Monday 3 July 2017

K.R.VIJAYA ,THE SILVER SCREEN SMILING QUEEN


K.R.VIJAYA ,THE SILVER SCREEN SMILING QUEEN


‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா




தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா, கேரளா மாநிலம் திருச்சூரில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராமச்சந்திர ராவ் ஆந்திராவைச் சேர்ந்தவர். தாயார் கல்யாணி கேரளாவைச் சேர்ந்தவர். தந்தையும், தாயின் சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றியதால் மொழி பார்க்காமல் திருமணம் செய்து வைத்தார்களாம். இவர்களுக்கு மூத்த மகளாக பிறந்தவர் கே.ஆர்.விஜயா. இவருக்கு பெற்றொர்கள் வைத்த பெயர் ‘தெய்வநாயகி’.

அந்திரா, கேரளா என இரண்டு இடங்களிலும் மாறி மாறி பெற்றோர்கள் வசித்ததால் படிப்பு பாதியிலேயே நின்றது. தந்தைக்கு நாடகத்தில் நடிக்கிற ஆர்வம் இருந்ததால், அவர் மேடை ஏற பழனிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். அவரோடு இவரும் பதினோரு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

அப்போதே பாசமலர், பாவமன்னிப்பு போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்குத்தான் பெரும்பாலும் அவரை ஆட வைப்பார்களாம்.  காசநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நாடகம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வர அதன் மூலம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் நடிக்க சென்றிருக்கிறார். சென்னையில் நடந்த பொருட் காட்சியில் அவரை பர்த்த மற்ற நாடக கலைஞர்கள் அவரை அமெச்சூர் நாடகங்களிலும் நடிக்க அழைத்திருக்கின்றனர். அப்படி பிரபலமானவர், சிம்சன் பிஸ்கட் அண்ட் சாக்லேட் விளம்பரத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

ஜெமினிகணேசன், சரோஜாதேவி நடிப்பில் கற்பகம் படத்தை துவங்கிய இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், சரோஜாதேவி பிசியாக இருந்ததால், அவருக்கு பதில் புதுமுகத்தை தேடியவர் கே. ஆர். விஜயாவின் விளம்பரத்தை பார்த்திருக்கிறார். அது பிடித்துப் போக நேரில் வரவழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

தெய்வநாயகியாக இருந்த கே.ஆர்.விஜயாவை 1963 ஆம் ஆண்டு கற்பகம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.   அதனைத் தொடர்ந்து, நிறைய படவாய்ப்புகள் வரத்தொடங்கின.

‘கற்பகம்’, ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘இதயக்கமலம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற படங்கள் அவரது நடிப்பில் முத்திரைப் பதித்த திரைப் படங்களாகும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தப் பெருமை இவருக்கு உண்டு.

50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியில் ஊஞ்சலோக் என்ற ஒரு இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார்.

தொழிலதிபர் வேலாயுதம் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட கே.ஆர்.விஜயாவுக்கு, ஹேமா என்கிற ஒரு மகள் இருக்கிறார். அவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு பேர பையன்களில். மூத்த பேரன் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் பணியாற்ற, இளைய பேரன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பரோடாவில் பணியாற்றுகிறார்.

கே. ஆர். விஜயாவின் வசீகரப் புன்னகை, ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் கவர்ந்திழுக்கும் தன்மையுடையது. எழுபதுகளின் மத்தியில் திருச்சியில் நடந்த விழாவில் ரசிகர்கள் அவருக்கு புன்னகை அரசி என்கிற பட்டம் வழங்கினார்கள். அண்ணா முதல்வராக இருந்தபோது அவர் கையால் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமை அவருக்கு உண்டு

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அவர்கள், தென்னிந்தியத் திரைப்பட த்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

‘கற்பகம்’, ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘இதயக்கமலம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற படங்கள் அவரது நடிப்பில் முத்திரைப் பதித்த திரைபடங்களாகும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தப் பெருமை இவருக்கு உண்டு. நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழப்பட்ட கே. ஆர். விஜயா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 30, 1948
பிறப்பிடம்: திருவனந்தபுரம், கேரளா மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை   

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 


தெய்வநாயகி’ என்னும் இயற்பெயர் கொண்ட கே. ஆர். விஜயா அவர்கள், 1948  ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ் என்பவருக்கும், மங்களத்திற்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை

அவரது தந்தை ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும், இவருடைய தாயார் கேரளா என்பதால் திருமணத்திற்குப் பிறகு கேரளாவில் வசித்து வந்தனர். பின்னர், தமிழ்நாட்டிலுள்ள பழனிக்குக் குடிபெயர்ந்தனர். தன்னுடைய குழந்தைப் பருவத்தை பழனியில் கழித்த அவர், பதினோரு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, அவருடைய நாடக நடிப்பில் மிகவும் ஈர்க்கப்பட்ட எஸ். எம். குமரேசன் என்னும் நடிகர், சென்னை வந்தால் நடிக்க வாய்ப்பு தருவேன் எனக்கூறியதின் பேரில், இவருடைய குடும்பம் பழனியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னைக்கு வந்து சேர்ந்த இவர், சினிமாவில் நடிப்பதற்காக ‘தெய்வநாயகி’ என்னும் தன்னுடைய பெயரை கே. ஆர். விஜயா என மாற்றிக்கொண்டார். அதன் பிறகு, இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அவர், 1963 ஆம் ஆண்டு ‘கற்பகம்’ என்ற திரைப்ப டத்தில் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரு டைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததால், அதனைத் தொடர்ந்து, நிறைய படவாய்ப்புகள் வரத்தொடங்கி ன.

