Monday 10 July 2017

NIKOLA TSLA ,THE GREAT DISCOVERER OF ELECTRICITY born 1856 july 10- 1943 JANUARY 7


NIKOLA TSLA ,THE GREAT DISCOVERER  OF ELECTRICITY born 1856 july 10- 1943 JANUARY 7





நிக்கோலா தெஸ்லா (Nikola Tesla,  ஜூலை 10, 1856 – ஜனவரி 7, 1943) ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆவார்.

 குரொவேசியஇராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்த இவர் சேர்பியஇனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக்குடியுரிமை பெற்றார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெல்சாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால மாறுதிசை மின்னோட்ட மின் வலு முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் இரண்டாம் தொழிற்புரட்சி ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினர்.
1894 இல் கம்பியில்லாத் தொடர்பு (வானொலி) பற்றிய இவரது செயல்முறை விளக்கம், "மின்னோட்டப் போரில்" இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார். இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன அக்கால அமெரிக்காவில், தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும்; அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும்; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது.
நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.


வேதாந்தக் கொள்கைகளின் முடிவுகள் வியக்கத்தக்க அளவில் பகுத்தறிவுக்கு ஒத்திருப்பதாக சுவாமி விவேகானந்தரிடம் கூறிய அப்போதைய தலைசிறந்த விஞ்ஞானிகளில் நிகோலா டெஸ்லாவும் ஒருவர். நிகோலா டெஸ்லா உட்கார இடம் இல்லாமல் மணிக்கணக்காக நின்று கொண்டே சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டவர். 1896 பிப்ரவரி 5-இல் தொழிலதிபர் ஆஸ்டின் என்பவர் இல்லத்தில் சுவாமி விவேகானந்தரும் டெஸ்லாவும் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது சுவாமிஜியின் பக்தையும், பிரெஞ்சு நடிகையுமான சாரா பென்ஹர்ட்டும் உடனிருந்தார்.
அணு என்பது திடமான, உடைக்க முடியாத , பிரிக்க முடியாத ஒன்று என நியூட்டன் கூறியதையே 19-ஆம் நூற்றாண்டு அறிஞ‍ர்கள் நம்பியிருந்தார்கள்.
ஆனால் பருப்பொருளும் ஆற்றலும் அடிப்படையில் ஒன்றே; ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்ற வேதாந்தக் கருத்தை நிகோலா முதலில் நம்பாமல் இருந்த போதிலும் தனது இறுதிக்காலத்தில், பருப்பொருளை பொருண்மைச் சக்தியாக மாற்ற இயலும் என்ற சுவாமிஜியின் கருத்தை ஏற்று, தமது முடிவைப் பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் சுவாமிஜி பயன்படுத்திய அதே சமஸ்கிருத வார்த்தைகளை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.
மிகப்பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, சுவாமிஜியின் சொற்பொழிவுக் கருத்துகளால் ஆராய்ச்சிப்பூர்வமாகத் தூண்டப்பட்டாலும் அதை உடனடியாக சுவாமிஜியின் முன் நிரூபித்துக் காட்ட இயலவில்லை. எனினும் பிறகு ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியால் அது (Mass Energy) நிரூபிக்கப்பட்டது.
மார்க்கோனிக்கு 1909-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, 1915-ம் ஆண்டு தாமசு ஆல்வா எடிசன் மற்றும் தெஸ்லாவிற்கும்இயற்பியலுக்கான நோபல் பரிசு, பகிர்ந்தளிப்பதாக வெளியான தகவல் மிகப்பெரிய பிணக்குகளை உருவாக்கியது. இருவருக்குமான பகைமையையும் இது வளர்த்தது, இருவரும் அப்பரிசினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை மற்றும் பரிசினை பகிர்ந்து கொள்ளவும் மறுத்துவிட்டனர். இச்சர்ச்சை ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து, தெஸ்லாவுக்கோ அல்லது எடிசனுக்கோ அப்பரிசு வழங்கப்படவில்லை  .

கம்பியில்லா மின்ஆற்றல் [மின்சாரம்]

1890 ஆம் ஆண்டு டாக்டர் நிகோலஸ் டெஸ்லா தாமாகவே  ஆடலான  மின் சக்தி எனும் மாறு திசை மின்சார தத்துவத்தை உருவாக்கினார்.அதை அவர் மாற்றி திருத்தி அமைத்து பேரளவு உயர்ந்த வதிர்வெண்[ஹை ஃப்ரீக்வென்ஸி] மாறுதிசை மின்சார வளர்ச்சிக்கு காரணமாகி பிறகு கம்பியில்லா மின்சார செலுத்தல் என்னும் அதிசயைத்திற்கு வழிவகித்தது, அதை டாக்டர் டெஸ்லா இயற்கைத்தாயின்  இயல்பாகவே கருதினார். 

டாக்டர் டெஸ்லாவின் மாறு திசை த்தன்மை வாய்ந்த மின்சாரத்திட்டத்தை களங்கபடுத்துவதற்காகவே , தாமஸ் ஆல்வா எடிஸன் பகிரங்கமாக பொதுமக்கள் இடையே மிருகங்கள்மீது மின்சார சக்தி பாய்சினார் என்பதை அறிவோம்.அதனுடன்   மாறு திசை மின்சாரசக்தி பய்ச்சிய  நாற்காலி மீது உட்காரவைத்து சிறைக்கைதிகளின்  மரணதண்டனைக்கு உபயோகித்ததை அறிந்து தா. டெஸ்லா மிகவும் மனம் வருந்தினார்.   டா.டெஸ்லா கடவுள் பக்தி கொண்டவர், கருணைஉள்ளம் கொண்டவர்,  அவர் ஹ்ருதயம் இக்கைதிகள், மிருகங்களின் மீதான கொடுரமான  சித்திரவதையை நினைத்து உறுகியது.  டா,டெஸ்லா , தாமஸ் எடிஸனின் இந்த அவதூரு செய்திக்கு எதிர்த்து முறியடிக்க முடிவு செய்தார். அவர் ஜார்ஜ் வெஸ்டிங்க் ஹவுஸுடன் சேர்ந்து ஒரு பத்திரிகை மாநாடு ஏற்பாடு செய்து பல முக்கிய விஞானிகள், வாணிக த்தலைவர்கள் , பத்திரிகைகையாளர்களை மாறு திசை மின்சாரத்தின் செயல்முறை விளக்கத்திற்காக  தனது ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்திற்கு அழைத்தார்.  அங்கு அவர் ஒரு லக்ஷம் வால்ட் மின்சக்தி  விளைவிக்கும்  மாறு திசை பொறி ஒன்றை தயார்நிலயில் வைத்திருந்தார்.  ஏசி கரண்ட் என்னும் மாறு திசை மின் , அதை  க்கட்டுப்பாட்டுடன் இயக்கிப்பயன் படுத்தினால் அது மானிடர்களளுக்கு ஒரு தீங்கும் விளைவிக்காது என்பதை உறுதி ப்படுத்த தன் உயிரையே பணயம் வைத்து , டா.டெஸ்லா அந்த லக்ஷம் வால்ட மின் விளைவிக்கும் பொறி அறுகே அமர்ந்து செயல் படுத்தியும்  காட்டினார். 




