Thursday 14 June 2018

LLIAD EPIC LITERATURE







LLIAD EPIC LITERATURE


இலியட் மஹாகாவியம் 
கிரேக்க கதைகளையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

ஆதிகால கிரேக்கர்களின் சமய நம்பிக்கை பல தெய்வ உருவ வழிபாட்டுக் கோட்பாட்டில் அமைந்திருந்தது. வானத்துக்கும் பூமிக்கும் தனித்தனியே கடவுள்கள் இருந்தனர். மலைகளுக்கும் கடலுக்கும் கடவுளர்கள் கற்பிக்கப்பட்டனர். சூரியனும் சந்திரனும் கடவுளர்களாகத் தெரிந்தனர். நெருப்புக்கும் நீருக்கும் கடவுளர்கள் இருந்தனர்.

காட்டுக்கென்றும் கழனிக்கென்றும் கடவுளர்கள் இருந்தனர். காட்டில் அலையும் மிருகங்களுக்கென்றும், கடலில் திரியும் மீன்களுக்கும் கடவுள்கள் உண்டு. வயலில் விளையும் தானியங்களுக்கும், காய்த்துக் குலுங்கும் கனிகளுக்கும் கடவுள்கள் உண்டு. இரும்படிக்கும் கருமானுக்கும் தனியாகக் கடவுள் இருந்தான். வேட்டைக்காரர்களுக்கு வேண்டியவை செய்ய தெய்வம் இருந்தது. போருக்குச் சென்றாலும் வெற்றியை ஈட்டித்தர கடவுள் இருந்தது.

கல்விக்குத் தனித் தெய்வம் உண்டு. காதலுக்கும் அது போல் தனியே தெய்வம் உண்டு. செல்வத்துக்கும், சேமத்துக்கும் தனியே கடவுளோ தெய்வமோ கற்பிக்கப்பட்டிருந்தது. இப்படி எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடவுள்களைக் கற்பித்து வணங்கி வந்தனர்.

இதற்கிடையே ரோமர்கள் கிரேக்கர்களின் சமய நம்பிக்கைகளையும் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் அவற்றைத் தங்களுடைய சமயம், இலக்கியம் ஆகியவற்றில் புதிய வார்ப்புகளாக வடிவமைத்து, தாங்கள் அதுவரை வணங்கி நின்ற தெய்வங்களோடு கிரேக்கர்கள் வணங்கிவந்த தெய்வங்களை இணைத்தும் இணையாக்கியும் வைத்தனர்.

இதனால் கிரேக்கர்களின் ஆதிகால சமய இதிகாசக் கதைகளின் பெரும்பாலான சாயல்கள் ரோமர்களின் சமய இதிகாசக் கதைகளிலும் ஏற்பட்டு, படிக்கும்போது முதற்பார்வையில் குழப்பத்தை ஏற்படுத்துவதுண்டு. எனவேதான், கிரேக்கர்களின் முழுமுதல் கடவுளர்க ளாக உள்ள பன்னிருவர், ரோமர்களால் எப்படி எடுத்தும் ஏற்றும் கொள்ளப்பட்டு மாற்றுப் பெயர்களால் அழை க்கப்பட்டனர் என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

கிரேக்கர்களுக்கு முழு முதற்கடவுள் அல்லது தலைமைக் கடவுள் ஸீயஸ் என்பவன். இதே கிரேக்கர்களுக்கு, இவனுக்கு முன்பு க்ரோனஸும், க்ரோனஸுக்கு முன்பு யுரேனஸும் இப்பதவியில் இருந்தனர். இந்த ஸீயஸ் (ரோமர்களால் ஜுபிடர் என்று அழைக்கப்பட்டான். இவனுடைய மனைவி கிரேக்கர்களுக்கு ஹீரா ரோமர்களுக்கு ஜுனோ அல்லது ஜோவ். இந்தப் பன்னிரண்டு முக்கிய மூலத்தெய்வங்கள் யார் யாரென்றும் இவர்களுக்குக் கிரேக்கர்களும் ரோமர்களும் இட்டு அழைத்த பெயர் என்னவென்றும் மேலும் அவர்கள் எவற்றுக்கு கடவுளராய் உள்ளனர் என்பதையும் இனிக்காண்போம்.

கிரேக்கர்களின் கடவுள் / ரோமர்களின் கடவுள் / கடவுளின் துறை

ஸீயஸ் / ஜுபிடர் / தலைமைக் கடவுள், வான மண்டலத்தின் தேவன்

அபோலியன் / அப்போலோ / சூரியனுக்குக் கடவுள்

ஆரெஸ் / மார்ஸ் / போருக்குரிய கடவுள்

ஹெர்மஸ் / மெர்க்குரி / செய்தி பரப்புத் துறை; தூதுவச் சேவை; கட்டியங்காரன்

பொசைடான் / நெப்டியூன் / பெருங்கடல்களுக்குத் தலைமைக் கடவுள்

ஹபாயிஸ்டஸ் / வல்கன் / கருமான், கொல்லன், நெருப்புக் கடவுள்

ஹீரா / ஜுனோ / தலைமைப் பெண் தெய்வம்

டிமெட்டர் / சிரஸ் / பூமியின் தெய்வம் வேளாண்மைத் துறைத் தலைவி!

ஆர்டெமிஸ் / டயானா / நிலவுக்கும் வேட்டைக்கும் இவளே தெய்வம்

ஏத்தீனா / மினர்வா / கல்வி, அறிவு தெய்வம்

ஆஃப்ரோடைட் / வீனஸ் / காதல், அழகு தெய்வம்

ஹெஸ்டி / வெஸ்தா / வீட்டுக் குடித்தனம் தொடர்பான தெய்வம்

கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோரின் முக்கிய 12 கடவுளர்கள் மேற்குறிப்பிடப்பட்டவர்கள். இவர்களோடு மேலும் நால்வரும் கிரேக்கர்களால் வணங்கப்பட்டு வந்துள்ளனர்.

டியோனிசஸ் (Dionysos) : மதுவுக்கும் போதைக்குமான கடவுள். இவனை ரோமர்கள் பக்கஸ் (Bacchus) என்றழைப்பர். இந்தக் கடவுளை மூலதெய்வமாகக் கொண்டு பிற்காலத்தில் ஒரு தனிச்சமயம் உருவானது. இது ஒரு மறுமலர்ச்சி மதம்; அல்லது பரிணாமமடைந்த சமயம் என்று வர்ணிக்கப்பட்டது.

ஈராஸ் (Eros) என்னும் ரோமர்களின் கியூப்பிட் (Cupid) என்ற காதல் கடவுள் நமது ஊர் மன்மதன்.
ப்ளூடன் (Pluton) என்னும் ரோமர்களின் ப்ளூட்டோ (Pluto). இவன் பாதாள லோகத்துக் கடவுள்.
க்ரோனஸ் என்ற ரோமர்களின் சாத்தான் சனி பகவான். நல்ல நேரம், கெட்ட நேரம் இவற்றின் நிர்ணயகர்த்தா இவனே.

தனிச்சிறு தெய்வங்களும் வணங்கப்பட்டுள்ளன.
ஆஸ்குளோப்பியஸ் என்பவள் நோயிலிருந்து நிவாரணம் அளிக்கும் கடவுள்.

ஹெடஸ் பாதாள லோகத்துக்குக் கடவுள்.
ஹைஜீயா அல்லது ஹைஜினியா : இவள் ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதரவான தெய்வம். ஹைஜீன் என்ற சொல் இதிலிருந்தே வந்தது.

ஹைப்பரியான் : இவன் ஹெலியஸ் என்ற சூரியனையும், செலீன் என்ற சந்திரனையும் இயாஸ் என்ற வைகறைப் பொழுதுக்குரிய தேவதையையும் பெற்றெடுத்தவன்.

சட்யர்ஸ் என்பவள் காடு கழனிகளைக் காக்கும் மோகினித் தெய்வம்.

தெமீஸ் : சட்டம், நீதி ஆகியவற்றின் தலைமை நாயகி.
தனித்தனி குணாதிசயங்களை உருவாக்கி, தனித்தனியே துறை வாரியாக கடவுளர்கள் இப்படி உருவாக்கப்பட்டு, வணங்கப்பட்டார்கள். மேலே உள்ளது ஒரு துளி மட்டுமே. இது போக ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

டைட்டான்கள் என்னும் ஆதி தேவர்கள்
கிரேக்கர்களின் மூலக் கடவுள், முதலாவது கடவுள் யுரேனஸுக்கும் முதல் பெண் தெய்வமான ஜியாவுக்கும் பிறந்த பன்னிரண்டு மக்கள், டைட்டன்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆறு ஆண், ஆறு பெண் குழந்தைகள்.

