Tuesday 19 June 2018

NADER SHAH ,MURDER KING , BORN 1688 AUGUST 6 - 1747 JUNE 19



NADER SHAH ,MURDER KING ,
BORN 1688 AUGUST 6 - 1747 JUNE 19


நாதிர் ஷா (Nader Shah) ஈரானை ஆட்சி செய்த ஓர் அரசர். இவர் பிறந்தது 1688 என்றும் [1] ஆகஸ்டு மாதம் 6 ஆம் தியதி 1688

இவர் ஜூன் 19 , 1747 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரை பெர்ஸியாவின் நெப்போலியன் அல்லது இரண்டாம் அலெக்சாந்தர் என்று சில வரலாற்றாசிரியர்கள் அழைக்கின்றனர்..[5] நாதிர்ஷா வடக்கு பெர்ஸியாவைச் சேர்ந்த துர்கிக் அஃப்ஷர் (Turkic Afshar) என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்.[6]

இந்தியா மீதான படையெடுப்பு[தொகு]

1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றிய நாதிர் ஷா சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, தில்லி மொகலாய மன்னர் முகமது ஷா வின் படைக்கும், நாதிர் ஷாவின் படைக்கும் 1739 ல் அரியானாவின் கர்ணல் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன.

முகமது ஷாவின் மகளை, தன் மகனுக்கு திருமணம் செய்வித்தான். [7]
அவுரங்கசீப்பிற்குப் பின்னால் 1738-ஆம் வருடம் இந்தியாவின் மீது படையெடுத்த பாரசீகனான நாதிர் ஷா, டெல்லியில் இரண்டு இலட்சம் இந்தியர்களைக் கொன்றதுடன், ஏராளமான செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றான். அதில் ஆயிரக்கணக்கான இந்திய இளம் பெண்களும் அடக்கம்.

நாதிர் ஷாவின் தாக்குதலைக் குறித்துக் கூறும் ஃப்ரெஞ்சு வரலாற்றாசிரியரான அலெய்ன்-டானெயல் (Alain Danielou), "...பாரசீகப் படைகள் டெல்லியில் ஒரு வார காலத்திற்கும் மேலாக கொலை வெறித் தாண்டவமாடினர். அங்கிருந்த அத்தனை கட்டடங்களையும் இடித்துத் தள்ளியதுடன், கிராமப்புறங்களையும், வயல்வெளிகளையும் அழித்தனர்.

இந்தப் போரில் தப்பிப் பிழைப்பவர் எவருக்கும் உண்ண எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக. அற்புதமான கலைப் பொருட்களையும், குதிரைகள் இவற்றுடன் கோகினூர் வைரத்தையும், மயிலாசனத்தையும், இன்றைய கணக்கில் ஏறக்குறைய 150 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தையும் நாதிர் ஷா தன்னுடன் கொண்டு சென்றதாக" கூறுகிறார்.

நாதிர் ஷா கொண்டு சென்ற கணக்கிலடங்காத மிகப் பெரும் கொள்ளையின் காரணமாக "அவன் ஆட்சி புரிந்த பாரசீகத்தில் (இரானில்) மூன்று வருடங்களுக்கு பொது மக்களிடமிருந்து வரி வசூலிப்பதை நாதிர் ஷா நிறுத்தி வைத்தான்" என்று மேலும் சொல்கிறார் அலெய்ன்-டானெயல். அப்படியானால் எத்தனை பெரும் செல்வம் நம் கையை விட்டுப் போயிருக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள்!

இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இந்து, பவுத்த, ஜைன, சீக்கிய மதங்களுக்கும், அவர்களின் வழிப்பாட்டி டங்களுக்கும் நிகழ்த்தப்பட்ட பேரழிவிற்கிணையாக உலகின் வேறெங்கிலும் இன்றுவரை நடக்கவில்லை. கோவில்களும், சிலகளும் இடிக்கப்பட்டு அதன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், கோவிலின் இடிபாடுகள் புதிய மசூதிகள் கட்டுவதற்கு உபயோகிக்கப் பட்டன.

