Saturday 19 September 2020

இந்திய சினிமா வரலாறு

 





இந்திய சினிமா வரலாறு – 6

by -பிகேநாயர்-தமிழில்-அறந்தை-மணியன்-தட்டச்சு-உதவி-தினேஷ்-குமார் 21 September 2015

“உண்மை நிகழ்வு”ப் படம்


இந்தியாவின் முதல் ‘உண்மை – நிகழ்வு’ப் படம் 1901 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. “சாவே தாதா” என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட “ஹரிச்சந்திர சகாரம் பட்வடேகர்” என்பவர்தான் இவ்வகையில் முன்னோடி! இங்கிருந்து சிறப்பு விருது பெற்றுத்திரும்பிய ‘வாதப்புலி’ (ராங்க்னர்) பராஞ்சபை’ என்பவருக்கு பம்பாய் செளபாத்திக் கடற்கரையில் பொதுமக்கள் வரவேற்பு ஒன்று அளித்தனர். 1901ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடந்த அந்த வரவேற்பு நிகழ்ச்சியை ‘நடந்தது நடந்தபடி’ அப்படியே படம் பிடித்தார் ‘சாவே தாதா’/ அவர் , மேலும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பு ஒன்றையும் விறுவிறுப்பான துணுக்குக் காட்சிகளாகத் திரைப்படத்தில் பதிவுசெய்தார்.

”இந்தியத் திரைப்பட உலகின் தந்தை” என்ற போற்றுதலுக்குரிய தாதாசாகேப் பால்கே என்று சொல்லக்கூடிய திரைப்படத்தைத் தயாரித்தவர். 1912ஆம் ஆண்டு அவர் “நேரம் – நழுவும் – புகைப்படக்கலை” (Time – Lapse Photography) என்ற வகையில் தயாரித்த “ஒரு பட்டானிச்செடியின் ஜனனம்” என்ற படம்தான் இத்தகைய படங்களுக்கான முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. பால்கே அப்போதுதான் இங்கிலாந்திலிருந்து ஒரு காமிராவை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். அதனுடைய நுணுக்கமான செயல்பாடுகள் அவருக்கே விளங்காதிருந்த நேரமிது! அதற்குள்ளாகவே அவர் ஒரு பரிசோதனை முயற்சியில் இறங்கினார். ஒரு பட்டாணி விதையைத் தொட்டியில் நட்டுவைத்து, அது முளைத்து குறுஞ்செடியாகி, வளர்ந்து பெரும்செடியாகி பட்டாணிகள் காய்த்துக் குலுங்கும் வரை, ஒவ்வொரு கட்டமாகப் படம் பிடித்துக் காட்டினார் பால்கே. ஒரு நாளைக்கு ஒரு ‘ஷாட்’ வீதம் படம்பிடித்தார். பொறுமையாக அச்செடி வளர்ந்த வரலாற்றை திரைப்படமாக தமது வசதிமிக்க நண்பரொருவருக்கு போட்டுக் காட்டினார். அதைப் பார்த்துப் பிரமித்துப் போன அந்த நண்பர்தான், இந்தியாவின் முதல் ‘கதைப் படமான’ “ரானா ஹரிச்சந்திரா”வை 1913ல் உருவாக்க பால்கேக்கு பண உதவி செய்தார்.


அந்தக் காலகட்டத்தில் ‘ஜான் கிரியர்ஸன்” உருவாக்கி அமரத்துவம் கொடுத்த ‘டாகுமெண்டரி” படங்களைப் பற்றி இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதுவுமே தெரியாதிருந்தது. திரைப்படம் என்பது ஒரு “பெரும் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் சாதனம்” என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் பால்கே உணர்ந்திருந்தார். இது அந்தத் திரைப்பட முன்னோடியின் ஆரம்பகாலப் படங்களிலேயே வெளிப்பட்டது. ’இந்தியாவின் முதல் திரைப்படம் உருவான விதம்’ பற்றியே ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வேறு எவருக்கு ஏற்பட்டிருக்க முடியும்?! தமது “ரானா ஹரிச்சந்திரா” படம் எப்படி உருவானது என்பதை “திரைப்படங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?” என்ற தலைப்பில் 1913லேயே “ ஒரு ரீல்’ படமாக பால்கே தயாரித்தளித்தார். திரைப்படத்தயாரிப்பில் உள்ள பல்வேறு தொழில் – நுட்ப அம்சங்களை பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பதற்காகவென்றே குறிப்பாக அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. ஒரு “கலை – உருவாக்க மேதையின்” தீர்க்கதரிசனத்திற்கு எடுத்துக்காட்டாக அப்படம் விளங்குகிறது. திரைப்படம் என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அறிவிப்பதும் , கற்பிப்பதும் கூட அதன் நோக்கமாக இருக்கவேண்டுமென்பதை அந்த ஆரம்ப கால கட்டத்திலேயே பால்கே உணர்ந்திருந்தார்.!


’கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில்’ கிரீயர்ஸன் அந்த நேரத்தில் தத்துவப் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தார். “டாக்குமெண்டரி” என்ற சொல்லைக்கூட அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. புகழ்பெற்ற எந்த ஒரு மேஜிக்வித்தைக்காரரும், தமக்கு போட்டியாளர்கள் அதிகமாகி விடுவார்களே என்ற பயத்தில் தமது தொழில் – இரகசியங்களை வெளியிடமாட்டார்! ஆனால் மேஜிக் தெரிந்த திரைப்பட மேதை பால்கேக்கு வேறுவிதமான பார்வைகள் இருந்தன. திரைப்படத்தயாரிப்பில் உள்ள நுணுக்கமான முறைகளையும், மக்களைக் கவர்ந்திழுக்கும் அத்துறையின் இரகசியங்களையும் வெளிப்படையாகத் தெரிவிப்பதன் மூலம் பார்வையாளருக்கு கற்பிக்க முடியும் என்று பால்கே உண்மையாக நம்பினார். திரைப்படத் தொழிலைப்பற்றியும் அதில் ஈடுபட்டிருப்போரைப் பற்றியும் மதிப்பும் மரியாதையும் அதன் மூலம் பார்வையாளர்களுக்கு உண்டாகும் என்று அவர் நினைத்தார். திரைத்துறையிலுள்ளோரை கவுரவமாக நடத்தும் பழக்கம் அந்தக் காலகட்டத்தில் குறைவாகத் தான் இருந்தது. (இன்றளவும் அது தொடருகிறது என்பதும் வருத்தத்துக்குரியது உண்மையாகும்)!

புராணக்கதைகளைத் தாம் தமது பார்வையில் வழங்குவதைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களைத் தயார் செய்யும் தமது பழக்கத்தை 1914ல் அவர் உருவாக்கிய “காலிய மர்தன்” படத்தின் போதும் தொடர்ந்தார் பால்கே. தமது ஏழுவயது மகள் மந்தாகினியை குழந்தை கிருஷ்ணனின் வேடத்தில் நடிக்கப் பயிற்றுவித்த முறைகளெல்லாம் ஒரு ‘உண்மை – நிகழ்வுப் படமாக’ தயாரித்து “காலிய மர்தன்” படத்தின் ஆரம்ப கட்டத்தில் இணைத்தார்.


முதமுறையாகக் காமிராவை எதிர்கொள்ளும் ஒரு ஏழுவயதுக் குழந்தை – நடிகையை படிப்படியாக எவ்வாறு அதன் திறமையை வெளிக்கொணரும் வகையில் தயார்படுத்தினார் என்று விளக்கும் வகையில் அதை ஒரு தனிப்பட்ட துண்டுப்படமாக அவர் எடுத்திருக்க முடியும். தனது முன்னோடித் தந்தையின் அபரிமிதமான நம்பிக்கையைப் பெருமளவு நியாயப்படுத்த அந்தப் பிஞ்சு வயதிலேயே பால்கேயின் மகளும் அவருக்கிணையான திறமை பெற்றிருந்தார் என்பதிலும் ஐயமில்லை.

பால்கேயின் மற்றொரு ஆர்வத்தைத்தூண்டும் துண்டுப்படம் “நகரும் நாணயங்கள்” என்பதாகும். அதிலும் அவர் தமது விருப்பமான “ப்ரேம்களை நிறுத்தி நிறுத்திப் படம் பிடிக்கும்” தந்திரமான படப்பிடிப்பு முறையைப் பயன்படுத்தினார். அசையாத ஜடப்பொருளான நாணயத்தை அசைய வைத்து இயக்கிக் காட்டினார்.


அவரது மற்றொரு சிறந்த டாக்குமெண்டரிப் படம் “செங்கல் வைத்துக் கட்டுதல்” என்பதாகும். அதில் மகாராஷ்டிர மாநிலக்கிராமங்களில் செங்கல் தயாரிப்பு முறைகளை, எவ்வாறு குடிசைத் தொழிலாகச் செய்கிறார்கள் என்று விளக்கியிருந்தார். அப்படத்தில் நிஜமான தொழிலாளர்கள் (ஆண்களும், பெண்களும்) திறமை வாய்ந்த மேற்பார்வையாளரின் கீழ் செங்கல் தயாரிப்பில் ஈடுபடுவதை நாம் பார்க்க முடியும். களிமண்ணைப் பிசைந்து , செங்கல் செய்து வெளியில் காயவைத்துப் பிறகு சூளையில் இட்டுச் சுடுவது வரை விரிவாகக் காட்டியிருக்கிறார் பால்கே.


காமிரா மெதுவாக நகர்ந்து, திறந்த வெளியில் செங்கல்கள் அழகாக அடுக்கப்பட்டுள்ள காட்சியைக் காட்டுகிறது. மனிதனின் “படைப்புத்திறமை”யை வெளிக்கொணரும் திரைப்படத் தயாரிப்பாளரின் கலைப்பார்வையை அந்த மனத்தைக் கவரும் ‘ஷாட்’ உயர்வாக பேசுகிறது!


மவுனப்பட காலகட்டத்தில் பிரதான படத்திற்கு முன்னால் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் கொண்ட ‘உண்மை – நிகழ்வுப் படத்தை’ இணைப்பது ஒரு பொதுவான வழக்கமாகத் தொடர்ந்தது. இவ்வகையில் இரண்டு அருமையான உதாரணங்கள் நினைவுக்கு வருகின்றன. முதலாவது 1926ல் ‘ஹிமான்சுராய்’ புத்தரைப் பற்றிய படமான ‘லைட் ஆஃப் ஆசியா’வின் ஆரம்பக்காட்சியாகும். அடுத்தது, 1931ல் தயாரிக்கப்பட்ட “மார்த்தாண்ட வர்மா” என்ற மலையாள (மவுனப்)படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் திருவாங்கூர் ராஜாவின் ‘ஆரநாட்டு’ ஊர்வலமாகும்.


நாசிக் அருகே உள்ள தமது சொந்த ஊரான திரியம்பகேஷ்வரி ல் 1921ல் நடைபெற்ற “சிம்ஹஸ்த மேளா” என்ற விழாவைப் படமாகத் தயாரித்து ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார்.


ஒரு சிறுகதையைப் , படமெடுக்கும் முயற்சியையும் செய்திருக்கிறார் பால்கே; “பிடையிச்சி பாஞ்சே” என்ற நகைச்சுவைப் படம் அது! அப்படத்தின் கதாநாயகன், மனைவி கடைக்குப் போயிருக்கும்போது, வேலைக்காரியிடம் குறும்பு செய்கிறான். மனைவி திரும்பி வந்து அவர்களைக் கையும் கலவுமாக பிடிக்கிறாள்.


1928ஆம் ஆண்டில் அன்றைய வெள்ளையர் அரசு நியமித்த , “திவான் பகதூர் ரெங்காச்சாரி” (ஒரு நபர்) “திரைப்பட விசாரணைக் கமிட்டியிடம்”:............. “கற்பிக்கும், இயங்கத் தூண்டும், மற்றும் பிரயாணப் படங்களைத் தயாரிப்பதில் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். அரசு இவை போன்ற படங்களைத் தயாரிக்க முடிவெடுத்தால் கூட எனது படங்களுடன் அவற்றிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது; ஏனெனில் இந்த்துறை பரந்துவிரிந்தது. எனது துண்டுப்படங்களை பிரதான படத்துடன் இணைத்துக் காட்ட வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள்”..... என்று கூறினார் பால்கே! அந்தக் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக, தாம் தயாரித்த “டாலேகாவன் கண்ணாடித் தொழிற்சாலை” என்ற டாக்குமெண்டரிப் படத்தையும் குறிப்பிட்டார். 1920களின் ஆரம்பத்தில் அவர் தயாரித்திருந்த அந்த “தொழிற்சாலை பற்றிய துண்டுப் படம்”திரைப்பட ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றது. அதற்குப் பிறகு பால்கே தயாரித்த எந்தவொரு துண்டுப்படத்தையும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கித் திரையிட முன்வந்தனர்.


1920 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,500 துண்டுப்படங்களும், டாக்குமெண்டரி படங்களும் தயாரிக்கப்பட்டதாக அந்நாளைய தணிக்கை இலாக்கா ஆவணங்கள் தெரிவிக்கின்ன. அதாவது சராசரியாக, ஆண்டுக்கு, 75 படங்கள்! மவுனப்பட காலத்து, நிலைத்திருந்த பெரும்பாலான திரைப்படத்தயாரிப்பு நிறுவனங்களெல்லாம் , தங்களது, ‘செய்திப்படங்களை’ கூடவே தயாரித்தன. “மதன் தியேட்டர்ஸ்” நிறுவனம் “கல்கத்தா டாப்பிகல் சீரிஸ்” என்றும் “அரோரா சினிமா கம்பெனி” “அரோரா கெனாட் சீரிஸ்” என்றும் “கே.டி. பிரதர்ஸ்” நிறுவனம் “டாபிக்கல் சீரிஸ்” என்றும் செய்திப்படங்களையும் தயாரித்து வெளியிட்டன.


”பேர்ல் டாப்பிகல் நியூஸ்” “பிரீமியர் டாப்பிகல்ஸ்” “இம்பீரியஸ் ஸ்க்ரீன் நியூஸ் சீரிஸ்” “குளோசப் தியேட்டர் ஸின்... “குளோப் கெனாட்ட” “கோஹினூர் டான்ஸ் சீர்ஸ்... கோஹறினூர் பிலிம்க் அம்பெனியின் “காங்கிரஸ் டாப்பிகல்1” மற்றும் “வாடியா மூவிடோன் எண்டெர்டெயின்மெண்ட் சீரிஸ்... ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவைதான். இருபதுகளில் தொடங்கப்பட்ட இத்தகைய “செய்திப்பட”முயற்சிகள் முப்பதுகளிலும் தொடர்ந்தது.


முக்கிய தேசிய நிகழ்ச்சிகளெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களால் , பாலகங்காதர திலகரின் இறுதிஊர்வலம், 1920ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்களில் “கோஹினூர் பிலிம் கம்பெனி” “ஓரியண்டல் பிலிம் கம்பெனி” “பதங்கர் ப்ரெண்ட்ஸ் அண்ட் கம்பெனி” மற்றும் “கே.டி.பிரதர்ஸ்” ஆகிய நான்கு நிறுவனங்களால் செய்திப் படமாகத் தயாரிக்கப்பட்டது. அவை ஐநூறு அடியிலிருந்து ஆயிரம் அடி நீளம் வரையிலுமாக வேறுபட்டிருந்தன.


இத்தகைய செய்திப்படங்களை அன்றைய ஆங்கிலேய தணிக்கை அதிகாரிகள்.


.... “வேறொரு நாளில் நடந்ததாகவோ அல்லது’

இறுதி ஊர்வலத்தில் இல்லாததாகவோ எதுவும் காட்டப்படாத பட்சத்தில்....”

என்று குறிப்புடன் அனுமதித்தது சுவாரஸ்யமான செய்தி!

இது ஏனெனில் , அன்றைய காலனி ஆட்சியில் அடங்கிக் கிடந்தவர்கள் தங்களது “செய்திப் படங்களிலும்” “டாக்குமெண்டரி”களிலும் பொய்யான தகவல்களை இணைத்து விடுவதாக ஆங்கிலேயே ஆட்சி கருதியதால்தான்!


சமயங்களில், ஸ்டுடியோ முதலாளிகளும் அவ்வாறு விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் பல காட்சிகளை ஸ்டுடியோவிலேயே எடுத்துச் சேர்த்தும் வந்தார்கள். ஒளிப்பதிவாளர்கள் வெளிப்புறங்களில் தேவையான சுவாரஸ்யம் இல்லையெனில், “மேஜை மீது மினியேச்சர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள்” சிகரெட் மற்றும் சுருட்டுப்புகையைப் பயன்படுத்தி குண்டு வெடித்துப்புகை வரும் காட்சிகளை சேர்த்துத் தொகுத்து விடுவார்கள். அத்தகைய காட்சிகளின் நம்பகத்தன்மை பற்றி அக்காலகட்டத்து ரசிகர்களுக்கு எந்தவித சந்தேகமும் எழவில்லை. இவைபோன்ற நடவடிக்கைகள், கேவலமான ஏமாற்றுவேலைகள் என்பதை மறந்து, “புத்திசாலித்தனமான துணிவுமிக்க வியாபாரம்” என்ற வகையில்தான் கடும்போட்டி நிறைந்திருந்த அன்றையத் திரையுலகம் மதித்தது.


எந்தவிதக்கொள்கை, கோட்பாடு அற்ற வியாபாரிகளிடமிருந்து “உண்மை – நிகழ்வு”ப்படங்களை மீட்க வேண்டியிருந்தது. அப்படி மீட்டதற்கான பெருமை, மனச்சாட்சியும், அர்ப்பணிப்பும் நிறைந்த கலைஞர்களான, தாதாசாகேப் பால்கே, அநாதி நாத் போஸ், நித்தீஷ் லாஹிரி, திரேந்திர நாத் கங்கோ பாத்யாயா, சுச்சேத் சிங், பாபுராவ் பெயிண்ட்ர், ஆர். வெங்கையா, ஏ.நாராயணன், மற்றும் பலரையே சாரும்.


அக்காலப் படப்பிடிப்பு, நிறுவனங்கள் தயாரித்த “உண்மை – நிகழ்வு” படங்களின் பெயர்களைப் பார்த்தாலே, இரண்டு மாறுபட்ட அணுகுமுறைகள் இருந்து வந்தன என்பது நன்கு புரியும். நமது நாட்டை ஆண்டுவந்த காலனி ஆதிக்க வாதிகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வது என்ற அணுகுமுறை கல்கத்தாவைச் சேர்ந்த மதன் தியேட்டர்ஸ் முன்னோடியாகத் திகழ்ந்த படநிறுவனங்களிடம் காணப்பட்டது.


”டாபிக்கல் பிலிம் லிமிடெட்” என்ற நிறுவனமும், “டாட்டா கார்ப்பரேஷன்” என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்த, ஏழு ரீல்களும் 6,400 அடி நீளமும் கொண்ட “ஹிஸ்ராயல் ஹைனஸ், தி டியூக் ஆஃப் கன்னாட்டின் இந்திய விஜயம்” “பல்வேறு இந்திய நகரங்களுக்கு வைஸ்ராயின் விஜயம்”.... மற்றும் “அரச குடும்பத்துத் திருமணங்கள்”.... ஆகிய தலைப்புகள் முதல்வகையைச் சேரும்.

பிற நிறுவனங்களான , “ஹிந்துஸ்தான் சினிமா பிலிம் கம்பெனி” “கோஹினூர் பிலிம் கம்பெனி” “இம்பீரியல் பிலிம் கம்பெனி” “சாரதா” “கிருஷ்ணா” மற்றும் பல நிறுவனங்களோ தேசிய இயக்கத்தின் பின்புலமாக இருந்த வலுவான மனவெழுச்சியை, பதிவு செய்திருக்கின்றன. அன்றைய தணிக்கை இலாக்கா ஆவணங்களில் பதிவாகியிருக்கும் கீழ்க்கண்ட தலைப்புகளே இத்தகைய அணுகுமுறைக்கு உதாரணங்களாகும்.


1.) “கோஹினூர் பிலிம் கம்பெனி” (1921 ஆம் ஆண்டு அக்டோபர்) தயாரித்த,

”எபின்ஸ்டன் காம்பவுண்டில் அந்நியத்துணிகள் எரிப்பு”


2.) “சவுராஷ்டிரா சினிமாட்டோகிராஃப் கம்பெனி லிமிடெட்” என்ற நிறுவனம் தயாரித்த 713 அடி நீளமுள்ள, ”பருத்திப் பட்டையிலிருந்த வீட்டில் நெய்த துணிவரை – மற்றும் சர்க்காவில் நூல் நூற்கும் சிலர்.”


3.) நவல் காந்தி என்பவர் 1926ல் தயாரித்த ”ஓர் இந்தியத் தூய்மை உணவுப்பொருள் தயாரிக்கும் தொழிலின் வளர்ச்சி”


4.) “பூனா நகரில் திறந்து வைக்கப்பட்ட சிவாஜியின் சிலை” (1928 ஆம் ஆண்டு ஜீன் மாதத்தில், “மதன் கம்பெனி” உட்பட ஐந்து நிறுவனங்கள் அந்த நிகழ்ச்சியைப் படமாகத் தயாரித்திருந்தன).


5.) 1924ல் பி.வி.வரேர்க்கர் மற்றும் பி.ஆர். லீலே இருவரும் தயாரித்த... “மகாத்மாவின் விந்தை”

மேற்சொன்ன பட்டியலில் பல கதைப்படங்களும் அடங்கும். அத்தகைய துண்டுப்படங்களின் தலைப்புகள் பின்வருமாறு;

1. “ஈஸ்ட் இண்டியா பிலிம் கம்பெனி”யின் “நவநாகரிகக் கணவன் மீது விசாரணை”

2. “மனோரமா பிலிம்ஸ்” தயாரித்த.... “மனைவிகள்- ஒன்றும் இரண்டும்”

3. (”ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனி தயாரித்த... “மீறப்பட்ட சத்தியம்”

4. அதே நிறுவனத்தின் “பட்வர்த்தனின் ராயல் சர்க்கஸ்”

’ உண்மை – நிகழ்வுப்’ படங்களைத் தயாரிப்பதில் தென்னிந்தியாவும் பின்தங்கி விடவில்லை.

தென்னிந்தியாவில் தயாரான அத்தகைய படங்களின் பெயர்கள் பின்வருமாறு இருந்தன.;

1) 1922ல் “மதன் தியேட்டர்ஸ்” நிறுவனம் தயாரித்த

(அ) “திருச்சூர் பூரம் திருவிழா”

(ஆ) “தஞ்சாவூர் , திருச்சி, மதுரை – சில காட்சிகள்”

(இ) “சென்னை – சில காட்சிகள்” (1923)

(ஈ) “சென்னையில் ரம்ஜான் பண்டிகை”

(உ) “சென்னை – மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் தாமஸ் பள்ளி – வாழ்க்கை.

2.) 1924ல் “இந்தியன் ஆர்ட் – கிராஃப்ட்” நிறுவனம் தயாரித்த

(அ) “தேசிய உடல் நலவாரம் – சென்னை”

(ஆ) “தென்னிந்தியாவில் வெள்ளம்”

3.) 1925ல் “எக்ஸெல்சியல் பிலிம் கம்பெனி”தயாரித்த

(அ) “மைசூர் தசரா ஊர்வலம்”

(ஆ) “தென்னிந்தியாவில் காதி கண்காட்சிகள்”

(இ) “மாட்சிமை தாங்கிய நிஜாமின் பிறந்த நாள்” – (1926)

(ஈ) “சென்னை விமானப்பயிற்சி கிளப்பின் தொடக்கம்...”

(உ) “சென்னை சாரணம்னம்போரி” (1927) “வினாய நகரில் கிரிக்கெட்”

4.) 1927ல் “மதன் தியேட்டர்ஸ் தயாரித்த “ஹைதராபாத் டாப்பிகல்”

5.) 1929ல் “ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்த “சென்னையில் “பார்க் பேர்” கண்காட்சி” “மதன் தியேட்டர்ஸ் “தயாரித்த “மைசூர்”

6) 1931ல் “ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்த “தென்னிந்திய ரயில்வேயில் மின்சார ரயில் வண்டி தொடக்கம்...

7.)“சரஸ்வதி பிலிம்ஸ் லிமிடெட்” தயாரித்த “குருவாயூர் கோயில் சத்யாக்ரகம்...”

(அ) “சென்னைக்கு மகாத்மா காந்தி வருகை”

(ஆ) “சாகர் பிலிம் கம்பெனி” தயாரித்த “ஹைதராபாத் டாப்பிக்கல்”

(இ) “அஜந்தா சினிடோன்” தயாரித்த “மிஸ்டர் கோபிநாத்தின் நடனம்”

8.) 1934ல்

(அ) “பயனீர் பிலிம்ஸ்” – “மிஸ்டர் சத்யமூர்த்தியின் உரை”

(ஆ) “ராயல் டாக்கீஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ்” – “பரதநாட்டியம்”

(இ) “ஷண்முகானந்தா டாக்கீஸ்” – “மேட்டூர் அணை”

(ஈ) “தி மெட்ராஸ் யுனைட்டெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன்” – “நவரசக் கூத்து”

(உ) “சுந்தரம் டாக்கீஸ்” - “நாசகாலக் கோட்டை”

(ஊ) “ராஜேஸ்வரி டாக்கீஸ்”- “ருக்மணி தேவியின் நடனம்”

(எ) அதே நிறுவனத்தின் – “கய்யாடு பேட்டை”

(ஏ) “ராம் டாக்கீஸ்” – “மன்னார்சாமி”

(ஐ) “ஸ்ரீனிவாஸ் சினிடோன்” – “வரதட்சிணை மாப்பிள்ளை”


துரதிர்ஷ்டவசமாக, தெற்கு ரயில்வே நிர்வாகத்திலிருந்து பெறப்பட்ட சில மவுனப் படக்காட்சிகளைத் தவிர, மேற்கண்ட பட்டியலிலிருந்து வேறெந்த படத்தின் பிரதியும் தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்திற்குக் கிடைக்கவில்லை.


வேறெந்தத் தனிமனிதரிடமிருந்தோ நிறுவனத்தினரிடமிருந்தோ, இப்படங்களிலிருந்து காட்சித் துண்டுகள் கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை.


ஆயினும், நமது நாட்டில் தயாரான, மவுனப் படகாலத்து, ‘உண்மை – நிகழ்வு’ப் படங்களின் பிரதிகள் வெளிநாட்டு திரைப்பட ஆவணக்காப்பகங்களில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது.


மேற்சொன்ன பட்டியலைப் பார்க்கும்போது அந்தப்படங்களெல்லாம், வெறும் புகைப்படப்பதிவுகள் மட்டும் அல்ல என்பதும், அந்தப் படங்களில் சமுதாயப் பொறுப்புணர்வு, விழிப்புணர்ச்சி, தூண்டுதல், ஆகியவை நிறைந்திருந்தன என்பதும், தெரியவருகிறது. பால்கேயும் அவரது சமகாலத் தயாரிப்பாளர்களும் புதிய கலைச்சாதனமான திரைப்படத்தின் அளவிடமுடியாத சக்தியை உணர்ந்திருந்தார்கள். ரசிகர்களின் பொழுதுபோக்குத் தேவையைத் தீர்ப்பது மட்டுமில்லாது, திரைப்படங்களை, கற்றுக் கொடுக்கும், அறிவுக்கும் மற்றும் தூண்டுதல் செய்யும் பணிக்கான கருவியாகவும் பயன்படுத்த முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அதனால்தான் மவுனப் பட காலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் பொழுதுபோக்குப் படங்களைத் தயாரித்ததுடன் , தங்களது முதலீடுகளில் ஒருபகுதியை, நமது நாட்டுமக்கள், நடப்புகள், இடங்கள் மற்றும் உண்மை நிகழ்வுகள் ஆகியவற்றைப் பதிவுசெய்து வைப்பதற்கு ஒதுக்கி வைக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்திருந்தனர். இந்த வகையில், தேசிய அரசு அமைக்கப்பட்ட பிறகு, அத்தகைய உயர்ந்த நிலையிலான உள்ளுணர்வில் வளர்ந்த திரைப்படத் தயாரிப்பு முறை. சந்தேகத்துடன் கீழானதாகக் கருதப்பட்டதும். ஓர் அரசுத்துறை நிறுவனம் மட்டுமே கட்டாயமாக இத்தகைய செய்தி மற்றும் டாக்குமெண்டரிப் படங்களைத் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை நிறைவேற்ற முடியும் என்று கருதப்பட்டதும், எத்தகையதொரு வினோத நிலை?!


இடையில் எங்கோ, எப்படியோ நாம் தவறியிருக்கிறோம். தவறிக்கொண்டிருக்கிறோம்...!


ஆகஸ்ட் – செப்டம்பர் 1992

- தொடரும் -


சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, பி.கே. நாயர் அவர்களின் கட்டுரைகளை பேசாமொழி இதழில் மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.

இதழ்-20 - உள்ளடக்கம்

உலக சினிமா சாதனையாளர்கள் - 6 செர்கய் ஐஸன்ஸ்டின் - -கேஹரிஹரன்

தனி மர தோப்புகள் American Beauty - -வருணன்

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது - -அருண்-மோ

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 - தினேஷ்-யுகேந்தர்

மீண்டும் ஒரு சவால் & ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல் - கேஎஸ்சங்கர்-ராஜா-தினமலர்

கடவுளின் பெயரால்.... ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல் - வசந்தி-சங்கரநாராயணன்

லத்தீன் அமெரிக்க சினிமா - சாரு-நிவேதிதா

பேசாதிருத்தல் என்பது ஒரு தேர்வுரிமை ஆகாது ஆனந்த் பட்வர்தனோடு யமுனா ராஜேந்திரன் & அருண் மோ. உரையாடல் - -தமிழில்-எஸ்வி-உதயகுமார்

செய்திகளை பெற குழுசேரவும்

Your email




இந்திய சினிமா வரலாறு – 1


- பி.கே.நாயர் :: தமிழில் : ப்ரீதம் :: தட்டச்சு உதவி: தினேஷ் குமார்



உற்சாகமான துவக்கம்


ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன், பூனாவிற்கு 100 மைல் தொலைவில் ஒரு சின்னஞ்சிறு ஊரில், ஆசாரமான ஹிந்து குடும்பத்தை சேர்ந்த ஒருவர், தன் புரோகிதத் தொழிலை கைவிட்டு, மனைவியின் ஆபரணங்களை விற்று.., முதல் இந்தைய திரைப்படத்தை தயாரித்தார். அந்த மனிதரே பிரபலமாக தாதா ஸாஹேப் பால்கே (Dada Saheb Phalke) என அழைக்கப்பட்ட துந்திராஜ் கோபிந்த் பால்கே (Dhundiraj Gonind Phalke)- நடந்த இடம் நாஸிக் – திரைப்படத்தின் பெயர் – ராஜா ஹரிச்சந்திர (1913) (Raja Harichandra). உண்மைக்காக தன் ராஜ்யம், மனைவி, சொத்து எல்லாவற்றையும் இழந்த ஒரு பேரரசனை பற்றிய நான்கு ரீல் கொண்ட மெளன திரைப்படம் (ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் விளக்கவுரை அட்டைகள் இடையிடையே இருந்தன) “சுவதேசி பிலிம்” என்ற நெடு நாள் கனவு அன்று நினைவு ஆயிற்று. இந்திய சினிமாவின் நீண்ட பயணக் கதை இப்படியாகத்தான் தொடங்கியது... பால்கேயின் திரைப்படம் ஒரு விபத்து அல்ல. ஒரு பெரும் மேதாவியும் அவருக்கு முன்னே பல மேன்மையான முன்னோடிகளும் பல ஆண்டுகளாக செயல்படுத்திய நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளை நோக்கி செல்லுவோம். அப்பொழுதே ‘சினிமா’ என்ற நாம் அறிந்த விந்தையைப் பற்றி சில வியக்கத் தகுந்த விடைகள் கிட்டும்.



 




 


இந்திய சினிமா வரலாறு – 1


- பி.கே.நாயர் :: தமிழில் : ப்ரீதம் :: தட்டச்சு உதவி: தினேஷ் குமார்



உற்சாகமான துவக்கம்


ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன், பூனாவிற்கு 100 மைல் தொலைவில் ஒரு சின்னஞ்சிறு ஊரில், ஆசாரமான ஹிந்து குடும்பத்தை சேர்ந்த ஒருவர், தன் புரோகிதத் தொழிலை கைவிட்டு, மனைவியின் ஆபரணங்களை விற்று.., முதல் இந்தைய திரைப்படத்தை தயாரித்தார். அந்த மனிதரே பிரபலமாக தாதா ஸாஹேப் பால்கே (Dada Saheb Phalke) என அழைக்கப்பட்ட துந்திராஜ் கோபிந்த் பால்கே (Dhundiraj Gonind Phalke)- நடந்த இடம் நாஸிக் – திரைப்படத்தின் பெயர் – ராஜா ஹரிச்சந்திர (1913) (Raja Harichandra). உண்மைக்காக தன் ராஜ்யம், மனைவி, சொத்து எல்லாவற்றையும் இழந்த ஒரு பேரரசனை பற்றிய நான்கு ரீல் கொண்ட மெளன திரைப்படம் (ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் விளக்கவுரை அட்டைகள் இடையிடையே இருந்தன) “சுவதேசி பிலிம்” என்ற நெடு நாள் கனவு அன்று நினைவு ஆயிற்று. இந்திய சினிமாவின் நீண்ட பயணக் கதை இப்படியாகத்தான் தொடங்கியது... பால்கேயின் திரைப்படம் ஒரு விபத்து அல்ல. ஒரு பெரும் மேதாவியும் அவருக்கு முன்னே பல மேன்மையான முன்னோடிகளும் பல ஆண்டுகளாக செயல்படுத்திய நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளை நோக்கி செல்லுவோம். அப்பொழுதே ‘சினிமா’ என்ற நாம் அறிந்த விந்தையைப் பற்றி சில வியக்கத் தகுந்த விடைகள் கிட்டும்.


சினிமாவிற்கு முந்தைய காலம்:


பாடல்களுடனும், கவிதைகளுடனும், வரைபடங்கள் கொண்டு கதை, சொல்வது தொன்மைவாய்ந்த இந்திய மரபு பாட் பெயின்டிங்க்ஸ் வரைப் படங்களுடன் (Pat paintings) நேர்முக நாடகங்கள் கூடிய கதைக்கூற்று வங்காளம், ஒரிசா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் பிரபலமாக இருந்தன. சுவர்கள் மீதோ, நூல் சுருள்கள் மீதோ படங்கள் வரையப்பட்டிருக்கும்,. சூத்ரகாரி கதை சொல்லிய வண்ணம் படங்களை சுட்டிக்காட்டியபடி வருவான். தேவர்கள், தெய்வங்கள் பற்றிய வழக்கமான கதைகளும், மரபு வழி இதிகாசங்களும், ஆடல் இசையுடன் மலரும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இக்கலைஞர்களில் பலர் பிழைப்பைத்தேடி நகரங்களை வந்தடைந்தனர். இதற்கு முன் அவர்கள் செய்து வந்த பாட் பெயிண்டிங்க் முறையில், கதை சொல்லும் பாணியை சற்று வேறுபடுத்தி பெரும்பான்மையோரை வந்தடையச் செய்தனர். உயிர்ப்புத் திறமற்ற இந்த முறையிலும் பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. முன்பு மனித ஆற்றலை நம்பி இருந்தபோது இந்த ஓவியங்களில் இருந்த தங்குதடையற்ற இயக்கம் இப்பொழுது காணாமல் போயிற்று.


1840லிருந்தே இந்தியர்களிடையே நிழற்படக் கலை பழக்கத்திலிருந்தது. இதற்கு ஒரு வருடம் முன்புதான் பாரிஸில் இக்கலை அறிமுகப்படுத்தப்பட்டது. பாட் பெயிண்டிங்க் முறைக்கும், கம்பெனி ஸ்கூல் பெயிண்டிங் முறைக்கும் (Company school painting) இக்கலையினால் மாறுபட்ட வடிவம் தரப்பட்டது. முந்தைய பாணியில் ஆழத்தைவிட மேற்பரப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள் அரசு தர்பார்களில் உள்ளன. அதை கவனிக்கையில் வரையப்பட்ட பொருள் மேல் எழுந்தவாரியாக நம்மை சிறைப்படுத்தும். அவற்றில் எந்தவிதமான சலனமோ, ஆழமோ இருக்காது. தூரப் பரிமாணக் கோடுகளின் செயல்பாடு (perspectival force) அமுக்கப்பட்டு அல்லது முற்றிலும் விலக்கப்பட்டு இருக்கும். கம்பெனி முறை ஓவியமோ- பிரதானமாக ஒரு நுகர்பொருள் சில வித்தியாசங்கள் இருப்பினும், ஆங்கிலேயரின் கண்ணோட்டத்தில் அது ஒன்றை மட்டுமே குறித்தது.- ஆங்கிலேய தேவைக்கேற்ப தங்களை ஒன்றைச் செய்ய துடிக்கும் இந்திய ஓவியர்கள், இதனாலயே ஓவியத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் பொருள், உடை, அலங்காரம், வாகனம், கோயில், சம்பிரதாயம் எல்லாமே ஆங்கிலேயரை கவரக் கூடிய வகையிலேயே அமைக்கப்பெற்றிருக்கும். இவர்கள் தீட்டிய இந்திய இயற்கைக் காட்சி ஓவியங்களுக்கு பிரிட்டிஷ்காரர்களிடையே ஏகமான வரவேற்பு இருந்தது. ஆங்கிலேயர் விரும்பிய அந்த “இந்தியத் தனத்தை” அழிவில்லாமல் பாதுகாக்கும் முறையில் நம்முடைய ஓவியர்கள் அவர்கள் தீட்டிய படங்களிலோ, அல்லது அவை தீட்டப்பட்ட முறையிலோ எந்த வித தனித்தன்மையையும் தலைதூக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் அச்சு வார்த்தார் போல் ஒரே மாதிரியான பல ஓவியங்களின் களஞ்சியமே உருவாகியது. வெளிநாட்டு மானியத்தினால் ஏற்பட்ட இக்களஞ்சியத்தினால் பின்னால் பல விதமான உபயோகங்கள் இருந்தன. ஆங்கிலேயர்களையும் இந்திய குடிமக்களையும் நையாண்டி செய்ய, உள்நாட்டு நாண்மரபு வழக்கங்களை உருவாக்க, மற்றும் சில முற்கால புராண- இலக்கிய பாணி படைப்புகளைமுன் வைக்க.


