Monday 7 September 2020

MAMMOOTY ,MALAYALAM ACTOR BORN 1951 SEPTEMBER 7



MAMMOOTY ,MALAYALAM ACTOR
 BORN 1951 SEPTEMBER 7



மலையாள நடிகர் மம்மூட்டி
ஒரு இந்திய சரித்திர நாயகன் பிறப்பு 1951 செப்டம்பர் 7

மம்முட்டி (மலையாளம்: മമ്മൂട്ടി, முகமது குட்டி, பிறப்பு: 7 செப்டம்பர் 1951[1]), நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்,[2].

மம்மூட்டி பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். அவற்றில் சிறந்த நடிகர் பிரிவில் அவர் பெற்ற மூன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகள் மற்றும் எட்டு பிலிம்பேர் விருதுகள் ஆகியவை அடங்கும். 1998 இல், இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.

கைராலி டிவி, பீபிள் டிவி மற்றும் வீ டிவி போன்ற மலையாள தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தும் மலையாள தகவல்தொடர்புகளின் தலைவர் பொறுப்பிலும் மம்மூட்டி இருக்கின்றார்.[3] வனிதா பத்திரிக்கை அதன் வாசகர்களிடையே நடத்திய ஆய்வின் பிறகு மம்மூட்டியை மிகவும் கவர்ச்சியான நடிகராகத் தேர்ந்தெடுத்தது.[4] மும்மூட்டி, கேரளா முழுவதும் மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார், மேலும் அக்‍ஷயா திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் இருக்கின்றார்

குடும்பமும் ஆரம்பகால வாழ்க்கையும்[தொகு]

மம்மூட்டி

மம்மூட்டி அவர்கள் இந்தியாவின் பழைய திருவாங்கூர்-கொச்சின் மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 செப்டம்பர் 1951 அன்று பிறந்தார், இவரது தந்தை இஸ்மாயில் ஒரு விவசாயி மற்றும் தாய் பாத்திமா இல்லத்தரசி ஆவர். அவரது உடன்பிறப்புகளுடன் அவர் வைக்கம் அருகிலுள்ள சேம்பு என்னும் இடத்தில் வளர்ந்தார். அவர் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை (பட்டப்படிப்புக்கு முந்தையது) கொச்சியிலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் முடித்தார், அதன் பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். அவர் மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் சட்டப் பயிற்சியும் எடுத்தார். அவர் சல்பாத் என்பவரை 1980 இல் மணந்தார், இவர்களுக்கு சுருமி என்ற மகளும் தல்குயர் சல்மான் என்ற மகனும் உள்ளனர்.[1]

நடிப்பு வாழ்க்கை[தொகு]
இதனையும் பார்க்க: Filmography of Mammootty
ஆரம்பகால வாழ்க்கை, 1971-1980[தொகு]
மம்மூட்டி 1971 இல் கே. எஸ். சேதுமாதவன் இயக்கிய அனுபவங்கள் பாலிச்சகள் திரைப்படத்தில் முதன்முதலில் தோன்றினார். இருப்பினும் இந்த கதாப்பாத்திரம் நன்மதிப்பைப் பெறவில்லை.[6] அப்பொழுது அவர் மகாராஜாஸ் கல்லூரியில் மாணவராக இருந்தார். அதன் பிறகு 1973 இல், கே. நாராயணன் இயக்கிய பிரேம் நசீர் படமான காலச்சக்கரம் திரைப்படத்தில் மற்றொரு வேடத்தைப் பெற்றார்.

அவரது திரைப்பட தொழில் வாழ்க்கை 1979 இல் தொடங்கியது, அப்பொழுது அவர் தலைசிறந்த இயக்குநர் எம். டி.வாசுதேவன் நாயர் இயக்கிய தேவலோகம் [7] திரைப்படத்தில் அவர் முதல் முன்னணி வேடத்தில் நடித்தார். இருப்பினும், இந்தத் திரைப்படம் வெளியாகவே இல்லை.

1980கள்[தொகு]
எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி எம். ஆசாத் இயக்கிய வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள் மம்மூட்டியின் முதல் குறிப்பிடத்தகுந்த திரைப்படம் ஆகும். கே.ஜி ஜியார்ஜ் இயக்கிய மேலா திரைப்படத்தில், அவர் சர்க்கஸ் கலைஞராக நடித்தார், மேலும் ஐ.வி. சசி இயக்கிய திரிஷ்னா திரைப்படம் அவருக்கு கதாநாயகன் எனும் பிரபலத்தை வழங்கியது.

