Wednesday 4 October 2017

SATYARAJ , A PERFECT ACTOR IN INDIAN CINEMA


SATYARAJ , A PERFECT ACTOR IN INDIAN CINEMA




ரங்கராஜ் சுப்பையா என்ற இயற்பெயர் கொண்ட சத்தியராஜ் இந்திய திரைப்பட நடிகர் மற்றும் ஊடக நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் வில்லனான பாத்திரங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் முன்னணி பாத்திரங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட படங்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
பிறப்பு மற்றும் இளமை பருவம்[மூலத்தைத் தொகு]

சத்யராஜ் என்ற நடிகரின் இயற் பெயர் ரங்கராஜ் .இவர் சுப்பையா -நாதாம்பாள் தம்பதியரின் மகனாய் 3 அக்டோபர் 1954 அன்று பிறந்தார் , இவருக்கு கல்பனா மன்றாடியார் ,மற்றும் ரூபா சேனாதிபதி என்ற இரு தங்கைகள் உண்டு . .கோயம்புத்தூர் சென்ட் மேரியின் கான்வெண்ட் பள்ளியில் தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் கோயம்புத்தூர், ராம்நகர், சுப்பர்பன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை அறிவியலில் தாவர இயல் படித்தார் . இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.

















திரைப்பட வாழ்க்கை[மூலத்தைத் தொகு]


சத்யராஜின் கனவு ஒரு திரைப்பட நடிகர் ஆக வேண்டும் என்பதே . அவர் தாயின் சொல்லை 1976 ஆம் ஆண்டில் புறக்கணித்து விட்டு சினிமாவில் சேர சென்னை வந்தார் . அன்னக்கிளி பட படப்பிடிப்பின் போது , நடிகர் சிவகுமார் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் மணியன் சந்தித்தார் .பின்னர் கோமல் ஸ்வாமிநாதன் நாடக குழுவில் சேர்ந்து நடித்தார் .அங்கிருந்த படியே சத்தியராஜ் சினிமாவில் சட்டம் ஒரு கையில் மூலம் அறிமுகம் ஆனார் . இவர் 1984 இல் 12 படங்களிலும் , இவர் 1985 இல் 28 படங்களிலும் , தோன்றி புதிய கதாநாயகன் அந்தஸ்தை தமிழ் பட உலகில் தோற்றுவித்தார் . 

முதலில் சிறு சிறு வேடங்களில் தோன்றி ,வில்லனாக புகழ் பெற்று பின்னர் கதாநாயகனாக நடித்தார் . 1986 இதில் முதன் முதலாக கடலோர கவிதைகள் படத்தில் கதாநாயகனாக தோன்றினார் .1987 கால அளவில் இருந்து கதாநாயகனாகவே நிலைத்து நின்றார் . வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதைநாயகனாக நடித்தார்.இவர் எம்ஜியாரின் தீவிர ரசிகராக இருப்பவர் .அவரின் ஞாபகார்த்தமாக அவருடைய உடற்பயிற்சி கர்லா கட்டையை அன்பு பரிசாய் பெற்றார்
பெரியார் திரைப்படம்[மூலத்தைத் தொகு]

சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடித்துள்ளார்.
சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு]



சத்யராஜ் மகேஸ்வரி என்பாரை 1979 ல் திருமணம் செய்து கொண்டார்., இவர்த யாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமாரின் மருமகள் ஆவார் . இவருக்கு திவ்யா என்ற மக்களும் மற்றும் சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர் . சிபிராஜ் சில படங்களில் நடித்து வருகிறார் . இவர் நாத்திகராக இருந்தாலும் ,ஆஸ்திகத்தை குறை கூறுவதில்லை .சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் கல்லூரி முதல் நெருங்கிய நட்பை பகிர்ந்து கொண்டு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வகையில் 1987 - 1994 12 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் .




சத்யராஜும் மணிவண்ணனும் நட்பு ரீதியில் நெருக்கமாக பழகி வந்தனர் . உண்மையில், " வாழ்க்கையில் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர், என்னை மாற்றியவர், அவரால் நான் ஒரு நல்ல மனிதனாக ஆனேன் .ஒவ்வொரு நாளிலும், தொலைபேசியில் பரந்தளவில் உரையாடல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம், அது ஒரு 30 வருட உறவு, எவரும் அவரைப்போல் என்னை புரிந்து கொள்ள முடியாது என்று 2013 இல்மணிவண்ணன் இறந்த போது கூறினார் .

No comments:

Post a Comment