மாய விளக்கு – ஸம்பரிக் கரோலிகா

(Sambharik kharolika)


ஒரு காட்சி வில்லையின் மூலம் திரையின் மீது ஒளியை ஏவச் செய்யும் கருவியே மாய விளக்கு (Magic Lantern). 1700ல் மேற்கத்திய நாடுகளில் மேசை மீது வைக்கக்கூடிய மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டது. வட்டமான தகடின் மீது காட்சிவில்லைகள் பதிக்கப்பட்டிருக்கும். அது சுழலும் பொழுது ஒரு எண்ணை விளக்கின் மூலம் ஒளி ஏவப்படும். 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தக் கருவி மிக பிரபலமாக இருந்தது. அதுவரையில் இருந்ததிலிருந்து உலகம் ஒரு பெறும் மாறுதலுக்கு தயாராகிக் கொண்டிருந்ததையே இது சுட்டிக்காட்டுகின்றது. புனிதத்தன்மை பெற்ற முறையிலிருந்து சமய கட்பாடற்ற முறைக்கு நிகழ்ந்த அகற்சி – இன்னமும் தெய்வீகக் காப்புடன் படைக்கப்படும் கலைப்பொருளில் கூட வெளியுலகத்தின் நோக்கு இருக்கவேண்டும் என்ற கருத்தை ஐரோப்பிய நாடுகளில் கலை – இலக்கிய மறுமலர்ச்சி (Renaissance) அறிமுகப்படுத்தியது. அதற்கான வழிமுறைகளும், மரபுகளும் இந்த இயலுருத் தோற்றத்தை (perspective) மனதில் கொண்டே வகுக்கப்பட்டன.


மாய விளக்கை இந்திய நாட்டிற்கு கொண்டுவந்த முன்னோடிகள் கல்யாணைச் சேர்ந்த பட்வர்தன் சகோதரர்கள் (Patwardhan) பம்பாய், பூனா, கோலாபூர் சுற்றுப்புறங்களில் கடந்த நூற்றாண்டின் இறுதியில் இவர்கள் மாய விளக்கு காட்சிகள் காட்டினார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள் கருவியிலும் ஒரு மரவட்ட சட்டத்தில் கண்ணாடி காட்சி வில்லைகள் பொறுத்தப்பட்டிருந்தன. இவ்வில்லைகளில் அழகாக வரையப்பட்ட கையோவியங்கள் இருந்தன. ஒளியை ஏவ நடுவில் ஒரு பழங்கால எண்ணை விளக்கு இருந்தது. ராமாயண, மஹாபாரதத்திலிருந்து உட்கதை, காட்சிகள் சுழல அதற்கு ஏற்ப அக்குடும்ப பெண்கள் பின்னணிப் பாடல் இசைப்பார்கள். காட்சிகளின் இடையே சர்க்கஸ் கோமாளிகள் வேடிக்கை காட்டுவார்கள். மேற்கு, மத்திய இந்தியாவில் நெடுந்தூரம் பயணித்து ராஜகுடும்பங்களுக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் மாய விளக்கு காட்சிகளை இச்சகோதரர்கள் காட்டியதாக, இக்குடும்பத்தின் இன்றைய தலைமுறையினர் சொல்கின்றனர். 1910 வரையில் அவர் ஊரின் சுற்றுப்புறங்களில் கூட இக்காட்சிகளை காட்டினார்களாம்.


நகரும் படிவங்கள்- மாயத்தோற்றம்


அசையும் புகைப்பட பிம்பங்களை செல்லுலாய்ட் ஃபிலிமில் பதிவு செய்யும் முறைக்கு பெயர் தான் ஒளிப்பதிவு: (Cinemotography). 1839ல் தாகெர்ரினாலும், நீப்ஸ்ஸேவினாலும் (Daguerre & Niepee) கண்டுபிடிக்கப்பட்டதே நிழற்படக்கலை. இதற்கு முன்பே, ரோஜே, ப்லேதொ (Roget, Plateu)போன்றவர்களால் காட்சி காக்கும் திறன் (persistence of vision) என்ற கருத்து அறிமுகப்படுத்தப் பட்டது. தொடர்நிலை சித்திரங்களின் திரையிடல் 1870லிருந்து 1880வரையிலான சலனப் புகைப்பட முயற்சிகளுக்கு இட்டுச் சென்றன. 1889ல் எடிஸனும், டிக்ஸனும் திரைப்பட காமராவை கண்டுபிடித்தனர். சிறு துவாரத்தின் மூலம் பார்க்கக்கூடிய பிலிம் சுருள்களும் எடிஸனுக்கு சொந்தமான ‘ப்ளாக் மரியா’ (Black maria) படப்பிடிப்பு கூடத்தில் தயாரிக்கப்பட்டது. டிஸம்பர் மாதம் 1895ல், பாரிஸில் முதல் திரைப்படம் காட்டப்பட்டது. லூமியர் சகோதரர்களால் (Lumiere Brothers).


இந்த நூற்றாண்டின் அற்புதம்:


உலகமெங்கும் திரைப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட அதே வேளையில் இந்தியாவிலும் சினிமா அடியெடுத்து வைத்தது. 1896ல், ஜீலை 7ஆம் தேதி லூமியர் சகோதரர்களின் பிரதிநிதிகள் பம்பாயிலுள்ள வாட்ஸன் ஹோட்டலில் முதல் திரைப்படக் காட்சியை காட்டினார்கள். (இப்பொழுது அங்கு கப்பல் படைக்கான கட்டிடம் உள்ளது) “டைம்ஸ் ஆப் இந்தியா” என்ற பத்திரிக்கையில் இதற்கான விளம்பரம் கூறியது.-

நூற்றாண்டின் அற்புதம்,

உலகின் அதிசயம்

இயற்கை வடிவளவில்,

உயிருள்ள நிழற்படக் காட்சி-


லூமியர் சகோதரர்களின் ஒளிப்பதிவில் அறிவிக்கப்பட்ட படத்தலைப்புகளில் பின்வருவன இடம்பெற்றிருந்தன.

1. ஒளிப்பதிவின் வரவு (Entry of cinematography)

2. புகைவண்டியின் வருகை (Arrival of a Train)

3. கடலில் குளியல் (The sea Bath)

4. தகர்ப்பு (The Demolition)

5. தொழிற்சாலை விட்டு வருதல் (Leaving the Factory)

6. சக்கரங்களில் பெண்களும் படைவீரர்களும் (Ladies & Soldiers on Wheels)


ஆறு, ஏழு, ஒன்பது, பத்து மணிக்காட்சிகள் இருந்தன. நுழைவுக்கட்டணம் ரூபாய் ஒன்று. இதனால் ஈர்க்கப்பட்டு வந்த பார்வையாளர்களில் ஹரிஸ்சந்திரா சாகாரம் பட்வடேகரும் (Harischandra Sakharam Bhatvadekar) ஒருவர். அவர் கென்னடி பாலம் அருகில் நிழற்படம் சம்பந்தப்பட்ட கடை வைத்திருந்தார். அவர் லூமியரின் ஒளிப்பதிவுக் கருவியால் கவரப்பட்டார். அது காமிராவில் பதிவு செய்தல், படச்சுருளை புத்துருவாக்குதல், ஒளிபரப்புதல் ஆகிய மூன்று வேலைகளையும் செய்யக்கூடியக் கருவி. இக்கருவியை இந்தியாவில் விற்பனை செய்ய கூடிய உரிமையை அவர் வாங்கினார். இக் கருவியை பழகிக் கொள்வதற்காக பட்வடேகர் சில காட்சிகளை ஒளிப்பதிவுச் செய்து சரித்தரம் படைத்தார். பட்வடேகர் (பரவலாக இவர் ஸாவே தாதா என அழைக்கப்பட்டார்) தான் இதனால் இந்திய சரித்திரத்தின் முதல் திரைப்பட்த்தை உருவாக்கினார். இத்திரைப்படம் திட்டமிட்டு இயற்றப்பட்டது அல்ல. தற்செயலாகவே நடந்தது. இருந்தும் பிற்காலத்தில் திறமை வாய்ந்த திரைப்பட இயக்குனராக ஆனார் என்பதில் ஐயமில்லை. அவர் இயற்றிய பல படங்கள் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. அதில் மிக முக்கியமானது 1901ஆம் ஆண்டு டிஸம்பரில் அவர் தொகுத்தளித்த ‘சண்டைக்கார்ர் பரன்ஜ்பேயின் திரும்புகை’ (Return of wrangler paranjpe). இதுவே இந்தியாவின் முதல் செய்திப்படம். இதற்குள் அவர் ஒரு ப்ரொஜக்டர் வாங்கியதால் திறந்த வெளியில் நிறைய திரைப்படக் காட்சிகளை காட்டி வந்தார். 1903ல் ஏழாம் எட்வர்டின் முடிசூட்டு விழாவை கொண்டாடிய இந்திய தர்பாரை ஏக கோலாகலத்துடன் படம் பிடித்து காட்டினார். அவர் முன்னோடியாக இருந்ததினால் சினிமா சம்பந்தப்பட்ட பிலிம் சுருள்கள், ப்ரொஜக்டர் போன்ற பொருட்கள் ஐரோப்பிய, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி ஆகின. அன்றைக்கு இருந்த உலக திரைப்பட கலைஞர்களைப் போல் பட்வடேகர் உலக திறமைவாய்ந்த ஒளிப்பதிவாளர்.- வெளியிட்டாளராக இருந்தார்.


உயிருள்ள பொழுது போக்கும் டப்பாவில் வரும் பொழுதுபோக்கும்


அன்றைய அளவில் பொழுதுபோக்கு என்பதற்கு கூத்து, நாடகம் போன்ற பொதுக் காட்சிகளே இருந்தன. ஒருவகையில் பார்வையாளர்களிடையே இதற்கு இந்த நேரடி வரவேற்பு அலாதிதான். டெண்ட் கொட்டகையோ, திறந்த வெளியோ, சபாவோ, மிகப்பெரிய அரங்கமோ,...... எதுவாக இருப்பினும் நடிப்பவனுக்கும், பார்ப்பவனுக்கும் நேரடியான தொடர்பு ஒன்று இருக்கும். கம்பனி நாடகங்கள் ஆக்கிரமித்து கொண்டிருந்த அந்த இடங்களுக்கு இப்பொழுது ஒரு புது எதிரி வந்திருக்கான். தகரடப்பாவில் அடைக்கப்பட்ட பொழுதுபோக்கான அவன் இப்பொழுது பூரணமாக ஜெயித்துவிட்டான். சினிமா, நாடகம், நடனம், மாயாஜாலம், கூத்து என்று எல்லா நாட்டுப்புறக் கலைகளும் சினிமாவால் ஓரம் தள்ளப்பட்டன. கல்கத்தாவில் கிளாஸிக் நாடக குழுவினரின் நாடகங்களை ஹீராலால் சென் (Hiralal Sen) என்பவர் படம் பிடித்தார். இதைபோன்ற பல படங்கள் நாடகங்களில் இடையேயும், அவை கொண்டு செல்ல முடியாத குக்கிராமங்களிலும் திரையிடப்பட்டன. ஏராளமான பேருக்கு, எவ்வளவு முறை வேண்டுமானாலும் திரையிட்டுக் காட்டக்கூடிய இந்த புது பொழுது போக்கு சாதனம், கலைவிற்பன்னர்களை வெகுவாக ஈர்த்தது. இருப்பினும், இதற்காக தனிப்பட்ட அரங்கங்கள் அமைக்க அவர்கள் தயங்கினர். அந்த மாற்றம் மிக ஜாக்கிரதையாக மெதுவாகவே நடந்தது. அதனாலயே இந்த நூற்றாண்டின் முதல்பகுதியில் கூத்தின் இடையே தான் சினிமா திரையிடப்பட்டது. எதற்கு அதிக வரவேற்பு இருந்ததோ, அதற்கேற்ப காட்சிகள் மாற்றப்படும். உதாரணத்திற்கு சினிமாவை மக்கள் காண விரும்பவில்லையெனில், புகழ்பெற்ற, நடனமணியோ, பாடகியோ அந்த நேரத்தில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இது சமயத்திற்கு ஏற்ப மாறலாம். அந்த காலத்தில் வெளியிடப்பட்ட பல விளம்பரங்களில் நாம் இந்த கலப்படமான பொழுதுபோக்கை காணலாம். நாட்கள் உருண்டோட, சினிமா அதிக பிரபலமானது. மற்ற கலைகள் எல்லாம் பின்தங்கின. இதனால் சினிமாவின் பலம் மேலும் அதிகமாயிற்று.