அங்கு கூடியிருக்கும் அனைவரையும் ஆஸ்சரியத்துடன் திகைக்கவைத்தார்.  டா.டெஸ்லா ஒரு சிராய்ச்சல் இன்றி  வெளிவந்தார்.  இதை அவர் செய்தது மானிடத்தன்மை யை க்காப்பாற்றவும், மக்கள் நலனுக்காகவும், மாறு திசை மின்சாரம் பற்றிய தவரான கருத்தையும் , வதந்தியை நம்பாதிருக்க தம் உயிரை  பணயம் வைத்தார், எடிஸனோ ஏ.சி மின்சக்தியை மிருகங்களிலும், கைதிகளிலும் பாய்ச்சி கொடூரச்செயல்கள் புரிந்தார் என்பதை  கவனிக்கவும். 
கம்பியில்லா  மின்சார இயக்கத்தை பற்றிய விளக்கம் டா. டெஸ்லா மக்களுக்கு அளித்ததும் அதுவே முதன்முறையாகும்.  ஆம்,தாங்கள் யாவரும் கேட்டது சரியே. "வயர்லெஸ் இலெக்ட்ரிசிடி" கம்பியின்றி மின்சாரம்   என்பதை தெளிவு படுத்தும் வகையில்  மின்விளக்குகளை தன் கையிலேயே ஏற்றி க்காட்டினார். எவ்வாரு இச்சாதனையை செய்தார்? எப்படிப்படைத்தார்? என்பதறிய நாம் அவர் அவரது  ந்யூயாரக்  ஆய்வுக்கூடத்தில் நடத்திய பரிசோதனைகள்  பார்ப்போம். அவரது ந்யூயார்க் ஆய்வுக்கூடம்  ஒரு பல தரப்பு ஆராய்ச்சிக்கூடமாகவும் , உற்பத்திநிலையமாகவும் செயல்பட்டு வந்தது. அதில் பல பகுதி, கிளைகள், பல மாடிகள் , மட்டங்கள் இருந்தன. அதை ஒரு சிறிய ஆராய்சி மற்றும்  வளர்ச்சி மய்யமாக கருதலாம்.  டா.டெஸ்லா பல மின் ஆற்றல் மாற்றும் கருவிகளும் , மின்விளைவிக்கும் பொறிகளும் அவரது கீழ் மட்டத்தில் தயார் செய்து வந்தார்.  அவரது தனி ஆராய்சிக்ககூடம் மேல் மட்டத்தில் இருந்தன. அவரிடம் இயந்திர நிபுணர்கள் சிலர் பணியாற்றி வந்தனர். அதில்  கோல்மன் ஜீடோ அவரது நம்பகமான நண்பர் அவருடன் இருதிவறை இருந்தார். டா.டெஸ்லா கடும் உழைப்பாளி என்பது அறிவோம். அவர் அவரது  அத்தகைய  ப்ரம்மாண்டமான ஆராய்ச்சி க்கூடம் வெஸ்டிங் ஹவுஸிடமிருந்து பெற்ற ஊதிய த்தொகையிலிருந்து தாமே பார்த்து பார்த்து க்கட்டியிருந்தார். அவரது ஆராய்ச்சியின் சமயம் வித்தியாசமாக  எதையும் உணர்ந்தாலோ , கண்டாலோ அதை மறு ஆராய்சி செய்து பல  விதத்தில் மாற்றி ப்பார்த்தும் ஆராய்ச்சிகள் நடத்துவார். இம்மாதிரியான  ஆய்வும் ஆராய்ச்சிகளும் அவருக்கு பல விஷயங்கள் அறிய வாய்ப்பு கிடைத்தது. ஆகையால் அவர் பல கண்டுபிடிப்புகள்   செய்தார், பல பட்டயங்களுக்கும் உறிமை யாளர் ஆனார். அவ்வாரே அவரது கண்டுபிடிப்புகளும் ,  படைப்பாற்றல்களையும் வளர்த்துக்கொண்டார்.




