Monday 15 February 2021

MEERA JASMINE ,ACTRESS BORN 1982 FEBRUARY 15

 

MEERA JASMINE ,ACTRESS 

BORN 1982 FEBRUARY 15




மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.

இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. [1]

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கேரளா -படித்த முட்டாள்களின் உறைவிடம் 

மீரா ஜாஸ்மின் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு சாமி கும்பிடப்போனதால் கோவிலுக்கு களங்கம்

ஏற்பட்டதாக கூறி கலாட்டா செய்தனர் 

பின்னர் மீரா ஜாஸ்மின் கோவிலுக்கு ரூபாய் பத்தாயிரம் கொடுத்ததால் பூஜை செய்து களங்கம்  நீக்கப்பட்டது 

இது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று முத்த அமைப்போ ,சட்ட நிபுணர்களோ  பெண்போராளிகளோ யாரும் எதிர்க்க வில்லை





சிட்டுக்குருவி போல் துறுதுறுவென இளசுகளின் கனவு கன்னியாக இருந்த மீரா ஜாஸ்மின்.! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.?


2002ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ஆகிய திரைப்படம் அரண் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். கேரளாவில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என கனவோடு வாழ்ந்து வந்தார்.




 

டாக்டர் கனவோடு இருந்த இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது அனைவருக்கும் அதிர்ச்சி தான், இவர் 2001 ஆம் ஆண்டு சூத்ரதாரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார், அதன் பின்பு, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்து வந்தார்.


இவர் இந்தியாவில் மிகப் பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை தான் திருமணம் செய்துகொள்ள இருந்தார், அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை 2014 ஆம் ஆண்டு தனது 32 வயதில் சாப்ட்வேர் இன்ஜினியர் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் தற்போது இவருக்கு ஒரு ஆண்குழந்தை இருக்கிறது  என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment