Saturday 29 July 2017

DIANA , SHORT LIFE HISTORY


DIANA , SHORT LIFE HISTORY




நல்ல அழ­கி­யாக, ஒரு கட்­டத்தில் இரா­ணி­யி­னதும் இள­வ­ரசர் சார்ள்­சி­னதும் அன்­பிற்கும், பாசத்­திற்கும் பாத்­தி­ர­மா­ன­வ­ராக, பிறி­தொரு கட்­டத்தில் அவர்கள் இரு­வ­ருக்கும் வெறுப்­பேற்­று­ப­வ­ராக தமது இரண்டு மகன்­மா­ருக்கும் அரு­மை­யான தாயா­ராக, கெம­ராக்­களால் அதிகம் படம் பிடிக்­கப்­பட்­ட­வ­ராக, பிர­பல்­ய­மான பத்­தி­ரி­கைகள், சஞ்­சி­கை­களின் முன்­பக்கக் கதா­நா­ய­கி­யாக, தாம் வாழ்ந்த காலத்தில் தினம் தினம் இறந்து, மர­ண­மான பின்­மக்கள் மனதில் நிரந்­த­ர­மாக வாழ்­ப­வ­ராக உல­கத் ­தொ­ழு­நோ­யா­ளிகள், புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், எயிட்ஸ் நோயா­ளி­களின் சிநே­கி­தி­யாக, மக்­களின் இள­வ­ர­சி­யாக இருந்த டயா­னாவின் மரணம் இன்­னமும் சரி­யாகத் துப்புத் துலக்­கப்­ப­ட­வில்லை என்­பது நிதர்­ச­ன­மான உண்மை.
தாம் வாழ்ந்த ஒரு கால­கட்­டத்தில் உல­கப்­புகழ் பெற்­ற­வ­ராக இருந்­தாலும் டயா­னாவின் சிறு­ப­ரா­யமும் இள­மைக்­கா­லமும் தென்றல் வீசும் சோலை­யாக அமைந்­து­வி­ட­வில்லை.
ஜானி—­பி­ரான்சஸ் தம்­ப­தி­யி­ன­ருக்கு முத­லி­ரண்டும் பெண் குழந்­தைகள் மிகுந்த எதிர்­பார்ப்­புக்­கி­டையே மூன்­றா­வ­தாக ஆண்­கு­ழந்தை பிறந்து, அந்த மகிழ்ச்­சியில் திளைக்கும் முன்பு குழந்தை பிறந்த வேகத்தில் இறந்து போனது. பத்­து­மணி நேரம் மட்­டுமே அந்த ஆண்­கு­ழந்தை உயிர் வாழ்ந்­தது. ஜானி—­பி­ரான்சஸ் தம்­ப­தி­யினர் மனம் தளர்ந்­தனர்.

இந்நிலையிலேயே அடுத்ததாக டயானா பிறந்த போது இரு­வ­ருக்­கு­மி­டையே எந்­த­வி­த­மான நல்­லு­றவும் இல்லை.
ஸ்பென்சர் குடும்­பங்­களில் ஆண்­பிள்­ளையைப் பெற்­றுக்­கொள்­வ­தென்­பது கெள­ரவம் மட்­டு­மல்ல, அத்­தி­யா­வ­சி­யமும் கூட. சொத்­துக்­களைக் கட்­டிக்­காக்க ஆண்­வா­ரிசே பொருத்­த­மா­னது என்­பது ஸ்பென்சர் குடும்­பங்­களில் எழுதப்ப­டாத ஒரு சட்டம்.
ஒரு வழி­யாக நான்­கா­வ­தாக ஆண் குழந்தை பிறந்­தது. ஆனால் அதற்கு முன்பு ஜானி– பிரான்சஸ் வாழ்க்­கையில் பிளவு ஏற்­பட்­டி­ருந்­தது. அப்­போது டயா­னாவின் அம்­மா­விற்கு வயது இரு­பத்­தெட்டு. இள­மையின் மிதப்பில் இருந்த அவர் வேறு துணை தேட ஆரம்­பித்தார். அவர் நாடிச் சென்ற பீட்டர் ஏற்­க­னவே மண­மா­னவர்.
தனது மகளின் நட­வ­டிக்கை பிடிக்­காத பிரான்­சஸின் அம்மா முக்­கிய முடி­வொன்றை எடுத்தார். நான்கு குழந்­தைகள் பெற்­றெ­டுத்த தனது மகள், இன்­னொரு ஆட­வ­னோடு வாழ முடி­வெ­டுத்­ததை அவரால் பொறுத்துக் கொள்­ள­மு­டி­ய­வில்லை. தமது வீடான ‘பார்க் ஹவுஸில்’ அவ­ருக்கு இட­மில்லை என அறி­விக்­கப்­பட்­டது.
தாயின் உத்­த­ர­வின்­படி பார்க் ஹவு­ஸி­லி­ருந்து தனது முத­லி­ரண்டு பெண் குழந்­தை­க­ளுடன் வெளி­யே­றினார் டயா­னாவின் அம்மா பிரான்சஸ். அதே வீட்டில் விபரம் புரி­யாத சிறுமி டயானா மற்றும் கடைசி மகன் சார்ஸ்­சோடு வசிக்க ஆரம்­பித்தார் டயா­னாவின் தந்தை ஜானி.