     டா.டெஸ்லா மிகவும் மேலோங்கியதான திறனான வெகுதூரம்வரை மின்சாரம் செலுத்தும்   பாலிஃபேஸ் ஏ.சி திட்டத்தை அளித்தார்.அங்கும் டெஸ்லா நிற்கவில்லை . அவரது , தளராத இடைவிடா முயற்சியால் ஏ.சி ஜெனரேட்டர்களின் வதிர்வெண் 30,000ஹெட்ஜ்(HRTZ) [வினாடிச்சுழல்கள்] வரை உயற்த்தினார், அதுவே ஹை ஃப்ரீக்வன்சி (High Frequency), அதாவது  உய்ர்ந்த வதிர்வெண்  கொண்ட  மாறு திசை மின் விளைவிக்கும் பொறிகள் பிறக்கக் காரணமாகும்.  இந்த உயர்ந்த வதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்சாரம் உலகத்திற்கு மின் சக்தி அளிக்கும் என்று நம்பினார். அவர் பல உயர்ந்த  வதிர்வெண்  கொண்ட மாறு திசை மின்விளைவிக்கும் பொறிகளை தாயரித்து பட்டயங்களும் பெற்றார்.  டா,டெஸ்லாவின் இந்த உயர்ந்த வதிர்வெண்  மின்சாரம்  மனிதனின் தொடர்பில் இருந்தாலும் ஒருவித  அபாயமும் இல்லை என்பதே.  எதிர்பாராது தவறி மனிதன் இம்மின்சாரத்தை தொட்டாலும் அதன் உயர்ந்த வ்த்ர்வெண்ணினால்  மனிதனின் வெளிமட்டத்திலிருந்து மனிதனை சிறிதளவும் பாதிக்காது வெளியேறிவிடும். விஞானத்தில் இதை ஸ்கின் எஃபெக்ட்(SKIN EFFECT) , [தோல் பாதிப்பு] என்பார். டா டெஸ்லா மாறுதிசை மின்,  மனிதனுக்கு எந்தவிதத்திலும் ஆபத்தானது அல்ல என்பதை நிரூபித்தது.  அவர் அவரது அறிமுக விளக்கத்தின் சமயம் மாறுதிசை மின் பாயும் மின்வாய்களை தனது மூடப்படாத கைகளினால் தொட்டுக்கொண்டிருந்தும் அவருக்கு ஒன்றுமே ஆகாததை க்கண்டு மக்கள்  வியந்தனர். மக்கள் பாதுகாப்பே டா.டெஸ்லாவின் குறிக்கோளாக இருந்தது என்பதை கவனிக்கவேண்டும். 

இவ்வாரு உயர்ந்த வதிர்வெண்  மாறுதிசை மின் சக்தியை சார்ந்த  பரிசோதனைகளின் தருணம் ஒரு அதிசயமான நிகழ்ச்சியின் மூலம் டா. டெஸ்லாவின்  மின்சாரத்தைப்பற்றிய கருத்தே மாறியது. ஒரு பரிசோதனையில் ஒரு மெல்லிய கம்பியில் , பலத்த வால்டேஜ் ஏ,சி கரண்டினை பாய்ச்சி ஒரு வினாடியில் மின் சக்தி வளயத்தை முடியதை கண்டார். இத்தகைய மின் சக்தி ப்பாய்ச்சல் கம்பியை ஆவியாக்கியது. பாய்ச்சும் மின்சக்தியின் வால்டேஜ் அதிகரிக்கச்செய்கையில் அவர் அங்கம்முழுதும் ஊசிகுற்றுவது போன்று அனுபவித்தார். அவர் முதலில் அது வெடித்து சிதர்ய்தில்  அக் கம்பியின் சிறு துண்டுகளாக இருக்கும் என்று  நினைத்தார். அவர் தன்னை த்தானே தொட்டுப்பார்க்கயில் ஒரு துண்டும் இல்லை என்பதை அறிந்தார், ஒரு காயமும் இல்லை என்பதை உணர்ந்தார்.
 அதன்பிறகு அவர் அவருக்கும்  பரிசோதனை மேஜை கிடையே ஒரு பறுமனான  கண்ணாடியை வைத்தார், அதனுடன்  தாமர மின்வாய்களை செலுத்தி, பத்து அடி தொலைவில் நின்று  பார்த்தார்., அப்படியிருந்தும் , மின் வளயத்தை திரந்தவுடன்  அதே ஊஸிகுத்தும் உணர்வு இருந்தது.  பரிசோதனைகளை மாற்றி மாற்றி செய்து பார்க்கயிலும்,  ஊசிகுத்தும் உணர்வு  இருந்து கொண்டேஇருந்தது.  இதை அவர்,   அவர் உயர்ந்த மின்சக்தி சிறிதே நேரபபாய்ச்சலினால் அதாவது  ஆங்கிலத்தில் இம்பல்ஸ் என்பார்கள். இந்த ஆராய்சியே கம்பியில்லா மின்சக்தியின் பிறப்பாகும்.  இதிலிருந்து அவர் அறிந்தது,  பலத்த வால்டேஜ், உயர்ந்த வதிர்வெண்  மின்வளயத்தின் உடனடி மூடுதல் மின்சக்தியை காற்றுமூலம் பாய வைகின்றன,  அதுவே கம்பியில்லா மின் உடலை பாதிக்கின்றது என்பதை அறிந்தார்.  