பயணக்கூத்தாடி (Travelling Showman)


ஒளிப்பதிவாளர் – வெளியீட்டாளர், போதுமான அளவு பிலிம் சுருள்களுடன் ஊர் ஊராகச் சென்று தன் படங்களை திரையிட்டார். தோட்டங்கள், புறம்போக்கு நிலங்கள், கிராமங்கள், நகரங்கள் என்று பயணித்தால் டூரிங்க் டாக்கீஸ் (Touring Talkies) என்ற புது பொழுதுபோக்கு சாதனம் உருவாகி இன்று வரையில் நிலைத்துள்ளது.


கல்கத்தா மைதானத்தில் ஒரு கூடாரம் அமைத்து “பயாஸ்கோப்”திரையரங்கம் அமைத்தார் ஜம்ஷெட்ஜீ ப்ரம்ஜீ மதன் என்பவர் (Jamshetji Framji Madan). இது அவரின் துவக்கம். பின்னால் இதுவே மிக பெரிய பிலிம் தயாரிக்கும், வெளியிடும் கம்பனியாக வளர்ந்தது. இந்தியா, பர்மா, சிலோன், ஆகிய மூன்று நாடுகளின் சினிமாத் தொழில் முப்பது வருடங்களுக்கு இக்கம்பெனியின் கையில் இருந்தது. மகனுக்கு அடுத்தபடியாக இத்துறையில் இருந்த பெரும்புள்ளி அப்துலாலி இஸீபெலி (Abdulally Essofally) (1884- 1957) என்பவர். இவரும் பயாஸ்கோபில் துவங்கியவரே. பிற்காலத்தில் அவர் பம்பாயில் வாழ்ந்தார். அங்கு அவருக்கு அலெக்ஸாண்டரா திரையரங்கம் இருந்தது. அதைத் தவிர இந்தியாவின் முதல் பேசும் படத்தை திரையிட்ட மெஜெஸ்டிக் திரையரங்கமும் அவருடையதே.


இந்த நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களில் சினிமா சந்தை உலகமெங்கும் இருந்ததுபோல் தான் இங்கும் இருந்தது. பிரான்சின் பதே (Pathe) என்ற சினிமா கம்பெனியும்; அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளின் கம்பெனிகளும் இந்தியாவில் இடம்பிடிக்கப் போட்டி போட்டனர். அப்பொழுது இந்தியாவிற்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அந்த அதிசயத்தை தந்த மனிதர் குலவழக்கப்படி ஒரு புரோகிதராக ஆகியிருக்கவேண்டியவர் இந்திய சினிமாவின் தலைவிதியை நிர்ணயித்த அவர் – தாதா ஸாஹேப் பால்கே.

- தொடரும் -


சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, பி.கே. நாயர் அவர்களின் கட்டுரைகளை பேசாமொழி இதழில் மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.


 


go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com


முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi


 

 


காப்புரிமை © பேசாமொழி


  </மக்கள் வெள்ளத்திற்கு நடுவே காளையோடு மனிதன் சண்டையிடும் காட்சியைத்தான் முதன்முதலாக 'பால்கே' பார்க்கிறார். அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளிர இந்தியாவுக்கான முதல் சினிமா கனவு விதைக்கப்பட்டது. மும்பையில் ஒரு நெரிசலான பகுதியில் வெள்ளைக்காரர்களும் ஜமீன்தார்களும் வசதிமிக்கவர்களும் பார்க்கும் சிறு திரை அரங்க கொட்டகைக்கு அவர் அடிக்கடி செல்ல ஆரம்பித்தார். கண்பார்வை இழந்த நிலையிலும் தனது தாகத்தை அவர் இழக்கவில்லை. கையில் பெரிய தொகை ஏதுமில்லையென்றாலும் சினிமா எடுக்க வேண்டும் என்ற கனவு, சிறகுகளை மெல்ல அசைத்துக்கொண்டு 'துந்திராஜ் கோவிந்த் பால்கே' வை எங்கோ அழைத்துச் செல்கிறது.


ஒரு சின்னஞ்சிறு செடியாக முளைவிடத் தொடங்கிய 'நகரும் படம்' எனும் அவரது சினிமா ஆசை. கண் சிகிச்சைக்குப் பின்னர், எப்படி படம் ஓட்டுகிறார்கள் என்பதில் தொடங்கி எப்படி படம் எடுக்கிறார்கள், அதற்கு என்ன தொழில்நுட்பம், அதனை எப்படி செயல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட சினிமா சார்ந்த அனைத்து விதமான ஆர்வமும் அவருக்கு ஒரு விருட்சமாக வளரத் தொடங்கியது.


இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கிய தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார். தந்தை என்றால் ஒரு கண்டிப்புமிக்க ஒரு தந்தையின் தோற்றத்தை நினைத்துவிட வேண்டாம். சினிமாவின் தந்தை உண்மையிலேயே சினிமாவின் தந்தைக்கான அவ்வளவு அற்புதமான அலாதியான குணங்களையும் கொண்டவர். எல்லோரிடத்திலும் அன்பு, எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் ஆளுமை, எவரும் ரசிக்கத்தகுந்த திறமை வெளிப்பாடு. இதெல்லாம் சர்வசாதாரணமாக அவரிடம் குடிகொண்டிருந்ததால் அவர் சாதனைப் பயணம் சரியான இலக்கை அடைந்ததில் அங்கங்கே சின்னச்சின்ன இடையூறுகள் தவிர பெரிய இடர்ப்பாடுகள் எதையும் அவர் சந்திக்கவில்லை.


இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவர்தான் இந்திய சினிமாவுக்கு தந்தையா என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர். ராஜா ஹரிச்சந்திராவை முதல் இந்திய சினிமா என்று சொல்லாதீர்கள், முதல் மராத்தி சினிமா என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள் என்று அவர்கள் விவாதம் ஒன்றை உருவாக்குகிறார்கள். திரைப்பட விமர்சகர் வி.எம்.எஸ்.சுபகுணராஜன் எழுப்பும் இந்த வாதம் தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்யும் பெருமிதமும் தன்னம்பிக்கையும் கொண்டது. இதனை பிராந்திய வாதமாக நாம் பிரித்தறிய வேண்டியதில்லை.


மும்பையிலிருந்து பால்கே, இந்தியாவின் முதல் மவுனக் (கதைப்) படமாக ராஜ ஹரிச்சந்திராவை 1913 ஏப்ரலில் வெளியிடுகிறார். அதேபோல தமிழின் முதல் மவுன (கதைப்) படமாக ஆர்.நடராஜ முதலியார் 'கீசக வதம்' படத்தைத் திரையிடுகிறார். இரண்டு, மூன்று ஆண்டுகள் வித்தியாசங்களே உள்ள நிலையில் இந்தியாவின் முதல் சினிமா என்று எப்படி ராஜா ஹரிச்சந்திராவைக் குறிப்பிட முடியும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ராஜா ஹரிச்சந்திராவை முதல் மராத்தி படம் என்று சொல்லலாம் தவறில்லை என்கிற ரீதியில் அவர்களது கேள்விக்கான பதிலை அவர்களே முன்வைக்கிறார்கள்.




ஒருவகையில் இவர்கள் சொல்வதை நாம் புரிந்துகொள்ள முடிகிற அதேவேளையில் இந்தியாவிலேயே ஒரு முழுநீளத் திரைப்படத்தை உருவாக்கி இந்தியாவில் முதன்முதலாக திரையிட முடிந்தது என்பது இந்தியராக ஒருவரின் சாதனைதான். இதற்கு அடுத்த நிலையில்தானே தமிழகத்தில் 'கீசக வதம்' 1916-ல் திரையிடப்பட்டது. வரிசை முறையில் என்றால்கூட உருவாக்கம் சார்ந்த முயற்சிகள் என்றால்கூட முதல் இந்திய சினிமா என்ற பெருமையை 'ராஜா ஹரிச்சந்திரா' பெருவதில் பெரிய சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை.


உலகின் முதல் மவுன (கதைத்) திரைப்படமாக 'தி கிரேட் ட்ரெயின் ராப்ரி' 1903-ல் நியூ ஜெர்ஸியில் எட்வின் எஸ் போர்ட்டர் என்பவர் வெளியிட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு அடுத்த கட்டமாகத்தான் இந்தியாவில் இந்த முயற்சிகளும் நிகழ்கின்றன.


உலகின் முதல் படம் என்ற ஒரு கேள்விக்கு பதில் என்ன? என்பதையும் ஒருவர் ஆராயப் புகுவாரெனில் உலகின் முதல்படம் 'தி கிரேட் ட்ரெயின் ராஃப்பரியா? அல்லது 'அரைவல் ஆஃப் ட்ரெயினா?' என்ற குழப்பம் மெல்ல முகிழத் தொடங்கும்.


உண்மையில், ஆரம்பத்தில் மவுனக் கதைப் படங்களுக்கு முன்னதாகவே சின்ன சின்ன காட்சிகளாகத்தான் சில துண்டுப் படங்கள் எடுக்கப்பட்டு திரையிடப்பட்டன. அவற்றில் பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும் மக்கள் இறங்கி வெளியேறிச் செல்வது, ஒருவன் குதிரையில் அமர்ந்து செல்வது, ஒரு வீட்டெதிரே தோட்டத்தில் சிலரைச் சுற்றி கோட் போட்ட ஒருவர் நடனம் ஆடுவது இப்படங்கள்தான் உலகில் முதன்முதலாக எடுத்து மக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன.




உலகின் முதல் திரையிடலாக பொதுமக்கள் மத்தியில் உலகின் முதல் படமான 'அரைவல் ஆப் தி ட்ரெயின்' 50 விநாடிகளே ஓடக்கூடிய இப்படம் பாரீஸில் உள்ள கிராண்ட் கஃபே ஓட்டலில் உலகத்தில் முதன்முதலாகத் 1895-ல் திரையிடப்பட்டது. இதை அடுத்து உலகின் முதல் கதைப்படமாக 'தி கிரெட் ட்ரெயின் ராப்ஃரி'யைக் குறிப்பிடுகிறார்கள். இப்படம் 12 நிமிடங்களே ஓடக்கூடியது. அதன் பிறகுதான் உலகின் முதல் முழுநீளக் கதைப் படமாக 'தி ஸ்டோரி ஆப் கெல்லி கேங்' என்ற படம் குறிப்பிடப்படுகிறது. இப்படம் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது.


ஆக இவை எல்லாம் சினிமா வந்த பாதையைப் புரிந்துகொள்ளக்கூடிய தரவுகள்.


இவை மட்டுமில்ல உலகின் முதல் பேசும்படம் 'ஜாஸ் சிங்கர்' (1927), இந்தியாவின் முதல் பேசும் 'ஆலம் ஆரா' (1931) தமிழின் முதல் பேசும் படம் 'காளிதாஸ்' (1931) போன்ற செய்திகள் அனைத்தும் இன்று வெறும் தரவுகளாகவே அவை எஞ்சி நிற்கின்றன என்பது காலத்தின் வேகம் மட்டுமல்ல, கலையின் தேவைகளும் மாறிக்கொண்டேயிருப்பதால் அதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காமல் வேகமாக நகர்ந்துபோய்க்கொண்டே இருக்கின்றனர்.


மராத்தி திரைப்பட இயக்குநர் பரேஷ் முகாஷி ஒரு புதிய கோணத்தில் ஒன்றை யோசிக்கிறார். ஏன் நமது இந்தியாவில் முதன்முதலாக சினிமா எடுத்த கதையை ஒரு படமாக எடுக்கக்கூடாது? இந்த யோசனை பால்கேவின் முயற்சிகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


தமிழின் முதல் படத்தை இயக்கி தனது எலக்ட்ரிக் தியேட்டரிலேயே போட்டுக்காட்டிய நடராஜ முதலியாருக்கு நாம் என்ன செய்துவிட்டோம். ஒரு இரண்டங்குல அஞ்சல் தலையை வெளியிட்டதைவிட. இதில் ஒரு கொடுமை தமிழின் முதல் மவுனக் கதைப் படமான 'கீசக வதம்' படத்தின் பிரதி நம்மிடத்தில் இல்லை.




2005-ல் '110 years of world cinema' வாரந்தோறும் சென்னை சத்யம் திரையரங்கில் உலக சினிமா வரலாற்றைப் புரிந்துகொள்ள மட்டுமல்ல இந்தியா சினிமாவின் பாதையைப் புரிந்துகொள்ளவும் திரையிடல்கள் நிகழ்ந்தன. அந்த வரிசையில் ராஜா ஹரிச்சந்திராவும் திரையிடப்பட்டது. இந்தியாவின் முதல் திரைப்படம் என்பதாலோ என்னவோ உண்மையில் அன்று அரங்கு நிறைந்திருந்தது. முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்த இலவச அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் ஒருவரும் வீணாக்காமல் உரிய இருக்கைகளில் முன்னதாகவே வந்து அமர்ந்து திரைப்படத்தை ஆவலோடு காணத் தொடங்கினர். சினிமா ஆர்வலர்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் திரைப்படம், தொலைக்காட்சி, தொழில்நுட்ப மாணவர்களும் அன்று வந்திருந்தனர். சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்ட 'ராஜா ஹரிச்சந்திரா' திரைப்படம் பூனா திரைப்படக் கல்லூரியின் ஆவணக்காப்பகச் சேமிப்பிலிருந்து சிறப்பு அனுமதி பெற்று வரவழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட அந்த வரிசையில் திரையிடப்பட்ட பல படங்களும் பூனா திரைப்படக் கல்லூரி ஆவணச் சேகரிப்பிலிருந்துதான் வந்தன.


தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கையின் பாதைகளில் ஏற்பட்ட திருப்பங்களைப் பார்க்கும்போது ஆர்வம்மிக்க ஒரு குழந்தை ஒரு பெரிய கிராமத் திருவிழாவின் அத்தனைக் கடைகளையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஆடல் பாடல்களையும் சளைக்காமல் கண்டு ரசித்த ஒரு குழந்தையின் உள்ளத்தையே நம்மால் காண முடிகிறது.


பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பிரிவான கலா பவனில் ஓவியம் பயின்றவர் அதோடு நிற்காமல் கட்டிடக் கலை, மாடலிங் துறைகளிலும் தேர்ச்சி பெற்றார் பால்கே.


புகைப்பட நுட்பங்கள் சார்ந்த கல்வி, லித்தோ பிரஸ் பணி போன்றவற்றிலும் கற்று அச்சகங்களிலும் பணியாற்றினார். தனியே அச்சகத்தையும் தொடங்கினார். பள்ளிகளில் மாணவர்களிடையே மேஜிக் சாகசங்களும் நிகழ்த்தும் வல்லமை அவருக்கு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி, குழந்தைகளிடத்தில் அன்பு, உறவினர்களுடன் அரவணைப்பு, ஊரோடு இணைந்து வாழும் நேர்மறையான மனோபாவம் என சகல ஆற்றலும் அவரிடத்தில் இருந்தது. ஆனால் ஒன்றும் தெரியாத மனிதரைப் போல எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டேயிருக்க வேண்டுமென்ற அவரது விருப்பம் அவரை மேலே மேலே உயர்த்திக்கொண்டே சென்றது.


'ஹரிச்சந்திசாக்ஷி பேக்டரி' இந்தியாவில் சினிமா தோன்றிய நூற்றாண்டுக்குச் செய்த ஒரு உன்னதப் படையல். மராத்தி இயக்குநர் பரேஷ் மொகாஷி அதற்காக 2 கோடி ரூபாய் பட்ஜெட்டிலேயே ஒரு அழகிய கலைப் பொக்கிஷத்தை நமக்குத் தந்துவிட்டார். இந்திய சினிமாவின் தந்தையாக இப்படத்தில் தோன்றியிருப்பவர் மராட்டிய நடிகர் நந்து மகாதேவ். 'யாரை வேண்டுமானாலும் நடிக்க வைத்துவிடலாம், நாம் விரும்பும் கதாபாத்திரத்திற்கு' என்று நினைக்கும் கதைக்களன் அல்ல இது. மேடைநாடகங்களில் ஊறிய நந்து மகாதேவ் போன்ற ஒரு தேர்ந்த அனுபவமிக்க நடிகரால் மட்டுமே இதில் பொருந்தி மிளிர முடியும். இவர் மராத்திய தியேட்டர் ஆர்டிஸ்ட். பால்கேவின் அலாதியான பாத்திர வார்ப்புக்கு வலிமையான நடிப்புத் திறன் வேண்டியிருந்தது என்பதால் தேடிப்பிடித்து இப்படத்தில் நந்து மகாதேவைப் பொருத்தியிருக்கிறார்கள்.


சந்திரஹரி தமிழ் சினிமா


பால்கே வாழ்ந்தபோது கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் வாழ்ந்தவர் தமிழகத்தின் பம்மல் கே சம்பந்த முதலியார். ராஜா ஹரிச்சந்திராவை திரையில் கொண்டுவருவதற்கு நிறைய நாடகங்களைப் பார்த்துப் பார்த்து திரைக்கதையை உருவாக்கிக்கொண்டார் பால்கே. முற்றிலும் பயபக்தியோடு ஒரு காவியத்தன்மையோடு திரைப்படத்தை உருவாக்கினார்.


ஆனால், நகைச்சுவை கொப்பளிக்கும் அற்புதமான நாடகங்களை இயற்றிய பம்மல் கே.சம்பந்த முதலியார் ராஜா ஹரிச்சந்திராவை முற்றிலும் தலைகீழாக்கி ஒரு நாடகத்தை எழுதினார். அதன்பெயர் சந்திரஹரி. இதே பெயரில் 1941-ல் தமிழில் அவரது நாடகத்தையே என்.எஸ்.கிருஷ்ணன், டி.எம்.மதுரம் எல்.நாராயணராவ், ராதாகிருஷ்ணன், டி.பி.கிட்டான் நடிக்க ஹிட்டடித்த வெற்றிப் படமாக தமிழகத்தை வலம்வந்தது 'சந்திரஹரி'.


அடிப்படையில் அரிச்சந்திரன் கதை மிகவும் சோகமானது. ஆனால் மறவநாட்டு அரசன் சந்திரஹரி கதையோ படு காமெடி. அரிச்சந்திரன் உண்மையைத் தவிர வேறெதுவும் பேசமாட்டான். அதற்காக எந்த சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயங்க மாட்டான். ஆனால் சந்திரஹரி என்ற அரசனோ பொய்யைத் தவிர அவன் வாயிலிருந்து வேறெதுவும் வராது. அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்க மாட்டான்.


அரிச்சந்திரனைப் பற்றி கேள்விப்படும் வானத்து தேவர்கள் வைக்கும் சோதனையை நிறைவேற்றவே விசுவாமித்ர முனிவர் பூமிக்கு வருகிறார். தனது கனவில் அரிச்சந்திரன் வந்து பேசியதாக ஒரு பொய்யைச் சொல்லி அவனை நம்பவைத்து அவன் தனது நாட்டை நன்கொடையாகத் தருவதாக வாக்குக் கொடுத்ததாகவும் அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமெனவும் அவனிடம் முறையிடுவார். கனவில் கொடுத்த வாக்கைக் கூட காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மிக்க அரிச்சந்திரன் அப்படியே ஆகட்டும் என்றுகூறி நாட்டை அவரிடம் ஒப்படைத்துவிட்டு தனது மனைவியும் சின்னஞ்சிறு மகனையும் அழைத்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார். அவர்களுக்கு வரும் சோதனைகள் இந்த பூமியில் யாருக்கும் வராத, வரக்கூடாத சோதனைகள். ஒரு கட்டத்தில் மனைவியையே விற்றுவிட வேண்டிய நிலைமை.


காலம் கடந்துசெல்ல இவன் சுடுகாட்டுக் காவல்காரனாகப் பணியாற்றும்போது பாம்பு கடித்த மகனைத் தூக்கி வரும் மனைவியிடத்திலேயே பிணம் எரிக்க வரி கட்ட வேண்டும் எனக் கட்டளையிடுவான். அவள் தன்னிடத்தில் ஏதுமில்லை என்று கைவிரிக்க வந்திருப்பது மனைவி, மகன் என்று தெரிந்திருந்தும் பிணம் எரிக்க அவளது புடவையையே வரியாகக் கேட்பான். கடைசியில் எந்த நிலையிலும் சத்தியம் தவறாத உத்தமனான அரிச்சந்திரனையும் அவனது குடும்பத்தாரையும் இறைவன் ஆட்கொள்ள விசுவாமித்திர முனிவர் உள்ளிட்ட தேவாதி தேவர்கள் கூடி அவர்களைப் பூமாரி பொழிவார்கள்.


ஆனால், பம்மல் சம்பந்த முதலியார் உருவாக்கிய 'சந்தரஹரி'தான் உண்மையான இம்சை அரசன். அடுத்தவர்களுக்கு கெடுதலைத் தவிர வேறு எதுவும் நினைக்க மாட்டாதவன். மந்திரி பாண்டிய நாட்டிற்கு நாம் அனுப்பிய நமது பிரஜைகள் பாண்டியனுடைய பொக்கிஷங்களைக் கொள்ளையடித்து நல்லபடியாகத் திரும்பிவிட்டனரா? இதுதான் அவன் அறிமுகமாகும்போதே கேட்கும் கேள்வி.


அதற்கு அமைச்சர், ''எல்லாப் பொருள்களும் சரியாக வந்து சேர்ந்தன. பாண்டியனுடைய கைக்குழந்தையின் வளையல் ஒன்று மாத்திரம் வந்தது. இரண்டையும் கவர்ந்து வரும்படியாக அனுப்பப்பட்டவன் மற்றொன்றைக் கழற்றும் பொழுது அக்குழந்தை நகைத்தது. அதைக் கண்டு பரிதாபப்பட்டு ஒன்றுடன் வந்துவிட்டேன்; என்று கூறுகிறான்'' என்று பதிலளிக்கிறார்.




அதற்கு சந்திரஹரி, படுகாளிக் கழுதை! அவன் நமது பிரஜையாக இருக்கத்தக்கவனல்லன். இன்னொரு முறை அப்படிச் செய்வானாயின் சிரச்சேதம் செய்துவிடுவேன் என்று சொல். முதல் முறையான படியினால் ஆறுமாதம் சிறைக் காவலுடன் விட்டேனென்று தெரிவி என்று கூறுகிறான். இப்படித்தான் பம்மல் சம்பந்த முதலியாரின் கதை வளரும்.


பம்மல் முதலியாரின் நாடகக் கதைகள் பலவும் மூலக்கதை என்ற அளவில் பயன்படுத்தப்பட்டும், கதை வசனம் என்று பயன்படுத்தப்பட்டும் வெற்றிகரமாக திரைப்படமாக தமிழில் வலம் வந்தன. அவற்றில் மிக முக்கியமானது நடிகர் திலம் சிவாஜி கணேசன் தனது சிம்மக்குரலால் தமிழ் திரையை அதிரவைத்த 'மனோகரா' (1958), ஆகும். மேலும், வேதாள உலகம் (1948), சபாபதி (1941), சாரங்கதாரா (1958) அவற்றில் சில. 1891-லேயே சுகுணவிலாச சபா என்ற குழுவை உருவாக்கி நாடகங்களை அரங்கேற்றியவர் இவர். பம்மலாரின் வாழ்க்கையில் ஓர் அற்புத உண்மையும் மறைந்து இருக்கிறது. 1916-ல் வெளியான தமிழின் முதல் மவுனக் கதைப்படமான கீசக வதத்திற்கான கதை, திரைக்கதையை பம்மல் சம்பந்த முதலியாரிடம்தான் கேட்டு எழுதி வாங்கினார் கீசக வதத்தை இயக்கிய நடராஜ முதலியார் என்பதுதான் அது.


ஹரிச்சந்திரனை சந்திரஹரியாக்கி சிரிக்க சிந்திக்க வைத்தவர் பம்மல் கே. சம்பந்தனார். ஆனால் ஹரிச்சந்திரனை மட்டுமல்ல எண்ணற்ற புராண கதைகளை அதன் தூய்மை கெடாமல் காவிய அழகோடு சினிமாவில் கொண்டுவர வேண்டுமென நினைத்தவர் பால்கே. ராஜா ஹரிச்சந்திரா (1913), மோகினி பாஸ்மசூர் (1913), சத்யவன் சாவித்ரி (1914), லங்கா தஹான் (1917), ஸ்ரீ கிருஷ்ணா ஜான்மா (1918), கலியா மர்தான் (1919) புத்ததேவ் (1923), சேது பந்தன் (1932), கங்காவதாரன் (1937) போன்ற புராண சரித்திரப் படங்களைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருந்தார்.


ஹரிச்சந்திராச்சி பேக்டரி


இந்தியாவின் முதல் திரைப்படமான 'ராஜா அரிச்சந்திரா' உருவான கதை தான் 'ஹரிச்சந்திராச்சி பேக்டரி' (2010) திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முதல் படமான 'ராஜா அரிச்சந்திரா' வை உருவாக்கியவரின் வாழ்க்கைக் கதை என்றும் இதனைச் சொல்லலாம்.


சரித்திரக் கதைகளின் மொத்தச் சுமையும் மையக் கதாபாத்திரன் தலை மீது விழும் என்பதற்கு மகாநடி தெலுங்குப்படமே சாட்சி. இந்தப் படத்தில் நடிகையர் திலகத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டார் அதில் நடித்த கீர்த்தி சுரேஷ். ஆனால்அவரே பின்னர் ஒரு நேர்காணலின்போது சொன்னது மிகவும் வியப்பாக இருந்தது, இனிமேல் நான் சரித்திரப் படங்களில் நடிக்க மாட்டேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பாக மூன்று மணிநேரம் ஒப்பனை செய்துகொள்ள வேண்டியிருந்தது. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட ஒருவித மனநிலையிலும் வாழவேண்டியிருந்தது என்பதுதான் அவர் சொன்னதில் முக்கியமானது.


