Saturday 28 July 2018

DULQUER SALMAAN ,MALAYALAM ACTOR BORN 1986 JULY 28







DULQUER SALMAAN ,MALAYALAM ACTOR
BORN 1986 JULY 28







துல்கர் சல்மான் born july 28 ,1986 (மலையாளம்: ദുൽഖർ സൽമാൻ) ஒரு இந்திய நாட்டு நடிகர். இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் 2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் (Second Show) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

துல்கர் தென்னிந்தியா, கேரளா, இந்தியாவில் பிறந்தார். இவர் மலையாளம், தமிழ் திரைப்பட நடிகர் மம்மூட்டி - சுல்பாத் தம்பதியரின் மகன் ஆவார். இவருக்கு குட்டி சுருமி என்ற இளைய சகோதரி உள்ளார்.

நடிக்க வரும் முன்பே மகன் துல்கருக்கு திருமணம் ஏன்?: ரகசியம் சொன்ன மம்மூட்டி

திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடிக்க வரும் முன்பே இளம் வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத்ததன் காரணத்தை மம்மூட்டி தெரிவித்துள்ளார். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தந்தை வழியில் நடிகராகிவிட்டார். கேரளாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் துல்கருக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர். துல்கர் நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து கொண்டார். இது குறித்து மம்மூட்டி மலையாள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

திருமணம் ஒரு மனிதனின் வாழ்வில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது திருமணம் தான். திருமணம் செய்து கொண்டால் பொறுப்பு ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேறத் தோன்றும்.

மம்மூட்டி திருமணம் செய்து கொண்டதால் நான் அறிந்து கொண்டதை தான் மக்களுக்கு சொல்கிறேன். என் மகன் என் வழியை பின்பற்றுகிறார். அதனால் தான் நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து கொண்டார் துல்கர்

துல்கர் திருமணம் குறித்து நானும், என் மனைவியும் துல்கருடன் பேசினோம். அவரும் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். அமல் சுபியாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தோம் என்றார் மம்மூட்டி

பேத்தி துல்கர் சல்மானின் மனைவி அமல் சுபியா அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என்று பெயர் வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment