்துக்கு இரண்டாவது கதாநாயகி தேவைப்பட்டார். படத்தின் நாயகன் சிவாஜி. நாயகி பானுமதி. இரண்டாவது கதாநாயகியைத் தேர்வு செய்யும் பொறுப்பை மனைவி பானுமதியிடம் ஒப்படைத்தார் இயக்குநர். அன்று பானுமதியின் சாய்ஸாக இருந்தவர் பிரமீளா தேவிதான். அந்தப் படத்தில் நடித்தபோது பானுமதி தந்த அறிவுரையை ஏற்று நடிகர்

எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக் குழுவில் சேர்ந்தார். சினிமாவில் நடித்துவிட்டு மேடை நாடகத்துக்குச் செல்வதாவது என்று நினைக்காமல் முத்துராமனுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார். நாடகத்தில் பிரமிளா தேவியைப் பார்த்த பட அதிபர் எம்.ஏ. வேணு முதல் முழுநீளக் கதாநாயகி வாய்ப்பைக் கொடுத்தார்.



முக்தா வி. சினிவாசன் இயக்குநராக அறிமுகமான அந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்தார். 1957-ம் வருடம் தீபாவளிக்கு வெளிவந்த இப்படம், ஜெமினி - சாவித்ரி நடிப்பில் வெளியான சௌபாக்கியவதி படத்தை வசூலில் தோற்கடித்தது. சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. பிரமிளா தேவி என்ற பெயரையும் தேவிகா என்று மாற்றிக்கொண்டார். அந்தப் படம்தான் ‘முதலாளி’. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த தேவிகா, சிவாஜி கணேசன் ஜோடியாகப் பல படங்களில் இணைந்து நடித்தார். ‘பாவமன்னிப்பு’, ‘பந்தபாசம்’, ‘அன்னை இல்லம்’, ‘குலமகள் ராதை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சாந்தி’, ‘நீலவானம்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நீலவானம் படத்தில் அன்று தேவிகாவின் நடிப்பைப் புகழாத பத்திரிகைகளே இல்லை.

குடும்பப்பாங்கு நட்சத்திரம்



கர்ணன் படத்தில் கர்ணம் குருசேஷத்திரப் போர்க் களத்துக்குப் புறப்படும் காட்சியில் மஞ்சள் நிறப் பட்டாடையில் நீராடிய கூந்தலைத் தளையவிட்டபடி தேவிகா வரும் அழகே தனி. ஆனால் அந்தக் காட்சியில் தேவிகா காட்டும் தவிப்பு இன்று பார்த்தாலும் பதறவைக்கும். நடிகர் திலகத்தோடு மட்டுமல்ல ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட அன்றைய முன்னணிக் கதாநாயகர்கள் பலருடனும் இணைந்து நடித்த தேவிகா, எம்.ஜி. ஆருடன் ‘ஆனந்த ஜோதி’ என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தார். அதில் சிறுவன் கமலஹாஸன் நடித்திருந்தார்.

இயக்குநர் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தேவதாஸுக்கும் தேவிகாவுக்கும் காதல் பிறந்தது. 1972-ம் ஆண்டு வாழ்விலும் இணைந்தது இந்த ஜோடி. தேவதாஸ் - தேவிகா தம்பதியின் ஒரே மகள் நடிகை கனகா.

தனது கணவரை இயக்குநர் ஆவதற்காக ‘வெகுளிப்பெண்’ என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார் தேவிகா. அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க தேவிகாவுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் கடைசிவரை கதாநாயகியாகவே வாழ்ந்து கடந்த 2002-ல் மறைந்த தேவிகா, குடும்பப் பாங்கான நாடகத் தன்மை மிகுந்த கதைகளில் நடிப்புச்சுமை மிகுந்த கதாபாத்திரங்களைத் தன் தோள்களில் தாங்கிய சுமைதாங்கியாக வலம் வந்தார்.




Devika


ப‌ழம்பெரும் நடிகை தேவிகா! இவரை பற்றி சொல்ல‍ வேண்டும் என்றால், பெண்மைக்கே உரிய அச்ச‍ம், மடம், நாண‌ம் மற்றும் பயிற்பு போன்ற நான்கையும் ஒருங்கே பெற்றிருப்ப‍வர். இவர் நடிக்கும் போதும் சரி, பாடல்வரிகளுக்கு வாயசைத்து நடிக்கும்போதும் சரி, முதலில் நடிப்பை வெளிப்படுத்துவது இவரது கண்களே எனலாம்.

தேவிகாவின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் ஆகும். இவருக்கு இவரது பெற்றோர் வைத்த‍ பெயர் பிரமீளா. தனது சொந்தப் பெயரிலேயே, இரண்டாவது கதாநாயகியாக நடித்து வெற்றி பெற்ற‍ தெலுங்குப் படம், “நாட்டிய தாரா” என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்தது. அக் காலக்கட்ட‍த்தில் தேவிகாவையும் அவரது நடிப்பையும் பார்த்த‍வர்கள் “யார் இந்த அழகு தேவதை?” என்று கேட்டு வியந்தனர்.

தமிழ்ப்பட உலகில் நாட்டியப்பேரொளி பத்மினியும், நடிகையர் திலகம் சாவித்திரியும் கொடி கட்டிப்பறந்த காலக்கட்டத்தில், இவர்களுக்கு அடுத்த இடத்தைப் பெற்று, தமிழிலும், தெலுங்கிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங் களில் தேவிகா நடித்துள்ளார். இந்த சமயத்தில் நடிகை பானுமதி “மணமகன் தேவை” என்ற படத்தைத் தமிழில் தயாரித்தார். கதாநாயகன் சிவாஜிகணேசன். இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பிரமீளா (தேவிகா) நடித்தார்.



தமிழ்த்திரைப்பட‍த்தின் மீதுள்ள‍ காதலால் தமிழ்த்திரையிலும் புகழ் பெறவேண்டும் என்ற ஆசை பிரமீளா (தேவிகா)வுக்கு ஏற்பட்டது. அதற்காக, நல்ல நடிப்பு பயிற்சிபெற விரும்பி, அக்காலக் கட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய எஸ். வி.சகஸ்ரநாமத்தின் “சேவா ஸ்டேஜ் ” நாடகக்குழுவில் சேர்ந்தார். இந்த சமயத்தில் சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிகர் முத்துராமன் நடித்து வந்தார். பிரமீளா தன் பெயரை “தேவிகா” என்று மாற்றிக் கொண்டார். நாடகத்தில் நடித்ததன் மூலம் , தேவிகாவின் நடிப்பில் மெருகு ஏறியது. தமிழை அழகாகவும், திருத்தமாகவும் பேசக் கற்றுக்கொண்டார்.