வெற்றிப் பயணம்

தன்னுடைய முதல் படத்திலேயே, தமிழ் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்த அவருக்கு, ‘சர்வர் சுந்தரம்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’ போன்ற திரைப்படங்கள் அவருக்கு நிறைய ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தத் திரைப்படங்களாக அமைந்தது. குறுகிய காலத்திற்குள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்த அவர், வெறும் பத்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தென்னிந்திய ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழ்பெற்றார். ‘கந்தன் கருணை’, ‘இதயக்கமலம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது எனக் கூறலாம். அதுமட்டுமல்லாமல், இவர் ‘மடிசார் மாமி’, ‘குடும்பம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘ஆனந்தம்’ போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியுடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றிச் சித்திரங்களாக அமைந்தது எனலாம்.

தனிப்பட்ட வாழ்க்கை

தன்னுடைய வசீகர சிரிப்பால் அனைவரையும் கவர்ந்த அவர், வேலாயுதம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் சுதர்ஷன் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார்.

கே.ஆர் விஜயா நடித்த சில திரைப்படங்கள்


‘சர்வர் சுந்தரம்’ (1967), ‘கை கொடுத்த தெய்வம்’ (1964), ‘செல்வம்’ (1966), ‘சரஸ்வதி சபதம்’ (1966), ‘பட்டணத்தில் பூதம்’ (1967), ‘தங்கை’ (1967), ‘கந்தன் கருணை’ (1967), ‘இரு மலர்கள்’ (1967), ‘ஊட்டி வரை உறவு’ (1967), ‘திருமால் பெருமை’ (1968), ‘நல்ல நேரம்’ (1972), ‘பால் மனம்’ (1968), ‘குறத்தி மகன்’ (1972), ‘ஸ்ரீ தேவி’ (1970), ‘பாரத விலாஸ்’ (1973), ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’ (1978), ‘திரிசூலம்’ (1979), ‘கை கொடுத்த தெய்வம்’ (1964), ‘நெஞ்சிருக்கும் வரை’ (1967), ‘திருடன்’ (1969), ‘என்தம்பி’ (1968), ‘சொர்க்கம்’ (1970), ‘தங்க பதக்கம்’ (1974) ‘ராமன் எத்தனை ராமனடி’ (1970), ‘எதிரொலி’ (1970), ‘தவப் புதல்வன்’ (1972), ‘சத்திய சுந்தரம்’ (1981), ‘ஊரும் உறவும்’ (1982), ‘நீதிபதி’ (1983), ‘மிருதங்க சக்கரவர்த்தி’ (1983), ‘வம்ச விளக்கு’ (1984), ‘தராசு’ (1984), ‘படிக்காத பண்ணையார்’ (1985), ‘சாதனை’ (1986), ‘கிருஷ்ணன் வந்தான்’ (1987), ‘மன்னவரு சின்னவரு’ (1999), ‘உடன் பிறப்பு’ (1993), ‘ஆணழகன்’ (1995), ‘விவசாயி மகன்’ (1997), ‘கவலைப் படாதே சகோதரா’ (1998), ‘துர்கா’ (2001), ‘ஷாக்’ (2004), ‘சந்திரமுகி’ (2005), ‘தசாவதாரம்’ (2008), ‘ஆடு புலி’ (2011).


சுமார் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும் கே. ஆர். விஜயா அவர்கள், இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அவருடைய சிரிப்பு என்னும் மந்திரப் புன்னகையால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப் போட்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் அவருடைய வசீகரப் புன்னகை ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் கவர்ந்திழுக்கும் தன்மையுடையது. அவருடைய தாய்மொழி மலையாளம் என்றாலும், மிக அழகாகத் தமிழ் மொழி பேசி நடித்தார். 1963 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாகத் தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், நீண்ட காலம் கதாநாயகியாகவே நடித்த பெருமைக்குரியவர்.





என்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்ததால் நடிக்க மறுத்தேன்: கே.ஆர்.விஜயா!





படத்தில் என்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்ததால் முதலில் நடிக்க மறுத்தேன் என்று நடிகை கே.ஆர்.விஜயா பட விழாவில் கூறியுள்ளார்.

குஷ்பு தம்பி அப்துல்லா நடிப்பில் உருவாகும் படம் ‘மாய மோகினி’. இந்தப் படத்தை ராசா விக்ரம் என்பவர் இயக்குகிறார். கே.தங்கவேலு என்பவர் தயாரிக்கிறார். படத்தில் நடிகைகள் சாரிகா, ஜோதிஷா உள்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு எம்.ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாக பெண் சாமியாராக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கே.ஆர். விஜயா பேசியதாவது: ‘‘நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் என்னை கேட்டார்கள். சின்ன கேரக்டர் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டேன். இது நிஜத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த ஒரு பெண் துறவி கேரக்டர் என்றார்கள்

அப்படியானால் அதுபற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அவர்கள், என்னை அந்த துறவியின் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துக் சென்று காட்டினார்கள். கோவிலுக்கும் கூட்டிச் சென்றார்கள். அவற்றை பார்த்து நம்பிக்கை வந்த பிறகுதான் ஒரு புனிதமான பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது. பின்னர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’’ என்றார்


.

No comments:

Post a Comment