Monday 2 October 2017

THE PRIVATE LIFE OF ACTRESS IN INDIA


THE PRIVATE LIFE OF ACTRESS IN INDIA




பாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். 




ஆஷா பரேக், 
தபு, 
ஊர்மிளா மடோன்ட்கர், 
பிரீதி ஜின்டால், 
சுஸ்மிதா சென், 
அமீஸா பாடீல், 
மல்லிகா ஷெராவத், 
பிபாஷா பாசு, 
நர்கீஸ் ஃபக்ரி, 
நேஹா துபியா, 
அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. 

நக்மா, 
பிரியங்கா சோப்ரா, 
அனுஷ்கா, 
திரிஷா, 
கௌசல்யா, 
சிரியா ஷரண், 
நமீதா, 
ஷோபனா,
 நயனதாரா, 
குத்து ரம்யா…. 
வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். 

சுரைய்யா, 
பர்வீன் பாபி, 
நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. 

டுவிங்கில் கன்னா, 
நீது சிங், 
ஐஸ்வர்யா ராய், 
ஜெனிலியா டி சௌஸா, 
சோனாலி பிந்த்ரா, 
ஜாக்குலின் பெர்னான்டிஸ், 
சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. 

இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவகாரத்தில்  தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.. 

கீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

 நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].

திருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படு த்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. 

சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்

திருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். 

இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. 

அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.

காதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.
-  வேதபிரகாஷ்

No comments:

Post a Comment