1957-ல் எம்.ஏ.வேணு “முதலாளி” என்ற படத்தைத் தயாரித்தார். இதில் கதாநாயகன் எஸ். எஸ்.ராஜேந்திரன். கதாநாயகி தேவிகா. பல படங்களில் துணை டைரக்டராக இருந்த “முக்தா” சீனிவாசன் டைரக்டராக அறிமுகமானார். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, 1957 தீபாவளிக்கு வெளி வந்த இப்படம், பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களையும், பெரிய பேனர் படங்களையும் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றது. “ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே … ஆபோகி ராகத்தில் அமைந்த அந்த‌ பாடலை எஸ் .எஸ். ராஜேந்திரன் (ரி.எம். சவுந்தரராஜன் குரலில்) பாட தேவிகா வயல் வெளியில் நடந்து செல்வார். பாட்டும், இந்தக் காட்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதன் விளைவாக‌ தேவிகா நட்சத்திர அந்தஸ்தை எட்டிப்பிடித்தார்.



“பாவமன்னிப்பு”, “பந்த பாசம்”, “அன்னை இல்லம்”, “குலமகள் ராதை “, “ஆண்டவன் கட்டளை”, “கர்ணன்”, “முரடன் முத்து”, “சாந்தி”, “நீல வானம்”, “பழநி” , பலே பாண்டியா போ ன்ற குறிப்பிடும் படியான நிறைய படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஜோடியாக தேவிகா நடித்தார். . இவற்றில் நீல வானத்தில் தேவிகா நடிப்பு அற்புதம்.

“ஆண்டவன் கட்ட‍ளை” என்ற படத்தில் வரும் ஆழகே வா என்ற இந்தப்பாடல், இக்கதையின் ஓட்டத்திற்கும், அந்த கதாபாத்‍தி ரத்திற்கும் கட்டாயமாகத்  தேவைதான் . அதை அளவோடு தந்திருப்பார்கள். அதுவும் தேவிகா அவர்கள் பெரிதாக கவர்ச்சி ஏதும் காட்டாமல் தனது கண்களிலேயே உணர்ச்சிகளைக் காட்டி, சிவாஜி யை மட்டுமல்ல‍ அந்த பாடலைப் பார்க்கும் நம்மையும் சுண்டி இழுப் பார்.

இயக்குநர் ஸ்ரீதர் இயக்க‍த்தில் தேவிகா நடித்த “நெஞ்சில் ஓர் ஆலயம், “நெஞ்சம் மறப்பதில்லை” ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்கள் ஆகும்.

“நெஞ்சில் ஓர் ஆலயம், திரைப்படத்தில் சொன்ன‍து நீதானா என்ற பாடல் வரிகளுக்கு வாயசைத்து நடித்த‍தோடு அல்லாமல் ஏதோ அவரே சிதார் இசைக்கருவியை இசைப்பது போலவே தனது விரல்களால் மீட்டுவதுபோல் நடித்திருப்பது அற்புதம்.

காதல் மன்ன‍ன் ஜெமினிகணேசனுடன் தேவிகா ஜோடியாக நடித்த “சுமைதாங்கி” மிகச்சிறந்த படம். இதை ஸ்ரீதர் டைரக்ட் செய்தார். எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் தேவிகா நடித்த “அன்பு எங்கே?”, ” வானம்பாடி”, “மறக்க முடியுமா?” ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வை. ஏ.நாகேசுவரராவ், கே.பாலாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், கல்யாணகுமார் ஆகியோருடன் இணைந்து நடித்தவர் தேவிகா.

எம்.ஜி.ஆருடன் “ஆனந்தஜோதி” என்ற ஒரே ஒரு படத்தில் கதா நாயகியாக தேவிகா நடித்தார். பீம்சிங்கிடம் துணை டைரக்டராகப் பணியாற்றிய தேவதாசுக்கும், தேவிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் மணம் செய்து கொண்டனர். இவர்களுடைய ஒரே மகள் கனகா. “வெகுளிப்பெண்” என்ற படத்தைத் தேவிகா சொந்தமாகத் தயாரித்தார்.

இதை டைரக்ட் செய்தவர் தேவதாஸ். கதை– வசனம் கலைஞானம். மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த தேவிகாவுக்கும், தேவதாசுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளிலும் 150-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த தேவிகா, பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார்.

அம்மா, அக்கா போன்ற வேடங்களில் நடிக்கவில்லை. குடும்பப்பாங்கான படங்களில் நடிக்கப் பொருத்தமானவர் என்ற பெயரைத் தேவிகா பெற்றிருந்தார். சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தன் வீட்டில் தேவிகா வசித்து வந்தார். நெஞ்சு வலி காரணமாக, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தேவிகா 1-5-2002 அன்று மரணம் அடைந்தார். தேவிகாவின் மகள் கனகா  பல சினிமா படங்களில் நடித்தார். நடிகர் ராமராஜனுடன் அவர் நடித்த “கரகாட்டக்கார ன்” 52 வாரங்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்.




கிடைத்த சந்தர்ப்பத்தை இறுகப் பற்றிக் கொண்டு தனது அசாத்தியத் திறமையால், மேலும் பல படிகள் வேக வேகமாக முன்னேறிச் சென்றார் தேவிகா.

தேவிகாவின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு 1964, 1965 -1966ஆம் ஆண்டுகளில் தேவிகாவின் படங்கள் பெரும்பாலும் அவர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்ததாகவே அமைந்தது.

இடையில் இரு மாறுபட்ட படங்கள் வாழ்க்கைப்படகு மற்றும் கலைஞரின் மறக்க முடியுமா? அவை சிவாஜி இல்லாமலும், ஒப்பற்ற நடிப்பில் தேவிகா  சிறகு விரிக்க முடியும் என நிருபித்தன.

வாழ்க்கைப்படகு சினிமாவில் நடிக்க நேர்ந்தது குறித்து தேவிகா-
‘ஜெமினியில் வைஜெயந்திமாலா நாயகியாக நடிக்க ஜிந்தகி என்ற இந்தி சினிமாவைத் தயாரித்தார்கள்.  ஜிந்தகி பெரும் வெற்றி பெறவே  அதை ஒரே சமயத்தில் தமிழ்-தெலுங்கு இரண்டிலும் படமாக்க வாசன் திட்டமிட்டார்.

தெலுங்குக்கு என்.டி.ராமாராவ்-  தமிழுக்கு ஜெமினி கணேசன் நாயகர்கள் என முடிவானது.அந்தத் தருணத்தில் வாசன் சாரிடமிருந்து மீண்டும் எனக்கொரு வசந்த அழைப்பு வந்தது.
‘என்னோட இந்தப் படத்தில் இரண்டு மொழிக்கும் ஹீரோதான்  தனித் தனியே             தவிர, ஹீரோயின் நீ தாம்மா...’ என்றார். என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை ரொம்பவே என்னை உற்சாகப்படுத்தியது.