1982 இல், கே.ஜி ஜியார்ஜ் இயக்கிய துப்பறியும் திரில்லர் படமான யவனிகா (1982) திரைப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரி வேடத்தில் அவர் நடித்தது, மம்மூட்டி நேர்மையான காவல்துறை அதிகாரியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிரடி மற்றும் துப்பறியும் விறுவிறுப்புப் படங்களில் நடிக்கும் போக்கிற்கு அது தொடக்கமாக அமைந்தது.[8]

1981 இல், அஹிம்சா திரைப்படத்தில் அவர் நடித்தற்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் முதல் மாநில விருதைப் பெற்றார்.

1982-1984 காலகட்டம் மம்மூட்டியை முக்கியமான மலையாள சினிமாவில் வணிக ரீதியாக எதையும் செய்யக்கூடிய கதாநாயகனாக மதிப்பிட்டது. பத்மராஜனின் கூடேவிதே மற்றும் ஜோஷியின் ஆ ராத்திரி இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ஆள்கூட்டத்தில் தனியே மற்றும் ஆதியொழுக்குகள் போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு அவரை அர்த்தமுள்ள நடிகராக நிலைநாட்டியது.[9].

1982 முதல் 1986 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டத்தில் மம்மூட்டி கதாநாயகனாக 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார்.[10]

எம். டி. எழுதி ஐ.வி. சசி இயக்கிய ஆதியொழுக்குகள் திரைப்படத்தில் கருணன் பாத்திரத்தில் அவர் நடித்தது, அவருக்கு சிறந்த நடிகர் பிரிவில் மாநில விருதையும் பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. மம்மூட்டி, பாலு மகேந்திரா இயக்கிய யாத்திரா திரைப்படத்தில் வன அதிகாரி வேடத்தில் நடித்ததற்காக மாநில சிறப்பு ஜூரி விருதையும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். நிறக்கூட்டு (1985), நியூ டெல்லி(1987) மற்றும் தனியாவர்த்தனம்(1987) ஆகியவை 80களில் அவரது குறிப்பிடத்தகுந்த பிற படங்களாகும்.

நியூ டெல்லி அவரது நடிப்புத் தொழிலில் முக்கியமான திரைப்படமாகும்.[11] அந்தத் திரைப்படம் "த அல்மைட்டி" என்ற இர்விங் வாலஸ் எழுதிய நாவலை ஓரளவு அடிப்படையாகக் கொண்டது.[12]

1980களின் இறுதியிலிருந்து 1990கள் வரை[தொகு]
1988 இல் மம்மூட்டி மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை தனது ஒரு CBI டைரிக் குறிப்பு திரைப்படத்தைக் கொண்டு அளித்தார். ஒரு CBI டைரிக் குறிப்பு கேரளாவிலும் அதேபோன்று தமிழ்நாட்டிலும் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை உருவாக்கியது. முதல் CBI திரைப்படம் ஒரு CBI டைரிக் குறிப்பு வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, மூன்று மர்மக் கொலை சம்பந்தமான தொடர்ச்சிகள் அதே நடிகர்களைக் கொண்டு அதே கதாப்பாத்திரங்களில் தயாரிக்கப்பட்டன, அவை: ஜகார்த்தா (1989), சேதுராம ஐயர் CBI (2004) மற்றும் நேரரியன் C.B.I (2005), அனைத்தும் கே மதுவால் இயக்கப்பட்டு எஸ்.என். ஸ்வாமி எழுதியது, இவற்றில் மும்மூட்டி சேதுராம ஐயராக புத்திசாலித்தனமான ஆனால் யூகிக்க முடியாத CBI அதிகாரியாகத் தோன்றினார். சுயசரிதை கதைகளைக் கொண்ட எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டு திரைப்படங்களில் மம்மூட்டி நடித்தார். அவற்றில் ஒன்று அக்‌ஷரங்கள் ஐ.வி. சசியால் இயக்கப்பட்டது, மற்றொன்றான சுக்ரதம் படத்தை ஹரிகுமார் இயக்கினார்.

