Saturday 20 February 2021

MALAYSIA VASUDEVAN SINGER BORN 1944 JUNE 15 - FEBRUARY 20 ,2011

 

MALAYSIA VASUDEVAN SINGER 

BORN 1944 JUNE 15 - FEBRUARY 20 ,2011



மலேசியா வாசுதேவன் (சூன் 15, 1944 - பெப்ரவரி 20, 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]

கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்

மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.


குடும்பம்[மூலத்தைத் தொகு]


மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 26 சனவரி மாதம் 1976-இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள்: யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா. இவருடைய மகன் தமிழ்த் திரைப் படங்களிலும் மற்ற மொழி திரைப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பின்னணிப் பாடகராகவும் திகழ்கிறார். இவருடைய மகள் பிரசாந்தினி ஒரு பின்னணிப் பாடகி. வாரணம் ஆயிரம், ஆடுகளம் போன்ற பல திரைப் படங்களில் பாடல் பாடியுள்ளார்.


பின்னணிப் பாடகராக[மூலத்தைத் தொகு]

ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.



அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.


நடிகராக[மூலத்தைத் தொகு]

ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் "சிலந்தி வலை" உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார்.



இசையமைப்பாளராக[மூலத்தைத் தொகு]

மலேசியா வாசுதேவன் ௭ண்பதுகளில் ஒரு சில தமிழ்த் திரைப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். குறிப்பாக சாமந்தி பூ, பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப் படங்களுக்கு இசையமைத்தார்.


விருதுகள்[மூலத்தைத் தொகு]

தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது.


மறைவு[மூலத்தைத் தொகு]

சில ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 பெப்ரவரி 20 ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார்[1].



இவர் நடித்த திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]

இவர் நடித்த சில திரைப்படங்கள் [2]


வருடம் திரைப்படம் கதாபாத்திரம் இயக்குனர்

2007 பிறகு 

2007 நினைத்து நினைத்து பார்த்தேன் 

2007 அடாவடி 

2006 கொக்கி 

2003 நிலவில் கலங்கமில்லை 

2003 கையோடு கை 

2002 புன்னகை தேசம் ஷாஜகான்

2001 பத்ரி பி. ஏ. அருண் பிரசாது

2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராஜீவ் மேனன்

1999 பூப்பரிக்க வருகிறோம் 

1998 தினந்தோறும் 

1996 கோபாலா கோபாலா பாண்டியராஜன்

1996 சும்மா இருங்க மச்சான் சும்மா இருங்க மச்சான் 

1996 பூவே உனக்காக விக்ரமன்

1994 பாண்டியனின் ராஜ்ஜியத்தில் 

1994 ஜல்லிக்கட்டு காளை 

1994 அமைதிப்படை 

1993 கருப்பு வெள்ளை 

1993 திருடா திருடா காவல் அதிகாரி l மணிரத்னம்

1990 நீ சிரித்தால் தீபாவளி 

1990 எங்கள் சுவாமி ஐயப்பன் 

1989 தர்ம தேவன் 

1989 அன்னக்கிளி சொன்ன கதை 

1989 தென்றல் சுடும் மனோ பாலா

1988 தெற்கத்தி கள்ளன் 

1988 தம்பி தங்க கம்பி 

1988 ராசாவே உன்னை நம்பி 

1988 கதா நாயகன் 

1988 பூந்தோட்ட காவல்காரன் செந்தில் நாதன்

1987 தீர்த்த கரையினிலே 

1987 பரிசம் போட்டாச்சு 

1987 ஊர்க்காவலன் 

1987 ஜல்லிக்கட்டு 

1987 இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 

1987 பேர் சொல்லும் பிள்ளை ௭ஸ். பி. முத்துராமன்

1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு சந்தான பாரதி

1986 உன்னிடத்தில் நான் 

1986 ஊமை விழிகள் ராஜா அரவிந்த்ராஜ்

1986 முதல் வசந்தம் மணிவண்ணன்

1985 கொலுசு 

1985 ஒரு கைதியின் டைரி பாரதிராஜா

1984 ஆயிரம் கைகள் 

1983 எத்தனை கோணம் எத்தனை பார்வை 

1982 நிழல் சுடுவதில்லை 

1982 இதோ வருகிறேன் இதோ வருகிறேன் 

1981 பாக்கு வெத்தலை 

1980 சாமந்திப் பூ 

1979 வெள்ளி ரத்னம் 

1978 நெஞ்சில் ஆடும் பூ ஒன்று l 

1977 அவர் எனக்கே சொந்தம்


இசையமைத்த திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]

1980-சாமந்தி பூ

1981-பாக்கு வெத்தலை

1984-ஆயிரம் கைகள்


மாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. "மலேசியா" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்!