ஆண் டைட்டன்களின் பட்டியல்
* ஓஷனஸ் (Oceanus)
* கூயஸ் (Coeus)
* கிரியஸ் (Crius)
* ஹைப்பிரியான் (Hyperion)
* ஐயபீடஸ் (Iapetus)
* க்ரோனஸ் (Cronus)
பெண் டைட்டன்களின் பட்டியல்
* திய்யா (Theia)
* ரீயா (Rhea)
* தெமிஸ் (Themis)
* நெமோசின் (Mnemosyne)
* ஃபோபே (Phoebe)
* தேத்திஸ் (Tethys)

உலகை ஆள்வதில் முன்னவனாகத் திகழும் யுரேனஸ், பூமிதேவி ஜீயா பெற்றெடுத்தவன்தான். எனினும், இவளைத் தவிர உலகில் வேறு பெண்ணினத்தைச் சேர்ந்தவள் யாரும் இல்லையென்பதால், இவளே இவனுக்கு மனைவியாகி பட்டத்து மகிஷியாகவும் ஆகிறாள். இப்படி யூரேன்ஸ்-ஜியா தம்பதியினர் பெற்றெடுத்தவர்கள்தான் இந்த டைட்டன்கள் என்று அழைக்கப்படுகின்ற ஆதி தேவர்கள்.

இவர்கள் தவிர நூறு கைகள் கொண்ட பிரம்ம அரக்கர்கள், சைக்கிளாப்ஸ் என்று அழைக்கப்படும் ஒற்றைக் கண் மாமல்லர்கள் என்று ஏராளமான பிள்ளைகள்.

ஆனால் ஏனோ தந்தை யுரேனஸ்ஸுக்கு இவர்கள் யாரையுமே பிடிக்கவில்லை. பெற்றெடுத்த பிள்ளைகளை, ஆஜானுபாகுவான தோற்றமும் அமானுஷ்ய ஆற்றலும் உடைய 12 டைட்டன்களையும் நூறு கைகள் கொண்ட பயங்கர தோற்றம் கொண்ட பிரம்ம அரக்கர்களான பிரியார, காட்டஸ், கியாஸ், என்செலடஸ் போன்றோரையும், ஒற்றை முழுவட்டக் கண்களுடன் முரட்டு ஆகுதி கொண்ட சைக்கிளாப்ஸ்களான அர்கஸ், ஸ்ட்ரோப்ஸ், புரோன்டஸ் ஆகியோரையும் யுரேனஸ் துரத்தியடிக்கிறான். தன் தாயுடன் பிறந்தவனான டார்டரஸிடம் இவர்கள் மாட்டிக்கொண்டு அடிமைகளாக அல்லல்படுகின்றனர்.

இந்நிலையில்தான் நாம் முன் அத்தியாயம் ஒன்றில் விவரித்துள்ளபடி கொடுமைக்கு உள்ளான டைட்டன்களின் ஒருவனான க்ரோனஸ் குமுறி எழுகின்றான். தன் தாய் ஜீயாவின் உதவியால் தன் தந்தை யுரேனஸ்ஸை வெட்டி வீழ்த்தி விட்டு ஆட்சியைப் பிடிக்கிறான்.

க்ரோனஸ் ஆட்சிப்படி ஏறிய சிறிது காலத்துக்குள் அவனது மனமும் மாறிவிடுகிறது. தன் தந்தையைப் போன்று இவனும் தன் சகோதரர்களை வெறுத்து, மீண்டும் அவர்களை அதே டார்டரஸின் நரக பாதாளத்துக்குத் துரத்திவிடுகிறான். மிச்சக்கதையை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.
இனி டைட்டன்களில் சிலரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

ஓஷனஸ் 

இவன்தான் டைட்டன்களில் மூத்தவன். தன்னுடன் பிறந்தவளான தேத்திஸ் என்பவளை மணந்தான். இவள் மூலமாக ஓஷியனடைஸ் என்று அழைக்கப்படுகின்ற கடல் தேவ-தேவியர்களையும், நதி தேவ-தேவியர்களையும் மோகினிகளையும் பெற்றெடுத்தான்.

இவன்தான் கடலுக்குத் தேவன். இவனும் இவன் மனைவியும் ஹீராவுக்குத் துணையாகப் பல நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். இவனுடைய மகள்தான் அழகும் அறிவுக் கூர்மையும் கொண்ட மெட்டீஸ் என்பவள். ஸீயஸின் இளமைக் காதல் இவளோடு ஆரம்பித்தது. இவள் தான் க்ரோனஸ்ஸை ஒழிக்க பானம் கலந்து ஸீயஸ் மூலமாக கொடுத்த னுப்பியவள்.

ஹைப்பிரியான்
இவன் ஸீயஸுக்குத் தோள் கொடுத்த முக்கியமான டைட்டன். ஹெலியாஸ் -சூரியன். செலன், நிலவு. இயோஸ் -வைகறை ஆகியோரின் தந்தை.

ஐயபிடஸ்
கடல் தெய்வம் ஓஷியனிட்டான கிலைமென் மூலமாக இவனுக்கு அட்லாஸ், புரோமித்தியஸ், எபிமித்தியஸ், மெனதியஸ் ஆகியோர் பிறந்தனர்.

மனித இனத்தின் மூதாதை இவனே என்ற கூற்றும் உண்டு

No comments:

Post a Comment