மம்மூட்டி ஒரு வடக்கன் வீரக்கதா திரைப்படத்தில் நடிப்பு வாழ்வின் உச்சத்தை தொட்டார்; அத்திரைப்படம் எம்.டி. வாசுதேவன் நாயரால் எழுதப்பட்டு டி.ஹரிஹரன் அவர்களால் இயக்கப்பட்டது. அவரது தெளிவான சேகவார் (கூலிப் படைவீரன்), கதநாயகனாக இல்லாமல் எதிர்மறைப் பாத்திரமாக இருந்தாலும் அவருக்கு தேசிய விருதை வென்று தந்தது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய மதிலுகள் படத்தில் மும்மூட்டியின் நடிப்பு விருதுக்காகக் கருதச்செய்தது. ஐ.வி சசி இயக்கிய முருகயா வில் வேட்டைக்கார வருணியாக அவரது வேடம் மற்றும் மற்றொரு திரைப்படம் மஹாயனம் ஆகியவையும் மாநில விருதுக்கு கருதச்செய்தன. மம்மூட்டி, பரதன் இயக்கிய அமரம் திரைப்படத்தில் அவது சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் விருதை வென்றார்.

மம்மூட்டி தனது இரண்டாவது தேசிய விருதை, அடூர் கோபாலகிருஷ்ணனின் விதேயன் மற்றும் டிவி சந்தரனின் பொந்தன் மாடா ஆகியவற்றில் தனது நடிப்பிற்காகப் பெற்றார். அவர் இரண்டு படங்களில் தனது வேடங்களுக்காக மாநில விருதையும் பெற்றார். கொச்சின் ஹனீபா இயக்கிய வால்ட்சல்யம் படத்தில் அவரது நடிப்பும் மாநில விருதுக்குக் கருதப்பட்டது.

தற்போதைய சகாப்தம், 2000 முதல் தற்போதுவரை[தொகு]
மம்மூட்டி தனது மூன்றாவது தேசிய விருதை டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் திரைப்படத்திற்காக வென்றார், இது ஜாபர் படேல்[13] இயக்கிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறும் ஆங்கில மொழி திரைப்படம் ஆகும், இத்திரைப்படம் இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.

ஜாபர் படேல் அம்பேத்கர் படத்தில் மம்மூட்டி பற்றி தெரிவித்த கருத்துக்கள்:

“ Anyone who has seen the film will agree that Dr Ambedkar could not have been possible without Mammootty. How did the filmmaker settle on him? I was making a film in English and I went all around the world, met and saw actors in Canada, United States and United Kingdom. Physically, many actors in America came close but I was not sure about how they would portray the whole sensibility and inner turmoil. I was also not happy about the gestures. I had shortlisted 2-3 people and knew that it would be troublesome as I would have to get them here and train them. So I was not really happy. Then I decided to do something about Mammootty, who was hiding in my mind for a very long time. ”
மம்மூட்டி காழ்ச்சா வில் ஆபரேட்டர் மாதவன் உருவத்திற்காக மாநில விருதை வென்றார். புதுமுகம் அன்வர் ரஷீத் இயக்கிய ராஜமாணிக்யம் மலையாள சினிமாவில் அனைத்துக் காலத்திலும் மிகப்பெரிய வெற்றியுடன் ரசிகர்கள் மனம் கவர்ந்தது.[14] 2006 இல், மம்மூட்டி துருப்புக்குலன் திரைப்படத்தை உருவாக்கினார், அதில் வரும் கதாப்பாத்திரம் குலன் மீது குழந்தைகளிடையே கடுங்கோபம் உண்டானது, பின்னர் அந்தப் பாத்திரத்தை வைத்து 'சூப்பர் குலன்' எனற கார்ட்டூன் தொடர் கிட்ஸ் காமிக்ஸ் மூலம் தொடங்கப்பட்டது.[15]

மம்மூட்டியின் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் மாயாவி , 2007 இன் சிறந்த வசூலைப் பெற்ற படமானது.

