Monday 11 December 2017

CHERAN ,NADIKAR ,DIRECTOR BORN 1970 DECEMBER 12



CHERAN ,ACTOR ,DIRECTOR 
BORN 1970 DECEMBER 12




சேரன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவரது மூன்று திரைப்படங்கள் தேசிய விருதைப் பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்துக்கும்[1], 2004 ஆம் ஆண்டில் 'ஆட்டோகிராப்' திரைப்படத்துக்கும்[2], 2005 ஆம் ஆண்டில் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன[3
பிறப்பும் ,இளமை பருவமும்[மூலத்தைத் தொகு]

சேரன் மதுரைக்கு அருகில் உள்ள கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 12 இல் பிறந்தார்.இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் டூரிங் தியேட்டரில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார் .தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆகவேலை பார்த்தார். இவருக்கு உடன் பிறந்த தங்கை இருவர் .சிறு வயது முதல் சினிமாவென்றால் உயிராக இருந்தார் .சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், ஜூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர்.
சினிமாவில் வேலையும் ,ஆர்வமும்[மூலத்தைத் தொகு]

திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே .எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார் .தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார் .பின்னர் கமலஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்
இயக்குனர்[மூலத்தைத் தொகு]
உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன் -மீனா நடித்த பாரதி கண்ணம்மாவை இயக்கினார் .இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது .தொடர்ந்து பொற்காலம்,பாண்டவர் பூமி ,வெற்றிக்கொடி கட்டு போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே எடுத்தார். அனைத்து படங்களும் வசூலில் சோடை போகவில்லை . இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் முரண் எனும் திரைப்படத்தினை தயாரித்தார்.[4]
நடிகர் சேரன்[மூலத்தைத் தொகு]

சேரன் தங்கர் பச்சன் இயக்கிய சொல்லமறந்த கதையில் கதாநாயகனாக நடித்து பாராட்டு பெற்றார் .பின்னர் பொக்கிஷம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது .நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது .கால்சீட் பிரட்சனையால் அதுவும் கைவிடப்பட்டு ,பின்னர் அதில் இவரே கதாநாயகனாக நடித்தார் .இவரே இயக்கவும் செய்தார் . இந்த படத்திற்காக மிக கடுமையாக உழைத்தார் .பலனாக இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது .அதன் பிறகு 2004 இல்பொ ஆரம்பித்த பொக்கிஷம் படம் 2009 இல் வெளி வந்தது
விமர்சனம்[மூலத்தைத் தொகு]

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன் "இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்... ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது..."[5] என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது.[6]}}

No comments:

Post a Comment