இதன் பின் செய்த டா,டெஸ்லாவின்  பரிசோதனைகள் யாவும் திடீர்விசை மின்துடிப்பின்   , வதிர்வெண்  ,ரெஸோனென்ஸ் ( R )[ மின் ஒத்த அதிர்வு ]  கொள்கைகளைக் கொண்டு நடத்தப்பட்டன. இதை ப்பற்றி வரும் கட்டுரைகளில் கவனிப்போம், அடுத்த கட்டுறையில் டா டெஸ்லா எவ்வாரு காற்றில் பாயும் மின்சக்தியை கம்பியில்லா மின்சாரமாக மாற்றினார் என்ற  அதிசயத்தை ப்பார்ப்போம். 


டா.டெஸ்லா எவ்வா று திடீர்விசை மின்துடிப்பையும்,அதனுடன் அதி பேரளவான [உயர்ந்த] வதிர்வெண் மாறு திசை மின் சக்தி பயன்படுத்தி , மின்சாரம் காற்றிலும் பயணம் செய்வதை கண்டுபிடித்தார். அதுவே கம்பியில்லா மின்சாரத்தின் முதல் அடி ஆகும்




கம்பியில்லா மின்சாரம் பயன் படுத்துதல் , இந்த கொள்கை எவ்வாறு டா,டெஸ்லாவின் பல புது க்கண்டுபிடிப்புகளுக்கு காரணமாய் இருந்தன ..?
மின்சாரம் கம்பியில்லாது திடீர்விசை மின்துடிப்பினால் முடியும் என்ற முடிவுக்கு வந்த டா.டெஸ்லா அதில் சில மாற்றங்கள் செய்ய அதே மின் வளையத்தில்   அதை  6ooo சுழல் வேகத்தில் திரக்கவும் மூடவும்  தன்மையுள்ள ஒரு   ரோடரி ஸ்விட்ச்  பொருத்தி மின் பாய்ச்சலை 15000 volts[வால்ட்ஸ்]க்கு உயர்த்தினார்.  அவர் மின் வளயத்தை தூண்டிவிடுகையில் , அந்த ஊசி குத்தும் வலி ரோடரி ஸ்விட்சினால்  கடுமையாகவே உணர்ந்தார்.. சாதாரணமாக [ஸ்டெப் அப் ட்ரான்ஸ்ஃபார்மர்] மின் சக்தி மாற்றும் பொறி ,மின் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தன்,  ஆனால் தற்போது மின்சக்தி மாற்றும் பொறி இல்லாது மின்சக்தி  திடீர்விசை மின்துடிப்பினால் வெகு சீக்கிரத்தில்  அதிகரிப்பதை கண்டார்(Impulses were amplifying the current and voltage) . தாமர கம்பியைச்சுற்றி வெள்ளை நீல மின் பொரிகள் இருந்ததை க்கண்டார். இந்த பரிசோதனையின் போது  டா.டெஸ்லா ஊசி குத்துவலி அதிகரிப்பதை உணர்ந்தார்.  அப்படியும் அவர் மின்சக்தியையும் [வால்டேஜையும் கரண்டையும்], வதிர்வெண்ணும் உயர்த்தி க்கொண்டும்,  மின்சக்தி பாய்ச்சலை நிருத்தியும் பரிசோதனைகள் பல செய்தார். அதற்குக் காரணம் அவர் அவரது ஆற்றலின் மேல் இருந்த தன் நம்பிக்கையும் ,கடவுள் மீதுள்ள விஸ்வாசமுமே காரணம்.  ஒரு விதமாக இந்த பரிசோதனை  செயல் படுததுதலில் வெற்றி பெற்றால் இது ஒரு புது வித மின்சாரத்திற்கு வழ  வகுக்கும் அதுவே  மானிடர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்பினார்.