2008 இல், மம்மூட்டியின் அண்ணன் தம்பி மாநிலம் முழுவதும் 75 மையங்களில் திரையிடப்பட்டு சுமார் 61 மையங்களில் 50 நாட்களை நிறைவு செய்தது. அத்திரைப்படம் ராஜமாணிக்கத்தின் சாதனையை முறியடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்து ரசிகர்கள் மனம் கவர்ந்தது.[16]

பிற மொழிகளில் திரைப்படங்கள்[தொகு]
மம்மூட்டி சில மலையாளம் அல்லாத திரைப்படங்களில் நடித்துள்ளார், அவற்றில் பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்கள் அடங்கும். 1989 இல், கே. மது இயக்கிய மௌனம் சம்மதம் திரைப்படத்தில் அவர் தமிழில் அறிமுகமானார். அவர் தமிழ்த் திரைப்படங்களில் கே. பாலச்சந்தர்(அழகன்) மற்றும் மணி ரத்னம்(தளபதி) போன்ற துறையின் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருக்கின்றார். தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து தளபதி யில் அவர் நடித்தது தமிழ் ரசிகர்களிடையே அவரை மிகவும் பிடிக்கச் செய்தது[சான்று தேவை]. பாசில் இயக்கிய கிளிப்பேச்சு கேட்கவா (1993) திரைப்படத்தில் மம்மூட்டி அவரது அரிதான வேடமான காதல் நாயகன் வேடத்தில் நடித்தார்[சான்று தேவை]. 1995 இல் மம்மூட்டி, ஆர்.கே.செல்வமணி இயக்கிய மக்கள் ஆட்சி[சான்று தேவை] வடிவில் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில், கேப்டன் பாலாவாக ஐஸ்வர்யா ராய் ஜோடியாக அவரது நடிப்பு அனைவரையும் கவரும் விதமானதாகக் கருதப்பட்டது[சான்று தேவை]. என். லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் மம்மூட்டி ஒரு குடும்பத் தலைவன் வேடத்தில் நடித்திருந்தார்.

மம்மூட்டி மறக்கூடிய சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். புதையல்(1996) (புதையல் வேட்டை பற்றிய திரைப்படம்), ஜூனியர்-சீனியர்(2002)(முக்கோணக் காதல் கதை), விஸ்வதுளசி (2004)(ஒரு முதிர்ந்த காதல் கதை) இவையனைத்தும் கவர்ந்திழுக்கும் நடிப்பில் உருவாக்கப்பட்டவை, ஆனால் விமர்சனம் மற்றும் வணிக ரீதியில் தோல்வியைத் தழுவின.

அவர் [1989] இல் திரியத்திரி மூலமாக ஹிந்தித் திரைப்பட உலகில் நுழைந்தார். இருப்பினும், அவரது கதாநாயகனாக நடித்த முதல் பாலிவுட் திரைப்படம் தர்த்திபுத்ரா எந்த அறிவிப்புமின்றிப் போனது., என்றாலும் அவரது தேசிய அளவிலான வருகையை ஜாபர் படேல் இயக்கிய வாழ்க்கை வரலாற்றுப் படமான டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர் படத்தைக்கொண்டு உறுதியாக்கினார். மம்மூட்டியின் சௌ ஜூத் ஏக் சச் விமர்சன ரீதியாகப் பாராட்டை வென்றாலும், அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடையவில்லை. மம்மூட்டியின் தெலுங்குத் திரைப்படம் ஸ்வாதி கிரணம், ஒரு ஆபத்தான முயற்சியான அது ரசிகர்களாலும் விமர்சனங்களாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மனிதநேயப் பணிகள்[தொகு]
மம்மூட்டி உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அரை டஜனுக்கும் மேற்பட்ட ஏழைகள் மறுவாழ்வுத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்.[19]

வலி மற்றும் நோய்த் தணிப்பு மையம்[தொகு]
மம்மூட்டி கேரளாவில் உள்ள பெயின் அண்ட் பல்லியேடிவ் கேர் சொசைட்டி,[20] அறக்கட்டளை அமைப்பு உடைய புரவலராக இருக்கின்றார், இவ்வமைப்பானது புற்றுநோய் தீவிரமான நோயாளிகளிடையே வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. அவர் இந்தியாவின் கோழிக்கோடு என்ற இடத்தில் அமைந்துள்ள, வலி மற்றும் நோய்த் தணிப்பு கவனிப்பு மையத்தின் மைய சக்தியாகவும் செயலாக்குபவராகவும் இருக்கின்றார்.[21] அந்த நிறுவனம் வழங்கும் நன்மைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பெறுகின்றனர். மம்மூட்டி வலி மற்றும் நோய்த் தணிப்பு கவனிப்புக்கு, கேரளா முழுவதும் வாழும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு, இப்போது நாவல் திட்டத்தை அமைத்திருக்கிறார்.[22]