இந்தி, தெலுங்கில் ஓஹோவென்று ஓடிய ஜிந்தகி தமிழில் வாழ்க்கைப் படகு என்ற பெயரில் ரீமேக் ஆனது.

நேற்று வரை நீ யாரோ, சின்ன சின்னக் கண்ணனுக்கு, ஆயிரம் பெண்மை மலரட்டுமே, உன்னைத்தான் நான் அறிவேன், பழநி சந்தனவாடை... என்று,  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் படத்தில் ஒலித்த கண்ணதாசனின் அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை.

எல்லா அம்சங்களும் சிறப்பாக இருந்தும், சில நேரங்களின்  ஜனங்களின் முடிவைப் புரிந்து கொள்வது சிரமமாகி விடுகிறது. வாழ்க்கைப் படகு வசூலில் தோல்வி  அடைந்தது. நான் மனம் நொந்து போனேன்.

வாழ்க்கைப் படகு பிரமாதமாக வெற்றி பெறாவிட்டாலும், வைஜெயந்திமாலா அதில் எனது நடிப்பைப் பாராட்டி வாழ்த்தியதை  என்னால் என்றும் மறக்க முடியாது.

‘வாழ்க்கைப்படகு படத்தைப் பொறுத்தவரையில் தேவிகாவுக்கே முதல் பரிசு. தேவிகாவின் அடக்கமான நடிப்பில் நிறைவைக் காண்கிறோம்.

தன் உதிரத்தில் உதிர்ந்த குழந்தை  என்று உணராமல்,  கணவர் அதனுடன் கொஞ்சி  விளையாடுவதை மறைவிலிருந்து கண்டு, உளம் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் சொறிகிறாரே தேவிகா... அதுதான்  நடிப்பின் உச்சம்.’ என்று ‘குமுதம்’ என்னைப் பாராட்டி எழுதியது நினைவில் நிற்கிறது.

ஆனந்த விகடன் இதழில் மீனாட்சி அம்மாள்- ‘தேவிகா இந்த மாதிரி நடித்து நான் பார்த்ததே கிடையாது. பிரமாதமாக நடனம் ஆடியும் நடித்துமிருக்கிறார். எனக்கு ரொம்பப் பிடிச்சதுங்க...’என்று  சொல்வது போல் எழுதி இருந்தார்கள்.

‘என்னை நம்பி வாசன் சார் ஒப்படைத்த பணியை ஒழுங்காகச் செய்தேன்’ என்கிற மனநிறைவு ஏற்பட்டது. 

ஒரு மொழியில் வாசன் சார் எடுக்கிற சினிமா நல்லா ஓடினா, அந்தப் படத்தை மறுபடியும் ரீமேக் செய்யும் போது ஒரிஜினல் சினிமாவில் நடித்தவர்கள், என்ன மாதிரி காஸ்ட்யூம் பயன்படுத்தினாங்களோ அதே கலரில் டிரஸ் தந்து நடிக்கச் சொல்லுவார்.

வாழ்க்கைப் படகு அவுட்டோர்லயும் அப்படி எனக்கு நடந்தது. ஜோக் நீர் வீழ்ச்சில வைஜெயந்தி மாலா யூஸ் பண்ண அதே கலர் டிரஸ்ஸில் என்னை வைத்து ஒரு லாங் ஷாட் எடுத்தாங்க. நான் அதைப் போட்டுக்கிட்டு ஓடினப்ப வாசன் சார் மனைவி  பார்த்துருக்காங்க.

‘என்னது இது... வைஜெயந்தி மாலா ஓடின மாதிரி இருக்குன்னு’ சொல்லியிருக்காங்க. உடனே யூனிட்ல,  ‘இல்லம்மா தேவிகாதான் ஓடினாங்கன்னு’ பதில் சொன்னாங்களாம். ஆனா அவங்க அதை நம்பவே இல்லையாம். 

என்னை முதன் முதலா பார்த்தப்ப திருமதி பட்டம்மாள் வாசன், ’ என்னோட இன்னொரு பெண் நீ தாம்மா.’ என்று வாயாரச் சொன்னதை, அந்த ஆழமான அன்பை என்னால் எப்படி மறக்க முடியும்?

இப்ப ஜெமினி ஸ்டுடியோ இல்லை. எப்பவாச்சும் அந்தப் பக்கம் போனா, சட்டுன்னு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வரும். கூடவே அழுகையும் வந்துடும்.’ -தேவிகா.
-------------

‘சந்தானம்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியான சினிமா, தமிழில் கலைஞரின் ‘மறக்க முடியுமா?’ என்றானது. 1966 ஆகஸ்டு வெளியீடு.

மு. கருணாநிதியின் வசனத்தில் தேவிகா நடித்த ஒரே படம். அவருக்கு ஜோடி முத்துராமன்.

கருணாநிதி எழுதிய உரையாடல்கள்  தமிழகத்தில் தளிர்களுக்கும் மனப்பாடம்.  அவர் எழுதிய சினிமா பாடல்களைக் கேட்டால் சட்டென்று பட்டியலிட தி.மு.க.வினர் கூடத் திணறுவார்கள்.

உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நீங்காத இடம் பிடித்த கலைஞரின் ஒரே பாடல், மறக்க முடியுமா? படத்தில், பி. சுசிலாவின் குரலில், தேவிகா பாடுவதாக அமைந்த

’காகித ஓடம் கடல் அலை மீது’ மட்டுமே.
பூமி சுற்றும் வரை கலைஞர், தேவிகா, பி. சுசிலா மூவரையும் ஞாபகப்படுத்தும் சோக கீதம்! அந்தப் பாடலுக்கு ஒரு வரலாறே உண்டு.

மறக்க முடியுமா படத்தின் இசை அமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி. பாடல் எழுத வந்தவர் கவிஞர் மாயவநாதன்.பாடலாசிரியரிடம் ‘மாயவநாதா, மாயவநாதா, மாயவநாதா என்று மூன்று முறை கூறி, இதுதான் ட்யூன். பாட்டை எழுதுங்கள்’ என்றார் டி.கே. ராமமூர்த்தி.

திணறிப் போனார் இளம் கவிஞர். பிறகு கலைஞரிடம் போய் தன் இயலாமையைத் தெரிவித்தார். ‘ராமமூர்த்தியிடம் ட்யூன் கேட்டால் என் பெயரையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். அதை வைத்து எப்படிப் பாட்டு எழுதுவது...?’ என்றவாறே திரும்பிச் சென்றார்.

மு.கருணாநிதி தனக்கே உரிய புத்திசாலித்தனத்துடன் 1.மாயவநாதா - காகித ஓடம்,2. மாயவநாதா-கடல் அலை மீது, 3. மாயவநாதா- போவது போலே மூவரும் போவோம் என்று எழுதினார்.

