Wednesday 9 October 2019














மஹாதேவி என்ன முடிவு செய்திருக்கிறாய் 
நான் தான் நேற்றே சொல்லிவிட்டேனே
மரணத்திற்காக என் வம்ச விளக்கை எடுத்து வைத்திருக்கிறேன் 
மகனை வழி அனுப்ப காத்திருக்கிறேன் ...
மஹாதேவி உலகத்தில் இது ஒன்றும் அதிசயமானதல்ல ..இணங்கிவிடு 
எதற்காக உன் வயிற்றில் பிறந்த குழந்தையை பறிகொடுக்கிறாய்  
பைத்தியக்காரா !
உயிருக்கு உயிரான என் கணவரை பலி கொடுக்க துணிந்த  போதே 
என் மன  ம் மாறவில்லையே ..மகனுக்காகவா மாறப்போகிறது 

மஹாதேவி உன் அரக்கத்தனமான பிடிவாதத்தால் குழந்தை சாவதா ?
ஏன் யோசிக்கிறாய் ...நடத்து
ஏன் பயமாக இருக்கிறதா 
உனக்கு வெட்கமாக இருந்தால் சொல் 
உன் பொருட்டு நானே ஏன் குழந்தையை குத்தி கொள்கிறேன்  
மஹாதேவி ..கடைசி வார்த்தை 
கடைசி ...உலகத்தில் இதுதான் ஆரம்பத்தோடு நின்றுவிடுகிறது 
இணங்க மாட்டாய் ..
தடுக்காதே வசந்தா .அவனுடைய கொடுமையின் எல்லையை தான் பார்ப்போமே 
பெற்றவளுக்கு இல்லாத அக்கறை உனக்கேண்டி வந்தது மஹாதேவி என்ன முடிவு செய்திருக்கிறாய் 
நான் தான் நேற்றே சொல்லிவிட்டேனே
மகனை வழி அனுப்ப காத்திருக்கிறேன் ...
மஹாதேவி உலகத்தில் இது ஒன்றும் அதிசயமானதல்ல 
எதற்காக உன் வயிற்றில் பிறந்த குழந்தையை பறிகொடுக்கிறாய்  
பைத்தியக்காரா !
உயிருக்கு உயிரான என் கணவரை பலி கொடுக்கும் போதே 
என் மன  ம் மாறவில்லையே ..மகனுக்காகவா மாறப்போகிறது 

என் மகன் புகழ் வாழ்க 
மீதியையும் பாடு வசந்தா 
அபிமன்யு போர்க்களத்தில் சாய்ந்து விட்டான் 
அபிமன்யு போர்க்களத்தில் சாய்ந்து விட்டான் 
அம்மா என்று அழைத்த குரல் ஓய்ந்ததம்மா 
பாண்டவர்கள் புதைத்தார்கள் 
சுபத்திரையாள் துடிதுடித்தாள்
மகனே உன்னை காண்போமா 
எங்கு சென்றாய் - மகனே எங்கு சென்றாய்
போதும் ..நிறுத்து 
பாண்டவர்கள் வேண்டுமானால்   சோகம்   கொண்டாடியிருக்கலாம் 
என் மகனின் வீரத்திற்கு ஏற்ற தாலாட்டு பாடு  

No comments:

Post a Comment