இன்றைய டெல்லியின் க்வாட்-உல்-இஸ்லாம் (Kwat-ul-Islam) மசூதியானது அந்தப் பகுதியில் இவ்வாறு இடிக்கப்பட்ட பதினேழு இந்துக் கோவில்களின் இடிபாடுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இந்து ஆலயப் பூசாரிகளும், பிட்சுக்களும், பொறுப்பாளர்களும் வென்ற இஸ்லாமியர்களால் உடனடியாகக் கொல்லப்ப டுவார்கள். அமிர்-குஸ்ரு, சுல்தான் ஃப்ரோஸ் துக்ளக் போன்றவர்கள் இதுபோல இந்து பூசாரிகள்/ஆலய அர்ச்சகர்கள் கொல்லப்படுவதைக் குறித்து ஒரு விதமான குரூர மகிழ்ச்சியுடன் குறிப்புகள் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு எழுதியிருப்பவை அத்தனையும் இஸ்லாமிய வரலாற்றாசிர்களால், இஸ்லாமிய ஆக்கிரமிப்பா ளர்களால் எழுதப்பட்ட குறிப்புகள். இந்துக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான துன்பத்தைச் சுமத்து வதினைக் குறித்து அத்தனை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் மட்டுமே அக்குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன என்பதனையும் நாம் நினைவில் கொல்ல வேண்டும்.

இஸ்லாம் காஃபிர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. நம்பிக்கையாளர்களும் அப்படியே. இந்தக் கேவல மனோபாவம் குறித்து எழுதப்புகும் வரலாற்றாசிரியர் ஃப்ரான்ஸிஸ் வாட்சன்,

"...சிலை வழிபாடு செய்யும் இந்துக் காஃபிர்களுக்கு எதிராக அவர்களின் மனமெங்கும் வெறியும், விஷமும் நிறைந்தவர்களாக இஸ்லாமியர்கள் இந்தியாவின் பழமையான பெரும் ஆலயங்களை இடித்துத் தகர்த்தனர். இந்த வரலாற்று உண்மை அவர்களுடன் சென்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் பயணிகளால் துல்லியமாக எழுதி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில ஆலயங்கள் முழுமையாக உடக்கப்படாமல் அரைகுறையாக விடப்பட்டன. ஆனால் ஏராளமான பழம் இந்து ஆலயங்கள் - ஆயிரக்கணக்கானவை - துண்டு, துண்டாக உடைக்கப்பட்டன.

இந்தியாவின் பழமையான நகரங்களான வாரணாசி, மதுரா, உஜ்ஜைன், மஹெஸ்வர், ஜ்வாலமுகி மற்றும் துவாரகாவில் அமைந்திருந்த மிகப் பழமையான கோவில்களில் ஒன்று கூட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து தப்பவில்லை."

மூன்று இனங்களைப் பற்றிப் பார்த்தோம். மற்றொரு இனமான உஸ்பெக் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஆப்கானிய மக்கள் தொகையில் 6 சதவீதம் உள்ளவர்கள். உஸ்பெக்குகள் இந்துகுஷ் மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் அதிகமாக வசிக்கிறார்கள். துருக்கியர்களைப் போல காட்சியளிக்கிறார்கள். பிற ஆப்கானிய இனத்தவர்களைவிட அதிக வெளுப்பாக காட்சியளிக்கிறார்கள். இவர்களும் மங்கோலிய மூதாதையர்களைக் கொண்டவர்கள்.

ஆனால் இப்போதைக்கு எந்த ஆப்கானியரின் உடல் பாகங் களைக் கொண்டும் அவரது இனத்தைக் கண்டுபிடிப்பது சரியல்ல. காரணம் காலப் போக்கில் நடைபெற்ற கலப்புத் திருமணங்கள். ஆனால் தலைப்பாகைகள் இன்னமும் இந்த இனங்களை தனிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பல வட்டாரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு உள்ளூர் தலைவர். ஆங்கிலத்தில் Warlords. தாதாக்கள் என்று குறிப்பிட்டாலும் தப்பில்லை. இவர்களை ஆப்கானிஸ்தானின் கலவர ஊற்றுகள் எனலாம்.