சற்றும் எதிர்பாராமல் கலைஞர் தீட்டிய பாடல் அரசியலை  விடவும் அழியாப் புகழை அவருக்குத் தேடித் தந்தது.வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் அபலைப் பெண் தங்கம். பால்ய வயதில் அநாதையாகி, உடன் பிறந்தவர்களை தொலைத்தது மட்டுமல்லாது காதல் கணவனையும் இழந்த கைம்பெண்.

விதி அவளை  விலைமாதாக வீதியில் நிறுத்தி அரங்கேற்றம் செய்கிறது. தங்கம் தனது சகோதரி என்பதை அறியாது, குடிபோதையில் சிறு வயதில் ஆழ்மனத்தில் நன்கு பதிந்த‘காகித ஓடம் கடல் அலை மீது’ பாடலைப் பாடியவாறு, தம்பி மாணிக்கம் அக்காளிடமே இன்பம் துய்க்க வருகிறான். அதே ‘காகித ஓடம்’ பாடலால் தம்பியை இனம் கண்டு கொள்கிறாள் தங்கம்.

அவமானத்தில் அலறித் துடித்து, துயரத்தின் தாக்கம் தாளாமல் உயிரை  விடுகிறாள். மாணிக்கமாக நடித்தவர் எஸ்.எஸ். ஆர். தங்கமாக மாறுபட்டக் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் தன் அற்புத நடிப்பால் பொன்னாக ஓளி வீசினார் தேவிகா.

உவமைக் கவிஞர் சுரதா எழுதி, பி. சுசிலாவின் குரலில் ஒலித்த ‘வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ’ என்ற பாடலும் மறக்க முடியுமாவின் மற்றொரு சூப்பர்ஹிட் பாடல்.
---------
மறக்க முடியுமா படத்திற்குப் பிறகு தமிழில் தேவிகா நாயகியாக நடித்தவை 1968ல் தெய்வீக உறவு, தேவி  ஆகியன.

தெய்வீக உறவு படத்தில் தேவிகாவுக்கு சீதா-கீதா என இரட்டை வேடங்கள். அவருக்கு ஜோடி மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் தெய்வீக உறவு.

ஏ.கே. வேலன் தயாரித்து இயக்கிய படம் தேவி . தேவிகாவின் ராசியான ஹீரோ முத்துராமன் நடித்தும் ஓடவில்லை.

1968க்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாகத் தன் முழு கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார் தேவிகா. தமிழில் அவரது ஹீரோயின் எபிசோட் நிறைவு பெற்றது.
----------

இனி தேவிகாவின் இனிய அனுபவங்கள் உங்களுக்காக- 
‘குடும்பப் பாங்கான கேரக்டர்களை எனக்குத் தந்து ரசிகர்களிடம், குறிப்பாகத் தாய்மார்களிடம் என்னை நல்ல விதத்தில் வெளிப்படுத்திய டைரக்டர் ஏ. பீம்சிங். தனது படங்களில் தொடர்ந்து அதிக முறை பங்கேற்க வைத்து, என் திறமையை வளர்த்தவரும் அவரே.

நடிச்செல்லாம் காட்ட மாட்டார்.

‘இதுதாம்மா கதை. அதுல உன் கேரக்டர் இப்படியிருக்கணும்னு’ சொல்லி அப்பவே அந்தக் கதாபாத்திரம் மேலே நமக்கு ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தி விடுவார்.

பீம்சிங் இயக்கத்தில் ஆரம்பத்தில் நான் தோன்றிய சகோதரி, களத்தூர் கண்ணம்மா, சிவாஜியோடு நடித்த பாவமன்னிப்பு, பந்த பாசம், பழநி, சாந்தி, அத்தனையிலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்பவும் அவை ஜனங்களால் ரசிக்கப்படுகிறது.

பி.ஆர். பந்தலு ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல. சிறந்த டைரக்டரும் கூட. அவர் ஒரு முறை என்னிடம்,  ‘நடிப்புங்கறது விளையாட்டு மைதானத்துல பந்தாடற மாதிரிதான் தேவிகாம்மா...’ என்றார்.

ஒரு காட்சியைச் சொல்லிட்டு,  ‘இது தாம்மா சீன். நீ உன் திறமையைக் காட்டு. ஏதாவது சந்தேகம்னா சிவாஜி சார் உன்னை கைடு பண்ணுவார்.’ என்பார்.

தெலுங்கிலும் பந்தலு சாரின் ஏழெட்டு சினிமாக்களில் நான் நடித்திருக்கிறேன். கர்ணன், முரடன் முத்து போன்ற பத்மினி பிக்சர்ஸ் படைப்புகளில்  பட்டை தீட்டப்பட்ட என் நடிப்புக்கு, டைரக்டர் பந்தலுவின் அத்தகைய அணுகுமுறையும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

முரடன் முத்து படத்துக்குப் பிறகு நான் ரொம்பவே பிஸி  ஆகிட்டதால் பந்தலு சார் படங்களுக்கு அவர் கேட்ட தேதிகளில் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போயிற்று.

தெலுங்கில் என்னைப் பிரபலப்படுத்திய டைரக்டர்னா அவர் சி.எஸ். ராவ். நடிகை ராஜ சுலோசனாவின் கணவர்.

நான் நடித்து சுந்தர்லால் நஹாதா எடுத்த அத்தனை சினிமாக்களிலும் ராவ் சாரே டைரக்டர். நல்லா ஆக்ட் பண்ணி காட்டுவார். என்னோட அதிகமா டூயட் பாடிய  ஒரே ஹீரோ என்.டி. ராமாராவ். கணக்கு பார்த்தா 50 படங்களுக்கு மேலயே இருக்கும்.

தெலுங்கு செட்கள்ள அவரோட ஜோடியா நிச்சயம் நான் தான் நடிச்சிட்டிருப்பேன்ற பரிபூரண நம்பிக்கை என்.டி.ஆர். ரசிகர்களுக்கு உண்டு. அதனால தேவிகாகாரு எங்கே காணோம்னு என்.டி.ஆர். கிட்டயே உரிமையா கேட்பாங்களாம்.