அவரது  பரிசோதனைகளை வித்தியாசமாக வளர்க்க துணிச்சலான முயற்சிகள் செய்து டா .டெஸ்லா [rapid mechanical rotary switch] வேகமாக இயங்கும் சுழல் மின் தொடர் மாற்றியை தாமமே உருவாக்கினார், அது வினாடியின் பத்தாயிரம் பங்கின் ஒன்றின் நேரத்திற்குள்  செயல்படும்.  அதாவது, ஒரு நிமிடத்திற்குள் 600,000 சுழல்கள் ஆனது.  அவர் வால்டேஜை [மின்சக்தியை] ஒரு  லக்ஷம் வால்ட்ஸிற்கு உயற்தி ஒரு அற்புதத்தை கண்டார்,  அதையே  " எலெக்ட்ரிகல் ஸாவ்னா" எஃபெக்ட்  ‘Electrical Sauna’ effect என்பார்கள்.
    
டா.டெஸ்லா இந்த பரிசோதனையயும் மாற்றி மின்தொடர் மாற்றிக்கு[ ஸ்விட்ச்சிர்க்கு]  பதிலாக அவர் காந்த வளைவு இடைவெளியை  [magnetic arc gap]  உபயோகித்தார். அவர் முதல் சுழலும் , இரண்டாம் சுழல்களும் [  primary and secondary coil   ]  தயாரித்து , அதாவது ப்ரைமரி காயிலிலிருந்து செகண்டரி காயிலிற்கு மின்சக்தி அதிகமாக பாயும். டா.டேஸ்லா அவரது புதிய திடீர்விசை மின்துடிப்பு மின்சக்தி மாற்றி  அதில் பாயும் மின்சக்தி அளவை பன் மடங்கு பெருக்குவதை ப்பார்த்தார். அவ்வாரே கதிரொளி போன்ற சக்தி[ கம்பியில்லா மின்சார சக்தியும் அதிகரித்தது.  

டா.டெஸ்லா  பத்து லக்ஷ வால்ட்ஸ் மின்சக்தி இம்முறையினால் உற்பத்தி செய்து பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தார் . அதுவே அவருக்கு இந்த [கதிரொளி சக்தியை கம்பியில்லாம்லே  வெகு தூரம் வரை கொடுக்கவும் முடிந்தது,  அவர் பரிசோதனையில் வெளுத்த நீல கிரணங்கள்  முழு காயிலிலிருந்து  துள்ளி வெளிப்படுவதை பார்த்தார். அக்கிரண்ங்கள் எந்த பொருள் வழியாகவும் செல்ல வல்லதாக  இருந்தன.  அக்கிரணங்கள் குளுமையாகவும், ஊசிகுத்துதல் இல்லாது ,  அதுவே சிறிய வதிர்வெண்ணினால் உண்டாகும் எரிச்சலும் இல்லாது , உடலுக்கு இதமாகவே இருந்தன. அதற்கு மேல் சில  வதிர்வெண்ணில் [ஃப்ரிக்வென்ஸியில்] இந்த வெள்ளை நீலக்க்கிரணங்கள் மின் பல்புக்களையும் ,  ட்யூப் லைட்களையும்  கரண்ட் பாய்ச்சிய காயில்கள் அருகில் கொண்டுவரும் போது  இயங்க வைத்தன. டா.டெஸ்லா இவ்விளக்குகளை கம்பியில்லாது தம் வெரும்  கையில் பிடித்தவாரே இயக்கிக் காட்டினார்.