டயா­னா­விற்கு அப்­போது விபரம் ஒன்றும் புரி­யா­விட்­டாலும் ஒன்று மட்டும் புரிந்­தது, ‘அம்மா இனிமேல் தன்­னிடம் வர­மாட்டார்’ டயானா சளைக்­க­வில்லை. ஆனால், சின்னஞ் சிறு­வ­னான தம்­பியைச் சமா­ளிக்கச் சங்­க­டப்­பட்டார்.
தாயை நினைத்து அவன் தவித்து அழும்­போது இரவு முழு­வதும் கொட்டக் கொட்ட விழித்­தி­ருந்து சமா­தா­னப்­ப­டுத்தி அவனை உறங்­க­வைத்து தனது துன்­பத்தை மறந்து இள­வ­யது இன்­பத்தைப் பொருட்­ப­டுத்­தாமல் வாழப் பழ­கிக்­கொண்டாள். கல்­வியில் மந்­த­மானாள். தோல்வி பயத்­தினால் பொய்கள் பேசப் பழ­கினாள். டயா­னாவின் வாழ்க்கை தறி கெட்டுப் போவதைக் கண்டு பயந்த தந்தை ஜானி அவ­ளுக்கு விருப்­ப­மான வீட்டு விலங்­கு­களை வளர்க்க ஆரம்­பித்தார். ‘டெடி பெயார்’ போன்ற பொம்­மை­களை வாங்கிக் குவித்தார். விலை­ம­திப்­புள்ள ‘கமரா’ ஒன்றைப் பரி­ச­ளித்தார். ‘கம­ராவும்’ புகைப்­ப­டங்­களும் அழகி டயா­னாவின் வாழ்க்­கையை மாற்­றி­யது என்று கூறி­னாலும் அது மிகை­யல்ல.
இள­வ­ய­தி­லேயே டயா­னா­விடம் நிறைய நல்ல குணங்கள் துளிர்க்க ஆரம்­பித்­தன. மன­நல மருத்­து­வ­ம­னைக்கு அடிக்­கடி சென்று மன­நல நோயா­ளி­க­ளிடம் நீண்ட நேரம் மனம்­விட்டுப் பேசிக்­கொண்­டி­ருப்பார். விதம் வித­மான அழ­கிய நட­னங்­களை அவர்­க­ளுக்கு ஆடிக்­காட்டி அவர்­களை மகிழ்­விப்பார்.
டயானா வின் மறுபக்கம்
சார்ல்ஸ் பிறந்­த­போது இள­வ­ரசி எலி­சபெத் மட்­டும்தான் சார்ல்­ஸிற்கு. மூன்­றரை வய­தி­ருக்கும் போது எலி­ச­பெத்தின் தந்தை ஆறாம் ஜோர்ஜ் கால­மானார். எலி­சபெத் இங்­கி­லாந்தின் இரா­ணி­யானார். சார்ல்ஸ் ‘பிரின்ஸ் ஒப் வேல்ஸ்’ என்று அதி­கா­ரப்­பட்டம் சூட்­டப்­பட்டார்.