படத் தொழிலில் அன்றாடம் நான் சந்திக்கிற பிரச்னைகளை எல்லாம் எப்போதுமே  வெளியில் சொல்ல மாட்டேன். எனக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வேன்.‘நான் நெருக்கடிகளில் சிக்கித் தவிப்பதை எப்படியோ  தெரிந்து கொண்டு, என்.டி. ராமாராவ் என்றுமே என்னால் மறக்க முடியாத பல உதவிகளைச் செய்திருக்கிறார்!’-- தேவிகா.
---------------

இயல்பாகவே பெண்களைப் புரிந்து கொள்வதில் ஆயிரமாயிரம் சிரமங்கள் உண்டு. அதிலும் தேவிகா என்கிற  ஒளி வீசும் திரைத் தாரகையை, எளிதில் உணர்ந்து கொண்டு நடிப்பு சொல்லித் தருவது,  எம்.ஜி.ஆர்.- சிவாஜியை இயக்கிய கே. சங்கர் போன்ற இமாலய இயக்குநர்களுக்கு அதிகபட்ச சவாலாக இருந்தது.

கே. சங்கரும் தேவிகாவும் தொடர்ந்து ஆடிப்பெருக்கு, ஆண்டவன் கட்டளை, அன்புக்கரங்கள் ஆகிய மூன்று படங்களில் பணியாற்றினார்கள். தேவிகாவுடனான கே. சங்கரின் தோழமை அனுபவம் -

‘ஆடிப்பெருக்கு சினிமாவில் தேவிகா நடிக்க வந்தார். முதல் பார்வையிலேயே எனக்கு தேவிகா பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் ஏற்படவில்லை.

ஏன் எப்படியடா... இவரை வைத்து...  என்று தயக்கமாகக் கூடத் தோன்றியது. ஆனால் ஆரம்ப தினத்தன்றே ஆளை எடை போடுவதில், எனக்கு அத்தனை சாமர்த்தியம் போதாது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நான் நினைத்தற்கு மாறாக, கட்டிய பசுவாக நடந்து கொண்டு தேவிகா என்னைத் திகைக்க வைத்தார்.

ஒரு காட்சியைப் படமாக்கும் முன் இருமுறை ஒத்திகை பார்த்துவிட்டு, பாதகமில்லை படமாக்குவோம் என்று அரை மனத்துடன் ஷாட் வைத்தால் ஹீரோயின் தேவிகா என்னை ஓகே சொல்லவே  விட மாட்டார்.

பூரணத் திருப்தி என்று நான் கூறுகிற வரையில், தனக்கே தனது நடிப்பு நிறைவு என்று தேவிகாவின் உள்ளத்தில் உறைத்தால்  மட்டுமே, அதுவும் கூடுதல் ரிகர்சல்களுக்குப் பிறகு ஒரு சீனை எடுக்கலாம் என்பார்.

காட்சி சிறப்பாக வர எத்தனை முறை வேண்டுமானாலும் அலுக்காமல் சலிக்காமல் ஒத்திகை பார்த்துக் கொள்வார். தேவிகாவின் நடிப்பைக் கண்டு நான் முகம் சுளித்ததே கிடையாது.

தொழிலில் நேர்த்தியாக நடந்து கொள்ளும் தேவிகாவுக்குக் குசும்பும் கூடப் பிறந்த ஒன்று. எனது கேமரா மேன் தம்பு. பாவம் அவர்...

அநேக தொல்லைகளுக்குப் பிறகு அவுட்டோரில் ஆங்கிள்,  லைட்டிங் எல்லாம் பார்த்து, ஒளிப்பதிவாளர் தம்பு கேமராவை ஓட  விடும் நேரம், தேவிகா டச் அப் என்பார்.

மீண்டும் அவரது எழில் கொஞ்சும் இதழ்களுக்கு ஒய்யாரமாக உதட்டுச் சாயம் பூசிக் கொள்வார். கண்களில் மை கரைந்து  விட்டதா என்று திரும்பவும் கண்ணாடி பார்ப்பார். ‘ஒன் மினிட் ப்ளீஸ்...’ என்று தேவிகா கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுகையில் எங்கள் கோபம் மறைந்தே போகும்.’ -கே. சங்கர்.  

‘பொள்ளாச்சி சிவலிங்கம் வீரப்பா’- வில்லன்களுக்கான இலக்கணத்துக்குத் தமிழ் சினிமா ல் பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்.

அருமையான குணச்சித்திர நடிகர். தேவிகா எம்.ஜி.ஆரோடும், சிவாஜியோடும் நடித்த  ஆனந்த ஜோதி, ஆண்டவன் கட்டளை படங்களின் தயாரிப்பாளர்.

‘தேவிகா எனக்கு ஒரு பாப்பா. நானும் அதுவும் முதலாளி- நடிகை மாதிரியா பழகறோம். தேவிகா நம்ம வீட்டுப் புள்ள மாதிரி. நினைச்சா வண்டியைத் தூக்கிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடும்.

ஃப்ரண்ட்ஷிப்காக ஷூட்டிங்  டிலே ஆனதா உண்டுங்களா...? அது அறவே கிடையாது. தேவிகா எங்க வீட்டுப் பெண். எங்க படத்துல உசுரைக் கொடுத்துத்தான் நடிக்கும். ஆண்டவன் கட்டளை அவுட்டோர்ல தேவிகா உசுருக்கே ஆபத்து ஏற்பட இருந்துச்சே...’  - பி.எஸ். வீரப்பா. 






‘மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி படம்னாலே நடிக்கறவங்கப் பயப்படுவாங்க. அதாவது தொழில்லப் பய பக்தியோட நடிப்புல முழு கவனத்தோடு செயல்படுவாங்க. அரட்டைக் கச்சேரிக்கெல்லாம் இடம் தராத கட்டுப்பாடுள்ள கம்பெனி அது. சேலத்துலருந்து ஆரவல்லி படத்துக்காக எனக்கு முதலில் வாய்ப்பு வந்தது. சான்ஸ் கிடைச்சும் நடிக்க முடியாமல் போனது. ’- தேவிகா.

ஏவி.எம். மின் சகோதரி, களத்தூர் கண்ணம்மா,- அஞ்சலிதேவியுடன் நாகநந்தினி, பங்காளிகள்- பானுமதியுடன் கானல் நீர், என தேவிகாவுக்குக் கிடைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களும் சிறிய மற்றும் வேம்ப் ரோல்களாகவே அமைந்தன.

ஹீரோயினுக்கு நிழலாக உப பாத்திரங்களிலேயே அவரை ஒப்பனை செய்ய வைத்தன.

செகன்ட் ஹீரோயினாகத் திரையில் தோன்றியத் திறமை மிக்க ஏராளமான நடிகைகள், முதலிடத்துக்கு வர முடியாமல் முடங்கி, பின் காணாமல் போவது இன்று வரை நீடிக்கிறது.

‘ஓ காதல் கண்மணி’ மூலம் மணிரத்னம் அறிமுகப்படுத்திய நித்யா மேனனுக்கும் இந்த நொடியில் அதே அச்சம்!

அத்தகைய அவல நிலையை ஆர்வத்தாலும், இடை விடாத முயற்சிகளாலும், கடினமான உழைப்பாலும், இயல்பான நடிப்பாற்றலாலும் உடைத்தெறிந்து உச்சம் தொட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியோர் அரிய சாதனைக்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் தேவிகா!

