Saturday 28 July 2018

V.KUMAR ,MUSIC DIRECTOR BORN 1934 JULY 28 - - 1996 JANUARY 7







V.KUMAR ,MUSIC DIRECTOR
BORN 1934 JULY 28 - 1996 JANUARY 7



”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட பிறப்பு வி. குமார் 
சூலை 28, 1934 இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.

இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன், கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார்.

மறைந்த இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி பலருக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் அவர்கள் இரசித்திருப்பார்கள். எனக்குப் பிடித்த இரண்டாவது வரிசை இசையமைப்பாளர்களில் வி.குமாரும் அடங்குவார் (என்னுடைய பிற தேர்வுகள் - மரகதமணி (தெலுகில் கீரவாணி), சமீபத்தில் மறைந்த மகேஷ் (நம்மவர்), விஜயபாஸ்கர், தேவேந்திரன்,...). வி.குமாரின் அற்புதமான சில பாடல்கள்:

1. மதனோற்சவம் ரதியோடுதான் (சதுரங்கம் - எஸ்.பி.பி, வாணி ஜெயராம்) 
2. காதோடுதான் நான் பேசுவேன் (வெள்ளிவிழா - எல்.ஆர். ஈஸ்வரி)
3. உன்னிடம் மயங்குகிறேன் (தேன் சிந்துதே வானம் - யேசுதாஸ்)
4. வாழ்வில் சௌபாக்கியம் வந்தது (தூண்டில்மீன் - எஸ்.பி.பி, சுசீலா)

5. படைத்தானே ப்ரம்மதேவன் (எல்லோரும் நல்லவரே - எஸ்.பி.பி)
6. பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு (இவள் ஒரு சீதை - எஸ்.பி.பி)
7. சப்தஸ்வரம் புன்னகையில் (நாடகமே உலகம் - எஸ்பிபி, வாணி ஜெயராம்)
8. பகைகொண்ட உள்ளம் (எல்லோரும் நல்லவரே - யேசுதாஸ்)
9. பொன்னைநான் பார்த்ததில்லை (கண்ணாமூச்சி - எஸ்.பி.பி)

10. ஓராயிரம் கற்பனை (ஏழைக்கும் காலம்வரும், எஸ்.பி.பி)
11. உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது (நவக்கிரகம் - எஸ்.பி.பி, சுசீலா

No comments:

Post a Comment