ஜீவன் ஜோதி[தொகு]
மம்மூட்டி ஜீவன் ஜோதியின் தூதராக இருக்கின்றார் - இது மண உணர்வு நரம்பு வியாதிகள், இதயம் (இதயம் சார்ந்த) எலும்பு இயல் வியாதிகள், கல்லீரல் வியாதிகள், சிறுநீரகக் குழாய் செயலிழப்பு, இரத்தம் உறையா நோய்கள், ENT குறைபாடுகள் போன்ற வியாதிகளின் சிகிச்சைக்காக எதிர்பார்க்கும் மக்களுக்கு உதவி வழங்கும் நோக்கைக் கொண்ட சமூக சேவை திட்டம் ஆகும்.[சான்று தேவை]

இந்தியத் தெருமுனை இயக்கம்[தொகு]
மம்மூட்டி, குழந்தை பிச்சையெடுத்தலையும் குழந்தைத் தொழிலாளர் முறையையும் அடியோடு ஒழிப்பதை இலக்காகக் கொண்ட "இந்தியத் தெருமுனை இயக்கம்" அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதராக இருக்கின்றார். அவர் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றார், இது குழந்தைகளைப் பாதுக்காக்க காப்பகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றது.[23]

காழ்ச்சா- இலவச கண் பாதுகப்பு மற்றும் சிகிச்சை[தொகு]
காழ்ச்சா என்பது சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்காக இலவச கண் பாதுகாப்பு மற்றும் சிகிச்சையை நீட்டிக்கும் ஒரு துணிகர முயற்சி ஆகும். ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தின் பெயரில் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். காழ்ச்சா 06-07,[24] மம்மூட்டி ரசிகர் நற்பணி மன்றம் & மம்மூட்டி டைம்ஸ் ஆகியவற்றால் லிட்டில் பிளவர் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் மற்றும் கேரளாவின் கண் வங்கி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து தொடர்ந்து செயலாக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 10,000 மக்கள் இலவச கண் சிகிச்சை பெற்று பயனடைவர் மேலும் 1000 ஏழை நோயாளிகள் கண்புரை அறுவைச் சிகிச்சைகளை இலவசமாக லிட்டில் பிளவர் மருத்துவமனை, அனகமாலியில் பெறும் வாய்ப்பைப் பெறுவர். இந்த அறுவை சிகிச்சைக்கு செலவு சுமார் ரூ.8000/- ஆகும். இதில் இன்னும் கூடுதலாக அறுவைச் சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்ட அனைத்து தகுதிவாய்ந்த நோயாளிகளுக்கும் இலவச தங்குமிடம், உணவு, மருந்துகள் மற்றும் பயணப்படி ஆகியவை அளிக்கப்படும். இந்தத் திட்டம் சமுதாயத்தில் குழந்தைப்பருவ குருட்டுத் தன்மையைத் தடுக்கும் பல்வேறு திட்டங்களையும் உள்ளடக்கியது ஆகும். சமுதாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்குவது இதன் முக்கிய செயல்பாடுகளில் தொடர்புடைய ஒன்றாகும். சிறப்பு நிதி உதவி இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்திருந்து பெறப்பட்டு இந்த செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும். இலவச கண் சிகிச்சை முகாம்கள் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நடத்தப்படும்.[25]

உணவு மற்றும் பொருட்கள் கொடையளித்தல்[தொகு]
ஓணம் 2007 இன் போது மம்மூட்டி, சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்ட கேரள கிராமமான கோட்டயம் மாவட்டத்தின் பரத்தோடுக்கு அருகிலுள்ள கஞ்ஜிராப்பள்ளியில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். மாநிலத்திலேயே இந்தக் கிராமம், அந்த நோயால் அதிகமான உயிரிழப்பை எதிர்கொண்டது.[26] ஒரு பத்திரிக்கைக் கருத்தரங்கின் மம்மூட்டி இதைச் செய்வதற்கான அவரது தேவையை விளக்கினார்:

“ I decided to do this because the village has lost the maximum number of people to chikunguniya in the state this year. And this is not a publicity event and I would not be going there to distribute it either. This is done to see that others also come to extend a helping hand to those who are suffering
.

No comments:

Post a Comment