தேவிகாவுக்குப் பின்னர் தமிழில் முகம் காட்டியவர் சரோஜாதேவி. அவரைத் தென்னக சினிமாவின் முடி சூடா ராணியாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் தமிழர்கள்.

கோலிவுட்டில் யாரும் தேடி வராத சூழல். சரோவின் காற்று புகாத கேரள மண்ணில் பிரேம் நசீருடன், அரை டஜன் மலையாளச் சித்திரங்களில் ஜோடியாக நடித்தார் தேவிகா.

அப்போது தமிழில் தேவிகாவுக்குக் கை கொடுத்த ஒரே படம் மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே.

‘கொடுமைக்கார மாமியார் சி.கே.சரஸ்வதியிடம் சிக்கி அவதியுறும் மருமகளாக தேவிகா மிகையில்லாமல் செய்திருக்கிறார்.

கொடுமை வெள்ளம் தலைக்கு மேல் ஓடி விட்ட போது மாமியாரை ஒரு தள்ளு தள்ளி விட்டு, தொட்டிலில் இருந்து குழந்தையைத் தாவி எடுத்து அணைத்துக் கொள்ளும் கட்டம் ரசிக்கத்தக்கது. ’ என தேவிகாவின் நடிப்பை ‘குமுதம்’ மெச்சி எழுதியது.

தமிழகத்தில் அத்தனைப் பிரமாதமாக ஓடாத மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே தெலுங்கில் தேவிகா நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்றது.

ரேசுக்கா படத்துக்குப் பின்னர் மீண்டும் என்.டி. ராமாராவுடன் ஜோடி சேரும் அதிர்ஷ்டத்தை தேவிகாவுக்கு வழங்கியது ‘சபாஷ் ராமு’. மிகத் துணிச்சலுடன் அதில் பத்து வயது குழந்தைக்குத் தாயாராகத் தாலாட்டு பாடினார் இளம் ஹீரோயின் தேவிகா.

என்.டி.ஆர்.-தேவிகா இணையை ரசித்து மாபெரும் கூட்டம் கூடியது. சபாஷ் ராமு சக்கை போடு போட்டது.

அதே நேரத்தில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி ஜோடி தூள் கிளப்பி வந்தது. அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பை விடவும், ஆந்திராவில் என்.டி. ஆர்.-தேவிகா ஜதைக்கான மவுசும் வற்றாத வசூலும் நிச்சயம் அதிகம்!

தமிழில் தனக்கொருத் திருப்பம் ஏற்படாதா என்று ஏங்கிய தேவிகாவின் தலையெழுத்தை, 1961ல் வெளியான ‘பாவ மன்னிப்பு’ அடியோடு மாற்றி எழுதியது.

அதற்குக் காரணமான மும்மூர்த்திகள் முறையே 1.ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் 2. நடிகர் திலகம் 3. ஏ.பீம்சிங்.

சின்னதோ பெரியதோ முகம் சுளிக்காமல் தனக்கு வாய்த்த வேடங்களை தேவிகா, தயங்காமல் ஏற்றுக் கொண்டு நடிப்பில் பரிமளித்த விதம் அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

அம்மூவரும் பங்கேற்ற பாவமன்னிப்பு மெகா பட்ஜெட் படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக முதன் முதலாக நடிக்கும் அபூர்வ வாய்ப்பு தேவிகாவைத் தேடி வந்தது.

‘பிரசிடென்ட் பஞ்சாட்சரம்’ நாடகம் ரசிக ரஞ்சனி சபாவில் நடந்தது. அதில் தேவிகா நடித்ததைப் பார்த்து விட்டு, மொத்தம் மூன்று சினிமாவுக்கு ஒப்பந்தங்கள் போட்டோம்.

1.இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்குச் ‘சகோதரி’ 2. மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்குக் ‘களத்தூர் கண்ணம்மா’ 3. நாலாயிரத்து ஐநூறு ரூபாய் ஊதியத்துக்கு ‘பாவ மன்னிப்பு’.

பாவ மன்னிப்பு படத்துக்கு அப்புறம் தேவிகாவுக்கு ஒரு பெரிய பிரேக் கிடைத்தது.’ - ஏவி.எம். சரவணன்.

‘சாவித்ரி பாராட்டுகிறார் போல் இல்லை. மின்ன வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு ஒளியூட்டியிருப்பது தேவிகாவுக்குத்தான். ’என்று, பாவ மன்னிப்பு திரை விமரிசனத்தில் குமுதம் வெளிப்படை யாகவே போட்டு உடைத்தது.

சிவாஜிக்கு இணையாக அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க இன்னொரு நாயகி கிடைத்து விட்டார் என்று பாவ மன்னிப்பின் மகத்தான வெற்றி நிருபித்தது.

பாவ மன்னிப்பு சென்னை சாந்தி தியேட்டரில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் சினிமா.

பாவ மன்னிப்பு படப் பாடல்களாக கண்ணதாசன் - எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி சேர்ந்திசையில் எட்டுத் தேன் கிண்ணங்கள் இன்று வரை ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்கின்றன. அவற்றில் எது மிகச் சிறந்தது என்று போட்டியும் நடத்தப்பட்டது.

பாவ மன்னிப்பில் சிவாஜி-தேவிகா பங்கேற்ற பாலிருக்கும் பழமிருக்கும் டூயட் பாடலும் அதற்கான காட்சியும் என்றுமே மறக்க முடியாதவை.

சாவித்ரியும் தேவிகாவும் பங்கேற்ற அத்தான் என் அத்தான்’ பாடலில் பி. சுசிலாவின் குயில் குரலில் தேவிகாவின் ஆகாய விழிகள் இரண்டும், புறாக்கள் இடம் மாறுவதைப் போல் நகர்வது நெஞ்சில் நிலைத்து விட்ட ஒன்று!

1961ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த படமாக இரண்டாவது பரிசை ஜனாதிபதியிடமிருந்து தட்டி வந்தது பாவ மன்னிப்பு. அத்தகைய அரிய விருதை இன்று வரை அடுத்து ஒரு தமிழ்ப்படமும் பெறவில்லை என்பது அவசியம் குறிப்பிடத்தக்கது.

பாவ மன்னிப்புக்குப் பிறகு தேவிகாவின் புகழைச் சிகரத்தில் ஏற்றி வைத்தது நெஞ்சில் ஓர் ஆலயம். அதில் ஆரம்பத்தில் தேவிகா கிடையாது.