இள­வ­ரசர் சார்ல்ஸின் கண்ணில் முதற்­பட்ட பெண்­ணல்ல டயானா. ஆனாலும் அத்­தனை பேரிலும் திரு­மணம் வரைக்கும் சென்ற ஒரே உறவு டயா­னா­வு­டை­யது மட்­டும்தான். டயா­னாதான் தனது எதிர்­காலம் எனத் தீர்­மா­னிப்­ப­தற்குள் சார்ல்ஸ் சற்றுத் தடு­மா­றினார் எனினும் அவ­ரது காதலி கமீ­லாவோ “டயா­னாதான் உனக்­கேற்­றவள்” என்று பச்சைக் கொடி – காட்­டி­ய­வுடன் டயா­னாவை மணம் புரிந்தார் சார்ல்ஸ்.
சார்ல்ஸ் பிறந்த தினம்14 நவம்பர் 1948; டயா­னாவின் பிறந்­த­தினம்1 ஜூலை1961 பதின்­மூன்று வயது வித்­தி­யாசம். இந்­தக்­குறை சார்ல்ஸ்ற்கு எப்­போ­துமே மனத்தை உறுத்திக் கொண்­டி­ருந்­தது. 1981 ஜூலை 29 சார்ல்ஸ்- டயானா திரு­மணம். எனினும் திரு­ம­ணத்­திற்கு முதல் நாள் இரவும் கூட தமது காதலி கமீ­லா­வுடன் நீண்ட நேரம் பேசிக்­கொண்­டி­ருந்தார் சார்ல்ஸ்- அப்­போது உன்னை ஒரு போதும் பிரி­ய­மாட்டேன் என்று கமீ­லா­வுக்கு சத்­தியம் செய்து கொடுத்தார் சார்ல்ஸ்.



ஓர் அரச குடும்­பத்தைச் சேர்ந்­த­வரைத் திரு­மணம் செய்தால் என்­னென்ன அதி­ச­யங்கள் நடக்கும் என்­பதைத் தன் திரு­மண நாளன்று அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்ந்தார் டயானா. 29/7/1981 அன்று சர்­வ­தேச நட்­சத்­தி­ர­மானார் டயானா. இந்தத் திரு­ம­ணத்தை 75 கோடி மக்கள் கண்­டு­க­ளித்­தனர். ஆங்­கிலம் தவிர 34 மொழி­களில் திரு­மண வர்­ணனை மொழி­பெ­யர்க்­கப்­பட்­டது. காது­கே­ளா­தோ­ருக்­காக விசே­ட­மாகப் பதிவு செய்­யப்­பட்­டது. இந்த திரு­ம­ணத்தை ஏழரை மணி­நேரம் தொலைக்­காட்­சிகள் ஒளி­ப­ரப்­பின. இள­வ­ரசி என்­கிற வட்­டத்­தி­லி­ருந்து விலகி நின்று எல்­லோ­ரி­டமும் பழ­கினார் டயானா. குடும்பம், உடல் நலன், செள­க­ரி­யங்கள் போன்ற தனிப்­பட்ட நலன்கள் மீது ஆர்வம் காட்டி விசா­ரிப்பார். இதனால் மிகவும் புகழ்­பெறத் தொடங்­கினார். பத்­தி­ரி­கை­யா­ளர்கள் இவரைச் சூழ்ந்து கொண்­டார்கள். புகைப்­ப­டக்­கா­ரர்கள் டயா­னாவை மொய்த்துக் கொண்­டார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘மீடியா’ இள­வ­ரசர் சார்ல்ஸை கவனிக் கவில்லை, ஏன் புறக்­க­ணித்­தது என்றே கூறலாம். சார்ல்ஸ் டய­ானா­விற்கு விரிசல் ஏற்­பட இதுவும் ஒரு காரண மெனலாம். 1982 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் திகதி வில்­லியம் பிறந்தான். பிர­ச­வ­நே­ரத்தின் போது அருகே இருந்து கவ­னித்துக் கொண்டார் கணவர் சால்ஸ். இது டயா­னா­விற்கு மிகுந்த சந்­தோ­ஷத்தை அளித்­தது. ஆனால் அந்த சந்­தோஷம் நீண்­ட­காலம் நீடிக்­க­டி­வில்லை. சார்ல்ஸ் கமீலா காதல் / தொடர்பு தொடர்ந்­தது.