கற்பனைக் கதைகளில் கூட நடித்துவிடலாம். எப்படி வேண்டுமானாலும். அது ஒரு புது கதாபாத்திரமாக நமக்கு அறிமுகமாகும். ஆனால், ஏற்கெனவே வாழ்ந்து மறைந்தவர்களின் கதை கொண்ட 'பயோபிக்' திரைப்படங்களில் ஒரு பிரச்சினை என்னவென்றால் வாழ்ந்தவரின் நடை உடை பாவனை, அவரது மனநிலை, முகத்தோற்றம், லட்சியம் போன்றவை தவறாமல் காட்ட வேண்டும். அதனால்தானோ என்னவோ சிறந்த நடிப்புக் கலைஞரான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்கு பிறகு பயோபிக் கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை என்று அறிவித்துவிட்டார்.


உண்மையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக அவர் தோன்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றிய அந்தத் தருணங்களில்தான் அவரது இந்த பேட்டி வந்திருந்தது. அடடா இவர் ஜெயலலிதாவாக நடிக்கமாட்டோர் போலிருக்கிறதே என்று எனக்கு நானே வளர்த்துக்கொண்டு சிறு ஆவலும் துண்டிக்கப்பட ஏமாற்றமாக இருந்தது. என்றாலும் வரலாற்றுப் படங்களில் நடிப்பதில் உள்ள சிரமங்கள் சாதாரண ஒன்றல்ல.


க்வெண்டின் டாரண்டினோ இயக்கி லியானார்டோ டிகாப்பிரியோ நடித்த 'ஒன்ஸ் அப்பான் ய டைம் இன் ஹாலிவுட்' படம் பார்த்தபோதும் கீர்த்தி சுரேஷ் சொன்னதை என்னால் யோசிக்க முடிந்தது. அதேபோன்று இல்லையென்றாலும், 'அட ஒரு ஹாலிவுட் நடிகர் ஏற்கெனவே அறுபதுகளில் வாழ்ந்த ஹாலிவுட் நடிகரை எப்படி நம் கண்முன்கொண்டுவந்துவிட்டார். இதற்காக அவர் தன்னுடைய சொந்த உடல்மொழியை எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருப்பார் அல்லது புதிய உடல் மொழிக்கு தன்னை உட்படுத்தியிருப்பார்' என்றெல்லாம் தோன்றியது. இப்படத்தில் டிகாப்ரியோ ஏற்று நடித்த கதாபாத்திரம் பவுண்டி லா டிவி தொடர் புகழ் நடிகர் ரிக் டால்டன் என்பவரின் தோற்றம். டால்டன் மட்டுமின்றி மேலும் நடிகை ஷரோன் டேட், புகழ்மிக்க இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கியும்கூட இப்படத்தில் ரிக் டால்டன் வாழ்வில் நெருக்கமாக வந்து செல்பவர்களாக காட்டப்பட்டிருப்பார்கள்.


தமிழில் 'பாரதி' திரைப்படத்தில் நடித்த சாயாஜி ஷிண்டே, 'காமராஜ்' படத்தில் தோன்றிய மரியம் தாமஸ் ஆகியோர் திரைப்படங்கள் முடிந்த பின்னரும் அதே நினைவுகளில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்த நேர்காணல்களை நாம் மறந்துவிடமுடியாது. அதுஒரு ஜென் நிலை. அது இன்னொரு முறை வாய்க்காது.


மேலும் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு பெரிய வேலையில் இறங்குவதில் பால்கே பட்ட சிரமங்கள் எத்தகையவை என்பதை நந்து மகாதேவின் ஒவ்வொரு அசைவும் நமக்கு தெரிவிக்கிறது. பால்கே எவ்வளவு சிரமப்பட்டார் என்பதைவிட பால்கேவாக நடிக்க நந்து மகாதேவ் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதையும் உணரும்போதுதான் இப்படம் உருவாக்கப்பட்ட வலிகளை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்படம் வலிகளை அல்ல, மகிழ்ச்சியை நகைச்சுவையை அள்ளி வழங்குகிறது நமக்கு.


1911-ல் தனது பழைய அச்சக முதலாளிகளிடமிருந்து தப்பித்து மும்பை வீதிகளில் ஓடும்போதுதான் ஒரு இடத்தில் திரையரங்கத்தை பால்கே காண்கிறார். அது என்னது அது என்ற ஆர்வத்தோடுதான் தன் மூத்த மகனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்கிறார். 2 அணா கொடுத்து தனது மூத்த மகனுடன் திரையரங்கிற்குள் நுழையும் பால்கே தாங்கள் படம் பார்த்த அனுபவத்தை வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் சொல்கிறார். மறுநாள் தனது குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்கிறார். இன்னொரு நாள் எல்லோரும் திரையைப் பார்க்க அவரோ திரையை நோக்கி பாயும் ஒளி வரும் திசையான ஆபரேட்டர் அறையையே பார்க்கிறார். புதியதைக் கண்ட பரவசத்தில் திளைக்கும் பால்கேவாக நாமும் மாறுகிறோம்.


திரைப்படம் தினமும் பார்க்கச்செல்லும் அவர் ஒரு நாள் அங்கேயே கொட்டகையில் உள்ள திரை எதிரே உறங்கிவிட நள்ளிரவில் மூத்தமகன் நகர வீதிகளில் தனியே நடந்து வந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.




ஒருநாள் வீட்டில் உள்ள பீரோவை அடகுவைத்து லண்டனிலிருந்து வரும் பயாஸ்கோப் சினிமா பத்திரிகைக்கு சந்தா கட்டுகிறார். பீரோவுடன் வீட்டைவிட்டு போன மனிதர் பயாஸ்கோப் பத்திரிகையோடு வீடு திரும்பும்போது வீட்டில் ஊரே கூடியிருக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று அடித்துப் பிடித்து உள்ளே வந்து பார்த்தால் பெண்கள் தனது மனைவியை துக்கம் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னவென்று கேட்கும்போதுதான் தெரிகிறது. பீரோ கொண்டு சென்றதைப் பார்த்து மனைவி ஊரைக் கூட்டிவிட்டாள் என்று. எல்லாரையும் கிளம்புங்க ஏதோ நடந்துடிச்சின்னு பயந்துட்டேன். பீரோ தூக்கிட்டுப் போனதுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் போங்க போங்க என்று விரட்டி அனுப்புகிறார்.


திரைப்படக் கருவிகள் வாங்க அடுத்தடுத்து கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் காணாமல் போகின்றன. வீட்டில் உள்ள எல்லா செப்புப் பாத்திரங்களும் காணாமல் போக, பால்கேவை அவரது உறவினர்கள் 'தானே நகராட்சி' மனநல மருத்துவமனைக்கு கடத்திச் செல்கிறார்கள். வாயிலுக்குள் நுழைந்த மறுகணம் அவர் அவங்கிருந்து தப்பி ஓடிவருகிறார்.


உறவினர்கள் அனைவரிடமும் சம்மதத்தோடும் அவர் கப்பலில் லண்டன் செல்கிறார். லண்டனில் பயாஸ்கோப் பத்திரிகை ஆசிரியரைச் சந்திக்கிறார். தன் திரைப்பட ஆர்வத்தை அவரிடம் சொல்லி உதவி கேட்கிறார். அவர் இவருக்கு ஒரு முக்கியமான திரைப்பட இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார். அங்கே படம் எடுப்பது, பிலிம் ரசாயனப்டுத்துவது, எடிட்டிங் செய்து ரீல்களாக்குவது, திரையிடுவது உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொள்கிறார்.


ஹரிச்சந்திரன் மனைவியான சந்திரமதி கதாபாத்திரத்திற்கு அன்றைய பாம்பே நகர வீதிகளில் அலைந்து அவமானப்படும் இடம் முக்கியமானது. பிறகு, ஒரு இளைஞனை சந்திரமதி கதாபாத்திரத்திற்காக தேர்ந்தெடுத்து அவரை மீசையை மழித்து வா என்பார். ஐயா எங்க அப்பா இன்னும் உயிரோடதான் இருக்கார் என்னால் மீசையை மழிக்க முடியாது என்பார் அந்த இளைஞர். அவரோடு மல்லுக்கட்டி கடைசியில் அவருடைய தந்தையிடம் அரிச்சந்திரன் நாடகத்தை ஓடும் போட்டோகிராபி படங்களாக எடுக்கப்போகிறோம் என்று விளக்கி சம்மதம் வாங்குவதற்குள் பால்கேவுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.


புதியதாக குடியேறிய பங்களாவிலேயே அரண்மனைக் காட்சிகள் எடுத்து முடித்த பிறகு அரிச்சந்திரனின் மகனை பாம்பு கடிக்கும் காட்சி, சுடுகாட்டில் அவனைத் தகனம் செய்ய வேண்டிய காட்சிகளுக்காக நட்ட நடு காட்டில் ஷூட்டிங் வைக்கப்போய் நாடோடிக் கொள்ளையர்கள் எனக் கருதி போலீஸ் அனைவரையும் சிறையில் அடைப்பது மிகப்பெரிய வேடிக்கை. கடைசியில் காவல் அதிகாரிகளிடம் இது சினிமா என்று விளக்கி சிவபெருமானையும் விஸ்வாமித்திரரையும் காவல் நிலையத்தில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற காவல் அதிகாரிகள் ''கடவுளே, கடவுளே'' என கன்னத்தில் போட்டுக்கொண்டு தயவுசெஞ்சு மன்னிச்சுக்கோங்க எங்களுக்கு தெரியாதில்ல என்பார்கள். பின்னர் காவல்துறை பாதுகாப்போடு காட்டில் படப்பிடிப்பு நடப்பது எல்லாம் அழுத்தமான வரலாற்றுப் பதிவை போகிறபோக்கில் சொல்லிச் செல்லும் அளப்பரிய காட்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.


விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இக்கதை நிகழ்கிறது என்பதற்கு சான்றாக பால கங்காதர திலகரை விடுதலை செய் படத்தின் ஒரு காட்சியில் இடம் பெறுகிறது. மும்பையின் சாலைகளில் பால்கே தனது படத்திற்கான கலைஞர்களைத் தேடி அலையும்போது வீதி ஒன்றில் ஒருவர் முழக்கமிட்டுச் செல்வார். அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்வார்கள்.


முதலில் புரிந்துகொள்ளாமல் பின்னர் புரிந்துகொள்ளும் மனைவி, பால்கே உருவாக்கிய முதல் இந்திய சினிமாவின் முதல் முயற்சிகளின் முக்கியப் பங்காகவும் அவர் இருக்கிறார் என்பதற்கு இயக்குநர் எடுத்துக்காட்டியுள்ள இடங்கள் இன்றியமையாதவை. ஒரு இடத்தில் பால்கேவின் மனைவி பிலிம்களை இருட்டறையில் கழுவிக்கொண்டிருக்க பால்கேவோ குழந்தைகளுக்கு சப்பாத்தி சுட்டுக்கொண்டிருப்பார். பங்களா வீட்டில் படப்பிடிப்பு ஒத்திகை காலங்களில் ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு கல்யாண சாப்பாடு போல அவர் சமையலில் ஈடுபடும் காட்சிகள் யதார்த்தத்தின் தவிர்க்க முடியாத பரிமாணங்கள்.




பால்கேவின் திரையிடலில் திளைக்கும் மும்பை வாசிகள் அவருக்குப் பாராட்டு விழா நடத்துவார்கள். அப்போது ஒரு கனவான் தனது தொப்பியை பால்கேவுக்கு அணிவிக்க, பால்கே அந்தத் தொப்பியை தனது மனைவிக்கே அணிவித்து மகிழ்விக்கும் காட்சியிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. பால்கேவின் சிந்தனையில் பெண்களுக்கான இடம் என்னவென்று. அதை இயக்குநர் பரேஷ் முகாஷி பெண்களின் மீது வைத்துள்ள மரியாதையாகவும் எடுத்துக்கொள்ளலாம். அத்தகைய மரியாதைக்குரிய பெண்ணாக பால்கேவின் மனைவியாக வந்து படத்திற்கு பக்க பலமாக மன்னிக்கவும், பக்கா பலமாகவும் திகழ்பவர் விபாவரி தேஷ்பாண்டே.