சீதா என்கிறப் புனிதமான வேடத்துக்கு டைரக்டர் ஸ்ரீதரின் முதல் சாய்ஸ் விஜயகுமாரி. ஏற்கனவே ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு மூலம் தாய்க்குலங்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நாயகியாக விஜயகுமாரி புகழ் பெற்றிருந்தார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் வெளி வந்த அதே 1962ல், ஸ்ரீதரின் போலீஸ்காரன் மகள் படத்தில் டைட்டில் ரோலில் விஜயகுமாரி மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்.

பிறகு ஏன் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் விஜயகுமாரி இல்லை? அதற்கானப் பதிலை டைரக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 





தேவிகா மிக அதிகப் படங்களில் நடித்த ஆண்டு 1963. அவ்வருடத்தில் அவர் நடித்தவை மக்களின் நினைவில் நீங்காத இடம் பிடித்தன.

‘ஷீஷ் பரிஷ்’ என்ற பெயரில் வெளியாகி தோல்வி  அடைந்த வங்காள சினிமாவின் தழுவல்- கண்ணதாசனின் வானம்பாடி. தமிழில் வெற்றி பெற்ற ஒரே காரணம் தேவிகா!

1963  மார்ச் 9ல் திரைக்கு வந்தது. வானம்பாடியை உருவாக்கியவர் ஒளிப்பதிவாளர்- டைரக்டர் ஜி.ஆர். நாதன்.

‘காத்திருந்த கண்கள்’- சாவித்ரிக்குப் பிறகு, இரட்டை வேடத்தில் இறக்கை கட்டிப் பறக்கும் வாய்ப்பு வானம்பாடியில் தேவிகாவுக்கு வாய்த்தது.
ஓ.ஏ. கே. தேவரைச் சுட்டு விட்டு, ரயிலில் எழுந்து தற்கொலைக்கு முயலும் மீனாவாகவும், கணவர் ஆர்.எஸ். மனோகரின் கொடுமை தாளாமல் வீட்டை விட்டு வெளியேறி, ‘பாடகி கவுசல்யா’ என்ற பெயரில் வாழும்  ‘அபலை சுமதி’யாகவும் மாறுபட்ட இரு ரோல்கள் தேவிகாவுக்கு.

சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் ஆகிய  சொந்தப்படங்களின் படு தோல்வியால், அன்றாடம் கடன் தொல்லையில் சிக்கித் தத்தளித்தார் கவிஞர் கண்ணதாசன். இடையில் கோவை செழியனுடன் இணைந்து சுமைதாங்கி படத்தைத் தொடங்கினார் கவிஞர். ஸ்ரீதரின் சுமை தாங்கி  கண்ணதாசனுக்கு நல்ல வருவாயைத் தேடித் தந்தது. ஆனாலும் அசல் மலையளவு பாக்கி இருப்பதாக பைனான்ஸியர்கள் வழக்கு போட்டனர்.

கோர்ட் படிகளில்  ஏறிய நேரம் போக, கவிஞர் தயாரித்த படம் வானம்பாடி.
சின்னப்பாதேவர் வானம்பாடியைப்  பார்த்துப் பாராட்டியதோடு நில்லாமல்,  மிக நல்ல  விலைக்கும் விற்றுக் கொடுத்தார்.

வானம்பாடி வெற்றிச் சிறகுகளை  விரித்துப் பறந்ததில் கண்ணதாசனின் துக்கம் தீர்ந்தது.

‘டூயல் ரோலில் திறம்பட சமாளித்திருக்கிறார் தேவிகா. மீனாவின் பயந்த தோற்றத்தில் அவர் முகத்தில்  கண்ட கலவரத்துக்கும், கவுசல்யாவின் அலட்சிய பாவத்தில்  காணும் செருக்குக்கும் எத்தனை வேறுபாடு!
நீதிமன்றத்தில் தனக்கு வாழ்வளிக்குமாறு தாய் மாமனை தேவிகா கெஞ்சுவது உருக்கமாக இருக்கிறது.’
என்று தேவிகாவின் இரட்டை வேட நடிப்புக்குக் கட்டியம் கூறியது கல்கி.

‘ உணர்ச்சிகளை  அமரிக்கையாக அதே சமயம்  முழுமையாகச் சித்தரிக்கும்  மென்மையான முகம்  தேவிகாவுக்கு அமைந்திருப்பதால், நடிப்பு தேவிகாவுக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கிறது!’ என்று குமுதம் தன்  விமர்சனத்தில் வியந்தது.

கே. . மகாதேவன் - கண்ணதாசன் கூட்டணியில் வானம்பாடியில் ஒலித்த கங்கைக்கரை தோட்டம், தூக்கணாங்குருவிக் கூடு, ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள், கடவுள் மனிதனாக, ஏட்டில் எழுதி வைத்தேன், யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம், நில் கவனி புறப்படு என ஒவ்வொரு பாடலும் பாதாம் அல்வாவாக இனித்தன.

எப்போது திரையிட்டாலும் அரங்கம் வழியும் கறுப்பு வெள்ளைப் படங்களில் ஒன்றாக வானம்பாடி சிரஞ்சீ த்துவம் பெற்றது.

வானம்பாடியின்  மற்றொரு சிறப்பம்சம் அதுவே டி.ஆர். ராஜகுமாரி நடித்த கடைசி சினிமா!

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து நடிக்கும் அரிய சந்தர்ப்பமும் தேவிகாவுக்குக் கிடைத்தது.

1963 கோடை  விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட ஜூன் மாதம். சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். எனத் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களுடன் தேவிகா ஜோடியாக நடித்த, மூன்று படங்களும் வரிசையாக ரிலிஸ் ஆகியிருந்தன.

 சென்னை மவுண்ட் ரோடு கெயிட்டி தியேட்டரில் குலமகள் ராதை. அருகில் காசினோ ல் இதயத்தில் நீ, சற்றுத் தள்ளி பாரகன் டாக்கீஸில் ஆனந்த ஜோதி.
தேவிகாவின் நட்சத்திர வாழ்வில் அது ஓர் அரிய நிகழ்வு!

வகுப்பைக் கட் செய்து  விட்டு, தேவிகாவின் புதுப்படங்களைத் திரையில் காண க்யூவில் முண்டியடித்தன அரும்பு மீசைகள்.

‘சந்திரலேகா’- கால சர்க்கஸ்காரி டி.ஆர். ராஜகுமாரிக்குப் பின்னர், குலமகள் ராதையில் நடிகர் திலகத்துடன்  ‘பார்’விளையாடும்  வித்தியாசமான வேடம் தேவிகாவுக்கு. 