இதையொட்டிய மற்றொரு  பரிசோதனையில் ஒரு தாமர[செம்பு]  கடத்து கோளத்தை இரண்டாம் மின்சக்தி மாற்றி வாய்களுக்கு சேர்க்கப்பட்டது [ஒட்டுவிக்கப்ப்ட்டது].  எல்லா கிரண வெளியேற்றங்கள் இந்த  தாமர கோளத்தில் மய்யம் கொண்டன., இப்போது இந்த  தாமர கோளத்திலிருந்து வெடிப்பு சத்தத்துடன் வெளிப்படுத்தல் [கிரணங்கள்]  வெளியேறின. அது
 மின்பாய்ச்சும் சக்தி யை குறைந்த அளவில் வைத்து கம்பியில்லா மின் சக்தி பரப்புதலை அபாயமில்லாது  மனிதர்க்கள் யாவருக்கும்  உபயோகப்ப்டுத்துமாரு   பத்திரமானதாகவும் , மிகச்சரியானதாகவும் ஆக்கியது. கம்பியில்லா மின் வெகு தூரம் வரை விஸஸேஷமாக செயல் படுத்திய மின்வளயத்தினால் பெற்றுக்கொள்ள முடிந்தது.   டா.டெஸ்லா கம்பியில்லா மின்சார இயக்கத்தை இவ்வாரு பெற்றெடுத்தார் என்றே சொல்லலாம்.


இது கம்பியில்லா மின் சக்தியை பல இடங்களுக்கு பரப்பும் ஒரு பயிற்சிக்குறிய வழி. இதுவே டா.டெஸ்லாவின்  புகழ் பெற்ற டெஸ்லா காயில் ஆகும். இன்று பல அனிமேடட் திரைப்படங்களிலும், விளையாட்டுகளிலும் டெஸ்லா காயிலினால் அபாயத்தையும் , இக் காயில் எதன்மீது விழுகிறதோ அது எறிந்து  சாம்பலாகும் போல் காட்டப்ப்டுகின்றன, ஆனால் அது நேர் மாறானது , டாக்டர் நிகோலா டெஸ்லா அவரது வழிப்படி டெஸ்லா காயில் ஒரு முழுமையான கம்பியில்லா சக்தி பரப்பும், செலுத்தும்  அபாயமில்லாத  பத்திரமான ஒரு  கருவியாகும்.


 இந்த டெஸ்லா காயில் பரிசோதனைகளை எந்தவித நிபுணர்கள் இல்லாமல், அதை பற்றி சரியாக அறியாது   செய்து பார்கவே பார்காதீர்கள். ஆம் டெஸ்லா காயில்களைப்பற்றி நன்கு  அறிந்து கொண்டு  அதை சரியாக  , கம்பியில்லா விளக்கு ஏற்றுதலுக்கும் மின்சக்தி செலுத்தவும் பரப்பவும் மனிதர்களுக்கு சாதகமாக உபயோகிக்கலாம்.





நிக்கோலா தெசுலா (Nikola Tesla, செர்பிய மொழி: Никола Тесла, நிக்கொலா தெஸ்லா, சூலை 10, 1856 – சனவரி 7, 1943) ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆவார். குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்த இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.[2] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெல்சாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால மாறுதிசை மின்னோட்ட மின் வலு முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் இரண்டாம் தொழிற்புரட்சி ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினர்.

1894 இல் கம்பியில்லாத் தொடர்பு (வானொலி)[3] பற்றிய இவரது செயல்முறை விளக்கம், "மின்னோட்டப் போரில்" இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார்.[4] இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன[5][6]. அக்கால அமெரிக்காவில், தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும்; அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும்; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது.[7][8]

நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.
சுவாமி விவேகானந்தரும் நிகோலா டெஸ்லாவும்[மூலத்தைத் தொகு]
வேதாந்தக் கொள்கைகளின் முடிவுகள் வியக்கத்தக்க அளவில் பகுத்தறிவுக்கு ஒத்திருப்பதாக சுவாமி விவேகானந்தரிடம் கூறிய அப்போதைய தலைசிறந்த விஞ்ஞானிகளில் நிகோலா டெஸ்லாவும் ஒருவர். நிகோலா டெஸ்லா உட்கார இடம் இல்லாமல் மணிக்கணக்காக நின்று கொண்டே சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டவர். 1896 பிப்ரவரி 5-இல் தொழிலதிபர் ஆஸ்டின் என்பவர் இல்லத்தில் சுவாமி விவேகானந்தரும் டெஸ்லாவும் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது சுவாமிஜியின் பக்தையும், பிரெஞ்சு நடிகையுமான சாரா பென்ஹர்ட்டும் உடனிருந்தார்.

அணு என்பது திடமான, உடைக்க முடியாத , பிரிக்க முடியாத ஒன்று என நியூட்டன் கூறியதையே 19-ஆம் நூற்றாண்டு அறிஞ‍ர்கள் நம்பியிருந்தார்கள்.

ஆனால் பருப்பொருளும் ஆற்றலும் அடிப்படையில் ஒன்றே; ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்ற வேதாந்தக் கருத்தை நிகோலா முதலில் நம்பாமல் இருந்த போதிலும் தனது இறுதிக்காலத்தில், பருப்பொருளை பொருண்மைச் சக்தியாக மாற்ற இயலும் என்ற சுவாமிஜியின் கருத்தை ஏற்று, தமது முடிவைப் பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் சுவாமிஜி பயன்படுத்திய அதே சமஸ்கிருத வார்த்தைகளை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.

மிகப்பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, சுவாமிஜியின் சொற்பொழிவுக் கருத்துகளால் ஆராய்ச்சிப்பூர்வமாகத் தூண்டப்பட்டாலும் அதை உடனடியாக சுவாமிஜியின் முன் நிரூபித்துக் காட்ட இயலவில்லை. எனினும் பிறகு ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியால் அது (Mass Energy) நிரூபிக்கப்பட்டது.

நோபல் பரிசும் தெஸ்லாவும்[மூலத்தைத் தொகு]
மார்க்கோனிக்கு 1909-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, 1915-ம் ஆண்டு தாமசு ஆல்வா எடிசன் மற்றும் தெஸ்லாவிற்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு, பகிர்ந்தளிப்பதாக வெளியான தகவல் மிகப்பெரிய பிணக்குகளை உருவாக்கியது. இருவருக்குமான பகைமையையும் இது வளர்த்தது, இருவரும் அப்பரிசினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை மற்றும் பரிசினை பகிர்ந்து கொள்ளவும் மறுத்துவிட்டனர்.[9]


இச்சர்ச்சை ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து, தெஸ்லாவுக்கோ அல்லது எடிசனுக்கோ அப்பரிசு வழங்கப்படவில்லை.[10] இதற்கு முன்பு 1912-ம் ஆண்டு, இவருடைய உயர் மின்னழுத்த உயர் அதிர்வெண் ஒத்ததிர்வு மின்மாற்றிகள் பயன்படுத்தி வடிவமைப்பு சுற்றுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக புரளி வெளியானது.


No comments:

Post a Comment