அக்கால பம்பாயை நம் கண்ணெதிரே நிறுத்துகிறது அமலேந்து சவுத்திரியின் ஒளிப்பதிவு. அக்கால வாழ்வியல் பின்னணிகளையும் கதாபாத்திரங்களின் ஊடாட்டங்களையும் நம் இதயத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது அவரது ஒளிப்பதிவு. படம் முழுவதும் ஒரு முக்கியமான அம்சத்தில், அதாவது ஆரம்பகால சினிமா முயற்சிகளுக்கான பின்னணியை விளங்கிக்கொள்ள ஒரு தெளிவான கவனத்தைக் கொண்டுவந்துள்ளனர். அது பழங்கால இசை. படத்தின் தொடக்கத்தில் மும்பையின் நூற்றாண்டுக்கு முந்தை புகைப்படங்களை அடுத்தடுத்து காட்டியபடியே டைட்டில் கார்டு போடப்பட அதன் பின்னணியாக புராண காலத்து இசை நம்மை வேறு ஒரு காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. படம் முழுவதும் பல்வேறு காட்சிகளுக்கும் இந்தப் புராண கால பின்னணி இசை ராஜா ஹரிச்சந்திரா திரைப்பட உருவாக்கங்களோடு நாமும் எண்ணத்தால் ஒன்றிணைய வழிவகுக்கிறது.


பால்கே எனும் மலையைக் குடைந்து அதிலிருந்து அனைவரும் கண்டு ரசிக்கக்கூடிய ஒரு சிறு சிற்பமாக செதுக்கித் தரப்பட்டுள்ள ஹரிச்சந்திராச்சி பேக்டரி அதன் அத்தனை சிறப்பம்சங்களுக்காகவும் 2009-ம் ஆண்டுக்கான வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.






.கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா என்பார் பெர்டோலூசி.


பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!


மனிதனுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்தது சினிமா எனலாம். நல்ல திரைப்படங்கள் பல்வேறு மக்களின் வாழ்வியலை காட்டியது. அன்பைப் போதித்தது.


ஒவ்வொரு காட்சியும் முழுமையடைந்து அது பிறவற்றுடன் இணையும்போது கூடுதல் அர்த்தம் பொதிந்ததாக மாறுகிறது. பொழுதுபோக்கிற்காக பார்த்தாலும் அதில் கூறும் கருத்தை யோசிக்கிறான்.


அவ்வாறான சினிமாக்களின் வரலாறும் உலகளவில் கவனம் பெற்ற திரைப்படங்களும் சில..


Representational Image

Representational Image

#முதல் திரைப்படம்


பாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது.


அதன் பிறகு ஜூலை 1896-ம் ஆண்டில் அதேபோல் பம்பாயில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது. இவ்வாறு படிப்படியாக வந்து இந்தியாவில் 1907-ம் ஆண்டு முதல் காட்சி படமாக்கப்பட்டது


தாதா சாகேப் ஃபால்கே 1913-ல் தயாரித்த ராஜா அரிச்சந்திராவை கிராமம் கிராமமாக மாட்டுவண்டியில் எடுத்துச் சென்றாராம். அதற்கு அவர் கொடுத்த விளம்பரமாக..


`57000 புகைப்படங்களைக் கொண்ட நிகழ்ச்சி.. ஒரு திரைப்படத்தின் நீளம் 2000 மைல்கள்.. எல்லாம் 3 அணாவுக்கு மட்டுமே' என விளம்பரப்படுத்தினாராம்.


அக்காலத்தில் இது அதிசயமாய் பார்க்கப்பட்டது.



#ஆவணப்படம்


சினிமா குறித்து பேசும்போது நினைவுகூர வேண்டியவர் ஏ.கருப்பன் செட்டியார் எனும் ஏ.கே செட்டியார். புகைப்படக்கலையை ஜப்பானிலும் திரைப்பட தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் பயின்றவர்.1937-ல் காந்தி குறித்து படம் இயக்க ஆரம்பித்து 1940-ல் முடித்துள்ளார். 50,000 அடி பிலிம் வாங்கி அதை 12,000 அடியில் சுருக்கி இரண்டரை மணி நேரப்படமாக கொண்டு வந்தார்.


முதல் ஆண்டு முழுவதும் தேடிச் சேகரித்ததில் திருப்தி இல்லாமல் ஐரோப்பாவுக்குப் பயணமானார்.


4 கண்டங்களில் லட்சம் மைல் பிரயாணம் செய்துள்ளார். உலகம் முழுமையிலும் 30 வருடங்களாக ஏறக்குறைய 100 கேமராக்கள் எடுத்த சேகரிப்பாக காந்தி குறித்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Representational Image

Representational Image

#ரஷ்யா


இன்றும் உலகத்திரைப்பட விழாவில் ஒரு பாடமாய் இருப்பவை ரஷ்ய படங்கள். ரஷ்ய புரட்சியை இன்றளவும் மக்கள் பார்க்கும் வகையில் இருக்கும் அக்டோபர் படமாக இருக்கிறது. லூமியர் சகோதர்கள் இந்தியா போலவே ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் திரையிட்டதுதான் ரஷ்ய திரைப்படங்களுக்கு பிள்ளையார் சுழி. புரட்சிக்குப்பின் திரைப்படப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. 1930-ல் அலெக்சாண்டர் டெவ்ஷேங்கோ எடுத்த நிலம் எனும் படத்தில் ஒரு டிராக்டர் வயலில் நின்றுவிடும். ரேடியேட்டரில் ஒவ்வொரு விவசாயியும் சிறுநீர் பெய்து நிரப்புவார்கள். இதுபோன்ற காட்சிகள் அமைந்த மெளனப்படம் அக்காலத்தில் பல அதிர்வுகளை உருவாக்கியது. கார்க்கியின் நாவலான மதர் எனும் படம் 1926-ல் வெளியானது. திறம்பட புரட்சி கருத்துகளுடன் இயக்கியிருப்பார் ஐ வி புடோவ்கின்.


மாண்டேஜ் உத்தியின் தந்தை என புகழப்படும் செர்கய் ஐஸன்ஸ்டீன் Battleship potemkin போன்ற ஜாம்பவான்கள் ரஷ்ய திரைக்கலைக்கு வலு சேர்த்தனர். மேலும் தி ரிடர்ன், குட் பை லெனின் எனும் ஜெர்மானிய படமும் குறிப்பிடத்தக்கது.



#இரானிய சினிமா


இன்றளவும் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சக்தியாக இரானிய படங்கள் விளங்குகின்றன. பொழுதுபோக்கிற்காக படம் எடுக்காமல் வாழ்வியலையும் படைக்கலாம் என படம் எடுத்தார்கள். மஜித் மஜிதி இயக்கிய children of heaven படம்தான் இரானிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் திரைப்படம். கடைசி காட்சியில் கைதட்டாத ரசிகர்களே இருக்க முடியாது.


mohsen makhmalbaf இயக்கிய தி சைக்கிளிஸ்ட் படம் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம். குடும்ப சூழ்நிலையால் ஏழுநாள் சைக்கிள் ஓட்டும் நஸிம்.. இறுதிநாளில் ஒவ்வொரு சுற்றாக முடியும்போது வறுமை இன்னும் எனக்கு முடியவில்லை என நஸிம் சுற்றிக்கொண்டே இருக்கிறான். ஒரு எளியோனின் வாழ்வை திரையில் காட்டிய கண்ணாடி. இதுதவிர சிறுவர்களை மையப்படுத்தி Homework, One problem two solutions, where is my friend home, colour of paradise, The runner, white baloon,The day i became a woman போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.


Representational Image

Representational Image

#ஜப்பானிய சினிமா


கதாநாயகனை காலிருந்து காட்டுவது, ஒரு வில்லன் வரும்போது அனைத்து வீடுகளின் ஜன்னல்களை மூடுவது என பல இயக்குநர்களின் வழிகாட்டியாக இருந்தவர் அகிரா குரோசவா. ரஷோமான் எனும் படம் ஒரு கொலை நடப்பதை பல்வேறு தரப்பிலிருந்து கதை சொல்லப்படும் புதிய யுத்தியைக் கையாண்டார். பல இயக்குநர்களுக்கு திரைக்கதைக்கு பாலபாடமாய் இருப்பதாகச் சொல்லலாம். மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த படம் ஏழு சாமுராய்.


ஏழு சாமுராய் வீரர்களுடன் கிராமத்தின் அறுவடையை திருட வரும் 40 திருடர்களிடமிருந்து காப்பாற்றப் போராடுவதாய் அமைந்திருக்கும்.


யசுஜிரோ ஒசு இயக்கி 1953-ல் வெளியான டோக்கியோ ஸ்டோரி திரைப்படம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமையின் வலியை கூறும் படமாக அமைந்தது.


#கொரிய திரைப்படங்கள்


1949-ல் தி வுமன்ஸ் டைரி எனும் வண்ணத்திரைப்படம் உருவானது. பின்பு பாட்டிக்கும் பேரனுக்குமான அன்பை போதிக்கும் படம் The way home. விடுமுறையில் கிராமத்தில் வந்து தங்கும் பேரன் பாட்டியின் அன்பில் உருக இறுதியில் இரு வார்த்தைகளை எழுதிக் கொடுக்கிறான்.


i am sick i miss you.


உடல் நலமில்லையெனில் முதல் வார்த்தையும், பார்க்க விரும்பினால் இரண்டாவதையும் எழுதி அனுப்புமாறு கூறி பிரியும்போது நம் கண்களும் குளமாகும். தற்போதைய காலகட்டத்தில் கிம் டு கிக், கிம் ஜி வுன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.


Representational Image

Representational Image

#சாப்ளின்


இன்னும் பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் புதிதாய் இருக்கும் இவரின் படங்கள். 1953-ல் Tramp படத்தில்தான் தற்போது இருப்பதுபோல தோற்றம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார்.1931-ல் வந்த city lights படம் நடித்து இசையமைத்து தயாரித்த படம். கண் தெரியாத பெண்ணுக்கும் காதலனுக்கும் இடையிலான உணர்வை விளக்கியிருப்பார். இவரின் நடிப்பில் மற்றுமொரு காவியம் The great dictator. ஹிட்லரின் குணாதிசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பார். மற்றுமொரு முடிதிருத்தும் யூதனாக எளிய மக்கள் எவ்வாறு துயரப்படுவதாக இரு கதாபாத்திரங்களிலும் உடல் மொழி அத்தனையிலும் வேறுபடுத்திக் காட்டியிருப்பார். இதுதவிர இவரின் modern times, the circus, the gold rush, the adventurer, The bank உள்ளிட்ட பல படங்கள் பார்க்க வேண்டியவை.



#தமிழ் சினிமா


இந்திய அளவில் மிருணாள் சென், சத்யஜித் ரே எனும் ஜாம்பவான்கள் இந்திய சினிமாவை உலக அளவில் உயர்த்திச் சென்றனர். தமிழில் சுதந்திரப் போராட்ட காலத்தில் முக்கிய பங்களிப்பு கொடுத்தன திரைப்படங்கள்.


1931-ல் பேசும்படமான காளிதாஸ் வந்தது.


இப்படத்தில் காந்தியைப் பற்றியும், அவரின் ராட்டினம் குறித்தும் பாடல் இடம் பெற்றது. `ராட்டினமாம் காந்தி கை பானமாம்' எனும் பாடல் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி டி.பி. ராஜலட்சுமி பாடினார். இதுபோல் 1933-ல் வெளியான வள்ளி திருமணம் படத்தில் `வெட்கம் கெட்ட வெள்ளைக் கொக்குகளாக விரட்டி அடித்தாலும் வாரீகளா' என வெள்ளையர்களை குறித்த பாடல் பிரசித்தி பெற்றது. சென்சார் துறைகளை ஏமாற்றி புத்திசாலித்தனமாக விடுதலை உணர்வை திரையில் காட்டினர்.


Representational Image

Representational Image

வக்கீலாக இருந்து பின் திரை உலகில் நுழைந்த கே.சுப்பிரமணியம் தியாக பூமி எனும் கல்கியின் நாவலை இயக்கினார். தேச சேவை குறித்து துணிவுடன் வந்த திரைப்படம்.


ஹீரோக்கள் மட்டுமே கோலோச்சிய காலகட்டத்தில் ஒரு கழுதையை ஹீரோவாக போட்டு ஜான் ஆப்ரஹாம் `அக்ரஹாரத்தில் கழுதை' எனும் படத்தை இயக்கியது வியப்பாய் பேசப்பட்டது. 70-களின் சாதியத்தை திரையில் காட்டியிருப்பார். 70-களில் பீம்சிங் இயக்கத்தில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், யாருக்காக அழுதான் போன்றவை யதார்த்த சினிமாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தின.


ஸ்ரீதரின் முக்கோணக் காதல் கதைகள், பாலசந்தரின் புதுமை, பாரதிராஜாவின் கிராமத்து மனிதர்கள், மகேந்திரனின் மனிதர்கள், ஒளியால் உயிர்ப்பூட்டிய பாலுமகேந்திரா, நவீன முகமாய் மணிரத்னம் போன்றவர்கள் வகுத்த ராஜபாட்டையில் இன்று இயக்குநர்கள் பவனி வருகிறார்கள்.


`சினிமா என்பது ஒரு கூர்வாள். அதை சவரக்கத்தி போல் பயன்படுத்தக் கூடாது' என்பார் சத்யஜித்ரே.


இதை ஒவ்வொரு திரைக்கலைஞனும் நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வாசகங்கள்.


-மணிகண்ட பிரபு


விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/s







.

No comments:

Post a Comment