By Hemavandhana

| Published: Thursday, February 20, 2020, 10:11 [IST]

சென்னை: வாசுதேவன் என்றால் தெரியாது... மலேசியா வாசுதேவன் என்றால்தான் பரிச்சயம்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்.. சாகாவரம் பெற்ற இந்த கலைஞனை நினைவுகூர்வதில் "ஒன் இந்தியா" தமிழ் பெருமை கொள்கிறது!!


"என்னய்யா இது.. பாலுக்கு உடம்பு சரியில்லையாமே.. இப்படி ஆயிடுச்சே" என்று பாரதிராஜா சொல்ல.. ஏன் புலம்பறே.. அமைதியா இரு" என்று சொல்லி பின்னாடி திரும்பினார் இளையராஜா.."வாசு.. டிராக் ஒன்னு பாடணும்.. சரியா பாடிடுடா.. அப்படி பாடிட்டா, இந்த பாட்டில இருந்து உனக்கு எல்லாமே வெற்றிதான்" என்று இளையராஜா சொன்னதுதான் மலேசியா வாசுதேவனின் ஏணிப்படியின் துவக்கப்புள்ளி!!



16 வயதினிலே படத்தின் "செவ்வந்திப் பூ முடிச்ச" பாட்டும் சரி... "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" பாடலும் சரி ரெண்டுமே ஹிட்... பாடல். ரெண்டுமே சூப்பர் ஹிட்... "குமாஸ்தா மகள்" என்ற படத்தில் ஏபி நாகராஜன் தான் மலேசியா வாசுதேவன் என்ற பெயரை சூட்டினார்.. ஆனால் உச்சிக்கு கொண்டுபோனது இளையராஜாதான்! எந்த குரல்வளத்துக்கு என்ன பாடலை தந்தால் சிறப்பாக இருக்கும் என்ற நுட்பமான, துல்லியமான ஞானத்தை பெற்றிருப்பவர் இளையராஜா.. அதனால்தான் ரக ரகமாய் பாட்டுக்களை மலேசியா வாசுதேவனுக்கு தொடர்ந்து வழங்கினார்.


 திருவிழா கச்சேரி

திருவிழா கச்சேரி

"கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ, இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்ததே.." போன்ற பாடல்கள் மலேசிய வாசுதேவனை வெகுசீக்கிரத்தில் அடையாளம் காட்டிவிட்டன... கமல், ரஜினி இருவருக்குமே மலேசியாவின் குரல் மிக பொருத்தமாக அமைந்தது... இன்றுவரை "பொதுவாக எம்மனசு தங்கம்" என்ற ஹீரோ என்ட்ரி பாடலுக்கு இணையில்லை... ரகளை, கூத்து, கச்சேரி, திருவிழா என்றாலே மலேசியா வாசுதேவனின் நினைவுக்கு தானாக ரசிகர்களுக்கு வந்து போகும்.


 மாயவித்தகர்

மாயவித்தகர்

அதேசமயம், "கோடை கால காற்றே", "அள்ளி தந்த பூமி அன்னையல்லவா" போன்ற பேஸ்வாய்ஸ் பாடல்களின் இன்னொரு எல்லையை தொட்டிருப்பார்.. 80'களின் காலகட்டத்தில் டீக்கடை பெஞ்சுகளைகூட தாளம் போட செய்தவர்.. சுருக்கமாக சொன்னால், இவர் பாடும் பாடலின் முதல் வரியை கேட்டால் போதும், மொத்தமாக நம்மை அந்த பாட்டுக்குள்ளேயே இழுத்து சென்று மறக்க செய்துவிடுவார்.. அந்த அளவுக்கு கட்டிப்போடும் மாயவித்தகர்.


 கச்சிதமாக பொருந்தியது


கச்சிதமாக பொருந்தியது

பொதுவாக நடிகர் திலகம் சிவாஜிக்கு டிஎம்எஸ்தான் ஆஸ்தான பாடகராக இருந்தார்.. பலர் அவருக்காக பாடியிருந்தாலும், "தேவனின் கோயிலிலே", ஒரு கூட்டுக்கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக" போன்ற மலேசியா வாசுதேவன் பாடல்கள் அபாரமாக பொருந்தியது. "முதல் மரியாதை"யில் எல்லா பாடல்களையுமே மலேசியாதான் பாடியிருந்தார்.. இனி தொடர்ந்து தனக்கான பாடல்களை மலேசியாதான் பாட வேண்டும் என்று சிவாஜி கணேசன் அறிவித்தாராம். நடிகர் திலகத்துக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் என்ற இருவேறு பரிமாணங்களுக்கும் ஒரே குரல் பொருத்தம் என்றால் அது மலேசியா வாசுதேவன் குரல்தான். அதேபோல, சீர்காழி கோவிந்தராஜனுக்கும் டிஎம்எஸ்ஸுக்கு பிறகு ஹைபிச் பாடல்களை வெகு அநாயசமாக பாடக்கூடியவர் என்றால் அது மலேசியா வாசுதேவன் மட்டும் என்று துணிந்தே சொல்லலாம்.