1984 செப்­டெம்பர் 15 ஆம் திகதி ஹாரி பிறந்தான். அடுத்த வருடம் 1985ஆம் ஆண்டு பேரி மன்­னகே என்­கிற காவல்­துறை அதி­காரி டய­ானாவின் பாது­காப்பு அதி­கா­ரி­யாகப் பணி­பு­ரி­ய ­வந்தார். வாட்­ட­சாட்­ட­மான ஆள் சால்ஸை திரு­மணம் செய்­தபின் எந்த ஆண்­ம­க­னையும் ஏறெ­டுத்துப் பார்க்­காத டயானா சப­தத்­திற்கு ஆளானார். மன்­னகே டய­ானா­விற்கு ஒரு ‘ரெடி­பி­யரை’ அன்­ப­ளிப்புச் செய்தார். அது டய­ானாவின் படுக்கை அறையை அழகு செய்­தது. செய்தி அரண்­ம­னைக்கு எட்­டி­ய­வுடன் மன்­ன­கேயின் பதவி பறிக்­கப்­பட்­டது. அடுத்த இரண்டு வரு­டங்­களில் மன்­னகே மீது கார்­மோதி உயிரும் பறிக்­கப்­பட்­டது. அவர் ­கொலை செய்யப் பட்­டி­ருக்­கலாம் என டயானா சந்­தே­கித்தார். மன்­னகே புதைக்­கப்­பட்ட கொலை செய்யப் பட்­டி­ருக்­கலாம் என டயானா சந்­தே­கித்தார். மன்­னகே புதைக்­கப்­பட்ட கொலை செய்யப் பட்­டி­ருக்­கலாம் என டயானா சந்­தே­கித்தார். மன்­னகே புதைக்­கப்­பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்­சலி செலுத்­தினர். அன்­றோடு டய­ா னாவின் முத­லா­வது சிற்­றின்பம் முடி­வுக்கு வந்­தது. 

அடுத்து டய­ானாவின் தொடர்பு ஜேம்ஸ்­ஹெவிட் என்­ப­வ­ருடன் ஏற்­பட்­டது. போலோ­வீரர்; குதிரை ஏறிப் பழகும் காட்டில் அவரை நண்­ப­ராக்கிக் கொண்டார் டயானா. சில ஆண்­டு­க­ளாக சார்ல்­ஸி­ட­மி­ருந்து எது­வித சுகத்­தையும் அனு­ப­விக்­காத டயா­னா­வுக்கு மாற்­றாக விளங்­கினார் ஜேம்ஸ் ஹெவிட் சார்ல்­சிற்கு கமீலா டயா­னா­விற்கு ஹெவிட் என்று இரு­வரும் அவ­ர­வர்க்கு ஏற்ற பிடித்­த­மான வாழ்க்­கையை வாழத் தொடங்­கி­னார்கள். 1986 ஆம் ஆண்டு அர­சாங்­கப்­பணி கார­ண­மாக ஹெவிட் ஜேர்­ம­னிக்குப் பய­ண­மாக நேர்ந்­தது. டயானா எவ்­வ­ளவோ சண்டை போட்டும் தொடர்ந்து டய­ானா­வுடன் தொடர்பு வைத்­துக்­கொள்­வது தனக்கு ஆபத்து என உணர்ந்து ஹெவிட் ஜேர்­மனி சென்றார். 


சார்ல்ஸ் டயானா முறிவு கொஞ்சம் கொஞ்­ச­மாக வெளி­வர ஆரம்­பித்­தது. வந்த வேகத்தில் மறைந்த மன்­னகே சொல்லக் கேட்­காமல் ஓடிப்­போன ஹெவிட் ஆண் துணை­யில்­லாமல் தவிர்த்தார் டயானா. அந்தக் குறையைப் போக்க டயா­னாவின் வாழ்க்­கைக்குள் நுழைந்தார் ஜேம்ஸ் கில்பி என்­பவர். டயா­னாவின் கில்­பிக்கும் முதல் திரு­மணம் தோல்­வியில் முடிந்­தி­ருந்­தது. அதனைச் சாட்­டாக வைத்து கில்­பி­யுடன் ஒட்­டிக்­கொண்டார் டயானா. அதுவும் சொற்­ப­கா­லம்தான். அழகி டய­ானாவின் கடைசிக் காதலன் முகமத் அப்டெல் மொனிம் பயத் என்­கிற முகமத் அல் பயத் செல்­வாக்­கான மனிதர் கோடீஸ்­வரர் செல்­லப்­பெயர் கோடி, அவர் அமெ­ரிக்கக் மொடல் அழகி கெல்பி பிள்ளர் என்ற பெண்ணைத் திரு­மணம் செய்ய இருந்தார்.
டய­ானாவை டோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பயத் பார்த்த மாத்­தி­ரத்­தி­லேயே டோடியின் கன்னக் குழிச் சிரிப்­புக்கு மனதைப் பறி­கொ­டுத்து அடி­மை­யானார் டயானா. அத்­துடன் அந்த வேளையில் டயா­னா­விற்கு நல்ல, நம்­பிக்­கை­யான துணை ஒன்று அவ­சி­ய­மாகத் தேவைப்­பட்­டது. டோடியை எந்தச் சங்­க­ட­மு­மில்­லாமல் ஏற்றுக் கொண்டார்.
1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி டய­ானாவின் வாழ்க்­கையில் முக்­கி­ய­மான நாள். காலையில் உண­வ­ருந்­தி­விட்டு தனி விமா­னத்தில் பாரிஸ் செல்­கி­றார்கள். மாலை 3.20 மணிக்கு பாரிஸை அடைந்­த­போது பத்­தி­ரி­கை­க­ளுக்கு செய்தி சென்று பத்­தி­ரி­கை­யா­ளர்கள், படப்­பி­டிப்­பா­ளர்கள் சூழ்ந்து தொல்லை கொடுக்­கி­றார்கள்.
இரவு உணவு அருந்­தி­யபின் டோடியின் உத்­த­ர­வுப்­படி ஹென்­றிபால் என்­கிற பாது­கா­­வலர் வர­வ­ழைக்­கப்­ப­­டு­கிறார். அவர்தான் இரு­வ­ரையும் பத்­தி­ர­மாக சாம்ஸ் எலி­ஸி­லுள்ள தமது அப்­பார்ட்­மென்­டுக்கு அழைத்­து­வ­ர­வேண்­டு­மென பயத்தின் உத்­த­ரவு முன்­வா­சலில் ஊட­க­வி­ய­லாளர்­களின் தொல்லை இருப்­ப­தனால், மெர்­சிடஸ் எஸ் 280 காரை எடுத்­துக்­கொண்டு ரிட்ஸ் ஹோட்­ட­லின்ட பின்­பக்கம் வரு­மாறு பாலுக்கு தகவல் அனுப்­பு­கிறார் டோடி. மோடி டயானா கீழி­றங்கி வரும்­வரை ‘சும்மா இருப்­பானேன்’ என எண்ணி டிரிட்ஸ் மது­பானக் கூடத்தில் மது அருந்­து­கிறார். ஹென்­றி­பால்—­அங்­குதான் தவறு ஏற்­பட்­டது என்று இன்றும் சிலர் கரு­து­கி­றார்கள்.

ஆகஸ்ட் 31 நள்­ளி­ரவு 12 மணி டயா­னாவும் மோடியும் ஹோட்­டலை விட்டு வெளி­யேற்றி மெர்­ஸிடஸ் காரில் பின் சீற்றில் ஏறு­கி­றார்கள். முன் சீற்றில் மது­போ­தை­யி­லி­ருந்த ஓட்­டுநர் ஹென்­றி­பாலும் பாது­கா­வலர் ரீஸ் ஜோன்ஸும் அமர்ந்து கொள்ள கார் சீறிப்­பாய்ந்து கொண்டு சென்­றது.
தக­வ­ல­றிந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் மோட் டார் சைக்­கிள்­களில் காரை வெகு வேக­மாகப் பின் தொடர்­கி­றார்கள். நள்­ளி­ரவு 12.23 மணி­ய­ளவில் டெல் அல்மா என்­கிற சுரங்­கப்­பாதை வழி­யாக வண்டி வெகு வேக­மாகச் சென்று கொண்­டி­ருந்­தது. மோட்டார் சைக்­கிள்கள் துரத்­து­வதால் வேகத்தை அதி­க­ரிக்­கிறார் ஹென்­றிபால் தமக்கு முன்னால் சென்ற வெள்ளை பியற்­காரை பால் முந்திச் செல்­கிறார். திடீ­ரென மெர்­ஸிடஸ் தனது கட்­டுப்­பாட்டை இழந்து நேராகப் பாலத்­தி­லி­ருந்த பதின்­மூன்­றா­வது கொன்­கிறீட் தூணில் மூர்க்­க­மாக மோது­கி­றது.

ரிட்ஸ் விடு­தி­யி­லி­ருந்து கிளம்­பிய மூன்­றா­வது நிமி­டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது கவனிக்கத்தக்கது. மோடியும், ஹென்றி பாலும் விபத்து நிகழ்ந்த ஓரிரு நொடிக ளில் காலமானார்கள். ‘சீட்பெல்ட்’ அணிந்திருந்தமையால் ரீஸ் ஜோன்ஸ் உயிர் தப்பினார். லா பிட்டிஸால் மருத்துவமனையில் டயானா மரணமானார். தமது பத்தொன் பதாவது வயதில் இளவரசர் சார்ல்ஸைத் திருமணம் செய்துகொண்டு சார்ல்ஸின் மனதில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும், உலகத் தொழு நோயாளிகள், எயிட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர்இளவரசி டயானா.
மக்களின் இளவரசியாக கோடானுகோடி மக்களின் இதயத்தில் வாழ்கிறார் டயானா!


No comments:

Post a Comment