Wednesday 13 December 2017

JEYALALITHA `S DAUGHTER WHO ? SINMAYI QUESTIONED




JEYALALITHA `S DAUGHTER WHO ?
SINMAYI  QUESTIONED





ஜெயலலிதா மகள்’ என வைரல் ஆகும் படத்தில் இருப்பவர் உண்மையில் யார்? சின்மயி விளக்கம்
மேலே இருக்கும் படம்தான் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் ஒரு மொபைல் விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம். 'இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்" என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரையே அழைத்து கேட்டோம்.
"இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வருஷங்களா வெளிநாட்டுல வாழற இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவங்க. படத்துல அந்தப் பெண்கூட இருக்கிறவர் அவங்களோட கணவர் ராமநாதன். எங்கம்மா வயித்துல பிறக்காத பிள்ளை மாதிரி. எனக்கு அண்ணா மாதிரி. அதிர்ந்து பேச மாட்டார். பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜி, அவரோட சகோதரர். அமைதியான, அடக்கமான குடும்பம் அவங்களுடையது. எங்களுக்கு ரொம்ப வருஷங்களா
நெருக்கமானவங்க. யாரோ பண்ணின குசும்பு வேலை இது. அசப்புல அவங்களை மாதிரி இருக்காங்கன்னு இப்படியொரு புரளியைக் கிளப்பி விட்ருக்காங்க. அந்தப் பெண்ணோட பெயரையோ, அவங்க இருக்கிற இடத்தையோகூட நான் சொல்ல விரும்பலை. அப்படிச் சொன்னா அவங்களோட நிம்மதி கெட்டுப் போயிடும். குழந்தைங்களோட சந்தோஷமா, அமைதியா வாழ்ந்திட்டிருக்காங்க. அப்படியே இருக்கட்டும். எங்கயோ, ஏதோ ஒரு கல்யாணத்துல எடுத்த படம் இப்படித் தப்பா பரவி இவ்வளவு தூரம் வந்திருக்கு. முதல் முறை இந்தப் படம் சோஷியல் நெட்வொர்க்ல பரவினதைக் கேள்விப்பட்டே அவங்க குடும்பம் அதிர்ச்சியாயிட்டாங்க. இப்ப மறுபடி யாரோ அதைக்
கிளறிவிட்டிருக்காங்க. ரொம்பப் வெறுத்துப் போய், இந்தச் செய்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சாகணும்னுதான் அவங்க சம்மதத்தோட இந்தப் படத்தை ஷேர் பண்ணினேன்.

சேவை மனப்பான்மையிலாகட்டும், சங்கீதத்துலயாகட்டும்... பெரிய பாரம்பரியம் உள்ள குடும்பம். ஆனா கொஞ்சம்கூட ஆரவாரம் இல்லாத குடும்பம். அவங்களைப் போய் இப்படி வம்புக்கிழுக்கிறது என்ன அட்டூழியம்னு தெரியலை. அவங்க கணவருக்கு நல்ல மனைவியா, குழந்தைகளுக்கு அன்பான அம்மாவா அமைதியா எங்கேயோ ஒரு மூலையில வாழ்ந்திட்டிருக்காங்க. அவங்களை நிம்மதியா வாழ விடுவோமே... ப்ளீஸ்.." என முடித்தார் சின்மயி

No comments:

Post a Comment