சிம்மக்குரல்

சிம்மக்குரல்

"வா வா வசந்தமே"... பாடலை கேட்டால் நிம்மதியின் வாசலுக்குள் நுழையலாம்.. 'ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு.. பாடல் கேட்டால் அண்ணன்கள் கண்ணில் தானாக நீர் வழியும்.. "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலில் ஜென்சியின் குரல் தனித்தன்மையாக தெரிந்தாலும், மலேசியாவன் சிம்மக்குரலிலும் சோகமும், ஏக்கமும் இழையோடியதை உணர முடிகிறது.. மலேசியா வாசுவதேன் எண்ணற்ற பாடல்களை பாடினாலும், அவர் மறைந்தபோது, ஒரு இசைநிகழ்ச்சியில் இந்த பாடலைதான் அவருக்காக சமர்ப்பித்து பாடினார் இளையராஜா!


 நடிப்பு

நடிப்பு

பாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பையும் விட்டு வைக்கவில்லை.. கிட்டத்தட்ட 85 படங்களில் நடித்துவிட்டார்.. 4 படங்களுக்கு இசையும் அமைத்துவிட்டார்... இதெல்லாம் தமிழக மக்களுக்கு பெரும்பாலும் தெரிந்த செய்திதான்.. ஆனால், தெரியாத ஒரு பக்கம் உண்டு. அதுதான் அவரது ஈர மனசு.. ஆரம்ப காலத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் ஆல்பம் வெளிவர அடிப்படை காரணமாக இருந்ததே மலேசியா வாசுதேவன்தானாம்.. எத்தனையோ உதவிகளை முகம் தெரியாத நபருக்கு செய்துள்ளார்.


 ஆத்ம திருப்தி

ஆத்ம திருப்தி

அடிப்படையிலேயே மிகச்சிறந்த மனிதர்.. ஈகோ இல்லாதவர்.. எந்த உயரத்துக்கு சென்றாலும், தன்னிலை மறக்காதவர்.. முகஸ்துதி என்பது துளியும் இருக்காது.. ஒரு பேட்டியில் இவர் சொல்கிறார், "கனவோடுதான் இந்தியா வந்தேன்... ஆனால் ஏறத்தாழ 8 ஆயிரம் பாட்டு பாடிட்டேன்.. எவரெஸ்ட் சிகரெத்தின் மீது ஏறவில்லை என்ற குறை எனக்கு இல்லை... ஆனால் பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறை உள்ளது. அது போதும்..." என்ற ஆத்மதிருப்தி வார்த்தைகள்தான் எத்தனை பேருக்கு வெளிப்படும் என்று தெரியவில்லை!


 ஆளுமைகள்

ஆளுமைகள்

விதிவசத்தினால்... 1989ல் "நீ சிரித்தால் தீபாவளி"என்ற படத்தை தயாரித்து, தோல்வியை சந்தித்தார்.. வீடு வாசல் இழந்தார்.. உடல்நலம் குன்றியது... நாளடைவில் பக்கவாதம் தாக்கியது... படுத்த படுக்கையானார்.. ஆனால் அவரது மனம் மிக கூர்மையானதாகவே இருந்தது.. ஆரம்ப காலம் முதலே தனக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் முதல் திரையுலகில் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று மலேசியா வாசுதேவன் வருத்தப்பட்டதாககூட செய்திகள் வந்தன... பொதுவாக மிகச்சிறந்த ஆளுமைகளின் அருமை அவர் வசிக்கும் காலத்திலேயே உணரப்படுவதில்லை என்பதுதான் கசப்பான வரலாற்று உண்மை!!


ஆனால்... அழுத்தமான குரலில், இனம் புரியாத சோகத்துடன் இந்த மாயமந்திர குரலோன் பாடிய "பூங்காற்று திரும்புமா" என்ற பாடல் இன்னமும் ஏதோ ஒரு அர்த்தத்துடன் வலியுடன் ஒலிப்பது போலவே நமக்கு தோன்றுவது ஏனோ!!


No comments:

Post a Comment