1747 இதுதான் நவீன ஆப்கானிஸ்தான் உருவான ஆண்டு. இதற்கு மன்னராக முதன் முதலில் பொறுப்பேற்றவர் அகமது ஷா. அப்படி என்ன இவருக்கு சிறப்பு? காரணம் உண்டு.

இந்தியாவின் செல்வங்களை (மயிலாசனம், கோஹினூர் போன்றவை) கொள்ளயடித்துச் சென்றவர் பாரசீக (இன்றைய இரான்) மன்னர் நாதிர் ஷா. அவர் கொலை செய்யப்பட்ட வுடன் அவரது ராணுவ அதிகாரி யாக இருந்த அகமது ஷா பாரசீகத்திலிருந்து வெளியேறி னார், (ஆப்கானிஸ் தானிலுள்ள) காந்தஹாரை அடைந்தார். கூடவே கோஹினூர் உட்பட மதிப்புமிக்க செல்வங்களை அள்ளிச் சென்றார்.

யாரை அடுத்த காந்தஹார் பகுதியின் பஷ்டூன் இனத்தலை வராகத் தேர்ந்தெடுப்பது என்று அந்தக் குழு யோசித்தது. அனைவரும் தேர்ந்தெடுத்தது அகமது ஷாவைத்தான். திறமையான போர்வீரர். ஆயிரக் கணக்கான குதிரைப்படை வீரர்கள் இவரிடம். கொள்ளையடித்த சொத்துகள் வேறு. பிறகென்ன? தலைவரானார்.

அகமது கான் என்று இருந்த தன் பெயரை அகமது ஷா என்று மாற்றிக் கொண்டார் (ஆப்கானிஸ் தானில் மன்னர்களை ஷா என்று அழைப்பது வழக்கம்). ‘’இனி பாரசீகத்துக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆப்கானிஸ்தான் தனி நாடு’’ என்று முழக்கம் செய்தார். பின்னர் கஜினி பகுதியை வசப்படுத்தினார். காபூலை தன் வசம் கொண்டு வந்தார். சிந்து மாகாணமும், சிந்துநதிக்கு மேற்கே இருந்த வட இந்திய பரப்புகளும் தானாகவே அவர் கைக்கு வந்து சேர்ந்தன. (தாக்குதலிலிருந்து தப்புவதற்காக அளிக்கப்பட்ட தானம்).

நாதிர்ஷாவின் பேரன் ஷாருக்கான். ஹெராத் நகரை இவன் ஆண்டு கொண்டிருந்தான். அவனுடனும் போர் தொடுத்தார் அகமது ஷா. ஒருவருட முற்றுகை. பல உயிர்கள் பிரிந்தன. இறுதி வெற்றி அகமது ஷாவுக்குதான். துருக்மென், தஜிக், ஹசாரா, உஸ்பெக் ஆகிய பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களின் பிரதேசங்களும் அகமது ஷாவின் ஆளுகைக்கு உட்பட்டது. (இப்போது புரிகிறதா இந்த இனங்களின் தொடர் விரோதத்தின் வேர் எது என்று?).

அகமது ஷாவின் பார்வை அடுத்ததாக இந்தியாவின் பக்கம் திரும்பியது. பலமுறை படையெடுத்தார். காஷ்மீர், பஞ்சாப் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார். பின்னர் டில்லியை முற்றுகையிட்டார். ஏற்கனவே அங்கு ஒளரங்கசீப் காலம் முடி வடைந்து மொகலாயப் பேரரசு தேய்பிறையில் இருந்தது. ‘‘என் தலைமையை அங்கீகரியுங்கள் உங்கள் ஆட்சியைத் தொடருங்கள்’’ என்று அவர் கூறியதை மொகலாயர்கள் ஏற்றுக் கொண்டனர்.

காலப்போக்கில் மராத்தியர்கள் தங்கள் ஆட்சியை பூனாவில் நிலை நிறுத்திக் கொண்டு வடக்கிலும் பரப்பத் தொடங்கினார்கள். அகமது ஷா 1757ல் மராத்தியர்களுடன் போரிட்டார். ஆனால் மராத்திய சேனை வென்றது. ‘’மராத்தியர்கள் மீதான இஸ்லாமியர்களின் புனிதப் போர் தொடங்கியது’’ என்று அலறினார் அகமது ஷா. மீண்டும் 1761ல் பானிபட் ஒரு கடும் போரைச் சந்தித்தது. இம்முறை பஷ்டூன்கள் மட்டுமல் லாமல் பிற இஸ்லாமியப் பிரிவினரும் அகமது ஷாவிற்குப் பின்னால் அணிவகுத்தார்கள். மராத்திய ராணுவம் தோல்வி கண்டது.

ஆனால் சீக்கியர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். பஞ்சாபின் பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். அகமது ஷா உக்கிரம் அடைந்தார். சீக்கியர்களின் பகுதியாக இருந்த லாகூரை சின்னா பின்னமாக்கினார். அமிர்தசரஸில் தங்கியிருந்த சீக்கியர்களைக் கொன்று குவித் தார். அவர்கள் புனிதத்தலங் களில் பசுவின் ரத்தத்தை ஊற்றச் செய்தார். கொடுங்கோன்மையின் சிகரமாகவே மாறினார். மீண்டும் காந்தஹாருக்குத் திரும்பினார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் பஞ்சாபை மீண்டும் சீக்கியர்கள் மீட்டுவிட்டனர்.

காந்தஹார்தான் தன் சாம்ராஜ் யத்தின் தலைநகர் என்பதில் மிக நிச்சயமாக இருந்தார் அகமது ஷா. ஆனால் அவர் இறந்து மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. காபூலை அந்த ராஜ்யத்தின் தலைநகராகத் தேர்ந்தெடுத்தனர் அவரது வாரிசுகள். அகமது ஷா இறந்ததும் அவரது இரண்டாவது மகன் தைமூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் இறந்தவுடன் வாரிசு உரிமை போர் உச்சத்தை அடைந்தது. தைமூரின் அத்தனை மகன்களும் அரச பதவிக்கு ஆசைப்பட்டார்கள். இவர்களில் தன் பலம் காரணமாக ஐந்தாவது மகன் ஜமான் ஷா ஆப்கானிஸ்தானின் மன்னரானார். தனக்கு உதவியாக இருந்த பயின்தா கான் என்பவர் தனக்குத் துரோகம் செய்வதாக அறிந்து கொண்டவுடன் அவரைக் கொன்றார் ஜமான்.

பயின்தாகனின் மகன் இரானுக்குத் தப்பியோடி அங்கு வசித்த மகமூது ஷாவுக்கு ஆதரவு தெரிவித்தான். இந்த மகமூது, ஜமானின் அண்ணன்தான். அவன் மீண்டும் படையெடுத்து தன் தம்பியைத் தோற்கடித்து மன்னன் ஆனான். சீக்கிரமே அவனது பிற சகோதரர்கள் அவனைப் பதவியிலிருந்து கீழிறக்கினர். ஷுஜா ஷா என்ற தம்பி ஆட்சியைக் கைப்பற்றினான்.

1809 ஜூன் 6 அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஷுஜா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ‘‘எந்த வெளிநாட்டுப் படை இந்த இரு நாடுகளில் ஒன்றில் நுழைந்தாலும் மற்றொரு நாடு அதை வெளியேற்ற வேண்டும்’’ என்றது அந்த ஒப்பந்தம். இதுதான் ஐரோப்பிய நாடு ஒன்றுடன் ஆப்கானிஸ்தான் செய்து கொண்ட முதல் ஒப்பந்தம். காட்சிகள் மாறத்தொடங்கின.





No comments:

Post a Comment