லீலா என்கிற கதாபாத்திரத்தில் காதல் நாயகனோடு கட்டுக் கோப்பாக, குடித்தனம் நடத்தத் துடிக்கும் இளம் சர்க்கஸ்காரியின் ஏக்கத்தை, அருமையாகப் பிரதி பலித்துக் காட்டினார் தேவிகா. போட்டிக்கு சரோஜாதேவி வேறு.
அகிலனின் ‘வாழ்வு எங்கே ?’ புதினமே  ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் குலமகள் ராதை. ‘நீண்ட காலத் தயாரிப்பில் சிக்கும் படங்கள் கண்டிப்பாகத் தோல்வியையே தழுவும்’ என்கிற எழுதப்படாத விதியை குலமகள் ராதை அடியோடு மாற்றிக் காட்டியது.

சினிமா சின்னத் திரைக்குள் அடங்கும் வரையில் எப்போது வெளியானாலும், வசூலை வாரிக்குவிக்கும் வெற்றிச் சித்திரமாக ‘குலமகள் ராதை’ கொலுவிருந்தது.

தேவிகா சர்க்கஸ் வலையில்  விழுந்து ஆடிப்பாடி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், கள்ளமலர்ச் சிரிப்பிலே,’ உள்ளிட்டப் பாடல்கள்  தேவிகாவின் இயல்பான கவர்ச்சியைத் திரையில் கூடுதலாகக் காட்டின.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும்- தேவிகாவும் ஜோடியாக  நடித்த ஒரே படம் என்கிற பெருமைக்குரியது ஆனந்தஜோதி. பி.எஸ். வீரப்பாவின் தயாரிப்பு.

பொதுவாக எம்.ஜி.ஆர். பட டைட்டில்கள் எல்லாமே நாயகன் புகழ் பாடுவதாகவே அமையும். அகிலனின் ‘கயல்விழி’ நாவலை ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனாக’ திரையில் மாற்றி இயக்கியவர் மக்கள் திலகம்.

முதலும் கடைசியுமாக நாயகன் - நாயகி இருவரது பெயரையும் இணைத்துப் பெயர் சூட்டப்பட்ட ஒரே எம்.ஜி.ஆர். படம் ஆனந்தஜோதி!

தேவிகாவின் சோக கீதங்கள் ‘நினைக்கத் தெரிந்த மனமே, காலமகள் கண் திறப்பாள் செல்லையா’ இரண்டும் சென்ற நூற்றாண்டில் நேயர்களால் மிக அதிக முறை விரும்பி கேட்கப்பட்டவை.

எம்.ஜி.ஆர். க ஞர் மணிமாறனாகவும் டிரில் மாஸ்டர் ஆனந்தனாகவும் தோன்றினார். நடிப்பில் ‘ஜோதி’யாக ஒளி வீசிய தேவிகாவும்- வாத்தியாரும் இடம் பெற்ற ’ பனி இல்லாத மார்கழியா, பொய்யிலே பிறந்து... இரண்டு டூயட்களும் இன்றைக்கும் நேயர்  விருப்பத்தில் தவறாமல் ஒலிக்கின்றன.
ஆனந்தஜோதி அகன்றதொரு வசூல் வெளிச்சம் பரப்பியும், தேவிகாவுடன் தொடர்ந்து டூயட் பாடுவதை எம்.ஜி.ஆர். ஏனோ ஒரே படத்துடன் நிறுத்திக் கொண்டார்.

ஸ்ரீதர்-தேவிகா காம்பினேஷனில்  அடுத்த சினிமா நெஞ்சம் மறப்பதில்லை. தமிழில் வெளியான முதல்  பூர்வ ஜென்ம கதை. வெற்றிகரமாக ஓடியது.
தேவிகாவுக்கு கண்ணம்மா,  ஜெயா என்று இரு வேடங்கள். முதல் ஜென்மத்தில் ஜமீனில் வேலை செய்யும் கூலிக்காரப் பெண் கண்ணம்மாவாக தேவிகா!
ஜமீன்தார் எம்.என். நம்பியாரின் மகன் கல்யாண்குமாரை, அவர் ஜமீன் பரம்பரை என அறியாமல் காதலித்து, ஜமீன்தாரால் கொலை செய்யப்படும் பரிதாபத்துக்குரிய வேடம்.

தேவிகா பாடி நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ சோக கீதம்,  தமிழ் சினிமா படப் பாடல்களில் தனி வரலாறு படைத்தது. பி. சுசிலாவின் புகழை கின்னஸில் எழுதியது.
----------
தேவிகாவுக்கு மாபெரும் நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிய ஸ்ரீதர் பற்றி தேவிகா கூறியவை-

‘ ஜெமினியின் கரானா இந்தி சினிமா பார்த்துட்டு டைரக்டர் ஸ்ரீதர் எங்க வீட்டுக்கு வந்து நெஞ்சில் ஓர் ஆலயம் கதை சொன்னார். அப்ப ரிலீசாயிருந்த அவரோட தேன் நிலவு சரியாப் போகலை. கதை எனக்கு ரொம்பப் பிடிச்சது. சரி சார் நானே நடிக்கிறேன்னு ஸ்ரீதர் சாரிடம் தெரிவித்தேன்.

மஞ்சளும் குங்குமமும் குலமகளின் இரு கண்கள். பெண்ணாகப் பிறந்திருந்தும் கூட அதை நான் புரிந்து கொள்ளப் பல ஆண்டுகள் ஆகியது.

மஞ்சள் குங்குமத்தின் மங்கல மகிமையை நான் உணர்ந்து கொள்ளக் காரணமானவர்  டைரக்டர் ஸ்ரீதர்.

சிறு வயது முதல் எப்போதும் நான் குங்குமம் இட்டுக் கொள்வதில்லை. சேவா ஸ்டேஜில்  நடித்துக் கொண்டிருக்கும் போது, எஸ்.வி . சகஸ்ரநாமம் என் முகத்தை உற்று கவனித்துவி ட்டு, ‘உன் நெற்றியில் சாணத்தை எடுத்துப் பூசுகிறேன். அப்போது தான் நீ குங்குமம் இடுவாய்...’ என்பார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் எனது கணவராக  நடிக்கும் முத்துராமனின் பெயரில், அர்ச்சனை செய்து குங்குமம் பெற்று வருமாறு, குட்டி பத்மினியின் அம்மாவிடம் நான் கேட்பதாக ஒரு காட்சி வரும்.

அப்போது டைரக்டர் ஸ்ரீதரின் இந்து மதம் குறித்த நம்பிக்கையைப் பார்த்து நான் மனத்துக்குள் சிரித்தேன்.
‘நீ கிருத்துவப் பெண்ணா...’ என்று கூடப் பலர் என்னிடம் கேலியாகக் கேட்டது உண்டு. திருமணத்துக்குப் பிறகு என் போக்கு அடியோடு மாறியது. ஒரு நாள்  நெற்றித் திலகம் என் கைபட்டுக் கலைந்தது தெரிந்ததும் நான் துடிதுடித்துப் போனேன்.











No comments:

Post a Comment